‘இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்!’ ஆண்டாள் அறைகூவல்!

05FR-SMITHA__29950e
Dancer Smitha Madhav as ஆண்டாள் ( photo from The Hindu)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1442; தேதி 28 நவம்பர், 2014.

கட்டுரையின் முதற்பகுதி “தோன்றிற் புகழொடு தோன்றுக” — என்ற தலைப்பில் நேற்று வெளியாகியது அதைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்.

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, எழுந்திரு (உத்திஷ்ட) என்று நான்கு முறை கூறியதையும் அதையே வள்ளுவரும் கூறியிருப்பதையும் கட்டுரையின் முதற் பகுதியில் கண்டோம்.

ஆண்டாளும் தன்னுடைய தோழிகளை இப்படி தட்டி எழுப்புவதைப் பார்க்கிறோம். குறைந்தது மூன்று இடங்களில் தோழிகளையும் ஏனைய இடங்களில் கடவுளையும் சுப்ரபாதம்/ பள்ளி எழுச்சி பாடி எழுப்புவதைப் படிக்கிறோம். மேம்போக்காகப் பார்த்தால் இது எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை பள்ளிக் கட்டிலில் இருந்து எழுப்புவது போலத் தோன்றும். உண்மையில் அவள் சொல்லும் உறக்கம் பேர் உறக்கமாகும்.

இவ்வுலகில் மனிதனாகத் தோன்றியவர்க்கெல்லாம் ஒரே குறிக்கோள்—பிராமணன் ஆவதுதான். அதாவது பிரம்மத்தை நாடுவதே ஆகும்.

இவ்வுலகில் மனிதனாகத் தோன்றியவர்க்கெல்லாம் ஒரே குறிக்கோள்—அந்தணன் ஆவதுதான். அதாவது அந்தத்தை அணவுவதே ஆகும்.

இவ்வுலகில் மனிதனாகத் தோன்றியவர்க்கெல்லாம் ஒரே குறிக்கோள்—பார்ப்பான் ஆவதுதான். அதாவது மனதை உட்புறமாகத் திருப்பி உள்ளே உறையும் இறைவனைப் பார்ப்பதே ஆகும்.

இப்படி மனித குலம் முழுவதையும் ஐயர்களாக (ஹையர் அண்ட் ஹையர் Higer and Higer= Iyer உயர உயர) உயர்த்துவதற்கு பிரம்ம முஹூர்த்தமாகிய காலை நாலு மணிக்கு தியானத்திலோ வழிபாட்டிலோ ஈடுபட வேண்டும். இதற்காகத்தான் பாவை (மார்கழி) நோன்பு என்பதைக் குளிர் காலத்தில் வைத்தார்கள். அப்பொழுதுதான் போர்வையைத் தூக்கி எறிந்து விட்டு படுக்கையை விட்டு எழுந்திருப்பார்கள்.
andal

முதலில் உடல் விழித்துக் கொண்டால் பின்னர் உள்ளமும் விழித்துக் கொள்ளும். அதாவது அறியாமை என்னும் பேர் உறக்கத்தில் இருந்து ஆன்மா விழித்துக் கொள்ளும்.
இதைத்தான் ஆண்டாள் திருப்பாவையில்

இனித்தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம் (பாவை 12) – என்றாள். இது போல திருப்பாவையில் குறைந்தது மூன்று எழுந்திராய் (பாடல்கள் 8, 12, 14) வருகிறது.

இதற்கும் முன்னர், கடோபநிஷத்தில் (1-3-14) உத்திஷ்ட, ஜாக்ரத, ப்ராயவரான் நிபோதத! — (எழுந்திரு! விழிப்படை! குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்!!) — என்ற வீரிய வாசகம் வருகிறது. இதைத்தான் எல்லோரும் பல வகையில் சொல்லுவர். விவேகாநந்தர் அடிக்கடி சொன்ன மேற்கோள் இது.

வால்மீகி சொன்ன உத்திஷ்ட!
தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் பிரபலமான வெங்கடேச சுப்ரபாதத்தில் வரும் உத்திஷ்ட மிகவும் தெரிந்த ஒன்று. சு+ ப்ரபாத என்றால் நல்ல+காலை எனப் பொருள். ஆங்கிலத்தில் ‘’குட் மார்னிங்’’ என்று சொல்லுவோம். இதை பள்ளி எழுச்சி என்று மாணிக்கவாசகரும், பாரதியாரும் பாடி வைத்துள்ளனர்.

இதன் முக்கிய நோக்கம் இறைவனைக் காலையில் எழுப்புவது அல்ல. அந்தச் சாக்கில் நம் எல்லோரையும் அதி காலை பிரம்ம முகூர்த்தத்தில் – காலை 4 மணிக்கு — எழுந்திருக்க வைத்து உறங்கிக் கிடக்கும் ஆன்மாவை விழிப்புற வைப்பதாகும்

ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தை இயற்றிய பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராசார்யார், முதல் பாடலாகத் தெரிந்தெடுத்தது வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் வரும் ஸ்லோகம் ஆகும்:–

கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்ததே
உத்திஷ்ட நரசார்தூல கர்தவ்யம் தைவ மாஹ்னிகம்
……………….
உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த! உத்திஷ்ட கருடத்வஜ

பொருள்: கௌசல்யாவின் மகனாகப் பிறந்த உத்தமோத்தமனே! ராமா! கீழ் திசையில் காலைப் பொழுது மலர்ந்துவிட்டது! ஆண்களில் புலி போன்ற வீரனே! தினமும் செய்ய வேண்டிய வேலைகள் காத்துக் கிடக்கின்றன. கருடக் கொடியை உடைய கோவிந்தா! எழுந்திரு!

bharatmata (1)

இந்தக் காலை வணக்கம் இறைவனுக்கு என்பதை விட அதைச் சொல்ல நம்மை எழுந்திருக்கத் தூண்டும் வணக்கமாகவே கொள்ளல் வேண்டும்.

பாரதியார் பாடிய பாரத மாதா திருப்பள்ளி எழுச்சியைப் பார்க்கையில் இது சட்டென விளங்கும். அதவது தூங்கிக் கொண்டிருக்கும் பாரத அன்னையை எழுப்புதல் என்பது சுதந்திர யுத்தத்தில் சேராமல் சோம்பித் திரிந்த பாரத மக்களைத் தட்டி எழுப்பிய சுப்ரபாதம் அது. இதோ பாடலின் முதல் பத்தியைப் படித்தாலேயே சுப்ரபாதம்/பள்ளி எழுச்சி யாருக்கு என்பது தெற்றென விளங்கும்:–

பொழுது புலர்ந்தது; யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழிதுயில்கின்றனை இன்னும் என் தாயே
வியப்பிது காண் பள்ளி எழுந்தருளாயே!

——பாரதியாரின் பாரத மாத திருப்பள்ளி எழுச்சி

புலிப்பல், யானை முடி, பசு மூத்திரம், மான் தோல்: விநோத இந்து நம்பிக்கைகள்!!

gomutra

புலிப்பல், யானை முடி, பசு மூத்திரம், மான் தோல்: விநோத இந்து நம்பிக்கைகள்!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1438; தேதி 26 நவம்பர், 2014.

1.மதுரையில் எனது தந்தை வெங்கட்ராமன் சந்தானம், கொஞ்ச காலம் புலித்தோலில் உடகார்ந்து கொண்டு வீட்டில் தியானப் பயிற்சிகளைச் செய்து வந்தார். பின்னர் மான் தோலில் உட்கார்ந்து தியானம் செய்து வந்தார். பெரிய ரிஷி முனிவர்களின் படத்தைப் பார்த்தால் கீழே மான் தோல் அல்லது புலித்தோல் இருப்பதைக் காணலாம். ஏன்? ஏன்?

2.எனது தாயார் ராஜலெட்சுமி சந்தானமும் எங்கள் வீட்டு சமையல்கார மாமி சுப்புலெட்சுமியும் தினமும் இரவில் நாங்கள் எல்லோரும் சாப்பீட்டு முடித்த பின்னர் பசுஞ் சாணத்தை வைத்து அடுப்பை மெழுகுவர். ஏன்? ஏன்?

3. எனது தங்கை தினமும் காலையில் வாசலைத் தெளிக்கும் போது பசுஞ் சாணத்தைக் கலந்து தெளித்துவிட்டு ஜியோமெட்ரி பாக்ஸ், ரூலர், அடிஸ்கேல் என்றும் எதுவும் இல்லாமல் கன கச்சிதமாக சதுரங்கள், கோணங்கள் வட்டங்களுடன் மாக் கோலம் போடுவாள். ஏன்? ஏன்?

4.நாங்கள் மதுரை வடக்குமாசி வீதி யாதவர் தெருவில் வசித்தோம். எல்லோரும் மாட்டுச் சாணியையும், எரு வரட்டியையும் வாங்கிச் செல்வர். எங்காவது பசு மாடு மூத்திரம் பெய்தால் ஓடி வந்து கையில் ஏந்தி தலையில் ப்ரோக்ஷித்து / தெளித்துக் கொள்வர். ஏன்? ஏன்?

cow urinating

5. எங்கள் தெரு வழியாக வாரத்துக்கு ஒரு முறையாவது யானைப் பாகன் மீனாட்சி கோவில் யானை, அல்லது பெருமாள் கோவில் யானையை அழைத்து வருவான். நாங்கள் எல்லோரும் வீட்டு வாசலில் அரிசி, வெல்லம் வைத்துக் கொண்டு காத்திருப்போம். அதை வாங்கிக் கொண்டு நாங்கள் காசு கொடுத்தால் எங்களை மேலே ஏற்றிக் கொண்டு கொஞ்ச தூரம் போய் வருவான். கூடவே காசு கொடுத்தால் ஒரு சொம்பில் அல்லது வாளியில் வைத்திருக்கும் தண்ணீரைத் துதிக்கையால் உறிஞ்சி எங்கள் மீது —கஜ லெட்சுமிக்கு யானை அபிஷேகம் செய்வது போல — எங்கள் எல்லோரையும் “குளிப்பாட்டி” விடுவான். ஏன்? ஏன்?

6. தெருவில் போகும் யானை அங்கேயே காலைக் கடன்களை முடித்தால் அனைத்து சிறுவர்களும் ஓடிச் சென்று அந்த யானை ‘லத்தி’ மீது கால்களை வைத்து மிதித்து ஆனந்திப்பார்கள். காலில் சேற்றுப் புண் உடைய பெண்களும் வந்து மிதிப்பார்கள். ஏன்? ஏன்?

elephant-poo-11

7.எனக்குப் பூணூல் போட்ட போது, வீட்டு புரோகிதர் (சாஸ்திரிகள்/ வாத்தியார்) வந்து பூணூலில் ஒரு மான் தோலை முடித்து வைத்தார். சின்னப் பையானாக இருந்தால் கோவணத்தைக் கட்டி கையில் அரசங் குச்சியையும் கையில் கொடுத்து, இடுப்பில் அரைஞான் கயிறு கட்டும் இடத்தில் முஞ்சிப் புல்லால் கட்டியும் விடுவார். (எனக்கோ இரண்டு எருமை மாடு வயதானபோதுதான் பூணுல் கல்யாணம் நடந்தது!!!)

8. நான் லண்டனில் 28 ஆண்டுகளாக வசிக்கிறேன். எங்கள் ஹாரோ பகுதியிலும் சரி, கிழக்கு லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியிலும் சரி, நரிகள் அதிகம். அது காலலையில் தோட்டத்தில் வந்து ஊளையிட்டால் என் மனைவி ஓடிப் போய் அதன் மூஞ்சியில் விழிப்பாள்/ முழிப்பாள். நானும் அவள் சொன்னதற்காக நரி முகத்தில் முழிப்பேன். ஏன்? ஏன்?

9. எனது சக மாணவர்களில் ஒருவன் சேதுபதி உயர் நிலைப் பள்ளிக்கு வரும்போது கழுத்தில் தங்கச் சங்கிலியில் புலிப்பல் அணிந்திருப்பான். இன்னும் சில பெரியவர்கள் புலி நகத்தை அணிந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஏன்? ஏன்?

cow urine cola

10. எங்கள் வீட்டில் (அகத்தில் = ஆத்தில்) என்ன பூஜை புனஸ்காரம் நடந்தாலும் வீட்டு வாத்தியார் — (அதாவது ஐயர், அதாவது புரோகிதர், அதாவது சாஸ்திரிகள்) — வந்து கையில் பவித்ரம் என்று ஒரு தர்ப்பைப் புல் மோதிரத்தை அணியச் சொல்லுவார். தர்ர்பைப் புல் இல்லாமல் நல்லதோ கெட்டதோ எந்தக் காரியமும் செய்ய மாட்டார்கள். ஏன்? ஏன்?

