திரவுபதியை கிருஷ்ணன் காப்பாற்றியது ஏன்?

Was Draupadi Disrobed

Compiled by London swaminathan

Post No.2239

Date: 13 October 2015

Time uploaded in London: காலை 9-15

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

மஹாபாரதம் உலகிலேயே மிக நீண்ட இதிஹாசம். சமய சம்பந்தமான நூல்களில் இதுவே உலகில் பெரிய நூல். இது ஒரு பெரிய பொக்கிஷம். கடல் போலப் பரந்த விஷயங்கள் இதில் உள்ளன. இதில் எப்போது மூழ்கினாலும் முத்து, பவளம், வலம்புரிச் சங்குகள் கிடைக்கும். ஆனால் இதிலுள்ள விஷயங்களை யாரும் விஷயம் வாரியாகத் தொகுத்து வெளியிடவில்லை. இதிலுள்ள கதாபாத்திரங்கள், உவமைகள் முதலியன பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் உள்ளன. ஆனால் பொன்மொழிகளை விஷயம் வாரியாக (சப்ஜெக்ட்) வெளியிட்டால் நன்றாக இருக்கும். கீழேயுள்ள நான்கு ஸ்லோகங்கள் பல முக்கிய விஷயங்களைத் தரும்:

‘லக்கி’ திரவுபதி

சதுர்பி: காரணை: க்ருஷ்ண த்வயா ரக்ஷ்யாஸ்மி நித்யச:

சம்பந்தாத் கௌரவாத் சக்யாத் ப்ரபுத்வேநைவ கேசவ

(மஹாபாரதம், வனபர்வம்,12-127)

திரவுபதியைக் கிருஷ்ணன், காப்பாற்றியதற்கு நான்கு காரணங்கள் உண்டு:

1.சம்பந்தாத் = உறவு முறை

2.கௌரவாத் = மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு

3.சக்யாத்= நட்புமுறை

4.ப்ரபுத்வாத்= இறைவன் என்ற முறையில்

longest step

சுவர்க்கத்துக்குப் போக உதவும் படிக்கட்டு எது?

சத்யமே (உண்மை) ஸ்வர்கத்துக்கான மாடிப்படி. அதில் ஏறினால் எளிதில் சொர்க்கத்தை அடையலாம்.

ஏகமேவாத்விதீயம் யத் தத் ராஜன் நாவபுத்யசே

சத்யம் ஸ்வர்கஸ்ய சோபானம் பாராவாராஸ்ய நௌரிவ

(மஹாபாரதம், உத்யோக பர்வம்,33-47)

எவ்வாறு படகு ஒன்று கடல், அல்லது, நதியைக் கடக்க உதவுமோ அவ்வாறு சுவர்க்கம் செல்ல சத்யம் என்பது படிக்கட்டாகத் திகழ்கிறது.

ஏ, மன்னனே, நீ இதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டாய். இதைவிட வேறொன்றுமில்லை.

(சுவர்க்கம் என்பது மேலே இருப்பதால் மேலேறிச் செல்லும் படி உவமையாக்கப்பட்டது)

Simple-Indoor-Stair-Treads

தர்மத்தின் விளக்கம், இலக்கணம் என்ன?

வேதோக்த: பரமோ தர்ம: தர்மசாஸ்த்ரேஷு சாபர:

சிஷ்டாசாரஸ்ச சிஷ்டானாம் த்ரிவிதம் தர்ம லக்ஷணம்

(மஹாபாரதம், வன பர்வம்,207-83)

தர்மம் என்பது மூன்று இடங்களில் இருக்கிறது:–

வேதத்தில் சொல்லப்பட்ட எல்லாம் தர்மம்

தர்மசாஸ்த்ரம் = நீதி நூல்கள் செப்புவது அனைத்தும் தர்மம்

சிஷ்டாசார: = ஆசாரம் பற்றிய விதிமுறைகலைச் சொல்லுவது எல்லாம் தர்மம் ( இதை ஒவ்வொரு காலத்திலும் குரு அல்லது குடும்பத்திலுள்ள பெரியோர்கள் சொல்லும் மொழிகள் எனக் கொள்ளலாம்)

 krshna eating

மற்றவர்கள் வீட்டில் சாப்பிடலாமா?

கிருஷ்ணர், கௌரவர்களின் பெரிய அரண்மனை விருந்தை விட்டுவிட்டு, தேரோட்டி விதுரன் வீட்டில் தங்கினார். ராமன், சபரி என்னும் வேடுவச்சி கடித்துக் கொடுத்த இலந்தைப் பழத்தைச் சாப்பிட்டார். கண்ணாப்ப நாயனார், எச்சில்படுத்டிக் கொடுத்ததை, சிவ பெருமான் ஏற்றார். ஏன்?

சம்ப்ரீதி போஜ்யான்யன்னானி ஆபத் போஜயானி வா புன:

ந ச சம்ப்ரீயசே ராஜன் ந சைவாபத்கதா வயம்

(மஹாபாரதம், உத்யோக பர்வம்,91-25)

அன்பின் காரணமாக அளிக்கப்பட்ட எதையும் ஏற்கலாம் ( அவர்கள் வீட்டில் சாப்பிடலாம்; அசுத்தமான உணவானாலும், தூய அன்பு, அந்த உணவைச் சுத்தப் படுத்திவிடும்)

ஆபத்துக் காலத்திலும் எங்கும் சாப்பிடலாம் (உயிரைக் காப்பதே முதல் கடமை; சுவர் இருந்தால்தானே சித்திரம்? உயிர் இருந்தால்தானே சாஸ்திரம்!)

–சுபம்-

தேவி, அருள் புரி!

durga on lion

நவராத்திரியை ஒட்டி விசேஷ கட்டுரை

 

Compiled by ச.நாகராஜன்

Post No.2237

Date: 12  October 2015

Time uploaded in London: 9-02 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

By .நாகராஜன்

 

 

சித் ரூபிணி பைரவி                                                        

சிவே மனோஹரி                                                                 

பக்த ஜனப்ரிய                                                                     

பாலே தயாபரி

*

பார்வதி சங்கரி                                                                        

காளி சுபகரி                                                                         

பகவதி சாம்பவி                                                                   

தேவி அருள் புரி

15-12-76 5 p.m.

 

தந்தையார் கைப்பட எழுதிய கீதம்

devi santanam

 

 

 

 

 

இது எனது தந்தையார் (V.Santanam) 15-12-1976 அன்று மாலை ஐந்து மணிக்கு இயற்றிய கீதம்.

தினமணியின் மதுரை இதழின் பொறுப்பாசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய அவர் பன்முகம் கொண்ட ஒரு உயர் மனிதர்.

ஶ்ரீ சத்ய சாயி பாபாவின் அருளுக்குப் பாத்திரமானவர். சென்னை, ஆபட்ஸ்பரிக்கு அழைத்து ஒரே மேடையில் இருக்கும் போது பாபா அவரை பேசுமாறு அருளினார்.

1965 நவம்பர் மாதம் புட்டபர்த்திக்கு மதுரை அன்பர்கள் ஏராளமானோர் அவரவர் கார்களில் கிளம்பி புட்டபர்த்திக்குச் சென்றோம். நவம்பர் 23ஆம் தேதி பிறந்த நாளுக்கு முன்னர் அங்கே சென்று சேர்ந்தோம். அங்கே தான் இயற்றிய கீதங்களை பாபாவிடம் சமர்ப்பித்தார் என் தந்தை.

அந்தப் பாடல்கள் பல்வேறு சங்கீத விற்பன்னர்களால் பல மேடைகளில் நன்கு இசை அமைத்துப் பாடப்பட்டன. பாரத் ரத்னா திருமது எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் சகோதரரான திரு எம்.எஸ்.சக்திவேல் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

இவற்றில் 108 கீதங்கள் பின்னர் தொகுக்கப்பட்டு சத்ய சாயி சேவா சங்கம், மதுரையினால் 1966இல்ஸாயி கீதங்கள்என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.

*

அதில் எனது தந்தையார் எழுதியுள்ள முகவுரையைக் கீழே தருகிறேன்.

 

முகவுரை

     இந்த கீதங்களைப் புனைந்தவர் ஶ்ரீ இதய சாயி. எழுதுகோல் போன்ற கருவி தான் நான். நூறு நாட்களில் நூற்று எட்டு பாட்டுகளும் நாமாவளிகளும் ஶ்ரீ இதய சாயி கூற நான் எழுதினேன். சில கீதங்கள் ராகம், மெட்டுகளுடன் வந்தன. சிலவற்றிற்கு சங்கீத வித்வான்கள் மெட்டுகள் அமைத்துக் கொடுத்தனர்

     “அவருக்கு சங்கீத ஞானமே கிடையாது. சாஹித்ய ஞானம் கிடையாது. எழுதியதெல்லாம் அவரே மறந்து போய் விட்டார். அவரை வேண்டுமானால் கேளுங்கள்என்று பகவான் ஶ்ரீ சத்யசாயி பாபா இன்னொருவரிடம் இந்த கீதம் எழுதப்பட்ட விதம் பற்றி கூறினார். பகவானின் பாதகமலங்களில் இந்த கீதங்களை சமர்ப்பித்த போது மேற்சொன்ன மொழிகளைப் புகன்று, “பதங்கள் பரதநாட்டியம் போல நடை போட்டுச் செல்கின்றனஎன்று அருளினார் பகவான்.

 

    “இரண்டு இரண்டு பாட்டுக்களாக எழுதி பகவான் பாத கமலங்களில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்என்று ஒரு நண்பர் பகவான் முன்னிலையில் எழுதியவரை நோக்கிக் கூறினார். உடனே பகவான் குறுக்கிட்டுஒவ்வொரு கீதமும் எழுதப்படும் போதே முன்னரேயே சமர்ப்பித்தாகி விட்டதுஎன்று ஆசீர்வதித்தார். அந்த பகவானின் பாத கமலங்களில் மீண்டும் இந்த கீதங்களை சமர்ப்பிக்கின்றேன்.

 

    என்ன ராகம், என்ன மெட்டுகள் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளுங்கள். பதங்களை மட்டும் யாரும் மாற்றவே கூடாது. அது பகவத் அபசாரமாகி விடும்.

