விளக்கு வைத்து சாப்பிடுவது ஏன்? (Post No.4656)

Written by London Swaminathan 

 

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London – 7-36 AM

 

Post No. 4656

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள்
ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

விளக்கு வைத்து சாப்பிடுவது ஏன்? என்பதற்கு நேற்று ஒரு பேய்க்கதை சொன்னேன்; சொக்கா சொக்கா சோறுண்டோ சோழியன் வந்து கெடுத்தாண்டோ- என்ற பழமொழியின் பின்னாலுள்ள கதை அது.

 

நடேச சாஸ்திரியார் தொகுத்து 1886 ஆம் வெளியிட்ட ‘திராவிட பூர்வகால கதைகள்’ புத்தகத்தில் மேலும் ஒரு கதை உளது. பழந்தமிழில் உள்ள கதையை புதுக்கியும் சுருக்கியும்   வரைவது என் சித்தம்.

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு பிராஹ்மணன் இருந்தான். அவனுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்று. ஒரு தொண்டுக் கிழம் அவருடைய கடைசி பெண்ணை விவாஹம் செய்துவிட்டு உயிர்விடக் காத்திருந்தது. கல்யாணமும் சுகமே முடிந்தது. அன்றிரவு சாந்தி முகூர்த்தம்; மாப்பிள்ளை சுத்த வைதீகப் பிராஹ்மணன்; ஆகையால் மாலைச் சந்தியாவந்தனத்தை முடிக்க குளக்கரைக்குச் சென்றான். அந்த ஊரில் முதலைகள் அதிகம்; அது பற்றி புது மாப்பிள்ளையை யாரும் எச்சரிக்கவில்லை. அவர்கள் இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

 

குளத்தில் இறங்கிய புது மாப்பிள்ளையின் காலை ஒரு முதலை கவ்வியது. மாப்பிள்ளைக்கு ஒரே நடுக்கம்; இருந்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு,

 

“முதலை மாமா! முதலை மாமா! ஒரே ஒரு விண்ணப்பம். நான் இப்போதுதான் கல்யாணம் கட்டி, சாந்தி முகூர்த்தத்துக்கு காத்திருக்கிறேன்; நீ என்னை சாப்பிடுவதானால் சாப்பிடலாம்; ஆனால் நான் போய் என் மனைவியுடன் படுத்துவிட்டு, விஷயத்தைப் புரியவைத்துவிட்டு, அனுமதி வாங்கி வந்து விடுகிறேன்; என்னை நம்பி ஒரு பெண்ணும், அவளது தந்தை ஒரு தொண்டுக் கிழமும் இருக்கின்றனர். நான் போகாவிடில் இருவரும் உயிர் விடுவர். நீ மூன்று உயிர்களைப் பறித்த பாவத்துக்கு ஆளாவாய். மேலும் பிராஹ்மணர்கள் ஸத்யம் தவறாதவர்கள் என்பது உனக்குத் தெரிந்திருக்கும்;நான் கட்டாயம் திரும்பி வருவேன். என்னை விடுவாயா?” என்று கேட்டனன்.

Karthik Raghavan’s picture from Kaladi; Adi Shankara story

முதலை சொன்னது:

“உன்னை இப்போது சாப்பிட்டாலும் நாளை சாப்பிட்டாலும் எனக்கு ஒன்றுதான்; போய் வா மகனே, போய் வா! இன்று போய் நாளை வா!”

 

அவன் மனைவியிடம் சென்றான்; சாந்தி முகூர்த்தம் தடபுடலாக நடந்தது. நள்ளிரவில் மனைவியிடம் எல்லா வற்றையும் சொன்னான். அவள் சொன்னாள்—“ நாளை வரை காத்திராதீர்கள் இப்போதே போங்கள்”.

 

அவனும் புறப்பட்டான்; இந்த மாதிரி கொலைகார மனைவியிடம் வாழ்வதைவிட ஒரு முதலையின் பசியைத் தீர்ப்பது சாலச் சிறந்தது. இரண்டு மணி நேரம் சுகம் அனுபவித்த பின், முதலையிடம் என்னைப் பலி கொடுக்கத் தயாராகி விட்டாளே! என்று மனதுக்குள் வசை பாடிக்கொண்டு குளத்துக்கு வந்தான்.

 

“முதலை மாமா! நீ நாளை வரை காத்திருக்க வேண்டாம்; என் மனைவியே என்னை அனுப்பி விட்டாள்; என்னைச் சாப்பிடு என்றான்.

முதலையும் தாவிப் பாய்ந்தது.

அப்போது ‘பளிச்’ என்று ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது; மீண்டும் இருள் சூழ்ந்தது.

 

முதலை சொன்னது,

“அடக் கடவுளே! சாப்பிட வந்த போது விளக்கு அணைந்துவிட்டதே. நான் உன்னைச் சாப்பிடக்கூடாது. சாப்பிடும் போது விளக்கு  அணைந்தாலும், விளக்கு இருந்தாலும் சாப்பிட மாட்டேன். நீ போகலாம்” என்று அனுப்பிவிட்டது.

