பி.பி.சி. தமிழோசையில் பெர்னார்ட் ஷா நாடகம்

shaw wealth

Article No.2020

Written லண்டன் சுவாமிநாதன்

Swami_48@yahoo.com

Date : 26  July 2014

Time uploaded in London :7-16

ஷா தொடர்பான முதல் ஐந்து சுவையான சம்பவங்களை ஏற்கனவே வெளியிட்டேன்

 

6.இங்கிலாந்தை வெல்ல வந்தவன் நான்!

“ஐயா! ஷா அவர்களே, நீவீர் பிறந்த அயர்லாந்து நாட்டைவிட்டு இங்கிலாந்து தேசத்துக்குப் பிழைப்புத் தேடி வந்திருகிறீரே. அங்குள்ள ஜார்ஜ் மூர், யீட்ஸ் போன்ற மாபெரும் கவிஞர்கள் உமக்கு ஊற்றுணர்ச்சி தரவில் லையோ? – என்று லீலா மக்கார்த்தி என்பவர் கேட்டார்.

ஷா பதில் சொன்னார்:

“உம்மைக் கடவுள் காப்பாற்றட்டும்! ஈட்ஸ் என்பவருக்கு தந்தையாக இருக்குமளவுக்கு எனக்கு வயதாகிவிட்டது. ஜார்ஜ் மூருக்கோ அயர்லாந்து என்ன என்றே அப்போது தெரியாது. அவர் அப்போது பாரிஸில் ஓவியக் கலை பயின்று கொண்டிருந்தார். அவருக்கு அவரைப் பற்றியே தெரியாது. நீவிர் இன்று காட்டும் அயர்லாந்து அப்போது இல்லை. நான் ஐரிஷ் மலைகளில் உட்கார்ந்துகொண்டு காலம் தள்ள விரும்பவில்லை. ஏனெனில் இங்கிலாந்து, அயர்லாந்தை வசப்படுத்திக் கொண்டது. அங்கே ஒன்றும் இல்லாததால் இங்கிலாந்தை வெற்றி கொள்ளத் தீர்மானித்து இங்கே வந்தேன். இப்பொழுது உமக்கே தெரியும், நான் இங்கிலாந்தை வென்று விட்டேன் என்பது!

(இதை எழுதுகையில் ஷா புகழேணியின் உச்சிக்கே போய்விட்டார்).

Xxx

george_bernard_shaw_quote

7.எனக்கு பணமே குறி!

ஷா எழுதிய நாடகங்களைத் திரைப்படமாக்குவதற்கு உரிமை கேட்டு, சாம் கோல்ட்வின் என்ற படத் தயாரிப்பாளர் நச்சரித்தார். ஷா கேட்ட பணம் கிடைக்க வில்லை. ஆகவே உரிமையை மறுத்துவிட்டார்.

அவர் சொன்னார்: “ஷா, இதோ பாருங்கள். நான் திரைப்படம் தயாரித்தால், உமது புகழ் உலகெங்கும் பரவும். கலைத் துறைக்கு நீர் சேவை செய்ததாக இருக்கட்டும். அல்லது உமது நாடகங்கள் யாருக்குத் தெரியப் போகின்றன?”

ஷா, உடனே, சொன்னார்: கோட்வின், “உமக்கு கலையே பிரதானம். எமக்கோ பணமே பிரதானம்”.

Xxx

my fair lady

  1. நானும் பி.பி.சி. தமிழோசையும்: பிக்மாலியன்

காப்ரியல் பாஸ்கல் என்ற பிரபல படத் தயாரிப்பாளர் ஹாலிவுட் சென்று ஒரு படம் தரித்தார். அது மட்டும் வெற்றி அடைந்தது. பின்னர் அவர் தொட்டது எதுவும் விளங்கவில்லை. பயங்ர ஏமாற்றம்.

லண்டனுக்குத் திரும்பிவந்தார். ஒரு நாள் நல்ல வெய்யில் அடித்தது. அவர் முன்னர் எப்போதும் ஷா அவர்களைச் சந்தித்ததே இல்லை. ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் முயன்றும், அவர்களுக்கு ஷா, படம் தயாரிக்கும் உரிமை தரவில்லை என்பதும் அவருக்குத் தெரியும்.

அட! கல்லை விட்டு எறிவோம், விழுந்தால் மாங்காய்; போனால் கல் தானே! என்று நினைத்துக் கொண்டு ஷாவின் வீட்டை நோக்கி நடந்தார்.

ஷாவிடம் பாஸ்கல் தன்னுடைய ஆசையைத் தெரிவித்தார். ஷா கேட்டார்:

“ஐயா, பாஸ்கல் அவர்களே, உம்மிடமுள்ள முதலீடு எவ்வளவு சொல்லும்”.

பாஸ்கல் சொன்னார்: “15 ஷில்லிங் 6 பென்னி வைத்திருக்கிறேன். ஆனல் ஒருவரிடம் ஒரு பவுண்ட் கடன் வாங்கி இருக்கிறேன்.

ஷாவுக்கு அந்த உண்மைவிளம்பியை மிகவும் பிடித்துப் போய்விட்டது. பையிலிருந்து ஒரு பவுண்ட் நாணயத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார். முதலில் போய்க் கடனைத் திருப்பித் தந்துவிடுங்கள். என்னுடைய நாடகத்தைப் படமாக்கும் உரிமையைத் தருகிறேன்.

பாஸ்கலுக்கு மிக்க மகிழ்ச்சி. பிக்மாலியன் படத்தைத் தயாரித்தார். அது மிகவும் பெரிய வெற்றி அடைந்தது.

(எனக்கும் பெர்னார்ட் ஷா நாடகங்களுக்கும் தொடர்பு உண்டு. லண்டனில் பி.பி.சி. தமிழோசையில் தமிழ் ப்ரட்யூசராக வேலை பார்த்த போது நடிகை ராதிகாவுடன் பிக்மாலியன் (மை fஏய்ர் லேடி) நாடகத்தின் தமிழ் வடிவத்தில் நடித்தேன். அது பி.பி.சி. ரேடியோவில் ஒலிபரப்பாகி வெற்றி அடைந்தது. அதில் எனக்கு முக்கிய வேடம்; பேராசிரியர் ஹிக்கின்ஸ்.

அது மட்டுமல்ல. பி.பிசி. அனுமதி பெற்று, ஷாவின் செயி ன் ட் ஜோன் நாடகத்தையும் மொழிபெயர்த்தேன். ஆனால் அது நாடகமாக நடிக்கப் படாததால் ஒலிபரப்பாகவில்லை)

saintjoanplay

Xxx

9.சின்னப் பையனுக்கும் ஷா உதவி!

வயதான காலத்தில் ஷா, தென் ஆப்பிரிக்காவுக்கு விஜயம் செய்தார். ஒரு நீச்சல் குளதில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். அங்கே குறும்பு செய்யும் பையன்கள் சிலர் வந்தனர். அதில் மிகவும் சிறியவனை அழைத்து, ஷாவைக் காட்டி, “அதோ பார், ஒரு கிழவன் நீச்சல் அடிக்கிறான். அவன் தலையை நீரில் அமுக்கும் துணிச்சல் உனக்கு உண்டாடா?” என்று உசுப்பிவிட்டனர். அவன் “என்னால் முடியும் , அப்படிச் செய்தால் என்ன தருவீர்கள்?” என்று கேட்க ஒரு ஷில்லிங் தருவதாக எல்லோரும் கூறினர்.

ஒரு ஷில்லிங் பந்தய பணம் கிடைக்கப்போகிறது என்ற ஆசையில் ஷாவை நோக்கி நீச்சல் அடித்தான்.

ஷா, அவனை ஒரு பார்வை பார்த்தார். அவனுக்கு உடல் எல்லாம் நடுங்கத் துவங்கியது.

அவனருகில் சென்று, ஷா என்ன விஷயம் என்று கேட்டார். அவன் உண்மையை ஒப்புக் கொண்டான். ஷாவுக்கு அந்தப் பையனிடத்தில் இரக்கம் ஏற்பட்டது. கொஞ்சம் பொறு; மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்கிறேன். என்னை தண்ணீருக்குள் ஒரு அமுக்கு அமுக்கு – என்றார். அவனும் அப்படியே செய்தான். ஒரு ஷில்லிங் பெற்றான். அவன் தோழர்களுக்கு இது தெரியாது.

Xxx

shaw5

10.நான் எழுதியதெல்லாம் (நான்ஸென்ஸ்)

ஷா எழுதிய ஒரு நாடகம் “ஆர்ம்ஸ் அண்ட் மான்”. அதன் துவக்க விழாவுக்கு ஷா வந்தார். இறுதியில் அவரை மேடைக்கு அழைத்தனர். அவர் மேடையில் தோன்றி எல்லோருக்கும் சிரம் தாழ்த்தி வணக்கம் சொன்னார். ஒரே ஆரவாரம், பாராட்டுகள்.

திடீரென்று பால்கனியில் (உப்பரிகை) இருந்து ஒருவர் கூச்சல் போட்டார்:- ஹே, ஷா. வா, வா, முன்னுக்கு வா! நீ எழுதியதெல்லாம் சுத்த அபத்தம் (நான்சென்ஸ்) என்பது உனக்கே தெரியுமே.

