12 அத்தியாயங்களில் 2647 ஸ்லோகங்களில் மனு என்ன செப்பினார்?- பகுதி 2

IMG_4622

Article No. 2054

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 9  August  2015

Time uploaded in London :– காலை 7- 59

பகுதி ஒன்றை முதலில் காண்க! (பக்கங்களைப் பெரிது படுத்தி படிக்கவும்)

மனு என்ன சொன்னார்? மனு நீதி நூலை முழுக்க படிக்கா முடியாவிட்டாலும் அவர் எதைப் பற்றி எழுதினார் என்று அறிய பினவரும் பொருளடக்கம் உதவும் (நன்றி:பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்). அடுத்தமுறை காமெராவுடன் சென்று இதைவிட நல்ல காப்பி எடுக்கையில் இதை அழித்து, அதைப் போடுகிறேன்.

IMG_4732

IMG_4733

IMG_4734

IMG_4735

IMG_4736

IMG_4737

IMG_4738

IMG_4739

IMG_4740

IMG_4741

IMG_4742

IMG_4743

IMG_4744

IMG_4745

IMG_4746

IMG_4747

IMG_4748

IMG_4749

IMG_4750

IMG_4751 (2)

IMG_4751

IMG_4752

IMG_4753

முற்றும்.

இலண்டன், ஆக்ஸ்போர்ட் நகரங்களில் நவக்ரஹ சிலைகள்!

Article No. 2050

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 7  August  2015

Time uploaded in London : – 12-36

ஆக்ஸ்போர்ட் நகர ஆஷ்மோலியன் மியூசியத்திலுள்ள இரண்டு வகை நவரத்ன சிலைகள், பொம்மைகளின் படங்களும், லண்டன் நகரிலுள்ள பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ள தனித்தனி நவக்ரஹ சிலைகளும் நவக்ரஹ துதிகளுடன் வெளியிடப்படுகிறது. புகைப்படங்கள் : லண்டன் சுவாமிநாதன் எடுத்தவை.

IMG_2298.JPG (720×720)

IMG_5723.JPG (1200×1600)

கீழேயுள்ளவை லண்டன் நகர பிரிட்டிஷ் மியூசிய சிலைகள்

IMG_1768 (2)

IMG_1769 (2)

IMG_1770 (2)

IMG_1771 (2)

IMG_1772 (2)

IMG_1773

IMG_1774 (2)

IMG_1775 (2)

IMG_1776 (2)

IMG_1777

IMG_1778 (2)

IMG_1779 (2)

IMG_1780 (2)

வேத,உபநிஷத்துகளில் கனவுகள்

Sleep-training

Article No. 2047

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 6  August  2015

Time uploaded in London : –10- 41

(I am giving below the summary of my English article already published here)

முன் காலத்தில் கனவுகள், உறக்கம் ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தை அறிந்தது இந்துக்கள் மட்டுமே. தினமும் சிவன் கோவிலில் சிவனுக்குக் காலையில் அபிஷேகம் செய்கையில் ருத்ரம்-சமகம் என்ற யஜூர் வேத மந்திரத்தைச் சொல்லி அபிஷேகம் செய்வார்கள். இதில்தான் சைவர்களின் தாரக மந்திரமான ஓம் நமசிவாய – என்ற சம்ஸ்கிருத மந்திரம் முதல் முதலில் வருகிறது. சமகம் என்னும் பகுதியில் மனிதனுக்கு வேண்டிய எல்லாப் பொருட்களையும் பட்டியலிட்டுள்ளனர் வேத கால ரிஷி முனிவர்கள். அதில் ‘சயனம் ச மே’, ‘சுதினம் ச மே’ என்று வேண்டுவர். நல்ல தூக்கமும் விடிந்தவுடன் நல்ல நாளும் எனக்குக் கொடு — என்று இதன் பொருள்.

இந்த “சுதினம்” ச மே என்பதை ஆஸ்திரேலியர்கள் இன்றும் ஒருவரை ஒருவர் பார்க்கையில் Good Day “குட் டே” என்று வாழ்த்துகின்றனர். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஐயர்கள் சொல்லும் மந்திரத்தில் உள்ள குட் நைட் Good Night, குட் ஸ்லீப் Good Sleep/Sweet Dreams, குட் டே Good Day – என்பன இன்றும் பயன்படுகின்றன!!!

உலகின் பழைய புத்தகமான ரிக் வேதத்தில் தூக்கம், கனவுகள் பற்றி நிறைய குறிப்புகள் உண்டு. கனவுகளின் பொருள் என்ன (Dream Interpretation) என்ற ஆராய்ச்சியும் வேத காலத்திலேயே  துவங்கிவிட்டது. ரிக் வேத காலத்துக்குப் பின்னர் வந்த எகிப்திய, சுமேரிய ஹைரோகிளிபிக்ஸ், க்யூனிfஆர்ம் எழுத்துக்களிலும் கனவுகள் பற்றி எழுதி வைத்துள்ளனர். அவர்களும் நம்மைப் போன்றே பல விஷயங்களை நம்பினர்.

(படங்கள் : தூங்கும்  அழகி என்ற  கதையின் படங்கள்)

ரிக் வேதத்தில் மரணத்தை முன் அறிவிக்கும் கனவுகள் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதாவது (2-28-10; 10-162-6):

கழுத்தைச் சுற்றி துணி/ ஆடை கட்டுவதைப் போலவோ, மாலை போடுவது போலவோ கனவு காண்பது தீய நிமித்தம் ஆகும்

ரிக் வேத ஆரண்யகப் பகுதியான ஐதரேய ஆரண்யகத்தில் (3-2-4) ஒரு நீண்ட பட்டியல் உள்ளது:

1.கறுப்பு நிற மனிதன் கறுப்புப் பற்களால் கடித்துக் கொல்லுவது போல வரும் கனவு

2.காட்டுப் பன்றி நம்மைக் கொல்வது போல

3.காட்டுப் பூனை நம் மீது பாய்வது போல

4.தங்கத்தை சாப்பிட்டுவிட்டு துப்புவது போல

  1. தேனைக் குடித்துவிட்டு தாமரைக் கிழங்கைச் சாப்பிடுவது போல

6.தெற்கு நோக்கி கருப்புப் பசுவை ஓட்டிக் கொண்டுபோவது போல

7.வெட்டிவேர், இலாமிச்சைச் செடி மாலை போடுவது போல கனவு காணக் கூடாது

(ஏசு கிறிஸ்து இறப்பதற்கு முன்னரும் இத்தகைய மாலையை ஒருவர் அவருக்கு வலியச் சென்று சூட்டியதாக பைபிள் கூறும்)

மேற்கூறிய விஷயங்கள் உண்மையா, பொய்யா, அல்லது அதன்மூலம் வேறு ஏதாவது சொல்ல விரும்பினரா என்ற ஆராய்ச்சியில் புகாமல், கனவுகளை அவர்கள் எவ்வளவு முக்கியமாகக் கருதினர் என்று தெரிந்து கொண்டால் போதும்.

மாண்டூக்ய உபநிஷத்தில் கனவுகள் பற்றி வருகிறது. ஆதி சங்கரர் தனது விவேக சூடாமணி முதலிய நூல்களில் கனவு நிலை, விழிப்பு நிலை, தூங்கும் நிலை, துரீய நிலை (நாலாவது நிலை) என்பன பற்றி விளக்குகிறார். ஆனால் இங்கெல்லாம் தத்துவ விஷயங்களை விளக்க கனவுகளைப் பயன்படுத்துகின்றனர்; அறிவியல் விளக்கத்துக்கு அல்ல.

அதர்வண வேதம், சதபத பிராமணம், வாஜசநேயி சம்ஹிதை ஆகியவற்றிலும் பல குறிப்புகள் உள.

