கனி மொழி பற்றி வள்ளுவன், கம்பன் (Post No.4865)

WRITTEN by London Swaminathan 

 

Date: 30 MARCH 2018

 

Time uploaded in London –  6-33 am (British Summer Time)

 

Post No. 4865

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கனி இருப்ப பூக்கொய்யலாமோ? — கம்பன்

 

கம்பன் கனி மொழிகளை உதிர்க்கிறான் கம்ப ராமாயணத்தில்! வள்ளுவனைக் கரைத்துக் குடித்த கம்பனுக்குப் படலம் தோறும், திருக்குறள் வரிகளும், சொற்களும் தாமாக வந்து விழுகின்றன.

‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ — என்றான் வள்ளுவன்.

கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

——-என்றான் கம்பன்

 

முனிவரும் கருணை விவைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி

இனிவரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று  இரங்க வேண்டா

துனிவரும் செறுநர் ஆன தேவரே துணைவராவர்

கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

 

 

எங்கே, எப்போது, யார் நுவல்வது இஃது?

 

கும்பகர்ணனைக் கஷ்டப்பட்டு உசுப்பிவிட்டு ராமன் முன்னிலையில் போருக்கு நிறுத்தினார்கள். வேத நாயகனான ராமன், யாரையா இந்தப் புது முகம்? என்று விபீஷணனிடம் வினவுகிறான். அப்போது கும்பகர்ணனை அறிமுகம் செய்து வைக்கிறான். இவரையும் நமது கட்சியில் சேர்த்துக் கொண்டால் நமக்கு வெற் றி  நிச்சயம் என்று சுக்ரீவன் ஒரு யோஜனை சொல்கிறான். ராமனும், எத்தனை பேர் வந்தாலும் எனது கட்சியில் இடம் உண்டு; அழைத்து வா- என்று விபீஷணனை அனுப்புகிறான்.

அப்போது விபீஷணன், கட்சி மாறினால் வரும் சாதகங்களை உரைக்கிறான்:

“நீ ராமன் கட்சியில் சேர்ந்தால், அந்த நிலையில் முனிவர்களும் உன்னிடம் கருணை காட்டுவார்கள்; மூன்று உலகங்களிலும் உனக்குப் பகைவர்கள் இரார். உனக்கு சாவு என்பதே கிடையாது. தேவர்களும் நண்பர்கள் ஆவர். இனிக்கும் பழங்கள் தோன்றும் காலத்தில் வெறும் மலர்களைப் பறிப்பதற்கு நினைக்கலாமா? (கூடாது).”

இந்திய மக்கள்– குறிப்பாகத் தமிழர்கள், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்தியதால், இயற்கையாகவே மரம், செடி, கொடி, காய், கனி உவமைகள் வரும்.

கனி மொழி பற்றி வள்ளுவன்

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந்  தற்று- குறள் 100

 

பொருள்

இனிமையான சொற்கள் இருக்கையில் ஒருவன் சுடு சொற்களைப் பெய்வது, இனிப்பான பழங்கள் இருக்கும் போது கய்களைத் தின்றது போலாகும்.

 

சேலத்து மாம்பழமும் , மல்கோவா, பாதிரி, நீலம் அல்பான்ஸோ பழங்களும் இருக்கும்போது நாட்டுப்புறத்தில் கீழே விழுந்து கிடக்கும் புளிச்ச மாங்காயைத் தின்னும் மாங்காய் மடையனாக இராதே என்று கனி மொழி பற்றி வள்ளுவன் சொல்கிறான்.


(
பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது)

–Subham —

 

அன்பிற்கும் அவதி உண்டோ? – ராவணன் (Post No.4863)

WRITTEN by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  20-04 (British Summer Time)

 

Post No. 4863

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்றான் தெய்வப் புலவன் வள்ளுவன். தமிழ் வேதமான திருக்குறளில் அன்புடைமை என்னும் அதிகரத்தில் அருமையான பத்து குறட் பாக்களைக் காண்கிறோம். கம்ப ராமாயணம் முழுதும் நூற்றுக்கணக்கான பாடல்களில் குறளின் எதிரொலியைக் கேட்க முடிகிறது. கம்பன், தெய்வப் புலவனின் திருக்குறளை மனப்பாடமாக அறிந்திருக்க வேண்டும் ஒரு நாளைக்கு 700 கவிகள் பாடிய கம்பனுக்கு முடியாததும் உண்டோ!

 

கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் வதைப் படலத்தில் ஒரே பாடலில் இரண்டு செய்திகளைத் தருகிறான் கம்பன்

 

1.அன்புக்கு எல்லை இல்லை

2.விநாஸ காலே விபரீத புத்தி (விதி கெட்டால் மதி கெட்டுப் போகும்)

 

ராவணன் முதல் யுத்தத்தில் தோற்றவுடன் மால்யவான், மகோதரன் ஆகிய அமைச்சர்களையும் உறவினர்களையும் கலந்தாலோசிக்கிறான். மாமனான மால்யவான், சீதையை விட்டுவிடு என்கிறான். மகோதரன் என்பவனோ , வா, சண்டக்குப் போவோம், வெற்றி நமதே என்கிறான். அப்போது ராவணன் சொல்வான்—

 

பெறுதியே எவையும் செல்வம் பேர் அறிவாள சீரிற்று

அறிதியே என்பால் வைத்த     அன்பினுக்கு அவதி உண்டோ

உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான்

இறுதியே இயைவது ஆனால் இடைஒன்றால் தடைஉண்டாமோ?