இதைக் கேட்ட ஷா, புன்சிரிப்புடன் சொன்னார்:

நீங்கள் சொல்லுவதை நான் அப்படியே வழிமொழிகிறேன். ஆனால் இவ்வளவு பெரிய கூட்டத்தில் நானும் நீங்களும் மட்டுமே இப்படி நினைக்கிறோம். மற்றவர்கள் எல்லோரும் நமக்கு எதிர்த் திசையில் நிற்கிறார்களே! நாம் எம்மாத்திரம்? – என்றார்.

((அதாவது,ஷாவின் எழுத்துகள் நான்சென்ஸ் என்று சொல்பவர் இருவர் மட்டும்மே. மற்ற அனைவரும் ஷாவின் ஆதரவாளர்கள்!!))

(தமிழ்நாட்டின் பெர்னார்ட் ஷா – துக்ளக் சோ ராமசாமி என்றால் மிகையாகாது. அவர் எழுதிய ‘முகமது பின் துக்ளக் நாடகத்தை’ நினைவுபடுத்துகிறது மேற்கூறிய சம்பவம்)

GeorgeBernard-Shaw-Heartbreak-House-1

–சுபம்–

அழகிய பெண்+ பெர்னார்ட் ஷா = அழகான, புத்திசாலிப் பிள்ளை!

Shaw1981CZ

Article No.2019

Written லண்டன் சுவாமிநாதன்

Swami_48@yahoo.com

Date : 26  July 2014

Time uploaded in London :7-07

 

1.இசாடொரா டங்கன் என்ற பெண்மணி, புகழ்பெற்ற கதாசிரியரும் நாடக ஆசிரியருமான பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு “அருமையான” யோஜனை சொன்னார்.

“பாருங்கள் நான் எவ்வளவு அழகு! நீங்களோ பெரும் புத்திசாலி என்று உலகமே பாராட்டுகிறது. என்னைக் கல்யாணம் செய்து கொள்ளுங்கள். நமக்குப் பிறக்கும் குழந்தை என்னுடைய அழகையும், உங்களுடைய புத்திச் சாலித்தனத்தையும் கொண்டிருக்கும். ஏனெனில் மரபியல் கூட, தாய், தந்தையரின் அம்சங்கள் குழந்தையிடம் இருக்குமென்று ஒப்புக் கொள்கின்றது” – என்றார்

பெர்னார்ட் ஷா சொன்னார்: “உண்மைதான்! தாய் தந்தையரின் அம்சங்கள் இருக்கும் என்பது உண்மையே. ஒருவேளை என்னுடைய அழகையும், உன்னுடைய புத்திசாலித்தனத்தையும் கொண்டுவிட்டால் என்ன செய்வது? ஆகையால் திருமணமே வேண்டாம்” என்றார்.

Xxxx

2.தனக்குத் தானே எழுதிய தாக்குதல் பேட்டிகள்!

பெர்னார்ட் ஷா புகழ் பெறாத, ஆரம்ப காலத்தில் அவரைக் கடுமையாகத் தாக்கியும் , அவமதித்தும் மாலைப் பத்திரிகைகளில் பேட்டிகள் வரும். எல்லோரும் அதைப் படித்துவிட்டு இப்படி ஒரு ஆள் இல்லவே இல்லை. கற்பனை செய்து எழுதுகிறார்கள். உண்மையில் ஒரு ஆள் இருந்தால் பேட்டி காண வருபவனை மாடியிலிருந்து உருட்டி விட்டிருப்பார் அல்லது போலீஸையாவது கூப்பிட்டிருபார் என்றெல்லாம் மக்கள் பேசத் துவங்கினார்கள். நல்ல பிள்ளை நாயகமாக நடிக்கிறாரே! இது உண்மையாக இருக்கவே இருக்காது என்றனர்.

உண்மை என்னவென்றால், அந்தப் பேட்டிகள் அனைத்தும் பெர்னார்ட் ஷாவாலேயே எழுதப்பட்டன!!

Xxx

shaw2

3.வாழைப்பழத்தில் ஊசி!

ஒருமுறை ஒரு நாடகத்துக்கு இவரை விமர்சனம் எழுதச் சொல்லி டிக்கெட் அனுப்பி இருந்தனர். நாடகமோ சுத்த மோசம். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி ஒரு விமர்சனம் எழுதினார்:-

“நான் ஒரு இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டேன். ஒரு நாடகத்துக்குப் போயிருந்தேன். பொதுவாக விமர்சகர்களுக்குக் கொடுக்கப்படும் விஷய அட்டை எதையும் தரவில்லை. ஆகையால் நாடகத்தின் பெயரே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆமை வேகத்தில் நாடகம் நகர்ந்தது. பாதி நாடகத்துக்கு எடுத்துக் கொண்ட நேரத்தை வேறு ஒருவராக இருந்தால் ஐந்தே நிமிடத்தில் அந்த விஷயத்தைச் சொல்லி இருப்பார்கள். இப்ஸென் போன்றோர் , பத்து வருஷத்துக்கு முன்னரே சொல்லியிருப்பார். போகட்டும்.

நாடக இடைவேளை நேரம் வந்தது. சரி! கொஞ்சம் காற்றாட நடந்துவிட்டு வரலாம் என்று நடந்தேன். நாடகம் பார்க்கிறோம் என்பதே மறந்து வீட்டுக்கே வந்துவிட்டேன்! நாடகத்தின் முடிவைப் பார்க்கமல் விமர்சனம் எழுதுவது முறையன்றே! அவ்வளவுதான்; நாடகத்தை ஏற்பாடு செய்தோருக்கு ஒரு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டுவிடுகிறேன்”

(நாடகம் படு சுமார் என்பதை இப்படி அங்கதமாக எழுதினார்)

Xxx

4.இன்னா செய்தாரை ஒறுத்தல்…….

பழைய புத்தகக் கடையில் ஷாவின் நூல்!

ஒரு முறை ஜி.பி.ஷா, ஒரு பழைய புத்தகக் கடையில் நுழைந்தார். அவருடைய நாடகத் தொகுப்பு அங்கு இருப்பதைப் பார்த்துத் திடுகிட்டார். காரணம், இது அவரே கையெழுத்திட்டு அவரது நண்பருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகம். உடனே அந்த நண்பரைப் பழிவாங்கத் திட்டமிட்டார். பழைய புத்தகக்காரனிடமிருந்து அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கினார். “மீண்டும் அன்புடன் ஜி.பி.ஷா” என்று கையெழுத்திட்டு, அந்த பழைய நண்பருக்கு அனுப்பிவைத்தார்!

அனுப்பி “வைத்தார்” – என்பதைவிட அனுப்பி வைதார்! என்பதே பொருத்தம்!

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல் – குறள் 314

shaw3

Xxx

5.வாங்கிக் கட்டிக்கொண்டார்!

லேடி ராண்டால்ப் என்பவர் இவரை விருந்துக்கு அழைத்திருந்தார். அதற்கு வரமுடியாதென்று சொல்லி, ஷா ஒரு பதில் கடிதம் அனுப்பினார்:–

அன்பரே? என் வழக்கங்களை மாற்றும்படி என் மீது தாக்குதல் தொடுத்தீரே! நான் என்ன தவறு செய்தேன்?

என்று ஷா எழுதினார்.

லேடி ராண்டால்ப் வில்லாதி வில்லி! சூராதி சூரி! அவர் எழுதினார்:-

“அன்பரே; உம்முடைய பழக்க வழக்கங்கள் பற்றி யான் ஒன்றும் அறியேன். உம்முடைய நடை உடை பாவனை அளவுக்கு அது மோசமாயிராது” — என்று நம்புகிறேன்.

–தொடரும்…………………..

Xxx

காலம் என்னும் மாபெரும் சக்தி! பாரதியார் கருத்து

பாரதி

Article No.2018

Written ச .நாகராஜன்

Swami_48@yahoo.com

Date : 25  July 2014

Time uploaded in London :8-49

 

 

முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மகாகவி பாரதி கூறும் காரணம்! – 2

.நாகராஜன்

 

(இக்கட்டுரையின் முதல் பகுதி ஜூலை 23 வெளியாகியது)

 

காலம் என்னும் மாபெரும் சக்தி!

பாரத ராஜ்யம் மொகலாயர் கையினின்றும் நழுவ வேண்டுமென்று கால சக்தி நிர்ணயம் செய்து விட்டது.”