 

    இந்த பாட்டுகள் யாவும், இது சம்பந்தப்பட்ட எல்ல உரிமைகளும் மதுரை சத்திய சாயி சேவா சங்கத்துக்கே சமர்ப்பணம்.

மதுரை                                                      வெ.சந்தானம்

1-3-’66   

        

*

     நூலில் முதல் கீதமாக இடம் பெறும் மகா கணபதி பற்றிய கீதத்தைக் கீழே காணலாம்.

 

swastk ganesh

மகாகணபதி

                                                       ஹம்ஸத்வனிஆதி

பல்லவி

மகா கணபதே நமஸ்தே கஜமுக

மகா சுகிர்த வர வல்லப கணபதி

..

தேஹி ஸித்தி புத்தி மங்கள நாதா

ஓங்கார ரூபா விக்னஹர பாதா

சரணம்

கவிகள் நாயகா ஹரன் சிவை புத்ரா

கானம் கல்வி கலை வர அருள் நேத்ரா

நமோ விநாயகா தெய்வநாயகா

பாதகத்துயர் போக்கி சாதக வாழ்வருள்

*

 

BABA PU ALANKARAM

ஒவ்வொரு நவராத்திரியும் ஒன்பது நாட்களிலும் சத்தியசாயி சேவா சங்கம், மதுரையில் சங்கீத கச்சேரி, பாபா பற்றிய சொற்பொழிவுகள், அஷ்டோத்திரம், பஜனை, பூஜை என்று அனைத்து ஆன்மீக நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடக்கும்.

 

அந்தக் கச்சேரிகளில் எனது தந்தையார் இயற்றிய கீதங்களை அபார கற்பனை வளத்துடன் பல வித்வான்கள் பாடி மகிழ்வர்; குழுமி இருப்போரை மகிழ்விப்பர்.

 

பொன்னான காலம் அது. அதை ஒட்டிய மலரும் நினைவுகளை இந்த நவராத்திரி கட்டுரை கொண்டுள்ளது.

*

 Pictures are added now from different sources.Thanks.

2.இந்துக் கடவுள்களை இனம் காணுவது எப்படி?- பகுதி 2

IMG_6803

Compiled by London swaminathan

Post No.2235

Date: 11  October 2015

Time uploaded in London: 17-47

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளிடப்பட்டது

d82cc-brahma-stamp

பிரம்மா

நான்கு தலைகள்; ஆனால் பெரும்பாலும் மூன்று தலைகள் மட்டுமே தெரியும். கையில் ஜப மாலை, வேதப் புத்தகம் இருக்கும். சில உருவங்களில் அன்னப் பட்சியும் அருகில் நிற்கும் அல்லது தாமரை மேலமர்ந்தவராகக் காட்சி தருவார். குறிப்பாகப் பாற்கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவின் வயிற்றிலிருந்து வருவது போலக் காட்டுகையில் தாமரை மேல் இருப்பார்.

விஷ்ணு

மும்மூர்த்திகளில் மிகவும் எளிதில் அடையாளம் காணக்கூடிய கடவுள்; கைகளில் சங்கு சக்கரம் தாங்கியிருப்பார். நான்கு கைகளில் ஒரு கையில் கதை இருக்கும். தென் கிழக்காசிய நாடுகளில் கூட, தலை மட்டும் காட்டப்பட்டாலும், சங்கு சக்கரம் பொறிக்கப்பட்டு ள்ளதால் எளிதில் கண்டு பிடித்துவிடலாம். சில இடங்களில் கருட வாகனம் இருக்கும்; பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது பள்ளி கொண்ட கோலத்தில் படுத்த நிலையில் இருப்பார். தென் இந்தியக் கோவில்களில் நின்ற, அமர்ந்த, பள்ளிகொண்ட  என்ற மூன்று கோலங்களில் பெரிய சிலைகளாக காட்டப்பட்டுள்ளார்.

df0e0-trimurti_ellora

சிவன் (நடராஜர்)

சிவன் உருவங்களில் நடராஜரை அடையாளம் காண்பது எளிது ஒற்றைக் காலைத் தூக்கிய நிலையில் கைகளில் உடுக்கை, தீ இவற்றுடன் கட்சி தருவார். காலடியில் ஒரு அசுரன் இருப்பான். லிங்க உருவமும் சிவன் ஒருவருக்கே உரித்தாகையால் எளிதில் உணரலாம்.ஆனால் மஹேஸ்வரனாகக் காட்டுகையில் சில இடங்களில் நெற்றிக் கண் இருக்கும். சடை முடியில் சந்திரப் பிறையும், கழுத்தில் பாம்பும் இருக்கும். கைகளில் திரி சூலம் இருக்கும். மான், மழு என்னும் ஆயுதம், டமருகம் என்னும் உடுக்கை கைகளில் இருக்கும்.ரிஷப (காளை/விடை) வாஹனம் மேலும் இருப்பார்.

கணபதி

வெளிநாட்டினரும் எளிதில் நினைவு வைத்துக் கொள்ளக் கூடிய கடவுள் யானை முகம் கொண்ட கணபதி ஆவார். வட நாட்டில் சித்தி, புத்தி என்னும் தேவியருடன் காட்சி தருகிறார்.அருகில் மூஷிகம் என்னும் மூஞ்சூறு அல்லது எலி இருக்கும். கைகளில் மோதகம் என்னும் கொழுக்கட்டை இருக்கும் அல்லது அருகில் தட்டில் படைக்கப்பட்டிருக்கும்.

முருகன்

மயில் வாகனத்துடனும் கையில் வேலுடனும் காட்சி தருகிறார் முருகன். ஆனால் தென் கிழக்காசிய நாடுகளில் இவரை அடையாளம் காண்பது எளிதல்ல. தமிழ் நாட்டில் சில இடங்களில் வள்ளி, தெய்வானை ஆகிய இரு மனைவியருடன் காணலாம். தமிழ்நாட்டில் படங்களில் 12 கைகள், ஆறுமுகங்களுடன் காட்டப்படுகிறார்.

துர்கா

உமா, அல்லது பார்வதியின் மற்றொரு தோற்றம் துர்கா. வடநாடு முழுதும் பல்வேறு பெயர்களில் வழிபடப்படும் தெய்வமான துர்கா புலி அல்லது சிங்கத்தின் மேல் இருக்கிறார். கையில் வாள் இருக்கும். தென்னிந்தியக் கோவில்களில் சங்கு சக்கரத்துடன் (நாராயணி) காட்சி தருகிறார். கையில் வில், அம்பு, திரிசூலம், வஜ்ராயுதம் ஆகியனவும் இருக்கும். எட்டு அல்லது பத்து கைகளுடன் தோன்றுவாள். காளியாக காட்சி தருகையில் கபால (மண்டை ஓட்டு) மாலையும் இருக்கும். மஹிஷன் என்னும் எருமைத் தலை அரக்கனை அழிக்கும் காட்சி மாமல்லபுர குகைக் கோவில் முதல் வடநாட்டுக் கோவில்கள் வரை எல்லா இடங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது, இந்த மஹிஷாசுரமர்த்தனி கோலம் மிகவும் சிறப்புடைத்து.

lakshmi

லெட்சுமி

செந்தாமரை மலர் மீது வீற்றிருக்கும் லெட்சுமியின் கைகளில் தாமரை மலர் இருக்கும். கஜ லெட்சுமி உருவம் மிகவும் பிரபலமானது. லெட்சுமியின் இருபுறமும் இரண்டு யானைகள் நின்று நீரால் அபிஷேகம் செய்யும். இது நிறைய செல்வத்தையும் மங்களத்தையும் கொடுக்கும். செட்டி நாட்டார் வீட்டுக் கதவுகள் முதல் பல அரண்மனை வாயில்களிலும் டென்மார்க் நாட்டு சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அண்டாவிலும், நாணயங்களிலும் கஜலெட்சுமி உருவம் இருக்கிறது. சில இடங்களில் ஆந்தை வாகனமும் இருக்கும்.

சரஸ்வதி

சரஸ்வதி சிலை அன்னப் பறவையுடனோ, மயிலுடனோ இருக்கும். கைகளில் ஜபமாலையும், புத்தகமும் இடம்பெறும். வீணை வாசிக்கும் கோலத்திலும், வெண்தாமரை மலர் மீது அமர்ந்தும் காட்சி தருகிறார்.

saraswati

காயத்ரி

ஐந்து முகங்கள், பத்து கைகளுடன் தோன்றும் காயத்ரி தேவியின் கைகளில் சங்கு, சக்கரம், சாட்டை, தாமரை, அமுத கலசம், மழு, கதை, அபய ஹஸ்த முத்திரை முதலியனவற்றைக் காணலாம்.

அனுமன்

குரங்கு முகத்துடன் தோன்றும் அனுமனை, ஆஞ்சநேயரைக் குழந்தைகளும் அடையாளம் கண்டுவிடுவர். படங்களில் கதை அல்லது, சஞ்சீவி மலையைத் தூக்கும் நிலையில் இருப்பார்.

hanuman raman

சோமாஸ்கந்தர்

தென்னிந்தியக் கோவில்களில் பிரபலமான சோமாஸ்கந்தர் விக்ரஹத்தில் உமையுடனும், சிவனுடனும் ஸ்கந்தன் எனும் முருகன்/கார்த்திகேயன் குழந்தை வடிவத்தில் காட்சி தருவார்.

(சஹ + உமா+ ஸ்கந்த= சோமாஸ்கந்த = சிவன் உமையுடனும் கந்தனுடனும்)

இந்திரன், அக்னி, வாயு, யமன், குபேரன், நிருதி

வேதகாலக் கடவுளரான இந்திரன் ஐராவதம் என்னும் யானையின் மீது வஜ்ராயுத்துடன் தோன்றுவார். யானைக்கு ஒரு முகமோ, பல முகங்களோ இருக்கும். அக்னி ஆட்டு வாகனத்திலும், வாயு மான் வாகனத்திலும், யமன் எருமை வாகனத்திலும் இருப்பார்கள். அக்னியின் தலை(முடி) தீச்சுவாலை வடிவிலும், யமன் கைகளில் பாசக் கயிறும் இருக்கும். நிருதி என்பவர் ஒட்டகம் அல்லது கழுதை வாகனத்தில் இருப்பார். சில இடங்களில் பிரேத வாகனம் இருக்கும். குபேரன் குட்டையாக தொந்தியும் தொப்பையுமாக தங்கக் கலசத்துடன் மனித வாகனத்தில் காட்சி தருவார்.

