பாரதி போற்றி ஆயிரம் – 57 (Post No.4772)

Picture from Bharatiyar drama; Isaikkuyil Ramanan as Bharati (sent by a Facebook friend)

Date: 22 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-37 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4772

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

  பாடல்கள் 396 முதல் 402

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண் ண  ன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

30 முதல் 36 வரை உள்ள பாடல்கள்

எளியநடை எளிய பதம் எல்லார்க்கும் எளியசந்த

    என்பதுவே எனக்களிக்கும் சேவை – அதுவேம்

    என்னைவாழ வைக்கயிங்கு தேவை – எனவே

எளியவர்கள் கிராமங்களில் தெளிவுறவே பாடுகின்ற

   இளமையுள்ள பலவடிவில் பாவை – எழுதி

   அணிவித்தாய் அரியகவிக் கோவை

 

 

இருண்டதுயென் வாழ்க்கையென ஏக்கமுற்று வாடுகையில்

    ஏற்றிவைத்தாய் அரியகவித் தீபம் – அதனால்

    தீர்ந்த்துவே எம்தமிழர் தாபம் – உந்தன்

பெருமைதனை உணர்ந்தெவரும் போற்றிநின்ற போதில்கவிச்

    செருக்குற்றோர் கொண்டனரே கோபம் – மக்கள்

     வெறுத்ததினால் பதுங்கினரே பாபம்

 

 

எத்தனையோ தொழிலிருந்தும் பத்திரிகைப் பணியிருந்தும்

    எமக்குத் தொ ழில்கவிதை ஒன்றே  – கவிதை

    எழுதாநாள் பிறவாநாள் என்றே – வாழ்வில்

நித்தமிங்கு வறுமையினால் செத்துச் செத்துப்  பிழைத்தபோதும்

    நீடுமுயிர் தமிழால்தான் நன்றே – என்று

    நிலை பெற்றாய் காலத்தை வென்றே

 

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

   இனிதாவது எங்கும் காணோம் – என

பாமரனோர் மொழிசொன்னால் எம்மொழிநீ

    அறிவாயென பழித்தல் கூடும்

தேமதுரத் தமிழுடனே ஆங்கிலமா

     ரியமிந்தி திகழும் வங்கம் – மேலும்

நேமமுறப் பிரஞ்சினையும் நன்குணர்ந்து

     ஆய்ந்தன்றோ நீயும் சொன்னாய்

 

 

பாரதியார் தமிழ்மொழியின் பெருமைகள்

   விரிவாகப் பாடவில்லை – என

சாரமிலா ஓர்குறையை சற்றேனும் தயங்காமல்

    சொல்வா ருண்டு

சாரதியாய் கவித்தேரை நீசெலுத்த

   நானமர்ந்து சென்ற போதில் – இந்தப்

பாரதனில் உன்னாலே ஒலித்ததெல்லாம் தூய

   தமிழ்ப்பாடல் தானே?

 

 

பதவுரையோ தெளிவுரையோ விரிவாக

   எழுதியிங்குப்  பொருளு ரைக்க – என்றும்

பண்டிதர்கள் தேவையில்லை என்றிடவே

   பாமரரும் பாடச் செய்தாய்

விதவிதமாய் பொருத்தமிலா வருணனைகள்

    சொற்களிலே வித்தைகாட்டல் – எனும்

விவகாரம் ஏதுமின்றி கவிதைகளை

    வடித்தென்னை வாழ்வித் தாயே!

 

 

உதவாத பாறைகளை உடைத்தாங்குக்

    கவிவளர்த்த உழவன் நீயே – வாழ்வில்

நிதமிங்குச் சந்தமெனும் நிறம்பலவாய்

   உடையளித்த நெய்வோன் நீயே!

சதமெனவே மொழியதனில் பலவடிவில்

    நகைசெய்த தட்டான் நீயே – என்றும்

வதங்கலின்றிப் பொருள்தந்து இதயங்களைப்

    பெற்றிட்ட வணிகன் நீயே!

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:


கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

 

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

 

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.

 

சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.

 

பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

 

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

 

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

 

இவருக்கு நமது நன்றி.

 

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

பாரதி போற்றி ஆயிரம் – 56 (Post No.4765)

Date: 20 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-56 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4765

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 387 முதல் 395

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

21 முதல் 29 வரை உள்ள பாடல்கள்

பிரளயம் மீண்டும் நேர்ந்ததுவே – வெற்றுப்

   புலவர்க ளாலது நிகழ்ந்ததுவே

பொருள்பெற வேண்டித் தனவந்தரைப் – பல

   பொய்யுரை கூறிப் புகழ்ந்தனரே

மருள்போல் பலதல வரலாற்றை –

   மனம்போ னபடிக் கிறுக்கினரே

பெரும்பிர ளயமெனல் அதுவேதான் – என்னைப்

    புதைத்திட முயன்றவர் அவரேதான்

 

ஆங்கில மோகம் தலைக்கேறி – அவர்

   ஆடிய ஆட்டம் என்சொல்வேன்?

ஆங்கிலம் பேசலே  பயனென்று – அவர்க்கு

   அடிவரு டிகளாய் மாறினரே

தீங்கெனத் தமிழைப் புறக்கணித்தே – பெற்ற

   தாயெந்தன் வயிற்றில் மிதித்தனரே

ஆங்கந்தப் பிரளய வெள்ளம்தான் – எனை

   அமிழ்ந்தே முழுகிடச் செய்ததுவே

 

முன்னாளில் பொங்கிய பிரளயம் தன்னிலே

   முடிந்ததோ எந்தன் வாழ்வு

என்றுநான் தவிக்கையில் புவிமன்னன் பாண்டியன்

   எனையிங்கு மீட்டுத் தந்தான்

அன்றென்னைக் காத்திட பாண்டியன் போலவே

   இன்றென்னைக் காப்ப வர்யார்?

என்றுநான் தவிக்கையில் கவிமன்னா பாரதி

   எனைக்காக்கத் தோன்றி வந்தாய்

 

பாரதிநீ இல்லையேல் பாரினில் மீண்டும் நான்

   பிழைத்திடல் என்ப தேது?

பாரதிநீ இல்லையேல் பண்டிதரை விட்டென்னைப்

   பலரறிய மீட்பார் ஏது?

பாரதிநீ இல்லையேல் பழமைக்கும் புதுமைக்கும்

   பாலமிங்கு அமைதல் ஏது?

பாரதிநீ இல்லையேல் பாரத எழுச்சிக்குப்

   பாட்டிசைப்போர் தமிழில் ஏது?