பிற்கால சம்ஸ்கிருத இலக்கியங்களில் சுப கனவுகள் பற்றி விளக்கப்படுகின்றன. புத்தரையும் மஹாவீரரையும் பெற்றெடுக்கு முன் அவர்களுடைய தாய்மார்கள் கண்ட கனவுகள், வடமொழி நாடக கதாநாயகிகள் கண்ட கனவுகள் இதற்கு எடுத்துக் காட்டுகள்.

கனவு விளக்க நூல் ஒன்றை பிருஹஸ்பதி (வியாழ பகவான் எழுதினார். தமிழ் கலைக் களஞ்சியமான அபிதான சிந்தாமணியில் ஏழு பக்கங்களுக்கு இவற்றின் சுருக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தீய கனவுகளைத் தவிர்ப்பதற்கான ஸ்லோகங்களும் இருக்கின்றன. பிராமணர்கள் தினமும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரம் தீய கனவுகள் வர்க்கூடாது என்று வேண்டும் மந்திரமாகும்.

வெளிநாட்டுக்காரர்கள் தற்காத்தில்தான், ‘ஒருவரும் கனவு காணாமல் தூங்க முடியாது’ (ராபிட் ஐ மூவ்மென் ட்) என்றெல்லாம்    எழுதிவைத்தனர். நாமோ இதை அபோழுதே அறிந்து தினமும் மூன்று முறை துஸ்வப்பனத்தை அகற்ற வேண்டும் என்ற மந்திரத்தை தினசரிச் சடங்கில் சேர்த்து வைத்திருக்கிறோம்!

Sleeping-Beauty

My previous Research Articles on Dreams:

Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)

Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)

God’s Note Book (posted on March 16, 2014)

Strange Dreams, posted on 27 July 2015Inauspicious Dreams: Dreams in Vedas and Upanishads, Posted on 28th July 2015

Vedic Echo in Sumerian and Egyptian Concept of Dreams, Posted 31 July 2015

விநோதக் கனவுகள், ஆகஸ்ட் 4, 2015

சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுனப் பயணம் (பிப்ரவரி 4, 2015)

வித்தியாசமான விஞ்ஞானி யுங்

யானையின் எடை என்ன? அவுரங்கசீப்பை அசத்திய படகுக்காரன்!

vesswic-86-1024x678

Article No. 2045

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 5  August  2015

Time uploaded in London : – 12-05

மஹாராஷ்டிர  மாநிலத்தில் புனே நகருக்கு அருகில் துலாப்பூர் என்ற சிற்றூர் இருக்கிறது. இவ்வூர் பல சிறப்புகளை உடையது:

1.துலாப்பூர் என்று பெயர் ஏற்படக் காரணமான இரண்டு சம்பவங்கள்

2.வீர சிவாஜியின் புதல்வன் சம்பாஜி,வெட்டிக் கொலை செய்யப்பட இடத்தில் உள்ள சமாதி

3.பீமா, இந்த்ராயனி, பாமா ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்திலுள்ள சங்கமேஸ்வரர் சிவன் கோவில்

4.சம்பாஜியின் உடலைத் தைத்து ஈமச் சடங்கு செய்த செவாலி இனம்.

OLYMPUS DIGITAL CAMERA

சத்ரபதி சம்பாஜி

காட்டுமிராண்டி வம்சம்

மொகலாய சாம்ராஜ்யத்தை நடுநடுங்கவைத்த சிவாஜியின் மகன் பெயர் சம்பாஜி. அவனைப் பிடித்த அவுரங்கசீப், அவனது உடலைக் கண்டம் துண்டமாக வெட்டி பீமா நதியில் தூக்கி எறிந்தான். நம் நாட்டின் மீது படை எடுத்த முஸ்லீம்கள் வெறியர்கள். எதிரிகளைச் சாகடிக்கும் முறையும் அவர்கள் சடலங்களை அவமதிக்கும் விதமும் அவர்களை காட்டுமிராண்டிகள் என்பதைத் தெள்ளிதின் விளக்கும். ஆப்கனிஸ்தானத்தில் இருந்த உலகிலேயே மிக உயரமான 2000 ஆண்டுப் பழமையான புத்தர் சிலைகளை குண்டு வைத்து தகர்த்ததையும், இராக், சிரியாவிலுள்ள சுமேரிய, பாபிலோனிய சின்னங்களை சின்னாபின்ன மாக்கியதையும் இப்பொழுதும் உலகமே கண்டிக்கிறது.

Tulapur-5sambhaji-maharaj-samadhi-tulapur

(சம்பாஜியின் 2 சமாதிகள்)

இது அவுரங்க சீப்புக்கும் முன்னால் துவங்கிய அநாகரீக வழக்கம். மதுரைக்கு வந்த மொராக்கோ நாட்டுப் பயணி இபின் படுடா எழுதிய குறிப்புகள் மிகவும் பிரசித்தமானவை. மதுரையை ஆண்ட கியாசுத்தீன் என்பவன்,  வீர வல்லாளன் என்ற ஹொய்சாள மன்னனைப் பிடித்து ஆசை வார்த்தை காட்டி அத்தனை செல்வத்தையும் பிடுங்கிக் கொண்டு அவன் தோலை உரித்து, வைக்கோலை அடைத்து, மதுரைக் கோட்டை வாசலில் தொங்கவிட்டான் என்று 1341ல் இபின் படுடா எழுதிவைத்தான்.

மதுரை மீது படை எடுத்து வந்த விஜய நகர மன்னன் குமார கம்பன்னன் 1346-ஆம் ஆண்டில் துலுக்க ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 40 ஆண்டுகள் மூடிக் கிடந்த மீனாட்சிம்மன் கோவிலை திறந்துவத்தான். அவனுடன் வந்த அவனது மனைவி கங்காதேவி “மதுரா விஜயம்” என்னும் நூலில் மதுரைத் தெருக்களின் இருமருங்கிலும் ஈட்டியில் சொருகப்பட்ட பாண்டிய நாட்டு வீரர் தலைகள் இருந்ததை அப்படியே அவளுடைய சம்ஸ்கிருத நூல் “மதுரா விஜய”த்தில் எழுதி வைத்துள்ளார்.

இதே காட்டுமிராண்டிததனத்தை அவுரங்க சீப்பும் செய்தான். சிவாஜியின் புதல்வன் சம்பாஜியின் உடலை வெட்டி பீமா ஆற்றில் எறிந்தான். அந்தக் கரையில் வாழ்ந்த வீரப் புதல்வர்கள் நீந்திச் சென்று உடல் உறுப்புகளைச் சேகரித்து அவைகளை ஒன்றாகத் தைத்து சம்பாஜிக்கு இந்து முறைப்படி தகனக் கிரியைகளைச் செய்தனர் ஆகையால் இவர்களுக்கு இன்றுவரை செவாலியர் (தையல் போட்டோர்) என்ற பெயர் நீடித்து வருகிறது.

சம்பாஜிக்கு துலாப்பூரிலும், தகனம் நடந்த ‘வது’ என்னும் கிராமத்திலும் இரண்டு சமாதிகள் உள்ளன.

sangameswar

(சங்கமேஸ்வரர்  கோவில்)

துலாக் கதை 1

துலா என்றால் நிறுக்கும் தராசு. சங்க இலக்கியத்தில் ஒரு சிறுமிக்கு மரண தண்டனை விதித்த நன்னனிடம் எடைக்கு எடை தங்கம் தருவதாக ஊரே கெஞ்சியது. இது பற்றி முன்னரே எழுதி விட்டேன். தமிழகத்திலும் சுமேரியாவிலும், சிபிச் சக்ரவர்த்தி கதையிலும் இப்பொழுது குருவாயூர், திருப்பதி முதலிய கோவில்களிலும் துலா பாரச் சடங்குகளைப் பார்க்கிறோம். இதேபோல அக்காலத்தில் ஒருவர் எடைக்கு எடை 24 பொருள்களை நிறுத்துக் கொடுத்ததால் இந்த ஊருக்கு துலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது; முதலில் நகர்கவன் என்ற பெயரே இருந்தது.

