இயேசு இறந்தது காஷ்மீரிலா? -1

jesus 1

இயேசு மரணம் பற்றிய ஆய்வு

இயேசு இறந்தது காஷ்மீரிலா?! -1

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 24 September 2015

Post No: 2184

Time uploaded in London :– 8-07 am

(Thanks  for the pictures) 

 

.நாகராஜன்

jesus 2

பியர்ஸ் ஜெர்விஸ்: இயேசு இந்தியா வந்தார்

இயேசுவின் மறைவு குறித்துக் காலம் காலமாக ஏராளமான புத்தகங்கள் வெளியாகி வந்துள்ளன. வெளியாகி வருகின்றன.

இந்தப் புத்தகஙள் அனைத்துமே  ஏராளமான ஆதாரங்கள் பலவற்றைத் தருவதால் தான் இந்த விஷயம் குறித்து அனைவரும் ஆவலுடன் இன்று வரை படிக்கின்றனர்.

‘Naked They Pray’ என்ற புத்தகத்தை Pearce Gervis என்பவர் எழுதியுள்ளார். கங்கை நதிப் பகுதியில், கங்கையில் சுற்றி வர நீர் ஓட நடுவில் தீவு போன்ற ஒரு பகுதியில் ஏராளமான சாதுக்களைத் தான் கண்டதாகவும் அவர்களில் பலர் ஆயிரம் வருஷங்களுக்கு மேல் வாழ்ந்து வருவதாகவம், தான் சந்தித்த ஒருவர் பல நூறுஆண்டுகள் வயதானவர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

அவர் இயேசுவைப் பற்றித் தனது புத்தகத்தில் 72ஆம் பக்கத்தில் குறிப்பிடுவது  இது:-

“I know that there was a belief, now among many peoples, that Jesus Christ, between the age of twelve and twenty-nine was in India, his years there being recorded in Hindu and Buddhist Shastras as well as in certain Yoga manuscripts; that he went to Puri, to South India, and Banares to study the Vedas and Laws of Manu, to the Himalayas where it is said that he studied in the solitary places the different paths of liberation, the art of contemplation and meditated there until found the perfect realization of this oneness with GOD.”

இயேசு கிறிஸ்து இந்தியா வந்ததை இது போன்ற பல நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆன்மீக பொக்கிஷங்களை இங்கிருந்து அவர் அள்ளிச் சென்றதும் தெளிவாகிறது.

பியர்ஸ் ஜெர்விஸ் மட்டுமல்ல, இன்னும் பல ஆராய்ச்சியாளர்கள் இயேசுவின் இந்திய வருகை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்!

jesus 3

 நிகோலய் நோடோவிச்சின் ஆய்வு

நிகோலய் நோடோவிச் (Nicolai Notovich)  என்ற ரஷியர் இந்திய இயல் பற்றி ஆராய்ந்த ஒரு ஆராய்ச்சியாளர். தன் ஆய்வுகளுக்காகப் பல முறை அவர் இந்தியா வந்துள்ளார். 1887ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்த போது ஜோஜி-லா (Zoji la pass) கணவாயில் புத்த மடாலயம் ஒன்றில் விருந்தாளியாகத் தங்கினார். அங்கிருந்த புத்த குரு ‘ஈசா’ வைப் பற்றிய பல விவரங்களைத் தந்தார். பைபிள் சொல்வதும் இந்து மதம் உபதேசிக்கும் கருத்துக்களும் ஒன்றாக இருப்பதைக் கண்ட அவர் ஈசா என்பது இயேசு என்பதை ஊகித்து மேற்கொண்டு ஆராயலானார்.

16 ஆண்டுகள் மேரியுடன் இயேசு கிறிஸ்து, துருக்கி, பாரசீகம், மேற்கு ஐரோப்பா, (ஒருவேளை இங்கிலாந்திலும் கூட), பயணப்பட்டு காஷ்மீருக்கு அருகில் உள்ள ஒரு இடத்தை வந்தடைந்தார்.அங்கு மேரி மரணமடைந்தார். காஷ்மீரிலேயே வாழ்ந்த இயேசு மக்களுக்கு நல்வழி போதித்தார்; அங்கேயே மரணமடைந்தார்.

சிலுவையில் அறைந்த பிறகு உயிர் பிழைத்த இயேசு நிஸிபிஸ் அரசாங்க அழைப்பை ஏற்று நிஸிபிஸுக்கு வந்ததாக பாரசீக அறிஞரான எஃப் முகம்மது (F.Mohammed) தனது நூலான ஜமி-உத்-டுவாரிக் (Jami-ut-tuwarik) என்ற நூலில் தெரிவிக்கிறார். இந்த இடம் துருக்கியில் நுசேபின் (Nusaybin(( என்று அழைக்கப்படுகிறது. இதே கருத்தை இமாம் அபு ஜஃபார் முகம்மத் என்பவர் தனது டஃப்ஸி- இபின் – இ – ஜமீர் –அட் – டுப்ரி (Tafsi-Ibn_i-Jamir-at-tubri) என்ற நூலில் வலியுறுத்துகிறார்.

இந்தக் கருத்துக்கள் சரிதானா என்பதைப் பலரும் ஆராயப் புறப்பட்டனர்.

jesus 4

ஜெர்மானியர் கெர்ஸ்டனின் நூல்

ஹோல்ஜெர் கெர்ஸ்டென் (Holger Kersten) என்பவர் ஒரு ஜெர்மானியர். இவர் ஜெர்மானிய மொழியில் ‘Jesus Lived in India’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் முகம்மது மற்றும் அபு ஜஃபார் முகம்மத் ஆகிய இருவரின் கருத்துக்களும் சரியே என்று அவர் கூறுகிறார். துருக்கியிலும் பாரசீகத்திலும் கூறப்படும் ‘யுஸ் ஆஸப்‘ தான் இயேசு என்று கெர்ஸ்டன் தன் ஆய்வில் கண்டுபிடித்தார்.

மேலும், இயேசு காஷ்மீருக்கு வந்து பல காலம் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தார் என்றும் கெர்ஸ்டன் கூறுகிறார்.

இப்படிப் பல ஆய்வாளர்கள் இயேசு காஷ்மீரில் இறந்தார் என்று கூறும் போது இயேசு இறந்த இடம் பற்றிய குறிப்பு ஏதாவது உள்ளதா என்ற சுவாரசியமான கேள்வி எழும்புகிறது.

இயேசு கிறிஸ்துவின் கல்லறையையே கண்டு பிடித்து விட்டோம் என்றார் இன்னொரு ஆய்வாளர்.

இன்றும் அந்தக் கல்லறை இருக்கிறது. அது பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.

*******************

கடவுளுக்கு சவால்!

simpsonz

கடவுளும் விஞ்ஞானிகளும்

கடவுளுக்கு சவால்குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 23 September 2015

Post No: 2182

Time uploaded in London :– 13-26

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

கடவுளுக்கு சவால்!

படைப்பு என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; எல்லாம் நம்மாலேயே செய்ய முடியும் என்றார் ஒரு விஞ்ஞானி.

அந்த நகரிலிருந்த பெரியவரிடம் அனைவரும் அந்த விஞ்ஞானியின் அதிசயமான கூற்றைத் தெரிவித்தனர்பெரியவர் விஞ்ஞானியிடம் வந்தார்.

பெரியவர் கேட்டார்:- “நீங்கள் கடவுளைப் போல எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று கூறுகிறீர்களாமே!”

 monkeysshakespeare

 

விஞ்ஞானி முழங்கினார்:+ “ நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம்! கடவுளே இல்லை என்கிறேன். எல்லாவற்றையும் மனிதனால் செய்ய முடியும்!”

பெரியவர் விஞ்ஞானியிடம் ஒரு பந்தையும் பேட்டையும் கொடுத்தார்.அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி என்பதோடு அவர் ஒரு குரங்கை வளர்ப்புப் பிராணியாக வளர்த்து வந்ததும் பெரியவருக்குத் தெரியும்.

பெரியவர் சொன்னார்:”ஓஹோ! சரி, பெரிய விஷயம் எல்லாம் பேச வேண்டாம். இதோ கொடுத்திருக்கிறேனே, பேட், பந்து, இரண்டையும் உங்கள் செல்லக் குரங்கிடம் கொடுங்கள். அதற்கு பேட் மூலம் பந்து விளையாடக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் சொல்வதை எல்லாம் அப்புறம் கேட்கிறோம்!”

 

 

பூ! இது சுலபம்என்றார் விஞ்ஞானி. அனைவரும் கலைந்தனர்.

விஞ்ஞானி குரங்கிற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பேட்டையும் பந்தையும் வைத்து எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். நாட்கள் ஓடின. குரங்கு பந்து விளையாடக் கற்கவே இல்லை.

கடைசி முயற்சியாக குரங்கை பேட், பந்துடன் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். நெடு நேரம் கழித்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க அவர் கதவின் சாவித் துவாரம் வழியே பார்த்தார்.

மறுமுனையில் குரங்கு தன் விழிகளை வைத்து இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது!

 

விஞ்ஞானி அன்றிலிருந்து தன்னால் எதையும் செய்ய முடியும் என்று சொல்வதை நிறுத்தி விட்டார். பெரியவர் புன்முறுவல் பூக்க அனைவரும் வழக்கம் போல கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுதனர்.

கோவிலில்அலகிலா விளையாட்டுடையான்சிரித்தான்!

 

 darwin_italy_stamp

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை    

காலம் காலமாக எதையாவது புதுக் கொள்கையாகச் சொல்வது அறிஞர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர்களின் பல கொள்கைகள் கால வெள்ளத்தில் ஈடு கொடுத்து நிற்க முடிவதில்லை!

எவல்யூஷன்’ – பரிணாம வளர்ச்சிஎன்ற கொள்கையை முன் வைத்தார் சார்லஸ் டார்வின். ஆனால் அது தோன்றிய காலம் தொட்டே சர்ச்சைக்குள்ளாகி  படாதபாடு பட்டது.