358bc-vishnu

தசாவதாரம் (கிருஷ்ணன்,ராமன்)

தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்கள். இந்த மூர்த்தங்களை அடையாளம் காண்பது எளிது:

மச்சாவதாரம்: அடிப்பகுதி மீன் போல இருக்கும்

கூர்மாவதாரம்: அடிப்பகுதி ஆமை போல இருக்கும்

வராஹாவதாரம்: மூக்கு, பன்றி போல இருக்கும்; அதன் மூக்கில் பூமி இருக்கும்

வாமனாவதாரம்: குள்ளமான பிராமணச் சிறுவன்; குடையுடன் காணப்படுவான்

நரசிம்மாவதாரம்: முகம், சிங்கம் போல இருக்கும். ஆக்ரோஷமாக ஹிரண்யகசிபுவை வதம் செய்வதைக் காணலாம்.

பரசுராமாவதாரம்: கையில் அல்லது தோளில் பரசு/கோடரி இருக்கும்.

ராமாவதாரம்: கையில் அம்புடன் நெடிய உருவம்; பொதுவாக லெட்சுமணன், சீதை ஆகியோருடனும் பாதம் இருக்கும் இடத்தில் அனுமனுடனும் காணப்படுவார்.

பலராமாவதாரம்: தோளில் உழும் கலப்பை இருக்கும்; வண்ணப் படங்களில் மஞ்சள் ஆடையுடன் இருப்பார்.

கிருஷ்ணாவதாரம்: தலையில் கிரீடம்; அதில் மயில் தொகை; அருகில் பசு மாடு; வாயில் புல்லாங்குழல்; அருகில் ராதா; வண்ணப் படங்களில் நீலாம்பரதாரியாகக் காட்சி அளிப்பார்.

கல்கி அவதாரம்: வெண்குதிரையில் கைகளில் வாளுடன் வருவார். சில இடங்களில் முகமே குதிரை போலக் காட்டப்பட்டிருக்கிறது.

IMG_6819

நவக்கிரகங்கள்

நவக்கிரகங்களில் ராகு சந்திரனுடனும் கேது – பாம்புடனும் இருப்பர். சூரியன் பின்பக்கம் சூர்யப் பிரபையுடனும் 7 குதிரை, ஒற்றைச் சக்கர ரதத்தில் பவனி வருவார்.சந்திரன் சந்திரப் பிரபையுடன் இருப்பார். ஏனைய கிரகங்களை வாகனம் இல்லாவிடில் அடையாஅள்ம் காண்பது கடினம்.

இந்துக்களின் எண்ணற்ற கடவுள் மூர்த்தங்களை விளக்குவது சாத்தியமல்ல. மேற்கூறிய பட்டியலை வைத்து ஓரளவு சைவ, வைஷ்ணவ திருவுருவங்களை அடையாளம் காணலாம்.

-சுபம்–

b03a6-42bwives2bof2bvishnu

நமது கேள்விகளும் அப்பர் பதில்களும்!

IMG_2990

Written by S NAGARAJAN

Post No.2234

Date: 11  October 2015

Time uploaded in London: 16-28

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

தேவார சுகம்

நமது கேள்விகளும் அப்பர் பதில்களும்!

.நாகராஜன்

 

நல்ல கேள்விகள் கேட்பவர் சிலரே! அதற்குச் சரியான விடைகள் தருபவர் நிச்சயமாக வெகு சிலரே!

நமக்குப் புரிய வேண்டிய பல விஷயங்கள் குறித்து நம்மவரில் பலர் பளிச் பளிச் என்று கேள்விகள் கேட்க அருளாளர் அப்பர் பளார் பளார் என பதில்களை அள்ளி வீசுகிறார்.

எங்கே! தேவாரத்தில்!!

 

கேள்விகளும் பதில்களும் இதோ:-

  • ஞானம் எது? கல்வி எது?

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

 

  • நன்னெறி காட்டுவது எது? நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

 

  • நமது வினைகள் ஓடிப் போக என்ன செய்ய வேண்டும்?

ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே!

 

  • துன்பப் படுகிறேன், வினை விடவில்லை, பழைய வினைகள் படுத்துகின்றன, நான் என்ன செய்வது?

IMG_3244

அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?                                    

தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்?                                  

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு                                          

எல்லை இல்லதோர் அடிமைப் பூண்டேனுக்கே

 

 

  • காக்கைக்கு உடலை இரையாக்குவார் யார்?

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்                                    

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்                                   

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து                                               

காக்கைக்கே இரையாகிக் கழிவரே             (ஆக்கைஉடல்)

 

crow2

  • இறைவனது திருவடி நீழல் எப்படி இருக்கும்/

மாசில் வீணையும் மாலை மதியமும்                                       

வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்                                                   

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே                                 

ஈசன் எந்தை இணையடி நீழலே!

 

 

  • சுவர்க்கம் செல்ல வழி என்ன?

துளக்கில் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்

 

road-to-heaven-608763_640 (1)

  • மெய்ந் நெறி ஞானம் என்றால் என்ன?

விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானம் ஆகும்

 

  • நண்பன் யார்?அவனுக்கு என்ன கொடுப்பது?

கண் பனிக்கும்கை கூப்பும்! கண் மூன்றும் உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பன்!

 

 

  • நெஞ்சுக்கு உபதேசம் என்ன?

நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சேவக்கரை உறைவானை வணங்கு நீ!!

 

  • ஈசன் யார்க்கு எளியன்? யார்க்கு அரியன்? வஞ்சகர்க்கு அரியர் போலும், மருவினோர்க்கு எளியர் போலும்!

 

 

  • நன்நெறிக் கண் சேராதவர்கள் யார்? “துரிசு அறத் தொண்டு பட்டார்க்கு எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன்கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் தெளியானைத்,

திருநாகேச்சரத்து உளானைச் சேராதார் நன்நெறிக் கண் சேராதாரே!

 

 palanest

  • கிரகமும், நட்சத்திரமும் சரி இல்லை, என்ன செய்வது?  “நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார், கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம்! குறிக்கொண்மினே! (குறித்துக் கொள்ளுங்கள்)

 

  • இடர் தீர வழி? பொன் ஒத்த நிறத்தானும், பொருகடல் தன் ஒத்த நிறத்தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழில் புகலூரரைஎன் அத்தாஎன என் இடர் தீருமே!

 

 

  • பிறந்தவர்கள் என்று யாரைச் சொல்லலாம்? வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார், கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்தப் பெற்றார் பிறந்தவரே!                                                  மற்றுப் பிறந்தவர் பிறந்திலரே!!

 

  • துயர் கெட வழி?                                            
  • கந்த வார் பொழில் நாகைக்காரோணனைச் சிந்தை செய்யக் கெடும் துயர், திண்ணமே!

 

  • யாருடைய செல்வத்தை மதிக்கக் கூடாது? ஏன்? சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்!

 

 

  • யாரைக் கடவுளாக வணங்கலாம்? ஏன்?

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய், உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே!

 

 

  • செத்துச் செத்துப் பிறப்பவர் யார்?

திருநாமம் அஞ்செழுத்து செப்பார் ஆகில்                                      

தீவண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில்                                

ஒருகாலும் திருக்கோவில் சூழார் ஆகில்                                      

 உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்                           

அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்                                    

அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்                                

பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப்                              

பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே!

 

 

  • குறை இல்லாமல் இருப்பது எதனால்?
  • சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்,                              
  • ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே!

 

இப்படி அள்ள அள்ள குறையாத பதில்கள் அப்பரின் பதிகங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.

 

நம் கேள்விகளுக்கு உரிய பதில்கள் மட்டும் அல்ல அவை! அனைத்தும் அற்புத இரகசியங்கள்!

 

***********

பரம (ஹம்ஸ) ரகசியம் !

567-Sri-Ramakrishna-Paramahamsa

ராமகிருஷ்ண கதாம்ருதம்

Written by S NAGARAJAN

Post No.2228

Date: 9  October 2015

Time uploaded in London: 9-20 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

By .நாகராஜன்

 

பரமஹம்ஸர் கூறிய மூன்று மந்திரங்கள்

தர்மம் மிக நுட்பமானது. சூட்சுமமானது. பெரியோர்கள் கூட தர்ம விஷயத்தில்  திகைக்கின்றனர்.

அயோக்கியர்கள் நிறைந்த உலகம் இது, அடிக்கடி வந்து தொந்தரவு செய்கின்றனர். அஹிம்சை வழியைப் பின்பற்றி பேசாமல் நடந்து சென்றால் கலி யுகத்தில் நம் பிழைப்பு ஓடுமா? அவர்களை அடிப்பதா? அல்லது நாம் ஓடி வந்து விடுவதா?

ஆகவே தான் இந்த மாதிரி சந்தேகங்களைத் தீர்க்க பெரியோர்களை நாடுங்கள், அவர் கூறுவதே தர்மம் எனத் தெளியுங்கள் என நமது அற நூல்கள் கூறுகின்றன.

இந்த வகையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போகிற போக்கில் ஏராளமான ரகசியங்களைக் கூறிக் கொண்டே வந்திருக்கிறார். அதை நல்ல வேளையாக விவேகானந்தர், மகேந்திரநாத் குப்தா (எம்), பரமஹம்ஸரின் இதர சீடர்கள் வரி வரியாகத் தொகுத்து நம்மிடம் தந்துள்ளனர்.

மகேந்திரநாத் குப்தா அவற்றையெல்லாம் தம்மிடம் நாடி வந்த பக்தர்களுக்கு அவ்வப்பொழுது தெளிவாகச் சொல்லி வந்துள்ளார்.

ஒரு நாள் தன் சீடர்களிடம் அவர் கூறியது பரமஹம்ஸரின் மூன்று மந்திரங்களைப் பற்றி!

பக்தர் ஒருவர் பரமஹம்ஸரிடம், “என்ன பாவம் செய்தேன் நான்! என்னுடைய தட்டில் இருந்த மீனை பூனை கவ்விக் கொண்டு சென்று விட்டது. அதை என்னால் தடுக்கவே முடியவில்லை” என்றார். அதைக் கேட்டு உறுதியான குரலில் பரமஹம்ஸர் கூறினார்:” அது ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஒரே ஒரு தடவை அதை அடி! உன் அடி ஒன்றும் பூனையைக் கொன்று விடாது!”

