பிரம்ம முகூர்த்தம்- வைகறை துயில் எழு- அவ்வையார்- Part 1 (Post No.5172)

Written by London swaminathan

 

Date: 2 JULY 2018

 

Time uploaded in London –   10-49 am (British Summer Time)

 

Post No. 5172

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

சூரிய உதயத்திற்கு முன்னருள்ள சுமார் இரண்டு மணி நேரம் பிரம்ம முஹூர்த்தம் என்னும் காலமாகும். ஆன்றோர்களும், சான்றோர்களும், சாதுக்களும், மஹான்களும், சந்யாசிகளும் சங்கராச்சார்யார்களும் எழுந்து இறைவனை வழிபடும் புனித நேரம் இது. விஞ்ஞானத்தாலும் போற்றப்படும் காலம் இது. தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் இது வெகுவாகப் போற்றப்படுகிறது.

 

மஹா ப்ரெடெரிக் மன்னர், அக்பர் போன்றோர் பின்பற்றிய நெறிமுறை இது. “வைகறைத் துயில் எழு”– அவ்வையார் நமக்கு ஆத்திச்சூடி மூலம் கொடுத்த கட்டளை இது.

 

புத்தியதற்குப் பொருந்து தெளிவாக்கும்;

சுத்தநரம்பினாற் தூய்மையுறும்- பித்தொழியும்

தாலவழி வாத பித்தம் தத்தநிலை மன்னும்; அதி

காலைவிழிப்பின் குணத்தைக் காண்

என்று ஒரு புலவர் பாடிச் சிறப்பித்த காலம் இது.

 

ஆசாரக் கோவை என்னும் நூலும் இதைப் போற்றும்:-

வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்

நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்

தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே

முந்தையார் கண்ட முறை

(ஆசாரக்கோவை– 41)

 

புலவர்கள் கூறும் கருத்து யாது?

 

புத்தி, சிந்தனை தெளிவாக இருக்கும்

நமது உடல் தூய்மையாக இருக்கும்

வாத பித்த, கபம் ஆகிய மூன்றும் சம நிலையில் இருக்கும்

இவை அதிகாலையில் விழித்தெழுவதன் பயன்களாம்.

 

ஆசாரக் கோவை சொல்கிறது

அதிகாலைப் பொழுதில் எழுந்து பெற்றோர்களை வணங்கி அன்றைய தினம் செய்யவேண்டிய செயல்களைப் பட்டியலிட்டு, அதற்கான வழிமுறைகளை தயாரிப்பது முன்னோர்கள் பினபற்றிய முறை.

ஒரு கட்டுரையாளர் ஒரு கணக்குப்போட்டு வைத்துள்ளார்:–

ஒருவன் நாள்தோறும் 5 மணிக்கும் மற்றொருவன் 7 மணிக்கும் எழுந்திருப்பதாக வைத்துக்கொள்வோம்; இவ்வாறு அவன் 40 ஆண்டுகள் செய்து வந்தால் 5 மணிக்காரனுக்கு 29,000 மணி நேரம் கூடுதலாக கிடைக்கும்!! எட்டு மணிக் காரனுடன் ஒபீட்டால் 43,500 மணி நேரம் கூடுதலாகக் கிடைக்கும். சிலர் இதை எதிர்த்தும் வாதிட முடியும். அதாவது இரவு படுக்கச் செல்லும் நேரத்தைத் தாமதித்தால் இந்த நேரத்தை ஈடுகட்டலாம் அல்லது கூடுதலாக வேண்டுமானாலும் பெறலாமே என்று.

 

ஆனால் நம் முன்னோர்கள் அதை ஏற்க வில்லை; காரணம் வெளிப்படை; ஒருவன் உறங்கி எழுந்தவுடன் இருக்கும் புத்துணர்ச்சி இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் இராது; கொட்டாவிகளும், நாள் முழுதும் நடந்த கெட்ட விஷயங்களின் சிந்தனையுமே அதிகரிக்கும்.

பறவைகளின் இனிய சங்கீதமும் குளிர்ந்த காற்றும் நம்மை நற் சிந்தனையில் ஆழ்த்தும் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆகும்.

 

‘ஐயினி அக்பரி’ எழுதிய அபுல் பாசல், மாமன்னர் அக்பர் அதிகாலையில் துயில் எழுவதைக் குறிப்பிட்டுள்ளார். பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலை நாலு மணிக்கு எழுந்து சிரசாஸனம் செய்து வந்ததால் இறுதிவரை இளமைப் பொழிவுடன் வாழ்ந்தார். தற்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் அதிகாலை எழுந்து பணிகளைக் கவனிப்பதை அனைவரும் அறிவர்.

மஹா ப்ரெடெரிக் (Frederic the Great)

பிரஷ்யா (ஜெர்மனி அதைச் சுற்றியுள்ள பகுதிகள்) தேசத்தை ஆண்ட மஹா ப்ரெடெரிக் நமக்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இதோ:

 

 

“நான் மிகவும் தாமதமாக எழுந்திருப்பது நல்லதல்ல;

அதிகாலை நாலரை மணிக்கு என்னை எழுப்பி விடு என்று வேலைக்காரனுக்குக் கட்டளையிட்டார். மறுநாள் மன்னரின் கட்டளையை சிரமேற்கோண்டு அவனும் முயற்சி செய்தா ன் அவர் எழுந்திருக்கவில்லை. அது மட்டுமல்ல; இன்னும் பத்து நிமிஷம் மட்டும் தூங்குகிறேன் என்று சொல்லி தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தார். வேலைக்கரன் துணிவுடன் அவரைத் தட்டி எழுப்பினான். அப்போதும் அவர் கும்பகர்ணனாகவே இருந்தார். இறுதியில் அவர் முன்னரே சொன்ன படி ஒரு ஈரத்துணியை மன்னர் முகத்தில் போட்டான். மன்னர் கோபத்துடன் எழுந்து ஒரு முறை முறைத்தார்.

“மன்னாதி மன்னா; தங்கள் கட்டளையையே நான் நிறை வேற்றினேன் இவ்வாறு செய்யாவிடில் என்னைத் தண்டித்திருப்பீர்களே” என்றான்.

மன்னரும் நிதானித் து சிந்தித்து

“அன்பனே நீ செய்தது சரியே” என்று அவனைப் பாராட்டினார்.

 

இதே போல நாமும் பரீட்சை நேரங்களில் நம்முடைய பெற்றோர்களிடம் அதிகாலையில் எழுப்பச் சொல்வோம்; அவர்கள் எழுப்ப முனைஅயும் போது எரிந்து விழுவோம். பரீக்ஷையில் நல்ல மதிப்பெண்களோடு ‘பாஸ்’ ஆகும்போது அவர்களுக்கு மனதார நன்றி சொல்லுவோம். இல்லையா?

 

கட்டுரையின் அடுத்த பகுதியில் விஞ்ஞான விளக்கங்களைக் காண்போம்.

 

-தொடரும்……………

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்’- ஒரு குட்டிக்கதை (Post No.5165)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 30 JUNE 2018

 

Time uploaded in London –  11-59 AM (British Summer Time)

 

Post No. 5165

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

வெற்றி வேற்கை/நறுந்தொகை, அதிவீரராமன் யாத்த நூல்

 

 

மஹாபாரத நூலில் இல்லாதது உலகில் இல்லை என்று ஒரு பாரத ஸ்லோகம் சொல்லும். அது உண்மையே.

 

வேதியர்கள் என்போர் தினமும் ஐம்பெரும் வேள்வி நடத்திவிட்டே உண்ண வேண்டும் என்று மநு ஸ்ம்ருதி தெளிவாகக் கூறுகிறது. அது மட்டுமல்ல விருந்தோம்பல் என்பது சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்றும் சொல்லும். அதற்கும் மேலாக விருந்தினர் சாப்பிட்ட பின்னரே ஒரு இல்லறத்தான் சாப்பிடலாம் என்றும் செப்புகிறார்.

 

ஐம்பெரும் வேள்வியை எல்லா வருண த்தார்க்கும் பொதுவாகப் பாடி வைத்திருக்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவரும் (குறள் 43; தென்புலத்தார்….)