11.என் மனைவி கர்ப்பமாக இருந்த போது வளைகாப்பு / சீமந்தத்துக்கு வந்த புரோகிதர் அவளுடைய தலையில் – நடு வகுட்டில் — ஒரு முள்ளம் பன்றி முள்ளால் கோடு போடச் சொன்னார் (அக்யூப்ரெஸ்ஸர்?)– ஏன்? ஏன்?

12.குருவாயூருக்குப் போனபோது 70, 80 யானைகள் வசிக்கும் யானைகள் காப்பகத்திற்கு வேடிக்கை பார்க்கச் சென்றோம். யானை பாகர்கள், ரகசியமாக, இடது கையில் காசு வாங்கிக் கொண்டு வலது கை வழியாக யானை வாலின் முடியைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். திருஷ்டி வராது- நோய் வராது என்றெல்லாம் சொல்லி எல்லோரும் வாங்கினர். எனக்கோ யானையின் மீது பரிதாபம் அதிகரித்தது. இப்படி ஆளுக்கு ஒரு முடி வாங்கினால் யானைக்கு வாலே இருக்காதே! யானை முடிக்கு அப்படி என்ன கிராக்கி! ஏன்? ஏன்?

Cow-Urine

13.முக்கியப் பண்டிகைகளில் பிராமணர்கள் ‘’பஞ்ச கவ்யம்’’ சாப்பிட வேண்டும். இதில் பால், வெண்ணை, தயிர், பசுஞ் சாணம், பசு மூத்திரம் – ஆகிய ஐந்தும் மிகச் சிறு அளவில் கலந்திருப்பர். உடல்-பொருள்-ஆவியைச் சுத்திகரிக்கும் அதிசய மருந்து என்பர். நானும் கஷ்டப்பட்டுதான் சாப்பிட்டேன். இது ஏன்? ஏன்?

14.பழைய கால ரிஷி, முனிவர்கள் எல்லோரும் கமண்டலம் என்னும் சிறிய கலசத்தில் தண்ணீர் கொண்டு செல்லுவர். இது தாகத்தைத் தணிக்கவா? அல்லது வேண்டியோருக்கு அபூர்வ வரங்களைக் கொடுத்து வேண்டாதவர்களைச் சபிக்கவா? தண்ணீருக்கு அதிசய சக்தி உளதோ! ஏன்? ஏன்?

இப்படி நூற்றுக் கணக்கான பழக்க, வழக்கங்களை, சம்பிராதாயங்களைச் சேர்த்துக் கொண்டு போனால் பட்டியல் நீண்டு விடும்.

எல்லா “ஏன்”?—களுக்கும் சுருக்கமான விடை:– இந்துக்கள் வாழ்வு இயற்கையோடு இணைந்தது — இயைந்தது. இதில் குறிப்பிட்ட எல்லாப் பொருட்களும் “ரீசைக்கிள்” ஆகி மீண்டும் நம் உபயோகத்துக்கே வரும். .புற ச்சூழலை பாதிக்காது.
coffee elephant poo

பசுஞ் சாணம், பசு மூத்திரம் ஆகியவற்றுக்கு உள்ள “பாக்டீரியா எதிர்ப்பு சக்தி” பற்றி நமக்குத் தெரியும். இருந்த போதிலும் முறையாக அறிவியல் சோதனைக் கூடங்களில் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டால் வேற்று மதத்தினரும், கலாசாரத்தினரும் பயன்படுத்துவர்.

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ……….. ………….. இந்து விஞ்ஞான சங்கம் வைத்து எல்லாவற்றையும் ஆராய — நெடு நாளைய ஆசை எனக்கு.

தர்ப்பைப் புல் பற்றியும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்த – குறிப்பாக கிரகண கால – ஆய்வுகள் பற்றிப் படித்தேன். முறையான – சோதனைச் சாலை ஆய்வுகள் நடத்த வேண்டும், முடிவுகளை உலகமே ஏற்க வேண்டும்!

selous-game-reservesmoking elphant poo

மான் தோல் சத்வ குணத்தை உண்டாக்கும் என்றும், புலித்தோல் ஒருமுக மனக் குவியத்தையும், குறிக்கோளை அடைவதில் முனைப்பையும் உண்டாகும் என்றும் சொல்லுவர்.

புலிப்பல் தாலி முதலியன குறித்து சிலப்பதிகாரம், பெரிய புராணம் முதலிய நூல்கள் பேசும். வீரம், மன உறுதி, லட்சியத்தை அடையும் முனைப்பு, வேகம் ஆகியவற்றை அளிக்க வல்லது புலி நகம், புலிப்பல் தாயத்து என்பர்.

பசு மூத்திரம் இப்பொழுது பாட்டில்களில் கூட விலைக்கு வந்துவிட்டது. யானை லத்தி பற்றி ஆராயாவிட்டாலும் யானை லத்தியுடன் வரும் காப்பிக் கொட்டைக்கு மதிப்பு அதிகம். யானை லத்தி காப்பி ஒரு கோப்பை ரூ.300! (இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் படிக்கவும்). யானை லத்தியை புகையிலை போல சிகரெட் செய்து புகைப்பர் ஆப்பிரிக்க மலைஜாதி மக்கள். அது மட்டுமல்ல ஆப்பிரிக்க பபூன் குரங்குகள், யானை லத்தியைச் சாப்பிடுகின்றன. நமக்கும் முன்பாக மிருகங்களும் பழங்குடி மக்களும் இது போல பல ரகசியங்களைக் கண்டுபிடித்து வைத்திருக் கின்றனர். உலகிலேயே இரண்டு பிராணிகளின் மலம் தான் நாற்றம் எடுக்காமல் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை எனத் தெரிகிறது.

OLYMPUS DIGITAL CAMERA

தண்ணிரின் சக்தி பற்றி இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது. வரம் கொடுக்கவும், சபிக்கவும் ஏன் தண்ணீரை பயன் படுத்தினர்? பிராமணர்கள் தினமும் முக்கால சந்த்யா வந்தனத்தில் தண்ணிரை மட்டுமே அளித்து காயத்ரியைத் த்ருப்திப் படுத்துவது ஏன்? இறந்து போன முன்னோர்களுக்கும் எள்ளும் நீரும் மட்டும் இரைத்து அவர்களை த்ருப்திப் படுத்துவது எப்படி? இவைகளுக்கு நம்பிக்கை அடிப்படையில் பதில் தரலாம். விஞ்ஞான் அடிப்படையில் பதில்தர ஆய்வு நடத்த வேண்டும் “இந்து விஞ்ஞான சங்கம்” அமைத்து ஆராய்வதே இதற்கு விடைதரும்.

அண்மையில் குதிரைகள் தோன்றியதும் இந்தியாவில்தான் என்று அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சொல்வதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் உலகம் முழுதும் நாகரீகத்தைப் பரப்பிய பெருமை இந்தியர்களுக்குதான் என்பது உறுதியாகிறது. இரும்பின் பயனைக் கண்டுபிடித்து அதை உலகம் முழுதும் பரப்பியதற்கு டில்லியில் நிற்கும் குப்தர் கால இரும்புத் தூண் சான்று பகரும்.
Nara_Narayana_Deogarh (1)
Gupta Period Statues of Nara-Narayana at Deogarh. Look at the deer on the chest of one of the figures.

மனுவும் கூட கறுப்பு நிற மான் (கிருஷ்ணசாரம்) எங்கு இருக்கிறதோ அதுதான் புண்ய பூமி. மற்றதெலாம் மிலேச்ச பூமி என்பார். சங்க இலக்கியமும் அராபியர்கள், யவனர்கள், ரோமானியர்களை கடுஞ்சொல் யவனர் என்று ஏசுகின்றன. அந்த கறுப்பு நிற மான் தோலை கிருஷ்ணாஜினம் என்பர். அதையே பிராமணச் சிறுவர் பூணூலில் அணிவர்.

வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்று வாழ்க என்று கொட்டு முரசே – பாரதியார்.
–சுபம்–

மாமன்னன் அலெக்ஸாண்டரின் குதிரையும் நாயும்!

Stamp_Greece_1968

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1436; தேதி 25 நவம்பர், 2014.

மாமன்னன் அலெக்ஸாண்டர் எவ்வளவு புகழ்பெற்றவரோ அவ்வளவு புகழ்பெற்றவை அவருடைய நாயும் குதிரையும்!

அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் பூசெபலஸ்
அலெக்ஸாண்டரின் நாயின் பெயர் பெரிடாஸ்.

கிரேக்க நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்த அலெக்ஸாண்டரை அந்த பூசெபலஸ்தான் சுமந்து வந்தது. ஆனால் கி.மு.326 ஆம் ஆண்டில் நடந்த ஹைடஸ்பஸ் யுத்தத்துக்குப் பின் போரில் பெற்ற விழுப் புண்களால் அது இறந்துவிட்டது. அப்போது அந்தக் குதிரைக்கு வயது 20. அதன் வாழ்நாள் முழுதும் தனக்கு உழைத்த காரணத்தால் அதற்கு நன்றி செலுத்தும் முகத்தான் மாமன்னன் அலெக்ஸாண்டர் அந்தக் குதிரைக்கு ஒரு சமாதி கட்டி அந்த நகருக்கு அலெக்ஸாண்டரியா பூசெபலஸ் என்று நாமகரணம் செய்தார்.

இப்பொழுது அந்த நகர் எது என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் முட்டி மோதிக் கொள்கின்றனர். இரண்டு மூன்று நகரங்கள் இந்தக் குதிரையின் புகழ் பாட போட்டியிடுகின்றன. ஆயினும் ஜீலம் நதிக்கரையில் பாகிஸ்தானில் அந்த நகரம் இருக்கிறது எனப்தில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அலெக்ஸாண்டர் தான் வென்ற இடமெல்லாம் தனது பெயரில் அலெக்ஸாண்ட்ரியா என்று 20 நகரங்களுக்கு மேல் ஸ்தாபித்தார். பூசெபலஸ் என்றால் ‘’காளைத் தலையன்’’ என்று பெயர். அதாவது காளை போன்று வீரம் உடைத்து என்பது அதன் பொருள்.

Seleucos_I_Bucephalos_coin

அவருடைய நாய் பெரிடாஸ் பற்றியும் இந்தக் குதிரை பூசெபலஸ் பற்றியும் பிளினி, ப்ளூடார்ச், பெரிப்ளூஸ் என்று பல பழங்கால எழுத்தாளர்கள் சுவை மிகு கதைகளை எழுதி வைத்தனர். பெரிடாஸ் என்ற நாய்க்கும் அவர் ஒரு நகரம் உருவாக்கினார். அந்த நாய் ஒரு சிங்கத்தையும் யானையையும் கொன்றதால் வீரமிகு நாயை அவர் தத்து எடுத்தார் என்றும் அது ஒரு இந்திய அரசனால் கொடுக்கப்பட்டது என்றும் அவர்கள் எழுதி வைத்தனர். நிற்க.

அது சரி , உங்கள் ‘’இந்தியவியல்– இந்து கலாசார’’ பிளாக்கில் பூசெபலஸ், பெரிடாஸ் புகழை எதற்கு பாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்களில் சிலர் எண்ணலாம். நான் சொல்ல வந்த விஷயம் வேறு. இந்த நாய், குதிரை, யானை இவைகளுக்கு எல்லாம் பெயர் வைத்து அவைகளை அன்பாகப் போற்றி வளர்க்கும் கலையையும் பண்பையும் உலகிற்கு கற்பித்தவர்களே நாம்தாம்!!

alexander dog

ரிக் வேதத்தில் நாய் வளர்ப்பு
இதற்கு என்ன ஆதாரம்?