அடில்ஷா சபையில் பெரிய பதவி வகித்த முராபந்த் ஜகதேவின் உடலில் வெள்ளைப்பட்டை விழுந்ததால் அவர் துலாப்பூரில் வசித்த ருத்ர தேவ் மஹராஜ் என்னும் மஹானின் காலில் வந்து விழுந்தார். அவர், முராபந்தின் வியாதியைக் குணப்படுத்தியவுடன் தங்கம், வெள்ளி முதலிய எல்லாவற்றையும் தன் எடைக்கு எடை தந்தார். அத்தனையையும் ஏழை மக்களுக்கும், சங்கமேஸ்வரர் கோவிலுக்கும் தானம் செய்யும்படி சாமியார் கட்டளையிட்டார். ஒரு முறை ஒரு யானையின் எடைக்கு தங்கத்தை நிறுத்துக் கொடுததால் இவ்வூருக்கு துலாப்பூர் என்று பெயர் உண்டாகியது.

elephant weight

துலாக் கதை 2: யானையை நிறுக்க முடியுமா?

இன்னொரு கதை அவுரங்க சீப் பற்றியது. சிவாஜியின் மகனை வெட்டிக்கொலை செய்த பின்னர் பீமா நதியைக் கடக்க யானை, குதிரைகளுடன் வந்த போது ஒரு படகுக்காரனைச் சந்திதார். படகில் எவ்வளவு எடை ஏற்ற முடியும் என்று கவலை கொண்டார்.

படகுக்காரனிடம் எவ்வளவு எடை ஏற்ற முடியும் என்று கேட்டார். அவனோ தான் உலகிலுள்ள எந்தப் பொருளுக்கும் எடை சொல்ல முடியும் என்று பெருமை பேசினான். உடனே அவுரங்கசீப், எங்கே, என் யானையின் எடை என்ன? என்று சொல் பார்ப்போம் என்றார்.

மன்னவா, இதுவா கஷ்டம்? இதோ சொல்கிறேன். உங்கள் யானையை அதோ அந்தப் படகில் நிறுத்திவைக்கும் படி உங்கள் வீரர்களுக்குக் கட்டளை இடுங்கள் – என்றான்.

மன்னனும் அப்படியே செய்தான். படகின் வெளிப்பகுதி எந்த அளவுக்கு தண்ணீரில் அமிழ்ந்தது என்று குறித்து வைத்துக் கொண்டான். பின்னர் யானையை இறக்கிவிட்டு கற்களை ஏற்றச் சொன்னான். நீர்மட்டம் பழைய குறியீட்டுக்கு வரும் வரை கற்களை ஏற்றச் செய்தான் யானை ஏறியபோது அடைந்த நீர்மட்டத்தை எட்டியவுடன் அந்தக் கற்களை நிறுத்தான். அந்த எடையைக் குறித்துக் கொண்டு அவுரங்க சீப்பிடம் யானையின் எடை இதோ, என்று கொடுத்தான்.

pluto3

(படம்: புளூட்டோ கிரஹத்தில் யானையி்ன்  எடை)

படகுக்காரனின் புத்திசாலித்தனத்தை மெச்சி அவனுக்கு பெரும் பரிசுகள் கொடுத்தான் அவுரங்க சீப்.

—-சுபம்—

மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்!

super brain yoga

Article No. 2044

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 5  August  2015

Time uploaded in London : – 8-52 am

 

 

My brother S NAGARAJAN has been contributing to Gana Alayam, Bhagya, E-zine and several other magazines and blogs for years. Following is his recent article (Pictures are added by me from various sources;thanks): London swaminathan

 

கடந்த நான்கரை வருடங்களாக டைரக்டர் கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடர் வெளியாகி வருகிறது.31-7-2015 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை இது.

அறிவியல் துளிகள் 232

SuperBrain-Yoga-Pranic-Healing

 

மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்டலாம்!

By .நாகராஜன்

மூளையைப் பயன்படுத்துவதால் மூளை ஆற்றல் கூடுகிறது. உடல் பயிற்சி செய்வதால் உடல் வலிமை கூடுவதைப் போல” – .என்.வில்ஸன்

 

   இன்டர்நெட் மூலமாக சமீபத்தில் பரபரப்பாக அனைவரும் படிக்கும் ஒரு விஷயம் மூன்றே நிமிடங்களில் மூளை ஆற்றலைக் கூட்ட முடியும் என்பது தான்!

சக்தி வாய்ந்த ஒரு சிறு பயிற்சி மூலம் இந்த அரிய மூளை ஆற்றலைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்படுவதால் அனைவரின் கவனமும் இதன் மீது திரும்பியுள்ளது.

முதன்முதலக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து சிபிஎஸ் செய்தி அறிக்கை ஒன்று இதைக் கூறியதோடு இந்தப் பயிற்சி இப்படி ஒரு ஆற்றலைத் தருவது உண்மை தான் என யேல் நகரைச் சேர்ந்த மூளை இயல் நிபுணர் ஒருவர் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய அனைவரும் கூறியுள்ளதையும் மேற்கோளாக எடுத்துக் காட்டியது.

 

ஆடிஸம் (autism) எனப்படும் மனவளம் குன்றிய நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளும் இதனால் பெரும் பயன் அடைய முடியும் என்பது கூடுதலான போனஸ் தகவல்! அல்ஜெமீர் வியாதி உள்ள வயதானோருக்கும் இது பயன் அளிக்க வல்லது!

 

அத்தோடு மட்டுமல்ல, ‘டல்லாக இருக்கும் மூளையை இது துடிப்புடன் செயல் பட வைக்கும். மந்த நிலையைப் போக்கும். உணர்ச்சியில் மாறுபாடு, மூட் சரியில்லை என்பன போன்ற குறைபாடுகளையும் இந்தப் பயிற்சி போக்குகிறது! நினைவாற்றலைக் கூட்டுவதுடன், ஸ்மார்ட்டாக ஒருவரை இது ஆக்குகிறது. எந்த மனநிலை உள்ளவருக்கும் கூட இது பொருந்துகிறது!

 

அது சரி, அந்தப் பயிற்சி தான் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை மேலிடுகிறது, இல்லையா?

 

பாதங்களை நேராக இருக்கும்படி வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வலது காதை இடது கை கட்டைவிரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே போல இடது காதை வலது கை கட்டைவிரல் மற்றும் சுட்டுவிரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் குந்தி அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியில் விட வேண்டும். ஆக இப்படி அமரும் போதும் எழுந்திருக்கும் போதும் மூச்சுப் பயிற்சியைச் சீராகச் செய்தல் வேண்டும். மூன்று நிமிடங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தல் வேண்டும். ஐந்து நிமிடம் வரை தொடரலாம் என்றாலும், மூன்று நிமிடப் பயிற்சியே நிச்சயமாகப் போதும். எந்த வயதினரும் இதை செய்யலாம்!

 eric

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த டாக்டர் எரிக் ராபின்ஸ் (Eric Robins), இந்தப் பயிற்சி மூலம் மூளை செல்களும் நியூரான்களும் ஆற்றல் உட்டப்பட்டவையாகின்றன என்கிறார். அவர் இதை தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு பிரிஸ்கிரிப்ஷனாக எழுதிக் கொடுத்து வருகிறார். அதனால் நோயாளிகள் மிக நல்ல பலனை அடைகின்றனர் என்கிறார். அவர் கூறும் ஒரு எடுத்துக்காட்டு இது: ஒரு பையன் பள்ளியில் பாடங்களைச் சரியாகவே கற்க முடியவில்லை. இந்தப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தவுடன் அவன்கிரேடுடன் முதல் மாணவனாக ஆனான்.