 

மஹாபாரதத்தில் ஒரு குட்டிக்கதை

சக்துப் பிரஸ்தர் என்று ஒரு அந்தணர் இருந்தார். அவர் மநு நீதி சொன்னபடி விருந்தோம்பும் பண்புடையவர். மேலும்  யாசகம் செய்யாவிடில் தானியங்களைப் பொறுக்கி எடுத்தும் வாழலாம் என்று மநு சொல்லியபடி வாழ்க்கை நடத்தியவர். எங்கும் யாசகம் செய்யாமல் வயல்களிலும் வனங்களிலும் விழும் தானியத்தைச் சேகரித்து வாழ்க்கை நடத்தினார். தினமும் விருந்தினர்களையும் உபசரித்தார். ஒரு நாள் சாப்பிடப் போகும் முன் ஒரு விருந்தினர் வந்தார்.

 

அவருக்கு வழக்கமான உணவைப் போட்டும் பசியாறவில்லை. உடனே தனது உணவையும், பின்னர் மகனின் உணவையும் அளித்தார். அப்பொழுதும் விருந்தாளி மேலும் உணவை எதிர்பார்த்து உட்கார்ந்து  இருந்தார். உடனே மனைவி, மருமகள் உணவையும் அளித்தார். அப்பொழுதுதான் அந்த புண்யாத்மா வயிற்றைத் தடவிக்கொண்டு ஒரு ஏப்பம் விட்டு எழுந்தார். ‘அன்னதாதா சுகீ பவ’ என்று வாழ்த்தினார்.

 

இதை எல்லாம் பார்த்த இந்திரன் அவருக்கு எல்லா செல்வத்தையும் அளித்து அனுக்கிரஹித்தார்.

 

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்– குறள் 85

பொருள்:

வந்த விருந்தினரை முதலில் சாப்பிட வைத்துப் பின்னர் மீதி உவை சாப்பிடுவோனுடைய விளை நிலத்தில் விதையே விதைக்க வேண்டாம்; தானாக பயிர்கள் வளரும்

 

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத்தவர்க்கு -குறள் 86

பொருள்:-

வந்த விருந்தாளிக்குச் சாப்பாடு போட்டுவிட்டு, அடுத்த விருந்தாளி எப்போது வருவான் என்று காத்திருப்பவனுக்கு தேவ லோகத்தில் உள்ளவர்கள் அருமையான விருந்து அளிப்பர்.

 

மநு சொன்னது எல்லாவற்றையும் வள்ளுவன் சொல்லுவது சிறப்புடைத்து!

அது மட்டுமல்ல; விருந்தோம்பும் பண்பு உலகின் எந்த நூலிலும் ஒரு புண்ணிய காரியமாகவோ, கட்டாயம் செய்யவேண்டிய கடமையாகவோ சொல்லப்படவில்லை. இது இமயம் முதல் குமரி வரை மட்டுமே காணக்கூடியது. ஆரிய- திராவிட வாதம் பேசுவோருக்கு வள்ளுவரும் மநுவும் கொடுக்கும் செமை அடி இது!

–சுபம்–

 

ஒரு குட்டிக் கதை– ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ (Post No.5161)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 30 JUNE 2018

 

Time uploaded in London –  7-35 AM (British Summer Time)

 

Post No. 5161

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’-

நறுந்தொகை/ வெற்றி வேற்கை

 

பாகவத புராணத்தில் உள்ள கதை.

கார்த்த வீர்யார்ஜுனன் என்ற மன்னன் மஹா வீரம் பொருந்தியவன்; புஜ பல பராக்ரமம் உடையவன். மாவீரன் ராவணனையே புரட்டி எடுத்தவன். ராவணனையும் பயமுறுத்திய ஒரே ஆள். நர்மதை நதிக்கரையில் உள்ள மஹிஸ்மதி நகரை தலைநகராகக் கொண்டு ஹைஹய நாட்டை ஆண்டு வந்தவன். அவன் நர்மதை நதியில் மனைவிமார்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது ராவணன் வந்து வாலாட்டினான். அவனைப் பிடித்து நகரின் ஒரு மூலையில் மிருகங்களைக் கட்டிவைப்பது போல கட்டி காட்சிப் பொருளாக வைத்தான். பின்னர் அவனது தாத்தா புலஸ்த்யர் வந்து வேண்டவே ராவணனை விடுதலை செய்தான்.

 

கார்த்த வீர்ய அர்ஜுனனுக்கு ‘ஆயிரம் கையுடையோன்’ என்று ஒரு பெயர் உண்டு. இந்த ‘ஸஹஸ்ர பாஹு’ என்ற பெயர் வந்த காரணம் பாகவத புராணத்தில் உளது. ராமாயணத்திலும் இவன் பெருமை பேசப்படுகிறது.

 

கார்த்த வீர்யனின் குரு தத்தாத்ரேயர். அவரிடம் அவன் பணிவுடன் வேத சாஸ்திரங்களைக் கற்று வந்தான். அவருக்குப் பணிவிடை செய்யும் முகத்தான், அவர் உறங்கும்போது கால்களை அமுக்கி விடுவான். ஒரு முறை இப்படிச் செய்கையில் குரு தத்தாரேயரின் காலில் இருந்த தீ , கார்த்த வீர்யனின் கைகளை எரிக்கத் துவங்கியது. ஆயினும் குருவின் நித்திரைக்குப் பங்கம் விளையக்கூடாதே என்ற எண்ணத்துடன் பொறுத்துக் கொண்டான். அவர் தூங்கி எழுவதற்குள் அந்தத் தீ முழங்கை வரை வந்து விட்டது.

 

குரு தத்தாத்ரேயர் அதைப் பார்த்து என்ன ஆயிற்று? என்று வினவினார். கார்த்த வீர்யன், அவரது நித்திரை கலையாமல் இருக்க மிகவும் பிரயத்தனப் பட்டதைப் பகர்ந்தான்; குருவுக்கு மெத்த மகிழ்ச்சி. அவனது கைகளைத் தடவிக் கொடுத்தார். உனக்கு இன்று முதல் ஆயிரம் கைகள் இருந்தால் என்ன பலம் கிட்டுமோ அவ்வளவு பலம் கிடைக்கும்; உன்னை வெல்லுவது எவனுக்கும் இயலாது என்று வரம் அளித்தார்.

 

கார்த்த வீர்ய அர்ஜுனன் ‘ஆயிரம் கையுடையோன்’ ‘ஸஹஸ்ரபாஹு’ என்ற பெயருடன் கொடிகட்டிப் பறந்தான். அவன் இருக்கும் மேற்கு , மத்திய இந்தியாவுக்கு ராவணன் வரவே பயந்து நடுங்கினான். நமது புராண இதிஹாசங்களின் படி ராவணன் அஞ்சிய ஒரே மன்னன் கார்த்த வீர்ய அர்ஜுனன்.

 

வாழ்க தத்தாத்ரேயர்!

 

அதிவீரராமன் என்ற பாண்டிய மன்னன் இயற்றியது நறுந்தொகை. அதில் கூறப்படும் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’

கருத்து இந்து தர்மத்தின் உயரிய கருத்து “குருவே பிரம்மா, குருவே விஷ்ணு,  குருவே மஹேஸ்வரன்; அவரே பரப் ப்ரஹ்மம்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி எல்லோரும் வணங்குவர். இது வேத கால வழக்கம். உலகில் எங்கும் காண முடியாதது. குமரி முதல் இமயம் வரை மட்டுமே உள்ள கருத்து. வேத கால இந்துக்கள் வெளி நாட்டில் இருந்து வந்ததாகக் கூறும் அரை வேக்காடுகளுக்கு வேட்டு வைக்கும் கருத்து இது. பாரத மண்ணில் பிறந்து வளர்ந்த கருத்து!

உலகில் வேறு எங்கும் குரு குலமோ, ஆசார்ய வழிபாடோ இல்லாததால், ஆரிய-திராவிடம் பேசும் கூத்தாடிகளைப் புரட்டிப் புரட்டி அடிக்கும் வாக்கியம் இது.