 

ஆயிரத் தெண்ணூற்றி  எண்பத்தி ரண்டினில்

   ஆனநற் கார்த்திகை மாதம் – தனில்

யாரும் வியந்திட மூலநட் சத்திரம்

   ஓங்கிய தோர்நல்ல நேரம்

தாயினைப் பிரளய வெள்ளத்தில் மூழ்காமல்

   தடுத்திடு வேனென துடித்தே – கவித்

தணலென வேயிந்தப் புவியனைத் தும்போற்றத்

   தோன்றிவந்த தாய்குரல் கொடுத்தே

 

சின்னச்சா மிஅய்யர் லட்சுமி யம்மாளும்

   செய்தநற் புண்ணியத் தாலே – பெருஞ்

செல்வமில் லெனினும் கல்விவ ளமுள்ள

  செம்மைக்கு டும்பத்தில் தோன்றி

என்றுமென் வடிவெனும் சுப்பிரமணியன்

   என்னும் பெயர்தனைப் படைத்தே – புகழ்

எட்டுத் திசையிலும் எட்டிட வேவந்து

   எட்டய புரத்தில் பிறந்தாய்

 

வெள்ளை மலர்வாணி பிள்ளைப் பிராயத்தில்

   உள்ளம் புகுந்திட்ட தாலே – நெஞ்சை

உள்ளும் வகைப்பது வெள்ளமெனக் கவி

   அள்ளியள் ளித்தந்த தாலே

துள்ளும் பதினொரு வயதினில் சபைதனில்

   எள்ளப் புகுந்திட்ட போதில் – மனம்

விள்ளும் வகைக்கவி தந்து பாரதியாம்

   தெள்ளு தமிழ்ப்பெயர் கொண்டாய்

 

பெற்றவர் மறைந்திடத் தாய்மாமன் இல்லத்தில்

   புகழ்காசி தனில்வாழ்ந்த போதும் – அதன்

பின்னரெட் டயபுரம் மதுரை சென்னையென

   பல்வேறு இடம்சென்ற போதும்

உற்றவர் தமைவிட்டுப் பாண்டியில் மறைவாக

   உறைகின்ற நிலைவந்த போதும் – எந்தன்

உடலெங்கு அலைந்தாலும் உயிரென்றும் தமிழென்று

   உறைந்ததி னால்நீயும் வாழ்ந்தாய்

 

எவருக்கும் புரியாமல் எழுதுவதே கவிதையென்று

   புலவரெலாம் நினைத்திருந்த காலம் – அவரை

   விலகவைத்த துனதுகவிக் கோலம் – எங்கே

தவறுகண்ட போதும்நெஞ்சு பொறுக்கவில்லை என்று நீயும்

   தவித்ததெல்லாம் நற்கவிஞன் சீலம் – கவிதைத்

   தடம்துலங்க நீயமைத்த பாலம்

 

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி.

 

பாரதியை வாசிக்கிறேன் என்று சொல்வதை விட பாரதியை சுவாசிக்கிறேன் என்று சொல்லும் எண்ணற்ற அன்பர்களில் தன்னையும் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்த அரும் கவிஞர் பாரதியை வழிகாட்டியாகக் கொண்டு கவிதை புனையத் தொடங்கியவர்.

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.

இவர் சொற்பொழிவு நிகழ்த்தாத தலங்களே இல்லை என்று சொல்லுமளவு பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

பாரதி போற்றி ஆயிரம் – 55 (Post No.4757)

Date: 18 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-43 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4757

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 55

  பாடல்கள் 377 முதல் 386

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

11 முதல் 20 வரை உள்ள பாடல்கள்

 

ஒல்காப் புகழ்நிறை தொல்காப்பியன் – தந்த

ஒப்பிலா பொருளிலக் கணம்போல

நல்கிய வர்இந்த நானிலத்தில் – எந்த

நாளிலும் எங்குமே இருந்ததில்லை

 

சரித்திரம் தமிழில் இல்லையென்றே – இங்கு

சாற்றிடு வோர்சங்க இலக்கியத்தை

செறிவுற ஆய்ந்தால் போதுமன்றோ – புறம்

செய்யவர லாற்றினைக் கூறுமன்றோ?

 

குறிஞ்சி முல்லை மருதமுடன் – நதி

கூடும் கடல்சார் நெய்தலுடன்

எரிக்கும் பாலை நிலத்தினிலும் – அகம்

எரிக்கும் காதல் கவிசொன்னார்

 

வான்புகழ் தனக்கென வடித்திட்ட – அந்த

வள்ளுவன் குறளுக்கு இணையேது?

நான்மகிழ் நாலடி யார்முதலாய்  அன்று

நவில்கீழ்க் கணக்கிற்கு ஈடேது?

 

எத்தனை அணிகளை யான்பெறினும் – சேரன்

இளங்கோ சிலம்பினுக்கு ஒப்பேது?

அத்துடன் இரட்டைக் காப்பியமாய் – சாத்தனார்

அளித்த மேகலைபோல் அழகேது?

 

நமதரும் சைவத் திருமுறைகள் – மால்

நலமுரை திவ்வியப் பிரபந்தங்கள்

சமயமெனும் நதிகள் பலவாயினும் – அலை

சங்கமித் தல்தமிழ்ச் சமுத்திரத்தில்

 

கம்பனாய் வந்ததே நானல்லவா? – அவன்

காவியமே எந்தன் வடிவல்லவா?

செம்மையாய் ஓர்கவிதை படித்திடினும் – எந்தன்

சிறப்பனைத்தும் அதில் தோன்றுமன்றோ?

 

இறைவனின் முக்கண்கள் என்றிடவே – சேக்கிழார்

இயம்பிய பெரிய புராணமோடு

நிறைவான கந்த புராணமுடன் – புகழ்

நிலவுதிரு விளையாடல் யான் கொண்டேன்

 

ஒட்டக்கூத் தன்தந்த உலாக்களில் – மனம்

ஒன்றிநான் நாடெங்கும் வலம்வந்தேன்

திட்பமுடன் அருணகிரி பாடித்தந்த – அரிய

திருப்புகழ் சந்தத்தில் நடம்புரிந்தேன்

 

வெண்பாவில் புகழேந்தி காவியமுடன் – உயர்

வில்லியின் பாரதம் தனைப்பெற்றேன்

பண்பாக செயங்கொண்டான் குமரகுருபரன் – இன்னும்

பல்புலவர் பாடலிலே மகிழ்ந்திருந்தேன்

 

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி.

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் :

பாரதியை வாசிக்கிறேன் என்று சொல்வதை விட பாரதியை சுவாசிக்கிறேன் என்று சொல்லும் எண்ணற்ற அன்பர்களில் தன்னையும் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் இந்த அரும் கவிஞர் பாரதியை வழிகாட்டியாகக் கொண்டு கவிதை புனையத் தொடங்கியவர்.

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.

சென்னை தொலைக்காட்சிக்காக நரகாசுரன், ஜெயா டி.விக்காக இந்திரஜித், கால பைரவர், சாமியே சரணம் ஐயப்பா, பக்த விஜயம், விஜய் டி.விக்காக பைரவி, சன் டி.வி.க்காக விநாயகர் விஜயம், ஆதி பராசக்தி ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை எழுதியவர் இவர்.

இவர் சொற்பொழிவு நிகழ்த்தாத தலங்களே இல்லை என்று சொல்லுமளவு பெரும்பாலான தலங்களில் சமய சம்பந்தமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 54 (Post No.4753)

Date: 17 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-00 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4753

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 54

  பாடல்கள் 367 முதல் 376

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

தமிழ்த்தாய் பார்வையில் பாரதி, பாரதமாதா பார்வையில் பாரதி, பராசக்தி பார்வையில் பாரதி, பாஞ்சாலி பார்வையில் பாரதி, கண்னன் பார்வையில் பாரதி, குயில் பார்வையில் பாரதி, புதுமைப்பெண் பார்வையில் பாரதி, பாப்பா பார்வையில் பாரதி, சித்தர் பார்வையில் பாரதி, பாரதி பார்வையில் பாரதி ஆகிய பத்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தக் குறுங் காவிய நூல்.