என்று கட்டுரையின் முன் பகுதியில் கூறும் மகாகவிகாலசக்தியைப் பற்றி விரிவாகக் கூறுகிறார் இப்படி:-

ஓர் பெரிய ராஜ்யம் அழிவதென்றால் அது ஸாமான்யமான சம்பவமன்று. கடைசிப் பொழுதிலே தான் காலசக்தி ஓர் மனுஷ்யாவதாரமாகத் தோன்றி அதை முடித்து வேறு சகம் தொடங்கச் செய்து விட்டுப் போகிறதாயினும், அதற்கு முன்னிட்டே நெடுங்காலமாகக் காலசக்தி பதினாயிர வழிகளிலே மறைவாக அதனை அரித்துக் கொண்டு வருகின்றது. ஒரு ராஜ்யத்தின் மரணத்தை நினைக்கும்போது மிகப்  பரிதாபமுண்டாகிறது. நேற்று வரை கல்லைப் போலிருந்த அதன் சரீரத்திலே மறைவாகப் பதினாயிரம் புண்களுண்டாகின்றன. அந்தப் பதினாயிரம் புண்களின் வழியாகவும் யமன் உள்ளே நுழைகிறான். ஒவ்வொரு புண் இலேசாக வெளிக்குத் தென்படும். பார்ப்பவர்கள்! இவ்வளவு வலிமையுடைய சரீரத்தை இச்சிறிய புண் என்ன செய்து விடும்?” என்று யோசிப்பார்கள். முடிவில் திடீரென்று அந்தப் பெரியவுடல் மலை சரிவது போலச் சரிந்து விழும்போது உலகத்தாரெல்லாம் கண்டு வியப்படைவார்கள்

காலசக்தியைப் பற்றிய இந்த பாரா தனியாக தரப்பட்டிருக்கிறது. ம்காகவியின் அழகிய வாக்கியங்களில் பெரும் உண்மை புதைந்திருக்கிறது. ஒரு சாம்ராஜ்யத்தின் அழிவுக்கான வித்து சிறு சிறு புண்களாகபதினாயிரவழிகளிலே உண்டாகும் என்கிறார் அவர்.

பதினாயிரம் புண்களின் வழியாகவும் எமன் உள்ளே நுழைகிறான் என்ற அழகிய வாக்கியம் ஆழ்ந்த பொருளைத் தருகிறது. ஒரு வழியில் அல்லா, ஆயிரம் வழிகளை உண்டாக்கி அழிவைத் தருகிறான் யமன்!

இதையே மனதில் ஊன்றிப் படிப்பவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அழிவுக்கும்பதினாயிரவழிகளிலே புண்கள் ஏற்பட்டு விட்டன; அழிவு ஒன்று தான் பாக்கி என்று அவர் குறிப்பால் உணர்த்துகிறார் என்ற உணர்வு ஏற்படும்!

காலசக்தியைப் பற்றிய மகாகவி பாரதியாரின் தெளிவான சிந்தனை அவரது பாடல்களில் பல்வேறு இடங்களில் பளிச்சிடுவதைப் பார்க்கலாம்இதைத் தனியாக ஒரு கட்டுரையில் பின்னர் பார்ப்போம்.

 

 

பதினாயிரம் புண்கள்

பாரதியாரின் வார்த்தைகளில் கட்டுரையின் அடுத்த பகுதி இது:-

“மொகலாய ராஜ்யத்தின் சரீரத்திலே தோன்றிய கணக்கற்ற புண்களை இங்கே விஸ்தரித்து முடியாது. ஒன்றா? இரண்டா? ஆயினும், அவுரங்கஜீப்பைப் பற்றிக் கல்கத்தா மாதாந்தப் பத்திரிகையொன்றில் யதுநாத் ஸர்க்கார் என்னும் பண்டிதர் எழுதி வரும் சரித்திரக் குறிப்புகளை வாசிக்கும் போது ஒரு முக்கியமான பெரும் புண் தென்படுகிறது.ல்

“ஸம்சயாத்மா விநச்யதி” என்று பகவான் கீதையிலே சொல்லுகின்றார். ஒருவனுக்கு நாசம் வந்து விட்டதென்பதற்குத் தெளிவான அடையாளம் யாதெனில், அவன் உள்ளத்திலே சமுசயங்கள் வந்து குடிகொண்டு விடும். இது மிக நல்ல அடையாளம். அவுரங்கஜீப் ராஜாவின் நெஞ்சம் சமுசயங்களுக்கெல்லாம் ஓர் வாசஸ்தலமாக இருந்தது. ராஜா மனதில் எப்போது அசாதாரணமான சமுசயங்கள் உதிக்கின்றனவோ, அப்போது அவனுடைய ராஜ்யம் உதிரத் தொடங்கி விட்டதென்று பாவித்துக் கொள்ளலாம்.

அவுரங்கஜீப்பின் சமுசயங்களை வாசிக்கும்போது மனதிற்கு மிகுந்த சலனமுண்டாகிறது. இவ்வளவு வல்லமை கொண்ட அரசனுக்கு இவ்வளவு சமுசயங்கள் எப்படி உண்டாயினவென்று வியப்புண்டாகிறது.

என்ன செய்யலாம்?

காலசக்தியின் செயல்!

இப்படியாக மகாகவி பாரதியார் காலசக்தியின் செயலை மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறார் இங்கு!

அவுரங்கஜீப்பின் சமுசயங்கள் என்னென்ன? சுவாரசியமாகப் பட்டியலிடுகிறார் பாரதியார்!

அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!

****************

 

நட்பின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்!

lincoln india

Article No.2015

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 24  July 2014

Time uploaded in London : காலை 8-53

அமெரிக்காவின் 16-ஆவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் ஆப்ரஹாம் லிங்கன். அடிமைத்தனத்தை ஒழித்து, அமெரிக்க உள்நாட்டுப் போரில் வென்று, அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றியவர். அவரது பதவிக்காலத்தில் கடமையிலிருந்து தவறிய படைவீரர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். ஆயினும் ஒவ்வொரு சிப்பாயும், செல்வாக்குமிக்க ஒரு ஆளிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று வரவேண்டும்.

ஒரு படைவீரனின் கடிதம் மொட்டையாக, தனிக் கடிதமாக இருந்தது. “அட! என்ன இது? இதனுடனிருந்த சிபாரிசுக் கடிதம் எங்கே?” — என்று இதைக் கவனித்த ராணுவ அதிகாரியிடம் கேட்டார்.

அவரும், அந்த வீரன் எந்தக் கடிதமும் இணைக்கவில்லை – என்றார்.

அட! முக்கிய ஆள் சிபாரிசுதான் வேண்டுமென்பதில்லை. யாராவது நண்பர், ஒரு ஆதரவுக் கடிதம் கொடுத்தால் போதுமே! – என்றார் லிங்கன்.

அதையும் நான் கேட்டுவிட்டேன்; அவருக்கு நண்பர் எவருமே இல்லை என்று சொல்கிறார் – என்றார் அதிகாரி.

அப்படியா? நானே அவருடைய நண்பன்! – என்று சொல்லி அந்தப் படைவீரனுக்கு மன்னிப்பு அளித்தார்!

குகன் என்னு வேடனையே தம்பி என்று உறவு முறை கொண்டாடினான் இராமன். ஒன்றும் தெரியாத, முன்னைப்பின் அறியாத, ஒரு படைவீரனை ஒரு நொடியில் நண்பனாக்கி உயிர்ப் பிச்சை அளித்தார் லிங்கன்!

Brahms (1)

அன்பின் சின்னம் யொவன்னாஸ் பிராம்ஸ்

ஜெர்மானிய இசை அறிஞர் யொவன்னஸ் பிராம்ஸ். அவரை அறியாத மேல்நாட்டு இசைப் பித்தர் யாரும் இருக்கமுடியாது. ஆஸ்திரியாவில் தனது வாழ்நாள் முழுதும் இருந்தவர். இரக்க உள்ளம் படைத்த மாமேதை.

ஒருநாள் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். பிளாட்பாரத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த சாலைக் கலைஞனைக் கண்டு வியந்தார். அவ்வளவு தத்ரூபமான படங்கள்! இத்தகைய சாலையோரக் கலைஞர்கள், எல்லோரும் காசு போடுவதற்காக ஒரு தட்டு வைத்திருப்பார்கள். அப்படி ஒரு தட்டைப் பார்த்த பிராம்ஸ் மனமுருகி, ஒரு பெரிய நாணயத்தை அதில் போட்டார். அது பாறை மீது பட்ட நாணயம் போல ‘டங்’ என்ற ஒலியுடன் எகிரிக் குதித்தது. அவருக்கு மஹா வியப்பு! பின்னர்தான் அறிந்தார்: அது தட்டு அல்ல; உண்மையில் தட்டு போல தத்ரூபமாக வரையப்பட்ட படம் என்று!

அவரே ஒரு இசைக் கலைஞர். இதனால் கலையின் பெருமையை உணர்ந்து அதைப் போற்றினார். ஆனால் அவருடைய அந்தஸ்துக்கு ரோட்டில் போகும், வரும் கலைஞரை நின்று பார்க்க வேண்டிய தேவையே இல்லை. இது நடந்த இடம் பொலொஞா என்னும் இத்தாலிய நகரம் ஆகும். இவ்வளவுக்கும் அந்த சாலையோர ஓவியன் ஒரு ஊமை!