 

யேல் நரம்புஉயிரியல் நிபுணரான டாக்டர் யூஜீனியஸ் ஆங் (Yale neurobiologist Dr Eugenius Ang), காது மடல்களைப் பிடிக்கும் படும் போது மூளையின் நரம்புப் பாதைகளை தூண்டிவிடும் அகுபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார். மூளையின் இரு பாதிகளும் காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப் பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக ஆகிறோம்.

 

இந்தப்  பயிற்சியைச் செய்து முடித்த பின்னர் எடுக்கப்பட்ட   ஜி (எலக்ட்ரோஎன்செபலோக்ராஃபிமுடிவுகளை ஆங் காண்பித்து விரிவான விளக்கம் ஒன்றைத் தந்தார். அதன்படி, இந்தப் பயிற்சி வலது மற்றும் இடது பக்க மூளைப் பகுதிகள் இரண்டையும் ஒருங்கியையச் செய்கிறது. சாதாரணமாக, ஜியின் மூலம் எடுக்கப்படும் அளவுகள் உச்சந்தலையில் எலக்ட்ரோடுகள் மூலமாக  நியூரான் இயக்கங்கள் (neuron firings) மூளையில் ஏற்படுவதைக் காட்டி விடும். அத்தோடு மூளையின் அலை சமன்பாட்டையும்  சீரற்ற தன்மையையும் (wave normalcies and abnormalities) கூட அது காட்டி விடும்.

 

டாக்டர் ஆங், “ விஞ்ஞான பாஷையில் கூறுவதெனில், மூளையானது ஒவ்வொரு கட்டுப்பாடு பகுதியையும் அதைக் கட்டுப்படுத்தும் உடல் பகுதியையும் பொருத்தமுற அமையச் செய்கிறது. இது மிகச் சரியாக அடையப்பட வேண்டிய ஒரு அமைப்பு முறை. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட அமைப்பு முறை  சாதாரணமாக யாருக்கும் அமைவதில்லை. இன்று விற்கப்படும் மூளை தொழில்நுட்ப சி.டிக்கள் இதை அடைவதற்காக நுண்ணிய ஒலிகளை ஹெட்போன் மூலமாக கேட்க வைக்கின்றன. ஆனால் இந்த எளிய பயிற்சியானது இப்படிப்பட்ட சிடிக்களின் தேவையே இல்லாதபடி இதை எய்த வழி வகை செய்கிறதுஎன இந்தப் பயிற்சி முறையைப் புகழ்கிறார்.

 Thoppukaranam

இதைப் படிக்கும் தமிழ் வாசகர்கள் இலேசாக புன்சிரிப்இபை நழுவ விட்டால் அதில் தப்பே இல்லை. எங்கள் ஊரில் அப்பா, அம்மா, வாத்தியார் சின்ன வயதிலேயே பிள்ளையார் முன்னால் போடச் சொன்ன தோப்புக்கரணத்திற்கு இப்படி ஒருமாடர்ன் பில்ட் அப்பா என்று கேட்டால் அது நியாயம் தானே!

 

வகுப்பில் கேள்விக்கு பதில் சொல்லாத மாணவர்களைஉக்கிபோட வைத்து அவர்களின் மூளைச் செயல்பாட்டைக் காலம் காலமாகத் தூண்டி விட்ட நம் அருமை பள்ளிவாத்தியார்கள்டாக்டர் ஆங்கின் நவீன சோதனைகளைச் செய்தா, வழி வழியாக அதைச் செய்து வந்தார்கள்!

 

நம் முன்னோர்கள் சொன்ன எதிலும் ஒரு ஆழ்ந்த அர்த்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க இந்த தோப்புக்கரண சித்தாந்தமும் இப்போது உலகெங்கும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது

 

இதை முதன் முதலாக ப்ராணிக் ஹீலிங் மாஸ்டர் கோயா சோக் சூயி (Koa Chok Sui) தனதுசூப்பர் ப்ரெய்ன் யோகாஎன்ற நூலில் எழுதினார். பல இடங்களுக்குப் பயணம் செய்து இதை அறிமுகப்படுத்திப் பரப்பினார்.

 ganesh drawing by cat.

செலவில்லாத மூன்று நிமிட தோப்புக்கரணத்திற்கு வித்திட்ட பிள்ளையாருக்கு ஒரு தோப்புக்கரணம் போட்டு நமது பணிவான நன்றியைத் தெரிவித்து மூளை ஆற்றலைக் கூட்ட ஆரம்பிக்கலாமே!

***************

-Subham-

விநோதக் கனவுகள்; கனவில் வந்த கதைகளும் கவிதைகளும்

the-polygamy-slippery-slope

Article No. 2042

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 4  August  2015

Time uploaded in London : –13-04

கனவுகள் பற்றி எவ்வளவோ அதிசயச் செய்திகள் உள்ளன. கணித மேதை ராமானுஜம் கனவில் கடவுளிடமிருந்து பெற்ற கணித விஷயங்கள் முதல் பென்ஸீன் அமைப்பை கனவில் கண்ட விஞ்ஞானிகள் வரை எழுதிவிட்டேன். இப்பொழுது  கனவில் கதைகளையும் கவிதைகளையும் பெற்ற ஓரிரு சம்பவங்களைப் பார்ப்போம்.

திருமதி அமோஸ் பிஞ்சொட் என்பவர் ஒரு கவிஞர். ஒரு நாள் அவருக்கு கனவில் ஒரு கவிதை வந்தது. அது பலதார திருமணம் பற்றிய கவிதை. கனவில் கவிதை வந்தவுடன் பக்கத்தில் மேஜை மீதிருந்த பென்சிலையும் பேப்பரையும் எடுத்து அவசர அவசரமாகக் கிறுக்கி வைத்தார். காலையில் எழுந்தபோது மறந்தே போய்விட்டார். பின்னர், மேஜை மீது காகிதக் கிறுக்கலைப் பார்த்தபோது அதை எடுத்துப் படித்தார். அசந்தே போனார்.

அவர் எழுதிய கவிதை

ஹோகமஸ் ஹைகமஸ்

மென் ஆர் பாலிகமஸ்

ஹைகமஸ் ஹோகமஸ்

விமன் ஆர் மானொகமஸ்

பாலிகமஸ்=பல மனைவியரை மனத்தல்

மானோகமஸ் = ஒருவரை மட்டும் மணத்தல்

“Hogamus Higamus

Men are Polygamous

Higamus Hogamus

Women Monogamous.

(நான் நினைவில் கண்டவை: மறுநாள் காலையில் எழுத வேண்டிய கட்டுரைத் தலைப்பு பற்றி எண்ணியவாறே நான் தூங்குவேன். இரவில் முழிப்பு வரும்போது திடீரென்று சில புதிய ஐடியாக்கள்- அதாவது அந்தக் கட்டுரைக்குத் தொடர்புடைய விஷயங்கள் – மனதில் தோன்றும். உடனே படுக்கைக்கு அருகில் வைத்திருக்கும் சிட்டையில் எழுதிவைப்பேன். காலையில் அவைகளைத் தொகுத்து எழுதுவேன். ஆனால் இதுவரை கனவில் எதுவும் கிடைக்கவில்லை!!)