 

 

ஆனால் தாமஸ் ஹக்ஸ்லி (Thomal Huxley) அதை பலமாக ஆதரித்தார்.அவர் சிறந்த உயிரியல் வல்லுநர் (eminent biologist)

குரங்கிலிருந்து பிறந்தவனே மனிதன் என்று அடித்துக் கூறினார் அவர். அதற்கும் ஒரு படி மேலே போய் ஒரு குரங்கு டைப் அடித்துக் கொண்டே இருந்தால் அது ஷேக்ஸ்பியரின் கவிதையைக் கூட டைப் அடித்து விடும் என்றார்.

அவரது, ‘Monkeys might type Shakespeare’ என்ற வாக்கியம் பிரசித்தமானது. அவ்வளவு தூரம் இங்கிலாந்தின் சொற்பொழிவு அரங்கங்களில் அந்தக் கருத்தை அவர் முழங்கி வந்தார்.

 

 

பரிணாம வளர்ச்சி கடவுளுக்கு எதிரான சவால் என்று விஞ்ஞானிகளும்பகுத்தறிவுகளும்மகிழ மக்களோ முழித்தனர். எது உண்மை?

 

 cartoon

குழுவினரும் குரங்குகளும்       

இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு குழு முன் வந்தது. இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள ப்ளிமத் பல்கலைக்கழகத்தைச் (Plymouth University) சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கிய குழு தான் அது. இந்த மாணவர்கள் மீடியா லாப் ஆர்ட்ஸ் (Media Lab Arts Course) என்ற பாடத்திட்ட வகுப்பில் பயில்பவர்கள்.

 

இதற்கான ஆராய்ச்சியை அறிவியல் ரீதியில் நடத்த நாங்கள் தயார் என்று குழுவினர் அறிவித்தனர். 2000 பவுண்டு நிதி உதவி உடனே அளிக்கப்பட்டது. (ஒரு பவுண்டு இன்றைய மதிப்பில் சுமார் 101 ரூபாய்; ஆராய்ச்சி நடந்த காலத்தில் குறைவு தான்!) மத்திய இந்தோனேஷியாவில் இருந்த சோலை குரங்குகள் ஆறை வாங்கினர் குழுவினர்.

 

இதற்காக தேவான் என்ற இடத்தில் உள்ள பைக்ங்டன் மிருகக்காட்சிசாலையில் (Paignton Zoo, Devon) ஒரு தனி அறை அமைக்கப்பட்டது. ஒரு கம்ப்யூட்டரும் நிறுவப்பட்டது. குரங்குகளின் இலக்கிய இன்பம்எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அன்றாடம் அவ்வப்பொழுது கண்காணிக்க குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

 

ஒரு மாத தீவிர முயற்சியில் அந்த சோலை மந்திகள் கம்ப்யூட்டரை உடைத்ததோடு அதைத் தங்கள் கழிவறையாகவும் பயன்படுத்தியதைக் கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதைக் கேட்ட மக்களோ விழுந்து விழுந்து சிரித்தனர்.

 shakes, falkland

ஷேக்ஸ்பியரை குரங்குகள் மதிக்கவே இல்லை!!

ஒரு குரங்கு ஐந்து பக்கங்களில் ‘S’ என்ற வார்த்தையை மட்டும் அடித்துத் தள்ளி இருந்தது!

 

 

குரங்கின் மீதல்ல ஜோக், கொள்கையின் மீதே தான்!

 

ஆய்வுத் தலைவரான விரிவுரையாளர் ஜெஃப் காக்ஸ் (Geoff Cox) தங்களது ஆய்வின் முடிவை அறிவித்துக் கூறுகையில், “காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் ரேண்டம் ப்ராசஸ் (Random Process) முறை மூலம் மிருகங்கள் ஒரு போதும் வளர்ச்சி அடையாது என்பதையும் மிருகங்களைக் கம்ப்யூட்டர் மட்டத்திற்கு கொண்டு வர முடியாது என்பதையும் எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. இந்த ஆய்வில் ஜோக் ஏதாவது இருப்பதாக எண்ணி நீங்கள் மகிழ்வீர்களானால் அந்த ஜோக் குரங்குகளின் மீது (அல்லது அதன் செயல்பாடுகளில்) இல்லை. உண்மையில் ஜோக் அந்த பரிணாம வளர்ச்சி கொள்கையில் தான் இருக்கிறதுஎன்றார்.

 

paington 

 

ஊடகத்தின் கொண்டாட்டம்

 

இது என்ன, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாய் இருக்கிறதே என்கிறீர்களா! இல்லை உண்மையில் குரங்கு அடிக்கப் போய் கம்ப்யூட்டர் டாய்லட் ஆன கதை தான் இது!

விஷயம் பிரமாதமான விஷயம் இல்லையா! வரிந்து கட்டிக் கொண்டு ஊடகங்கள் ஆய்வுக் குழுவினரை (குரங்குகள் கூடவே இருக்கும் போது தான்!) முற்றுகை இட்டன.

 

உலகளாவிய விதத்தில் ஆய்வு முடிவுகள் ஒளிபரப்பப்பட்டன. லண்டனில் பிரபல பத்திரிகையான டைம்ஸ்இல், நிருபர் சாம் லிஸ்டர் (Times, Sam Lister) செய்தியை வெளுத்துக் கட்டி விட்டார். (இதை ஸ்டேட்ஸ்மென் ஆங்கில நாளிதழ் 10-5-2003 இதழில் வெளியிட்டது)

 

 darwin russia

சார்லஸ் டார்வினின் கொள்கை சந்தி சிரிப்பது ஒரு புறம் இருக்கட்டும்; கடவுளை அடிக்கடி சவாலுக்கு இழுக்கும் விஞ்ஞானிகளின் விளையாட்டு தான் திண்டாட்டத்தில் முடிகிறதுஒவ்வொரு முறையும்!

அலகிலா விளையாட்டுடையான் அவன்!

அவனிடமே ஒரு விளையாட்டா???!!!

****************

நம் பந்தம் போக்க வந்த சம்பந்தர்!

sambadar

திருஞான சம்பந்தர் சிலை

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 22 September 2015

Post No: 2180

Time uploaded in London :– 14-25

(Thanks  for the pictures) 

 

 

தேவார சுகம்

நம் பந்தம் போக்க வந்த சம்பந்தர் கவசம் அணிவோம்!

 

.நாகராஜன்

 

சமணரை வென்று சைவம் தழைக்கச் செய்த சம்பந்தர்

சூறாவளிப் புயல் போல பாரதமெங்கும் சுற்றி, தேவையற்றவைகளை அகற்றி, புற மதத்தவரின் வாதங்களைத் தகர்த்து, ஷட் மதங்களை ஸ்தாபித்த ஆதி சங்கரர் உலக வரலாற்றில் ஓர் அற்புதம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடும்போதே அதற்கு இணையான ஒரு அதிசயம் அவர் வயதில் பாதி வயதே வாழ்ந்து சமணர்களின் சூழ்ச்சிகளைத் தவிடு பொடியாக்கி சைவத்தைத் தழைத்தோங்க வைத்த சம்பந்தரின் அவதாரம் என்றால் அது மிகையல்ல!

16 ஆண்டுகளே வாழ்ந்தார். பாலனாக இருந்து பரமனுடன் நேரடியாக உடலுடன் சேர்ந்தார்சூழ இருந்தவர்களையும் அழைத்துக் கொண்டு! வரலாற்றில் இது போன்ற நிகழ்ச்சி இது ஒன்றே ஒன்று தான்!

அதுவும் இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் தான் நடந்தது.

இறைவியிடம் பால் குடித்த மூன்று வயது பாலகன். தோடுடைய செவியன் என்று கண்ணாரக் கண்ட இறைவனைப் பாடத் தொடங்கினார்.

பாடிக் கொண்டே இருந்தார்தெய்வத் தமிழில்.

சமணர்கள் கொடுமைப் படுத்த, சைவர்கள் நடுங்கி ஒடுங்கி இருக்கப் புயலென எழுந்தார் அந்தப் புனிதர்.

மதுரையில் அவரை எதிர்கொண்டு அழைக்க வந்த பாண்டிய மஹாராணியார் ஒரு பாலனைப் பார்க்கவே வியப்பும் குழப்பமும் அடைந்தாள்.

மஹாசூழ்ச்சிக்காரர்களான சமணர்களின் மாயாஜால சித்து வேலைகளை, பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகனா வெல்ல முடியும். வெல்லுவது இருக்கட்டும், பாலகனுக்கு எந்த விதத் தீங்கும் ஏற்பட்டு விடக் கூடாதே என்று அந்தத் தாயுள்ளம் உருகியது. கருணை பொங்கும் விழிகளால் சம்பந்தரை அவள் பார்த்தாள். அதில் பொங்கி வந்த கருத்து வெள்ளத்தை உணர்ந்த சம்பந்தர் ஒரு போடு போட்டார் இப்படி:-                                                              

மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மாபெரும் தேவி!

apparsambandar

கேள்!

பானல் வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீ பரிவு எய்திடேல்” 

(பாண்டிமாதேவியே, என்ன பயந்து விட்டாயா? என்னை பாலன் என்று எண்ணி பயப்படாதே!)

ஆனைமாமலி ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர் ஈனர்களுக்கு எளியேன் அலேன்!

(இந்த ஈனர்களுக்குச் சரியான ஆள் நான் தான்! இவர்களை மட்டும் அல்ல; இன்னும் மோசமானவர்களையும் சந்திக்கத் தயார்!)

திரு ஆலவாய் அரன் நிற்கவே!

(என்னை யாரென்று எண்ணி, நீ பார்க்கிறாய்! நான் பார்வதியின் மைந்தன் கந்தனே! அந்த சிவனுக்கே தகப்பன் சாமி நான்)

இந்த ஒரு பாடலில் முழித்துக் கொண்டவள் தான் மஹாராணி! ‘எனக்கென்ன மனக்கவலைஎன்று முழுப் பொறுப்பையும் அவரிடம் கொடுத்து விட்டாள்.

விளைந்தது பல லீலைகள்! சமணர் கழுவேற, தமிழ் நாட்டில், சைவம் நிலை கொண்டது.

திருஞானசம்பந்தர் பதினாறாயிரம் பதிகங்கள் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்கள்) அருளிச் செய்ததாக ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதிஎன்ற தனது நூலில் நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ 383 பதிகங்களே. பாடல் எண்ணிக்கையில் கணக்கிட்டால் நம்மிடம் இன்று இருப்பது சுமார் 4147 பாடல்களே!