1. இந்த நாய் வளர்க்கும் வழக்கமும், அதற்குப் பெயர் வைக்கும் வழக்கமும் ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. இப்பொழுது அமெரிக்கர்கள் ரிக் வேதத்துக்குக் கொடுக்கும் கி.மு.1700 என்று கொண்டாலும் இற்றைக்கு 3700 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திரன் வளர்த்த சரமா என்ற பெண் நாய் மற்றும் அதன் இரண்டு குட்டிகள் சரமேயஸ் பற்றி ரிக் வேதப்பாடல்கள் மூலம் அறிகிறோம் (R. V. 7-55-2 and 10-108). இதை வழக்கம் போல கிரேக்கர்கள் ‘’திருடி’’ பெயரை ஹரமஸ் என்று மாற்றி கதை எழுதிவிட்டனர். அவர்கள் மூலம் வேறு பல கலாசாரங்களிலும் இது நுழைந்துவிட்டது. கிரேக்கர்களுக்கு ‘’எஸ்’’ வராது என்பதால் சிந்து என்பதை ஹிந்து என்பது போல சரமாவும் ஹரமஸ்—ஹெர்மஸ் ஆகிவிட்டது. ஆக முதலில் நாய் வளர்த்தவர்களும் நாமே. அதற்குப் பெயர் சூட்டு விழா நடத்தியதும் நாமே!

2.தர்மபுத்திரன் தனது ஆட்சியை முடித்துக் கொண்டு, சகோதரர்களுடன் வடதிசைப் பயணத்தை மேற்கொண்டான். அதாவது சாகும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழ் மன்னர்களும் இதைச் செய்ததை கோப்பெருஞ்சோழன் — -பிசிராந்தையார் – பொத்தியார் கதைகளில் விரிவாகச் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு சகோதரராக ‘’தொப்பு தொப்பு’’ என்று கீழே விழுந்து இறந்தனர். ஆனால் தர்மபுத்திரன் மட்டும் வடதிசையை நோக்கி தொடர்ந்து நடந்தார். அவருடன் ஒரு நாய் மட்டும் தொடர்ந்து சென்றது. சொர்க்கத்தின் வாசலுக்குச் சென்ற போது, ‘’வெரி ஸாரி, சொர்க்கத்தில் நாய்களுக்கு அனுமதி கிடையாது. அதை வெளியில் அம்போ என்று விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்’’ — என்றனர் வாயிற் காப்போர். தருமனோ அதற்கு மறுத்து விட்டான். பின்னர் யம தர்மராஜனே இவ்வாறு தர்மன் இறுதிவரை தர்மத்துடன் இருக்கிறானா என்பதைக் காணவந்ததாக மஹாபாரதம் கதையை முடிக்கிறது.
ரிக் வேத நாயும், மஹாபாரத நாயும் யமனுடன் தொடர்புடைய கதைகள்.

macedonia

தமிழ் கல்வெட்டில் நாய்
3.மஹேந்திர பல்லவன் கால எடுத்தனூர் நடுகல்லில் கோவிவன் என்ற நாயின் பெயர் வருகிறது. தமிழர்களும் 1400 ஆண்டுகளுக்கு முன் நாய்களை வளர்த்து அவைகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதும் அதை யுத்த களம் வரை அழைத்துச் சென்றதும் இதனால் தெரிகிறது. யுத்த வீரனுடன் அந்த நாயும் இறக்கவே அது கல்வெட்டில் அழியா இடம் பெற்று அமரத்துவம் பெற்று விட்டது. ஆக பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தமைக்கு நாயும் சான்று பகரும்!

4.பசுமாடுகளுக்கு அன்பான பெயர் சூட்டுவதால் காமதேனு சுரபி போன்ற பெயர்களை நாம் அறிகிறோம். பாற்கடலைக் கடைந்த போது வெளியே வந்த குதிரை உச்சைஸ்ரஸ், யானை ஐராவதம் ஆகியவற்றின் கதைகளை நாம் அறிவோம். பகவத்கீதையில் உச்சைஸ்ரவஸ் பெயர் வருவதால் அதுவும் அழியா இடம் பெற்றுவிட்டது.

Greece 1956 1000 Greek Paper Money Banknote

தமிழ் குதிரை காரி!
5. கடை எழு வள்ளல்களில் ஒருவர் காரி. அவர் வளர்த்த குதிரை பெயரும் காரி. அலெக்சாண்டர் மட்டும்தான் குதிரை வளர்த்தாரா? நாமும் வளர்த்தோம்; அதற்கு நாமகரணமும் செய்தோம்!

6. இது எல்லாவற்றையும் விட யானைதான் அதிகமான பெயர்களுடன் நம் இலக்கியங்களில் அடிபடுகிறது:
முருகனின் யானையின் பெயர் பிணிமுகம்
இந்திரன் யானையின் பெயர் ஐராவதம்
மஹாபாரத கால யானையின் பெயர் அஸ்வத்தாமா. அஸ்வததாமா அதோஹத: — என்று தர்மன் (பொய்) சொன்னது போரின் போக்கையே மாற்றிவிட்டது.
கிருஷ்ணன் அடக்கிய யானையின் பெயர் குவலயாபீடம்.
புத்தர் அடக்கிய யானையின் பெயர் தனபால.
உதயணன் அடக்கிய யானையின் பெயர் நளகிரி
சம்ஸ்கிருத நாடகத்தில் வரும் யானையின் பெயர் சந்திரலேகா.
நமது காலத்தில் உயிர்நீத்த குருவாயூர் யானையின் பெயர் கேசவன்.
அஷ்ட திக் கஜங்கள் என்று எண் திசைகளுக்குக் காவலாக இருக்கும் யானைகளுக்கும் தனித்தனி பெயர்கள் உண்டு.

ரிக்வேத காலம் முதல் இன்று வரை வழங்கும் பெயர் சூட்டும் இவ்வழக்கம் நம்மால் உலகம் முழுதும் பரப்பபட்டது என்பதில் இனியும் ஐயம் உண்டோ?

கொடிகள், சின்னங்கள், தேசிய கீதங்கள் என்று எல்லவாற்றையும் சொல்லிக் கொடுத்து மனித குலத்தை நாகரீகப்படுத்தியதற்கு ரிக் வேதம் முதல் இன்று வரை தொடர்ச்சியாக சான்றுகள் கிடைக்கையில் இதை மறுப்பதற்கு எவருக்குத் துணிவு வரும்?

பாரத சமுதாயம் வாழ்கவே! வாழ்க, வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய…………. (பாரதியார்)

–சுபம்–

பிரம்மாவின் 29 பெயர்கள்!

brahma stamp
Stamp for Brahma issued by France

Research paper written by London Swaminathan
Research article No.1424; Dated 21 November 2014.

“பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்” என்ற தலைப்பில் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியாகியது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.
அமரகோசம் என்ற வடமொழி அகராதி உலகில் தோன்றிய முதல் அகராதி—நிகண்டு ஆகும். ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த அகராதியில் பிரம்மாவுக்கு 29 பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனைய கடவுளருக்கு

சிவனுக்கு 52 பெயர்களும்
விஷ்ணுவுக்கு 46 பெயர்களும்
பலராமனுக்கு 17 பெயர்களும்
அம்பாளுக்கு 21 பெயர்களும்
லெட்சுமிக்கு 14 பெயர்களும்
கணபதிக்கு 8 பெயர்களும்
முருகன்/ ஸ்கந்தனுக்கு 17 பெயர்களும்
இந்திரனுக்கு 35 பெயர்களும்
அக்னிக்கு 34 பெயர்களும்
யமனுக்கு 14 பெயர்களும்
வருணனுக்கு 5 பெயர்களும்
வாயுவுக்கு 20 பெயர்களும்
குபேரனுக்கு 17 பெயர்களும்
சூரியனுக்கு 37 பெயர்களும்
மன்மதனுக்கு 19 பெயர்களும்
ஜினதேவனுக்கு 18 பெயர்களும்
புத்தபகவனுக்கு 7 பெயர்களும்

கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பல உரைகள் எழுந்தன. அவைகளைப் படித்தால் சம்ஸ்கிருதத்தையும் இந்து மதத்தை யும் “ஓரளவுக்கு அறிந்ததற்குச் சமம்”.

museum brahma

பிரம்மாவின் பெயர்களை மட்டும் இன்று காண்போம்:

1.பிரம்மா= மூச்சுக்காற்றை அளிப்பவர்; பெரியவர்
2.ஆத்மபூ= தான் தோன்றி
3.சுரஜேஷ்ட= தேவர்களில் மூத்தவர், பெரியவர்
4.பரமேஷ்டி= பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர்; யாகத்தால் பூஜிக்கப்படுபவர்; இதய தாமரையில் வீற்றிருப்பவர்.
5.பிதாமஹர்= பாட்டனார்
6.ஹிரண்யகர்ப்பர்= தங்க முட்டை (யிலிருந்து வந்தவர்)
7.லோகேச= மக்கள் ஈசன், உலகு இயற்றினான்
8.ஸ்வயம்பூ= தான் தோன்றி (இது ஸ்வயம்பூ லிங்கமாகத் தோன்றும் சிவ பெருமானுக்கும் உள்ள பெயர்)
9.சதுரானானன= நான்முகன் ( நாற்புறமும் பார்வை உடையவர் )
10.தாதா = உயர் தலைவன்
11.த்ருஹினஹ= படைப்போன்
12.அப்ஜயோனி = தாமரையில் உதித்தோன்
13.கமலாசன = தாமரையில் அமர்ந்தோன்

14.ஷ்ரஷ்ட= உலகைப் படைத்தோன்
15.பிரஜாபதி= மக்களை உருவாக்கியவன்; படைத்தோன்
16.வேதா= வேதம் உடையோன்
17.விஸ்வஸ்ரு = எல்லாம் அறிந்தவன் (கேட்பவன்)
18.விதாதா= உயர் தலவன்
19.விதி = வேதம் உடையவன்; விதிகளை எழுதுபவன்
20.நாபிஜன்ம= நாபியில் (தொப்புள்) உதித்தோன்
21.பூர்வ= முன்னோன்
22.கமலோத்பவ = தாமரையில் உதித்தோன்
23.சதானந்த = எப்போதும் மகிழ்பவன்
24.நிதன = ( மரணம் எனப் பொருள்; ஆயினும் பிரம்மாவுக்கு இது எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை)
25.ரஜோ மூர்த்தி = ரஜோ குணம் உடையவர்
26.சத்யக = உண்மை விளம்பி
27.ஹம்சவாஹன; அன்னப் பறவை வாஹனம் உடையோன்
28.விரிஞ்சி = உலகைப் படைத்தோன்
29.அண்டஜ= முட்டையில் உதித்தோன்

guimet-brahma-from-cambodia
Brahma from Cambodia, Museum Guimet, Paris

அமரகோஷம் போன்ற நிகண்டுகள் பெரிய விஷயங்களையும் அழகாக மனப்பாடம் செய்யும் வகையில் பாடலாக எல்லாவற்றையும் கொடுத்து விடும். இதோ பிரம்மாவின் 29 பெயர்களும் அடங்கிய அமரகோச ஸ்லோகம்:

பிரம்மாத்மபூ: ஸூரஜ்யேஷ்ட: ப்ரமேஷ்டி பிதாமஹ:
ஹிரண்யகர்ப்போ லோகேஸ: ஸ்வயம்பூஸ் சதுரானன

தாதா அப்ஜயோனி த்ருஹிர்ணோ விரிஞ்சி கமலாசன:
ஸ்ரஷ்டோ ப்ரஜாபதிர் வேதா விதாதா விஸ்வஸ்ருத் விதி:

நாபிஜன்மாண்டஜ: பூர்வோநிதன: கமலோத்பவ:
ஸதானந்தோ ரஜோமூர்த்தி சத்யகோ ஹம்சவாஹன

இந்தப் பெயர்களைத் தவிர அவருக்கு வேறு சில பெயர்களும் உண்டு. உலகம் முழுதும் பிரம்மா வழிபாடு இருக்கிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் என்னும் இடத்தில் பூஜிக்கப்படுகிறார். மற்ற எல்லாக் கோவில்களிலும் சிலை உண்டு. தென் கிழக்காசிய நாடுகள் முழுதும்— குறிப்பாக கம்போடியா, இந்தோ நேசியாவில் நிறைய சிலைகள் உள்ளன. பால்டிக் நாடுகளில் இவர் ‘’ஸ்வேதோவித்’’ என்ற பெயரில் வழிபடப்படுகிறார். இவருடைய நாலு முகங்கள் நால்திசைகளையும் பார்ப்பதால் இப்பெயர். வெள்ளை நிறத்தவர் என்ற பொருளும் உண்டு. இந்தியாவில் எல்லாப் பெரிய கோவில்களிலும் பிரம்மா இருக்கிறார். எகிப்தில் ‘’பிதா’’ என்ற பெயரில் பிரம்மா இருக்கிறார் (மாதா பிதா இன் ஈஜிப்ட் என்ற என் ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க)

brahma-temple7
Brahma’s Temple at Pushkar, Rajasthan

பிரம்மாவின் ஐந்தாவது தலை சிவனால் கிள்ளி எறியப்பட்டது. நான்கு கைகளில் ஜபமாலை, வேதப் புத்தகம், கமண்டலம், யாகக் கரண்டி வைத்திருப்பார். மனைவி சரஸ்வதி — இவருக்கு அன்ன வாகனம். அவர் உடல் செந்நிறம். ஆயினும் வெள்ளை வஸ்திரம் தரித்து இருப்பார். வரம் கொடுப்பதில் தயாள குணம். ராமனுக்கு மட்டுமின்றி, பலி, ராவணன் ஆகிய ராக்ஷசர்களுக்கும் வரம் கொடுத்தவர்.