மேலை உலகத்தில் மிகப்பெரிய உளவியல் நிபுணர்கள் என்று கருதப்படும் பிராய்ட், யங் ஆகியோர் கனவுகளைப் பற்றி சொல்லும் கொள்கைகள் சரியென்று தோன்றவில்லை. அடி மனதில் புதைந்து கிடக்கும் நிறைவேறாத ஆசைகள்தான் இரவில் கனவுகளாக பரிணமிப்பதாக அவர்கள் கூறுவர். ஆனால், புத்தர், மஹாவீரர் ஆகியோரின் தாய்மார்கள் கண்ட சுபக் கனவுகள் பற்றி அவர்களுடைய சாத்திரங்கள் சொல்லுகின்றன. இந்து மத நூல்களிலும் ரிக் வேத காலம் முதல் கனவுகளின் பொருள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

கனவுகளின் விளக்கம் என்ற நூல் சம்ஸ்கிருததில் உள்ளது. இது வியாழ பகவான் எழுதியது. இது தவிர, பொன்னவன் எழுதிய கனா நூல் ஒன்றுளது. தமிழ் என்சைக்ளோபீடியாவான சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியில் ஏழு பக்கங்களுக்கு கனவுகள் பற்றி விளக்கங்கள் உள்ளன.

stevenson

கனவில் வந்த கதை

ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் என்ற கதாசிரியரை, ஆங்கிலம் படித்த எல்லோருக்கும் தெரியும். அவர் எழுதிய ‘ட்ரெஷர் ஐலண்ட்’, ‘கிட்நாப்ட்’ – முதலிய கதைகள் மிகவும் பிரசித்தமானவை. ஒரு நாள் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பயத்தில் ஓலமிட்டார். அவருக்கு ஏதோ பயங்கரக் கனவு எற்ற்பட்டிருக்கிறது என்று எண்ணி, அவருடைய மனைவி, லூயிஸைத் தட்டி எழுப்பினார். அவருக்கு ஒரே கோபம்; ஏன் என்னை எழுப்பினாய்? அருமையான ஒரு பயங்கரக் கதையைப் பார்த்துக்கொண்டிருந்தேன் – என்று சொல்லி திட்டினார். பின்னர் இதை “டாக்டர் ஜெகில், மிஸ்டர் ஹைட்”  என்ற கதையாக எழுதினார்.

லிங்கன் கண்ட கனவு

அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் ஒரு கனவு கண்டது பற்றி அவரே எழுதிவைத்து  இருக்கிறார்: “நான் ஒரு பெரிய சபையில் பலரைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் என்னைப் பார்த்து “இவனைப் பார்த்தால் சாதாரண ஆசாமி போலத் தோன்றுகிறது” – என்றான். நான் உடனே அவனைப் பார்த்து சொன்னேன்: “நண்பரே! கடவுளுக்கு சாதாரண ஆசாமிகளைத்தான் அதிகம் பிடிக்கும். அதனால்தான் அவர், சாதாராண மனிதர்களை அதிகம் படைத்திருக்கிறார்.”

rat

கனவில் வந்த எலிகள்

ஒரு ஜெர்மன் இளவரசனுக்கு எலிக் கனவு வந்தது. அந்தக் கனவில் மூன்று எலிகள் வந்தன. ஒன்று கொழுத்த எலி; இன்னொன்று நலிந்து மெலிந்து போன எலி; மூன்றாவதோ குருட்டு எலி. அவருக்கு இந்தக் கனவின் பொருளை அறிய ஆசை. உடனே எல்லோரும் “ஜிப்ஸி இன ஆரூடக்காரியிடம் கேளுங்கள்” – என்று சொன்னார்கள். அவரும் ஜிப்ஸி குறத்தியிடம் குறி கேட்டார். அந்தப் பெண் சொன்னாள்: “கொழுத்த எலி இருக்கிறதே – அதுதான் உன்னுடைய பிரதம மந்திரி, மெலிந்த எலி இருக்கிறதே – அது உன் நாட்டு மக்கள்; மூன்றாவது குருட்டு எலி யார் தெரியுமா? அது நீயே தான்!!

american indian

செவ்விந்தியர் கனவு

ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் வரை உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான். இதனால் உலகம் முழுதுமுள்ள பேராசைக்காரர்கள் எல்லாம் இந்தியாவை நோக்கி 2000 ஆண்டுகளாகப் படை எடுத்து வந்தனர். இப்படிப் புறப்பட்ட ஒரு ஆள்தான் கொலம்பஸ். அவர் கண்டுபிடித்ததோ மேற்கிந்தியத் தீவுகள். அதை இந்தியா என்று நினைத்து அனைவரையும் இந்தியர் என்று பெயரிட்டார். இப்படிப்பட்ட அமெரிக்க இந்தியர்களுக்குப் பொறுப்பாக சர் வில்லியம் ஜான்சன் என்பவரை பிரிட்டன் நியமித்தது. அப்பொழுது அமெரிக்காவின் ஒரு பகுதி அவர்களிடம் இருந்தது.

சர் வில்லியம் நல்ல ஜரிகை வேலைபாடுமிக்க உடைகளை இங்கிலாந்திலிருந்து தரவழைத்திருந்தார். இந்தியாவில் பல பழங்குடி மக்கள் இருப்பது போலவே, இந்தியாவைவிடப் பெரிய நாடான அமெரிக்காவில், நிறைய பழங்குடி இன மக்கள் இருக்கின்றனர். அதில் ஒரு இனம் மொஹாக் இனப் பழங்குடியினர். அவர்களின் தலைவன் ஹென் ட் ரிக்.

வில்லியமைச் சந்திக்கவந்தபோது அவரும் இந்த வெளிநாட்டு உடைகளைப் பார்த்து புகழ்ந்துவிட்டுச் சென்றார். சில நாட்களுக்குப் பின் திரும்பிவந்து தான் கண்ட கனவை வில்லியமிடம் கூறினார். அந்தக் கனவில், விலையுயர்ந்த வெளி நாட்டு உடைகளில் ஒன்றை வில்லியம் தனக்குக் கொடுப்பது போல கனவு கண்டதாகச் சொன்னார். உடனே சர் வில்லியமும் குறிப்பறிந்து ஒழுகினார். ஒரு உடையை அந்த செவ்விந்தியத் தலைவரிடம் கொடுத்தார். அவரும் மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்.

IF

IF

சில காலம் கழிந்தது. ஹென் ட் ரிக் மீண்டும் வில்லியமைக் காண வந்தார். இப்பொழுது வில்லியம், தான் கண்ட ஒரு கனவை ஹென் ட் ரிக்கிடம் சொன்னார். மோஹாக் நதிக்கரையில் விலை மதிக்கமுடியாத 5000 ஏக்கர் நிலப்பரப்பை பழங்குடி இனம் தனக்குக் கொடுப்பதாகக் கனவு கண்டதாகச் சொன்னார். உடனே அந்த இனத்தின் தலைவன் கொஞ்சமும் தயங்காமல், 5000 ஏக்கர் நிலப்பரப்பை வெள்ளைக்காரரிடம் கொடுத்துவிட்டார்.

போகும்போது அவர் சொன்னார்: வில்லியம், இனி உங்களைக் கனவில் காணும் ஆசையே போய்விட்டது. ஏனெனில் உங்கள் கனவெல்லாம் கொஞ்சம் ஜீரணிக்கக் கடினமானவை”.

(வெள்ளைக்காரனிடம் விலையுயர்ந்த ஆடையை வாங்கியதால் 5000 ஏக்கர் விலையுயர்ந்த நிலப்பரப்பை இழந்தது மோஹாக் இனம்! வில்லியம் கண்ட கனவு, உண்மைக் கனவோ பொய்க் கனவோ, யாம் அறியோம் பராபரமே!)

mohack indian

My previous Research Articles on Dreams:

Role of Dreams in Tamil Saivite Literature (posted on July 4, 2013)

Do our Dreams have Meaning? (Posted on December 29, 2011)

God’s Note Book (posted on March 16, 2014)

Strange Dreams, posted on 27 July 2015Inauspicious Dreams: Dreams in Vedas and Upanishads, Posted on 28th July 2015

Vedic Echo in Sumerian and Egyptian Concept of Dreams, Posted 31 July 2015

–சுபம்—

எகிப்து, சுமேரியாவிலும் த்ருஷ்டி பொம்மை, கந்த சஷ்டிக் கவச வரிகள்!!