Boy saint Sambandhar meeting Appar the great.

பற்று விட ஒரு பற்று பற்றுக!

பற்றுகள் எல்லாம் போக பற்றற்றவனை ஒரே பற்றாகப் பற்று என்றார் திருவள்ளுவர். அதே வழியில் நம் பந்தமெல்லாம் போக some பந்தம்தேவை தானே! ஒரே ஒரு பந்தமாக நம் பந்தம் போக்க வந்த சம்பந்தரைக் கொண்டு விட்டால் கவலை ஏது, இனி!

அவர் பாடல்கள் எதுவானாலும் சிவ புண்ணியம் இருந்தால் மட்டுமே அதைப் பாட முடியும், படிக்க முடியும். அனைத்துமே சிவ அருள் தருபவை. மாதிரிக்காகச் சில பாடல்கள் இதோ!

இந்த சம்பந்தர் பாடல்கள் என்னும் சம்பந்தர் கவசத்தை அணிந்து கொண்டால் எந்த வினையும் வந்த வழி போய் விடும்.

சம்பந்த கவசம் நம் பந்த வினை அறுப்பதோடு இன்னும் ஒரு நன்மையையும் தருவதை அவரே திருச்சிராப்பள்ளி, ‘நன்றுடையானைப் பதிகத்தில்அருளுகிறார் இப்படி:-

ஞானசம்பந்தன் நலம் மிகு பாடல் இவை வல்லார்                               

வான சம்பந்தத்து அவரோடு மன்னி வாழ்வாரே!”

ஆக வான சம்பந்தம் விழைவோரெல்லாம் வாருங்கள்; அவர் பாடல்களைப் படிப்போம்; அருள் பெறுவோம்!

வான சம்பந்தம் பெற ஞானசம்பந்தர் பாடல்கள்!

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்                            

காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்                                

ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த                         

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

இடரினும் தளரினும் எனது உறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன்

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது, வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது, நாதன் நாமம் நமச்சிவாயவே

thiruganasambandar

 “துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்                                                           

நெஞ்சு அகம் நைந்து நினைமின் நாள்தொறும்                                                                                      

வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று                                               

அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு                                      

சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு                                                   

தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு                                            

செந்துவர்வாய் உமைபங்கன் திருஆலவாயான் திரு நீறே

நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே                                    

ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே

வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர்                                            

செய்ய மலர் தூவ, வையம் உமது ஆமே

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்                               

 நிறையவன் உமையவன் மகிழ் நடம் நவில்பவன்                                

இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்                                              

உறைவு என உடையவன் எமை உடையவனே

நீறு பூசினீர், ஏறு அது ஏறினீர்                                                            

கூறு  மிழலையீர் பேறும் அருளுமே

 “நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார்                                 

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே                              

பூநாளும் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப                                     

நாநாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து                        

முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்                           

மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்                              

பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்                                 

எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலைக்                                          

கண்ணின் நல்லஃது உறும் கழுமல வளநகர்ப்                                          

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா                                   

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

(குறிப்பு: இந்தப் பாடலை கடைசி எழுத்திலிருந்து மாற்றிப் படித்தாலும் அதே பாடலே வரும். சீர்காழியில் பாடிய திருமாலைமாற்றுப் பாடல் இது!)

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்                                         

சோதிக்க வேண்டா சுடர் விட்டு உளன் எங்கள் ஜோதி                             

மா துக்கம் நீங்கல் உறுவீர் மனம் பற்றி வாழ்மின்                                  

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே

வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்                                                 

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக                                                     

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே                                                        

சூழ் வையகமும் துயர் தீர்கவே

*****

 

300 ராமாயணமா? 3000 ராமாயணமா? –Part 3

S kanda 9

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by London swaminathan

Date: 21 September 2015

Post No: 2177

Time uploaded in London :– 15-45

(Thanks  for the pictures) 

First part was uploaded on 15th September, 2015

சுந்தர காண்டம் வரையே லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது.

 S kanda 4

ஒவ்வொரு பக்கம் மீதும் “க்ளிக்” செய்தால் பக்கம் பெரிதாகும். இவ்வாறு “ஸூம்” செய்து படிக்கவும்.

IMG_3437 (2)

IMG_3438 (2)

IMG_3440 (2)

IMG_3441 (2)

IMG_3443 (2)

IMG_3444 (2)

IMG_3447 (2)

IMG_3449 (2)

IMG_3450 (2)

IMG_3451 (2)

IMG_3452 (2)

IMG_3454 (2)

IMG_3455 (2)

IMG_3456 (2)IMG_3459 (2) IMG_3462 (2)

IMG_3465 (2)IMG_3468 (2)

IMG_3471 (2)

IMG_3472 (2)

IMG_3473 (2) IMG_3474 (2)

IMG_3475 (2)

சுந்தர காண்டம் முற்றும்.

இராமாயண கும்மி முற்றும்.

-சுபம்-

மொத்தம் எத்தனை கடவுள்?

vishnu viswarupam

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by ச.நாகராஜன்

Date: 20th  September 2015

Post No: 2174

Time uploaded in London :– 12-41

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

மஹரிஷி யாக்ஞவல்க்யரிடம் சில கேள்விகள்!

ப்ருஹத் ஆரண்ய உபநிடதத்தில் ஒரு காட்சி.

பொய்யே சொல்லாதவர் தான் ப்ரஹ்ம ரிஷி எனக் கூறப்பட முடியும்! (கடந்த காலத்தில், நிகழ் காலத்தில் ஒரு பொய்யும் சொல்லி இருக்கக் கூடாது! இனி வரும் காலத்திலும் பொய் சொல்லாத வன்மை கொண்டிருக்க வேண்டும்!)

அப்படிப்பட்ட ப்ரஹ்மரிஷிக்கு ஆயிரம் பசுக்கள் (பொற்கிழிகளுடன் தான்!) தர மன்னர் ஜனகர் முன் வந்தார்.

எல்லோரும் இந்த பிரம்மாண்டமான பட்டத்திற்கு நிச்சயம் தகுதியுள்ளவர் தான் இல்லை என்று எண்ணி அமர்ந்திருந்த போது மஹரிஷி யாக்ஞவல்க்யர் ஆயிரம் பசுக்களையும் சிஷ்யர்களின் துணை கொண்டு ஒட்டலானார்.

பார்த்தார் விதாக்தா சகல்யர்!

மஹரிஷி யாக்ஞவல்க்யரிடம் வந்தார். கேட்டார்.

“மஹரிஷி யாக்ஞவல்க்யரே! எத்தனை கடவுள்கள் உண்டு?

கேள்விகள் கணைகளாக வர பதில்களும் திருப்பிப் பறந்தன இப்படி:

“கடவுளைத் துதி செய்யும் துதிகளில் எத்தனை கடவுள்கள் கூறப்படுகின்றனரோ அத்தனை கடவுள்கள் உண்டு. அதாவது முன்னுற்றி மூன்றும் மேலும் மூவாயிரத்தி மூன்றும்..”

“சரி, ஆனால் எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”

“முப்பத்தி மூன்று”

“சரி, ஆனால் எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”

“மூன்று”

“சரி! எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”

“இரண்டு”

“சரி, எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”

“ஒன்றரை”

“சரி, எத்தனை கடவுள்கள் உண்டு, மஹரிஷி யாக்ஞவல்க்யரே!”

“ஒன்று”

“சரி, அந்த முன்னுற்றி மூன்றும் மேலும் மூவாயிரத்தி மூன்றும் யாவர்?”

“அவைகள் அவர்களின் சக்தியே! முப்பத்தி மூன்று கடவுள்களே உள்ளனர்”

“அந்த முப்பத்தி மூன்று பேர் யார்?”

“எட்டு வசுக்கள், பதினோரு ருத்ரர்கள், பன்னிரெண்டு ஆதித்யர்கள். இவர்களே முப்பத்தியொன்று பேர். இந்திரனையும் ப்ராஜபதியையும் சேர்த்தால் முப்பத்தி மூன்று ஆகிறது”

“வசுக்கள் யார்?”

“தீ, புவி, காற்று, வளி மண்டலம், சூரியன், வான், சந்திரன், நட்சத்திரங்கள் இவையே வசுக்கள். இவர்களின் மீதே இந்த அழகிய உலகம் உறுதியாக  இருக்கிறது. அதனால் அவர்களின் பெயர் வசுக்கள்”

“ருத்ரர்கள் யார்?”

ஒருவனிடம் உள்ள பத்து மூச்சுகள், ஆத்மாவையும் சேர்த்ந்தால் பதினொன்று. அவைகள் இந்த உடலிலிருந்து நீங்கும் போது நம்மைப் புலம்ப (அழ) வைக்கின்றன. ஆகவே ருத்ரர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.”

vishnu-vishwaroopa-picture

“ஆதித்யர்கள் யார்?”

“ஒரு வருடத்தில் உள்ள பன்னிரெண்டு மாதங்களே தான்! இந்த உலகை “ எடுத்துக் கொண்டு செல்கின்றவர்கள்” அவர்கள். ஆகவே அவர்கள் ஆதித்யர்கள் எனப்படுகின்றனர்.”

“இந்திரன் யார்? ப்ரஜாபதி யார்?”

“இடி முழக்கமே உண்மையில் இந்திரன். யாகமே ப்ரஜாபதி.”

“இடி முழக்கம் என்பதென்ன?”

“இடியே தான் அது.”

“யாகம் என்பதென்ன?”

“யாகத்தில் இடப்படும் மிருகங்கள்”

“ஆறு கடவுள்கள் யார்?”

““தீ, புவி, காற்று, வளி மண்டலம், சூரியன், வான். இவையே ஆறு கடவுள்கள். ஏனெனில் இந்த உலகமே இந்த ஆறு தான்!”

“மூன்று கடவுள்கள் யார்?”

“உண்மையில் அவை மூன்று உலகங்களே, ஏனெனில் அவற்றில் தான் கடவுளர் இருக்கின்றனர்”

“இரண்டு கடவுள்கள் யார்?”

“உணவும், மூச்சும்”

“ஒன்றரை யார்?”