சதபத பிராமணம் என்னும் நூலில் பல அடையாளபூர்வ கதைகள் உள்ளன. பிரம்மா — ‘’பூர்’’ என்று சொன்னவுடன் பூமியும் ‘’புவர்’’ – என்று சொன்னவுடன், காற்றும், ‘’ஸ்வர்’’ என்று சொன்னவுடன் வானமும் உருவானதாக சதபதப் பிராமணம் கூறும்.

படைப்புத் தொழில் செய்தபின் அவர் அலுப்பால் படுக்கவே எலும்புகள் விலகி மூட்டு வலி ஏற்பட்டது ஆயினும் பின்னர் சரியானது. அக்னிஹோத்ரம் என்னும் யாகத்தால் அவர் மூட்டுகள் ஒன்று சேர்ந்து அவர் பலம் பெற்றார் என்றும் சதபதம் கூறும். இந்த விலகிப்போன மூட்டுகள் எலும்புகள் ஆகியன ‘’காலம்—பருவங்கள்’’ எனப் பொருள்படும். சங்கேத மொழியில் பேசுவது ரிஷிகளுக்கு மிகவும் பிடிக்கும் என்று வேதமே சொல்லுகிறது

prambanan
Brahma’s Temple ta Prambhanan, Indonesia

பிரம்மன், பிராமணன், பிரம்மா

பிரம்மன், பிராமணன், பிரம்மா ஆகிய மூன்றும் வெவ்வேறு பொருள் உடையவை. பிரம்மம் என்பது கடவுள்; பிராமணன் என்பது ஜாதிப் பெயர்-பிரம்மத்தை நாடுவதே அவன் வாழ்க்கையின் லட்சியம்., பிரம்மா என்பவர் மும்மூர்த்திகளில் ஒருவர். இது தவிர ‘’பிராமணம்’’ என்ற நூல் வேத இலக்கியத்தில் சம்ஹிதைகளைத் தொடர்ந்து வந்த இலக்கியங்கள்.

பிரம்மாவுக்கு தனி வழிபாடு, பூஜை- புனஸ்காரங்கள் இல்லாவிடினும் துதிப்பாடல்களிலும், பஜனைப்பாடல்களிலும் திரி மூர்த்திகளின் பெயர்களில் அவர் பெயரும் சேர்ந்தே வரும். சுசீந்திரம் போன்ற இடங்களில் தான்+மால்+ அயன் என்ற பெயரில் கடவுள் வணங்கப் படுகிறார். பிரம்மாவின் வாய் — இடைவேளை இன்றி வேதத்தை ஒலிபரப்பும் வேத ஒலிபரப்பு ரேடியோ ஸ்டேஷன் — ஆகும். அவர் எப்போதும் வேதமுழக்கம் செய்தவண்ணம் இருப்பார்.

வேதத்தில் இவர் பெயர் பிரஜாபதி, வால்மீகி ராமாயணத்தில் பிரம்மா என்ற பெயருடன் வலம் வருகிறார். சிவனுடைய அடி முடி தேடிய படலத்தில் பொய் சொன்னதால் வழிபாடு இல்லாமற் போனது என்பர்.

யசோதர்மன் என்பவன் கி.பி. 533ல் வெளியிட்ட மாண்டசோர் கல்வெட்டில் படைப்போன், காப்போன், அழிப்போன் ஆகிய மூவரும் பிரம்மாவே என்று சொல்லி இருக்கிறார்.
பிரம்மா வாழ்க! பிரம்மம் வாழ்க! பிரம்மத்தை நாடும் பிராமணர்கள் வாழ்க! பிராமணம் என்னும் நூல்கள் வெல்க!!
brahma (1)halebedu
Brahma at Halebedu, Karnataka.

Except my Brahma stamp photo all other pictures are taken from different websites; thanks.

-சுபம்-

பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகள்: இந்து மதத்தில் நவீன அறிவியல்!

brahma-

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1422; தேதி 20 நவம்பர், 2014.

இந்துமதத்தில் நவீன அறிவியல் உண்மைகள் (Advanced Science) இருப்பதை உலகம் வெகு வேகமாக உணர்ந்து வருகிறது.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை; திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் — என்று சொற்தேரின் சாரதியாம் பாரதி பாடி வைத்தான். அது உண்மையாகி வருகிறது.

சிவபெருமானின் நடனத்தில்– பிரபஞ்சத்தின் தாள லயங்கள் (Dance of Shiva) இருப்பதை பல வெளிநாட்டு அறிஞர்கள் ஆங்கிலத்தில் புத்தகம் வாயிலாக வெளியிட்டனர். அதை நடராஜர் என்னும் அற்புதமான பஞ்சலோக சிலையாக வடித்த தமிழ் ஸ்பதிகளின் பெருமையை இன்றும் உலகமே வியந்து பாராட்டி வருகிறது. நடராஜர் சிலை இல்லாத மியூசியம் உலகில் இல்லை. நடராஜர் படமோ விக்ரகமோ இல்லாத வெளி நாட்டு இந்தியவியல் அறிஞர் எவரும் இல்லை.

கண்ணபிரானின் விஸ்வரூப தரிசனம் பகவத் கீதையின் 11ஆவது அத்தியாயத்தில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய அணு விஞ்ஞானி (Father of Atomic Bomb) ராபர்ட் ஓப்பன்ஹீமர், அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் முதல் அணுகுண்டு வெடித்த கட்சியைப் பார்த்துவிட்டு பகவத் கீதையின் 11 ஆவது அத்தியாயத்தின் 12ஆவது ஸ்லோகத்தைச் சொல்லி வியந்தார். திவி சூர்ய சஹஸ்ரஸ்ய…………………………. ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் என்ன நிகழுமோ அதைப் பார்த்து எனக்கு மயிர்க்கால்கள் தோறும் கூச்சம் ஏற்படுகிறது என்று சொல்லி அர்ஜுனர் வியந்ததை அப்படியே ராபர்ட் ஓப்ப்ன்ஹீமர் சொல்லி உலகை வியப்பில் ஆழ்த்தினார்.

இப்பொழுது கருந்துளைகள் (Black Holes) பற்றி உலக விஞ்ஞானிகள் எழுதி வியந்து வருகின்றனர். வானவியலின் புதிய அதிசயங்கள் இவை. யாராவது ஒருவர் நியூ ஸைன்டிஸ்ட் (New Scientist or Scietific American) அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் போன்ற அறிவியல் இதழ்களை வாசித்துவிட்டு பகவத் கீதையைப் படித்தால் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும். பிளாக் ஹோல் என்னும் கருந்துளைகள் பற்றிய செய்திகள் அதில் (11ஆவது அத்தியாயத்தில்) உள்ளன!!
ஆனால் பிரம்மா பற்றிய விஞ்ஞான உண்மைகளை யாருமே அறிந்து எழுதவில்லை. ஒரு சில அறிவியல் உண்மைகளை மட்டும் பட்டிய லிடுகிறேன்:–

அறிவியல் உண்மை 1
கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் பில்லியன் கணக்கில் நட்சத்திரங்களும் அதைச் சுற்றி மில்லியன் கணக்கில் பூமி போன்ற கிரகங்களும் இருப்பதை உலகம் அறியும். அதில் பல்லயிரம் கிரகங்களில் வெளி உலகவாசிகள் (Extra Terrestrials) வசிக்க உள்ள வாய்ப்புகள் பற்றியும் விஞ்ஞானிகள் அறிவர். ஆனால் சத்ய லோகத்தில் வசிப்பதாகக் கருதப்படும் பிரம்மா பற்றிப் படிக்கையில் அவர் ஒரு வெளி உலகவாசியோ என்று வியக்கத் தோன்றும். அவருடைய வாழ்நாளின் காலம் நாம் இந்தப் பக்கத்தில் எழுத முடியாத அளவு பெரிய எண்ணிக்கை. மற்ற கலாசாரங்களுக்கு 1000, 10,000 என்ற எண்கள் கூடத் தெரியாத காலத்ததி , நாம் உலகமே வியக்கும் ஆயுளை பிரம்மாவுக்குக் கொடுத்தோம் அது மட்டுமல்ல இது ஒரு பிரம்மாவின் ஆயுள். அவர் போன பின், அடுத்த ப்ரம்மா வருவார் என்றும் சொன்னோம். இன்னும் விஞ்ஞானிகளுக்கு — காலம் என்பது சுழற்சி உடையது— Cyclical வட்டமானது என்று கூடத்தெரியாது. இப்பொழுது கருந்துளை ஆய்வுகள் நிறைய நடப்பதால் நமது கொள்கையை வெகு விரைவில் உலகம் ஏற்கும்.

hindu-gods-brahma

பிரம்மாவின் ஒரு நாள் என்பது 4,320,000,000 ஆண்டுகள். இது போல அவர் 100 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் புது பிரம்மா வருவார். இப்பொழுதுள்ள பிரம்மாவுக்கு வயது 51. ஏதோ அறிவியல் புனைக்கதை (Science Fiction) படிப்பது போலத் தோன்றும்.. இது கதை என்று யாராவது நினைத்தாலும் முதலில் அறிவியல் புனைக் கதை எழுதிய பெருமை நமக்கே கிடைக்கும்.

அது மட்டுமல்ல. யுகம் பற்றிய எதைக் கூட்டிப் பார்த்தாலும் ஒன்பது என்ற எண் வரும். இதை சுமேரியர்கள் கூட நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டு பிரளயத்துக்கு முந்தைய சுமேரிய மன்னர்களுக்கு இப்படி ஆட்சி ஆண்டுகளைக் கொடுத்துள்ளனர்!!

அறிவியல் உண்மை 2
பிரம்மாவுக்கு ஒரு பெயர் ஹிரண்ய கர்பன். அதாவது தங்க முட்டை! உலகம் உருண்டை என்பதைக் கண்டுபிடிக்க மேலை நாடுகள் ஒரு கலீலியோ, ஒரு கோப்பர்நிகஸ் தோன்றும் வரை காத்திருந்தது. ஆனால் நாமோ துவக்க காலம் முதல் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் கோள வடிவானவை என்பதை அறிந்து, அண்டம் ( முட்டை வடிவானது), பிரம்மாண்டம், பூகோளம் (புவியியல்) என்று பெயரிட்டோம்.
அதுமட்டுமல்ல. அந்த ஹிரண்யகர்ப்பன் ஒரு நாள் திடீரென வெடித்து வானமும் பூமியுமாகப் பிளந்ததென புராணங்கள் பகரும் இதையே இப்பொழுது மாபெரும் வெடிப்பு Big Bang Theory — பிக் பேங் – என்று சொல்லுகின்றனர். இது ஏன் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை. நமது சாத்திரங்கள் மட்டுமே கடவுள் ஒரு சொல்லை நினைத்தார் — அதைச் சொன்னார்- உலகம் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறது. இதை பைபிள் அப்படியே நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டது. ஆனால் அதற்கு மேல் விளக்கவில்லை.

நாம் அதற்கும் மேலாக ஒரு படி சென்று மாபெரும் வெடிப்பு —ஒரு நாளைக்கு பலூன் போல ஊதிக்கொண்டே போய் பின்னர் முடிவில் வெடிக்கும் —அப்பொழுது காற்றுப் போன பலூன் போல பிரபஞ்சம் சுருங்கும் Big Crunch — மீண்டும் பலூன் போல ஊதும் — என்று – ஸைக்ளீகல் Cyclical —வட்டமான சுழற்சி உடையது என்று சொல்லியிருக்கிறோம். இந்த பிக் க்ரஞ்ச்Big Crunch – கொள்கையை இப்பொழுதுதான் விஞ்ஞானிகள் ஏற்கின்றனர்.