பிராம்ஸ், எங்கு திறமை இருந்தாலும் அதைப் போற்றிப் புகழ்வார். தன்னைவிட இளம் கவிஞர்களை ஊக்குவித்தார். பிரபல இசை மேதைகளின் படைப்புகளை வெளியிட உதவினார். ஒரு முறை ஒரு பிரபல இசைமேதைக்குப் பணம் உதவியும் அவரது நூலை வெளியிட அவருக்கு ‘ப்ரூப்’ பார்க்கத் தெரியவில்லை. பெரிய இசைமேதையாக இருந்த போதும் அவருக்காக பிராம்ஸே படி திருத்தும் பணியை மேற்கொண்டார்.

brahms

இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

உலகில் எவ்வளவோ நல்லவர்கள் உளர். அவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆட்களும் உண்டு. ஆகையால், உதவி செய்வதிலும்கூட கவனம் தேவை.

ஒரு சிறு பையன் மிக கனமான சாமானை ஏற்றிக் கொண்டு மேட்டில் ஏற முடியாதபடி தவித்தான். அதைப் பார்த்த  ஒரு வயதான நபர் அவனுக்கு மிகவும் கஷ்டப் பட்டு உதவினார்.

இருவரும் வெற்றிகரமாக,  மேட்டுக்கு வண்டியைக் கொண்டு சேர்த்தனர். பையன் நன்றி சொன்னான்.

யாரப்பா உன் முதலாளி? பெரிய கல் நெஞ்சக்கரானாக இருப்பான் போல இருக்கிறதே? ஒரு சின்னப் பையனிடம் இவ்வளவு பாரத்தைக் கொடுத்தால் அது தாங்காது என்று அவர்க்குத் தெரியாதா? – என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார் வயதான அந்த நபர்.

அதைக் கேட்ட அந்தப் பையன் சொன்னான்: “என் முதலாளிக்கு இது என்னால் செய்ய முடியாத காரியம் என்று நன்றாகவே தெரியும். ஆனால் அவர் சொன்னார்:

“இப்படியே போ, எவனாவது ஒரு இளிச்சவாயன், வழியில் கிடைப்பான்; அவனே உன் வண்டியை மேலே தள்ளிக் கொண்டுவந்து கொடுப்பான்” – என்று முதலாளி சொன்னார் என்றான்.

சும்மாவா சொன்னான் தமிழன்: “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்று!!

உத்தமனாக வாழ வேண்டும்தான்; ஆனால் அதற்காக “ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோவில் ஆண்டி”யாக இருத்தல் கூடா.

Abraham_Lincoln_1923_Issue-3c

முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கு மகாகவி பாரதி கூறும் காரணம்!-1

IMG_4438

Article No.2012

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 23  July 2015

Time uploaded in London : காலை 8-26

 

By .நாகராஜன்

 

பாரதியாரின் தெளிவான சிந்தனை

மகாகவி பாரதியாரின் தெளிவான சிந்தனையும், தீர்க்கதரிசனமும் எண்ணி எண்ணி வியக்கப்பட வேண்டிய விஷயங்கள்!

அவர் தொடாத விஷயங்களே இல்லை; பல பிரச்சினைகளில் தெளிவான தம் வழிகாட்டுதலைத் தருவது அவருடைய தனி பாணி.

 

புராதனமான பாரதப் பண்பாட்டு உலகிலேயே சிறந்த பண்பாடு என்பதையும், இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் முன்பு ஹிந்துக்களாகவே இருந்தவர்கள் என்பதையும், ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை சிறந்து ஓங்க வேண்டும் என்பதையும் அவர் நன்கு விளக்கியுள்ளார்.

 

இந்த விஷயங்கள் அடங்கிய கட்டுரைகள் பொதுவாக வெளியிடப்பட்டுள்ள பாரதியார் கட்டுரைத் தொகுப்பு நூல்களில் இடம் பெறவில்லை. இதன் காரணம், இந்தக் கட்டுரைகள் விஜயா, இந்தியா ஆகிய பத்திரிகைகளின் பல இதழ்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நமக்குக் கிடைத்தவையாகும். ஆகவே அவற்றை முயன்று தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

 

முகலாய சாம்ராஜ்ய அழிவுக்கான காரணங்களாக பாரதியார் இனம் கண்டு தெரிவிப்பது:- 1)அதர்மம் 2) சமுசயம் 3) வினாசம்

இது பற்றிய கட்டுரையை அவர் நடத்திய விஜயா பத்திரிக்கையில் ‘மொகலாய ராஜ்யத்தின் அழிவு’ என்ற கட்டுரையில் காணலாம்.

விஜயா, இந்தியா, சூரியோதயம் ஆகியவை சகோதர பத்திரிகைகள் என்பதால் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை இன்னொன்றில் வெளியிடுவது வழக்கமாக இருந்தது. ஆக இந்தியா பத்திரிகையில் 1909ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை மீண்டும் விஜயா இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 IMG_3762

அவுரங்கஜீப்பின் நோக்கமும் முயற்சியும்

இதே கட்டுரையில் அவுரங்கசீப்பைப் பற்றிய விவரங்களையும் அவர் தந்துள்ளார். பாரதியாரின் கட்டுரையின் சில பகுதிகளைக் காண்போம்:-

“அவுரங்கஜீப் பெரிய பண்டிதன். கூர்மையான அறிவுடையவன்; சோம்பரென்பதே அறியாதவன்: எப்போதும் ஊக்கம், எப்போதும் செய்கை. ‘அரசர்களும், தண்ணீரும் ஒரேயிடத்தில் தங்கியிருக்கலாகாது. அப்படியிருந்தால் தண்ணீர் அழுகிப் போய் விடும். அரசன் கையிலிருந்த அதிகாரம் நழுவி விடும் என்று அவுரங்கஜீப் தனது மக்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு.

இதை அவன் தனது ஜீவ தர்மங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தான். இப்படி எத்தனையோ விதமான நற்குணங்களிலிருந்தும் பயனில்லை. பாரத ராஜ்யம் மொகலாயர் கையினின்றும் நழுவ வேண்டுமென்று கால சக்தி நிர்ணயம் செய்து விட்டது. அவுரங்கஜீப் தனது அரிய திறமைகளையும், சிறந்த குணங்களையும் துணையாக வைத்துக் கொண்டு எப்படியேனும் பாரத நாட்டை மொகலாய அதிகாரத்தின் கீழ் சாசுவதமாக ஒருமைப்படுத்தி வைக்க வேண்டுமென்று முயற்சி செய்தான். 1658-ம் வருஷம் முதல் 1707-ம் வருஷம் வரை அவன் ஆட்சி புரிந்த ஐம்பது வருஷ காலத்திலும் ஒவ்வொரு கணமும் ‘மொகலாய ராஜ்யம் ஒருமைப்பட வேண்டும்; பலப்பட வேண்டும், சாசுவதப்பட வேண்டும்’ என்ற கருத்துடன் பாடுபட்டான். அவனுடைய ஒவ்வொரு செய்கையும் மொகலாய ராஜ்யத்தின் அழிவுக்கு ஹேதுவாயிற்று.

bharati malar thani oruvanukku

அவுரங்கஜீப்பின் அழிவு

கேடு வருமுன்பாகவே மதி கெட்டுவரத் தொடங்கி விட்டது. அவன் படித்த படிப்பெல்லாம் விழலுக்கிறைத்த நீராய் விட்டது. அவனுடைய சக்திகளும் குணங்களும் நெருப்புப் பிடித்த வீட்டிலுள்ள மரக்கட்டைகளையும், எண்ணெய்க் குடங்களையும் போல அவனுடைய நோக்கம் நாசமடைவதற்கே துணையாயிருந்தன. அவனுடைய வீரியம், தீரத்தன்மை, சித்த திடம் – இவையெல்லாம் இராவணனுடைய வீரியம், தீரத்தன்மை, மனோதிடம் இவற்றைப் போல நாசத்திற்கே காரணங்களாக மூண்டன. சாக விதியுடையவனுக்கு அமிருதமும் விஷமாக ஸம்பவிக்கிறது.”

அவுரங்கஜீப் பற்றிய பாரதியாரின் கணிப்பு தான் எவ்வளது துல்லியமானது!

மேலும் அவர் கூறுவதை அடுத்த கட்டுரையில் தொடர்வோம்.

********************

கல்யாணமாம், கல்யாணம்!

azaki

Article No.2011

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 23  July 2015

Time uploaded in London : காலை 8-01

 

கல்யாணம் என்று வந்தால் யாருக்கு எதில் ஆசை? என்ன எதிர்பார்க்கிறார்கள்? நம் முன்னோர்கள் பாடிய பாட்டு என்ன தெரியுமா?

பெண்ணுக்கு ஆசை – கணவன் அழகாக இருக்க வேண்டும்

அம்மாவுக்கு ஆசை – மாப்பிள்ளை நல்ல பணக்காரராக இருக்க வேண்டும்

அப்பாவுக்கு ஆசை – மாப்பிள்ளை நல்ல புத்திசாலியாக இருக்க வேண்டும்

உறவினர்களுக்கு ஆசை – நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்

அழைப்புக்கிணங்கி வந்தோருக்கு ஆசை – நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும்.

கன்யா வரயதே ரூபம், மாதா வித்தம், பிதா ஸ்ருதம்!

பாந்தவா: குலம் இச்சந்திமிஷ்டான்னமிதரே ஜனா:!!

radha beauty

நல்ல மனைவி யார்?