 முதல் அத்தியாயம்: தமிழ்த்தாய் பார்வையில் பாரதி

செந்தமிழ் நந்தமிழ் பைந்தமிழ் வண்டமிழ்

   தண்டமிழ் எனவே புலவோர்கள்

சிந்தைதான் மகிழ்ந்திடச் சந்ததம் எந்தன்மேல்

   சிந்துகள் பாடியே மகிழ்ந்தார்கள்

வந்தனை செய்தெனை அன்னையென் பாரிளமை

   மாறாத கன்னி என்றுரைப்பார்

எந்தன்மேல் கொண்டுள்ள அன்பினால் சொல்வதால்

   யாவையும் சமமாய் ஏற்றுவந்தேன்

 

என்றுயான் தோன்றினேன் எங்குதான் தோன்றினேன்

   என்பதை எவரும் அறிந்ததில்லை

இன்றதைச் சொல்லவே எண்ணற்ற ஆய்வுகள்

   ஏற்றுளோர் கூட உணர்ந்ததில்லை

அன்பினால் உரைத்திடும் முதற்சங்க வரலாற்றை

   ஆய்வாளர் என்போர் ஏற்கவில்லை

முன்னவர் மொழிந்தகல் தோன்றிமண் தோன்றாத

   முன்பிறந் தேனதில் மாற்றமில்லை

 

கல்லுடனே மண்கூடத் தோன்றாத காலத்தே

   கழறுமொழி தோன்ற லுண்டோ?

சொல்லுதற்கே பொருத்தமில்லை என்றுரைப்போர் சற்றதனை

   சிந்தித்தால் பொருள்வி ளங்கும்

எல்லையில்லா புவியதனில் மலைகள்தான் முதன்முதலில்

   எங்கணுமே தோன்றிற் றென்பார்

செல்லரித்தல் போலவைதான் தேய்ந்துதேய்ந் தல்லவோ

   செய்யமண்ணாய் ஆன தென்பார்

 

கல்தோன்றி மண்தோன்றாக் காலமெனில் கல்மண்ணாய்க்

   கரைந்தயிடைக் கால மன்றோ?

சொல்லுதற் கரிதான அந்நாளில் மனிதகுலம்

   தோன்றியது வரலா றன்றோ?

நல்லதொரு மொழியாக நாவினிக்கப் பேசிடவே

   நானன்னாள் பிறந்தே னன்றோ?

வல்லவர்கள் பலகாலும் ஆய்வுபல செய்தன்றோ

   வன்மையுடன் தேர்ந்து ரைத்தார்

 

இவ்வகையில் ஆய்ந்து பார்த்தால் – அந்நாள்

   இவ்வுலகில் தோன்றி வந்த

செவ்விய முதன்மை மொழியே – இந்த

   செய்யதமிழ் மொழியாம் யானே!

எவ்வகையில் பார்த்த போதும்  – இதனை

   எவருமே மறுத்தற் கில்லை

உவ்விடக் கதிரவன் போல் – அன்றோ

   உயர்வினைப் பெற்றே னன்றோ?

 

அகத்திய முனிவ நென்பான் – எனக்கு

   அரியநல் இலக்க ணத்தை

அகமெலாம் நிறைந்து போற்ற – அன்று

   ஆக்கினான் என்று ரைப்பார்

தகவறு நூல்க ளெல்லாம் – புலவோர்

   சங்கங்கள் அமைத்துத் தந்தார்

இகத்தினில் எனக்கு ஈடாய் – இயம்ப

   எவருமில்லை என்று வாழ்ந்தேன்

 

பிரளயம் பிரளயம் பிரளயமே – அதில்

   பூமியின் ஒருபகுதி தாழ்ந்ததுவே!

தரணியில் லெமூரியா கண்டமென்றே – சொல்லும்

   தனிப்பெரும் தென்குமரி மூழ்கியதே!

மரணத்தின் பிடியிலே உயிர்களெல்லாம் – சென்று

   மடிகையில் நூல்களை யார்காப்பார்?

பெருநிதி யாய்வந்த இலக்கியங்கள் – அந்தப்

   பிரளய வெள்ளத்தில் அழிந்தனவே!

 

என் செய்வேன் எவ்விதம் வாழ்ந்திடுவேன் – இனி

   எவ்விதம் தரணியில் நிலைபெறுவேன்?

என் தேகம் எனிலெந்தன் நூல்களன்றோ? – அவை

   எல்லாமே போயினுயிர் நிலைப்பதேது?

என்பெயர் சொல்லவும் யாருமின்றி – உலகில்

   எனக்கென அடையாளம் ஏதுமின்றி

என்னுயிர் அடங்கியே வீழுவேனோ? – அன்றி

   எவ்வித மேனுமுயிர் வாழுவேனோ?

 

காலமே எனையழிக்க நினைத்த போதும்

   காவலன் பாண்டியன் காத்து நின்றான்

சீலமாய் தென்மதுரை சென்று சேர்ந்தான்

   சீருடன் தமிழ்ச்சங்கம் மீண்டும் கண்டேன்

வாலறிவன் அருளாலே கடலை வென்றான்

   வடிம்பலம்ப நின்றபாண் டியனாய் நின்றான்

சாலவே அவனாலே எழுச்சி பெற்றேன்

   சங்கயிலக் கியங்களால் உயர்வு பெற்றேன்

 

நக்கீரன் கபிலனொடு பரண னென்றே

   நற்புலவர் என்மைந்தர் பலரும் வந்தார்

முக்கண்ணன் கவிதையாய் இருந்திட் டாலும்

   மொழிந்தது குற்றமெனில் துணிந்து சொன்னார்

எக்காலும் ஓய்வின்றி நடந்து சென்று

   எங்குமுள வாழ்க்கையினைப் பதிவு செய்தார்

இக்காலம் வரையந்த சங்க நூல்கள்

   ஏற்றத்தால் நானுயர்ந்து வாழ்கின் றேனே..

       

  • பாரதிப் பத்துப்பாட்டு தொடரும்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் 

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, அவரே தொலைபேசியில் 5-2-2018 அன்று தொடர்பு கொண்டு பாரதி போற்றி ஆயிரம் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார். அத்துடன் பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதியும் தந்தார். அவருக்கு எமது நன்றி.

 

பாரதி போற்றி ஆயிரம் – 53 (Post No.4749)

Date: 16 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5-49 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4749

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

  பாடல்கள் 358 முதல் 366

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

பாரதியின் மொழிப்பற்று

பாகாக இனிக்கின்ற பாக்கள் தந்த

   பாரதியின் கவித்தொகுப்பில் நுழைந்தே யானும்

சாகாத தெய்வமொழி தமிழே என்று

   சாற்றுதற்கு வாய்ப்பினையே உவந்து ஏற்றேன்

ஆகா!இத் தமிழ்ப்பாக்கள் அனைத்தும் என்றும்

   அழியாத படைப்பென்றே அதன்சீர் போற்றி

மாகாளி பராசக்தி அருளை வேண்டி

   மனமுவந்து இசைக்கின்றேன் மகிழ்ந்து கேட்பீர்!

 

வீடுதோறும் நூலகமும் இருத்தல் வேண்டும்

  வீடுதோறும் கலைக்கூடம் அமைத்தல் வேண்டும்

நாடுமுற்றும் மொழிப்பற்று வளர்ந்தே யோங்க

   நகரெங்கும் பள்ளிகளும் பெருக வேண்டும்

நாடுகின்ற தொழிலாலே வளமை யேற்க

   நமக்குவேண்டும் மொழிப்பற்று என்று கூறி

பாடுகின்ற பாக்களிலே உணர்ச்சி யூட்டி

   பக்குவமாய் பாரதியும் இசைக்கக் கேட்டோம்

 

 

மொழிப் பற்று தெய்வபக்தி தேசப்பற்று

   முப்பற்றும் பாரதியார் முழங்கக் கண்டோம்

மொழிகளிலே முத்திறத்தைச் சாற்று பான்மை

   முத்தமிழுக் கீடில்லை புவியி லெங்கும்

எழிலாகப் பழங்கதைகள் நித்த நித்தம்

   இயம்புவதால் பயனில்லை! வீணே நேரம்

அழியாத புகழ்நாட்டும் புதுமை நூல்கள்

   அருந்தமிழில் இயற்றிடவே வழியுங் கண்டோம்.