அறிவியல் உண்மை 3
தசாவதாரத்தில் முதலில் மீன், பிறகு ஆமை, பிறகு பன்றி, பிறகு பாதி மனிதன் –பாதி சிங்கம் என்பதெல்லாம் டார்வீன் சொன்ன பரிணாமக் (Theory of Evolution) கொள்கையை ஒட்டி இருப்பதை நாம் அறிவோம் ஆனால் முதல் மூன்று அவதாரங்களும் உண்மையில் ஆதி நூல்களில் பிரம்மாவின் பெயரிலேயே (பிரஜாபதி) உள்ளன. ஆக அவரே படைப்புக் கடவுள்—பரிணாம வளர்ச்சிக் கடவுள். இதை சதபத பிராமணம் (Satapata Brahmana) முதலிய நுல்கள் விளக்கும். பின்னர் இதை விஷ்ணுவின் அவதாரங்களாக புராணங்கள் எழுதின. இதை இன்னொன்றாலும் அறியலாம்.

four faced Sumer
Four faced God of Sumer (Brahma?)

அறிவியல் உண்மை 4
வெளிநாட்டுக்காரர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் ஒரு விஷயம் நம் இலக்கியங்களில் உண்டு. அதை எழுதி, எழுதி நம்மை நக்கல் செய்வது—பகடி செய்வது—கிண்டல் செய்வது அவர்களுக்குப் பொழுதுபோக்கு. அது என்ன ‘’பலான’’ கதை என்கிறீர்களா?

பிரம்மா ஒரு மக:ளைப் பெற்றார். அவள் பெயர் சதரூபா (நூறு உருவம்)—அவல் அழகைக் கண்டு பிரம்மா அவளையே உற்று நோக்கினார். அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது- வேறு திசையில் ஓடி ஒளிந்தாள் அங்கேயும் பிரம்மா திரும்பினார். ஒவ்வொரு திசையிலும் ஒரு முகம் வரவே அவருக்கு நாலு முகம் தோன்றி அவர் நான்முகன் ஆனார். அவளோ வெட்கப்பட்டுக் கொண்டு மேலே போனாள். அங்கு ஐந்தாவது முகம் உதித்தது. அவளுடன் ஒன்று கூடிப் (Incestual Intercourse) பின்னர் உலகத்தைப் படைத்தார். இதைச் சொல்லிச் சொல்லி வெளிநாட்டினர் மகிழ்வர். உண்மையில் இந்தக் கதையை நம்மிடமிருந்து பைபிளும் இரவல் வாங்கி முதல் அத்தியாயத்திலேயே எழுதிவிட்டது. ஆதாம் என்பவரின் இடுப்பு எலும்பை கடவுள் முறித்து ஏவாள் என்ற பெண்ணை உருவாக்கவும், ஆதாம் அவளுடன் கூடி (Incest?) மனித இனத்தை உருவாக்கினார் என்பது அக்கதை. ஒரே உடலில் இருந்து ஒருவரைப் படைத்தால் அந்த ஏவாளும் சதரூபா போல ஆதாமின் மகள்தானே!!

இதில் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் முதலில் பாக்டீரீயா போல இருந்த உயிரினம் ஒரு செல் உயிரினங்களாக மாறி நீரில் நீந்தி பிறகு ஒரே உடலில் ஆண் பெண் உறுப்புகளுடன் பிறந்தன (ஹெர்மாப்ரோடைட் Hermaphrodite). பின்னர்தான் ஆண், பெண் என தனித்தனி உயிர் இனங்கள் தோன்றின. இதை அர்த்தநாரீஸ்வரர் என்னும் சிவனின் வடிவத்துடன் ஒப்பிடலாம்.

முதலில் ஆண் தோன்றினானா? பெண் தோன்றினாளா? முதலில் முட்டை வந்ததா? கோழி வந்ததா? (Chicken and Egg question) என்ற கேள்விக்கு விடை கூறும் கதை இது. பெரிய விஞ்ஞான உண்மைகளை, சுவையான கதைகளாகத் தருபவை நம் புராணங்கள்!

Svetovid-Statue-Ruyan-Island-
Four faced Slavic God (Svetonvid)

அறிவியல் உண்மை 5
பிரம்மாவின் தோற்றம் பற்றிய கதை பெரிய பூகர்ப்பவியல் ( Geology ஜியாலஜி) கதையாகும். அவர் நீரில் படுத்து இருந்த நாராயணனின் தொப்புள் கொடியில் இருந்து உதித்த தாமரை மலரில் இருந்து தோன்றியதாக ஒரு கதை உண்டு. இது காண்டினென்டல் ட்ரிப்ட் Continental Drift எனப்படும் கண்டங்கள் நகர்ந்த கதை ஆகும். முதலில் பூமி என்பது ஒரே நிலப்பரப்பாக இருந்தது பின்னர் அது தாமரை மலர்வது போல மெதுவாக நகர்ந்து இன்றுள்ளது போல ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பிரிந்தது. இதையே தாமரையில் பிரம்மா தோன்றி உலகைப் படைத்தார் என்போம். புராணத்தில் கூட பிரம்மாண்டம் என்று இருப்பதைக் காணலாம். ‘ப்ரு’ என்னும் வடமொழி வேர்ச் சொல் மூலமே ‘’பெருகுதல், பிரிதல், பெரிய, ப்ருஹத், ப்ரம்ம’’ — முதலிய சொற்கள் வந்தன.

கிரேக்க மொழியில், முதலில் இருந்த சூப்பர் கான்டினென்ட்டை ‘’பங்கேயா’’ Panagaea என்பர். பங்கய என்றால் தாமரை எனப் பொருள். இது பங்கஜம் என்ற வடமொழிச் சொல். பிற்காலத்தில் இந்தப் பொருள் அறியாதோர் கிரேக்க மொழியில் புதுப் பொருள் கண்டனர் ( பேன்+ கயா ). பெண்கள் குழந்தை பெறுவதையும் தாமரை மலரில் இருந்து குழந்தை வந்ததாக வடமொழி இலக்கியங்கள் வருணிக்கும்.

அறிவியல் உண்மை 6
கணித விஷயத்தில், ஒன்பது என்ற எண்ணின் வியப்புறு குணங்களில் பல ஆராய்ச்சி செய்து அதன் பெயரில் பிரம்மாண்டமான எண்களைக் க(ல்)ற்பித்து (கல்பம் என்பதே பிரம்மாவின் ஒரு நாள், பரம் என்பது அவரது 100 ஆண்டு) உலகம் அறியாத புதுமைகளைச் செய்தனர் இந்துக்கள். ஒன்பது என்ற எண்ணின் பரிபூரணத் தன்மையை மனதிற் கொண்டே 108, 1008 என்ற அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம் ஆகியவற்றைப் படைத்தார்கள் இது பற்றி நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய எண்கள் 18, 108, 1008 பற்றிய கட்டுரையில் விரிவாகக் கொடுத்து இருக்கிறேன்.

brahma-statue

அறிவியல் உண்மை 7
நாரா (நீரா) அயனன்= நாராயணன், பிரம்மா மற்றும் முதல் இரண்டு அவதாரங்கள் எல்லாம் — நீரில்தான் உயிரினங்கள் தோன்ற முடியும், பரிணாம வளர்ச்சி பெற முடியும் —- என்று காட்டுகின்றன. இன்று வெளி கிரகங்களிலும் நீரின் மூலக்கூறுகள் (water molecules) இரு கின்றனவா என்று விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

அறிவியல் உண்மை 8
உலகின் முதல் அகராதி (Thesaurus/ Dictionary நூலான அமரகோசம் வழங்கும் பிரம்மாவின் 29 வடமொழிப் பெயர்களை மற்றொரு கட்டுரையில் தருகிறேன்.

பிரம்மா என்பவர்
வானவியலை (Astronomy/ Cosmology) விளக்கும் கடவுள்
பூகர்ப்பவியலை (Geology) விளக்கும் கடவுள்
உயிரியல், பரிணாம வளர்ச்சியை (Biology / Theory of Evolution) விளக்கும் கடவுள்
கணிதம், பிரம்மாண்ட எண்களை (Mathematics and Amazing Numbers) விளக்கும் கடவுள்
பிக் பேங், பிக் க்ரஞ்ச்(Big Bang and Big Crunch) முதலிய அதி நவீன கொள்கைகளை (Ultra Modern Theories) விளக்கும் கடவுள்!!

—-சுபம்—

தொல்காப்பியரும் வள்ளுவரும் பெண்களின் எதிரியா?

bankura in WBRiya,Raima,Moon

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1420; தேதி 19 நவம்பர், 2014.

இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும் — குறள் 822

பொருள்:– தம் இனத்தைச் சேர்ந்தவர் போல நடிப்பர்; ஆனால் உள்ளன்பு இராது. அத்தகையோர் நட்பு, பொது மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறு படும்.

இதில் மகளிர் மனம் போல மாறுபடும் என்பதைப் பார்க்கையில் பெண்களின் சஞ்சல புத்தியைக் குறை கூறுவது போலத் தோன்றும். ஆயினும் பொது மகளிரைப் பற்றி சொல்கிறார் என்றவுடன் அந்த ஐயப்பாடு நீங்கிவிடும். எதையும் அது எங்கே, என்ன காரணத்துக்காக சொல்லப்பட்டது என்பதை காணல் வேண்டும்.

கூடா நட்பு என்னும் இதே அதிகாரத்தில் இன்னும் ஒரு குறளில் வள்ளுவர் கூறுவதையும் இங்கே குறிப்பிடுதல் பொருத்தம்:

_HY29BONALU-festival,s'bad, hindu

ராஜீவ் காந்தி படுகொலை

தொழுத கை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து— குறள் 827
பொருள்:- உள்ளுக்குள் பகை வைத்திருப்போர் வணங்குபோதும் கைக்குள்ளும் கொலைக் கருவி வைத்திருப்பர். அவர்கள் விடும் போலிக் கண்ணீரும் அத்தகையதே.

நமது காலத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் செய்த படுகொலையையும் நாம் கண்டோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை வணங்குவது போலக் குனிந்து வெடிகுண்டை வெடித்துப் படுகொலை புரிந்தவளும் ஒரு பெண்ணே. இதை மேற்கூறிய குறளில் கண்டோம்.

நாடக அரங்கில் படுகொலை

இதே போல நாடக அரங்கில் நடந்த ஒரு படுகொலையும் வரலாற்றில் உள்ளது. சுங்க வம்சத்து கடைசி அரசனான தேவபூதி மிகவும் மோசமான ,பலவீனமான ஒரு பேர்வழி. அவனை ஒரு அடிமைப் பெண், — படுக்கை அறையிலே கொலை செய்தாள். அவள், அவனது ராணி போல வேஷம் போட்டுக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்று அவனைக் கொன்றாள். அவளும் ஒரு பெண்தான்.

வரலாற்றில் இப்படிப் பெண்கள் மூலம் படுக்கை அறையில் நடந்த படுகொலைகள் பல உள. ஆக பெண்களிலும் “நீலாம்பரிகள்” உண்டு. ராமாயணத்தில் பெண் என்ற காரணத்தால் தாடகையைக் கொல்ல ராமன் மறுக்கிறான். அவள் பெண் அல்ல, பேய் என்கிறான் விசுவாமித்திரன். ஆகவே எந்த சூழ்நிலையில் யாரைச் சொல்கிறார் என்பதை அறிந்த பின்னரே ஒருவரைக் குறைகூறுதல் பொருந்தும்.

பெண்கள் மட்டுமே கொலை செய்தனர் என்பதும் உண்மையல்ல. ‘’மனதிலே கருப்பு வைத்து’’ – விபூதி பூசி வந்த — முத்த நாதன் என்பான் உடைக்குள் இருந்த வாளினை உருவி, மெய்ப்பொருள் நாயனாரைக் கொன்றதும், இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காவலர்களே கொன்றதும் வரலாற்று உண்மைகள்.

Belur1mirror lady

தொல்காப்பியத்தில்…

தொல்காப்பியத்தில் முதல் சூத்திரம்:–
‘’எழுத்து எனப்படுப
அகரம் முதல் னகரம் இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே’’

பொருள்:– தமிழ் எழுத்துக்கள் அ முதல் ன வரை முப்பது என்பர். மூன்று சார்பு எழுத்துக்களைச் சேர்க்காமல்.