 

பொருள்

மகோதரன் சொன்னதைக் கேட்ட ராவணன் அவனை நோக்கி, “சிறந்த அறிவுடையனே! நீ செல்வம் யாவையும் பெறுதற்கு உரியவன்; சிறந்த செயல்களை நீ அறிந்துள்ளாய். நீ என்னிடம் கொண்ட அன்புக்கு அளவு உண்டா?  நீ எனக்கு உறுதி பயக்கும் செயலையே உரைத்தாய்” – என்று அவனைப் பாராட்டி, தனது சோர்வைக் கைவிட்டான். ஒருவனுக்கு அழியும் காலம் வந்துவிட்டால், இடையிலே எது வந்தாலும் அந்த அழிவுக்குத் தடை உண்டாகுமோ? உண்டாகாது.

 

அவதி= எல்லை, அளவு, துயரம்

 

ஆக, கம்பனும் வள்ளுவனும் அன்பினுக்கு எல்லையோ தாழ்ப்பாளோ இல்லை என்கின்றனர்.

மேலும் சில ஒப்பீடுகள்

யாக்கையதியல்பினுமன்பினும் கொண்டுதன்

காட்சிக்கண்ணீர் கரந்தகத் தடக்கி (பெருங்கதி 1-36; 147-8)

 

உன்னுபே ரன்புமிக்கொழுகியொத் தொண்கணீர்

பன்னுதாரைகள் தரத் தொழுதெழும் பரதனை

-கம்ப. எதிர்கோள்.26)

அன்பிற்கும் உண்டோ | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/அன்பிற்கும்-உண்ட…

2 Dec 2016 – அன்பிற்கும் அன்ன தானத்துக்கும் சக்தி உண்டு!அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கண்நீர் பூசல் தரும் (குறள் 71). பொருள்:- அன்பை, பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் கதவோ தாழ்ப்பாளோ உண்டா? கண்களிலிருந்து பெருகும் கண்ணீரே அந்த அன்பினைப் …

 

பாரதி போற்றி ஆயிரம் – 65 ( Post No.4854 )

Date: MARCH 27, 2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4854

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 476 முதல் 484

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

22 முதல் 30 வரை உள்ள பாடல்கள்

 

 

சக்தி எனுமோர் அரியநற் பாட்டில்

   சக்தி எவையென பட்டிய லிட்டாய்

எக்க ணத்திலும் உரியநற் பண்பாய்

   எண்ணத் திருந்திடும் எரியதே சக்தி

தக்க ததுவென  தெளிவுறச் சொன்னாய்

   தழல துவேசிவ சக்தியா மென்றாய்

இக்க ணத்தினில் அதையுணர் வோர்கள்

   என்றும் வாழ்வினில் வெற்றியே காண்பார்

 

சக்தி விளக்கமென் றருளிய பாட்டில்

   சாற்றும் மூர்த்திகள் மூவரென் றாலும்

தக்க தோர்மூலப் பெருவெளி யொன்றில்

   தானே அவைகிளை விட்டன யென்றாய்

மிக்க அவ்வொளியே சக்தியென் றிட்டாய்

   மேன்மை பெற்றிடப் போற்றிடச் சொன்னாய்

எக்க ணத்திலும் எதனிலும் என்னை

   என்றும் நினைந்தவனை வாழ்த்தினேன் நின்னை

 

மகாசக்தி வெண்பா மனத்திற்கு யெந்தன்

மகாசக்தி யைக்கூறும் மாண்பால் – தகாதவற்றை

நீக்கி எனதருள் நீங்கா வகைகாட்டி

காக்கும் கவசமது காண்

 

போற்றி அகவலில் படைப்பு முதல்நாள்

ஆற்றும் செயல்கள் ஐந்தையும் உரைத்தாய்

உலகம் நானாய் ஒவ்வொரு பொருளிலும்

கலந்து நிறைந்ததும் கனிவுடன் பகர்ந்தாய்

ஆனால் இதுவரை ஆய்ந்த ஞானிகளும்

காணாக் குறிப்பினைக் காட்டலால் மகிழ்ந்தேன்

உயிரில் உயிரென உரைத்தாய் இயல்பே

உயிரது இறப்பினும் உளதென் றனையே

யோகியர் ஞானம் யாதென உன்போல்

யூகித்தோர் வரியில் உரைத்தவர் யாருளர்?

சைவசித் தாந்த சார மென்பாரே

நைவதின் றியுன்போல் நயம்பட உரைத்ததார்?

யானெனும் அகங்காரம் எனதெனும் மகங்காரம்

ஏனென விடுத்தவன் ஏற்புறு யோகியென்றாய்

நோக்கு மிடமெல்லாம் நின்னருள் ஞானம்

நீக்க மின்றி நிறைந்ததே வாழ்கநீ!

 

நாவுக்க ரசரின் அரங்க மாலை – என்றும்

   நம்மங் கம்யாவும்  இறைவ னுக்கே

மேவும்ப டியமைந் ததென்றே உரைக்கும் -அந்த

    மேன்மைபோல்நீ வரைந்தாய் எனக்கும்

சக்திக்கு ஆத்ம சமர்ப்பணமாக – நீ

   சாற்றியதோர் புதிய அங்க மாலை

எக்காலத் தையுமிங்கு வென்று வாழும் – அதுபோல்

    எவர்வா ழினுமென் னருளும் மேவும்

 

கருணையின் வடிவமாய் சக்தியின் சொரூபமாய்

   காண்பதில் நிறைவுகொள் ளாமல்

உருத்திர ஆங்காரக் காளியாய் எந்தனின்

   ஊழிக்கூத் தினைப்பாட லுற்றாய்

ஒருமுறை அதையெவர் பாடினும் அங்குநான்

   ஓங்காரக் காளியாய் வந்தே

பெருகிய வெறியுடன் நடம்புரி வேனதில்

   பேரண்டம் குலுங்கிடும் அன்றோ?