பக்தர் தன்னை பரமஹம்ஸர் வெகுவாகப் பாராட்டுவார் என்று நினைத்திருந்தார். பாவம், அவர் ஏமாந்தே போனார்!

மோசமான நபர்கள் உள்ள உலகத்தில் வாழ பரமஹம்ஸர் மூன்று தாரக மந்திரம் போன்ற வழிகளைச் சொல்லி உள்ளார்.

FDC

அனுமதி; சீறு; தள்ளி நில்!

அதை பரம(ஹம்ஸ) ரகசியம் என்றே சொல்லலாம்! 1) முதலில் கொஞ்சம் சலுகை கொடு, அதாவது அனுமதி! 2) அப்புறம் சீறு 3)தள்ளி நில் இவையே அந்த மூன்று ரகசியங்கள்.

நல்லதும் கெட்டதும் கலந்ததே உலகம். அதில் வாழும் மனிதர்களும் அப்படியே தான். அவர்களிடம் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். முதலில் எதைச் செய்யவும் அனுமதி அல்லது சலுகை தரலாம். ஆனால் அது தீமை பயக்கும் விதத்தில் இருக்குமானால் சீறத்தான் வேண்டும். அடிதடி போன்ற வன்முறை இல்லாவிட்டாலும் கூடச் சீறித்தான் ஆக வேண்டும். அப்படிச் செய்ய பிடிக்கவில்லை எனில் மரத்தடியில் சென்று உட்கார்ந்து ஹரி நாமம் ஜெபிக்க வேண்டியது தான்! ஆனால் உலகத்தில் வாழ வேண்டுமென்றால் சீறினால் தான் முடியும்.

மூன்றாவதாக, “ஒரு மனிதனிடம் ஏராளமான குறைகளைக் கண்டால் என்ன செய்வது? அவனைத் தூர இருந்து சல்யூட் செய்! டைகர் நாராயணனுக்கு எப்படி மனிதர்கள் வணக்கம் செலுத்துகிறார்களோ, அதே போல! அந்த நாராயணனுக்கும் நமஸ்காரம் செய்ய வேண்டியது தான் – ஆனால் தூரத்திலிருந்தே செய்ய வேண்டும். அது உன்னை அடித்து முழுங்கி விடாத தூரத்தில் நீ இருக்க வேண்டும்! அதாவது தள்ளி நில்!” என்கிறார் அவர்!

இதைச் சொன்ன மகேந்திரநாத் குப்தா, பரமஹம்ஸர் இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்டு விட்டு, அப்போது தான் தன்னை அண்டிய பக்தர்கள் அமைதியாக வாழ்க்கையைக் கழிக்க முடியும், அமைதியாக இருக்கும் வாழ்க்கையில் தான் கடவுளைப் பற்றி அதிகமாகச் சிந்தித்து துதிக்க முடியும் என்பதனால் தான் அவர் இப்படி அருளியுள்ளார் என்று கூறினார்.

“The first thing necessary is a quiet and peaceful life. If I have to go about the world the whole day to make a living, it is hard for me to attain anything very high in this life”” என்று ஸ்வாமி விவேகானந்தரும் இதையே வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இப்படி எல்லாம் வழி காட்டி வந்ததால் தான் பரமஹம்ஸரை கருணா சமுத்திரம் என்று அழைக்கிறோம் என்று மகேந்திரநாத் குப்தா உணர்ச்சி பொங்கக் கூறினார்.

அவருடைய சீடர்களுக்கு உலகியல் வழியில் தெளிவு ஏற்பட்டது. நமக்கும் தான்!

***********

ஆழ்வார் அமுதம்: நம்மாழ்வார்

வானவர்க்குத் தான் தெய்வம் நீ என்றால் அது உனக்குப் புகழா, என்ன?

 

Written by S NAGARAJAN

Post No.2221

Date: 7th   October 2015

Time uploaded in London:  9-34 am

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

.நாகராஜன்

 

இறைவனை எப்படி விளக்குவது?

 

இறைவன் பெரியவன்! எல்லாம் வல்லவன்!!

ஆகவே “ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்” என்று ஆழ்வார் ஆசைப்படுகிறார் (நம்மாழ்வார் திருவாய் மொழி 3 -3 1)

ஆனால் இறைவன் யார்? எங்கே இருக்கிறான்? உருவமாகவா? அருவமாகவா? மனிதருள் அவதாரமாகவா? இயற்கையாகவா? மணியாகவா? ஒளியாகவா?

கேட்கிறார்:

புகழும் நல் ஒருவன் என்கோ?

பொருவில் சீர்ப் பூமி என்கோ?

திகழும் தண் பரவை என்கோ?

தீ என்கோ? வாயு என்கோ?

நிகழும் ஆகாசம் என்கோ?

நீள் சுடர் இரண்டும் என்கோ?

குன்றங்கள் அனைத்தும் என்கோ?

மேவு சீர் மாரி என்கோ?

விளங்கு தாரகைகள் என்கோ?

நாவியல் கலைகள் என்கோ?

ஞான நல்லாவி என்கோ?

பங்கயக் கண்ணன் என்கோ?

பவளச் செவ்வாயன் என்கோ?

அங்கதிர் அடியன் என்கோ?

அஞ்சன வண்ணன் என்கோ?

செங்கதிர் முடியன் என்கோ?

திரு மறு மார்வன் என்கோ?

சாதி மாணிக்கம் என்கோ?

சவி கொள் பொன் முத்தம் என்கோ?

சாதி நல் வயிரம் என்கோ?

தவிவில் சீர் விளக்கம் என்கோ?

ஆதியஞ் ஜோதி என்கோ?

ஆதியம் புருடன் என்கோ?

அடியவர் வினை கெடுக்கும் நச்சு மாமருந்தம் என்கோ?

நலங்கடல் அமுதம் என்கோ?

அச்சுவைக் கட்டி என்கோ?

அறுசுவை அடிசில் என்கோ?

நெய்ச்சுவைத் தேறல் என்கோ?

நான்கு வேதப் பயன் என்கோ?

சமய நீதி நூல் என்கோ?

நுடங்கு கேள்வி இசை என்கோ?

இவற்றுள் நல்ல மேல் என்கோ?

வினையின் மிக்க பயன் என்கோ?

கண்ணன் என்கோ? மால் என்கோ? மாயன் என்கோ?

வானவர் ஆதி என்கோ?

வானவர் தெய்வம் என்கோ?

வானவர் போகம் என்கோ?

வானவர் முற்றும் என்கோ?

ஊனமில் செல்வம் என்கோ?

ஊனமில் சுவர்க்கம் என்கோ?

ஊனமில் மோக்கம் என்கோ?

ஒளி மணிவண்ணன் என்கோ?

நளிர்மணிச் சடையன் என்கோ?

நான்முகக் கடவுள் என்கோ? (திருவாய்மொழி 3-4- 1 முதல் 7)

யாரை இறைவன் என்று சொல்வது? எப்படி அவனை விவரிப்பது?

தேவர்களுக்கு மட்டுமா தெய்வம் அவன்?

அவன் வானில் உறைபவர்க்கு மட்டும் தான் தெய்வம், அவர்களுக்கு மட்டுமே அருள் பாலிப்பான் என்றால், அவன் ஒரு தெய்வமா, அப்படிப்பட்ட தெய்வத்தால் எனக்கு என்ன பயன்? அவனுக்கு அது புகழ் ஆகுமா?

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ? (திருவாய்மொழி 3-3-4)

நிச்சயம் இல்லை!

சரி, மேலே சொன்ன அனைத்தில் யார் என ஆழ்வார் இறைவனை இனம் கண்டாரா?

கண்டார்; விடையையும் தெரிவித்து விட்டார்! இப்படி:-

யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம் தோறும் தோய்விலன்

 புலன் ஐந்துக்கும் சொலப்படான்

உணர்வின் மூர்த்தி

அவனை அடையக் கூடிய வழி? அதையும் கூறுகிறார்;-

ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதுமோர் பற்றிலாத பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாம்! (திருவாய்மொழி 3-5-10)

இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு’! ((திருவாய்மொழி 1-2-4)

பிணக்கு அற அறுவகைச் சமயமும் நெறி உன்னி உரைத்த கணக்கறு நலத்தனன் (திருவாய்மொழி 1-3-5)

ரகசியம் புரிகிறது

ஆஹா! ஆழ்வார் சொன்ன ரகசியம் கொஞ்சம் புரிகிறது.

இறைவன் அனைவருக்கும் பொது; அனைத்தும் ஆனவன் அவன்! அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.

வேண்டுதல் வேண்டாமை இலான்!

ஒவ்வொரு சமயமும் தன் தெய்வம் என் தெய்வம் என்று சொல்லுபவனும் அவனே! பற்றிலாத பாவனை கூடில் அவனையும் கூடி விடலாம்.

அந்த பாவனை வருவதற்கு அவன் நினைவு வேண்டும்; பக்தி வழி நடத்தல் வேண்டும்; சேவை செய்ய வேண்டும். To know God; To Love God; To Serve God இதுவே வழி!

இதைச் செய்தால் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய முடியும்!

இதைத் தெளிவாகச் சொல்கிறார், நமக்காக, நம்மாழ்வார்!

ஆழ்வாரின் பாடல்கள் அத்தனையும் நம்மை வாழ்விக்கும் அமுதம்!

******************

போப் சாப்பிட்ட பிஸ்ஸா (பீட்ஸா) !

Pope Francis as he celebrated Communion last July in Brazil.

Pope Francis as he celebrated Communion last July in Brazil.

Article: written by S NAGARAJAN

Post No.2218

Date: 6   October 2015

Time uploaded in London: 10-06 am

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

வாழ்வியல் அங்கம்

போப்பின் பிஸ்ஸா (பீட்ஸா)!

((தமிழ்நாட்டில் பிஸ்ஸாஎன்று எழுதுவதன் சரியான  இதாலிய மொழி உச்சரிப்பு பீட்ஸா (peetza); English Spelling Pizza)

 

.நாகராஜன்

 pope pizza

போப்புக்கு, இதாலி நாட்டில் நேபிள்ஸ் நகரத்தில, ஒரு அன்பர், பிட்ஸா அளித்தார்.