 

–SUBHAM–

கடல் போர், கடல்பயணம் 6 பற்றிய கல்வெட்டுகள் (Post No.5162)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –  16-52 (British Summer Time)

 

Post No. 5162

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கடல் போர், கடல்பயணம் 6 பற்றிய கல்வெட்டுகள் (Post No.5152)

 

மும்பய் நகருக்கு அருகில் ஏக்சார் (EKSAR) என்னுமிடத்தில் ஆறு நடுகற்கள் (வீர  கல்) இருக்கின்றன. இவை கடல் பயணத்திலேயோ கடல் போரிலேயோ இறந்தவர்களின் நினைவாக எழுப்பப்ப ட்ட கற்கள். வீர மரணம் எய்தியோருக்கு நடுகல் நடும் பழக்கமும் அவைகளை பூஜிக்கும் பழக்கமும் 2000 ஆண்டுப் பழமையான சங்க நூல்களில் காணக்கிடக்கின்றன. ஆயினும்  அதற்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்தே கல்வெட்டுகள் கிடைக்கின்றன.  பம்பாய் அருகில் 11 ஆம் நூறாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இன்று வரை அவை ‘கல்’ என்னும் தமிழ்ச் சொல்லுடனும் ‘வீர’ என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லுடனும் — வீர கல் – என்றே அழைக்கப்படுகின்றன. இவை பொரிவலி (BORIVILI) ஸ்டேஷனுக்கு ஒரு மைல் தொலைவில் உள.

 

இவற்றில் நிலத்தில் நடந்த சண்டைகளும் காட்டப்பட்டுள்ளன.

ஹேமாத்ரி பண்டிதர் இயற்றிய சதுர்வர்க சிந்தாமணி என்னும் நூலில் யாதவ மன்னன் மஹாதேவனுக்கும் ஷிலாஹார மன்னன் சோமேஸ்வரனுக்கும் நடந்த போர் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. அதுதான் இந்தக் கல்லின் பின்னணி என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 1265 ஆம் ஆண்டில் சோமேஸ்வரா கொல்லப்பட்டார்.

 

இவை தவிர கோவா மியூஸியத்தில் கடம்பர் கால கல்வெட்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் 950 முதல் 400 ஆண்டுகள் ஆண்டனர். ஏக்சார் கல்வெட்டுகள் போஜ மன்னன் (1020) காலத்தியவை. இதற்கு நெடுங்காலத்துக்குப் பின்னர் குஜராத்தில் எழுப்பிய கல்வெட்டுகளும் குறிப்பிடத்தக்கவை.

தமிழர்கள் பரப்பினார்களா?

இலக்கியங்களைப் பொறுத்வரையில் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள குறிப்புதான் மிகப் பழமையானவை. ஆனால் வேத காலம் முதல் நினைவுக்கல் எழுப்பும் பழக்கம் பிராமணர் குடும்பத்தில் இருந்துள்ளது. இப்பொழுதும் பத்து நாள் கிரியைகளுக்குப் பின்னர் பிராமணர்கள் வீட்டிலோ, சுடுகாட்டிலோ கல் புதைப்பர்.

 

நடு கற்கள் நாடு முழுதும் கிடைக்கின்றன. ரா ஜஸ்தான், கர்நாடகத்தில் உயிர்நீத்த பத்தினிகளுக்கும் ‘சதி’யில் புகுந்த வீர மங்கையருக்கும், தென் மாநிலங்கள், மஹாராஷ்டிராத்தில் வீர தீரச் செயல் புரிந்தோருக்கும் நடுகற்கள் எழுப்பப்பட்டுள்ளன. பல நடு கற்கள் பாதுகாக்கப்படாமல் அழிந்தும் மறைந்தும் வருகின்றன.

 

மஹாராஷ்டிரத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான இடங்களில் நடு கற்கள் இருப்பதாக தற்கால நூல்கள் காட்டுகின்றன. எல்லா இடங்களிலும் இவை வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏக்சார் கல்வெட்டுகளை மக்கள் போராதேவி என்று வழிபடுகின்றனர். தொல்பொருட் துறை இவைகளைப் பாதுகாக்கததால் சில கற்களை வரலாற்றுத் திருடர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.

 

 

முதல் கல்

முதல் கல் (HERO STONES, VEERA GAL) 10’X 3’X 6” அளவில் உள்ளது. இதில் நான்கு பிரிவுகள் அல்லது வரிசைக் காட்சிகள் உள்ளன. அடியில் இரண்டு குதிரை வீரர்கள் ஒரு வில்லாளியைக் கொல்கின்றனர். கொல்லப்பட் டவர்கள் மேகத்தினூடே இந்திர லோகத்துக்குச் செல்லும் காட்சி உளது (போரில் இறந்தால் சுவர்கம் புகலாம் என்ற கருத்து பகவத்கீதை, புற நானூறு ளில் முதலிய நூல்களில்  விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசையில் குதிரை வீரர்கள் புறப்படுவதும், வில்லாளி மேலும், ஆறு குதிரை வீரருடன் பொருதுவதும் இருக்கின்றது.

யானை வீரர்களும் காணப்படுகின்றனர். வீர சுவர்க்கம் புகுவோரை அப்சரஸ்கள் (தேவலோக அழகிகள்) வரவேற்பதும் அவர்கள் சிவலோகத்தில் சிவலிங்கத்தை வழிபடுவதும் சித்தரிக்கப்படுகிறது.

 

இரண்டாவது கல்

 

இரண்டாவது கல்லிலும் போரில் இறந்தோரின் சடலங்களும் மன்னர், மந்திரி ஆகியோரும் இருக்கின்றனர். தேவ லோக மங்கையரான அப்ஸரஸ்கள் அவர்கள் மீது பூமாரி பொழிகின்றனர்.

 

மன்னருக்கு ஒருவர் குடை பிடிக்க, மற்றொருவர் பன்னீர் தெளிக்க நிற்கிறார்; யானை ருவரை துதிக்கை யால் பிடித்து காலால் இடறும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. யானை முகபடாமுடன் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

 

மூன்றாவது கல்

இதுதான் முக்கியமான கடற்போர் கல். கப்பல் சண்டைக் காட்சி உளது. முந்தைய இரண்டைப் போலவே இதுவும் நான்கு வரிசைகளாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது; ஐந்து கப்பல்கள் உள்ள வரிசையில் ஒன்பது துடுப்புகள் தெரிகின்றன. சண்டைக்குத் தயாராக வீரர்கள் காட்சி தருகின்றனர் ; ஐந்தாவது கப்பலில் பெண்களும் இருப்பதால் மன்னர் கப்பலாக இருக்கலாம். இரண்டாவது வரிசையில் 4 கப்பலகளின் அணிவகுப்பு. அவர்கள் பெரிய ஒரு கப்பலைத் தாக்குவதும் அந்தக் கப்பலின் வீரர்கள் கடலில் குதிப்பதும் செதுக்கப்பட்டு இருக்கிறது

பதினோறாம் நூற்றாண்டு எழுத்துக்கள் படிக்க இயலாதபடி சிதைந்துவிட்டன. இதே கல்லில் இமயம் உறை பார்வதி பரமேஸ்வரனும், சிவலிங்க வழிபாடும் , எலும்புகள் வைக்கும் பெட்டியும் இருக்கின்றன.

நாலாவது வீர கல்

இதில் எட்டு வரிசைகள் உள்ளன. ஆனால் அளவு ஏனைய மூன்றைப்போல 10X 3X 6” என்றே இருக்கிறது. அடி வரிசையில் 11 கப்பல்கள் ஒரு கப்பலைத் தாக்குகின்றன. மற்றொரு வரிசையில் ஐந்து கப்பல்கள் ஒரு படகைத் தாக்குகின்றன. .

மற்றொரு வரிசையில் ஒன்பது கப்பல்கள் வெற்றியுடன் திரும்பி வருகின்றன. பலர் வரவேற்கிறார்கள்

ஏனையவற்றில் சிவலிங்க வழிபாடு, அப்சரஸ்கள் வரவேற்கும் காட்சி சங்கு முழக்கம், சிவன் உறையும் கைலாசம் ஆகியவற்றைக் காண்கிறோம்.