 

அமிழ்தமென அருந்தமிழில் விருந்து வைத்தே

   அனைவரையும் சுவைக்கவைத்த கவிஞர் ஏறே!

தமிழேதான் உயிர்மூச்சாய் ஏற்கச் செய்து

   தாய்நாட்டை உயர்நாடாய் போற்றச் செய்ய

இமிழ்கடல்சூழ் உலகமெலாம் தமிழே ஓங்க

   எந்நாளுங் கவிபாடிப் பாடுபட்ட

தமிழகத்தின் தீரனேஉன் தொண்டு வாழ்க!

   தீந்தமிழின் மொழிப்பற்றை வளர்த்தாய் போற்றி!

 

அடுத்தடுத்து துன்பந்தான் அடைந்திட்டாலும்

   அதற்கஞ்சா வேங்கைபா ரதியே யன்றோ!

எடுத்திட்ட எழுதுகோலால் எவரும் போற்ற

   ஏடுதனில் கவியாறே ஓடக் கண்டோம்

விடுத்திட்டார் கவிக்கணையை பகைவர் மீது

   விழிப்புணர்வை நம்நெஞ்சில் பாயச் செய்தார்

கொடுத்த அவர் பாட்டடையின் தேனைத் துய்த்து

   கிளர்ந்தெங்கும் தமிழ் முழக்கம் கேட்கச் செய்வோம்!

 

ஈனமுள எண்ணமெலாம் நீங்கி மாந்தர்

   இன்பநிலை எய்திட நல் வழியைக் காட்டி

கானயிசை ஏழ்கடலின் உள்ளும் வீசக்

   கனித்தமிழ்த்தே னிசைத்த எம்பா ரதியே வாழ்க!

வானார்ந்த பொதியின்கண் வளர்ந்து செல்வ

   வளமையெலாம் பெற்றுயர்ந்த தமிழின் மாண்பை

ஆனாத நூற்கடலை, வியந்து போற்றும்

   அருமைமிகு பாரதியின் திறமே வெல்க!

 

மனத்தினிலே வாய்மைதான் தோன்றிவிட்டால்

   மணக்கின்ற சொல்லைத்தான் உதிர்ப்போ மன்றோ!

புனிதமிகு பாரதியின் பிறப்பைக் காணப்

   புரிந்ததுவோ அருந்தவமோ பார தந்தான்.

புனலினது பெருக்கைப்போல் உணர்ச்சி வெள்ளம்

   புவியினிலே பாரதியின் பாட்டி லுண்டு

இனிதுவந்து தமிழமுதைச் சுவைத்து யாமும்

   இங்கமரர் சிறப்பினையே பாடக் கேட்டோம்!

 

எண்ணத்தில் தூய்மையுடன் வாழ்த்துக் காட்டி

   இணையில்லா மொழிப்பற்றை நமக்கு ஊட்டி

பண்ணிசைக்கும் யாழைப்போல் சிந்து பாடி

   பாரதத்தின் விடுதலைக்கே உணர்வை யூட்டி

மண்ணகத்தில் பக்திநெறி தழைக்கச் செய்து

   மாத்தொண்டு புரிந்துவந்த கவிஞர் வாழ்க

அண்ணலுக்கும் ஆண்டாண்டு விழாவெ டுத்து

   அகிலமெங்கும் அவர்பெருமை பாடு கின்றோம்.

 

பத்ரையின் மாற்றொத்த பொன்னைப் போன்ற

   பாரதியின் பாநயத்தை இன்னுஞ் சொல்ல

முத்தனைய கவிகளுமே எனக்குப் பின்னே

   முகிழ்த்திடவே காத்திருக்க யாமும் கண்டோம்!

தித்திக்கும் தமிழ்மொழியின் மாண்பைக் கண்டோம்

   திகட்டாமல் சுவைத்திடவே உங்க ளைப்போல்

சித்தமுடன் செவிசாய்க்க விரும்பு கின்றேன்

   சபையோரே! விடை தருவீர் வணக்கம்! நன்றி!

தொகுப்பாளர் குறிப்பு:
எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபத்தில் 11-12-2001-இல் கலைமாமணி விக்ரமன் தலைமையில் நடந்த கவியரங்கத்தில் அருட்கவிஞர் காசி பாடியது.

மகாகவி பாரதி அந்தாதி என்ற நூலின் இறுதியில் இந்தப் பாடல் உள்ளது. நூலின் விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம். 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் மகாகவி பாரதி அந்தாதி என்ற நூலை இவர் இயற்றியுள்ளார்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை

****

பாரதி போற்றி ஆயிரம் – 52 (Post No.4745)

Date: 15 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-21 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4745

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 351 முதல் 357

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி இறுதி அத்தியாயம் மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கத் தொண்டு பற்றிய பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

விடுதலைக் குயில் என்ற அத்தியாயத்தில் உள்ள நான்கு பாடல்கள்

 

 

விடுதலைக் குயில்

 

நடத்தினார் வாழ்க்கை பாரதியார் – அவரும்

   வாழ்வாங் குவாழ யாம்கண்டோம்!

அடர்ந்த தாய்மொழிப் பார்வையொன்று – தேசிய

   ஒருமைப் பாடு இரண்டாகும்!

படர்ந்த சமூகப் பார்வைமூன்றாம் – தெளிந்த

   உலகப் பார்வை நான்காகும்!

தொடர்ந்து நான்கின் அடிப்படையில் – கவிதை

   தொகுப்புந் தந்தார் பாரதியார்

 

பாரதி தமிழால் உயர்ந்தார்காண் – தமிழும்

   பாரதி யாலே உயர்ந்ததுகாண்!

சீருறு தொனியால் கவியியற்ற – அதனால்

   செந்தமிழ் இசையும் ஓங்குதுகாண்!

பாரதி பாடிய இசைகேட்டு – மகிழ்ந்து

   பாரத மணிக்கொடி பறக்குதுகாண்

பாரதம் பெற்ற மாக்கவிஞர் – புவிக்கு

   பரப்பினர் பார்வை அறிவியலை

 

அறிவியல் ஆக்கக் கூட்டமைப்பை – நல்கி

   புதுநெறி காட்டிய கவிஞானி!

தறியில் நெய்த ஆடைபோலப் – புதிய

   தமிழகம் அமைத்த முன்னோடி!

பொறியியல் நோக்கின் பரந்தமனம் – பாரதி

   பல்துறை தத்துவ மெய்ஞ்ஞானி!

நறிய தேனின் சுவைத் தொகுப்பு – பாரதி

   நல்கிய கவிதை புசித்திடுவோம்!

 

புசிப்போம் தீஞ்சுவை காவியத்தை – ஏற்போம்

   நாட்டு உணர்வும் மொழிப்பற்றும்!

நசித்து அடிமை அகற்றிடவே – புதிய

   உணர்ச்சி வெள்ளப் பெருக்கேற்போம்!

உசித மனதுடன் வாழ்வோங்கப் – பாரதி

   வழிநடைப் பயணம் உவந்தேற்போம்!

மசியலாய் விடுதலைக் குயாம்பெற்ற – விருந்தே

   பாஞ்சா லிசென்ற அரசவையாம்.

 

 

மகாகவி பாரதி அந்தாதி முற்றும்

 

மகாகவி பாரதி பிறந்த நாளில் அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்தொண்டு

(மூன்று பாடல்கள்)

இயற்றியவர் அருட்கவிஞர் அ.காசி

அனைத்திந் தியத்தமிழ் எழுத்தாளர் – சங்கம்

   ஆண்டுதோறும் ஒருங்குகூடி

மனையகம் பாரதி வீடுசென்று – சற்றே

   மகிழ்ந்து கலந்து உறவாடி

புனைந்த பாரதி ஓவியங்கள் – பாரதி

   பெட்புறு வாழ்க்கைச் சம்பவங்கள்

அனைத்துங் கண்டு அஞ்சலித்து – பாரதி

   அவர்புகழ் பாடித் திளைப்பதுகாண்.