 

காலவ னத்தினிலே – நானோர்

களிவண் டாமெனவே

சீலமு டன்சொன்ன – உவமையில்

சிந்தை குளிர்ந்ததடா

 

மாரியெ னைப்பணிந்தும் – மாந்தர்

மனம்வெளுக் காநிலையைக்

கூறிவ ருந்தினையே – அதிலுன்

குமுறலைக் கண்டேனடா

 

காணிநி லந்தனையே – தனக்குக்

கருத்துடன் கேட்டாலும்

பேணிஇவ் வையத்தைப் – பாட்டால்

பாலிக்க நினைத்தாயடா

 

பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

பாரதி போற்றி ஆயிரம் – 64 (Post No.4842)

PICTURE OF ACTORS FROM BHARATIYAR DRAMA (ACTED BY RAMANAN AND DIRECTED BY RAMAN)

Date: MARCH 23, 2018

 

 

Time uploaded in London- 7-36 am

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4842

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

  பாடல்கள் 464 முதல் 475

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

10 முதல் 21 வரை உள்ள பாடல்கள்

 

 

பக்தி யிலக்கியம் என்றே தமிழைப்

    பாரே போற்றிடினும்

சக்தி என்புகழ் பாடிய நூல்கள்

   சாற்றும் படியில்லை

இக்க ணம்வரையில் எனக்கோர் காவியம்

    ஏனோ எழவில்லை

தக்கநற் பட்டியல் இட்டுப் பார்த்தால்

    தமிழ்நூல் அதிகமில்லை

 

சங்க இலக்கியத்துள் – சிவத்தைச்

சார்ந்தெனைச் சிலவரிகள் பாடிவைத்தார்

தங்கும் சிலம்பினிலே – இளங்கோ

தகவறு கொற்றவைத் துதியுரைத்தான்

 

கலிங்கத் துப்பரணி – கூத்தன்

கவித்துவ தக்கயா கப்பரணி

வலிமையைத் தருகின்ற – காளியாய்

வடித்தென் பெருமையைச் சாற்றினவே

 

குமர குருபரனோ – என்னைக்

குழந்தையாய் கண்டினிய கவிபாடினான்

அமர்ந் ததனைப்போலே – புலவோர்

அரும்பிர பந்தங்கள் சிலபாடினார்

 

தாயுமா னவனென்மேல் – செய்ய

தமிழ்ப்பதி கம்சில வடித்திட்டான்

ஏயும் வடிவுடைமாலை – வடலூர்

இராம லிங்கமும் கொடுத்திட்டான்

 

அபிராமி பட்டன்தான் – அரிய

அந்தாதி ஒன்றினைச் சூட்டிநின்றான்

அபிமானத் துடனதனை – இந்நாள்

அனைவரும் ஒருமனதாய் ஓதுகிறார்

 

என்புகழ் பாடயிவை போதுமோ?

  இனியொரு வரைத்தமிழ் காணுமோ?

என்றயென் ஏக்கத்தைத் தீர்க்கவே

   இங்குவந் தாய்நீயும் பாரதி

உன்செயல் யாவுமென் செயலதாய்

   உரைத்திட்ட நீசக்தி தாசனாய்

என்றுமென் புகழ்தனைத் தீட்டினாய்

   எண்ணற்ற கவிமலர்கள் சூட்டினாய்

 

எந்தன்மேல் அரியநற் காவியம்

    ஏதும்நீ இயற்றாமல் போயினும்

செந்தமிழ்க் கூறிடும் பிரபந்தம்

    சிறப்பாக உருவாக்கா திருப்பினும்

சந்தங்கள் நிறைந்தநற் பாக்களால்

    சக்தியென் புகழ்நாளும் பாடினாய்

இந்நாளுக் கேற்றபடி தந்ததால்

    எல்லோரும் என்புகழைப் பாடினார்

 

தேசவிடு தலைக்குந்தன் பாடல்கள் யாவும்

தேவையென்ற நிலை தொடர்ந்திட்ட போதும்

நேசமுடன் தேவியாவும் தனக்கெனவே கேட்டாள்

நறுமலர்கள் நாளுமிங்கு சூட்டிடுவேன் என்றாய்

 

பாசமுள்ள நின்வாழ்வில் சோதனைகள் யாவும்

பதைத்திடவே வந்திடினும் பலகவிதை தந்தாய்

பூசலற இக்கவியைச் செய்ததுநா னல்ல

புகலரும் பராசக்தி தானென்று சொன்னாய்

 

மூன்றுகா தலெனும் அரியநற் பாட்டில்

முளரிமா திருவரை முன்னுரைத் தாலும்

தோன்றிடும் காளியே அருளுவாள் யாவும்

தோத்திரம் செய்வமென என்திறம் கண்டாய்

 

ஆயிரம் தெய்வமென அறிவிலிகள் செல்வார்

அறிவொன்றே தெய்வமென சொன்னாய்நீ என்பார்

ஆயினதை பராசக்தி பூணுநிலை யென்றே

அறுதியிட்டுத் தெளிவுறவே ஆங்கதனில் சொன்னாய்

பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

 

–Subham–

பாரதி போற்றி ஆயிரம் – 63 (Post No.4816)

Picture posted by Vidhya Subramanian in Facebook

Date: MARCH 15,  2018

 

 

Time uploaded in London- 5-07 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4816

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 455 முதல் 463

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி ஆரம்பிக்கப்படுகிறது

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

1 முதல் 9 வரை உள்ள பாடல்கள்

 

 

பராசக்தி என்றாலே பாரதம் முழுவதும்

   பக்தியுடன் போற்று மன்றோ?