இதற்கு உரை எழுதிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ‘’ன’’ — என்பதை கடைசியில் வைத்ததற்கு என்ன காரனம் என்று வியாக்கியானம் செய்கின்றனர். னகரம் வீடு பேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது என்று எழுதியுள்ளனர்.

சேனாவரையர் எழுதிய உரையிலும், “அறிவு முதலாயினவற்றான் ஆண்மகன் சிறந்தமை யின் ஆடூஉவறிச் சொல் முற்கூறப்பட்டது என்பர். தொல்காப்பியருக்கு முன்னரே தமிழ் மொழி எழுத்துக்கள் அ-வில் துவங்கி ன-வில் முடிந்திருக்கலாம். ஆயினும் அவர் நூல்தான் நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் மிகப் பழையது என்பதால் மூன்று உரையாசிரியர்களும் தங்களுடைய அல்லது அவர்களது காலத்தினுடைய ‘’ஆண் ஆதிக்கக் கொள்கையை’’ தொல்காப்பியர் மேல் போட்டுவிட்டனர்!! அதாவது ன-கரம் ஆண்பால் பெயர்களில் வருவதால் அது உயர்வான எழுத்து என்றும் அதனால்தான் அதைத் தமிழ் மொழியின் கடைசி எழுத்தாக வைத்துச் சிறப்பித்தார் தொல்காப்பியர் என்றும் பொருள்படும்படி எழுதிவிட்டனர்.

இது போலவே மனு எழுதிய ஒரு ஸ்லோகத்தையும் காட்டி மனு பெண்களின் எதிரி என்பர் வெளிநாட்டினர் — ஆனால் மனுவோ பெண்களுக்கு மகத்தான ஆதரவு கொடுத்தவர் — “எந்த இடத்தில் பெண்கள் பூஜிக்கப்பட வில்லையோ அந்தக் குடும்பம் வேரொடு அழியும் என்றும், பெண்கள் விடும் கண்ணீர் குடும்பத்தையே துடைத்து ஒழித்துவிடும்” என்றும் சொல்லி இருக்கிறார். பெண்கள் வாழ்க என்ற எனது கட்டுரையில் முழு விவரம் காண்க. அது மட்டுமல்ல. பெண்களுக்கு கணவனும் சகோதரர்களும் நகைகளையும் புத்தாடைகளையும் வாங்கிக் கொடுத்து எப்போதும் அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவிட வேண்டும் என்றும் எழுதி வைத்திருக்கிறார்– (கேட்பது பெண்கள் குணம், வாங்கிக் கொடுப்பது ஆண்கள் கடமை என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் காண்க) ஆக உரைகாரர்களையோ வெளிநாட்டு ‘’அறிஞர்’’ களையோ நம்பி அர்த்தத்தை அனர்த்தம் ஆக்கி விடக்கூடாது.

026maruthi

பகவத் கீதையிலும், ஆதி சங்கரரின் விவேக சூடாமணியிலும் ஆண்களுக்குச் சார்பான ஸ்லோகங்கள் இருப்பது உண்மையே. ஆனால் அவர்கள். தாய் என்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு கடவுளுக்கும் மேலான இடத்தைக் கொடுத்துப் பாடி இருக்கின்றனர்.

மனைவி என்ற நிலையில் உள்ள பெண்களுக்கு சிவ பெருமான் போல 50—50 கொடுக்கின்றனர். உடலில் பாதி மட்டுமல்ல- உரிமையிலும் அர்த்த நாரீ என்ற முறையில் ‘’சஹ தர்மசாரினி’’ என்பர்.

இழி தொழில் செய்யும் பெண்கள் மீதே அவர்கள் வசைமாரி பொழிந்தனர்.
தனித்தனியாக எடுத்துப் பார்க்கையில் கம்பன், பட்டினத்தார், அருணகிரி நாதர் ஆகியோர் பெண்களின் எதிரிகள் போலக் காட்சிதருவர்.!

இதோ சில கம்பன் பாடல்கள்:

‘’அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கொவ்வா
நன்னுதல் மகளிர் சிந்தை’’

‘’மன்றலங் கோதை மாதர் மனம் என போயிற்றம்மா’’

வருமுலை விலைக்கென மதித்தனர் வழங்கும்
தெரிவையர் மனமெனக் கறங்கெனத் திரிந்தான்’’ – கம்ப ராமாயணம்.

afrohairstylecmpetion-5

வரைவின் மகளிர் என்ற அதிகாரம் முழுதும் வள்ளுவனும் பெண்களைச் சாடுகிறான்.
இது போல ஷேக்ஸ்பியர் உள்பட எந்த நாட்டு இலக்கியத்திலும் காணலாம்.
ஆக, எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப்பொருள் கண்டு தெளிக.
பாரதியின் சொற்களுடன் முடிக்கிறேன்:–
பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்கள் வெல்கவென்று கூத்திடுவோமடா!
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலி அழிப்பது பெண்களின் அறமடா!
கைகள் கோத்து களித்து நின்றாடுவோம்
துன்பம் தீர்வது பெண்மையினாலடா!

-சுபம்-

Pictures are taken from various sites; not related to the article;thanks.

தமிழனுக்கு அடி மேல் அடி! 27,000 அடி!!

????????????????????????????????????????????????????????????????????????????????????????????

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1418; தேதி 18 நவம்பர், 2014.

தமிழா உனக்கு 27,000 அடி!
புரியவில்லையா? விளங்கவில்லையா?
உனக்கு பல்லாயிரம் அடி! தமிழன்னை கொடுத்தது!!
சங்கத் தமிழ் இலக்கியத்தில் மொத்தம் 27,000 அடிக்கு மேல்!!

தமிழா உனக்கு 27,000 அடி! உடனே, படி,படி,படி!

தொல்காப்பியத்தில் 3999 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

திருக்குறளில் 2660 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

சிலப்பதிகாரத்தில் 5001 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

மணிமேகலையில் 4759 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

திருமந்திரத்தில் 12,000 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

திவ்யப் பிரபந்தத்தில் 16,000 அடி!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

தேவாரம் திருவாசகத்திலோ பல்லாயிரம் அடி
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

பெருங்கதையில் 16,230 அடிகள்
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

lot of books 3

சீவக சிந்தாமணியில் 12,400 அடிகள்
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

கம்ப ராமாயணம் 42,000 அடிகள்
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

வள்ளலார் முதல் பாரதி வரை சொல்லிய சொல்
பல்லாயிரம் அடி! தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

இன்னும் ஆயிரமாயிரம் கவிஞர்கள் படைத்த கவிதைகளைப் படிக்க வேண்டுமானால் பல நூறு பிறவி வேண்டும்!

கல்வி கரையில, கற்பவர் நாள் சில!
தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

நாளது சின்மையும், இளமையது அருமையும்
அரிதரிது! தமிழா, படி,படி,படி! உடனே படி,படி,படி!

ஓங்கி உலகலளந்த உத்தமன் (விஷ்ணு) மூவடியால் உலகளந்தான்!
தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் கற்றோர் ஈரடியால் (இரு மொழியால்) உலகளப்பர்!! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!!
dog-with-books-and-glasses

புள்ளிவிபரம்

தொல்காப்பியம் 3,999 அடிகள்

சங்கத் தமிழ் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சுமார் 30, 000 அடிகள் (சிலர் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப படையை ஒதுக்கி 27,000 வரிகள் என்பர்)

சிலப்பதிகாரம் 5,001 அடிகள்

மணிமேகலை 4,759 அடிகள்

பெருங்கதை 16,230 அடிகள்
origin of man

பாடல் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு (குறள் உள்பட 18 நூல்கள்) 3,250 பாடல்கள்

கம்ப ராமாயணம் 10,500 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3,145 பாடல்கள்

திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார் பாடியவை) 4,000 பாடல்கள்

பன்னிரு திருமுறை 18, 326 பாடல்கள்

தாயுமானவர் 1,454 பாடல்கள்

அருணகிரி 1,361 பாடல்கள்

இராமலிங்க சுவாமிகள் 5,800 பாடல்கள்
தமிழில் உள்ள பழமொழிகள் 20,000க்கு மேல்
Rat-reading

எனது முந்தைய கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்:
தமிழ் ஒரு கடல் ( 11-5-2012 எழுதியது )
சம்ஸ்கிருதம் ஒரு சமுத்திரம்( 11-5-2012 எழுதியது )

cat reading

contact swami_48@yahoo.com

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

pyramid

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

எகிப்திய நாகரீகம் குறித்து 2012 ஆம் ஆண்டில் சுமார் பத்து கட்டுரைகளில் பல விஷயங்களை எழுதி இருந்தேன். ‘’நெய்த்’’ என்னும் எகிப்திய தெய்வம் நெய்தல் (துணி நெய்தல்) என்பதுடன் தொடர்புடைய தெய்வம், ‘’க’’ என்றால் கடவுள் (பிரம்மா) முதலிய பல சொல் ஆராய்ச்சி விஷயங்க ளையும் வீடு முதலிய சொற்கள் செமிட்டிக் மொழியில் இருப்பது பற்றியும் எழுதி இருந்தேன். அண்மையில் ‘’பழங்கால எகிப்தில் யார், எவர்’’ — என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாசித்து முடித்ததில் மேலும் பல தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள் அங்கே இருப்பதை அறிந்து வியந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆய் என்ற மன்னன் எகிப்திலும் உண்டு. சேர நாட்டு மன்னர்களுக்குப் பின் எப்படி ஆதன், குட்டுவன், பொறையன் என்று பெயர் இருக்கிறதோ அது போல எகிப்திலும் உள்ளது.

இமயவரம்பன் நெடுஞ்சேரல் ஆதன், சேரன் செங் குட்டுவன், மாந்த்ரஞ் சேரல் இரும் பொறை எனப் பல பெயர்களை நாம் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். பொறையன் என்பது எகிப்தில் பாரோ (மன்னன்) என்ற பெயரில் உள்ளது. கேட் என்று முடியும் பல எகிப்திய மன்னர்களின் பெயர்களை (அமன்கேட், ஹருகேட்) குட்டுவன் என்பதோடு ஒப்பிடலாம். ஆதன் என்ற பெயர் சூரியன் என்னும் கடவுளின் பெயராக எகிப்தில் புழங்குகிறது (ஒரு மன்னன் பெயர் அகனாதன்). அதே பொருளில் — (ஆதவன்=சூரியன் என்ற பொருளில்) —- சேரன் பெயர்களில் இருப்பதை அறிவோம்.

நான் பட்டியலில் கொடுக்கும் பெயர்கள் எல்லாம் கி.மு.1900 முதல் கி.மு 1300 வரைக்குட்பட்டது. தனித்தனியே மன்னனின் ஆட்சி ஆண்டு வேண்டுவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க.
இது தவிர முட ‘’மோசி’’ என்ற பெயர்களும் ஆய் என்ற பெயரும் வியப்பை உண்டாக்கும்.
ஆய் என்பவன் எகிப்தில் சாதாரண நிலையில் இருந்து மன்னன் ஆனவன். தனது மகளை ஒரு எகிப்திய மன்னனுக்கு மணம் செய்து கொடுத்ததால் அவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

Egyptian-Sunpower

மிட்டன்னிய (தற்போதைய சிரியா/ துருக்கி பிரதேசம்) இந்து மன்னன் தசரதன் தன்னுடைய இரண்டு புதல்விகளான புது கீபா, தது கீபா — (புத்த சிவா, தத்த சிவா என்ற பெயர்களோ!!) —- ஆகியோரை எகிப்திய மன்னனுக்கு மணம் புரிவித்து தங்கத்தினால் ஆன கடவுள் சிலை ஒன்றையும் அனுப்பிவைத்தான். இந்தக் கடவுள் சிலை துர்க்கை என்று நாம் வணங்கும் கடவுளுக்குச் சமமான மேற்காசிய தெய்வம் ஆகும். இவர்கள் எகிப்திய அரசவைக்குள் நுழைந்தபின்னர் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் அங்கே புழக்கத்தில் வந்தன. ராம்செஸ் என்ற பெயரில் மட்டும் 13 பேர் எகிப்தை ஆண்டனர் (இது குறித்து காஞ்சி மஹா ஸ்வாமிகள் 1932 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் ஆற்றிய உரை விஷயங்களை முன்னரே எழுதிவிட்டேன்).