 

பேரறி வாளர் விக்கிரமன் – அணிக்கு

   பீடுறு தலைமை தாமேற்கப்

பாரதி பிறந்த நன்னாளில் – கூடிய

   பாவலர் கவிஞர் அனைவருமே

பூரண சுதந்திரம் வேண்டிநின்ற – பாரதி

    பாடிய பாக்களை முழக்கமிட்டு

ஊரகம் எட்டய புரத்தினிலே – தெருவெலாம்

   உலாவரும் காட்சி யாம்கண்டோம்

 

ஆன்ற உரிமை இராமலிங்கா – ஈடிலா

   அன்புத் தினகரன் தலைமையிலே

தேன்சுவைக் கவிஞர் எழுத்தாளர் – யாவரும்

   தீரன் பாரதி திறம்போற்றி

ஓங்கிய புகழ்மணி மண்டபத்தில் – பாரதி

   உருவத் திருவடிக் கீழமர்ந்து

பாங்குடன் இசைந்து அஞ்சலிக்கும் – காட்சி

   ஆண்டு ஓர்நாள் காணுகின்றோம்

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

 

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும். மகாகவி பாரதி அந்தாதி காப்பு மற்றும் 100 செய்யுள்களைக் கொண்டது. அந்தாதி விடுதலைக் குயில் அத்தியாயத்துடன் முற்றுப் பெற்றது.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

பாரதி போற்றி ஆயிரம் – 51 (Post No.4740)

Picture posted by Manion cgs; Isaikkavi Ramanan acting as Bharati

 

Date:14 FEBRUARY 2018

 

Time uploaded in London- 6-28 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4740

 

PICTURES ARE TAKEN from various sources.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 333 முதல் 350

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

பாரதிக்கு சிறப்பு என்ற அத்தியாயத்தில் உள்ள பதினெட்டு பாடல்கள்

 

பாரதிக்கு சிறப்பு

 

முதல்வர் தமிழக முதன்மையவர் .பி.

   இராம சாமி ரெட்டியாரே!

இதமாய்ப் பாரதி படைத்தவற்றி விசுவ

   இளவலி டமிருந் துபெற்றாரே!

பதிப்பு உரிமை அச்சேற்றி பாரதி

   படைப்பை வெளியிடும் தொண்டேற்றார்

உதித்த புரட்சிக் கவிஞர்சீர் மத்தியில்

   ஓங்கச் செய்தார் பெருந்தலைவர்!

 

பெருந்த லைவர் காமராசர் ஆவடி

   பெருவிழா மகாசபை நடத்தினார்காண்

திருவுடன் பாரதி நவின்றபாடல் அதுவே

   “தனியொரு வனுக்குநல் உணவிலையேல்

கருதிய செகத்தினை அழிப்போமே” – இதனைக்

   கூறி முழங்கினார் காமராசர்!

ஒருங்கிணை சமூகம் சமதர்மம் அமைக்க

   ஏகினார் ரஷியா சோவியத்து!

 

சோவியத் ரஷியா சென்றாரே அங்கண்

   பிரதமர் கோஜிஸன் வரவேற்றார்!

மேவிய ரஷியப் புரட்சிபற்றி பாரதி

   பாடிய பாடலைக் காமராசர்

கூவியே ஒலித்தார் ரஷியாவில் சபையோர்

   கொண்டனர் மகிழ்வு! போற்றினர்காண்

ஏவிய காமராஜர் தூண்டுதலால் பாரதி

   அஞ்சல் தலையும் எளிதேற்றோம்

 

எளிய கவியால் பாரதியை கலைஞர்

   கருணா நிதியும் போற்றினார்காண்!

தெளிந்த அரிமாக் கவிஞனவன் பாரதி

   தீரன் பெரிய மருதுபோன்றோன்!

ஒளிமிகு கவியணி இரசவாதி பாரதி

   யாப்பு அணியின் போர்க்கவிஞன்!

பளிங்குசால் பாரதியின் கவித்திறத்தான் அவனே

   அடலே றுகவியின் மன்னவனாம்.

 

மன்னவன் பாட்டின் தலைவனவன் பாரதி

   மகிமை வழியில் கவியியற்றி

நின்றவன் பாரதி தாசனென்போன் என்றே

   இருவரைப் போற்றினார் கலைஞருமே!

ஒன்றிய இருவர் வாழ்வாலே நாமும்

   வளமும் வாழ்வும் பெற்றோமே!

நன்றே பாரதி சிறப்போங்க நடந்தது

   உலகத் தமிழர் மாநாடு!

 

மகாநா டோங்க மாண்புமிகு அறிஞர்

   முதல்வர் அண்ணா பணியேற்றார்

மகாநாட் டையொட்டி சென்னைகடற் கரையிலே

   தமிழ்மகான் பலர்க்கு சிலைவைத்து

மகோற்சவம் சிறப்பாய் நடத்தினாரே! – அதிலே

   மகாகவி பாரதி சிலையேற்றார்!

மகாகவி பாரதிமுழு உருவச் சிலையை

   மாண்புடன் காண்கிறோம் என்றென்றும்!

 

என்றும் பாரதி நினைவோங்க எட்டய

   புரத்தில் உள்ள அவர்வீட்டை

ஒன்றிய அரசு உடைமையாக்கி பாரதி

   நினைவு இல்லமாய்ச் செய்ததுகாண்!

இன்னிசை யோடு திறப்பு விழாவும் நடத்தி

   ஏற்புறு கூடமாய் அமைந்தது காண்!

நன்றே பின்னர் சீர்திருத்தி பொற்புறு

   விழாவும் நடந்தது நூற்றாண்டில்

 

நூற்றாண் டுவிழா பாரதிக்கு இனிதே

   எட்டய புரத்திலே நடந்ததுகாண்

ஏற்ற முடனே மூன்றுநாட்கள் நினைவு

   இல்லம் முன்னே நடந்ததுகாண்!

ஆற்றிய அரசு பணிகண்டு மக்கள்

   அலைக டலெனத் திரண்டனர்காண்!

ஆற்றல் மிக்க கவிஞர்கள் பாரதி

   கவிதா வேள்வி இசைத்தனர்காண்

 

இசைத்து பாரதி கீர்த்தியோங்க பாரதி

   மணிமண் டபமும் விரும்பியதே!

மிசைந்த தனிக்குழு வசமிருந்து அதனை

   அரசு தனது உடைமையாக்கி

நசையுறு அமைப்புடன் வளர்த்ததுகாண் நளின

   காட்சி யகமும் அமைத்ததுகாண்

இசைபட விழாக்கள் நடத்துவதற்கு முன்புறம்

   அரங்கம் எழிலுறப் பெற்றதுகாண்!

 

பெற்ற தவத்தின் பயனாக எட்டய

   புரத்தில் மிளிர்ந்தது தொழிற்கல்வி!

உற்ற பாரதி நூற்றாண்டு நினைவாய்

   எழுந்தது கல்வி தொழிற்கூடம்

பொற்புறு நாற்பது ஏக்கரிலே உருவம்

   பெற்றது மகளிர் பாலிடெக்னிக்!

கற்றுத் தொழிலில் உயர்வேற்ல பெண்கள்

   கண்டநற் பயன்தொழிற் சாலைஎன்போம்!

 

சாலையும் தவப்பயன் பெற்றதுகாண் பாரதி

   சாலையை சென்னை ஏற்றதுகாண்!