“இதோ இங்கு யார் தூய்மைப் படுத்துகிறாரோ அவர், காற்று”

“இதோ இங்கு யார் தூய்மைப் படுத்துகிறாரோ அவர் ஒன்று தானே ஆக முடியும், ஒன்றரை எப்படி?”

“ஏனெனில் அவரிடம் முழு உலகமும் செழிக்கிறது. ஆகவே அவர் ஒன்றரை ஆகிறார்.”

“ஒரே கடவுள் யார்?”

“மூச்சு. அதை ப்ரஹ்மா என்று சொல்கின்றனர்.”

பசுக்களை ஓட்டிக் கொண்டு மஹரிஷி செல்கிறார்.

ஜனகர் உள்ளிட்ட அனைவரும் அவரை வணங்கி வழிபட்டு வழி

விட்டு நிற்கின்றனர்.

ஆரண்யத்தில் அற்புதக் காட்சி முடிகிறது!

ப்ரஹ்ம ஞானம் மலர்கிறது!!

**********

தொண்டர் பெருமை: வசிஷ்டர், விஸ்வாமித்திரர் மோதல்!

hare krsn bhajan

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by London swaminathan

Date: 20th  September 2015

Post No: 2173

Time uploaded in London :– 12-26

(Thanks  for the pictures) 

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பர் – ஆன்றோர்.

நல்லவன் ஒருவன் ஏதேனும் அபூர்வமாக கெட்டது செய்துவிட்டால் – எல்லாம் ‘’சஹவாச தோஷம்’’= சேர்வார் சேர்க்கை என்பர் சான்றோர். இந்தப் பொன்மொழிகளை விளக்கும் கதை கீழே உள்ளது:—

வேத காலத்தில் வாழ்ந்த இரண்டு பெரிய ரிஷிக்கள் வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் ஆவர். இருவருக்கும் எப்போது பார்த்தாலும் மோதல். எதிரும் புதிருமாக நிற்பார்கள். கீரியும் பாம்பும் போல சண்டையிடுவர்! காரணம்: விஸ்வாமித்ரர் ஒரு மன்னர். இதனால் ஆட்சியாளருக்கே உரிய தீய குணங்கள் அவரிடம் இருந்தன:-

அஹங்காரம் :–(தன்னை வசிட்டர் வாயினால் பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும்.

பெண்வயப்படுதல்:– மேனகாவிடம் வசப்படல்.

வேண்டியவருக்குச் சலுகை:– திரிசங்கு என்பவரை உடலோடு சொர்க்கத்து அனுப்புகிறேன் பார்! என்று சவால் விடுதல்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல்:வசிஷ்ட முனிவரின் காமதேனு முதலிய அரும்பெரும் விஷயங்களை தனதாக்கிக்கொள்ள விரும்பல்.

இறுதியில் இத்தனை மோக வலைகளையும் தாண்டி வசிட்டர் வாயினால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். அதற்கு முன்னால் நடந்த ஒரு மோதல் இதோ:–

எது பெரிது தவமா? நல்லோருடன் இருக்கும் சத்சங்கமா? என்பதே கேள்வி. ஒருவன் நியம நிஷ்டைகளுடன் வாழ்ந்து தவம் இயற்றுவதே சக்தி வாய்ந்தது என்றார் தபோநிதி விசுவாமித்திரர்.

இல்லை அவ்வளவு எல்லாம் கஷ்டப்படவேண்டாம். நல்லவருடன் இருந்து, அவர்களுடைய காற்றோ, நிழலோ மேலே விழுந்தால் அதைவிட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை என்றார் கருணாநிதி வசிஷ்டர்.

இருவர் வாக்குவாதமும் முடிவில்லாமல் போய் உச்ச ஸ்தாயியை அடைந்தது. இனியும் பேசினால் தொண்டை வறண்டுவிடுமென்று எண்ணி, இருவரும் மஹாவிஷ்ணுவிடம் சென்று முடிவு காண்போம் என்றனர்.

மஹாவிஷ்ணு இருவரையும் பார்த்து விட்டு, இப்பொழுது கொஞ்சம் முக்கியமான அலுவலில் இருக்கிறேன்; கொஞ்சம் ‘பிஸி’. ஆகையால் ஆதிசேஷனிடம் போய்க்கேளுங்கள் அவன்தான் என்னைத் தாங்குகிறான். இந்த பூபாரம் முழுதும் அவன் தலையில்தானே சுழல்கிறது – என்றார்.

இருவரும் மஹாசேஷன் — – ஆதிசேஷன் – என்னும் பாம்பிடம் சென்றனர். அவர் தலையில்தான் பூமி நிற்கிறது என்பது இந்துமத புரானங்கள் சொல்லும் விஷயமாகும். மஹாசேஷன் சொன்னார்: உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லுகிறேன். என் தலைவர் விஷ்ணு அனுப்பிவிட்டால் நான் மறுக்க முடியுமா? ஒரு சின்ன உதவி தேவை. இதோ என் தலையில் இருக்கும் பூபாரத்தை இறக்கிவையுங்கள்; உங்கள் கேள்வியைப் பரிசீலிக்கிறேன் என்றார். உடனே விசுவாமித்திர வழக்கம்போல, ‘முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு’ சென்று, இதோ பார்! என் தவ வலிமை, நியம, நிஷ்டைகள் அத்தனையையும் பயன்படுத்தி பூமியைத் தூக்குகிறேன் என்று பூமியைத் தூக்க முயன்றார். அதுவோ ஒரு அங்குலம் கூட அசையவில்லை.

இப்பொழுது வசிட்டர், சரி, விடுங்கள்! இப்போது என்னுடைய முறை; நான் முயற்சிக்கிறேன் என்று சொல்லி “நான் நல்லோரிடம் வாழ்ந்த ஒரு நிமிடப் பலனில் இந்த பூமி என் கைக்கு வரட்டும்” என்றார். அவர் கையில் பூமி நின்றது.

மஹாசேஷன் சொன்னார்: “குட் பை! உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. பை! பை! என்று சொல்லிவிட்டார்.

இருவரும் நிம்மதியாகத் திரும்பினர். இது சுவாமி ராம்தாஸ் சொன்ன கதை.

ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரது உபதேசங்களில் சத்சங்கத்தின் பெருமையை நிறை இடங்களில் விளக்குகிறார். ஒரு ஜமீந்தாரிடம் (நிலச் சுவாந்தார்) வேலைபார்க்கும் ஒரு வேலையாள், கிராமத்திற்குள் தனியே சென்றால் பல அடாவடித்தனக்களைச் செய்து தனது அதிகாரத்தைக் காட்டுவார். அவரே ஜமீந்தாரிடம் வந்துவிட்டால், அன்று அவரிடம் உதவி நாடிவந்த ஏழை விவசாயிகளுக்கு ஜமீந்தார் முன்னால், அடக்க ஒடுக்கமாக, அன்பாக அவ்வளவு உதவிகளையும் அள்ளிவீசுவார். நல்லோரின் சந்நிதானத்தில் வாழ்வோரும் இப்படி அஹங்காரம் ஒடுங்கி நிற்பர்.

யானையை எவ்வளவு குளிப்பாட்டினாலும் அது, மண்ணில் இருக்கும் வரை,  தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும். அதே யானையைக் குளிப்பாட்டி, சுத்தமான இடத்தில் கட்டிவிட்டால் அது அப்படிச் செய்யாது. நாமும் கெட்டவர் சஹவாசத்தில் உள்ளவரை இப்படி நம் தலையில் நாமே மண்னை வாரிப் போட்டுக்கொள்வோம். நல்லோர் சஹவாசம் என்னும் கட்டுத்தறியில் கட்டப்பட்டுவிட்டால் சுத்தமாக இருப்போம் என்பார் பரமஹம்சர்.

ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–

சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்ஸலிதத்வம்

நிஸ்ஸலிதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.

திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் (குறள் 416)

கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.

இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415

–சுபம்—–

வசிஷ்டர் தரும் காலத்தை வென்ற இரகசியம்!

yoga vasiosta

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

Article written by S NAGARAJAN

Date: 19th  September 2015

Post No: 2171

Time uploaded in London :– 17-49

(Thanks  for the pictures) 

 

.நாகராஜன்

 

நம்பிக்கை தரும் ஹிந்து நூல்கள்

 

உலகினருக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தருவதற்கு ஹிந்து நூல்களைப் போல வேறெந்த நூல்களும் இல்லை.

உன்னை நீயே உயர்த்திக் கொள்ளலாம் என்பதே அவற்றின் சாரம்.

கர்மத்தால் கட்டுண்டவன் தான் நீ என்று சொல்லும் போதே நல்ல கர்மங்களைச் செய்து உன்னை உயர்த்திக் கொள் என்று அது ஓங்கிச் சொல்கிறது.

விதி உன்னை விடாது என்று சொல்லும் போதே அந்த விதியை உருவாக்குபவன் நீயே என்று அடித்துச் சொல்கிறது.

பல ஜன்மங்களில் முன்னேற வாய்ப்புண்டு; உடனடியாக முன்னேற்றத்தை நோக்கி முதல் அடியை நீ வை; நான் உன்னை நூறு அடிகள் முன்னேற்றுவேன் என்ற ஆறுதலான அவதாரங்களின் வாக்கியத்தை அது நம் முன் வைக்கிறது.

பிறப்பு ஒன்றே ஒன்று தான் என்றால் ஏன் மனிதனுக்கு மனிதன் வாய்ப்புகளில் ஏன் இந்த வேறுபாடு? அது போகட்டும் பிறந்து ஒரு நாளில் இறக்கும் ஒரு குழந்தைக்கும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து பல நல்ல, கெட்ட காரியங்களைச் செய்பவனுக்கும் எப்படி சமமான தீர்ப்பு வழங்கப்பட முடியும்? ஒரே ஒரு நாள் வாழ்ந்த குழந்தை தீர்ப்பு வழங்கும் நாளுக்காக எல்லையற்ற காலம் வரை ஏன் காத்திருக்க வேண்டும்!

இறைவனின் நீதி இது என்பதை ஏற்பதில் மனம் சலிப்படைகிறது.

‘சே, போ’, மனம் போன படி நடப்பேன்; நடப்பது நடக்கட்டும் என்பது வாழ்க்கை முறையாகிறது.