பராசக்தி யாலேதான் இகவாழ்வின் நலம்யாவும்

   பாங்குடனே அமையு மன்றோ?

பராசக்தி தானிங்கு மூலசக்தி யாய்த்தோன்றி

   பரிணமித்த சக்தி யன்றோ?

பராசக்தி தானிங்கு புவனங்கள் உயிரினங்கள்

   பார்க்கின்ற யாவு மன்றோ?

 

ஆயிரம் பெயர்கொண்டு அழைத்தாலும் ஆதாரம்

   ஆதிபரா சக்தி யன்றோ?

ஆயிரம் வடிவினில் அமர்ந்தாலும் அவையாவும்

   அன்னையென் வடிவ மன்றோ?

ஆயிரம் பணிகளைச் செய்தாலும் வலிமையை

   அருள்பவள் யானே யன்றோ?

ஆயிர மாயிரம் கோயில்க ளிலென்றும்

    அமர்ந்ததிச் சக்தி யன்றோ?

 

புவனங்கள் அனைத்தும்தன் வடிவாகக் கொண்டதால்

   புவனேச்வ ரியென்று ரைப்பர்

அவமற அகிலத்தைக் காத்துவாழ் விப்பதால்

   அகிலாண்டேச் வரியே என்பார்

கவல்கின்ற நிலைமாற்றி கவினுறவாழ் விப்பதால்

   காமாட்சி என்று சொல்வார்

விவரிக்க வொண்ணாத பேரரசு கண்டதால்

   மீனாட்சி எனப்பு கழ்வார்

 

இமயத்தின் பார்வதியாய் இருப்பினும் வங்கத்தில்

   இகல்காளி யென்றி ருப்பேன்

அமர்வென்ற மராட்டிய பவானியாய் இருக்கும்நான்

    ஆந்திரத் துர்கை யாவேன்

குமரியாய் தென்கடலில் நிற்கும்நான் பாரதக்

   கோயிலெங் கணுமி ருப்பேன்

சமயஒற் றுமையோடு தேசியஒற் றுமைகாண

   சார்ந்தவள் நானே யன்றோ?

 

இத்தனைச் சிறப்புகள் எனக்கிருந்தும்

எனைப்பற்றிப் பாடல்கள் அதிகமில்லை

இத்தினம் அதனை நினைத்தாலும்

என்னதான் காரணம் புரியவில்லை

 

ஆலயங் கள்தமிழ் நாட்டினிலே

யாருக்கு அதிகம் எனப்பார்த்தால்

சாலவும் எனக்கே பலகோயில்

சான்றிடும் நூல்களோ சிலவேதான்

 

இடபா கத்தில் என்னை ஏற்ற

   ஈசன் புகழ்பாட

அடல்சார் மூவிழி எனமுப் புராணம்

   அழகாய் அமைந்தனவே

திடமார் நால்வர் பாவுடன் பன்னிரு

   திருமு றையானதுவே

கடல்போல் பரந்த சிற்றிலக்கியங்கள்

   கணக்கி லடங்காவே

 

எந்தன் தமையன் திருமால் பெருமை

   என்றும் நிலைபெறவே

சிந்தை துள்ளும் சந்தக் கவியில்

    திவ்ய பிரபந்தம்

அந்த மில்லாமல் அதற்குப் பின்னும்

   அட்ட பிரபந்தம்

எந்த நாளும்ரா மாயண பாரத

    இதிகா சம்உளவே

 

முருகன் எந்தன் அருமை மைந்தன்

   முத்த மிழின்தலைவன்

பெருமை உரைக்க எத்தனை எத்தனைப்

    புலவர் நாடிவந்தார்

திருமு ருகாற்றுப் படைமு தலாகத்

    திருப்பு கழுந்தொடர

அருள்பெற் றவனைப் பாடிய நூல்கள்

   அளவி டயியலாதே

 

         பராசக்தி பார்வையில் பாரதி தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

***

பாரதி போற்றி ஆயிரம் – 62 (Post No.4810)

A scene from Bharati Drama

Date: MARCH 13,  2018

 

 

Time uploaded in London-15-01

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4810

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 442 முதல் 454

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது

இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி

31 முதல் 43 வரை உள்ள பாடல்கள்

 

 

சொந்த மண்ணை விட்டு வந்து

   சோர்ந்து வாழ்தல் வாழ்க்கையோ?

இந்தி யாவில் சிறையி லென்னை

   இட்ட போதும் தாழ்ச்சியோ?

இந்த வாழ்வு தேவை யில்லை

   என்று வந்து சிறையிலே

தந்த துன்பம் ஏற்று மீண்டாய்

   சார்ந்த நட்பால் விரைவிலே

 

வறுமை யுன்னை கடையம் தன்னில்

   வாட்டி வதைத்த நாளிலும்

சிறுமை செய்து சுற்ற மெல்லாம்

   சீறி விழுந்த போதிலும்

உறுதி யோடு சென்னை வந்து

   உற்ற இதழின் பணியேற்றே

இறுதி வரையில் எழுதி எழுதி

   எனக்கெ னவுயிர் தந்தாயே

 

சுதந்திர ஆடை நெய்திட நூலை

   சேர்த்திடும் அந்நாளே – அங்கு

அதையவர் அன்றே அணிந்திட் டாற்போல்

   ஆடுவோ மேயென்றாய் – உலகில்

இதனிலும் தீர்க்க தரிசனம் என்பதை

   எங்கும் பார்த்ததில்லை – பின்னர்

அதன்படி சுதந்திர பூமியில் மக்கள்

    ஆடியே பாடினரே!