கையில் லண்டனிலிருந்து வெளி வரும் டைம்ஸ் இருந்தது. 5-9-2015 தேதியிட்ட இதழ்! சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்த வேளையில் மனைவி முன்னே வரப் பின்னால் பதுங்கியவாறே எனது புத்திரர்கள்!

ஆஹா! வழக்கமான விஷயத்திற்கு வந்து விட்டார்களோ! இப்படிப்பட்ட வேளைகளில் நான் எப்படி நடந்து கொள்வேன் என்று தெரிந்ததால் பாதுகாப்புடன் அம்மாவைக் கேடயமாக வைத்து வருகிறார்கள்!

என்ன?” – நான்

ஒண்ணுமில்லை. லேசா உடம்பு சரியில்லை. அதுனாலே வெளியிலேர்ந்து..”

வெளியிலேர்ந்து..” – கொஞ்சம் குரலில் கடுமை தொனிக்கநான்

பிஸ்ஸாவை (Pizza) ஆர்டர் பண்ணி வாங்கலாமான்னு..?!”

 

நான் மௌனமாக இருந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். ஏனெனில் இதற்குள் கூரை விழுமளவு ஒரு கூச்சல் போட்டிருப்பேன்.

எத்தனை பிஸ்ஸா?’ – இது அவர்களுக்கு ஆச்சரியமான ஒரு திருப்பம்.

அவசரம் அவசரமாக தைரியமாக முன்னே வந்த பையன்கள்,” ஒண்ணு போதும். உங்களுக்கோ பிடிக்காது. நாங்கள் மூணு பேரும் ஒண்ணையே எடுத்துக்கறோம். ஆர்டர் பண்ணவா?”

நாலா ஆர்டர் பண்ணு. எனக்கும் சேர்த்துத் தான்!”

 

 

ஹோவென்ற கூச்சலுடன் பையன்கள் அலற, மனைவியோ எனக்கு நட்டுகழண்டு விட்டதோ என்ற பாவனையில் பார்த்தாள்.

ஒரு வேளை ஏமாற்று வித்தையோ என்ற அவளது சந்தேகப் பார்வை எனக்குப் புரிந்தது.

வேண்டாம் வேண்டாம் ஆர்டர் பண்ண வேண்டாம்” – எனது குரலால் பையன்கள் சுருங்க மனைவியோ அப்பாடா, அது தானே பார்த்தேன், வேதாளம் எங்காவது முருங்கை மரம் ஏறாமல் இருக்குமாஎன்று பார்வையால் பேசினாள்.

 

 

கிட்ட தானே இருக்கு. ராஜஸ்தானுக்கே போய் சாப்பிட்டு வந்துடலாம். அங்க போனா நைட் டின்னரை முடிச்சுடலாமே!” ராஜஸ்தான் ஹோட்டல் பெங்களூரில் பிரசித்தி பெற்ற ஒன்று. பிஸ்ஸா அங்கு ஸ்பெஷல் ஐட்டம்!

ஆயிரம் வாட்ஸ் பல்ப்பையன்களின் முகம் பளிச்.

எனக்கு என்னவோ ஆகி விட்டது என்று தீர்மானித்த மனைவியிடம் ஃபைவ் மினிட்ஸ் டைம், கிளம்புங்கள் என்றேன்.

*

epa04657751 A handout photograph made available by the L'Osservatore Romano - Press Office showing Pope Francis receiving a gift of a special pizza during his weekly general audience in Saint Peter's Square, Vatican City, 11 March 2015.      +++ANSA PROVIDES ACCESS TO THIS HANDOUT PHOTO TO BE USED SOLELY TO ILLUSTRATE NEWS REPORTING OR COMMENTARY ON THE FACTS OR EVENTS DEPICTED IN THIS IMAGE; NO ARCHIVING; NO LICENSING+++  EPA/L'OSSERVATORE ROMANO / HANDOUT  HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES/NO ARCHIVES

A handout photograph made available by the L’Osservatore Romano – Press Office showing Pope Francis receiving a gift of a special pizza during his weekly general audience in Saint Peter’s Square, Vatican City, 11 March 2015. -ANSA 

வாசகர்களுக்கு ஒரு வார்த்தை! எப்போதுமே அவர்களை மறுத்துப் பேசும் நான் ஏன் மனம் மாறினேன் என்ற இரகசியத்தை உங்களிடம் மட்டும்  சொல்லி விடுகிறேன். மனைவியிடமும், பையன்களிடமும் போட்டுக் கொடுத்து விடாதீர்கள்!

*

எப்போதாவது வெளியே வருவேன் என்று முன்பு வாக்குக் கொடுத்தபடியே போப்பாண்டவர் வாடிகன் வாசஸ்தலத்தை விட்டு வெளியே வந்தே விட்டார்! யாருக்கும் தெரியாமல், யாரிடமும் சொல்லாமல் ரோமில் உள்ள கண்ணாடிக் கடைக்காரரிடம் அவரே வந்து விட்டார். வேறொன்றும் இல்லை, தன் மூக்குக் கண்ணாடியைச் சரி பண்ணிக் கொள்ளத் தான்!!

 

கண்ணாடி நிபுணரான, அலெஸ்ஸாண்ட்ரோ ஸ்பிஜியா (Alessandro Spiezia), வாடிகன் சென்று குறித்த நேரத்தில் போப்பாண்டவரைப் பார்த்துக் கண்ணாடியைத் தரலாம் என்று பரபரப்பாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் முன்னால் ரோமிலுள்ள சென்ட்ரல் ஸ்டோரில், போப்போண்டவரே நேரில் நின்ற போது பிரமித்து விக்கித்து விட்டார்.

 

எனக்கு புது ஃப்ரேம் வேண்டாம்! இதே ஃப்ரேமில் லென்ஸ்களை மட்டும் மாற்றிக் கொடுத்தால் போதும்என்றார் போப்பாண்டவர்.

 

அவசரம் அவசரமாக லென்ஸ்களை மாற்றிய அலெஸ்ஸாண்ட்ரோ பெருமிதம் பொங்க மூக்குக்கண்ணாடியை போப்பாண்டவரிடம் கொடுத்தார்.

அதற்கான கட்டணம் எதையும் அவர் வாங்கத் தயாரில்லை.

 

ஆனால் போப்போ, ‘இதற்கு எவ்வளவு ஆச்சு? நான் தந்து விடுகிறேன்என்றார்.

40 நிமிடங்கள் ஆயிற்று கடையில்கண் டெஸ்ட், லென்ஸ் மாற்றுதல் என்று எல்லாம் முடிய! கடையின் வெளியே பிரம்மாண்டமான கூட்டம், அவரைத் தரிசிக்க!

 

புன்முறுவலுடன் வெளியே வந்த போப்பாண்டவர் தன்னுடைய ஃபோர்ட் ஃபோகஸ் காரில் ஏறி வாடிகனுக்குத் திரும்பினார். அவருக்கு பிரம்மாண்டமான பெரிய கார்கள் எல்லாம் பிடிக்காது! அவர் காருக்குப் பின்னால் இன்னொரு காரில் வாடிகன் போலீஸ் படை சென்றது.

 

போப் சொன்னாராம்ஒரு நாளைக்கு வெளியே செல்ல விரும்புகிறேன், யாருக்கும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல், ஒரு பிஸ்ஸா (Pizza) சாப்பிட விரும்புகிறேன், அதற்குத் தான்!”

*

இப்போது சொல்லுங்கள் என் மனமாற்றம் சரி தானே! பெரிய போப்பாண்டவருக்கே பிஸ்ஸா ஆசை இருக்கும் போது என் மனைவி, குழந்தைகளுக்கு இருக்கக் கூடாதா, என்ன! பெங்களூரில் ராஜஸ்தான் ஹோட்டல் பிஸ்ஸா போல உண்டோ என்று அனைவருமே சொல்லும் போது அவர்கள் ஆசைப்படுவது, தப்பா, ஸார்!

 

அது தான் மனம் மாறி பிஸ்ஸா சாப்பிட நானும் கிளம்பி விட்டேன்!

லண்டன் டைம்ஸ் ஸார்! போப்பாண்டவர் பற்றிய செய்தி ஸார்!! 5-9-15 தேதியிட்ட இதழ்!

போகும் போது காஞ்சி பரமாசார்யாள் பல வருட காலம் மிக மிகக் கொஞ்சம் அளவே பொறி மட்டும் சாப்பிட்ட விஷயம் நினைவுக்கு வந்தது.

 

 

மனித மனம் என்றால் அப்படித்தான்! பல விஷயங்களில் மாறுதல் ஏற்படுகிறது. பல விஷயங்கள் நினைவுக்கு வருகிறது!

*

ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட்செயல்கள்

Written by S NAGARAJAN

Post No.2216

Date: 5   October 2015

Time uploaded in London: 16-21

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 

தேவார சுகம்

தமிழாகரனின் அருட்செயல்கள்!

.நாகராஜன்

தமிழாகரன்

தமிழக வரலாற்றில் பொன்னேட்டினால் பொறிக்க வேண்டிய ஏடுகள் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் வாழ்ந்த காலம்!

அறம் தலை நிறுத்த, மறத்தை நீக்க அவதாரங்கள் தோன்றுவது இந்து மத கொள்கையின் படி இடைவிடாத சுழற்சி கொண்ட ஒரு தத்துவமாகும்.

இப்படிப்பட்ட அவதாரங்களுள் முருகனே தோன்றியது போல வந்த இளம் பாலகன் திருஞானசம்பந்தர்.

முருகனுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமைகள் ‘எண்ணி’ மாளா. எண்ணி, நினைக்கவும் அதிசயம், எண்ணிக்கையிலும் அதிசயம். (இரண்டு ‘எண்ணி’ போட்டுக் கொள்ளலாம். எண்ணி எண்ணி மாளா!)

இளமை, தேவியிடம் பால் அருந்தியது, துடிப்பு, ஆற்றல், எதிலும் வெற்றி, சூர சம்ஹாரம் (சமண சம்ஹாரம் என அர்த்தம் கொள்க), பக்தர்களுக்கு அருள் பாலிப்பு, இப்படிப் பல ஒற்றுமைகளுள் தலையாய ஒன்று தமிழை உடலாகத் தரித்தது.