Drishti-Bomma

Research Article No. 2040

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 3  August  2015

Time uploaded in London : – 17-51

(This has been published in English already)

கந்த சஷ்டிக் கவசம் தெரியாத அல்லது கேட்டறியாத தமிழர்கள் இருக்க முடியாது.தேவராஜ சுவாமிகள் அருளிய இக்கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. வட இந்தியாவில் இதே போல துளசிதாசர் இயற்றிய ஹன்மான் சாலீசா மிகவும் பிரசித்தமானது. இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அனுமன் பெயரைச் சொல்லிய மாத்திரத்தில் பூதப் பிசாசுகள் நடுங்கி ஓடி விடும். அதே போல கந்த சஷ்டிக் கவசம் சொன்னால் பேய், பிசாசுகள், பில்லி, சூனியம் அண்டாது.

கந்த சட்டிக் கவசத்தில் வரும் வரிகள், பில்லி சூனியம் பற்றி மிகவும் விளக்கமாக விளம்புகிறது. இதே நம்பிக்கை பழங்கால எகிப்திலும் இருந்தது. மத்தியக் கிழக்கில் இப்பொழுது சிரியா, இராக் நாடுகள் உள்ள சுமேரியாப் பகுதியிலும் இருந்தது. இதற்கெல்லாம் மூலம், அதர்வண வேதம் அதன் பத்தாவது மண்டலத்தில் இந்த விஷயங்கள் வருகின்றன.  கேரளத்தில் இப்பொழுதும் மாந்த்ரீகச் சடங்குகள் நடக்கின்றன. நம்மூர் அரசியல்வாதிகள் கூட எதிரிகளை ஒடுக்கவோ, மடக்கவோ, ஒரேயடியாக ஒழிக்கவோ இத்தகைய “மிளகாய் யாகங்களை” நடத்துகின்றனர்.

வேத கால மக்கள் உலகெங்கிலும் பரவியபோது நல்ல விஷயங்களை எடுத்துச் சென்றது போலவே இது போன்ற “ஆபிசாரப் பிரயோகங்களையும்” எடுத்துச் சென்றனர்.

இங்கிருந்து போனதற்கு என்ன ஆதாரம்? ரிக் வேத கலம் முதல் இன்று வரை இது மட்டுமின்றி எல்லாச் சடங்குகளையும் நாம் மட்டுமே செய்து வருகிறோம். இடையில் வந்த கலாசாரம் என்றால் என்றோ மறைந்து போயிருக்கும்.

bes

எகிப்திய பேஸ்

இப்பொழுது என்னைப் பொன்றோர் லண்டனில் குடியேறி ஒவ்வொரு தலை முறையிலும் எப்படி பழைய வழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோமோ அப்படி ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறிய இந்துக்கள் விட்டு விட்டனர். ஆனால் அவை அனைத்தும் எகிப்திய பபைரஸ் (பேப்பர்) தாளிலும், சுமேரியக் களிமண் பலகைகளிலும் பொறித்து வைக்கப்பட்டுள்ளன.

“பில்லி சூனியம்

பெரும்பகை அகல

……………………………….

ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பல கலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

……………………………………………………………………..

இப்படி நாம் கவசம் சொல்லுகிறோம். விநாயக கவசத்தில் சுருக்கமாக மாரணம் என்ற ஒரு சொல்லில் இவை அடக்கப்படுவிட்டது. பில்லி, சூனியம், ஏவல் வைப்போர், இப்படி எதிரிகளின் வீட்டில் மயிர், எலும்பு, நகம், பொம்மைகள் ஆகியவற்ரைப் புதைத்து வைத்து அவர்களை ஒடுக்குவர். இதைத் தான் தேவராய சுவாமிகள் விளக்கமாகப் பாடியுள்ளார்.

bes in Louvre

எகிப்தில் பல சிலைகள் மூஞ்சி சிதைக்கப் பட்டுப் மூளியானதற்கு இத்தகைய சடங்குகள் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதி யுள்ளனர். ஒருவருடைய உருவத்தைச் செய்து அதன் மீது மந்திரம் ஏவி அதை உடைத்தால் அவர் அழிந்து போவார் அல்லது மனம் உடைந்து போவார் என்ற நம்பிக்கை உலகெங்கிலும் நிலவியது.

எகிப்தியர் கீழ்கண்ட முறைகளைக் கையாண்டனர்:-

1.சாபம் இடும் மந்திரங்களைச் சொல்லுவது

2.களிமண் அல்லது மெழுகு பொம்மைகளைச் செய்து, சில சடங்குகளுக்குப் பின்னர், அவைகளை உடைப்பது

3.துர் தேவதைகளை அழைத்து அவர்களுக்கு கெட்ட சொப்பனங்களை உண்டாக்கி பயமுறுத்துவது

4.ஐஸிஸ் என்னும் தேவதையைக் குறித்தே பெரும்பாலான உச்சாடனங்கள் சொல்லப் படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக பேஸ் என்னும் குள்ள தெய்வம் உதவி செய்யும். இது நல்லதுக்கும் பொல்லாததுக்கும் உதவும் விகடகவி, பபூன் போன்ற உருவமுள்ள தெய்வம். ஆண்குறி பெரிதாகக் காட்டப் பட்டிருக்கும். திருஷ்டி பொம்மை போல நாக்கு வெளியே தொங்கும். அதைப் போலவே அவலட்சணமாக இருக்கும்.  நன்மை, தீமைகளுக்கு உதவும் மாந்த்ரீக தெய்வம். நம் பண்பாட்டில் கணபதி விக்னங்களை உருவாக்கவும் செய்வார், உடைக்கவும் செய்வார் என்பது போல.

250px-Kanthristi

இது தவிர எகிப்தியர்கள் ஏராளமான வகை தாயத்துகளைப் பயன்படுத்தினர். மம்மி என்னும் சவங்களுடன் நிறைய தாயத்துக்கள் கிடைக்கின்றன. நாம் யந்திரத் தகடுகளில் எழுதி அதை தாயத்துக்குள் போட்டுக் கழுத்தில் தொங்க விடுவதுபோல எகிப்தியர், புதிய பபைரஸ் புல் காகிதத்தில் எழுதி அதை தாயத்தாக வைத்துக் கொண்டனர். நாம் சங்கரன் கோவில் முதலிய கோவில்களிலும் மாரியம்மன் கோவில்களிலும் உடல் உறுப்புகளை வெள்ளியில் செய்து காணிக்கை உண்டியலில் போடுவது போல எகிப்தியர்களும் செய்தனர். எனது முந்தைய ஆராய்ய்சிக் கட்டுரைகளில் இது போன்ற பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன். இந்த நம்பிக்கை கிரேக்க நாடு வரை சென்று பரவியது.

அதர்வ வேதம் பத்தாவது மண்டலம் சொல்லும் விஷயங்கலை தமிழ் மாறன் எழுதிய, “அதர்வ வேதம் அருளும் ஆனந்த வாழ்வு” (பக்கம்175-182) நூலில் காண்க.

hecate 2

கிரீஸ் நாட்டில்

வெளிநாட்டுக் காரர்கள் சரித்திரம் எழுதியபோது பிதகோரஸ், சாக்ரடீஸ், பிளாட்டோ ஆகியோரைக் காட்டி உலகில் மிகவும் முன்னேறிய மக்கள் கிரேக்கர்கள் என்று புகழ்ந்து வைத்துள்ளனர். அவர்களுடைய மூட நம்பிக்கைகளையோ, அட்டூழியங்களையோ பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் உலகில் யாரும் அடிமைப்படுத்தாத சுதந்திர நாடு கிரேக்கம்.

ஆனாலங்கும் மேற்கூறிய எல்லா நம்பிக்கைகளும் இருந்தன. சாக்ரடீஸ் விஷம் அருந்தி சாவதற்கு முன்னர். ஆத்ம நண்பன் கிரீட்டொவை அழைத்து, குறிப்பிட்ட தெய்வத்துக்கு மறக்காமல் கோழியடித்துக் கும்பிட்டு விடு என்று சொல்லிவிட்டுச் செத்ததை முன்னரே எழுதி இருக்கிறேன்.அவர் சேவல்கோழி காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல் செய்திருந்தார்.