முடமோசி என்ற சங்க காலப் பெண் புலவர் பற்றித் தமிழர்கள் நீண்ட காலமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தப் பெயர் எகிப்து நாட்டில் மிகவும் அதிகம். தத் மோசி என்ற பெயரில் மட்டும் நால்வர் இருந்தனர். இதுதவிர ஆமோசி, ஹரமோசி, காமோசி, மீனமோசி என்ற பெயர்களும் மன்னர்கள் பட்டியலில் உண்டு.

மோசி என்றால் மகன் என்று பெயர். தமிழில் மூசு என்பதை முதலில் விளையும் இளம் பலாக் காய்க்குப் பயன் படுத்துவோம். பலா மூசு கூட்டு, கறி முதலியவற்றைச் சாப்பிடுகிறோம். இதே பொருளில் மோசி என்றால் தலைப் பிள்ளை என்ற அர்த்தம் ஸ்வாகிலி (கிழக்கு ஆப்பிரிக்கா) மொழியிலும், எகிப்திலும் இன்றும் இருக்கிறது. மோசஸ் என்ற குழந்தையை நைல் நதியில் கண்டு எடுத்த மன்னன் மகள் அவனுக்கு ஹீப்ரூ (எபிரேய) மொழியில் மோசி (மோசஸ்) என்று பெயரிட்டாள். பின்னர் அவர் யூதர்களை வழி நடத்திச் சென்ற கதைகளை நாம் அறிவோம்.

trademap

தமிழில் முட மோசி என்ற பெயர், அவர் வீட்டுக்குத் தலைப் பிள்ளையாக (புதல்வியாக) பிறந்ததால் வந்திருக்கலாம். பிறக்கும் போதே இளம் பிள்ளை வாதம் (போலியோ) போன்ற குறைகளுடன் பிறந்ததால் முடமோஸி என்ற பெயரும் பெற்றிருக்கக்கூடும்.

ஆக மோசி என்பது எகிப்து வரை உள்ளது. சேர நாட்டில் இருந்து கடலை நோக்கி உட்கார்ந்தால் அது எகிப்து இருக்கும் திசையை நோக்கி இருக்கும். பழங்காலத்தில் அரபிக் கடல் முழுதும் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தினர். கடல் கொள்ளையர்களை செங்குட்டுவன் ஒடுக்கி அவர்களுடைய காவல் மரமான கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தினான்.

நெடுஞ் சேரலாதனோவெனில், அங்கு அட்டூழியம் புரிந்த யவனர்களைப் பிடித்து தலையை மொட்டை அடித்து, கைகளைப் பின்புறம் கட்டி, தலையில் எண்ணையை ஊற்றி அவமானப் படுத்தியதைப் பதிற்றுப்பத்தில் படித்தோம். இந்துக் கடவுளரின் கடற்படைத் தாக்குதல்கள் என்ற எனது பழைய கட்டுரையில் கிருஷ்ன பரமாத்மா, துவாரகை துறைமுகத்தில் இருந்து கடற்படையுடன் சென்று மேற்காசியாவில் நடத்திய தாக்குதல்களை விவரித்துள்ளேன்.

இப்படி நமது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தகாலதில், 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு இந்தியன் உளறிவிட்டான். எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியாவில் ஒரு கிரேக்க நாட்டானிடம் பருவக் கற்று மூலம் நாம் எப்படி எகிப்து முதலிய நாடுகளுக்குச் செலவே இல்லாமல் செல்கிறோமென்று உளறிவிட்டான். அது முதல் மேலை நாட்டோர் நம் மீது படை எடுத்து நம்மை அடிமைப் படுத்தத் துவங்கிவிட்டனர். அந்த கிரேக்க நாட்டான் பெயர் ஹிப்பலஸ் — அவன் பெயரில் தென் மேற்குப் பருவக்காற்று ரகசியம் மேலை உலகம் முழுதும் பரவியது. (தமிழ் இலக்கியத்தில் அதிசயங்கள் — என்ற எனது பழைய– 2003 ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில்– மேல் விவரம் காண்க)

egypt 2

ஆக சேர நாட்டில் இருந்து தமிழ் பெயர்கள் அங்கு சென்றதில் வியப்பில்லை. எபிரேய மொழியில் பல தமிழ் சொற்கள் உண்டு அவற்றை தனிக் கட்டுரையில் தருவேன்.. யூதர்கள், பார்ஸிக்கள் முதலியோர் மேலைக் கடற்கரை மாநிலங்களில் குடியேறியதும் பருவக் காற்று ரகசியம் வெளியேறியதால்தான் என்று சொல்லலாம்.

எகிப்தில் பல பெயர்கள் தேவ (டேப்) என்று முடியும். இவை அந்த நாட்டுக் கடவுளான ஹோதெப் (ஹே தேவ!) என்று அவர்கள் புத்தகத்தில் எழுதுவர். ஆயினும் கடவுள் என்ற பெயரில் தேவ இருப்பதில் வியப்பில்லை. நாம் சிவனை மஹா தேவ என்று சொல்கிறோம்.

இப்படிப் பெயர்களில் மேம் போக்காகக் காணப்படும் ஒற்றுமைகளை வைத்து மட்டும் நாம் எகிப்திய-இந்திய உறவை எடை போடுவது அறிவுடைமை ஆகா. வேறு பல விஷயங்களிலும் காணப்படும் ஒற்றுமைகளை வைத்தே முடிவுக்கு வருகிறோம். ஈசாப் என்னும் கிரேக்க அடிமை, எகிப்து நாட்டில் அடிமை வேலை செய்த காலையில் கேட்ட கதைகளை எழுதி உலகப் புகழ் பெற்றான். அவன் நாட்டில் இல்லாத மயில் போன்ற இந்தியப் பறவைகளை அவன் கதைகளில் காண்பது நம்முடைய கலாசார தாக்கத்தை வெள்ளிடை மலையென விளக்கும்.

egypt india

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)
Did Indians build Egyptian Pyramids? ( 27 August 2012)
Vishnu in Egyptian Pyramids ( 5 September 2012)
Vedas and Egyptian Pyramid Texts ( 20 August 2012)
Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda (26-9-2012)
Hindu Gods in Egyptian Pyramids ( 16-9-2012)
Flags: Indus Valley- Egypt Similarities (15-10-2012)
எகிப்தில் திருமூலர் கருத்துக்கள் (21-11-2013)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை (14-10-2012)
Hindu Symbolism in France ( 24 August 2014)
More Tamil and Sanskrit Names in Egypt (15th November 2014)
aum
contact swami_48@yahoo.com

மொழிபெயர்க்க முடியாத ஒரு அற்புதச் சொல்!

good Dharma2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1412; தேதி 15 நவம்பர், 2014.

சம்ஸ்கிருதத்தில் உள்ள தர்மம் என்ற சொல் எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கிறது. இது எந்த மொழியிலும் ஒரே சொல்லால் மொழி பெயர்க்க முடியாத ஒரு அற்புதமான சம்ஸ்கிருதச் சொல். தமிழில் அறம் என்று சொல்வோம். ஆனால் தர்மம் என்ற சொல்லின் எல்லாப் பொருளையும் அது தராது.

தர்ம என்பது இந்தியில் தரம் என்றும் தமிழில் அறம் என்றும் உரு மாறியது. அறம் என்ற சொல், சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு வந்தது என்று நான் சொல்லவில்லை. பாரதீய சிந்தனை — ஒரே சிந்தனை. ஆகையால் ஒரே மாதிரித்தான் சொற்களும் உருவாகும். சிவ பெருமானின் உடுக்கை ஒலியின் ஒரு புறத்திலிருந்து எழுந்த சப்தத்தை ஒரு குழு ‘’தர்ம’’ என்று கேட்டனர். மற்றொரு குழு ‘’அறம்’’ என்று கேட்டனர் என்பதே சாலப் பொருந்தும்.

PoweroftheDharmacover

இதை இன்னொரு எடுத்துக்காட்டாலும் உணரலாம். ‘’தர்ம, அர்த்த, காம’’ என்ற வட மொழிச் சொற்றொடர் ‘’அறம், பொருள், இன்பம்’’ என்று தமிழில் அதே வரிசையில் வருகிறது. இவை வாழ்க்கை மூல்யங்கள்- இந்தியர்களின் ஆதார சுருதி- பாரதீய வாழ்வின் அஸ்திவாரக் கற்கள்.–இதை மஹாபாரதத்திலும் காணலாம். தொல்காப்பியம் (சூத்திரம்1037, 1363), திருக்குறளிலும் (501, 754, 760, முப்பால்) காண்கிறோம். காலத்தால் முந்திய வேத உபநிஷதங்களைத் தமிழர்கள் ‘காப்பி’ அடித்தனர் என்பதைவிட, பாரதீயர்கள் ஒரே மாதிரித்தான் சிந்திக்க முடியும் என்று கொள்ளலாம்.

இதை இன்னொரு எடுத்துக்காட்டாலும் கண்டு கொள்ளலாம். தர்ம–அர்த்த காம—என்பதன் இடையில் உள்ள ‘’அர்த்த’’ என்பதற்கு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் இரண்டு அர்த்தம்–பொருள் உண்டு.
அர்த்தம் = பொருள்

இந்தச் சொல்லின் பொருள் MEANING என்ன? இந்தச் சொல்லின் அர்த்தம் என்ன என்று நாம் கேட்கிறோம்.

அர்த்தம் என்பதை செல்வம் WEALTH என்ற பொருளிலும் பயன்படுத்துகிறோம். இரண்டு மொழிகளிலும் ஒரு சொல் இப்படி ஒரே பொருளுடன் வழங்குவது தன்னிச்சையாக (Not a coincidence) நடந்ததல்ல. தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் இருந்து வந்ததையே இவை காட்டும்.

aum

பாரத மக்கள், சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் ஒன்று பட்டவர்கள் என்பதற்கு இது போல நூற்றுக் கணக்கான எடுத்துக்காத்துகளை எடுத்துச் சொல்லலாம். இன்னும் ஒரே ஒரு எடுத்துக்காட்டு:–

சூத்திரம் = நூல் BOOK (இரு மொழிகளிலும் புத்தகம் என்ற பொருளில் வரும்.
எ.கா. காம சூத்திரம், கல்கி எழுதிய நூல்கள்…………………………

சூத்திரம் = நூல்கண்டில் இருந்து நாம் ஊசியில் நுழைக்கும் நூல்THREAD.

எ.கா. தாலிக் கயிற்றை மங்கலசூத்ரம் என்பர். தமிழிலும் இந்த இரண்டு பொருள்களும் உண்டு.நிற்க.
தருமம் என்பதை ஒரே சொல்லால் விளக்கவே முடியாது.

அம்மா, கொஞ்சம் தரும் போடுங்கம்மா. ஐயா பெரிய தருமவான். அவர் இருந்தா இவ்வளவு நேரம் என்னை நிக்க வச்சிருக்க மாட்டார் என்று பிச்சைக்காரன் சொல்லும் இடத்தில் தர்மம் என்பதன் பொருள் ‘தானம்’.

சட்டசபையில் நம்து கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, இது நியாயமா, தர்மமா, முறையா, நீதீயா, நேர்மையா? முதலமைச்சரே பதில் சொல்லட்டும் என்று சொல்லும் போது அது தர்ம நூல்களில் அல்லது அம்பேத்கர் என்பவர் தலைமையில் எழுத சட்ட விதிகளைக் குறிக்கும்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இதே சொல்லை – “நாம் எல்லோரும் இந்து தர்மத்தைப் பின்பற்ற வேண்டும்” — என்று சொல்லும்போது அதன் பொருள் மிகவும் விரிவடைகிறது.

பஞ்சபாண்டவர்களில் யுதிட்டிரனுடைய பெயரை தர்மன் என்று சொல்லும்போது நெஞ்சாரப் பொய் சொல்லமாட்டான், யாருக்கும் தீங்கு செய்யமாட்டான் என்ற பொருளில் பயன்படுத்துவோம்.

ஒருவருடைய கடமையையும் தர்மம் என்போம். மருந்து எழுதிக் கொடுத்து அதற்குக் காசு வாங்குவது டாக்டர்கள் தர்மம். மக்களுக்கு இன்பம் கொடுத்து காசு வாங்குவது விலை மாதர்களின் தர்மம், போரில் எதிரிகளைக் கொல்வது படைவீரனின் தர்மம் என நமது நூல்கள் பகரும்.