ஐந்து ‘ல’காரம் இருந்தால் போதும்; நீங்கள் நல்ல அதிர்ஷ்டசாலிதான்! ஐந்து ல- காரம் என்றவுடன் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சிணை என்று நினைத்துவிடாதீர்கள். அந்தக் காலம் எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது. கீழ்கண்ட ஐந்து ல, லா – வேண்டும்:-

அனுகூ’லா’ = நன்மை செய்பவர்

விம’லா’ங்கி = நாணம் உள்ளவர்

கு’ல’ஜா = உயர்குலப் பெண்; அதாவது பண்புமிக்க குடும்பப் பெண்

குச’லா’ = திறமைசாலி

சுசீ’லா’ = நல்ல ஒழுக்கம் வாய்ந்தவள்

அனுகூலாம் விமலாங்கிம் குலஜாம் குசலாம் சுசீலசம்பன்னாம்

பஞ்ச லகாராம் பார்யாம் புருஷ: புண்யோதயா லபதே

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

IMG_4877 (2)

மாப்பிள்ளைக்கு எதனால் மதிப்பு?

இதேபோல மாப்பிள்ளைக்கோ அல்லது எந்த ஒரு மனிதனுக்கோ, மதிப்பளிக்கக்கூடிய ஐந்து ‘வ’கார அம்சங்கள் இருக்கின்றன. அவையாவன:–

வஸ்திரம் / உடுப்பு

வபுஷம் / உருவம்

வாக் / உரைத்தல் (பேசுதல்)

வித்யா/ கல்வியறிவு

விநய/ பணிவு

வஸ்த்ரேன வபுஷா வாசா வித்யயா விநயேன ச

வகாரை: பஞ்சாபி: ஹீன நரோநாயாதி கௌரவம்

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!

மேலும் 33 இந்து மதப் பழமொழிகள்!

Karnan_Movie_

Article No.2007

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 21  July 2015

Time uploaded in London : 8-14 am

1.அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு

The next house to that of Harischandra

The proverb is said ironically about a person who pretends to be honest, but is a well known liar

2.கொல்லைக்குப் பல்லி, குடிக்குச் சகுனி

The Palli plant (Buchnera) to the garden, and Saguni to the family.

The Palli plant  saps the soil of the garden, while Saguni ruined the Kaurava family completely.

3.கார்த்திகைக்குப் பின் மழை இல்லை; கர்ணனுக்குப் பின் கொடை இல்லை

There is no rain after Kartikai;there is no generosity surpassing Karna’s

4.கையில் இருந்தால் கர்ணன்

If he has something in his hand, he will be charitable like Karnan

5.படைக்கும் ஒருவன், கொடைக்கும் ஒருவன்

Only one for the army, and only one for the charity

karna

6.கூரை ஏறி கோழி பிடிக்கமாட்டாத குருக்களா வானம் கீறி வைகுண்டம் காட்டுவார்?

Can spiritual teachers who are unable to climb a roof  to catch a fowl, rend the skies and shoe people Vishnu’s abode Vaikuntham?

7.உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுகிறேன்

He will show you heaven (Vaikuntham) in the palm of his hand

8.விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன உறவு என்று கேட்டானாம்

விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்றானாம்

After having heard the Ramayana discourse all night, he asked how Rama was related to Sita?

Or After having heard the Ramayana discourse all night, he said Raman was Sita’s uncle!

John has been to school to learn to be a fool

9.கிட்டினால் ராமா, கோவிந்தா, கிட்டாவிட்டால் ஒன்றுமில்லை

If we get what we want, we worship the idol as Rama or Govinda, if we do not get it, the idol is nought

rama young

10.ஹரி ஹரி என்றால் சிவ சிவ என்கிறான்

If I say Vishnu, he says Shiva

அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில மண்ணு

11.ஹை என்றால் ஆண்டிக்குக் கோபம், ஹர என்றால் தாதனுக்குக் கோபம்

If I say Hari, the Saiva mendicant gets angry, if I say Siva, the Vaishnava mendicant gets angry

12.ஊர்க்குருவி மேல் ராமபாணம் தொடுக்கிறதா?

Is a good arrow to be shot at a sparrow?

KURUVI WINDOW

13.காசி முதல் ராமேஸ்வரம் வரை தெரிந்தவன்!

He knows everything from Benares to Rameswaram (ironical)

Jack of all trades and Master of none

14.குருவிக்குத் தகுந்த ராமேஸ்வரம்

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை

The bird should be suited to Rameswaram

The task a man attempts should be suited to his ability

15.இராமர் மங்கையோடு இணங்கினது அவம்

It was Rama’s weakness that he yielded to a woman

16.கூழைக் குடித்தாலும் குப்பை சுமந்தாலும், குப்பைக்காட்டுப் பெண்கள் ருக்குமணி; பாலைக் குடித்தாலும், பட்டைக் கட்டினாலும்,பட்டணத்துப் பெண்கள் பறக்கை (தட்டுவாணி)

Though village women drink water gruel and carry manure on their heads, they are precious jewels or Rukmani, one of the wives of Lord Krisna;though the women in cities drink milk and dress in silk, they are gad-abouts.

17.மதனும் ரதியும் போல் வாழ்ந்திருக்க வேண்டும்

To live happily like Kama and his wife rathy

க்ருஷ்ண கங்கா, காஷ்மீர்

18.நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் விசாரிக்கப்படாது

Wit is not right to investigate the origin of a river or a Rishi(sage)

Do not think of their possibly insignificant origin, rather admire thei excellent qualities

19.மஹாலக்ஷ்மி பரதேசம் போனாற்போல

As the goddess of wealth went to a far country

(used of rich men who are not at home or unsympathetic to their needy friends)

20.என்றைக்கும் போடாத லக்ஷ்மி இன்றைக்கும் போடவில்லை; தினம் போடுகிற … யாளுக்கு இன்றைக்கு என்ன வந்தது?

Lakshmi who never gives als, did not give today; but what evil has befallen the dancing girl who always gives, but did not do so today?

21.தைரிய லக்ஷ்மி தன லக்ஷ்மி

The Goddess of bravery is the Goddess f wealth

Faint heart never won fair lad

Nought venture nought win

lakshmi in thai exhibition

Picture shows Lakshmi in Bangkok (Thailand) exhibition

22.ஆண்டியே சோற்றுக்கு அலயறச்சே தன் லிங்கம் பால் சோற்றுக்கு அலைகிறது!

While the mendicant is praying for rice his Linga cries for Milk and Rice

23.ஆவுடையாரையும் லிங்கத்தையும் ஆறு கொண்டுபோகவே, சுற்றுக் கோவில் சுவாமி எல்லாம் சர்க்கரை பொங்கலுக்கு அழுதது போல

Like all the little gods of the surrounding temples crying for sweatmetas,, while the river carries off the sacred stone Nandi/bull and Linga

24.சடைத் தம்பிரான் சாற்றுக்கு அழுகிறானாம், லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறதாம்

It is said that the chief priest of a Saivite temple was crying for pepper-water, and the Linga was crying for a dish consisting of five kinds of fruits.

25.முறையோ என்று கேட்பவன் கழுத்திலே லிங்கம் கட்டினால், மறைவிலே அறுத்துப் போடுவிடுவான்

If you tie a Linga round the neck of a person who objects to t, he will secretly untie it and throw it away

Applicable to many marriages in India, when the girl-bride or the young bride-groom, is forced to marry unwillingly – with sad results.

2big linga

26.ஜாண் (சாண்) பண்டாரத்துக்கு முழம் விபூதி (லிங்கம் அல்லது தாடி)

A mendicant who in only a span high wears a Siva mark (linga) a foot long

27.அஞ்ஞானம் பிடித்த பெண்ணுக்கு சிவஞானம் என்று பெயர்!

The widow is seized with stupidity, but her name is The Wisdom of Siva

28.சீச்சீ என்கிறதும் இந்த வாய்தான், சிவா சிவா என்கிறதும் இந்த வாய்தான்

With the same mouth you say Fie, Fie and Siva Siva

With the tongue bless we God, and therewith curse we men (James 4,9)

29.காட்டுப் பூனைக்கு சிவராத்ரி விரதமா?

Will wild cat observe the Fast of Sivaratri?

30.நக்குகிற நாய்க்குச் செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியுமா?

A dog is not able to distinguish an oil mill from a Linga.

31.குரங்கின் தலையில் கரகம் வைத்து  காளி கும்பிடுவது போல!

Like putting a pot of sacred water on the head of a monkey and worshipping Kali!