மேலை நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இது தான்!

yoga-vasistha

ராமரின் சந்தேகங்கள் (636 பாக்களில்)

 

ராமர் வசிஷ்டரிடம் வருகிறார். நியாயமாக ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் சந்தேகம் ஏற்பட முடியுமோ அந்த சந்தேகங்களை அறிவியல் யுகமான நமது இன்றைய நாளுக்கும் பொருந்தும்படி கேட்கிறார்.

அவரது கேள்விகள் 19 அத்தியாயங்களில் 636 ஸ்லோகங்களில் இடம் பெறுகிறது – யோக வாசிஷ்டம் நூலில்.

அற்புதமான இந்த நூல் மனிதனுக்குக் காலத்தை வென்ற இரகசியத்தைக் கூறும் நூல். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதைச் சரியானபடி கூறும் அருமையான நூல் இது. 32000 ஸ்லோகங்கள் உள்ள யோக வாசிஷ்டம் இப்போது நாம் படிக்கும்படியான அளவுக்குச் சுருக்கமாக எந்தக் கருத்தையும் விடாமல் சுருக்கப்பட்டுள்ளது.

நூலின் நடை எளிமையானது. சம்ஸ்கிருதம் படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் எளிய நடை; காம்பீர்யமான வார்த்தைகள்.

yoga2

முயற்சியா, விதியா எது வெற்றியைத் தரும்?

 

உதாரணத்திற்கு மனித முயற்சி, விதி பற்றிய சில ஸ்லோகங்களின் அர்த்தத்தைத் தமிழில் இங்கு பார்ப்போம்.

14_Yoga-Vasistha_1

பௌருஷ மஹிமா (மனித முயற்சியின் மஹிமை)

                                                                 

பௌருஷேன சர்வமாஸாத்யதே (முயற்சியினால் அனைத்தும் கிடைக்கும்).

எதையும் எப்போது வேண்டுமானாலும் அடைய மனித முயற்சியே தேவை. போதுமான முயற்சி செய்த பின்னர் ஒருவன் அடைய விரும்புவதை அடைகிறான்.

கர்மா, தைவம் (விதி) என்று இரண்டைச் சொல்கிறார்களே!

கர்மம் என்பது ஒருவனின் முந்தைய செயல்களைக் குறிப்பதே ஆகும்! ஆனால் ஒருவனின் தற்போதைய முயற்சி முன்னால் செய்ததை மீறிச் செயல்படும்.

தைவம் அதாவது விதி என்பது, அறியாதவர்களுடைய மனக் கற்பனையே. பார்க்க முடியாத ஒன்று அது. விதி என்பதே இல்லை!

தைவம் வித்யதே I (தைவம் – விதி என்று ஒன்று இல்லை)

தைவமஸத்ஸதா I (விதி என்பது இல்லாத ஒன்று)

தைவம் கிஞ்சித்குருதே கேவலம் கல்பனேத்ருஷி I (விதி ஒன்றையும் செய்வதில்லை. கற்பனையே அதைச் செய்கிறது)

ஒரு விவசாயி தனது நிலத்தில் கஷ்டப்பட்டு பல மாதங்கள் உழைக்கிறான். அறுவடைக் காலம் நெருங்குகிறது. ஆனால் அறுவடை நாளுக்கு முதல் நாள் அடைமழை பெய்கிறது. பயிர்கள் நாசமாகின்றன.

இது விதியா? இதன் காரணம் விதி தானா?

இல்லை; உழைப்பு, மழை என்பதில் மழை உழைப்பை விட வலியதாக இருக்கிறது என்பதே இதன் அர்த்தம்.

நாம் செய்யும் அனைத்துமே ஏன் வெற்றி பெறுவதில்லை?

பதிலை ராமருக்கு வசிஷ்டர் கூறுகிறார்:” இது ஏன் என்றால் வெற்றி என்பது உழைப்பை மட்டும் கொண்டு வருவதில்லை. காலம், வெளி, செல்வம் (Time, Space and Wealth) போன்ற காரணங்களும் இணைந்தே வெற்றியைத் தருகின்றன.

பலன் எப்போதும் எது வலிமையானதோ அதைக் கொண்டு அமைகிறது!

காலம் வேறு இருக்கிறது. சில சமயம் உடனடி பலன் கிடைக்கிறது; சில சமயம் சில காலம் கழித்துக் கிடைக்கிறது. ஆனால் பலன் விளையும் என்பதில் சந்தேகமில்லை.

உடனடியாக நடந்ததற்கும் தாமதமாக ஆனதற்கும், முட்டாள்களே விதியே காரணம் என்கின்றனர்.

கர்மத்தின் ஆதிக்கத்தை எடுத்துக் கொள்வோம். (ஓ, ராமா!)

கர்மம் இரு வகைப்படும்; ஒன்று ப்ரக்தனா (பழையது); மற்றொன்று இஹிகா (தற்போது நடப்பில் உள்ளது)

தற்போதைய கர்மம் பழையதை வெல்லும் ஆற்றல் கொண்டது. இரண்டும் இரண்டு செம்மறி ஆடுகளைப் போலச் சண்டையிடும்; வலியது வெல்லும்! ஆகவே தற்போது வலுவுள்ளவனாக ஆவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

கடந்த காலம் நிச்சயமாக தற்போதுள்ள நிகழ்காலத்தை விட வலுவுள்ளதாக இருக்க முடியாது. நேற்று சாப்பிட்டதால் வயிற்றில் ஏற்பட்ட அஜீர்ணத்தை இன்று மருந்து சாப்பிட்டுக் குணப்படுத்துவதில்லையா?

samvid yoga

ஏழ்மையாக இருந்தாலும் சரி, பல இன்னல்கள், தடைகள் இருந்தாலும் சரி, எவன் ஒருவன் அவற்றையும் மீறித் தன் முயற்சி மூலம் அவற்றை வெல்கிறானோ அவனே பாராட்டத் தகுந்தவன்!

வசிஷ்டரின் இந்த உபதேசம் நலிந்தோர்க்கு நம்பிக்கை ஊட்டும் ஒன்றல்லவா!

மூன்றாம் உலக நாடுகள் என்று அங்குள்ளோர் தாழ்ந்து இருக்க வேண்டுமென்பதில்லையே! உலகம் முழுவதற்குமான ஒரு நூல்; ஒவ்வொரு மனிதனுக்குமான ஒரு நூல் – யோக வாசிஷ்டம்!

கடந்த காலத்தை மீறி நிகழ்காலத்தில் வலிமையுடன் பாடுபடு என்பதே வசிஷ்டரின் உபதேசம்.

எளிய சம்ஸ்கிருத பதங்கள்; படிப்பதற்கே ஆனந்தம்!  முயற்சி, தெய்வம் ஆகிய இவை, இதர பல விஷயங்களுடன் எப்படிப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதையும் சேர்ந்து அறிய வேண்டும்.

ஆகவே, யோக வாசிஷ்டம் முழுவதுமாகப் பயில்வோம்; காலத்தை வென்ற உயர் இரகசியத்தை அறிவோம்!

குறிப்பு: யோக வாசிஷ்டம் பயில விரும்புவோ அருமையான கீழே குறிப்பிடப்படுள்ள இந்த இரு நூல்களை வாங்கலாம்:

  • Quintessence of Yogavasishtha by C.S. Gupta, Satsanga Seva Samithi Gandhi Bazar, Bangalore -4 (174 பக்கங்கள்)
  • The Vision and the way of Vasistha by Samvid (2461 ஸ்லோகங்களை சம்ஸ்கிருத மூலத்திலும் ஆங்கிலத்திலும் தரும் இந்த நூலைப் புகழ்வதற்கு வார்த்தைகளே இல்லை; 583 பக்கங்கள்; வாழ்நாள் முழுவதும் பக்கத்திலேயே வைத்திருந்து படிக்க வேண்டிய நூல்)

*********

ஆனந்த விகடனும் தாயுமானவ கவசமும்!

1947 vikatan

 

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by S NAGARAJAN

Date: 18th  September 2015

Post No: 2168

Time uploaded in London :– காலை 8-18

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

தாயுமானவர், கவசம் ஏதாவது பாடியிருக்கிறாரா என்ன, தெரியாமல் போய் விட்டதே என்று நினைப்பவர்களுக்கு முதலிலேயே சில வார்த்தைகள்.

தாயுமானவர் கவசம் ஒன்றையும் பாடவில்லை; அவரது அருமையான தமிழ்ப் பாக்களையே தாயுமானவ கவசம் என்று இங்கு குறிப்பிடுகிறோம்.

விஷயத்திற்கு வருவோம்.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அநேகமாக பெரும்பாலான குடும்பங்களில் வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் தவறாமல் சண்டை நடக்கும்.

சகோதரனுக்கும் சகோதரிக்கும். சகோதரர்கள், சகோதரிகளுக்குள். சில சமயம் குடும்பத் தலைவி, தலைவரும் இதில் பங்கு கொள்வார்கள். கடைசியில்பெரிய தலஒன்று அனைவரையும் சமாதானப் படுத்திபங்கீடுசெய்து வைக்கும்.

 

சண்டைக்குக் காரணம்: வாரம் தோறும் வரும் ஆனந்தவிகடன் பத்திரிகை.

அதை யார் முதலில் படிப்பது என்பதில் தான் சண்டை! சில சமயம் விகடனே கிழிந்து முழிக்கும். இந்த சண்டையைக் கொஞ்சம் ஈடுகட்டபசையுள்ளகுடும்பங்கள் விகடனின் இரண்டு பிரதிகளைக் கூட வாங்கிச் சமாளிக்கப் பார்க்கும்.

 

ஆனந்தவிகடனை 1928 பிப்ரவரியில் பூதூர் வைத்தியநாத ஐயரிடமிருந்து வாங்கி அதன் உரிமையாளராக அதைத் தன் பொறுப்பில் எடுத்தவுடன் வாசன் அவர்கள், பிரிண்ட் செய்த காப்பிகளை சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்று பீச்சில் விற்பாராம். மெல்ல மெல்ல விகடனை தமிழ் மக்களின் உள்ளங்களில் நிலை நிறுத்தினார்.

கல்கி, தேவன், மாலி என ஒரு பிரம்மாண்டமான பட்டாளம் விகடனைத் தூக்கி நிறுத்தியது.