கிரேக்கர்கள் ஹெகதி என்னும் தெய்வத்தை முச்சந்திகளில் நிறுத்திவைத்து பேய் பிசாசு, துர் தேவதைகளுக்குப் பரிகாரம் செய்தனர். ஹெகதி என்பது சக்தி என்ற சொல்லின் திரிபு. நாம் முச்சந்திகளில் இரவில் போகப் பயப்பட்டது போல அவர்கள் முச்சந்திகளில் உணவு வைத்து வழிபட்டனர். அது நள்ளிரவில் முச்சந்திகளில் ஊளையிடும் நாய்களுடன் தோன்றும் என்று நம்பினர். இப்பொழுது எல்லா, எகிப்திய, சுமேரிய, கிரேக்க தெய்வங்களையும் மியூசியங்களில் காணலாம்.

ரிக் வேதத்தில் பூஷன் என்னும் தெய்வம் சாலைத் தெய்வமாகவும் , வழிப்போக்கர்களுக்கு உதவும் தெய்வமாகவும் போற்றப்படுகிறது.

pazuzu, british museum

சுமேரியப் பண்பாட்டில்

கண் திருஷ்டி விழுந்தால் கெடுதி என்ற நம்பிக்கை சுமேரியாவில் இருந்தது. நாம் வீட்டு வாசல்களிலும் கடை வாசல்களிலும் பூதம் போல, அவலட்சணமான ஒரு உருவத்தை வைக்கிறோம். அல்லது த்ருஷ்டி கழிய பூசனிக்காய் மீது வரைந்து தொங்க விடுகிறோம். சுமேரியர்கள் இதே போல பசசுஜு என்னும் அவலட்சண தேவதையை வாயில்களில் தொங்கவிட்டனர். போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் – என்பது போல அதை தாயத்தாகச் செய்து கழுத்திலும் மாட்டிக் கொண்டனர். அவர்களும் இந்துக்களைப் போல சாபங்கள் கொடுத்தனர். தீய சக்திகளை ஒழிக்க இரவு பூஜைகளைச் செய்தனர். அவர்களுடைய உச்சாடனங்கள், அதர்வ வேத மந்திரங்கள் போல இருக்கும்.

பெண்களை வசீகரிக்க மந்திரங்கள் வைத்திருந்தனர். இப்பொழுது வெளிநாடுகளில் காதலர் தின அட்டைகளில் ஒரு இருதயத்தை அம்பு (மன்மதன் மலர் அம்பு) துளைப்பது போல வரைந்து உலகெங்கிலும் பயன்படுத்துகின்றனர். இது அதர்வ வேத மந்திரத்தில் உள்ள வர்ணனை என்பதை முன்னொரு கட்டுரையில் தந்தேன். எல்லா உச்சாடனங்களையும், அதர்வ வேத மந்திரங்களையும் ஒப்பிட்டால் நாம்தான் மூலம்/ வேர் என்பது வெள்ளிடை மலை யென விளங்கும்.

எகிப்தில் பேஸ், சுமேரியாவில் பசுஜு. கிரேக்கர்கள் இவைகளின் பெயருக்கு இணையான கிரேக்க தெய்வங்களைச் சொன்னார்கள்.

pazzuzu assyrian

Source:

Dictionary of the Ancient Near East by British Museum

Ancient Egypt by David Silverman

Atharva Vedam (Tamil Book) by Tamilmaaran

Dictionary of World Myth by Roy Willis

Encyclopaedia of Gods by Michael Jordan

Pictures from various sources

pazuzu 3

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும்

bum bum 2

Article No. 2038

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 2nd August  2015

Time uploaded in London : – 21-04

 

இதுவரை ஆயிரத்துக்கும் மேலான தமிழ்ப் பழமொழிகளை தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாகத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். இதைத் தவிர தமிழுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளையும் சம்ஸ்கிருதப் பழமொழிகளையும் கொடுத்து வருகிறேன். இதோ மேலும் பத்து சம்ஸ்கிருதப் பொன்மொழிகளும் அதற்கு இணையான தமிழ்ப் பழமொழிகளும்;—

 

1)பர்வதானாம் பயம் வஜ்ராத்- சாணக்ய நீதி தர்பணம்

மலைகளுக்குப் பயம் இடி மின்னலிலிருந்து

2)பாதபானாம் பயம் வாதாத்- சாணக்ய நீதி தர்பணம்

மரங்களுக்குப் பயம் காற்றிலிருந்து

3)பாடச்சரலுண்டிதே வேஸ்மணி யாமிக ஜாகரணம்

திருடுபோன பின்னால், வீட்டில் காவல்காரனை எழுப்பி என்ன பயன்?

(கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?)

surya namaskar on chalk piece

4)பாணௌ பாயசத்க்தே தக்ரம் பூத்க்ருத்ய பாமர: பிபதி — சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

பாலால் சுடுபட்டவன் மோரையும் ஊதிக் குடிப்பான்

(அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்)

 

 

5)பாதலக்னம் கரஸ்தேன கண்டகேநைவ கண்டகம் – ஹிதோபதேசம்

காலில் குத்திய முள்ளை கையிலுள்ள முள்ளால்தான் எடுக்கவேண்டும்.

((முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்

வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்))

 

6)பாதாதாதஸ்ய யத்பாத்ரம் வார்தயா தன்ன துஷ்யதி

காலால் உதைக்க வேண்டியதை சொற்களால் சமாளிக்க முடியாது

((இணையான தமிழ்ப் பழமொழிகள்: அடியாத மாடு படியாது;

அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள்;

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும்;

மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது))

 mayil narai

7)பாவகோ லௌஹசங்கேன முத்கரைரபிஹன்யதே– சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

இரும்போடு சேர்ந்த நெருப்புக்கும் அடி விழும்

(சஹவாச தோஷம்)

 

8)பிசாசானாம் பிசாச பாசயைவோத்தரம் தேயம்

பிசாசுக்கு பிசாசு பாஷையில்தான் பதில் கொடுக்கவேண்டும்

 

 

9)புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தகதம் கதம் – சமயோசித பத்ய மாலிகா

புத்தகம், பெண், பணம் – மற்றவர் கைக்குப் போனால் திரும்பாது

 

10)ப்ரக்ஷாலனாத் ஹி பங்கஸ்ய தூராதஸ்பர்சனம் வரம்- ஹிதோபதேசம்

சேற்றில் விழுந்து கழுவிக் கொண்டிருப்பதைவிட, அது மேலே படாமல் காப்பது சிறந்தது

Prevention is better than cure

 

என்னுடைய பழைய கட்டுரைகள்:

யானை பற்றிய நூறு பழமொழிகள், ஜூன் 5, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – Part 1, ஜூன் 22, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – பகுதி 2, ஜூன் 22, 2012

இராமன் பற்றிய பழமொழிகள் ஏப்ரல் 10, 2014

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள், மே 31, 2012,
பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3) ஜூன் 26, 2012 & ஜூன் 28, 2012
பாரதி பாட்டில் பழமொழிகள், ஜூன் 25, 2012
அப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது) ஜூன் 26, 2012

ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
உடம்பைக் கடம்பால் அடி

மேலும் 33 இந்துமதப் பழமொழிகள் ,ஜூலை 21, 2015

ஆரோக்கியம் தொடர்பான பழமொழிகள், 25 பிப்ரவரி 2015

20,000 Tamil Proverbs (English article)

1892 ஆம் ஆண்டு விடுகதைப் புத்தகம்

IMG_2875 (2)

Article No. 2032

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 31 July 2015

Time uploaded in London : 21-12

 