 

ஐந்தாவது வீர கல்

அளவு 6’ X3’ X6’’ ; வரிசைகள் நான்கு; ஒரு கப்பலில் மன்னர் வெண்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்துள்ளார்.

மற்றொரு வரிசையில் கடற்போர்; வீரர்கள் தண்ணீரில் வீழும் காட்சி.

இறந்தவீரகள் மீது அப்சரஸ்கள் (தேவலோக அழகிகள் ) மலர் மாலை வீசுகின்றனர். மற்றொரு வரிசையில் சிவலிங்க வழிபாடு; பெண்கள் வழிபாட்டுப் பொருட்களுடன் காட்சி. தேவலோக கந்தர்வர் ஆனந்தக் கூத்து; மன்னர் தர்பாரில்: அபசரஸ்கள் அவரை வாழ்த்தும் காட்சி

Kannada hero stone from wikipedia

ஆறாவது கல்

அளவு 4X 15X 6”

இரண்டு வரிசையில் படங்கள்.

ஒரு வரிசையில் கப்பல் சண்டை.

மற்றொரு வரிசையில் ஒரு வீரர் சுவர்கத்தில் இருக்கும் காட்சி.

 

இவை கடம்பர்களுக்கும் சீலஹாராக்களுக்கும் இடையே நடந்த கடல் போர் என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. இதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் சோழ மன்னர்களின் கடற்படை இலங்கை, பர்மா, இந்தோ நேஷியா வரை சென்று வெற்றிக் கொடி நாட்டின. அதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கடற்படை அனுப்பி அந்நாட்டு மன்னனைக் காப்பாற்றினான் நரசிம்ம பல்லவன். அதற்கு முன்னர் சோழர்களும் அவர்களுக்கு முன்னர் சாதவாஹன அரசர்களும் அதற்கு முன்னால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் வெற்றிக் கொடி நாட்டினர். சேரர்கள், கடலில் வாலாட்டிய யவனர்களைச் சிறைப்பிடித்து, மொட்டையடித்து, கைகளைப் பின்புறம்கட்டி, தலையில் எண்ணை ஊற்றி ஊர்வலம் விட்ட காட்சி  தமிழ் இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது.

 

ஆனால் அதை சித்திரமாக நடு கல்லில் — –வீரக் கல்லில்— காணும் போது பசுமரத்தாணி போல மனதில் பதிகிறது.

 

Kannada hero stone, Not Eksar

 

–சுபம்–

 

 

 

 

 

கடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள் (Post No.5160)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –  7-19 AM (British Summer Time)

 

Post No. 5151

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஜூலை 2018 மாத காலண்டர் (விளம்பி வருஷம் ஆனி- ஆடி மாதம்)

 

ஏகாதஸி விரதம்- ஜூலை 9,23; பௌர்ணமி- ஜூலை 27;

அமாவாஸை- ஜூலை 12;

முஹூர்த்த தினங்கள் – ஜூலை 1, 2, 5, 11

பண்டிகை நாட்கள் – ஜூலை 13 பார்ஸ்வ சூர்ய கிரஹணம்/ இந்தியாவில் தெரியாது, 14 பூரி ஜகந்நாத ரத யாத்திரை, 17 தக்ஷிணாயண புண்ய காலம், 27- வியாஸ/ குரு பூர்ணிமா, பூரண சந்திர கிரஹணம்

கடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள்

 

ஜூலை 1 ஞாயிற்றுக் கிழமை

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

 

ஜூலை 2 திங்கட் கிழமை

 

திக்கற்றவருக்கு தெய்வமே துணை

 

ஜூலை 3 செவ்வாய்க் கிழமை

நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு

 

ஜூலை 4 புதன் கிழமை

 

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (குறள்)

 

ஜூலை 5 வியாழக் கிழமை

ஹரி ஸ்ம்ருதிஹி ஸர்வவிபத் விநாசினி

ஹரியை நினைந்தவருக்கு துன்பங்கள் பறந்தோடும்

ஜூலை 6 வெள்ளிக் கிழமை

கடவுள் நினைத்தால் நடக்கதானவும் நடக்கக்கூடும் (கதா சரித் ஸாகரம்)

சுதுஷ்கரமபி கார்யம் சித்யத் யனிக்ரஹவதீஸ்விஹா தேவதாஸு

 

 

ஜூலை 7 சனிக் கிழமை

ஸ்வேச்சேசாரா ஹி தேவதாஹா

தெய்வங்கள் அதன்போக்கில் செயல்படும்

 

ஜூலை 8 ஞாயிற்றுக் கிழமை

ஸர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி

அனைத்துக் கடவுளருக்கு அளிக்கும் நமஸ்காரங்கள் கேசவனை அடைகின்றன

 

ஜூலை 9 திங்கட் கிழமை

ஸங்க்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து (விஸ்ணு ஸஹஸ்ரநாமம்)- நாராயணன் என்ற ஒலி கேட்ட மாத்திரத்தில் துன்பங்கள் அகலும்

 

ஜூலை 10 செவ்வாய்க் கிழமை

ஒரே கருத்துடையவர்களை ஒன்று சேர்ப்பதில் இறைவன் (பிரம்மா) வல்லவன் (பாத தாடிதக)

ஸர்வதா ஸத்ருசயோகேஷு நிபுணாஹா கலு ப்ரஜாபதிஹி

ஜூலை 11 புதன் கிழமை

இறைவனின் சக்தி எல்லாக் கதவுகளையும் திறந்துவிடும் (ராமாயண மஞ்சரி)- ஸர்வத்ர விவ்ருத த்வாரா தைவசக்திர்  கரீயஸீ

 

ஜூலை 12 வியாழக் கிழமை

சேஷன் என்னும் நாகம் உலகையே தாங்குவது கண்டு கிருஷ்ணன் அதைப் படுக்கையாக வைத்துக் கொண்டான் (குமார ஸம்பவம் 3-13)

வ்யாதிஸ்யதே பூதரதாமவேக்ஷ்ய க்ருஸ்ணேன தேஹோத்த்ரணாய சேஷஹ

 

ஜூலை 13 வெள்ளிக் கிழமை

கடவுள் நினைத்தால் விஷம் அமிர்தமாக மாறும்; அமிர்தம் விஷமாக மாறும்– விஷமயம்ருதம் க்வச்சித் பவேதம்ருதம் வா விஷமிஸ்வரேச்சயாச்சயா- ரகுவம்சம் 8-46

 

 

ஜூலை 14 சனிக் கிழமை

கடவுள் அருள் இருந்தால் எதிரியும் அன்பைப் பொழிவான்

ஸானுகூலே ஜகந்நாதே விப்ரியஹ சுப்ரியோ பவேத் (சுபாஷிதரத்ன கண்டமஞ்சுசா)

 

ஜூலை 15 ஞாயிற்றுக் கிழமை

இறைவனின் எண்ணத்தை எவரும் தடுக்கவியலாது- மஹா பாரதம்

பலீயஸீ கேவலம் ஈஸ்வரேச்சா

 

ஜூலை 16 திங்கட் கிழமை

ஆண்டவனின் அருள் இருக்கும்போது அடையமுடியாததும்  உண்டோ?- கதா சரித் ஸாகரம்

ப்ரஸன்னே ஹி கிமப்ராப்யமஸ்தீஹ பரமேஸ்வரே

ஜூலை 17 செவ்வாய்க் கிழமை

பிரம்மாவின் படைப்புகள் நம்ப முடியாத அளவுக்கு அற்புதமானவை- கதா சரித் ஸாகரம்

ப்ரஜாபதேர் விசித்ரோ ஹி ப்ராணிஸர்கோஸதிகாதிகஹ

 

ஜூலை 18 புதன் கிழமை

எவரும் சிவபிரானின் உண்மைப் பெருமையை உணரவில்லை– குமார சம்பவம் 5-77

ந ஸந்தி யாதாத்யர்விதஹ பினாகினஹ

ஜூலை 19 வியாழக் கிழமை

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்

 