பல சந்த வகைகளையும், புதுப் பாணிகளையும், உவமான உவமேயங்களையும், பல்வேறு தோஷ நிவர்த்திக்கான பதிகங்களையும், இறைவனின் பெருமையைச் சொல்லும் பாடல்களையும் தம் பாக்களில் தந்தவர் ஞான சம்பந்தர். பதினாறாயிரம் பதிகங்கள் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்கள் + பதிக பலனைச் சொல்லும் பாடல் ஒன்று, ஆக மொத்தம் பதினொன்று) என்பதைக் கணக்கிட்டால் வருவது ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் பாடல்கள். அடேயப்பா என்று சொல்ல வைக்கும் பெரிய தொகை. அந்தப் பாடல்களை மூன்றாம் வயது தொடங்கி பதினாறாம் வயதுக்குள் பாடி இருக்கிறார். அதாவது 4748 நாட்களுக்குள் (365 x 13 + லீப் வருட நாட்கள் 3 = 4748) அப்படியென்றால் ஒரு நாளைக்கு 37.06 பாடல்கள், அதாவது ஒரு நாழிகைக்கு ஒரு பாடல்; ஒரு நாழிகை = 20 நிமிடம் ) இப்படிப் பொருள் பொதிந்த இறைவன் துதிகளை இவ்வளவு சிறப்புடனும் வனப்புடனும் உலக சரித்திரத்தில் பாடியதாக கற்பனைபயாகக் கூட கதை ஒன்று இல்லை!

ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட்செயல்கள்

 

அவரது அருட்செயல்களோ ஏராளம். அவற்றுள் முக்கியமான பத்தை மனதிற்குள் என்றும் நிறுத்தும் அளவு ஒரு சிறிய பாட்டில் அடக்கினார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்ய வந்த தேவனார் என்னும் பக்தர்.

ஓடம், சிவிகை, உலவாக் கிழி, அடைக்கப்                                              

பாடல், பனை, தாளம், பாலை நெய்தல், – ஏடு எதிர், வெப்பு,                                  

என்புக்கு உயிர் கொடுத்தல், ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்                           

தென்புகலி வேந்தன் செயல்

 

 

என்ன அருமையான பாடல்! இன்று நமக்குக் கிடைத்துள்ள திருஞானசம்பந்தரின் பாடல்கள் சுமார் 4287இல் 1256 பாடல்களில் அவரது வரலாறு (அவர் மூலமாகவே) விளக்கப்படுவதால் அகச்சான்று நிலை பெறுகிறது. இது பொய், புனைகதை என்ற வாதம் எழுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது! இது நாம் செய்த தவப்பயனே!

 

 

அருள் செயல்கள்

அருட்செயல்களின் பதிகங்களாவன:-

ஓடம் திருக்கொள்ளம்பூதூர்ப் பதிகம் (‘கொட்டமே கமழும்என்று தொடங்கும் பதிகம்)

சிவிகைநெல்வாயில் அரத்துறைப் பதிகம் (‘எந்தை ஈசம் எம்பெருமான்எனத் தொடங்கும் பதிகம்)

உலவாக் கிழிதிருவாவடுதுறைப் பதிகம் (‘இடரினும் தளரினும்என்று தொடங்கும் பதிகம்)

அடைக்கப் பாடல்மறைக்காட்டுச்சதுரம் மறைப் பதிகம்

பனைதிரு ஓத்தூர்ப் பதிகம் (‘பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடிஎன்று தொடங்கும் பதிகம்)

தாளம்திருக்கோலக்காப் பதிகம் (‘மடையில் வாளை பாய மாதரார்என்று தொடங்கும் பதிகம்)

பாலை நெய்தல்திருநனிபள்ளிப் பதிகம் (‘காரைகள் கூகை முல்லை களவாகை ஈகைஎன்று தொடங்கும் பதிகம்)

ஏடு எதிர்திருப்பாசுரம் (வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகம்)

வெப்புதிருநீற்றுப் பதிகம் (மந்திரமாவது நீறு என்று தொடங்கும் பதிகம்)

என்புக்கு உயிர் கொடுத்தல்திரு மயிலாப்பூர்ப் பதிகம் (மட்டிட்ட புன்னை என்று தொடங்கும் பதிகம்)

ஆக பத்துப் பதிகங்கள் இந்தப் பாடல் கூறும் முக்கியப் பதிகங்கள்!

 

 

அருள் செயல்களின் வரலாறுகள்

 

இந்த அருள் செயல்களின் விவரங்கள் சுருக்கமாக இதோ:-

ஓடம்பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாடு சென்று பல தலங்களைத் தரிசித்த தமிழாகரர் காவிரியை அடைந்து ஓடமேறிகொட்டமே கமழும்என்று தொடங்கும் பதிகம் பாட ஓடம், படகோட்டி இன்றி தானாகவே திருக்கொள்ளம்புதூரை அடைந்தது!

 

சிவிகை: திருவடி நோக ஒவ்வொரு தலமாகத் தரிசித்து வந்த ஞானசம்பந்தர் மாறன்பாடி என்ற ஊரில் தங்கினார். அவரது துன்பம் கண்ட சிவபிரான் அரத்துறை என்ற தலத்தில் வாழும் அந்தணர் கனவில் தோன்றி, ‘ஞானசம்பந்தன் எம்மைக் காண வருகின்றான். அவனுக்கென ஆலயத்தில் முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னம் ஆகியவற்றை வைத்துள்ளோம். அதைக் கொடுத்து அழைத்து வருக என ஆணையிட்டான். அதே போல சம்பந்தர் கனவிலும் தோன்றி, ‘யாம் தரும் பொருள்களை ஏற்று வருகஎனக் கட்டளையிட்டான்.

அரத்துறை வாழ் அந்தணர்கள் வியந்து எழுந்து அனைத்தையும் ஞானசம்பந்தருக்குத் தந்து சிவிகையில் அமர்ந்து வர வேண்டுமென வேண்டினர். ஞானசம்பந்தர் சிவிகையை மும்முறை வலம் வந்து ஐந்தெழுத்தை ஓதி அதில் ஆரோகணித்தார். அப்போதுஎந்தை ஈசம் எம்பெருமான்எனத் தொடங்கும் பதிகம் பாடி அருளினார்.

 

 

உலவாக் கிழி:- திருப்பட்டீச்சுரத்திலிருந்து திருவாவடுதுறையை அடைந்த சம்பந்தர் தனது தந்தையாரான சிவபாத இருதயரைச் சந்தித்த போது அவர், தான் வேள்வி செய்வதற்குப் பொருள் வேண்டுமெனக் கேட்டார். தன்னிடம் பொருள் இல்லாததைக் கண்டு சம்பந்தர் வருந்தினார். உடனேஇடரினும் தளரினும்என்ற திருப்பதிகம் பாடி இறைவனிடம் விண்ணப்பித்தார். உடன் சிவ கணங்களுள் ஒன்று பொற்கிழி ஒன்றை மாசிலாமணியீசர் சந்நிதியில் உள்ள பீடத்தில் வைத்து, ‘இது எடுக்க எடுக்கக் குறையாத உலவாக் கிழி. இறைவன் உம்மிடம் அளிக்கப் பணித்துள்ளார்என்று கூறி மறைந்தது. அந்தப் பொன்னை சம்பந்தர் தந்தையிடம் கொடுக்க யாகம் நடந்தேறியது.

 

 

அடைக்கப் பாடல்:- அப்பரும் ஞானசம்பந்தரும் திருமறைக்காடு அடைந்த போது ஆலய வாயிலை அணுகினர். வேதங்களால் பூஜிக்கப்பட்ட கோவிலின் திருக் கதவுகள் திறக்கவே இல்லை. மக்களோ இன்னொரு வாயில் அமைத்து உள்ளே சென்று வழிபட்டு வருதலையும் அவர்கள் கண்டனர். அப்பர்பண்ணினேர் மொழியாள்என்ற பதிகத்தைப் பாடினார். பாடலின் சுவையால் மகிழ்ந்த சிவபெருமான் கதவுகள் திறக்கும்படி அருளினார். இருவரும் உள்ளே சென்று வணங்கினர். அப்பர் சம்பந்தரை நோக்கி, இனி இக்கதவுகள் திறக்கவும் அடைக்கவும் இருக்கும்படி இருத்தல் வேண்டும். நீங்கள் இப்போது இக்கதவுகள் மூடுவதற்கு பாடல் பாடி அருளுகஎன்றார். அது கேட்டு சம்பந்தரும், ‘சதுரம் மறைஎனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். கதவுகள் மூடின.

 

 

பனை:- ஞானசம்பந்தர் திருவோத்தூர் சென்ற பொழுது அங்கிருந்த சிவனடியார்கள் தமது திருக்கோவிலுக்கு நிவேதனமாக விட்ட பனை மரங்கள் ஆண்பனைகளாகக் காய்க்காமல் நிற்பதைக் கண்டு சமணர் தம்மை இகழ்வதாகக் கூறி அருள் புரிக என வேண்டினர். சம்பந்தர் உடனேபூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடிஎன்று தொடங்கும் பதிகத்தை அருள, ஆண்பனைகள் பெண்பனைகளாயின!

 

 

தாளம் :- சம்பந்தர் திருக்கோலக்கா இறைவனைத் துதிக்கும் போதுமடையில் வாளை பாய மாதரார்என்று தொடங்கும் பதிகத்தைத் தம் கைகளால் தாளம் இட்டுப் பாடினார். அவர் கைகள் சிவந்தன. இதைக் கண்ட இறைவன் அவருக்கு திரு ஐந்தெழுத்து எழுதப்பட்ட பொன்னாலாகிய பொற்றாளத்தை அருளிக் கொடுத்தார். அத்தாளத்தைப் பெற்ற சம்பந்தர் பதிகத்தைப் பொற்றாளமிட்டுப் பாடினார்.

 

 

பாலை நெய்தல் :- சம்பந்தரின் தாயார் பகவதி அம்மையார் அவதரித்த திருத்தலம் திரு நனிபள்ளி. அங்கு அவர் செல்லும் போது அவர் பாதம் நோவதைக் காணச் சகியாத அவரது தந்தையார் அவரைத் தம் தோள் மீது அமர்த்தி நடக்க ஆரம்பித்தார். நனி பள்ளி அடைந்த ஞானசம்பந்தர், ‘காரைகள் கூகை முல்லை களவாகை ஈகைஎன்று தொடங்கும் பதிகத்தை அருளினார். அதுவரை வளம் குன்றி பாலையாக இருந்த நனிபள்ளி, சம்பந்தரின் வரவால் நெய்தலாக மாறிப் பின்னர் மருதமாயிற்று.