The proverb is said of a person who employs a well-known fool to perform a duty that is to done with the greatest care.

big linga

32.சிவலிங்கத்தின் மேல் எலிப் போல

Like a rat on the top of a Linga

Said of a wife who mounted her husband’s head. She wilfully did what her husband told her not to do = henpecked husband

33.பிள்ளையாருக்கு பெண் கொள்ளுகிறது போல

Like procuring a wife for Ganesa

Ganesa’s another, Parvati once asked him, if he was not going to marry, his reply was: I shall when I meet a woman like you. His mother got so angry over this reply, and she cursed him and ordered him to stand near the public roads to wait for a wife

36 FT TALL DUTCH FLOWER ELEPHANT

என்னுடைய பழைய கட்டுரைகள்:

யானை பற்றிய நூறு பழமொழிகள், ஜூன் 5, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – Part 1, ஜூன் 22, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – பகுதி 2, ஜூன் 22, 2012

இராமன் பற்றிய பழமொழிகள் ஏப்ரல் 10, 2014

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள், மே 31, 2012,
பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3) ஜூன் 26, 2012 & ஜூன் 28, 2012
பாரதி பாட்டில் பழமொழிகள், ஜூன் 25, 2012
அப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது) ஜூன் 26, 2012

ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
உடம்பைக் கடம்பால் அடி

20,000 Tamil Proverbs (English article)

ஆயிரத்துக்கும் மேலான பழமொழிகளை தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாகத் தொகுத்துள்ளேன்.

இதை வெளியிடுவோர் தொகுத்தவர் பெயர், பிளாக் பெயருடன் வெளியிட்டு தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறேன் — லண்டன் சுவாமிநாதன்

Pictures are taken from various sources; thanks for face book friends.

கடலில் மூழ்கிய டைடானிக் கப்பலில் உள்ளத்தை உருக்கும் ஒரு சம்பவம்!

Canada Post unveiled today the images of the five stamps that will be issued on April 5 to mark the centennial of the sinking of RMS Titanic. (CNW Group/Canada Post)

Canada Post unveiled today the images of the five stamps that will be issued on April 5 to mark the centennial of the sinking of RMS Titanic. (CNW Group/Canada Post)

எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:– 2005

தேதி:– 20 ஜூலை, 2015

லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்:– காலை 9-28

தியாகம், அன்பு, நன்றி ஆகிய நற்குணங்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது உலகத்தில் எல்லா இன மக்களிடையேயும் இப்படிப்பட்ட நல்லோர் இருப்பதை அறிய முடிகிறது.

டைட்டானிக் கப்பல் விபத்தை அறியாதோர் யாரும் இருக்கமுடியாது. இந்தக் கப்பல் பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் ஆகும். 1912 ஏப்ரல் 15-ஆம் தேதி பிரிட்டனின் தென்பகுதி நகரான சௌதாம்ப்டனில் இருந்து நியூயார்க் நோக்கி தனது முதல் (கன்னி) பயணத்தைத் துவக்கியது. வட அட்லாண்டிக் மஹா சமுத்திரத்தில் ஒரு மிதக்கும் பனிப்பாறை (ஐஸ்பெர்க்) மீது மோதி கடலில் மூழ்கியது. இந்தக் கப்பலில் 2224 பேர் சென்றனர். அவர்களில் 1500-க்கும் மேலானோர் கடலில் மூழ்கி இறந்தனர். அதில் ஒரு சம்பவம்.

Straus-Park-Memorial

டைட்டானிக் கப்பலில், உயிர்காக்கும் அவசரப் படகுகள், பாதிப்பேரை மட்டுமே காக்கும் எண்ணிக்கையில் இருந்தன. ஆகையால் முதலில் குழந்தைகளையும், பெண்களையும் படகுகளில் ஏற்றுவது என்று தீர்மானித்தனர். சில தியாக உள்ளம் படைத்தோர் தன்னுடைய இன்னுயிரையும் பொருட்படுத்தாது மற்ற எல்லோரையும் படகுகளில் ஏற்றி கரை சேர உதவினர். இவர்களில் அன்றிற் பறவைபோன்ற இணைபிரியா கணவன் மனைவி தம்பதிகள் இருவர் எல்லோருக்கும் உதவி செய்தனர். அநேகமாக எல்லாப் பெண்களும் ஏற்றியாகிவிட்டது என்று அறிந்தபோது நியூயார்க் நகர பெண்மணி திருமதி ஈடா ஸ்ட்ராஸ் என்பவரை அவரது கணவர் ஈஸிடோர் ஒரு படகுக்குள் உள்ளே தள்ளி, “நீயாவது உயிர் தப்பு” என்று சொன்னார். அந்தப் பெண்ணோ படகிலிருந்து மீண்டும் கப்பலுக்குள் — மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுக்குள் –- குதித்தார்.

“அன்பரே! நீரும் நானும் எத்தனை காலம் சேர்ந்து வாழ்ந்தோம். இந்த இக்கட்டான நேரத்தில் உம்மை விட்டுப் பிரியமாட்டேன். நீங்கள் எங்கே செல்கிறீர்களோ அங்கே நானும் வருவேன்” என்று சொல்லி அவரை அணைத்துக் கொண்டார். இருவரும் கப்பலுடன் கடலுக்கடியில் சென்றுவிட்டனர். அதனால் என்ன? பூத உடல்தானே மறைந்தது. அவர் புகழ் உடம்பு மனித சமுதாயம் வாழும்வரை என்றும் நிலைத்து நிற்குமே!! அவர் எங்கு வேலை பார்த்தாரோ அந்த நிறுவன (மேஸிஸ்) ஊழியர்கள், அந்த தியாக சீலிக்கு ஒரு சிலையே வைத்துவிட்டனர் நியூயார்க் நகரில்!

samoa

சமோவா தீவில் ஒரு எழுத்தாளனுக்கு சமாதி!

ஆங்கிலம் படித்தவர்கள் ஆர்.எல்.ஸ்டீவன்சன் எழுதிய ‘ட்ரெஷர் ஐலண்ட்’, கிட்நாப்ட்’ போன்ற கதைகளைப் படித்திருப்பார்கள். அந்த ஸ்டீவென்சன் பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ள சமோவா தீவின் மக்களின் உள்ளத்தில் அழியாஇடம் பெற்றுவிட்டார். எப்படி?

ஐரோப்பிய காலனியாதிக்கம் கொடிகட்டிப் பறந்த நாட்களில் உலகம் முழுதும் பிரிட்டனும், பிரான்சும், போர்ச்சுகல்லும் ஸ்பெயினும், ஹாலந்தும் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களை அடக்கி ஒடுக்கி ஆண்டனர். உள்நாட்டு மக்களை குருவி, கொக்கு சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளினர். பசிபிக் மஹா சமுத்திர சமோவா தீவில் வாழ்ந்த பழங்குடி இன மக்கள் தலைவர் மடாFபாவைப் பிடித்து சிறையில் தள்ளினர். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் இருந்த சிறைகளுக்கு, கதாசிரியர் ஸ்டீவென்ஸன்,  சென்று புகையிலை முதலிய பொருட்களைக் கொடுத்து, ‘கைம்மாறு வேண்டாக் கடப்பாடு’ (பலனை எதிர்பாரா உதவி) செய்தார். கொஞ்ச காலத்துக்குப் பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

R L Stevenson

பழங்குடி இனமக்களுக்கு எழுத்தறிவு கிடையாது. ஆனால் குணநலன்களில், படித்தவர்களை விட ஒரு படி மேல்தான். அவர்களாக முன்வந்து ஸ்டீவன்ஸன் வாழும் மலைப்பகுதிக்கு சாலை அமைத்தனர். அந்த சாலை அவர் வீட்டு வாசல் வரை சென்றது. அது மட்டுமல்ல. அவரை தங்கள் இனத்தின் தலைவர்களில் ஒருவராக அறிவித்தனர்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?”

ஸ்டீவென்சனின் மெய்க்காப்பளரும் அந்த பழங்குடி இனத்தச் சேர்ந்தவரே. அவரிடம் ஸ்டீவென்ஸன் சொன்னார்:

அடடா! உங்களுக்குத் தான் என்னே விவேகம் இருக்கிறது.

உடனே அந்த பழங்குடி இனத்தவர் சொன்னார்

விவேகம் அல்ல! இது பேரன்பு! என்றார்.

samoa-stamps-1969-Robert-Louis-Stevenson

நல்ல குணங்களைப் பின்பற்ற எழுத்தறிவு தேவை இல்லையே!

ஸ்டீவென்சன் இறந்தவுடன் அவர்களே அந்த சடலத்தை மலை உச்சிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். அங்கு முக்கியமான வர்கள் மட்டுமே அழைக்கப்படிருந்தனர். அந்த இடத்தில் ஒரு ஸ்காட்லாந்துக்காரர் இருந்தார். எல்லோரும் வியப்புடன் நீங்கள் யார்? ஏன் இங்கே வந்தீர்கள்? என்று கேட்டனர். நீண்டகாலத்துக்கு முன் தான் தற்கொலை செய்துகொள்ள மலை உச்சிக்குச் சென்றபோது அந்தப் பக்கம் வந்த ஸ்டீவென்சன், காரணத்தைக் கேட்டுவிட்டு தன்னை தற்கொலை செய்யாமல் இருக்க அறிவுரை பகன்றதாகவும் அதனால்தான் இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்றும் நன்றியுடன் சொன்னார்.

“நன்றி மறப்பது நன்று அன்று” என்பதற்கு பழங்குடி இன மக்களும் இந்த ஸ்காட்ஸ்மேனும் எடுத்துக் காட்டுகள்!