 

இறந்த காலச் சிறப்புகள் பாடி

   இறும்பூ தெய்தினையே! – ஆனால்

பிறங்கும் நிகழ்கா லத்தின் நிலையை

   பிழையற உரைத்தனையே – அன்றே

சிறந்த எதிர்கா லத்தின் மேன்மையை

   சீருற மொழிந்தனையே – அதனால்

கறங்கும் திரிகா லமும்மொழி ஞானக்

   கவியாய் திகழ்ந்தனையே!

 

புதிதாய் மலர்ந்த ருஷியப் புரட்சியின்

    பெருமையை உணரவைத்தாய் – மேலும்

மதித்தற் குரிய பெல்ஜிய வாழ்த்து

    மாஜினி சபதமுடன் – நாளும்

விதியது வோயென பீஜித் தீவினில்

   வேதனைப் படும்பெண்கள் – கொண்ட

கதியையும் பாடி எல்லையில் உலகக்

   கவியாய் உயர்ந்தனையே!

 

வந்தே மாதரம் என்பார் – அது

   தந்திடும் பொருளுணராமலே மொழிவர்

வந்தே மாதரம் என்றால் – எங்கள்

    மாநிலத் தாயை வணங்குத லென்றே

சிந்தை தெளிந்திட உரைத்தாய் – பொருள்

    செம்மையாய் உணர்ந்திட வேமொழி பெயர்த்தாய்

இந்த நாளிலும் இன்னும் – அதை

    இகழ்வாய் பேசிடும் ஈனருள ரன்றோ?

 

தாயின் மணிக்கொடி என்றே – நான்

   தாங்கிடும் துவசத்தின் சிறப்பை வடித்தாய்

சேயிவர் உயிரினைத் தந்தும் – அதன்

   செம்மையை உதிரத்தால் காப்பாரென் றுரைத்தாய்

ஆயினும் நிகழ்வது என்ன? – இன்று

    அவரவர்க் கெனதனிக் கட்சிகள் கண்டே

ஏயின கொடிகள்கிழ் நின்றார் – அதில்

    எனக்குள தேசியக் கொடியினை மறந்தார்

 

பொன்விழா கண்டஎன் நாட்டில் – இன்னும்

   பஞ்சமும் பசியும் தீர்ந்திட வில்லை

அன்றுநீ உணவைப் பறிக்கும் – மனிதர்

   அகன்றிடு வாரென அகமிக மகிழ்ந்தாய்

இன்றுமந் நிலையே அமைத்தார் – பலர்

    ஏழைக ளாகிட சிலர்யாவும் பறித்தார்

 என்றிவர் வறுமைகள் நீங்கும் – பாரதி

    அன்றுதான் நீ சொன்ன பாரதம் ஓங்கும்

 

முப்பது கோடி மக்களுக் கோருயிர்

முன்னம் உரைத்தனையே – இன்று

செப்பரும் நூறு கோடி யாயிவர்

சிதைவுற்று நின்றனரே

 

 

அறுபது கோடி தடக்கை களாமென

அகம்மிக மகிழ்ந்திருந்தாய் – ஆனால்

இருநூறு கோடி கரங்க ளிருந்தும்

ஏதும்முன் னேற்றமில்லை

 

மேவினர்க கின்னருள் செய்பவள் தாயென

மேன்மை யுறவுரைத்தாய் – இங்கே

மேவிய பற்பல பேதங்க ளால்பகை

மூண்டுள தென்செய்வேன்?

 

அல்லவ ராயின் அவரை விழுங்குவள்

அன்னையென் றேவுரைத்தாய் – என்ன

சொல்லுவேன் இவர்கள் மாறுபட் டுத்தம்மைத்

தாமே விழுங்கினாரே

 

அடிமை விலங்கினை உடைத்திட அந்நாள்

   அரியநற் கவிதைகள் தீட்டிவிட்டாய்

முடிவே இல்லாத மதஇன சாதியாம்

   விலங்குகள் இந்நாளில் பூட்டிவிட்டார்

கடின முயற்சிகள் அதனிலும் தேவையாய்

   கழற்ற முடியாமல் திணறுகின்றேன்

விடிவினைக் காணவே மீண்டும் நீவந்தால்

    விடுதலை பெறுவேன் வாழியவே.

 

பாரதமாதா பார்வையில் பாரதி முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 61 (Post No.4806)

Date: MARCH 4,  2018

 

 

Time uploaded in London- 6-51 am

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4806

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 61

  பாடல்கள் 430 முதல் 441

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது

இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி

19 முதல் 30 வரை உள்ள பாடல்கள்

 

 

மூவர்ணம் கொண்டயென் கொடிபோ லென்றும்

    முக்கொள்கை இந்தியா இதழின் மூச்சாய்

மேவரும் சுதந்திரம் தன்னோ பாங்கு

    மேன்மையுள சமத்துவம் சகோத ரத்வம்

ஆவலுற ஏற்றதனை நடத்த லானாய்

    அச்சமுற் றிருந்தோர்க்கு வலிமை தந்தாய்

எவருளர் எனைத்தடுக்க எனத்து ணிந்தே

    எழுச்சிமிகு விடுதலைக் கவிகள் வார்த்தாய்

 