 

ஆனால் தமிழ் மக்கள் மனதில் இது நிரந்தரமான இடத்தைப் பிடித்தது எப்படி?

இந்த மேதைகளின் படைப்புகளுக்கெல்லாம் மேலாக ஒரு கவசத்தை அது அணிந்திருந்ததால் தான்!

தாயுமானவ கவசத்தை அது அணிந்து கொண்டிருந்தது.

 

1928_vikatan

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

வாசன் அவர்கள் தன் பொறுப்பில் ஆனந்தவிகடனை ஏற்றவுடன் இந்த பராபரக் கண்ணியை விகடனின் குறிக்கோளாக ஆக்கி அதை விகடனில் வெளியிட ஆரம்பித்தார்.

தாயுமானவரின் இந்தஉலக நலப் பாட்டிற்குஈடு இணை ஏதுமில்லை.

 

அனவருக்கும் இன்பம் என்ற அற்புத மந்திரத்தை அது அணிந்து வாரந்தோறும் அதை முகப்பில் ஏந்தி பல்லாயிரக்கணக்கானோருக்குப் பறை சாற்றி வந்ததால் அது தமிழர்களின் நல்ல உள்ளங்களில் இடத்தைப் பிடித்தது.

 

ஆனால் லட்சோபலட்சம் உள்ளங்களில் இடம் பெற்று பெரிய சக்தியாக அது மாறியவுடன் சில வருடங்களுக்கு முன்னர் தீயசக்திகளின் பார்வை அதன் மீது சுயலாபத்திற்காகத் திரும்பியதாக செய்திகள் கசியவே நல்ல உள்ளங்கள் பதைபதைத்தன.

 

பாழாய்ப்போன அந்தப் பாப்பாரப் பத்திரிகைஅனைத்து உள்ளங்களிலும் குடி கொண்டு செல்வாக்கு மிக்க சக்தியாக விளங்கியதைக் கண்ட தீயசக்திகள் அதைலபக்என்று விழுங்கி ஏப்பம் விட்டு முடிந்த அளவு அந்த செல்வாக்கில் கிடைக்கும் ஆதாயத்தைப் பெறத் தீர்மானித்த போது விகடனைக் காப்பாற்றியது எது?

 

தாயுமானவ கவசம் தான்! எல்லோரும் இன்புற்றிருக்க நினைத்தவாறே இருந்த போது அந்த எல்லோரிலும் நல்ல உள்ளங்கள் ஏராளம் இருந்தன அல்லவா! அந்த உள்ளங்களின் ஆசீர்வாதம் தொடர்ந்து அதற்கு இருந்து வந்ததல்லவா! அந்த தெய்வ சக்தி தீய சக்திகளைத் துரத்தி விட்டது; விகடன் பிழைத்தது!

விகடனை வாழ வைத்த அந்த தாயுமானவ கவசம் தன்னை அணிந்து கொள்ளும் தமிழர்களையும்  காப்பாற்றும் என்பதில் சந்தேகம் என்ன?

 

 தாயு

திருப்பராய்த்துறை சுவாமி சித்பவானந்தர் தாயுமானவர் பாடல்களை அருமையாகத் தனது நூல்களில் விளக்கியுள்ளார். அவர் நடத்தி வந்த அந்தர்யோகத்திலும் தாயுமானவரின் பாடலின் விளக்கவுரை தவறாமல் இடம் பெறும்.

தாயுமானவரின் சிந்தனை உயரிய சிந்தனை; அதன் அகலமும் நீளமும் ஆழமும் தொடர்ந்து படித்தால் மட்டுமே புரியும்; உணர முடியும். அதன் பயன் எல்லையற்றது!

பொருளில்லா அடுக்கு மொழிகளில் தடுக்கி விழுந்து ஏமாறும் தமிழர்களுக்குப் பொருளுடன் கூடிய அடுக்கு மொழிகள் ஏராளம் தாயுமானவ கவசத்தில் உண்டு.

 

 

லைகடலென ர்ப்பரித்து வரக் கூவும் தமிழர்களுக்கான அடுக்குமொழி இன்றி மைதியுடன் னந்தமாக வாழ வழி கூறும் அடுக்குமொழி தாயுமானவர் பாடல்களில் நிறையவே உண்டு.

 

அவரது பாடல்களில் சில முக்கிய வரிகள் / வார்த்தைகள் இதோ இங்கே: (உத்வேகம் பெற்று அனுதினமும் ஒதிப் பயனடைவதற்காக):-

கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே

மார்க்கண்டர்க்காக மறலி பட்ட பாட்டை உன்னிப் பார்க்கின் அன்பர்க்கென்ன பயம் காண் பராபரமே

 

அன்பர் பணி செய்ய என்னை ஆளக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே

வாக்கும் மனமும் மவுனமுற எந்தை நின்னை நோக்கும் மவுனமிந்த நூல் அறிவில் உண்டாமோ?

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே

 

அருளால் எவையும் பாரென்றான் அத்தை                                                

யறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்                                                                         

இருளான பொருள் கண்டதல்லால் கண்ட                                       

வென்னையுங் கண்டிலனென்னேடி தோழி  சங்கர சங்கர சம்பு

வாழி சோபனம் வாழி நல்லன்பர்கள்                                                

சூழ வந்தருள் தோற்றமும் சோபனம்

 

 

அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது?

சமயகோடிகள் எல்லாம் தம் தெய்வம் எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது?

அது கருத்திற்கிசைந்ததுவே கண்டனவெலாம் மோன உருவெளியதாகவுங் கருதி அஞ்சலி செய்குவாம்!

 

நாதவடிவென்பர் சிலர் விந்துமயமென்பர் சிலர் நட்ட நடுவே இருந்த நாமென்பர் சிலர் உருவமாமென்பர் சிலர் கருதி நாடில் அருள் என்பர் .. இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப் படுமலாற் பரம சுக நிட்டை பெறுமோ பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!

ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதினிலே ஆணை செலவே நினைவர்

இந்திரசாலம் கனவு கானல் நீர் என உலகம் எமக்குத் தோன்றச் சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தைச் சார்ந்து வாழ்க

 

 

பட்டப் பகல் பொழுதை இருள் என்ற மருளர் தம் பக்ஷமோ என் பக்ஷம்?

பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி

எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவி தான் யாதினும் அரிதரிது காண்

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்; கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்வேன்!

பேதித்த சமயமோ ஒன்று சொனபடி ஒன்று பேசாது

 

 

காகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர் நிற்குமோ! கர்மமானவை கோடி முன்னே செய்தாலும்  நின் கருணை ப்ரவாக அருளைத் தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ?

பாகத்தினாற் கவிதைப் பாடிப் படிக்கவோ பத்தி நெறியில்லை வேத பாராயணப் பனுவல் மூவர் செய் பனுவல் அது பகரவோ விசையுமில்லை

 

 

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்; கரடி வெம்புலி வாயையும் கட்டலாம் ; ஒரு சிங்க முதுகின் மேற்கொள்ளலாம்; கட்செவி எடுத்தாட்டலாம்; வெந்தழலிலிரதம் வைத்து ஐந்து உலோகத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்; வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்; விண்ணவரை ஏவல் கொளலாம்; சந்ததமும் இளமையோடிருக்கலாம்; மற்றொரு சரீரத்தினும் புகுதலாம்; சலமேல் நடக்கலாம்; கனல் மேல் இருக்கலாம்; தன் நிகரில் சித்தி பெறலாம்; சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது; சத்தாகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே! தேஜோமயானந்தமே!!

 

 

எனக்கெனச் செயல் வேறிலைமனத்தகத்துள அழுக்கெலாம் மாற்றி எம்பிரான் நீ நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம்

 

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த                         

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே!

 

*************

விநாயக கவசத்தின் அபூர்வ சக்தி!

ganesh mumbai mani

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Written  by London swaminathan

Date: 17th September 2015

Post No: 2166

Time uploaded in London :– 12-45

(Thanks  for the pictures) 

கடவுள் துதிகள், தோத்திரங்கள், பாடல்களைப் படிப்போரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் உருவாகிறது. இதை நாம் அறிய மாட்டோம். யோகிகளும், ஞானிகளும் அறிவர். நம்மைச் சுற்றி ஒரு ஒளிவட்டமும் இருக்கிறது என்று ஆன்றோர் சொல்லுவர். இதே போல நம்முடைய பூர்வ ஜன்ம பாப புண்ணியங்களும் நம்மைத் தொடர்ந்தே வருவதை அவர்கள் காண முடியும். சில சொந்த அனுபவங்களைக் கொண்டு நான் இதைச் சொல்கிறேன்.

மதுரை தினமணி பத்திரிகையில் என் தந்தை திரு.வெ.சந்தானம் செய்தி ஆசிரியராக வேலை பார்த்த காலத்தில் மதிப்புரைக்கு என்று வாரம் தோறும் நிறைய புத்தகங்கள் வரும். அதில் ஒன்று தஞ்சை மாவட்டம், கருப்பக்கிளர், பைந்தமிழ்ப் பண்ணை, சு.அ.இராமசாமிப்புலவர் 20-11-1962-ல் வெளியிட்ட “செல்வத் திறவுகோல்” என்று தலைப்பிட்ட, கவசங்களின் தொகுப்பு ஆகும். அதில் விநாயக கவசத்தால் ஏற்படும் பலன்களை முன்னுரையில் எழுதிவிட்டு இதைப் படிப்பவர்கள் நகைப்பார்கள் என்று தெரியும், ஆயினும் இதை வெளியிடுகிறேன் என்று அவர் எழுதியுள்ளார். அதில், சிலர் சிறையிலிருந்து விடுதலை பெற தான் படித்துப் பல கிடைத்ததையும், இந்தியாவைத் தாக்கிய சீனப் படைகள் பின்வாங்க வேண்டுமென்று தான் படித்துப் பலன் பெற்றதையும் சொல்கிறார். அந்தப் புத்தகம் என் கைக்கு வந்த காலத்திலிருந்து நானும் கவசம் சொல்லி வருகிறேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருக்கலாம்.

ganesh ivory

கொஞ்சம் சுய புராணம்! மன்னிக்கவும்.