உதவும் குணம், உதார குணம் பற்றிய சுவையான சம்பவங்கள், பொன்மொழிகள்

Brahms (1)

Article No. 2003

Compiled  by London swaminathan

Date 19 July 2015

Time uploaded in London: 10-19

அரிஸ்டாடில்

கிரேக்க நாட்டு தத்துவவித்தகர் அரிஸ்டாடில், ஒரு கெட்ட மனிதனுக்குப் பிச்சை போட்டார்.

“அரிஸ்டாடில்! அவன் ஒரு அயோக்கியன், அவனுக்கு ஏன் பிச்சை போட்டீர்கள்?” என்று நண்பர்கள் கேட்டனர்.

அரிஸ்டாடில் சொன்னார்,

அட! நான் அவனுக்காகவா போட்டேன்? மனிதகுலத்துக்காகப் போட்டேன்” – என்றார்.

(தமிழில் ஒரு பழமொழி உண்டு: சித்தம் போக்கு சிவன் போக்கு, ஆண்டி போக்கு, அதே போக்கு! அறிஞர்களின் உதார குணம் ஆழமானது; பொருளுடைத்து!)

haystack

நிலத்தை எரித்த சீன விவசாயி!

ஒரு சீன விவசாயி மலைப் பகுதியில், நெல் வயலில், வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது பூமி அதிர்சி ஏற்பட்டு, கடல் உள்வாங்கி, திடீரென்று பின்னுக்குச் செல்வதைக் கண்டார். மாபெரும் சுனாமி பேரலைகள் வந்து, தாழ்வான இடம் முழுதும் வெள்ளக்காடாகப் போகிறது என்று உணர்ந்தார்.

தாழ்வான பகுதியில் தனது சொந்த கிராம மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று துடியாய்த் துடித்தார். என்ன செய்வது? உரக்க கூக்குரல் போட்டாலும் காதில் விழாது; தான் கீழே போனால் எல்லோரும் “கூண்டோடு கைலாசம் போவோம்” — என்பது அவருக்குத் தெரியும்.

அவருடைய சமயோஜித புத்தி அவருக்கு உதவியது; பக்கத்தில் தனக்குச் சொந்தமான பெரிய வைக்கல்போர் (குவியல்) இருந்தது. அதற்குத் தீ வைத்தார். அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று கோவில் மணியைத் தொடர்ந்து அடித்தார். கோவில் மணியால் ஈர்க்கப்பட்ட கிராம மக்கள் மலை உச்சியைப் பார்த்தனர். அங்கே வயலில் எரியும் தீயைக் கண்ணால் கண்டனர். ஒஹோ! வயல் எரிகிறது. அதற்கு உதவி கோரி கோவில் மணியை அடித்து இருக்கிறார்கள் என்று எண்ணி கிராம மக்கள் அனைவரும் மலை உச்சிக்கு ஏறினர்.

சுனாமிப் பேரலைகள் வந்து அவர்கள் இதுவரை வேலை செய்த்த தாழ்வான பகுதிகளை மூழ்கடித்ததைக் கண்டனர்.

மலைக்கு மேலிருந்த விவசாயியின் சமயோசித புத்தி தங்கள் உயிர்களை எப்படிக் காப்பாற்றியது என்று எண்ணி அவருக்கு நன்றி கூறினர். அதுமட்டுமல்ல அவரை எந்த ஒரு சக்தி இப்படிச் செய்ய ஊக்குவித்ததோ அதை வணங்குவோம் என்று கருதி ஆண்டுதோறும் அந்த சக்தி தேவதையை இன்றும் வழிபட்டு வருகின்றனர்! அதாவது அவர் உயிருடனிருக்கும்போதே, அந்த தனி மனிதனை வழிபாடாமல், அவனுடைய நற்குணத்தை வழிபடத் துவங்கிவிட்டனர்.

(நம் நாட்டில் தனிமனிதனுக்குச் சிலைகளை வைத்துவிட்டு, அவர்கள் சொன்ன தத்துவங்களை மறந்து விடுகிறோம். காந்திஜியின் தத்துவங்களைக் காங்கிரஸ் கட்சி கொன்றது; திருவள்ளுவர் தத்துவங்களைத் திராவிடக் கட்சிகள் குழிதோண்டிப் புதைத்தன!)

தமிழர் நடுகற்கள்

சீனர்களைப் போல, தமிழ் நாட்டில் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கொடிய காட்டு மிருகங்களுடனோ, கொள்ளையர்களுடனுடனோ சண்டையிட்டு ஊரைக் காத்து உயிர்நீத்த வீரர்களுக்கு நடுகல் நட்டு இன்றும் அவரது சக்திக்கு படைப்புகள் கொடுப்பதைக் காண்கிறோம். சில வீரர்கள் காலப் போக்கில் கிராம தேவதைகளாக்கப்பட்டு கோவில்களும் கட்டப்பட்டுவிட்டன!

WALNUT

மரம் நட்ட மாமனிதன்!

அமெரிக்காவில் டெக்ஸாஸ் என்னும் ஒரு மாநிலம் உள்ளது. அதன் புகழ்மிகு கவர்னர் ஹாக். அவர் இறக்கும் தருவாயில் சொன்னார். “நான் இறந்த பிறகு எனக்கு நினைவுச் சின்னம் எழுப்பி காசு, பணத்தை வீணடிக்காதீர்கள்; என் கல்லறையின் தலை மாட்டில் பெக்கன் கொட்டை மரத்தை நடுங்கள்; என் கால் மாட்டில் வால்நட் மரக் கொட்டைகளை நடுங்கள்; இரண்டும் மரமாகி விதைகளைத் தள்ளும் போது என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய டெக்ஸாஸ் மக்களிடையே அவைகளை விநியோகிங்கள். அவர்கள் அதைப் பயிர் செய்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் செழிக்கட்டும்” — என்றார்.

அதுபோலவே 1926 ஆம் ஆண்டுமுதல் அந்த மரங்களிலிருந்து கிடைத்த விதைகளை அருகிலேயே வரிசையாக நட்டு பெரிய மரச் சோலையை வளர்த்தனர். அவை பெரிதாகி விலையுயர்ந்த வால்நட், பெக்கன் பருப்பு விதைகளைக் கொடுக்கின்றன. அவைகளை நட்டு, மரக் கன்று வந்தவுடன் அவைகளைப் பக்கத்து ஊர்ப் பள்ளிக்கூடங்களுக்கு விநியோகிக்கின்றனர்.

என்ன அருமையான யோஜனை பாருங்கள்! தன்னுடைய நினைவையும் தக்க வைத்தார்: தன் நாட்டையும் செழிக்கச் செய்தார்!!

செத்தும் கொடுத்தான் சீதக்காதி

இதே போல தமிழ் நாட்டிலும் சீதக்காதி என்னும் பெருந்தகையின் புகழ் இன்றும் இருக்கிறது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி ! என்னும் கதையை முன்னரே எழுதிவிட்டேன். படித்தறிக!

pope, book

போப்பும் ஸ்விFப்டும்

ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு அலெக்ஸாண்டர் போப் என்ற கவிஞரையும் ‘கல்லிவர்ஸ் ட்ராவல்’ முதலிய படைப்புகளைப் படைத்த ஜோனதன் ஸ்விப்ட் என்ற எழுத்தாளரையும் நன்கு தெரியும். கல்லிவரின் லில்லிபுட் யாத்திரை தமிழிலும் இருக்கிறது. இதுபற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். நமது ‘விரலான்’ கதையை அவர் அரசியல் அங்கதமாக எழுதினார் என்பதை விளக்கி இருக்கிறேன் முன்னொரு கட்டுரையில்.

ஸ்விப்டிடம் போப் என்ன சொன்னார் தெரியுமா?

“என்னிடம் நிறைய பணம் இருக்கிறது; ஆண்டுக்கு நூறு பவுண்டுகள் வரை நன்கொடை கொடுக்க இயலும் (அந்தக் கலத்தில் 100 பவுண்ட் என்பது இப்பொழுது மில்லியன் போல); இந்தப் பூவுலகில் ஏதேனும் நல்லது செய்வேன்; புழுப்போல நெளிய மாட்டேன். உயிருடன் இருக்கும் போதே மற்றவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்த்து நான் பேரானந்தம் அடைவேன். நான் இறந்த பிறகு என்னிடம் எனக்கு கல்லறை எழுப்பக்கூட பணம் மிச்சம் இருக்கக் கூடாது. என் கல்லறைக்கு வெளியே யாராவது ஒருவன் காசு வேண்டி நிற்பானாகில் நான் நாணித் தலை குனிவேன்!”

(எவ்வளவு உயரிய சிந்தனை! ‘தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’, ‘இல்லை என்பதை இல்லை ஆக்குவேன்” – என்று முழக்கமிட்ட புரட்சிக் கவிஞன் பாரதியை இது நினைவுபடுத்தும்).