ஜூலை 20 வெள்ளிக் கிழமை

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

 

ஜூலை 21 சனிக் கிழமை

உலகங்கள் அனைத்துமே பிரம்மாவினால் உருவாக்கப்பட்டன- வால்மீகி ராமாயணம் 4-24-41

லோகோ ஹி ஸர்வோ விஹிதோ விதாத்ரா

ஜூலை 22 ஞாயிற்றுக் கிழமை

கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்

ஜூலை 23 திங்கட் கிழமை

கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்தாற்போல

ஜூலை 24 செவ்வாய்க் கிழமை

சிவாய நம ஓம் என்போர்க்கு அபாயம் ஒருபோதும் இல்லை

ஜூலை 25 புதன் கிழமை

கடவுளின் லீலைகளை யாரே அறிவார்?- விக்ரமோர்வஸீயம்

கோ தேவதா ரஹஸ்யானி தர்க்கயிஷ்யதி

 

ஜூலை 26 வியாழக் கிழமை

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மேல் தெய்வமும் இல்லை

 

ஜூலை 27 வெள்ளிக் கிழமை

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

ஜூலை 28 சனிக் கிழமை

மதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு விண்ணெலாம்

மதுரமிக்க ஹரிநமக்கு மதுவெனக் கதித்தலால்- பாரதி

 

ஜூலை 29 ஞாயிற்றுக் கிழமை

துன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்
சோர்ந்துவிடல் ஆகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு—துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!- பாரதி

 

ஜூலை 30 திங்கட் கிழமை

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.- பாரதி

ஜூலை 31 செவ்வாய்க் கிழமை

ஏகம் ஸத் விப்ராஹா பஹுதா வதந்தி- ரிக் வேதம்

உண்மை/ கடவுள் ஒன்றே; அறிஞர்கள் பலவாறு பகர்வர்.

 

–Subham–

 

 

 

 

 

 

காந்திஜியும் மத மாற்றமும் (Post No.5155)

Written by S NAGARAJAN

 

Date: 28 JUNE 2018

 

Time uploaded in London –   7-27 AM (British Summer Time)

 

Post No. 5155

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காந்திஜியும் மத மாற்றமும்

 

ச.நாகராஜன்

 

மஹாத்மா காந்தி அடிக்கடி தான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதாகக் கூறி வந்தார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களை மதம் மாறச் செய்வதில் அவர் வருத்தமும் கோபமும் கொண்டார்.

பல்வேறு சமயங்களில் அவர் அவர்களை இதற்காகக் கண்டித்துள்ளார்.

ஒரே ஒரு உரையை மட்டும் இங்கு காணலாம்:

23-4-1931 தேதியிட்ட அவரது உரையில் பல கருத்துக்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன.

அவற்றின் சாரத்தைத் தமிழிலும் மூலத்தை – ஒரிஜினலை – ஆங்கிலத்திலும் கீழே காணலாம்.

மனிதாபிமானத்திற்காக அல்லாமல் மதமாற்றத்திற்காக கல்வி,மருத்துவ உதவி போன்றவற்றை ஏழை மக்களுக்கு அவர்கள் செய்வதாக இருந்தால் அதை நான் ஆதரிக்க மாட்டேன்.

ஒவ்வொரு தேசமும் அதன் மத நம்பிக்கை இதர தேச மத நம்பிக்கை போலவே நல்லது என்று கருதுகிறது.

இந்தியாவில் உள்ள மத நம்பிக்கைகள் அங்குள்ள மக்களுக்கு நிச்சயமாகப் போதுமானது. ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது இந்தியாவிற்குத் தேவையே இல்லை.

 

மனிதாபிமானம் என்றபெயரில் மதம் மாற்றுவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. இங்குள்ளோர் அதனால் மிகவும் வருத்தமடைகின்றனர். மதம் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். அது இதயத்தைத் தொடும் ஒன்று. கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஒரு டாக்டர் ஏதோ ஒரு வியாதியை எனக்குக் குணப்படுத்தி விட்டார் என்பதற்காக நான் ஏன் மதம் மாற வேண்டும்? அவரது செல்வாக்கில் நான் இருக்கும் போது அப்படி ஒரு டாக்டர் அதை ஏன் எதிர்பார்க்க வேண்டும் அல்லது அப்படி மாற ஏன் யோசனை கூற வேண்டும்? அவரது மருத்துவத்தினால் குணமாவதே அவருக்கான சிறந்த பரிசும் திருப்தியும் இல்லையா? ஒரு மிஷனரி கல்வி நிலையத்தில் நான் படிக்கையில் கிறிஸ்தவபோதனைகள் என் மேல் ஏன் திணிக்கப்பட வேண்டும்? எனது அபிப்ராயத்தில் இவை என்னை மேலே தூக்கி விடும் ஒன்றல்ல; இரகசிய எதிர்ப்பிற்காக இல்லையென்றாலும் அது சந்தேகத்திற்கு இடமளிக்கும் ஒன்றாகும். மதமாற்ற வழிமுறைகளானது சீஸரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.மதசார்பற்ற விஷயம் போல மத நம்பிக்கை இருத்தல் வேண்டும். அது இதயம் பேசும் மொழியால் தரப்படும் ஒன்று. ஒரு மனிதன் ஜீவனுள்ள நம்பிக்கையைத் தன்னிடம் கொண்டிருந்தால் அது ரோஜா மலரின் வாசனை போல மணம் பரப்பும். கண்ணுக்குத் தெரியாத அதன் தன்மையினால் கண்ணுக்குத் தெரியும் மலர் இதழ்களின் அழகை விட அதன் செல்வாக்கு வெகு தூரம் வரை பரப்பும்.

 

நான் மதமாற்றத்திற்கு எதிரானவன் இல்லை. ஆனால் அதன் நவீன முறைகளுக்கு எதிரானவன். மதமாற்றம் என்பது இன்று வணிகமாகி விட்டது. ஒரு மிஷனரி அறிக்கையில் ஒரு மனிதனை மதமாற்ற தலைக்கு ஆகும் செலவு எவ்வளவு என்றும் அதன் அடிப்படையில் அடுத்த “அறுவடைக்கு” ஆகும் செலவுக்கு பட்ஜெட் தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருப்பதை நான் படித்தேன்.

 

“ஆமாம். இந்தியாவின் பெரிய மத நம்பிக்கைகள் அதற்குப் போதும். கிறிஸ்தவம், யூதம் தவிர ஹிந்து அதன் கிளைகள்,இஸ்லாம்,ஜொராஷ்ட்ர மதம் ஆகியவை ஜீவனுள்ள மதங்கள். எந்த ஒரு மதமும் பூரணமானதல்ல.

எல்லா மதங்களும் சமமானவை. ஆகவே வேண்டுவது என்னவெனில் உலகின் பெரும் மதங்களைப் பின்பற்றுவோரிடையே நட்புடனான தொடர்பு வேண்டுமேயன்றி மற்றவற்றை விட பெரிது என்று காட்டும் பயனற்ற முயற்சி தேவையில்லை. அப்படிப்பட்ட நட்பு ரீதியிலான தொடர்பால் நமது மதத்தில் உள்ள குறைகளையும் தேவையற்றவற்றையும் களைந்து விட முடியும்.

 

மேலே நான் கூறியவற்றால், இந்தியாவில் மதமாற்றத்திற்கான தேவை இல்லை. சுய தூய்மை, ஆன்மாவை உணர்தல் ஆகிய மாற்றமே இன்றைய அவசரத் தேவை.  இதை மதமாற்றம் என்று சொல்லப்படுவதற்கு என்றுமே அர்த்தமாகக் கொண்டதில்லை.

 

இந்தியாவை மாற்ற வருபவரிடம், “வைத்தியரே, முதலில் உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும்” என்று சொல்ல வேண்டுமல்லவா?