கவிமட்டும் போதாமல் களமும் கண்டாய்

    கடற்கரையில் பலகூட்டம் நடத்த லானாய்

செவிமடுக்க வந்தோரின் உடல்கொ திக்க

    செந்தணலாய்ப் பாடல்களைப் பாடச் செய்தாய்

நவில்விபின் சந்திரரை அழைத்து வந்தாய்

    நாடும்போ ராட்டமெல்லாம் பங்கு கொண்டாய்

எவர்பேச வரினுமதில் உந்தன் பாட்டு

    இல்லாமல் கூட்டமில்லை எனும்பேர் கொண்டாய்

 

ஆரவார முடனுலகை ஆட்சி செய்த

    ஆங்கிலப் பேரரசே மிரட்சி கொண்டு

பாரதியார் பாட்டொன்றௌக் கேட்டு விட்டால்

    பாரினிலே பிணங்கூட உயிர்த் தெழுந்து

வீரமுடன் விடுதலைப் போர்தொ டுக்கும்

    விரைவாக சுதந்திரத்தை மீட்கக் கூடும்

தீரமுள அவர்பாட்டைப் பாடல் தேசத்

    துரோகமென சட்டமே இயற்றிட் டாரே!

 

இந்தியா பத்திரிகை வீழ்ந்திட்டால்தான்

    இந்தியாவில் நாம்வாழ்தல் இயலும் என்றே

சிந்தித்த ஆங்கில ஆதிக் கம்தான்

    சீறியதை அழித்திடற் காக வென்றே

விந்தையச்சுச் சட்டத்தைக் கொண்டு வந்து

    விரைவாகச் செயல்படுத்தி நசுக்கி விட்டார்

அந்தநாள் அன்றாங்கு நின்ற துந்தன்

    அரியஇத ழல்லஉந்தன் மூச்சை யன்றோ?

 

 

இனியும் பிரிட்டிஷ் ஆதிக் கத்தில்

    இருப்பது சரிதானா? – அதனால்

எதையும் செய்திட இயலா நிலைமை

    ஏற்படல் முறைதானா?

தனியே சிலநாள் மறைந்தே பணிகளைத்

    தொடர்வதில் தவறேது? – இப்படித்

தலைமறைவாகுதல் கோழைத் தனமென

    தாழ்வுற லாகாது

 

அந்தநாள் ராமன் தருமன் கூட

    அடவி புகுந்தாரே எனினும்

அற்புதச் செயல்கள் பலவும் புரிந்து

    அரும்புகழ் கொண்டாரே

இந்நாள் நீயும் வனவா சமென

    இருப்பாய் புதுவையிலே என்றே

இயம்பிய தோழர்கள் கருத்தினை ஆய்ந்தே

    ஏற்றாய் தெளிவுறவே

 

 

அவ்வித மாங்கே சென்றபின்னும்

அந்நியர் கொடுமை தொடர்ந்ததுவே

எவ்வித மெங்கே சென்றாலும்

எங்கும் நிழல்போல் வந்த னரே..

 

பற்றின கால்களை வறுமையெனும்

பாம்புக ளென்றே தவிக்கையில்

ஒற்றர்கள் என்னும் கழுகுகளோ

உந்தன் தலைமேல் சுற்றினவே

 

தலக்கு வரல்தலைப் பாகையுடன்

தான்போ யிற்றெனும் பழமொழிதான்

நிலைக்க உந்தன் தலைப்பாகை

நிரூபித் ததுவே பலமுறை தான்..

 

எதுவரி னுஞ்சிறு கலக்கமின்றி

இலக்கியப் பணிகளை நீபுரிந்தாய்

புதுவை வாழ்வினில் தானேநீ

புதுமைப் படைப்புகள் பலதந்தாய்..

 

அரவிந்தருன் வ.வே.சு

அய்யர் வந்தே இணைந்தாரே

உரமாய் சுதந்திர உணர்வலைகள்

ஓயா மலதில் திளைத்தீரே

 

 

கடலுக்கடியில் ஒளிந்திருந்த

கனலென மறைந்தே இருந்தாயே

வடமு காக்கினி தீப்போல

வெளிப்பட் டொருநாள் எழுந்தாயே

 

பாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

பாரதி போற்றி ஆயிரம் – 60 (Post No.4799)

 

Date: MARCH 2,  2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4799

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 421 முதல் 429

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது

இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி

10 முதல் 18 வரை உள்ள பாடல்கள்

இமயம் தன்னில் எழுந்த குரல் – தென்

   குமரி வரைஎதி ரொலித்ததுவே

குமரி யிலொருவன் அடிபட்டால் – அந்த

   இமயம் கண்ணீர் உகுத்ததுவே

சமமென் றனைவரும் சேர்ந்ததினால் – இங்கு

   சகல பேதங்களும் தீர்ந்ததுவே

தமது நாடெனும் உணர்வுடனே – இந்தத்

   தாயினை  யாவரும் வணங்கினரே

  

அன்னை என்னைத் தென்னகம் தன்னில்

    முன்னம் உணர்ந்தாய் பாரதியே

தன்போல் தமிழர் நன்கு உணர்ந்திட

   முன்மொழிந் தனையே பாரதியே

அன்னாள் உந்தன் கவிகளை எனக்கே

   அர்ப்பணி த்தாய்நீ பாரதியே

பன்மணிக் கவிதை உன்போல் எனக்குப்

   படைத்த வருண்டோ பாரதியே

 

பாரத மாதா பாரத மாதா

   பாட்டுகள் யாவும் எனதாக

பாரதம் உந்தன் பாவினி லுளதென

   பாரினில் யாவரும் புகழ்பாட

பாரதி யென்னும் மலையி லிருந்து

   பாய்ந்துறு தேசிய அருவியது

பாரத மாய்த்தமிழ் நதியென ஓடி

   பாரதக் கடலில் படர்ந்ததுவே

 

காலம் தனது தேவைக் கேற்பக்

   கவிஞன் தன்னை உருவாக்கும்

சீலம் மிகுந்தோர் சொல்லுக் கேற்ப

   தேசியத் திற்கே உனையீந்தாய்

ஆலம் உண்டே அமுத மளித்த

   அரனாரைப் போல் உயர்ந்திட்டாய்

காலக் கவிஞன் ஆனதி னாலே

   காலம் கடந்து வாழ்ந்திட்டாய்

 

என்றுநீ தேசிய உணர்வினைப் பெற்றாய்

  என்பதை என்போல் யாரறிவார்?