 

 

ஏடு எதிர் :- அனல் வாதத்தில் தோற்ற சமணர் சம்பந்தரை புனல் வாதத்திற்கு அழைத்தனர். தம் தம் கொள்கைகளை எழுதி ஆற்றில் விட எது ஆற்றினை எதிர்த்துச் செல்கிறதோ அந்தக் கொள்கை வென்றதாகக் கொள்ளப்படும் என்ற அவர்களது வாதத்தை ஏற்றுவாழ்க அந்தணர்என்ற பதிகத்தை எழுதி ஆற்றில் விடவே அது எதிர்த்துச் சென்றது. சமணர் தம் ஏடு ஆற்றோடு சென்றது. பின்னர்வன்னியும் மத்தமும்என்ற பதிகத்தை அருள அது வைகையின் வடகரையில் அமைந்த ஒரு கோவிலின் அருகில் சென்று நின்றது. ஏடு நின்ற கோயில் திரு ஏடகம் என வழங்கப்படலாயிற்று.

வெப்பு :- பாண்டிய மன்னன் வெப்பு நோயால் துன்பப் பட சம்பந்தர், ‘மந்திரமாவது நீறுஎன்ற திருநீற்றுப் பதிகத்தை அருளினார். அவர், திருநீற்றைத் தடவிய அளவில் பாண்டிய மன்னனின் வெப்பு நோய் தணிந்தது.

 

என்புக்கு உயிர் கொடுத்தல் :- திரு மயிலையில் சிவ நேசச் செல்வரின் மகளான பூம்பாவை பாம்பு கடித்து இறக்கவே, அந்த பூம்பாவையின் எலும்பினை வைத்து. [மட்டிட்ட புன்னைஎன்ற பதிகம் பாடி அவளைச் சம்பந்தர் உயிர்ப்பித்தார்.

இவை தவிர இன்னும் பல அருட்செயல்கள் அவர் வாழ்வில் நடந்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளன.

தமிழ்நேசர்கள் அவற்றையெல்லாம் படிக்கப் படிக்கத் தமிழாகரனின் தமிழ் எப்படிப்பட்ட தெய்வத் தமிழ் என்பதை உணரலாம்.

 

தெய்வத் தமிழால் அனைத்தும் முடியும் என்பதைச் சொல்லத் தான் அவர் தன்னைத் தமிழ் ஆகரன் (தமிழை உடலாகக் கொண்டவன்) என்று கூறிக் கொண்டாரோ!

திருநெறிய தமிழ் வாழ்க! திருஞானசம்பந்தர் நாமம் வாழ்க!

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

 

*********

அக்டோபர் 2015 காலண்டர்

arunagiri annamalai

அருணகிரிநாதர் சிலையின் படம்

(மன்மத வருடம் புரட்டாசி/ஐப்பசி)

இந்த மாதக் காலண்டரில், அருணகிரிநாதர் பாடிய, சந்தத் தமிழ் திருப்புகழ் மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 28  September 2015

Post No: 2195

Time uploaded in London :– 16-10

(Thanks  for the pictures) 

முக்கிய நாட்கள்: அக்டோபர் 2 காந்தி ஜயந்தி, 12 மஹாளய அமாவாசை ,13 நவராத்திரி ஆரம்பம்,21 சரஸ்வதி பூஜை, 22 விஜயதசமி, 24 மொகரம்;

8, 13 ஏகாதசி , 27 பௌர்ணமி

முகூர்த்த நாட்கள்: 19, 22,25, 26

amman gold

அக்டோபர் 1 வியாழக்கிழமை

முத்தமிழடை வினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா.

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை

தினைவேடர் காவல் தங்கு மலை காடெலாமுழன்று

சிறுபேதை கால் பணிந்த குமரேசா

திரையாழி சேது கண்டு பொரு ராவணேசனை வென்ற

திருமால் முராரி தங்கை  அருள்பாலா.

அக்டோபர் 3 சனிக்கிழமை

சந்ததம் பந்தத் தொடராலே

சஞ்சலந்துஞ்சித் திரியாதே

கந்தனென்றுற் றுனைநாளும்

கண்டுகொண் டன்புற்றிடுவேனோ.

அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை

இரவுபகல் மோகனாகியபடியில் மடியாமல் யானுமுன்

இணையடிகள் பாடி வாழ என்நெஞ்சிற் செஞ்சொல் தருவாயே.

அக்டோபர் 5 திங்கட்கிழமை

உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி

உனையெனதுள் அறியும் அன்பைத் தருவாயே

amman lakshana

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை

மங்கை அழுது விழவே யமபடர்கள்

நின்று சருவமலமே யொழுக வுயிர்

மங்கும் பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்.

அக்டோபர் 7 புதன்கிழமை

மதித்துச் திண்புரம் சிரித்துக் கொன்றிடும்

மறத்திற் றந்தைமன் ரினிலாடி

மழுக்கைக் கொண்ட சங்கரர்க்குச் சென்றுவண்

டமிழ்சொற் சந்தமொன்  றருள்வாயே.

அக்டோபர் 8 வியாழக்கிழமை

புரக்கைக்குன் பதத்தைந்தெனக்குத் தொண்டுறப்பற்றும்

புலத்துக்கண் செழிக்கச் செந்தமிழ் பாடும்

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை

மங்கைமார் கொங்கைசேரங்க மோகங்களால்

வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்சொரூபம் ப்ரகாசங்கொலே

வந்து நீயன்பில்  ஆள்வாய்.

அக்டோபர் 10 சனிக்கிழமை

துன்பநோய் சிந்த நற்கந்தவேள் என்றுனைத்

தொண்டினால் ஒன்றுரைக்க  அருள்வாயே

a o maa

அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை

அறிவால் அறிந்து இருதாளிறைஞ்சும்

அடியார்  இடைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து

அலைவாயுகந்த பெருமாளே

அக்டோபர் 12 திங்கட்கிழமை

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரிபாகா  நமோ நம  –அருள்தாராய்.

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை

அபகாரநிந்தைப் பட்டுழலாதே

அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே

உனை நான் நினைந்தருட் பெறுவேனோ.

அக்டோபர் 14 புதன்கிழமை

அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்

அடியேனை அஞ்சலென வரவேணும்

அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய

அருள்ஞான இன்பமது புரிவாயே.

அக்டோபர் 15 வியாழக்கிழமை

பிணிபட்டு உணர்வற்று அவமுற்றியமற்

பெறுமக் குணமுற் றுயிர்மாளும்

பிறவிக்கடல் விட்டுயர் நற்கதியைப்

பெறுதற்கு அருளைத் தரவேணும்

kolu3

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை

கமல விமல மரகதமணி

கனகமருவும் இருபாதங்

கருத அருளி எனது தனிமை

கழிய அறிவு தரவேணும்.

அக்டோபர் 17 சனிக்கிழமை

வானே காலே தீயே நீரே

பாரே பருக் குரியோனே

மாயா மானே கோனே மானார்

வாழ்வே கோழிக் கொடியோனே.

அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை

நானே நீயாய் நீயே நானாய்

நானா வேதப் பொருளாலும்

நாடா வீடா யீடே றாதே

நாயேன் மாயக் கடவேனோ.

அக்டோபர் 19 திங்கட்கிழமை

ஓதம் பெறுகடல் மோதுந்திரையது

போலும் பிறவி  லுழலாதே

ஓதும் பல அடி யாருங் கதிபெற

யானுன் கழலினை பெறுவேனோ.

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த

ராவிக்கள் மாள்வித்து மடியாதே

ஆலித்து மூலத் டேயுட்கொ ளாதிக்கு

மாம்வித்தை யாமத்தை யருள்வோனே

original

அக்டோபர் 21 புதன்கிழமை

ஏறு தோகை மீதேறி யாலித் திடும்வீரா

ஏழு லோகம் வாழ்வான சேவற் கொடியோனே

சீறு சூரர் நீறாக மோதிப் பொரும்வேலா

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

அக்டோபர் 22 வியாழக்கிழமை

ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி

ஆண்மையுயுட னிற்கு முருகோனே

ஆதியர ரனுக்கு வேதமொழி முற்றி

யார்வம்விளை வித்த அறிவோனே

அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

செருக்கழியத் தெழித்துதிரத்

திரைக்கடலிற் சுழித்தலையிற்

றிளைத்த  அயிற் கரக்குமரப் பெருமாளே

அக்டோபர் 24 சனிக்கிழமை

வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட

மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் வென்றிவாய

வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட

மட்டித் திட்டுயர் கொக்கைக்குத்திம லைந்தவீரா

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை

பருகுத லரியது கந்த தீதிது

உளதென குறளிகள் தின்று மேதகு

பசிகெட வொருதனி வென்ற சேவக மயில்வீரா

Navaratri2

அக்டோபர் 26 திங்கட்கிழமை

மயிலு மியலறி புலமையு முபநிட

மதுர கவிதையும் விதரண கருணையும்

வடிவு மிளமையும் வளமையு மழகிய பெருமாளே

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை

கால சங்கரி சீலா சீலித்ரி சூலிமந்த்ர சுபாஷா பாஷனி

காள் கண்டிக பாலீ மாலினி கலியாணி

காமதந்திர லீலா லோகினி வாமதந்திர நூலாய் வாள்சிவ

காமசுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே

அக்டோபர் 28 புதன்கிழமை

ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்

ஆதியருணாசலம்  அமர்ந்த பெருமாளே

அக்டோபர் 29 வியாழக்கிழமை

முட்டா மற்றா ளைச்சே விப்பார் முற்பா வத்தைக் களிவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமளே

அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய

வெற்றிசத் திக்கரக முருகோனே

வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல

விட்டபச் சைச்சரண மயில்வீரா

kolu1

அக்டோபர் 31 சனிக்கிழமை

நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்

டூரசூர் கெட்டுகப் பொரும்வேலா

நேசமாய் நித்தநிற் றாலைநீ ளச்சமற்

றோதநீ திப்பொருட் டரவேணும்

–Subham–

இயேசு இறந்தது காஷ்மீரிலா?! -2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by S NAGARAJAN

Date: 25 September 2015

Post No: 2187

Time uploaded in London :– 11-20 am

(Thanks  for the pictures) 

 

 

இயேசு மரணம் பற்றிய ஆய்வு

 

இயேசு இறந்தது காஷ்மீரிலா?! -2

.நாகராஜன்

இயேசுவின் மரணம் காஷ்மீரிலே!