Acharya-Dharma-Manifesto

(1)சட்டம், (2)கடமை, (3)நேர்மையான நடவடிக்கை, (4)சமூக தார்மீக அமைப்பு, (5)குணநலம், (6)ஒரு பொருளின் இயற்கையான நடவடிக்கை (தேளுக்கு தர்மம் கொட்டுவது — ஆகிய அத்தனையும் – தர்மம் என்னும் குடையின் கீழ் வந்து விடும்.

வடமொழியில் தர்மம் என்பதன் வேர்ச்சொல் ‘’த்ரு’’.
அதன் பொருள் ‘’தாங்குதல்’’, ஆதாராமாக இருத்தல்.
பாராதீய சிந்தனையின், செயல்பாட்டின் ஆதாரம் அது.

இதில் இன்னொரு விஷயத்தையும் சிந்திப்போம். ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தவை. மாதா என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் மதர், மெடர், மெடர்னிட்டி, மெடெர்னல் என்று நூற்றுக்கணக்கான சொற்களைக் காணலாம். ஆனால் இந்த தர்ம என்ற சொல்லை ஏன் பிறமொழிகள் எடுத்துக் கொள்ளவில்லை? தமிழில் மட்டும் அதே சப்தத்துடன் (தர்ம=தரம்=அறம்) அச் சொல் வழங்கிவருகிறது என்று யோசித்தோமானால் ஒரு பெரிய ரகசியம் புரியும். உலகின் ஆதி மொழி இரண்டே இரண்டுதான். அதற்குள் உலகையே அடக்கிவிடலாம். நம்மிடமிருந்து ஐரோப்பியர்கள் மொழிகளை மட்டுமே கற்றனர். அடி வேர்களை, ஆணி வேர்களை அவர்கள் அறியவில்லை. தமிழனும் சம்ஸ்கிருதம் பேசுவோனும் மட்டுமே ஆணிவேர்கள். அதைப் புரிந்துகொண்டால் உலகையே அளந்துவிடலாம்!!
dharma

வேதம் “தர்மம் சர, சத்யம் வத” (அறம் செய்மின்; உண்மை பேசுமின்) என்று சொல்கிறது. நாமும் அதையே பின்பற்றுவோம்.

Contact swami_48@yahoo.com

தொல்காப்பிய அதிசயங்கள்

astrologer

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014.

‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தமிழ் மொழியின் மிகப்பழைய நூலாகக் கருதப்படுகிறது. ஆயினும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

1.தமிழர்களின் 4 முக்கிய தெய்வங்களில் இந்திரனையும் வருணனையும் சேர்த்த தொல்காப்பியர் ஏன் சிவபெருமானை அறவே ஒதுக்கிவிட்டார் என்பது இன்றுவரை புரியவில்லை. மாயோன் (விஷ்ணு), சேயோன் (முருகன்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகியோரை மட்டுமே நானிலத் தெய்வமாகக் குறிப்பிடுகிறார்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.தொல்காப்பியத்தில்
1610 சூத்திரங்கள் – சூத்திரங்கள் (நூற்பாக்கள்)
5630 சொல் வடிவங்கள்
மூன்று அதிகாரங்கள்
அதிகாரத்துக்கு 9 வீதம் 27 இயல்கள்
3999 வரிகள் உடையது
தொல்காப்பிய ஏட்டுச் சுவடிகளில் உள்ள பாட பேதங்கள் -2000
(13,699 தொடை வகைகள் உள்ளதாக தொல்காப்பியர் கூறுகிறார்— சூத்திரம் 1358)
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் அறுவர் :—- இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்.

3.பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியப் பாயிரம் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தெளிவாகக் கூறுகிறது:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் — என்றும்

தொல்காப்பியனார்
வண்புகழ் மூவர்தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது — 1336.தொல் — என்றும்

இதையே பாரதியார்
நீலத் திரை கடல் ஓரத்திலே — நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு – என்றும் பாடினர்.
tolkappiyar

4.அதே பாயிரம், நான்கு வேதங்களையும் அறிந்த அதங்கோட்டு ஆச்சார்யார் என்ற பிராமணர் தலைமையில் நிலந்தரு திருவிற் பாண்டியன் சபையில் தொல்காப்பியம் அரங்கேறிய நற்செய்தியையும் நமக்குத் தரும்:–
நிலம்தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து (பாயிரம்)

5.தமிழின் தனிச் சிறப்பு உயர்திணை, அஃறிணை என்ற பிரிவுகளாகும். மக்கள், கடவுளர் எல்லோரும் உயர்திணை. அஃதில்லாதது அஃறிணை என்பார் தொல்காப்பியர்:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையில் இசைக்குமன சொல்லே (484)

6.உயிரினங்களை ஆறு அறிவு உடைய பிரிவுகளாகத் தொல்காப்பியர் பிரித்திருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை:

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

tamil-lovers

தொல்காப்பியம் எவ்வளவுதான் சிறப்புடைத்தாலும் மேலே உள்ள சூத்திரத்தில் கூறியது கூறல் என்னும் குற்றம் ( பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) — இருப்பதைக் காண்கிறோம். இதனால் பாணினியின் வடமொழி இலக்கணத்தையும் தமிழ் இலக்கணத்தையும் ஒருங்கே கற்றோர் பாணினியை இமயமலைக்கும் தொல்காப்பியனை விந்திய மலைக்கும் ஒப்பிடுவர்.

7.கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்லும் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து அமையாதது ஏனோ என்று வியக்கத் தோன்றுகிறது. உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ பற்றித் தொல்காப்பியத்தில் இருந்தாலும் திருக்குறளிலோ சங்க இலக்கியத்திலோ இந்த எழுத்தில் துவங்கும் சொற்களே இல்லை!!! இது மிகப் பெரிய தமிழ் அதிசயம்!!! ‘’ஔ’’ என்பது வடமொழி இறக்குமதியாக இருக்கலாம்!

8.தர்ம, அர்த்த, காம (மோட்சம்) என்ற வடமொழி நூல் வழக்கத்தை இவரும் திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்று அப்படியே பின்பற்றுகின்றனர் (காண்க சூத்திரங்கள்:-1038, 1363)

9.பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளை அழகாகப் பட்டியலிட்டுள்ளார்:–

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (1097)

10.பறவைகள், மிருகங்கள் போல எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் ஓடி விடக் கூடாது. திருமணத்திற்கு தசப் பொருத்தம் – பத்து வித பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்பார் தொல்காப்பியர்:
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவுநிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (1219)

varadaraja iyer

11.எல்லோரும் கல்யாணம் என்ற பெயரில் பல மோசடிகள் செய்து பொய், பித்தலாட்டம் செய்யத் துவங்கிய பின்னர் ஐய்யர்கள் கல்யாணம் என்ற சடங்கை உண்டாக்கினர் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே (1090)
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091)

சூத்திரம் 1090 மஹாபாரதத்தில் உள்ளது. ஒரு முனிவரின் மனைவியை மற்றொருவர் அழைத்துச் சென்றதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்கள் இப்படிச் சடங்குகள் செய்த கதை மஹாபாரதத்தில் வருகிறது.
சூத்திரம் 1091: ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (பிராக்ருதம்)= அய்ய (தமிழ்)=ஐயர்.; ஜ– என்பது தமிழில் ய – ஆக மாறும். எ.கா. அஜன்= அயன்; கஜமுகன்= கயமுகன்; பிற மொழிகளிலும் இப்படி உண்டு. ஜீஸஸ்=யேசு, ஜூதர்=யூதர்)

12.தொல்காப்பியர் காலம் பற்றி தமிழர் இடையே கருத்து ஒற்றுமை காண்பது அறிது. 20,000 ஆண்டு முதல் கி.மு.முதல் நூற்றாண்டு வரை அவரது காலத்தை வைப்பர். மொழியியல் அறிவு இல்லாதோரும் உலக மொழிகளின் வளர்ச்சி பற்றி அறியாதோரும் அடிக்கும் கூத்து இவைகள்!

12.உலகில் எல்லோரும் இலக்கண நூல்களில் சொல், எழுத்து, சொற்றொடர் போன்றவற்றோடு நிறுத்திக் கொண்டனர். தொல்காப்பியர் மட்டும் பொருள் அதிகாரம் என்று ஒன்றைச் சேர்த்து இலக்கண நூலில் புதுமை செய்தார்! ஆனால் இந்தப் பொருளதிகாரம் அவர் எழுதியது அல்ல – இது ஒரு பிற்கால இணைப்பு என்று வெளிநாட்டுத் தமிழறிஞர் செப்புவர். நான் செய்த ஆய்வு முடிவுகளைத் தொகாப்பியம் பற்றிய எனது கட்டுரைத் தொடர்களில் கொடுத்து இருக்கிறேன்.

arumuganavalar

13. தொல்காப்பிய மயக்கம்
“சிலபல நூற்பாக்கள் சொற்கள் எளிமையாக இருந்தும், அவற்றின் உண்மைப் பொருளை நாம் அறிய இயலவில்லை
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப -1050
முன்னைய நான்கும் முன்னதற்கென்ப – 998
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – 1145

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் –1021

என்றின்னவாறு பல இடங்களில் வரும் தொகைச் சொற்களும், உயர்ந்தோர், இழிந்தோர், கீழோர், மேலோர் என வரும் நிலைச் சொற்களும், கொடிநிலை, கந்தழி, வள்ளி எனவும், பால்கெழு கிளவி உயர்மொழிக் கிளவி, ஒருபாற்கிளவி எனவும் சுட்டு நகை சிறப்பு எனவும் வரும் பல்வகைச் சொற்களும் பொருள் மயக்கமாகவே உள. பொருள் மயக்கம் தொல்காப்பியச் சொற்களில் இல்லை. அக்காலத்து அவற்றின் பொருள்கள் தெளிவுடையனவே. உடன்பிறப்பு நூல்கள் இன்மையானும், தொன்மை யானும், உயர்ந்தோர், கீழோர், மேலோர் என்ற எளிய சொற்களுங் கூட நமக்குப் பொருள் காட்டவில்லை”— ( இதை மட்டும் நான் ‘’தொல்காப்பியக் கடல்’’, மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987 நூலில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன்)

14.தொல்காப்பியர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஏராளமான விஷயங்களை பாணீணீயம் (எழுத்து ஒலி பிறகும் இடங்கள்) மனுதர்ம சாத்திரம் (எண்வகைத் திருமணங்கள் மற்றும் உடன்கட்டை ஏறுதல்– சூத்திரம் 1025), மஹாபாரதம் முதலியவற்றில் இருந்து எடுத்தாண்டுள்ளார். சம்ஸ்கிருதச் சொற்களை தயக்கம் இன்றிக் கையாளுகிறார். எ.கா. கடைசி சூத்திரம் 1610-ல் ஞாபகம், மனம், உத்தி, முதலிய பல சொற்களைக் காணலாம்.

தொல்காப்பியம் முழுதும் படிக்கப் படிக்கச் சுவை தரும். பல வழக்கங்கள் இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி இருந்தது பாரத ஒற்றுமைக்குச் சான்று தருவனவாக உள்ளன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி 1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி (அக்டோபர் 25, 2014)
தமிழனின் ஆறு பருவங்கள்:ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (ஜூலை 22, 2014)
ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை (ஜூன் 24, 2014)
தொல்காப்பியத்தில் துர்க்கை, அக்னி (மார்ச் 31, 2014)

No Brahmins ! No Tamil ! (posted on 12 /1 / 2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varuna In the Oldest Tamil Book
Did Tolkappiar copy from Sanskrit Books? (Sept.10, 2012)
Who was Tolkappiar? (Sept.9, 2012)

தொல்காப்பியமே என்ன என்று தெரியாதோர் முதலில் படிக்கவேண்டிய நூல்:– தொல்காப்பியக் கடல், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987. ஒவ்வொரு கட்டுரையிலும் தொல்காப்பியருக்கு ஆசிரியர் வெவ்வேறு காலம் கற்பித்து எழுதி இருந்தாலும் தொல்காப்பியத்தின் அருமைதனை, பெருமைதனை எடுத்துரைக்கும் எளிய நடை நூல் இது. தமிழர் வீடுகளில் இருக்க வேண்டிய நூல் இது.
Contact swami_48@yahoo.com