(மகாத்மா காந்தி நூல்கள் தொகுதி 46 பக்கம் 28)

**

ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

 

Gandhiji clarified his views on the role of foreign missionaries in India. (23-4-1931)

 

“(If) instead of confining themselves purely to humanitarian work such as education,

medical services to the poor and the like, they would use these activities of theirs for

the purpose of proselytizing, I would certainly like to withdraw. Every nation considers

its own faith to be as good as that of any other. Certainly, the great faiths held by the

people of India are adequate for her people. India stands in no need of conversion from

one faith to another.

“Let me now amplify the bald statement. I hold that proselytizing under the cloak of

humanitarian work is, to say the least, unhealthy. It is most certainly resented by the

people here. Religion after all is a deeply personal matter, it touches the heart. Why

should I change my religion because a doctor who professes Christianity as his religion

has cured me of some disease or why should a doctor expect or suggest such a change

whilst I am under his influence? Is not his medical relief its own reward and

satisfaction? Or why should I, whilst I am in a missionary educational institution, have

Christian teaching t^mist upon me? In my opinion these practices are not uplifting and

give rise to suspicion if not even secret hostility. The methods of conversion must be

like Caesar^ wife above suspicion. Faith is imparted like secular subjects. It is given

through the language of the heart. If a man has a living faith in him, it spreads its aroma

like the rose its scent. Because of its invisibility, the extent of its influence is far wider

than that of the visible beauty of colour of the petals.

“I am, then, not against conversion. But I am against the modern method of it.

Conversion nowadays has become a matter of business like any other. I remember

having read a missionary report saying how much it cost per head to convert and then

present a budget for ‘the next harvest’.

“Yes, I do maintain that India’s great faiths all suffice for her. Apart from Christianity

and Judaism, Hinduism and offshoots, Islam and Zoroastrianism are living faiths. No one

faith is perfect.

All faiths are equally dear to their respective votaries. What is wanted therefore is living

friendly contact among the followers of the great religions of the world and not a clash

among them in fruitless attempt on the part of each community to show the superiority

of its faith over the rest. Through such friendly contact it will be possible for us all to rid

our respective faiths of shortcomings and excrescences.

“It follows from what I have said above that India is in no need of conversion of the kind

I have in mind. Conversion in the sense of self-purification, self-realization is the crying

need of the times. That, however, is not what is ever meant by proselytizing. To those

who would convert India, might it not be said, ‘Physician heal thyself’ ? (Complete Works of Mahatma Gandhi – Volume 46:Page 28)

**

மதமாற்றம் பற்றிய காந்திஜியின் கருத்துக்களை இதற்கு மேல் விளக்க வேண்டிய தேவை இல்லை.

இன்றைய போலி செகுலரிஸவாதிகள் காந்திஜியை தங்கள் துஷ்பிரசாரத்திற்கு இனியும் இரையாக்கத் தேவையில்லை.

1931ஆம் ஆண்டு அவர் கூறிய இந்தக் கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தும்.

மதமாற்றப் பாதிரிகள் இன்னும் தீவிரமாக மக்களை ஏமாற்றுவதை நாடெங்கும் தினம்தோறும் பார்த்து வருகிறோம்.

கடலோரப் பகுதிகளிலும், மலைவாழ் மக்களின் பட்டி தொட்டிகளிலும், தேசத்தின் எல்லையோரப் பகுதிகளிலும் அவர்களின் முயற்சி அதிக அளவில் அதிகப் பணச்செலவில் இன்றும் தொடர்கிறது.

மதமாற்றத்திற்காக தேசத்தைத் துண்டாடும் கலவரங்களைத் தூண்டிவிடும் அளவிற்கு இன்றைய நிலைமை மோசமாகி விட்டது.

 

கிறிஸ்தவ பாதிரிகளே, முதலில் உமது வியாதியிலிருந்து நீவீ ர்  உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும் என்று காந்திஜியின் வார்த்தைகளை அப்படியே கூறி அவர்களை உடனடியாக பாரதத்தை விட்டு அகற்றுவதே இன்றைய தேவை.

***

வடகலை – தென்கலை வித்தியாஸங்கள் நூறு! (Post No.5154)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 27 JUNE 2018

 

Time uploaded in London –  19-54 (British Summer Time)

 

Post No. 5154

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.\

 

தமிழ்நாட்டிலுள்ள  வைஷ்ணவர்களில் வடகலை, தென்கலை என்று இரண்டு முக்கியப் பிரிவுகள் உள்ளன. அவர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை கும்பகோணம் கோபால தாத்தாசாரியார் 1908-ம் ஆம் ஆண்டில் புஸ்தகமாக வெளியிட்டுள்ளார்.

புஸ்தகத்தின் பெயர்- வைஷ்ணவ சமய விளக்கம்

 

இதோ நூறு வேறுபாடுகளை அவருடைய மொழியில் அப்படியே தருகிறேன்; பல சுவையான விஷயங்கள் உள.

 

 

 

ஈயடித் தர்ப்பணக் கதை! (Post No.5150)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 26 JUNE 2018

 

Time uploaded in London –  15-10 (British Summer Time)

 

Post No. 5150

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும் — குறள் 405

பொருள் :– கல்லாதவன் மதிப்பு, அவன் வாயைத் திறந்தவுடன் தெரிந்துவிடும்

ஈயை அடித்து தர்ப்பணம் செய்த போலி பிராமணன் கதை!!

ஒரு கிராமத்தில் பெரிய அக்ரஹாரம். அங்கு வைதீக விஷயங்கள், மந்திரங்கள் தெரியாத ஒருவர் எல்லா சடங்குகளும் தெரிந்தது போல நடிப்பார். தனிமையில் போய் ஸந்தியா வந்தனம் முதலிய கிரியைகள் செய்து வருவதாகச் சொல்லி ஏமாற்றி வந்தார்.

 

ஒரு சமயம், ஒரு முழு ஸூர்ய கிரஹணம் வந்தது. அது போன்ற சமயங்களில் எல்லோரும் ஆற்றங்கரைக்குப் போய் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆகையால் இந்த போலிப் பிராஹ்மணனும் அவர்களுடன் போக நேரிட்டது.

 

எல்லோரும் ஆற்றங்கரையில் ஸ்நாதிகளைச் செய்து தர்ப்பணம் பண்ணத் துவங்கினர். இவருக்குப் பயம்; இன்று நமது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தார். ஆகையால் மிகவும் கவனமாக அருகிலுள்ள பிராஹ்மணன் என்ன எல்லாம் செய்கிறார் என்று பார்த்து அதன் படியே செய்தார். மந்திரத்தை மட்டும் சொல்லுவது போல வாயை அசைத்து பாவனை செய்தார்.

 

 

அவர் பூணூலை இடம் மாற்றினால், இடப்பக்கமாகவும், வலம் மாற்றினால் வலப்பக்கமாகவும் மாற்றி விரைவாகச் செய்து கொண்டிருந்தார். இவருடைய துரத்ருஷ்டம், இவர் எந்தப் பிராஹ்மணனைப் பார்த்து தர்ப்பணம் செய்தாரோ அந்தைப் பிராஹ்மணன் முதுகில் ஒரு ஈ உட்கார்ந்தது. அவர் ஓங்கி ஒரு அடி அடித்து அதை விரட்டினார். அதைப் பார்த்த போலி பிராஹ்மணனும் முதுகில் ஓங்கி அடித்துக் கொண்டார். மற்றொரு ஈ இன்னொரு பக்கம் உட்காரவே உண்மைப் பிராஹ்மணன் அந்தப் பக்க முதுகில் ஒரு அடி அடித்து ஈயை விரட்டினார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த போலி பிராஹ்மணன் அதைப் பார்த்து அப்படியே செய்ய எல்லோருக்கும் தெரிந்துவிட்டது இது ஒரு சந்தேஹக் கேஸு என்று.

 

சிலர் தைரியமாக அவரிடம் வந்து ஏனய்ய இப்படிச் செய்தீர்? என்று கேட்க, ஓ, அதுவா? எனக்கு ஈயடிக்கும் மந்திரத்தின் பொருள் தெரியாது; அவர்தான் ஈயடி தர்ப்பண மந்திரம் அறிந்தவர் என்று சொல்ல அனைவரும் ‘கொல்’ என்று சிரித்தனர். எல்லோரும் பிடிப்பதற்குள் அவர் ஓடிப் போய்விட்டார்.