மௌலானா ஜலாலுத்தீன் ஷம்ஸ் (J.D.Shams)  என்பவர் “Where did Jesus Die” என்ற ஆய்வுப் புத்தகத்தில் இயேசுவின் மறைவு குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்தப் புத்தகத்தை எஸ்.எஸ். ஹஸன் அபூபக்கர் என்பவர் தமிழில் ‘இயேசுவின் மரணம் காஷ்மீரிலே’ என்று மொழி பெயர்த்துள்ளார்,.(அக்டோபர் 1970  அஞ்சுமன் அஹ்மதியா, மேலப்பாளையம், திருநெல்வேலி-5, தமிழ்நாடு வெளியீடு, 215 பக்கங்கள்)

இந்த நூலில் லண்டனிலிருந்து வெளி வரும் சைகிக் நியூஸ் தனது ஏப்ரல் 20, 1946 தேதியிட்ட இதழில் இயேசுவின் கல்லறை காஷ்மீரில் ஶ்ரீநகரில் .இருப்பதாக நம்பப்படும் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டதோடு கல்லறையின் போட்டோவையும் வெளியிட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது.

அஹ்மதிய்யா இயக்கத்தவர் இயேசுவின் வாழ்க்கையில் பெரிதும் ஆர்வம் கொண்டு இது சம்பந்தமான பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.’The Tomb of Jesus என்ற 55 பக்கங்கள் அடங்கிய ஒரு குறு நூல் ஜனவரி 2010  வெளியீடாக சூஃபி முதியூர் ரஹ்மான பெங்காளி (Sufi Mutiur Rahman Bengalee) என்பவரால் எழுதப்பட்டு 2013ஆம் ஆண்டு (பெங்களூரில்) நடந்த புத்தக கண்காட்சியில்  இலவசமாகத் தரப்பட்டது.

இந்த நூலிலும் ஏராளமான விவரங்கள் தரப்பட்டுள்ளன.

போட்டோக்களைக் காட்டும் ஒரு தளம்

சரி, கல்லறையின் போட்டோ மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் படிக்க முடியுமா என்று கேட்டாலோ ஏராளமான தளங்கள் விவரங்களைத் தருகின்றன.

குறிப்பிடத் தகுந்த ஒரு தளத்தை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

https://mail.google.com/mail/u/0/#inbox/147283ca00435afd

இந்த தளத்தில் ‘Jesus In India’ என்ற தலைப்பில் வந்துள்ள ஆய்வுக் கட்டுரை அனைத்து விவரங்களையும் சுருக்கமாகத் தருவதோடு கல்லறையின் போட்டோக்களையும் தருகிறது.

கருத்துக்களின் சுருக்கம்

இப்படி ஏராளமாகக் கிடைக்கும் தகவல்களைச் சுருக்கினால் வரும் விஷயம் இது தான்:-

  • இயேசு காஷ்மீரில் வசித்தார். 80 வயது வரை வாழ்ந்தார்.
  • ஜெர்மானிய விஞ்ஞானிகள் இயேசுவின் மீது போர்த்தப்பட்டிருந்த சவப் போர்வையை விரிவாக எட்டு ஆண்டுகள் ஆராய்ந்தனர். ஆய்வு முடிவை அவர்கள் போப் அரசருக்குத் தெரிவித்தனர். அவர் மௌனமாகவே இருக்கிறார்.
  • இந்தச் சவப் போர்வை ஒரு வெள்ளிப் பேழையில் இருந்தது. இத்துணியை பிரான்ஸ் மக்கள் பிரான்ஸில் காட்சிப் பொருளாக்கிப் பெரும் பணத்தைப் பெற்றனர். 1898ஆம் ஆண்டில் இத்தாலிய அறிஞர் பயா (Pia) என்பவர் அதைப் போட்டோ பிடித்தார்.
  • 1931ஆம் ஆண்டில் அது மீண்டும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டபோது கிசிப்பி என்ரிக் (Guisepe Enric) என்பவர் திருச்சபையின் முக்கியமான பிரமுகர் ஒருவர் முன்னிலையில் 6000, 20000 வோல்ட்டுகள் ஒளிதரும் மின்சார சிம்னிகளின் உதவியோடு அத்துணியை ஒரு புகைப்படம் பிடித்தார்.இந்தத் துணி இரத்தத்தை உறிஞ்சி இருக்கும் அடையாளங்களைத் தருகின்றன. ஆகவே இதன் அடிப்படையில் பெறப்படும் உண்மை சிலுவையில் இயேசு உயிரோடு இருந்திருக்கிறார். அவர் கீழே சிலுவையிலிருந்து கீழே இறக்கப்பட்ட போதும் உயிருடனேயே இருந்திருக்கிறார் என்பது தான்.
  • ரஷிய ஆராய்ச்சியாளரான நோடோவிச் இந்தியாவில் புத்த மடாலயம் ஒன்றில் பழைய புத்தக பிரதி ஒன்றைப் பார்த்தார். அதில் இயேசு இந்தியாவில் ஒர்சிஸ் (orsis ஒரிஸா) மாநிலத்தில் ஜக்கர்நாத்திற்கு (ஜகன்னாதர்) சென்றார். பிரம்மாவைத் துதிக்கும் வெள்ளைப் பூசாரிகள் அவருக்கு வேதங்களை வாசித்து விளங்கிக் கொள்வதற்கும் பிரார்த்தனை மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்கும் கற்றுக் கொடுத்தார்கள்.

  • சிலுவையிலிருந்து மீண்ட பின்னர் – அதாவது “உயிர்த்தெழுந்த” பின்னர் அவர் காஷ்மீரை வந்தடைந்தார். அவரது இறப்பிற்குப் பின்னர் அவர் செய்யத் நாஸிருத்தீன் அவர்களுடைய கல்லறைக்கு அடுத்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
  • இந்திய அரசாங்கம் “The Roza Bal Shrine of Srinagar” என்ற டாகுமெண்டரியை வெளியிட்டுள்ளது. இதில் யுஸா ஆஸஃப் – அதாவது – இயேசு கிறிஸ்துவின் கல்லறை பற்றி குறிப்பிடப்படுகிறது. இந்தியாவிற்கு வந்த பின்னர் இயேசு பஞ்சாப், ராஜஸ்தான் வழியே சென்று பூரி ஜகன்னாத், ராஜ்கிரஹம், இமாயலப் பகுதி ஆகிய இடங்களில் வசித்தார். இந்த டாகுமெண்டரி அராபிய, பாரசீக, சம்ஸ்கிருத நூல்கள் இதை உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது.
  • இந்த ‘ரோஜா பால் கொள்கையின்’ படி காஷ்மீரில் வாழ்ந்த இயேசு மணமுடித்துக் கொண்டார். பல குழந்தைகளைப் பெற்றார். இங்குள்ள காஷ்மீரிகளில் பலர் தாங்கள் இஸ்ரேலின் 10 பூர்வீக குடிகளின் வழித் தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.
  • இந்த டாகுமெண்டரியை எழுதி இயக்கியவர் யஷேந்த்ர ப்ரஸாத். அவர், ஒரு பேட்டியில், “இயேசு காஷ்மீரில் இருந்தது பற்றிய பிரச்சினையில் இந்திய அரசு நடுநிலைமை வகிக்கிறது. இந்தப் பிரச்சினையில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது இந்திய அரசின் கொள்கை. தனிப்பட்ட முறையில் எனது விருப்பம் இந்திய அரசு நவீன மரபணு சோதனைகளை கல்லறையில் கையாள வேண்டும் என்பது தான். ஆனால் சூழ்நிலை இதற்கு ஒத்து வரவேண்டும். பல சக்திகள் இதை விரும்பவில்லை.” என்றார்.
  • பல கிறிஸ்தவ ஆராய்ச்சி நிபுணர்கள், “இத்தகைய கூற்றிற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்பதால் விஞ்ஞான முறையிலான சோதனை தேவையற்றது” என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அழியாது புகழ்

ஆக இயேசுவின் மரணம் காஷ்மீரில் தான் என்ற ஆய்வு ஒரு புறம் தீவிரமான கருத்துக்களை முன் வைக்க அதை அதிகாரபூர்வமான கிறிஸ்துவின் தலைமை இடம் ஏற்கவில்லை.

இந்த ஒரு ஆராய்ச்சியால் இயேசுவின் போதனைகள் சிறிதளவும் கீர்த்தியில் குறைவு படப் போவதில்லை. இந்தியர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அவர் காஷ்மீரில் இறந்தார் என்பதை ஏற்றாலும் அவர் புகழ் அணுவளவேனும் மாசுபடப் போவதில்லை.

ஆனால் அவரது சத்தியமான போதனைகளுக்கு அப்பாற்பட்டு ‘உயிர்த்தெழுதல்’ போன்ற சம்பவங்களைக் கூறி வரும் தேவாலயத் தலைமைக்கு ஒருவேளை இதனால் சங்கடங்கள் நேரிடலாம். ஆகவே அவர்கள் இதை ஒருபுறமாக ஒதுக்கித் தள்ளுவதில் ஆச்சரியமும் இல்லை.

என்றாலும் தகவல் புரட்சியுடன் கூடிய மரபணு சோதனை யுகத்தில் மக்கள் இதில் ஆர்வம் காட்டுவது இயல்பே!

நாளைய உலகில் என்னென்ன சோதனைகள் தோன்றுமோ, அதில் என்னென்ன முடிவுகள் வெளி வருமோ, யார் அறிவார்?!

இயேசு காப்பார் – எப்போதும்! இது கிறிஸ்தவர்களின் உள்ளார்ந்த நம்பிக்கை!!

நன்றி: இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட பல்வேறு நூல் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், படங்கள், இணைய தளங்களுக்கு இந்த ஆய்வாளரின் நன்றிகள்.

**************                                                                   இயசுவின் மரணம் பற்றிய இந்த ஆய்வு முற்றும்