ஓலைபோல் நீண்ட பைக்ராஃப்ட்ஸ் வீதி

   அண்ணல் பாரதி பெயரேற்று

மாலை மதிபோல் ஒளிவீசி சென்னை

   மாநகர் தன்னில் ஒளிர்வதுகாண்!

சாலை பாரதிசாலை என்போம் பாரதி

   தாசன் பாரதி பெயரேற்றார்!

 

பெயர்சீர் பாரதி பெயரெங்கும் நாட்டில்

   பெட்புடன் ஒலிக்கக் கேட்கின்றோம்!

இயல்பாய யாவரும் கற்றுயர பாரதி

   ஞானப் பெயரை உவந்துவைப்போம்

உயர்ந்த தொழிலகம் அனைத்திற்கும் பாரதி

   உன்னதப் பெயரை பொருந்தவைப்போம்

இயன்ற பள்ளிகள் பாரதியின் பெயரால்

   இயங்கக் காண்போம் நேயமுடன்

 

நேய முடனே அரசாங்கம் பாரதி

   பெயரால் நிறுவனம் அமைத்துகாண்

கோயம் புத்தூர் பாரதியார் பல்கலைக்

   கழகம் செயல்பட யாம்கண்டோம்!

ஆய கலைகளைத் தருபவளே பாரதி

   அவள்தரு செல்வமே கல்வியாகும்!

தேய சுதந்தர தமிழுணர்வை சாற்றப்

   பாரதி பிறவி எடுத்தாரே!

 

எடுப்பா யமைந்த பாரதியின் வெண்கல

   உருவச் சிலையைத் தமிழரசு

கொடுக்க அதனைப் பெற்றாரே மேற்கு

   வங்க முதல்வர் ஜோதிபாசு!

தொடுத்த தலைமை ஜோதிபாசு ஏற்கத்

   தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.

உடன்மகிழ் வுற்றுப் பாரதியின் வெண்கலச்

   சிலையைத் திறந்து வாழ்த்தினர்காண்!

 

வாழ்த்தினார் புரட்சிக் கவிஞரையே புரட்சி

   நடிகர் முதல்வர் எம்.ஜி.ஆர்.

தாழ்ந்து பணிந்து பாரதியின் சிலைக்கு

   வணக்கம் செய்தார் மகிழ்வுடனே!

ஆழ்ந்த உணர்வுடன் பாரதியின் வேடம்

   ஏற்று நடித்தார்  சிவாஜிகணேசன்

வாழ்ந்து காட்டிய பாரதிக்கு சிறப்பு

   வளமை தந்தனர் மத்தியிலே

 

மத்தியிலுள்ள புதுடில்லி ஆங்கண்

   மாண்புறு பாரதி நகர்கண்டோம்!

பத்தடி உயர பாரதியின் சிலையை

   வடித்தது அங்கு தமிழரசு!

வித்தகர் இந்தியப் பிரதமராம் ராஜீவ்

   காந்தி அதனைத் திறந்து வைத்தார்!

உத்தம முன்னிலை வகித்தவரே முதல்வர்

   எம்.ஜி. இராமச் சந்திரனார்.

 

சந்திர வதனங் கொண்டவராம் குடியர

   சின்துணைத் தலைவர் மாண்புமிகு

வெங்கட் ராமன் தலைமையேற்றார்! – அவரும்

   சிங்கக் கவிஞனைப் போற்றினார்காண்!

சிந்து கங்கை நதிபோற்றிப்  பாடிய

   சிந்து கவிஞரை வாழ்த்தினாரே!

வந்தே மாதரம் இசைத்தவரே பாரதி

   நன்மகன் பாரத அன்னைக்கு

 

அன்னை முதல்வர் ஜெயலலிதா பாரதி

  அவர்புகழ் ஓங்கத் தொண்டேற்றார்!

சென்னை திருவல் லிக்கேணி பாரதி

   வாழ்ந்த வீட்டை விலைக்குவாங்கி

ஒன்றிய அரசு உடைமையாக்கிப்  பாரதி

   நினைவு இல்லமாய்ச் செய்தார்காண்!

நன்றே திறப்பு விழாநடத்தி பாரதி

   நினைவு நாளும் நடத்தினார்காண்!

 

(மகாகவி பாரதி அந்தாதி அடுத்த அத்தியாயத்துடன் முடியும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு கவிச் சுடரொளிஎன்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணிபட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

 

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

 

பாரதி போற்றி ஆயிரம் – 50 (Post No.4735)

DATE – 13 FEBRUARY 2018

Time uploaded in London- 5-59 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4735

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 327 முதல் 332

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

பாரதி பாடல் சிறப்பு மற்றும் பாரதி மணி மண்டபம்  ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஆறு பாடல்கள்

பாரதி பாடல் சிறப்பு

 

பாரதி கவிதை பாக்களின்று – இசையுடன்

   பாங்குற ஒலிக்கக் கேட்கின்றோம்!

பாரத சுதந்திர விழாக்களிலே – பாரதி

   பாக்களே முதன்மை வகிப்பதுகாண்

வீரர் தியாகிகள் அணிவகுப்பில் – பாரதி

   உணர்ச்சிப் பாக்கள் ஒலிப்பதுகாண்

பாரதி பாடிய ஆத்திசூடி – பள்ளியில்

   பிரார்த்தனை பாடலாய்த் திகழ்வதுகாண்

 

திகழ்தரு பாப்பா பாட்டுக்கள் – பள்ளித்

   தொடக்க வகுப்பில் சிறப்பதுகாண்!

மகத்துவ பாஞ்சாலி சபதமே – பள்ளி

   மேனிலை வகுப்பில் கமழ்வதுகாண்!

நிகரிலா பாரதி கட்டுரைகள் – பல்கலை

   கல்லூ ரிகளிலே களமேற்கும்

மிகப்பல பக்திப் பாடல்கள் – பலப்பல

   மொழிகளில் ஆக்கம் ஏற்பதுகாண்.

 

ஏற்புறு பாரதி துதிப்பாடல் – விழாவாம்

   நவராத் திரியில் இசைப்பதுகாண்

போற்றி தேவியர் மூவரையும் – விழாவில்

   பாடிடப் பாரதி கவிதந்தார்!

காற்றில் பறக்கும் தூசுகூட – பாரதி

   கவிதை கேட்டுக் கிறுகிறுத்து

தோற்றம் அசையா நிலையேற்கும் – மலர்ந்து

   தெய்வ சிலையும் முகங்காட்டும்

 

பாரதி மணிமண்டபம்

  

முகமே காட்டி கவர்ந்திடுவார் – பாரதி

   மீசை, பாகை கோட்டுடனே!

புகழ்தரு திரைப்படக் கதைகளிலே – பாரதி

   பாடல், நிகழ்ச்சி மாண்பேற்கும்!

புகலரு கவிஞர் வரிசையிலே – புரட்சிப்

   பாரதி பெயரே முன்னிற்கும்!

நிகழும் மாறு வேடத்தில் – பாரதி

   நடிப்பு வேடமே சிறப்பேற்கும்!

 

சிறப்புடன் அமரர் கல்கியவர் – மணிமண்

   டபத்தை எழுப்பினார் பாரதிக்கு

இறவாப் புகழுடன் பாரதியார் – எட்டய

   புரத்தில் சிலையாய் நிற்பதுகாண்

அறந்தரு சிந்தை இராசாசி – தமிழக

  முதல்வர் மண்டபம் திறந்து வைத்தார்

திறமிகு அனுபவ மூதறிஞர் – பாரதி

   பிறந்த வீட்டைக் கண்டார்காண்.