தமிழில் ‘ஈயடிச்சான் காப்பி’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. இதை வைத்துத்தான் அந்த சொற்றொடரும் வந்தது போலும்!

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.

அறிவாளிகளின் சபையில் முட்டாள் எளிதில் அகப்படுவான்.

 

(பழைய நூலில் கிடைத்த கதை!)

 

–சுபம்—

 

புராதன சாஸ்திர மேதை சுப்பராய சாஸ்திரி – 2 (Post No.5145)

Written by S NAGARAJAN

 

Date: 25 JUNE 2018

 

Time uploaded in London –   8-29 AM (British Summer Time)

 

Post No. 5145

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

பாரத சாஸ்திர ரகசியம்

 

புராதன சாஸ்திரங்களை உலகிற்கு அறிமுகப் படுத்திய மேதை சுப்பராய சாஸ்திரி – 2

 

ச.நாகராஜன்

மீமாம்ஸ சாஸ்திரம் : கர்மத்தின் இயற்கை பற்றி விளக்கும் சாஸ்திரம் இது. “அதாதோ தர்ம ஜிஞ்ஞாஸா” என்று ஆரம்பிக்கும் இது, “அன்வாஹார்யேச தர்மா:” என்று முடிகிறது. இதில் 12 அத்தியாயங்கள் உள்ளன. இதை அருளியவர் ஜைமினி ரிஷி.

ஜைமினியின் மீமாம்ஸ சாஸ்திரத்தில் உள்ள 12 அத்தியாயங்கள் வருமாறு:

1) தத்வ தர்மப்ரகரணம்

2) தர்மாபேத அப்ஹேதௌ

3) சேஷாசேஷீபாவ

4) ப்ரயோஜக ப்ரயோஜக பாவ

5) கர்மா

6) அதிகாரிநிரூபணம்

7) சமன்யாதிதேச

8) விசேஹதிதேச

9) ஊஹா

10) பாதா

11) தந்த்ரம்

12) ப்ரசங்கம்

இது தான் இப்போதுள்ள மீமாம்ஸ சாஸ்திரம்.

ஆனால் இது போல இன்னும் மூன்று மீமாம்ஸ சாஸ்திரங்கள் உள்ளன. அவை பல சாஸ்திர ரகசியங்களை விவரிக்கின்றன.

சந்தஸ் சாஸ்திரம் : அதாவது யாப்பிலக்கணம். இது யதியை விளக்குகிறது. எழுத்துக்களின் இசைவையும் நிறுத்த வேண்டிய இடங்களையும் விளக்குவது யதி.

கணம் : சீரான கவிதைக்கான சந்தம்.

இவை போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் மட்டும் 12 சாஸ்திரங்கள் உள்ளன.

அலங்கார சாஸ்திரம் : கவிதையில் உள்ள வெவ்வேறு அணிகள், மற்றும் எழுத்து நடை பற்றிய சாஸ்திரம். உபமானம், உபமேயம், அர்த்தபதி,தண்டபூபிகா, திலதண்டுலா,ரூபகம், போன்றவற்றை விரிவாக விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஒன்பது சாஸ்திரங்கள் உள்ளன.

இதிஹாஸம்: இதில் இதிஹாஸத்தை விளக்கும் 32 நூல்கள் உள்ளன.

 

புராணம் : மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 1) ப்ரஹ்ம 2) பத்ம 3)வைஷ்ணவ 4) சைவ 5) பாகவதம் 6)நாரதீயம் உள்ளிட்டவை இதில் அடங்கும். உப புராணங்களும் கூட உள்ளன.

 

சில்ப சாஸ்திரம் : இதில் 32 சாஸ்திரங்கள் உள்ளன.384 சிற்ப வகைகளை இவை விளக்குகின்றன.

 

சுப சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன.116 வகையான சமையலை இது விளக்குகிறது.

 

மாலினி சாஸ்திரம் : இரகசிய காதல் செய்தி பரிமாற்றத்தை விளக்கும் சாஸ்திரம் இது. மலர்கள், மாலைகள், பூங்கொத்து ஆகியவற்றின் மீது ரகசியமாக எப்படி எழுதுவது என்பதை இது விளக்குவதோடு அந்தப்புரத்திற்கு செய்திகளை எப்படி அனுப்புவது என்பதையும் நுணுக்கமாக விளக்குகிறது. இதே போல அந்தப்புரத்திலிருந்து காதலர்க்கு எப்படி செய்தி அனுப்புவது என்பதையும் இது தருகிறது. இது மட்டுமல்ல. தாதிகள் எப்படி ஆடை ஆபரணங்களை அழகுற உருவாக்குவது, ராணிமார், இளவரசிகளை எப்படி அழகுற அலங்கரிப்பது (இன்றைய மேக்-அப்) போன்றவற்றை விளக்கும் சாஸ்திரம் இது. இதில் ஐந்து சாஸ்திரங்கள் உள்ளன. மேல் தட்டில் உள்ள பிரபுக்களின் மனைவிமார்களை எப்படி அலங்கரிப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ஜரிஹர சாஸ்திரம் : யுத்தங்களில் பயன்படுத்தப்படும் வெடி மருந்து, துப்பாக்கி குண்டு, துப்பாக்கி, பீரங்கி, அம்புகள்  போன்றவற்றை எப்படி தயாரிப்பது என்பதை விளக்கும் ஒன்பது சாஸ்திரங்கள் இதில் உள்ளன.நூறு மற்றும் ஆயிரம் ரவுண்டுகள் சுடுவது எப்படி என்பதையும் இது விளக்குகிறது.

 

ப்ரளய சாஸ்திரம் : இதில் 13 சாஸ்திரங்கள் உள்ளன. படைப்பில் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு காலம் உண்டு என்பதை இது விளக்குகிறது. எப்போது அழிவு ஏற்படும், எந்த சமயத்தில் எப்படிப்பட்ட அழிவு வரும் போன்றவற்றை இது விளக்குகிறது.

கால சாஸ்திரம் :  வெவ்வேறு படைப்புகள் எப்போது உருவாகும் எப்போது மறையும் என்பதை விளக்குவது கால சாஸ்திரம். எப்போது விதை விதைப்பது, விவசாயம் எப்படி செய்வது, எப்போது அறுவடை செய்வது, தாதுக்கள் உள்ள இடம், மலைகளில் உள்ள தாதுக்கள் ஆகியவற்றை இது விளக்குகிறது. ஒவ்வொன்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

மய வாத சாஸ்திரம் : 20 வகை நூல்களின் மூலம் மாயாஜாலம் விளக்கப்படுகிறது. பொருள்களை அந்தரத்திலிருந்து எடுப்பது உள்ளிட்ட மாஜிக் வேலைகளை விளக்குவது இது.

 

இது போல ஏராளமான சாஸ்திரங்களை சுப்பராய சாஸ்திரி விளக்கியுள்ளார்.

இவற்றில் சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

ஒரு கேள்வி எழலாம். இந்த சாஸ்திரங்களின் மூலம் எங்குள்ளது என்பதே நமக்கு எழும் சந்தேகம். டாக்டர் வி.ராகவன் உலகெங்கும் சுற்றி பல்லாயிரக்கணக்கான சம்ஸ்க்ருத சுவடி நூல்களைக் கண்டு அந்த நூல் பட்டியலை தயாரித்துள்ளார். இவற்றில் என்ன உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. படிக்க, ஆராய பல நூறு அறிஞர்கள் பல்லாண்டுகள் உழைக்க வேண்டும்.

நம்மிடம் ஏராளமான விஞ்ஞான சாஸ்திரங்கள் உள்ளன.

விளக்கத்தான், பல சுப்பராய சாஸ்திரிகள் வேண்டும்.

***

 

நாக்கு பெரிதா? மூக்கு பெரிதா? (Post No.5144)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 24 JUNE 2018

 

Time uploaded in London –  17-09 (British Summer Time)

 

Post No. 5144

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பெரியது கேட்கின் வரிவடி வேலோய்

பெரிது பெரிது மூக்கு பெரிது;

அதனினும் பெரிது நாக்கு;

நாக்கினும் பெரிது தவறான வாக்கு!