உன்றன் இளமையில் ஊரூ ராக

   ஓடிய போதும் உதிரத்தில்

என்றும் நீங்கா சுதந்திர வேட்கை

   இருந்ததி னால்நீ சிலிர்த்தெழுந்தாய்

சென்னை நகருறை வாழ்வில் தேசிய

   சேவையி லொன்றிச் சிறப்புற்றாய்

 

கல்கத்தா மாநாட்டில் கலந்திடச் சென்றவன்

   கலக்கங்கள் தீர்வ தற்கே

சொல்லினால் உலகையே சிலிர்த்திடச் செய்திட்ட

   தூயவிவே கானந் தர்தம்

நல்லதோர் மாணவியாய் நாடெல்லாம் மதித்திட்ட

   நிவேதிதா தன்னைக் கண்டாய்

பலவளம் பெற்றதால் களையெலாம் நீங்கிய

   பயிராக வளர்ச்சி பெற்றாய்

 

பாரதியாம் உந்தனைக் குழந்தையாய் அந்நாளில்

   பெற்றவள்லட் சுமியம் மாள்தான்

தீரமுள நல்லதோர் தேசியக் கவிஞனாய்

   தோற்றுவித்தாள் நிவேதி தாவே

ஆரமாம் தங்கத்தை தேசபக்தி என்றிடும்

   அனலிலே சுட்டெ டுத்தாள்

ஈரமுள புதைகுழியில் எழுந்திடும் நெருப்பென

   எழுச்சிமிகு கவிஞ னானாய்

 

இருவேறு வழிகளில் சென்றதால் அல்லவோ

   இலக்கினை அடைவ தற்கு

பெருமளவில் தாமதம் நேர்ந்ததுதீ விரவாதம்

   புகல்மித வாதம் என்றார்

இருஇரு பொறுமையாய் எனும்மித வாதியாய்

   இருந்திட்டார் கோகலேவே

ஒருபெரும் தீவிர வாதிகள் தலைவனாய்

   உயர்திலகர் தலைமை ஏற்றார்

 

திகழ்கின்ற காந்தமது இரும்பினை இழுத்தல்போல

   திலகருனை ஈர்த்துக் கொண்டார்

அகழ்ந்திட்டார் மிதவாதச் சோம்பலினை நாடெல்லாம்

   ஆர்த்தெழுந்து நிற்கச் செய்தார்

இகலறவே அவருக்கோர் போர்முரசாய் முழங்கிடவே

   இந்தியா என்னும் பேரில்

தகவுளதோர் இதழதனை தழலெனவே கொணர்ந்திடாய்

   தமிழகமே பற்றச் செய்தாய்

 

பாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சிகளிலும் பக்தித் தொடர்களை எழுதியுள்ளார்.

சிறந்த சமயச் சொற்பொழிவாளர்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

பாரதி போற்றி ஆயிரம் – 59 (Post No.4792)

Bharatiyar Drama- Directed by Raman, acted by Ramanan. Picture posted by N Seshadry

Date: 28 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-48 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4792

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

  பாடல்கள் 412 முதல் 420

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி

1 முதல் 9 வரை உள்ள பாடல்கள்

இமயம் எனது சிரம்

குமரி எனது பதம்

     அமைந்திருக்கும் மாநிலங்கள்

     யாவுமெனது மேனி

 

கமழும் நறும ணங்கள்

சிமயம் தொடுவளங்கள்

    எமதுநாட்டில் யாவுமுண்டு

    எனநிறைந்த நலங்கள்

 

சமரில் தீட்டும் வீரம்

குமரி மூட்டும் காதல்

      சமமெனவே  இரண்டினிலும்

     சாதனைகள் மேவும்

 

எந்தன் பெருமை பாட

சிந்தை மகிழ ஆட

      எந்தநாளும் எனைதுதிக்கும்

      மைந்தருண்டு சூட

 

எண்ணற்ற பெருமைகள் எனக்கி ருந்தும்

   எவருமே அந்நாளில் உணர வில்லை

திண்ணமாய் பண்புகள் நிறைந்தி ருந்தும்

   திசைக்கொருவ ரானதால் பயனு மில்லை

அண்டைநா டுகளாக அருகி ருந்தும்

   அவர்க்குளே பகைமையே வளர்த்தி ருந்தாத்

கண்டவர்க் கெந்நாளும் இடம்கொ டுத்து

   கண்போன்ற தன்னவரை விலக்கி வைத்தார்

 

வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்த்தால்

   வாழ்ந்திட்ட காலமெலாம் எந்தன் மக்கள்

நிரந்தரச் சமாதானம் என்ப தேற்று

    நிம்மதியாய் ஒருபோதும் வாழ்ந்த தில்லை

தரமற்ற மிகயெளிய கார ணத்தும்

   தமக்குள்ளே மிகக்கொடிய சண்டை யிட்டு

உரம்வாய்ந்த தமதுடலை மண்ணில் சாய்த்தார்

   உயிர்காக்கும் ஒற்றுமையின் வேர றுத்தார்!