1967Swift

இசைமேதை பிராம்ஸ்

இசைமேதை பிராம்ஸ் அவர்களுக்கு ஒரு ஆங்கிலேயர் 1000 பவுண்ட் (இப்போது கோடி பணத்துக்குச் சமம்) உயில் எழுதிவிட்டு இறந்து விட்டார். இந்தச் செய்தியை பிராம்ஸிடம் சொன்னார்கள். அவர் சொன்னார்: “இதைவிட பேரானந்தம் தரும் அனுபவம் உண்டா? இதைவிட நல்ல செய்தி என்ன இருக்க முடியும். என்னை அறியாத ஒருவன் – எனக்கு கடிதமே எழுதாத ஒருவன் – இப்படி என்னை நினைவிற் வைத்துக் கொண்டது என் இதயத்தின் ஆழத்தைத் தொட்டுவிட்டது. முன்னைப் போல, மீண்டும் ஒரு முறை அளவிட முடியாத ஆனந்தம் பெற்றேன். வெளியே எனக்குக் கிடைத்த பெரிய விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் எல்லாம் மேலானது இது! எனக்கு இந்தப் பணத்தை ‘முதலீடு’ செய்து எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.அவரைப் போலவே நானும் இதை மற்றவர்களுக்குக் கொடுத்து பெரு மகிழ்ச்சி அடைவேனாக”

இந்த சம்பவங்களைப் படித்துவிட்டு கீழேயுள்ள மேற்கோள்களைப் படியுங்கள். பொருள் தெள்ளிதின் விளங்கும்!

brahms

“கைம்மாறு வேண்டா கடப்பாடு” – குறள் 211

பலனை எதிர்பாராமல் உதவி செய்

“ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும்” – குறள் 214

மற்றவனுக்கு உதவுபனே உயிர் வாழ்பவன்; மற்றவர்கள் நடமாடும் பிணங்கள்!

“ஊருணி நீர் நிறைந்தற்றே பேரறிவாளன் திரு” -215

நல்லோரிடமுள்ள செல்வம் ஊற்றுத் தண்ணீர் போல எல்லோருக்கும் பயன்படும்.

வறியார்க்கொன்று ஈவதே ஈகை – 221

தேவைப்பட்டவருக்கு காசு கொடுப்பதே தானம்.

மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று 222

தானம் செய்தால் மறு ஜன்மத்தில் பலன் என்று நினைக்காதீர்கள்! சொர்க்கம் என்று ஒன்று இல்லாவிடினும் கொடுப்போம்!

“ஈத்துவக்கும் இன்பம் அறியார் வறியார்” – 228

கொடுக்கும் போது ஏற்படும் ஆனந்தத்தை அறியாதோர்தான் ஏழைகள்!

சம்ஸ்கிருதப் பொன் மொழிகள்

“பெருந்தன்மை கொண்டோருக்கு உலகமே ஒரே குடும்பம்” – பஞ்சதந்திரக் கதைகள்

உதார குணம் படைத்தவன் கொடுப்பான்; கொடுத்துக் கொண்டே இருப்பான். கருமியோ கொடான்,கொடான்; கூனிக் குறுகி குமுறுவான்! –கஹாவத் ரத்னாகர்

தனக்கே உடையில்லாத பிச்சைக்காரன் கூட, தானம் செய்து மகிழ்வான்  — கஹாவத் ரத்னாகர்

-சுபம்-

குளியல் எத்தனை வகை?

shower

bath tub

Article No. 2001

Compiled  by London swaminathan

Date 18  July 2015

Time uploaded in London: காலை 6-39

குளியல் (ஸ்நானம்) ஐந்து வகை என்று பராசர ஸ்மிருதி கூறுகிறது.

மனு ஸ்மிருதியிலும் குளியல் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. ஆனால் அவை வகை பிரிப்பன அல்ல.

இந்துக்களின் வாழ்வு — நீருடன் ஒன்றிணந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் “ஜலம்” உண்டு. பிராமணர்கள் அனுதினமும் தண்ணீரை வைத்துக்கொண்டு மும்முறை தொழ வேண்டும்.

வேத மந்திரங்கள் முதல் சிந்து சமவெளி மொஹஞ்சதாரோ ‘பெரிய குளம்’ வரை இதற்கு எடுத்துக் காட்டுகள் உள. உலகில் சமயத்துடன் தண்ணீரை இந்த அளவுக்கு வேறு எவரும் தொடர்பு படுத்தியதில்லை.

ஆரியர்களும் திராவிடர்களும் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று சொன்ன மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்கள் முகத்தில் கரிபூசும் சான்றுகள் இவை. ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையை ‘டார்பிடோ’ வைத்துத் தகர்க்கும் சான்று இது. குளிர்ப் பிரதேசத்திலிருந்து வந்தவன் தண்ணீர் குளியல் பற்றிப் பேசமாட்டான்! வெளிநாட்டுக் காரர்கள் குளிப்பது அரிது! ஆகையால் பண்பாடு தெரியாமல் அவர்கள் உளறிவிட்டனர்.போகட்டும்.

indus-greatbathsouth

பெரிய குளம், மொஹஞ்சதாரோ

நாலு ஆண்டுக்கு ஒரு முறை கும்ப மேளாவும் 12 ஆண்டுக்கு ஒரு முறை மஹா கும்பமேளாவும், இந்திர விழாவும் கொண்டாடுபவர்கள் நாம். தமிழ் நாட்டில் சோழர்கள் நடத்திய இந்திர விழா இப்பொழுது தமிழ் நாட்டில் அழிந்தாலும் நேபாளத்திலும் தென் கிழக்காசிய நாடுகளிலும் (தண்ணீர் விழா= வாட்டர் பெஸ்டிவல் என்ற பெயரில்) கொண்டாடி வருகின்றனர். இதுபற்றி முன்னரே விரிவாக எழுதிவிட்டேன்.

ஸ்நானானி பஞ்சபுண்யானி கீர்த்தனானி மனீஷிபி:

ஆக்னேயம் வாருணம் பிராம்மம் வாயவ்யம் திவ்யமேவ ச (பராசர ஸ்ம்ருதி)

ஆக்னேயம்= விபூதிக் குளியல்

வாருணம் = நீரில் முழுகிக் குளித்தல்

பிராம்மம் = மந்திரம் சொல்லி நீரை உடல் மீது தெளித்துக் கொள்ளல் (ப்ரோக்ஷனம் செய்தல்)

வாயவ்யம் = பசுவின் பாத துளியை (மண்) உடலில் பூசிக்கொள்ளல்

திவ்யம் = சூரியன் இருக்கும்போது பெய்யும் மழையில் நனைதல்

இவையெல்லாம் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தண்ணீர் கிடைக்காத இடங்களில் யாவருக்கும் பொருந்தும். ஆனால் இவை விதியன்று; விதிவிலக்குகள் போல அரிதாகப் பயன்படுதுவது. இதே போல தினமும் ஆடைகளைத் துவைத்துக் கட்டிக்கொண்டு கடவுளை ‘மடி’யாக வழிபடுவது இந்துக்களின் வழக்கம். அப்படித் துணியைத் துவைக்க முடியாத ஒரு நிலையில் – குறிப்பாக நீண்ட தூர யாத்திரையின் போது – நாம் கட்டப்போகும் ஆடையை தோய்க்காவிட்டாலும் சூரியனுக்கு முன் “வஸ்த்ராய Fஅட்” என்று சொல்லி உதறிவிட்டுக் கட்டிக்கொள்ளலாம் என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

stamp great bath

பிரெஞ்சு பாத்

மேல் நாட்டினர் குளிக்கமாட்டார்கள். ஆகையால் அவர்களுக்கு நீரின் அருமை பெருமை தெரியாது. பிரெஞ்சுக் காரர்கள் மிகவும் மோசம்! 29 பேரில் ஒருவர் வாரத்துக்கு ஒரு முறை குளிப்பர் என்பது பத்திரிக்கையில் வந்த செய்தி. ஆனால் உலகின் பெர்Fயூம் தலைநகர் பாரீஸ் என்பதால் – அவர்கள் உடல் முழுதும் அந்த  வாசனைத் தண்ணீரை அடித்துக்கொள்வர். இதனால் கிண்டலாக என்ன “பிரெஞ்சுக் குளியலோ?” என்று கிண்டல் செய்வர். அதையே நம் ஊரில் ‘காக்காய் குளியல்’ என்போம்.

ஸ்பாஞ்ச் பாத்

வயதானவர்களோ, நோயாளிகளோ, சிறுவர்களோ மேலை நாட்டிலுள்ள “பாத்” தொட்டியில் இறங்க முடியாது. குழாயடி (ஷவர்) வரை நடக்க முடியாது என்றால் ஒத்தடக் குளியல் தருவார்கள். இதற்கு ஸ்பாஞ்சு எனப்படும் கடற்பஞ்சு அல்லது நல்ல ஈரத்துணியை வைத்துக் கொண்டு உடலின் எல்லாப் பகுதிகளையும் துடைப்பர்.

டர்கிஷ் பாத்

துருக்கிக் குளியல் என்பது நீராவிக் குளியல் அறையில் ஆவியில் குளிப்பது. பின்னர் சுடு நீர் ஊற்றில் குளித்து மசாஜ் எடுப்பதாகும்.

இவ்வாறு பலவகைக் குளியல் இருந்தாலும் மேலைநாட்டினர் எல்லோரும் குளிப்பது அபூர்வம்!

கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி – என்பது பாரதீய பண்பாடு!

வாழ்க பாரதம்! வளர்க நம் பண்பாடு!!