இலண்டனில் பிரிட்டிஷ் நூலகத்திலுள்ள சிறிய புத்தகங்களை அப்படியே புகைப்படமெடுத்து போட ஆசை. 1892-ஆம் ஆண்டு வெளியான சுந்தர முதலியாரது விடுகதைப் பாடல்கள் நன்றாக இருந்தபடியால் அட்டை உள்பட உள்ள எட்டு பக்கங்களையும் இங்கே கொடுத்துள்ளேன். இவை மொபைல் போன், ஐ பேட் காமெராவில் எடுக்கும் போது சுமாராகவே விழுகின்றன. அடுத்த முறை செல்லும்போது இதைவிட நல்ல ‘காப்பி’ கிடைத்தால் இந்த பக்கங்களை எடுத்துவிட்டு நல்ல நகலை வெளியிடுவேன். வலது பக்கமுள்ள பக்கங்கள் முழுமையாக இருக்கும். இடது புற பக்கங்களில் ஒவ்வொரு வரியிலும் கடைசியிலுள்ள எழுத்துக்கள் ஊகித்தறிய வேண்டியிருக்கும். எப்படியாகிலும் எழுத்துக்களைப் பெரிதாக்கி (ஸூம் செய்து) படிக்க வேண்டுகிறேன். உங்கள் பொறுமைக்கு நன்றி.

IMG_2851

IMG_2868 (2)

IMG_2869 (2)

IMG_2870 (2)

IMG_2871 (2)

IMG_2872 (2)

IMG_2873 (3)

IMG_2874 (2)

அவரங்கஜீப்பிடம் மகன் பட்ட பாடு!

aurangazeb

ஔரங்கசீப், ஆஷ்மோலியன் மியூசியம், ஆக்ஸ்fஓர்ட் (காப்பிரைட்)

Article No.2022

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 27  July 2014

Time uploaded in London : 7-59 am

First two parts of this series are published in the last few days. This is the last part.

முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மகாகவி பாரதி கூறும் காரணம்! – 3

By ச.நாகராஜன்

அவரங்கஜீபிடம் மகன் பட்ட பாடு!

அவுரங்கஜீப்பின் சந்தேகங்களை வரிசையாக மகாகவி அழகுற எடுத்துரைக்கிறார் இப்படி:-

“இலேசான சந்தேகங்களினால், தான் மிகவும் காதல் பூண்டிருந்த புத்திரர்களைச் சிறையிலிவ்ட்டு விடுவான். தனக்குப் பின் அடுத்த பட்டத்திற்கு வரவேண்டுமென்று அவன் தீர்மானம் செய்து வைத்திருந்த பஹாதூர்ஷா (முவாஜிம்) என்ற மகனை ஏழு வருஷம் சிறையிலடைத்து வைத்திருந்தான்.

1698ஆம் வருஷத்தில் அவனை ஆப்கானிஸ்தானத்துக்குச் சுபேதாராக (வைஸிராய்) அனுப்பினான்.அங்கே தன் மகனைச் சுற்றி அவன் நியமித்திருந்த ஒற்றர் கூட்டம் சொல்லி முடியாது. மகன் கிழக்கே பார்த்தது, மேற்கே பார்த்தது, மூச்சு விட்டது முதலாக இவனுக்கு ரகசியமாகத் தகவல் கிடைத்து விடும்படி ஏற்பாடு செய்திருந்தான். மகன் யானைப் போர் விட்டுப் பார்த்தால் குற்றம். அவன் உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்ததாகத் தெரிந்தால் குற்றம். அவுரங்கஜீபின் ஒற்றர்களின் செவியில் படாமல் அவன் யாரிடமேனும் ரஹஸ்யம் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிந்தால் குற்றம். இவ்விதமான பிரஸ்தாபங்கள் வரும்போதெல்லாம் ‘இந்தப் பாதக மகன் நாமிருக்கும்போதே அரசனுடைய பதவியை விரும்புகிறான்’ என்று கருதி, அவுரங்கஜீபின் நெஞ்சிலே எரிச்சலுண்டாய் விடும்.

காபூலிலே மகனுடைய அந்தப்புரத்தில் கூட அவுரங்கஜீப் தனதாக ஒரு கிழவியை நியமித்திருந்தான். அந்தப்புர காரியங்களை மேற்பார்க்கும் வேலை அந்தக் கிழவிக்குக் கொடுத்திருந்தான். அது வெளிக்கு யதார்த்தத்தில் அக்கிழவிக்கு பஹாதூர்ஷாவின் வார்த்தைகளையும் செய்கைகளையும் கவனித்துக் கொண்டிருந்து அவுரங்கஜீபுக்குத் தகவல் கொடுக்கும் வேலை. இப்படியே எல்லா மக்களையும் ஒற்றர்களின் கீழ் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பிள்ளைகளை ராஜதானிலியிருக்க இடங்கொடுக்க மாட்டான். சமீபத்திலிருந்தால் அவர்களுக்கு ராஜ்ய ஆசையுண்டாய் விடுமென்று அவனுக்குப் பயம். தூர தேசங்களில் சுபேதார்களாக அனுப்பப்பட்டிருக்கும் புத்திரர்கள் தில்லிக்கு வர வேண்டுமென்று சொன்னால், வர வேண்டாமென்று கட்டளையனுப்பி விடுவான். சொந்தப் புத்திரர்கள் விஷயத்தில் இத்தனை சமுசயம் பாராட்டிய ராஜா மற்ற காரியஸ்தர்களையெப்படி நடத்துவானென்பது சொல்லவே வேண்டியதில்லை. எல்லோரிடத்திலும் சந்தேகம். அனேக வருஷங்கள் இவன் தனது கையாலே சமைத்துத் தின்று கொண்டிருந்தான். வேறு யாரேனும் சமைத்தால் எங்கே விஷம் கலந்து விடுவார்களோ என்று பயம். எவ்வளவோ அறிவிருந்தும், எவ்வளவோ சத்திரிய குணங்களிலிருந்தும் அவுரங்கஜீபுக்கு இப்படி நித்திய சந்தேகம் ஜனித்த காரணம் யாது?

bharti-image1

ஆரம்பத்தில் அவன் குரூரச் செய்கைகளாலும் வஞ்சனையாலும் அதர்மத்தாலும் சிங்காதனத்திற்கு வந்ததே காரணம்.

முதலாவது அதர்மம். இரண்டாவது சமுசயம். மூன்றாவது வினாசம்.

இப்படி முகலாய அரசு வீழ்ந்தது”

பாரதியாரின் இந்தக் கட்டுரையை அவரது பல்வேறு கட்டுரைகளுடனும் பாடல்களுடனும் சேர்த்துப் படித்துப் பார்த்தால் அவனது “ஆழ்ந்திருக்கும் கவியுளம்” நன்கு தெரிய வரும்.

அதர்மம் அழியும்!

அதர்மம் ஜெயிக்காது. பதினாயிரம் புண்கள் வழியேவ் யமன் பாய்ந்து அதர்ம ராஜ்யத்தை அழித்து விடுவான். முகலாயரின் அதர்ம ராட்சஸ ராஜ்யம் அழிந்து ஒழிந்தது என்பதை உணர்கிறோம்.

பாரதியாரின் இதர கட்டுரைகளில் குறிப்பிடத் தகுந்தவை

1)முஸ்லீம்களின் சபை (விஜயா இதழில் 1910, பிப்ரவரி 1ஆம் தேதி இதழில் வெளியானது)

2) ஒரு மகமதிய ஸாது (விஜயா இதழில் 1910, பிப்ரவரி 18ஆம் தேதி இதழில் வெளியானது)

3) ஶ்ரீ சிவாஜி உத்ஸவமும் ஆங்கிலோ இந்தியர்களும்

இவற்றில் உள்ள பாரதியாரின் கருத்துக்களை இன்னொரு கட்டுரையில் காண்போம்!

இந்தத் தொடர் கட்டுரை முற்றும்.

**********