லண்டனில் நான் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் உடையவன். எல்லோரும் கிறிஸ்துமஸ் ஹாலிடே, ஈஸ்டர் ஹாலிடே என்று எட்டு மணி வரை தூங்கினாலும் எனக்கு காலை ஐந்து மணிக்குப்பின் படுக்கையில்  இருக்க முடியாது. வேலையில் கொஞ்சம் தூக்கம் வரத்தான் செய்யும். நைஸாக யாருக்கும் தெரியாமல் ஒரு நிமிடமாவது கண் அயர்ந்தால் புத்தெழுச்சி கிடைத்துவிடும். ஒரு நாள் அதிகாலையில் மாடியிலிருந்து எழுந்து கீழே வருகையில் ‘லைட்’ போடாமல், அட நமக்குப் பழக்கமான படிகள் தானே, என்று எண்ணி இறங்கினேன். மேல் படியிலிருந்து அப்படியே சறுக்கி கீழே வந்துவிட்டேன்!! எல்லாப் படிகளையும் என் முதுகெலும்பு மட்டும் தொட்டு வந்தது! பெரிய சப்தம்! வீட்டிலுள்ள எல்லோரும் லண்டனில் ஏதோ பூகம்பம் நிகழ்ந்துவிட்டதோ என்று எழுந்து ‘லைட்’டைப் போட்டுக் கொண்டு ஓடிவந்தனர். எனக்கோ ஒரு காயமும் ஆகாததில் மகிழ்ச்சி. ஆகையால் சிரித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னைப் பார்த்து என்ன ஆயிற்று? அதிகாலை வேலையில் எதைக் கீழே போட்டீர்கள் என்று கேட்டனர். நான் என் உடம்பைத்தான் கீழே போட்டேன். ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னேன். அவர்கள் எல்லோரும் அரைத் தூக்க கலக்கத்தில் இருந்ததால், புரிந்ததோ, புரியவில்லையோ மீண்டும் சுகமாகத் தூங்கப் போய்விட்டார்கள்.

நான் அந்த சம்பவத்தை எண்ணி எண்ணி வியக்கிறேன். ஊமைக் காயம் கூடப் படவில்லை! கடவுள் காப்பாற்றினார். பின்னர் இதை எல்லோரிடமும் சொல்லி, விநாயக கவசம் படித்ததன் பலனே இது என்று சொல்லி எல்லோரையும் கவசம் படிக்கச் சொன்னேன். மகன்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாதாகையால் (பேச மட்டுமே தெரியும்) கந்த சஷ்டி கவசத்தை ‘ஐபேடி’ல் கேட்பர். அதே போல ஹனுமான் சாலிசாவையும் கேட்பார்கள்.

இது ஒரு சம்பவம் மட்டுமிருந்தால் “கோஇன்ஸிடென்ஸ்” (தன்னிச்சையாக ஒரே நேரத்தில் நடந்த இரு செயல்கள்), ஒன்றிரண்டு “ரேர் இன்ஸிடெண்ட்ஸ்” (அபூர்வ சம்பவங்கள்) என்று விட்டு விடலாம். இன்னொரு விஷயத்தைக் கேளுங்கள்.

ganesh tall

என் எதிரி நீலாம்பரி!

சென்னையிலுள்ள எனது அண்ணன் சீனிவாசனுக்கு யாரைப் பார்த்தாலும் எதிர்காலத்தைச் சொல்லும் சக்தி (பேஸ் ரீடிங் பவர்) உண்டு. 1990- ஆம் ஆண்டில் லண்டனுக்கு வந்தபோது, பொதுவான முறையில், மரியாதையின் நிமித்தமாக, நான் வேலை பார்க்கும் இடத்திலுள்ள, என் பரம விரோதிக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தேன். பேஸ் ரீடிங்  சக்தி பற்றியும் சொன்னேன். அவர் விடுவதாக இல்லை. எங்கே பார்க்கலாம், என்னைப் பற்றிச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஆரம்பித்தார். எனக்கு முன்னாலேயே அவரைப் புகழ்ந்து, அவரை யாராலும் அசைக்கமுடியாது என்று என் அண்ணன் சொல்லிவிட்டார்.

பின்னர் அறையிலிருந்து வெளியே வந்தபின்னர், “என்ன இது அநியாயம்? என் பரம விரோதிக்குப் போய் இப்படி நல்லதாகச் சொல்லிவிட்டாய்? என்று வியப்புடன் கேட்டேன். அவரைச் சுற்றி முருகன் அருள் வளையம் இருப்பதாகவும் அதைத் தான் கண்டவுடன் பார்த்த நிகழ்ச்சிகளை அப்படியே சொன்னதாகவும் கூறினார். எனக்கும் அந்தப் பெண்மணி, சிறுவயதிலிருந்தே, அவர் கந்த சஷ்டிக் கவசம் படிப்பதைப் பேச்சுவாக்கில் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அவர் அம்மா கற்பித்தது அது. ஆனால் வெளியே பேசும்போதெல்லாம் தான் ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று “பெருமையாக”ச் சொல்லிக் கொள்வார்! அவர் சிறு வயதிலிருந்து படித்த, அவர் அம்மா, காலில் செருப்புகூட இல்லாமல் கப்பலில், வெளிநாடு சென்ற தன் பெண்ணைக் காப்பாற்று என்று நாள்தோறும் கதறிப்படித்த, அந்தக் கவசமே அவரைச் சுற்றிக் காத்து நின்றது என்று எனக்குப் புரிந்தது. நீங்கள் மற்றவர் நலனுக்காகக் கவசம் படித்தாலும் பலன் உண்டு என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

gnapathy suzi

என் அம்மா “கடித்த” வேலைக்காரி!

சென்னை அடையாறில் உள்ள எனது தம்பியின் பங்களாவில் என் அம்மா வசித்துவந்த காலம். அங்கே ஒரு வேலைக்கார பெண்மணி இருந்தார். என் அம்மாவுக்கு வயது எழுபதுக்கு மேல். அவருக்கு கூனும் விழுந்துவிட்டது. ஆனால் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தோத்திரங்களை வாசித்துக் கொண்டிருப்பார். வீட்டில் என் அம்மா மட்டும் இருப்பதை அறிந்து ஒரு முகமூடியை மூஞ்சியில் போட்டுக்கொண்டு வந்து என் அம்மாவைத் தாக்கி கழுத்திலிருந்த தங்க நகைகளைப் பறித்தார். என் அம்மா, ஒரே கடியாக அவரைக் கடிக்கவே அந்தப் பெண் அலறிய வாறு ஓடிவிட்டார். அவர் குரல், நடை, உடை, பாவனைகளை வைத்து அடையாளம் காணவே அவரைப் போலீஸார் வந்து பிடித்தனர். சென்னைப் பத்திரிக்கைகளில் இச்செய்தி அப்போது வெளியாகியது. இது பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி. அவரை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லி,  என் அம்மா போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிவிட்டார்.

“அம்மா, உனக்கோ உடலில் கொஞ்சமும் தெம்பு கிடையாது. எப்படிக் கீழேவிழாமல் கடித்தாய்? அதுவும் கடிப்பது என்பது பிராமண குலத்தில் மிகவூம் அபூர்வமே” என்று நாங்கள் கேட்டோம். அவர் தினமும் படிக்கும் நரசிம்ம ஸ்த்தோத்திரமே இப்படி அவரைச் சிங்கமாக மாற்றியது. ஆதிசங்கரரைப் பலியிட காபாலிகர் அழைத்துச் சென்றபோது அவரது சீடரே நரசிம்மாவதாரம் எடுத்து அந்தக் காப்பாலிகனைக் கிழித்தெறிந்தது உடனே நினைவுக்கு வந்தது. துதிப்பாடல்களுக்கு அவ்வளவு சக்தி! இப்படி நூற்றுக் கணக்கான சம்பவங்களை நான் சொல்லலாம். ஆனால் அது சுயபுராணமாக, என் “ஆட்டோபையோகிராபியாக” மாறிவிடும் என்று அஞ்சி இத்துடன் நிறுத்துகிறேன்.

நம்பிக்கையுள்ளவர்கள் விருப்பமான கவசத்தைப் படியுங்கள். பலன் உண்டு. குற்றாலம் அருவியின் பின்னாலுள்ள குகையில் தவறி விழுந்த ஒரு பிராமண இளைஞன், பல நாட்களுக்கு காயத்ரீ ஜபம் செய்துகொண்டிருக்க, இடையர்களும் வேடர்களுமே அறிந்த அந்த இடத்துக்கு வந்த, ஆட்டிடையர்கள் அவரைக் காப்பாற்றிய செய்தி முன்னர் தினமணியில் வந்தது.

மந்திரம் என்பதன் பொருளே மனனம் செய்பவரைக் காப்பாற்றும் என்பதுதானே!

ganesh gold

விநாயக கவசமும் அதன் பலனும்:–

வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க!

வாய்ந்தசென்னி அளவுபடா அதிக சவுந்தர தேகம்

மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க! விளரற

நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!

புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!

தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!

கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!

தால்  அங்கணக்கீரிடர் காக்க!

நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!

நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாசபாணி காக்க!

தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைக் சித்திதார்த்தர் காக்க! காமருபூ
முகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!

வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர்
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்க!

அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!
பக்கம் இரண்டையும் தராதரர் காக்க!
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!

விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!

தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!
தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!

இருபதம் ஏகதந்தர் காக்க! வாழ்கரம்
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க!

ganesh indonesia

கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!

கிழக்கினிற் புத்தீசர் காக்க!
அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமாபுத்திரர் தென்னாசை காக்க!
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!

விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ்  உதீசி தக்க நிதிபன் காக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!

ஏகதந்தர்பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும்
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!

மதி,ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ்,

குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம்,

தானியம், கிர

கம், மனைவி, மைந்தர், பயில்

நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க!

காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்

சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க!

வென்றி,சீவிதம் கபிலர் காக்க!

கரியாதியெலாம் விகடர் காக்க!