 

அத்தகைய வீரத்தை அந்நாள் வந்தே

    அள்ளியே சென்றமுக மதியர் மீது

மொத்தமாய் செலுத்தியே எதிர்த்தி ருந்தால்

    மொகலாய சாம்ராஜ்யம் இங்கே ஏது?

எத்தர்களாய் வெள்ளையர்கள் வந்த போது

   இவர்களே கனிகளென நாட்டைத் தந்தார்

சித்தமதில் உறுதியுடன் எதிர்த்த பேரோ

    சிலரென்ப தாலவரும் அடிமை யானார்

 

எப்படியோ ஆங்கிலேயன் வந்த தாலே

    என்வடிவம் ஒன்றாகி எழுந்து நின்றேன்

அப்பொழுது வரைதுண்டு துண்டா கத்தான்

    அங்கங்கள் ஒடிபட்டு வீழ்ந்தி ருந்தேன்

எப்படிநான் சொல்லிடுவேன் என்மைந் தர்தாம்

    ஏதோவொரு அந்நியனால் எனையு ணர்ந்தார்

இப்பொழு தேனுமிந்த அன்னை தன்னை

    ஏற்றாரே எனயிதயம் நெகிழ்ந்தேன் யானே!

 

தேசம் அடிமைப் பட்டதாலே – இங்கே

    தேசிய உணர்வு எழுந்ததுவே

பாசம் அகன்ற நெஞ்சமெனும் – அந்தப்

    பாறை களில்நீர் சுரந்ததுவே

நாசம் புரியும் அந்நியரை – இந்த

    நாட்டினர் யாவும் ஒன்றாகி

நேசம் மிகுந்து இணைந்திட்டால் – நாம்

    நிச்சயம் வெல்வோம் என்றுணர்ந்தார்

 

பாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்

 

Picture posted by Manion cgs from Bharatiyar Drama

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சிகளிலும் பக்தித் தொடர்களை எழுதியுள்ளார்.

சிறந்த சமயச் சொற்பொழிவாளர்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

பாரதி போற்றி ஆயிரம் – 58 (Post No.4779)

Date: 24 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-35 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4779

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 58

  பாடல்கள் 403 முதல் 411

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

37 முதல் 45 வரை உள்ள பாடல்கள்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – எனும்

சந்தம்நி றைந்தஉன் பாவினிலே

முந்தை சிறப்புகள் யாவையுமே – இங்குத்

தந்துவிட் டாயந்த நாளிலினிலே

 ஆயிர மாயிரம் பாடல்களில் – தரும்

ஆயிரம் கால வரலாற்றை

நேயமு டனொரு பாடலிலே – எந்த

நாளிலும் எங்குமே பாடவைத்தாய்

வள்ளுவ னின்குரல் உலகினுக்கே – எனும்

வாக்குஇந் நாளினில் பலித்ததுவே

தெள்ளிய மொழிகள் அத்தனையும் – அதைத்

தேர்ந்தெடுத் தேதம தாக்கினவே

கம்பனை எத்தனைக் கோணங்களில் – நீயும்

கண்டுகண் டுக்கவி பாடிவைத்தாய்

தம்முன்ன வர்நலம் போற்றுவதே – நல்ல

தமிழ்கவி பண்பென உணரவைத்தாய்

 

தமிழ்மொழி யின்வளம் கம்பனிடம் – உயர்

தமிழ்நாட் டின்வளம் இளங்கோவில்

தமிழ்ப்பண் பாடெனல் வள்ளுவமே – என

தான்தொகுத் தேயவரைப் பாடிவைத்தாய்

 

எண்ணற்ற புலவர்கள் வந்தாலும் – இனி

எவ்விதம் பாடல்கள் தந்தாலும்

திண்ணமு டன்இந்த ஒருபாடலே – எந்தன்

திறமுரைக்க என்றும் போதுமப்பா

 

பிறநாட்டு நல்லறிஞர் நூல்கள் – பாரதி

   பேணியுன் விருப்பம்போல் பெயர்த்திங்கு தந்தார்

திறமான நம்புலமை தன்னை – பிறர்

   தேடிவந்தே போற்றி ஏற்றிடச் செய்தார்

இருதலைக் கொள்ளிநிலை மாற்றி – நீ

    இயம்பிய வண்ணமே நயமுடன் இணைத்தார்

பெருகிடும் விஞ்ஞான வளர்ச்சி – காண

   மறுகணம் கலைச்சொற்கள் படைத்ததைக் கொணர்ந்தார்

 

மெல்லத் தமிழினி சாகும் – என்று

   மனம்நொந்த மைந்தா பாரதி கேளாய்

வெல்லற் கரியதிந்தத் தமிழே – என

   வேற்றுமொழி யார்புறம் போயினர் இந்நாள்

சொல்லில் அடங்காமுன் னேற்றம் – நீ

   சொல்லிய படியிங்கு தோன்றியது காண்பாய்

நல்லதோர் நிலையிங்கு பெற்றேன் – இந்த

   நானிலம் உள்ளவரை நானிங்கு வாழ்வேன்

 

வாழிய பாரதி வாழிய பாரதி

வாழிய வாழியவே!

ஆழியி னும்மிக  ஆழம்மி குந்தவுன்

அருங்கவி வாழியவே!

ஏழிசை யின்சுவை  ஈடிலை இதற்கென

இசைபெற வாழியவே!

ஊழித னில்புவி மூழ்கிய போதிலும்

உன்புகழ் வாழியவே!

 

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி என்ற முதல் அத்தியாயம் முற்றும்

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.

பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****