 

கண்டார் பாரதி பிறந்தவீடு – கவினுறு

   அரண்மனை கண்டு வியப்புற்றார்!

எண்டிசை போற்றஎட் டயபுரமும் – இன்று

   எழிலுடன் காட்சி தருவதுகாண்!

வண்ண பாரதி படைப்புகளின் – குவியலை

   அடைக்கலங் காத்தவர் விசுவநாதர்

தொண்டர், பாரதி இளவலர் – விசுவ

   நாதரை அழைத்தார் முதல்வருமே

 

(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

பாரதி போற்றி ஆயிரம் – 49 (Post No.4731)

Isaikkavi Ramanan as Bharati, picture by Manion cgs

DATE – 12 FEBRUARY 2018
Time uploaded in London- 5-52 am

 

COMPILED by S NAGARAJAN

 

Post No. 4731

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

  பாடல்கள் 318 முதல் 326

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

எதிர்பாரா இன்னல், அமரமேற்றல் மற்றும் மக்கள் துயர்  ஆகிய அத்தியாயங்களில் உள்ள ஒன்பது பாடல்கள்

எதிர்பாரா இன்னல்

தினமும் கோவில் யானைக்கு – பிரசா

   தத்தை அளிப்பது வழக்கமாகும்!

கனன்று ஒருநாள் வெறிகொண்டு – யானை

   குணமும் மாறுப டநின்றதுகாண்!

வினயம் அறியா பாரதியார் – பழமுடன்

   உடைத்த தேங்காய் அதற்கிட்டார்!

மனவெறி கொண்டு பாரதியை – யானை

   மிடுக்குறப் பற்றித் தூக்கியதே!

 

தூக்கிப் பற்றி பாரதியை – வெடுக்கெனத்

   தரையில் போட்டது யானையுமே!

கூக்குர லிட்டுப் பாரதியார் – யானையின்

   கால்களுக்கிடையே விழுந்தார்காண்

தாக்கிய யானையின் செயலறிந்து – பதறி

   குவளைக் கண்ணன் ஓடிவந்தார்!

ஊக்கிய உள்ளத் துடிப்புடனே – விரைந்து

   இறுகப் பற்றினார் பாரதியை

 

பாரதி உடலை ஒருங்குப்பற்றி – அலாக்காய்ப்

   பிடித்து வந்து கிடத்தினார்காண்

தீரன் கிருட்டின மாச்சாரி – திறத்தால்

   துயரம் தீர்த்தார் பாரதியார்

பாரதி அருளைப் பெற்றவராம் – பாரதி

   பாரதப் புரட்சிக் கவிஞராவர்

இராயப்பேட்டை மருத்துவத்தில் – பாரதி

   உடல்நல சிகிச்சை ஏற்றார்காண்!

 

அமரமேற்றல்

 

ஏற்றார் உடல்நலம் பாரதியார் – அனுதினம்

   அலுவல கம்போய்ப் பணிபுரிந்தார்!

ஆற்றல் பெற்றார் பாரதியார் – எனினும்

   அவதி வயிற்றுப் போக்கேற்றார்!

ஏற்புடைக் கடவுள் பரம்பொருளே! – அதனை

   இயல்பா யறிந்தார் பாரதியார்!

ஏற்புழி கட்டுரை எழுதினாரே! – அதுவே

   மனித னுக்கு  மரணமில்லை.

 

மரண மில்லா பெருவாழ்வு – ஏற்போன்

   மகிமை பரமருள் அமரமேற்பான்!

சிரமம் வயிற்றுப் போக்குடனே – பணியை

   செவ்வனே புரிந்தார் பாரதியார்!

இரக்கங் காட்டி பணியேற்றார் – மித்திரன்

   அரங்க சாமி ஐயங்கார்!

உரமிகு உடலைப் பெறுதற்கு – பாரதி

   ஏழு நாட்கள் விடுப்பேற்றார்.

 

விடுப்பு ஏற்ற பாரதியார் – வீட்டில்

   உடல்வ ளம்பெற ஓய்வெடுத்தார்!

தொடுத்த கோட்டு, தலைப்பாகை – அணிந்தே

   தேசத் தொண்டை நினைத்தார்காண்!

நடுக்க முற்று வாயொலிக்க – பாடலாம்

   நல்லதோர் வீணை இசைத்தாரே!

ஒடுங்கி மனமும் உடல்சோர – யாவரும்

   அலற இயற்கை எய்தினார்காண்!

 

மக்கள் துயர்

 

எய்த குறிக்கோள் பலவிருக்க – பாரதி

   அமரம் கண்டார் விதியாலே!

தொய்வு ஏற்று செல்லம்மாள் – மக்கள்

   சூழ்ந்து வெம்பித் தவித்தார்கள்!

வெய்துய ருற்ற விசுவநாதர் – இளவல்

   வேதனை யுற்றுக் கலங்கினாரே

செய்தி எங்கும் பரவியது – நாடே

   சோர்ந்து வெந்துயர் துய்த்தனர்காண்

 

துய்த்துக் கண்ணீர் சொரிந்தார்கள் – தேசத்

   தலைவர் பலரும் கலங்கினார்கள்!

எய்தவன் இருக்க அம்பைநோவ – நாமும்

   எடுத்தோம் பிறப்பு நன்றறிவோம்!

பெய்தான் உயிரை உடற்கூட்டில் – இறைவன்

   பெட்புறு செயலை யாமறிவோம்!

தெய்வம் எழுத்து எழுதுகோலும் – வாழ்வு

   தேசப் பற்றுமே பாரதியார்

 

பாரதி புவியில் வாழ்ந்தகாலம்  – முப்பத்

   தொன்பது ஆண்டுகள் என்றறிவோம்!

நீரதன் புதல்வர் என்றுநம்மை – பாரதத்

   தாயிடம் கூறிப் போற்றினார்காண்.

பூரண சுதந்திரம் பாடினாரே – எனினும்

   பாரத சுதந்திரம் கண்டிலரே!

பாரத விடுதலை வேண்டிநின்றார் – அமரராய்ப்

   பார்த்து மகிழ்ந்தார் பாரதியார்!

 

(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****

பாரதி போற்றி ஆயிரம் – 48 (Post No.4722)

DATE – 10 FEBRUARY 2018
Time uploaded in London- 7-03 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4722

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 48

  பாடல்கள் 306 முதல் 317

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

அருட்கவிஞர் அ.காசி பாடல்கள்

மகாகவி பாரதி அந்தாதி

புதுவை விட்டு நீங்கல் மற்றும் மீண்டும் சென்னை வாழ்வு ஆகிய அத்தியாயங்களில் உள்ள பன்னிரண்டு பாடல்கள்

 

 

புதுவை விட்டு நீங்கல்

 

கண்டோம், கேட்டோம் பாரதியின் – சீர்த்தி

   காசினி எங்கும் பரவியதே!

புண்ணிய பாரத எல்லைக்குள் – பாரதி

   எப்பொழு துவருவார் என்றுநோக்கி

கொண்டனர் கோபம் ஆங்கிலேயர் – அதனால்

   காவல் பலமும் கூடியதே!

கொண்ட நாட்டுப் பற்றோங்க – பாரதி

   தமிழகம் செல்ல எண்ணினார்காண்!

 

எண்ணிய எண்ணம் மோலோங்க – பாரதி

   அன்பர் பலரிடம் கூறினார்காண்!

நண்பர் பலரும் பாரதியை – நெருங்கி

   தமிழகம் செல்லத் தடுத்தனர்காண்!

அண்டியே ஊழ்வினை துரத்திடவே – பாரதி

   அனைவ ரிடமும் விடைபெற்றார்!

கண்ணீர் சிந்தக் குடும்பமுடன் – பாரதி

   கன்னிப் பாரதம் நுழைந்தார்காண்!