என்றிவ்வாறிது தனை முக்காலுமும் ஓதிடின்,

நும்பால் இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள்,

அறிமின்கள், யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர்

தேகம் பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!

ganesh rose

விநாயக கவசப் பலன்

யாத்திரையில் தோத்திரம் செய்தால் சகல

விக்கினமும் இரியல் போக

மூத்த பயன் கைகூடும் சமரின் மொழிந்

திடில் விசயம் முற்றும் நாளும்

ஏத்தியிரு முறை இருபத் தொருநாள் வந்

தித்டின் மாரணம் ஈண்டேதம்

பனமாதி நிலை பேறெய்தும்.

நித்தலு மூவேழுமுறை செபித்திடில்கா

ராக்கிருகநீங்கு மன்னர்

பொத்துமுளநிட்டூரம் போம் அரையன்

தனைக் காணும்போது முக்கால்

பத்தியின் ஓதிடின் அவன் தான் வசப்படுவன்

இதைத் தாளிப் பனைமெல்லேட்டில்

வைத்தெழுதிப் படிப்பினும் கேட்பினும் பூசை

வயக்கினும் வல் இடரும் தீரும்.

அன்பு, உறுதி, ஆசாரம் உடையார்க்கு இக்

கவசத்தை அறைக! அல்லார்க்கு

என்பெறினும் உரையற்க! எனக்கிளந்து

மரீசி தனது இருக்கை உற்றான்.

–சுபம்–

happy g chaturthy

ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்

maha head 3

Dont Reblog it for at least a week; dont use pictures.

மஹாபாரத வழிகாட்டி

ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்

 

Research Article written by S NAGARAJAN

Date: 17th  September 2015

Post No: 2165

Time uploaded in London :– 12-11

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

வாழ்நாள் முழுவதும் படிக்க வேண்டிய இதிஹாஸங்கள் ராமாயணமும், மஹாபாரதமும்.

இதில் மஹாபாரதம் உலகின் மிகப் பெரும் நூல் என்ற பெருமையைப் பெறுகிறது. இதில் இல்லாத விஷயங்களே இல்லை என்பது இதன் சிறப்புகளில் ஒன்று.

நூலின் பிரம்மாண்டத்தை எப்படி அறிவது?

 

கீழே உள்ள பட்டியலைப் பார்த்து அறியலாம்.

 

தமிழில் மிகவும் அரும்பாடு பட்டு மஹாபாரதத்தைப் பதிப்பித்தவர் .வீ.இராமானுஜாசாரியர். இவரது பதிப்பு மொத்தம் சுமார் 8895 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. 2314 அத்தியாயங்கள் இதில் உள்ளன.

1896இல் K.M. கங்குலி அவர்களால் 1896ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட மஹாபாரதத்திலோ 2113 அத்தியாயங்கள் உள்ளன.

ஹிந்தியில் மஹாபாரதம் பற்றி எழுதியுள்ள அறிஞர் வாசுதேவ குப்தா தனது மஹாபாரத் தர்ஷன் (2011 வெளியீடு, புனீத் ப்ரகாஷன், ஜய்பூர்) என்ற நூலில் 1923 அத்தியாயங்களில் உள்ள 96244 ஸ்லோக பட்டியலைத் தருகிறார்.

நூலின் பிரம்மாண்டம் இப்போது புரியும்.

 

 

மூன்று பட்டியல்களையும் கீழே காணலாம். இன்னும் சில பட்டியல்களும் கூட இருக்கக் கூடும்.

 maha headline

தமிழ் மஹாபாரதம்.வீ.ராமானுஜாசாரியர் பதிப்பு

  1. ஆதி பர்வம் 260 அத்தியாயங்கள் 956 பக்கங்கள்
  2. சபா பர்வம் 103 அத்தியாயங்கள் 359 பக்கங்கள்
  3. வனபர்வம்  315 அத்தியாயங்கள் 1242 பக்கங்கள்
  4. விராட பர்வம் 78 அத்தியாயங்கள் 337 பக்கங்கள்
  5. உத்யோக பர்வம் 196 அத்தியாயங்கள் 663 பக்கங்கள்
  6. பீஷ்ம பர்வம் 122 அத்தியாயங்கள் 510 பக்கங்கள்
  7. துரோண பர்வம் 203 அத்தியாயங்கள் 858 பக்கங்கள்
  8. கர்ண பர்வம்  101 அத்தியாயங்கள்  482 பக்கங்கள்
  9. சல்ய பர்வம்  66 அத்தியாயங்கள் 303 பக்கங்கள்
  10. சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள்  72 பக்கங்கள்
  11. ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள்  72 பக்கங்கள்
  12. சாந்தி பர்வம் 375 அத்தியாயங்கள் 1414 பக்கங்கள்
  13. அநுசாஸன பர்வம் 274 அத்தியாயங்கள் 1068 பக்கங்கள்
  14. அஸ்வமேதிக பர்வம் 118 அத்தியாயங்கள் 403 பக்கங்கள்
  15. ஆஸ்ரமவாசிக பர்வம் 41 அத்தியாயங்கள் 98 பக்கங்கள்
  16. மௌஸல பர்வம் 9 அத்தியாயங்கள் 28 பக்கங்கள்
  17. மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள்  10 பக்கங்கள்

18 ஸ்வர்காரோஹண பர்வம்    5 அத்தியாயங்கள்   20 பக்கங்கள்

               மொத்தம்        2314  அத்தியாயங்கள்   8895 பக்கங்கள்

 

 

ஆங்கிலத்தில் உள்ள மஹாபாரதம்கே.எம். கங்குலி பதிப்பு

 

maha headline2

  1. ஆதி பர்வம் 236 அத்தியாயங்கள்
  2. சபா பர்வம் 80 அத்தியாயங்கள்
  3. வனபர்வம் 313 அத்தியாயங்கள்
  4. விராட பர்வம் 72 அத்தியாயங்கள்
  5. உத்யோக பர்வம் 199 அத்தியாயங்கள்
  6. பீஷ்ம பர்வம் 124 அத்தியாயங்கள்
  7. துரோண பர்வம் 203 அத்தியாயங்கள்
  8. கர்ண பர்வம் 96 அத்தியாயங்கள்
  9. சல்ய பர்வம் 65 அத்தியாயங்கள்
  10. சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள்
  11. ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள்
  12. சாந்தி பர்வம் 364 அத்தியாயங்கள்
  13. அநுசாஸன பர்வம் 168 அத்தியாயங்கள்
  14. அஸ்வமேதிக பர்வம் 92 அத்தியாயங்கள்
  15. ஆஸ்ரமவாசிக பர்வம் 39 அத்தியாயங்கள்
  16. மௌஸல பர்வம் 8 அத்தியாயங்கள்
  17. மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள்

18 ஸ்வர்காரோஹண பர்வம்    6 அத்தியாயங்கள்  

               மொத்தம்        2113  அத்தியாயங்கள் 

 

 maha2

ஹிந்தியில் உள்ள மஹாபாரத தர்ஷன் நூலில் கே.எம்.வாசுதேவ குப்தா தந்துள்ள பட்டியல்

  1. ஆதி பர்வம் 227 அத்தியாயங்கள் 8884 ஸ்லோகங்கள்
  2. சபா பர்வம் 78 அத்தியாயங்கள் 2511 ஸ்லோகங்கள்
  3. வனபர்வம் 269 அத்தியாயங்கள் 11664 ஸ்லோகங்கள்
  4. விராட பர்வம் 67 அத்தியாயங்கள் 2050 ஸ்லோகங்கள்
  5. உத்யோக பர்வம் 186 அத்தியாயங்கள் 6698 ஸ்லோகங்கள்
  6. பீஷ்ம பர்வம் 117 அத்தியாயங்கள் 5884 ஸ்லோகங்கள்
  7. துரோண பர்வம் 170 அத்தியாயங்கள் 8909 ஸ்லோகங்கள்
  8. கர்ண பர்வம் 69 அத்தியாயங்கள் 4964 ஸ்லோகங்கள்
  9. சல்ய பர்வம் 59 அத்தியாயங்கள் 3220 ஸ்லோகங்கள்
  10. சௌப்திக பர்வம் 18 அத்தியாயங்கள் 870 ஸ்லோகங்கள்
  11. ஸ்த்ரீ பர்வம் 27 அத்தியாயங்கள் 775 ஸ்லோகங்கள்
  12. சாந்தி பர்வம் 329 அத்தியாயங்கள் 14732 ஸ்லோகங்கள்
  13. அநுசாஸன பர்வம் 146 அத்தியாயங்கள் 8000 ஸ்லோகங்கள்
  14. அஸ்வமேதிக பர்வம் 103 அத்தியாயங்கள் 3320 ஸ்லோகங்கள்
  15. ஆஸ்ரமவாசிக பர்வம் 42 அத்தியாயங்கள் 1111 ஸ்லோகங்கள்
  16. மௌஸல பர்வம் 8 அத்தியாயங்கள் 320 ஸ்லோகங்கள்
  17. மஹா ப்ரஸ்தானிக பர்வம் 3 அத்தியாயங்கள் 123 ஸ்லோகங்கள்

18 ஸ்வர்காரோஹண பர்வம்    5 அத்தியாயங்கள்   209 ஸ்லோகங்கள் 

               மொத்தம்        1923  அத்தியாயங்கள்    84224 ஸ்லோகங்கள்

19 ஹரிவம்சம்                                             12000 ஸ்லோகங்கள்

                                  மொத்தம்                 96244 ஸ்லோகங்கள்

 

 maha4

ஆக தீவிரமாக இதைப் படிக்க விழையும் ஒருவர் நாள் ஒன்றுக்கு நூறு பக்கங்கள் வீதம் படித்தால் 100 நாட்களில் படித்து முடிக்கலாம். நாள் ஒன்றுக்கு 1000 ஸ்லோகங்கள் என்ற கணக்கில் படித்தாலும் 100 நாட்களில் படித்து முடித்து விடலாம்.

 

பல முறை படிக்க வேண்டிய நூல் என்பதால் முக்கியமான பகுதிகளை மீண்டும் திருப்பிப் படிக்கக் கூடிய அளவில் குறிப்புகளும் எடுக்க வேண்டியிருக்கும்.

 

அதற்கான் ஆயத்தங்களுடன் விநாயகரையும் வியாஸரையும் வணங்கி படிக்க ஆரம்பிக்கலாம்.

 

படிக்க முனையும் பாக்கியசாலிக்கு வாழ்த்துக்கள்.

***********