 

இது அவ்வையாரின் பாட்டைக் கிண்டல் செய்ய எழுந்த பாட்டு அல்ல.

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுந்த பாட்டு.

 

ட்வைட் மாரோ(Mrs Dwight Morrow) என்பவர் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண்மணி. அவர் சீனியர் ஜே.பி.மார்கனை (Senior J P Morgan) தேநீர் விருந்துக்கு (Tea Party) அழைத்தார். அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற பணக்காரர். அவருடைய பெரிய மூக்கு புகழ்பெற்ற மூக்கு. தை பற்றிப் பேசாதோர் (பரிகசிக்காதோர்) யாரும் இல்லை.ட்வைட் மாரோவுக்கு ஒரு கவலை. அவருடைய இரண்டு பெண்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். அதில் ஒருவள் ஆன் )Anne). புகழ்பெற்ற வாயாடி. மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லி விடுவாள். ஜே.பி.மார்கன் மூக்கைப் பார்த்தால் விமர்சனம் செய்யாமல் இருக்க மாட்டாள். எப்படியும் பகடி செய்து விடுவாள்.

 

ஆகவே இரண்டு மகள்களையும் அழைத்து பெரியோரிடம் மரியாதைக் காட்டுவது எப்படி என்று உபந்யாசம் செய்தாள்; ஆன் என்ற மகளுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றி, மகளே அவர் மூக்கைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்; ஆனால் வெளியே மட்டும் வாய் திறந்து பேசிவிடாதே என்றாள்.

மகளும் அப்படியே செய்வேன் என்று தலை அசைத்தாள்.

ஜே.பி மார்கனும் வந்தார். பெண்களை அவசரம் அவசரமாக அறிமுகப் படுத்திவிட்டு உள்ளே செல்ல உத்தரவிட்டார்.

ஒரு அச்மபாவிதமும் நடக்க வில்லை.

ஆனால் ட்வைட் அம்மணியார் சதா சர்வகாலமும் மூக்கைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் வாய் தவறி,

 

மிஸ்டர் மார்கன், உங்களுக்கு தேநீரில் லெமன் வேண்டுமா அல்லது க்ரீம் வேண்டுமா என்று கேட்பதற்குப் பதிலாக

 

உங்கள் நோஸில் (Nose) லெமன் வேண்டுமா அல்லது க்ரீம் வேண்டுமா?

என்று கேட்டு விட்டார்.

நாக்கில் உள்ளது வாக்கில் வந்து விட்டது!!

 

xxxxxxx

ஏன் மனைவியைத் தள்ளி விட்டாய்?

 

நீதிபதி: அப்படியனால் நீ உன் மனைவியை இரண்டாவது மாடி ஜன்னல் வழியாகத் தள்ளிவிட்டது உண்மையா?

 

குற்றவாளி: ஆமாம் கனம் நீதிபதி அவர்களே!

 

நீதிபதி: ஏன் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து தள்ளிவிட்டாய்?

என்ன காரணம்?

 

குற்றவாளி: நாங்கள் முதலில் கீழே (கிரவுண்ட் ப்ளோர் Ground Floor) குடியிருந்தோம்.

சமீபத்தில்தான் இரண்டாவது மாடிக்குக் குடிபுகுந்தோம்.

வீடு மாறியதே மறந்து விட்டது, ஐயா!!!

 

xxxxx

ஞாபக மறதிப் பேராசிரியர்கள்!

ஒரு பேராசிரியருக்கு அதி பயங்கர ஞாபக மறதி.

 

வீட்டுக்குள் விறு விறு என்று நுழைந்து கொண்டிருந்தார்.

 

மனைவி: பார்த்தீர்களா? நீங்கள் இறந்து போய்விட்டதாகப்

பத்திரிகையில் செய்தி போட்டிருக்கிறார்கள்.

 

அப்படியா, மறந்து விடாதே. எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி.

ஞாபகமாக ஒரு மலர் வளையத்துக்கு ‘ஆர்டர்’ கொடு.

 

நானும் நீயும் மறக்காமல் போக வேண்டும்

 

மனைவி தலையில்…………………

xxxxxxxxxxx

வேகமாகப் போ! ம்ம்… இன்னும் வேகம்!

ஒரு பேராசிரியருக்கு என்ன செய்கிறோம் என்பதையே மறந்து விடும் அளவுக்கு ஞாபக மறதி!! ஒரு ஊருக்கு சொற்பொழிவு ஆற்றச் சென்றார்.

சொற்பொழிவின் நேரம் மட்டும் ஞாபகம் இருந்தது.

ஆனால் வீட்டைவிட்டு தாமதமாகப் புறப்பட்டு அடுத்த ஊரில் போய் இறங்கி டாக்ஸியில் ஏறினார்.

 

ஏய், வண்டியை வேகமாக விடப்பா! கூட்டம் துவங்க பத்து நிமிடம்தான் இருக்கு!

 

அதுக்கென்ன ஸார், இதோ பாருங்கள் ! வண்டி சிட்டாய்ப் பறக்கும் என்று ஆக்ஸிலேட்டரை அமுக்கினான்.

 

ஏய், இன்னும் வேகமாகப் போ என்றார்.

அதற்கென்ன என்று சொல்லி 70 மைல் ஸ்பீடை 90 மைல் ஸ்பீட் ஆக்கினான்.

 

ஏய் நிறுத்து, நிறுத்து! எங்கே போகிறாய்?

இடம் தெரியுமா?

தெரியாதே ஸார்; நீங்கள் சொல்லுங்கள் என்றான் டாக்ஸி ட்ரைவர்!

அடக் கடவுளே! எனக்கு நேரம் மட்டுமே நினைவு இருக்கிறது- என்று சொல்லி டாக்ஸியில் இருந்து இறங்கினார்.

 

XXXXXX

 

கறார் பேர்வழி! கணக்கான பேர்வழி!

 

ஒரு சரக்குக் கப்பலின் கேப்டன்

 

மிகவும் கறாரான, கணக்கான பேர்வழி. அவருக்குக் கீழே வேலையில் இருந்தவன் குடித்துவிட்டு வேலைக்கு வந்தான். கேப்டனின் கடமை:– எல்லோர் பற்றியும் லாக் புஸ்தகத்தில் எழுத வேண்டும்

 

குடித்த ஆளின் பெயரை லாக் புஸ்தகத்தில் எழுதிவிட்டார். இதைப் பார்த்த அந்த ஆள் கேப்டனிடம் கெஞ்சாய்க் கெஞ்சினார். தயவு செய்து என் பெயரை அடித்து விடுங்கள்; நான் இனிமேல் தவறு செய்ய மாட்டேன்; உங்களுக்கே தெரியும் ;நான் இதுவரை இப்படி செய்ததில்லை என்று.

 

இப்படியெல்லாம் கெஞ்சியும் சமாதானம் சொல்லியும் கப்பலின் கேப்டன் மசியவில்லை.

 

“இதோ பார், நீ குடித்தது உண்மை; அதைத்தானே எழுதினேன். நான் உண்மையை  எப்படி மறைக்க முடியும்? போ!” என்று சொல்லி அனுப்பிவிட்டார். எப்போதும் சரியானதை எழுதுவதில் தவறே இல்லை என்றார்.

 

ஒரு நாள் ‘லாக் புஸ்தகம்’ வேலை இந்த பாதிக்கப்பட்ட ஆளுக்கு வந்தது. பழி வாங்க துடியாய்த் துடித்தவருக்கு அருமையான வாய்ப்பு இது. ஆனால் பொய்யும் எழுத முடியாது. எடுத்தார் பேனாவை! தொடுத்தார் சொற்களை!

 

“இன்று கேப்டன் மிகவும் நிதானமாக (நிதானத்தில்) இருந்தார்” என்று கொட்டை எழுத்தில் எழுதினார்.

உண்மைதானே (ஆனால் எப்படியும் பொருள் கொள்ள முடியும்)

 

–subham–