 

நுழைந்த இடமே வில்லியனூர் – கோழிக்

   குஞ்சை நாடிய பருந்துபோல

விழைந்து வந்த காவலர்கள் – பாரதி

   குடும்பந் தன்னை சூழ்ந்தனரே!

குழைந்து வாடப் பாரதியைக் – காவலர்

   கைது செய்து ஏகினர்காண்!

நுழைத்து கடலூர் சிறைதனிலே – அடைத்து

   நலியச் செய்து வருத்தினர்காண்!

                                                                               

வருதிச் சிறையில் அடைபட்டார் – செய்தி

   த்வியாபித் தெங்கும் பரவியதே!

உருக்கிய ஈயம் வார்த்தகாது – அதுபோல்

   இன்னல் ஏற்றனர் நண்பர்கள்!

வெருவியே தூத்துக் குடிநண்பர் – நாவலர்

   சோம சுந்தர பாரதியார்

வருந்தி விரைந்து சென்னைவந்தார் – பாரதி

   விடுதலை வேண்டிச் செயல்பட்டார்.

 

செயல்படு சுதேச மித்திரனின் – உரிமை

  அரங்க சாமி ஐயங்கார்

அயரா துழைத்தார்! இருவருடன் – காவல்

   அதிகா ரிதுரை கானிங்டன்

தயவும் கூடிட அரும்பணியால் – பாரதி

   தன்னிகர் விடுதலை தானேற்றார்!

துயருடன் இருபத் துநான்கு நாட்கள் – பாரதி

   சிறையில் காலம் கழித்தாரே!

 

கழித்தார் பதினோ ராண்டுகாலம் – புதுவை

   கொடுத்தது அடைக்கலம் பாரதிக்கு!

அழியாப் பொக்கிசம் கட்டுரைகள் – கவிதை

   உணர்ச்சிக் காவியப் படைப்புகள்

எழிலுறு பக்தி கீதங்கள் – விழிப்பினை

   யூட்டும் எழுச்சிப் பாடல்கள்

தொழிலே படைப்பாய் கொண்டவராம் – பாரதி

   தேச விடுதலை வேண்டினாரே!

 

 

 

மீண்டும் சென்னை வாழ்வு

 

வேண்டியே துணைவி விருப்பத்தால் – பாரதி

  ஊராம் கடையம் சென்றாரே!

தீண்டிய வறுமை போக்குதற்கு – எட்டய

   தலமே உகந்தது என்றெண்ணித்

தூண்டிய குடும்பத் துடன்சென்று – தங்கி

   தொண்டினைத் தொடர்ந்தார் பாரதியார்

மாண்புடன் சுதேசமித் திரனுக்கு – கவிதை

   மீண்டும் அனுப்பி தொண்டேற்றார்.

 

தொண்டால் உயர்ந்த காந்தியண்ணல் – ஒத்துழை

   யாமை இயக்கம் நடத்திவந்தார்!

கொண்டார் பயணம் சென்னைக்கு – அங்கு

   கண்டிட விரைந்தார் பாரதியும்!

அண்ணலும் கவிஞரும் சந்தித்து – அறிமுகம்

   ஏற்றனர் இராசா சிஇல்லத்தில்!

பண்ணிசை சுதந்திர கீதத்தை – பாரதி

   பாடக் கேட்டார் காந்தியண்ணல்.

 

காந்தி யடிகளைக் கண்டபின்னே – பாரதி

   சென்றார் எட்டய புரத்திற்கு!

ஏந்திய செய்தி அழைப்புகண்டார் – மீண்டும்

   சுதேச மித்திரன் நாளிதழ்க்கு!

“தேர்ந்த உதவி ஆசிரியர் – பதவி

   துரிதமாய் ஏற்க விரைந்துவாரீர்”

தாந்திற மறிந்து கிடைத்தபணி – பாரதி

   தொழிற்பணி ஏற்க சென்னைசென்றார்!

 

சென்னை சென்று பணியேற்றார் – குடும்ப

   சீல உறவு நன்றேற்றார்!

இன்னிசை திருவல் லிக்கேணி – பகுதியில்

   உற்ற வாழ்விடம் ஏற்றார்காண்

முன்னைய நண்பர் பலருமங்கு – அவர்க்கு

   உறுதுணை புரிந்து வந்தார்காண்

பொன்னிற குவளைக் கண்ணனென்பார் – அவரே

   பாரதி பணியை ஊக்குவித்தார்.

 

ஊக்க மேற்ற பாரதியார் – முன்னை

   உரைகள், கவிகள், ஒருங்குவித்து

ஆக்கம் பெற்றிடத் தொகுத்தளித்தார் – ஆன்ற

   பத்திரி கைப்பணி நன்றேற்றார்!

காக்கும் பார்த்த சாரதியை – வணங்கி

   கவிதைத் தேரில் உலவிவந்தார்!

சாக்தம் சக்தி அருளினாலே – வெற்றிச்

   செயலில் ஏற்போம்! முரசொலித்தார்!

 

முரசு கொட்டி சுதந்திரத்தை – வேண்டி

   முழக்க மிட்டார் பாரதியார்!

அரசு ஆங்கில ஆட்சிக்கு – அன்றே

   எதிர்த்து விடுதலை பாடிவிட்டார்!

விரவிய இந்திய சமுதாயம் – விடுதலை

   வேட்கைப் பயனை நன்றிசைத்தார்!

பரவலித் துகண்ணனை வணங்கியபின் – உடைத்த

   தேங்காய் பழமுடன் தினம்வருவார்!

 

(மகாகவி பாரதி அந்தாதி தொடரும்)

 

கவிஞர் அ.காசி : பாரதி பணிச்செல்வர் கவிமாமணி அருட்கவிஞர் அருப்புக்கோட்டை அ.காசி எம்.ஏ., எம்.எட் பாரதி ஆர்வலர்.மரபுக் கவிதை இயற்றுவதில் வல்லவர். 50க்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். கவியரங்கங்களில் பங்கேற்றவர். இவருக்கு ‘கவிச் சுடரொளி’ என்ற பட்டத்தை இதயரோஜா பதிப்பகம் அளித்தது. ‘கவிமாமணி’ பட்டத்தை கவிதை சக்தி இயக்கம் நல்கி இவரை கௌரவித்தது. ஏராளமான அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாரதியாரின் வரலாறைச் சுவைபட மரபு மீறாமல் அந்தாதியாக அளித்துள்ள நூல் என்பதால் இதுத் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

 

தொகுப்பாளர் குறிப்பு:
மகாகவி பாரதி அந்தாதி என்ற மரபு வழிக் கவிதை நூலை இதயரோஜா பதிப்பகம், 14, கங்காராம் தோட்டம், கோடம்பாக்கம் சென்னை – 600 024 வெளியிட்டுள்ளது. 27 ஆண்டுகளாகப் பல நல்ல நூல்களை இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் வெளியான ஆண்டு: மே, 2004. மொத்த பக்கங்கள் :80. நூலில் அந்தாதி குறிக்கும் நூறு சுவையான செய்திகளை ஆசிரியர் விளக்கவுரையாகவும் தந்துள்ளார். விலை ரூ 30/ அன்பர்கள் பதிப்பகத்திற்கு எழுதி நூலின் பிரதிகள் இருப்பதை உறுதி செய்த பின்னர் இதை வாங்கலாம்.

 

அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சீரில் வரும் வார்த்தை அடுத்த செய்யுளின் முதல் சீராக அமைந்து வருவதாகும்.

நன்றி: அருட்கவிஞர் அ.காசி நன்றி: இதயரோஜா பதிப்பகம், சென்னை.

****