 

திரும்பிப் பார்த்தான்; அவன் மனைவி ஒரு சட்டியில் அணைந்த  விளக்குடன் ஓடி வந்தாள். அவள் சொன்னாள்,

“என் பிராண நாதா! சுவாமி! நீங்கள் எந்த விக்கினமும் இல்லாமல் திரும்பி வரவேண்டும் என்று உலகிள்ள எல்லா ஸ்வாமியையும் பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனை பலித்தது” என்று சொல்லி அவனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

 

விளக்கின் மஹிமை இத்தகையது. மிருகங்களும் ஸத்தியத்துக்குக் கட்டுப்படும். இதனால் மனிதர்கள் யாரும் விளக்கு ஏற்றாமலோ , விளக்கு அணைந்தாலோ சாப்பிட மாட்டார்கள்.

 

(மின்சார விளக்குகள் ஜகஜ்ஜோதியாக இருக்கும் லண்டனில் கூட என் வீட்டில் சாப்பிடும் போது ஒரு விளக்கையும் அனைக்கக் கூடாது என்பது என் மனைவியின் கட்டளை; நானும் எனது மகன்களும் இன்றும் அந்த சட்டத்துக்குக் கீழ்ப்படுகிறோம்)

 

-சுபம், சுபம்-

 

 

tags–விளக்கு, முதலை, பிராஹ்மணன், சாந்தி முஹூர்த்தம்

 

ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? (Post No.4652)

ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

 

Written by London Swaminathan 

 

Date: 23 JANUARY 2018

 

Time uploaded in London – 8-21 AM

 

Post No. 4652

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இது ஒரு பேய்க் கதை; பழமொழிக் கதை

சொக்கா, சொக்கா சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டோ

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

‘திராவிட பூர்வகாலக் கதைகள்’ என்ற பெயரில் நடேச சாஸ்திரி என்பார் பழங் கதைகளைத் தொகுத்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டுள்ளார். அவை பழந்தமிழில் இருப்பதால் அவற்றைப் புதுக்கியும் சுருக்கியும் தருகிறேன்.

 

 

வீட்டில் விளக்கு ஏற்றுவது ஏன்?

ஒரு ஊரில் ஒரு குடியானவன். அவனுக்கு இரண்டு புதல்விகள்; ஒருவருக்கு உள்ளூரிலேயே திருமணம் முடிந்தது. மற்றொரு மகள், அயலூரிலுள்ள  ஒரு சோழியனுக்கு வாக்குப்பாட்டாள். காலம் உருண்டோடியது. கிழக் குடியானவன் இறந்தான்; மூத்த மகளின் கணவனும் இறந்தான். அவளது தங்கையோ அடுத்த ஊரில் கணவனுடன் சுகமாக வாழ்ந்து வந்தாள். மூத்த மகளுக்கு சந்ததியும் இல்லை. ஆகையால் வயிற்றுப் பிழைப்புக்காக நிலத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தாள்.

தினமும் இரண்டு படி அரிசி சமைத்து உண்பாள்; அப்படியும் பசி தீராது. யாரிடமும் சொல்லவும் வெட்கம். ஆகையால் காரணத்தை அறியவில்லை.

 

ஒரு நாள் அயலூரிலுள்ள அவளுடைய தங்கை, தன்னுடைய அக்காளைப் பார்க்க சொந்த ஊருக்கு வந்தாள். அக்காளும் வயல் வெளி வேலைகளை முடித்துக் கொண்டு மாலையில் பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்தாள். அன்று தனது தங்கையும் பார்க்க வந்திருக்கிறாளே என்று கருதி, இரண்டரைப் படி அரிசியை எடுத்தாள்.

 

தங்கை சொன்னாள்,

“முதலில் விளக்கேற்றிவிட்டு சமை; இருட்டில் சமைக்கக்கூடாது. மேலும் என் வீட்டில் நான் விளக்கு வெளிச்சத்தில்தான் சாப்பிடுவேன்” என்றாள்.

அடுத்ததாக, அவள் பகன்றாள்,

“இது என்ன இரண்டரைப் படி அரிசி; இதில் பத்துப் பன்னிரெண்டு பேர் சாப்பிடலாமே! உனக்கு என்ன பைத்தியாமா?”

 

இதற்கு அக்காள் மறு மொழி நுவன்றாள்,

“இதோ பார் நான் தினமும் இரண்டு படி அரிசியில் சோறாக்குவேன்; நீ வேறு வந்திருக்கிறாய்; அதற்காக கூடுதல் அரைப்படி சேர்த்தேன் . என்னிடம் விளக்கிற்கு எண்ணெய் வாங்கும் அளவுக்கு காசு பணம் கிடையாது. நான் பாட்டுக்குச் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கி விடுவேன்.”

தங்கை சொன்னாள்,

“எனக்கு சோறு கூட வேண்டாம்; விளக்கு இல்லாமல் ஒரு நிமிடம் கூட இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டேன். பூச்சி, பொட்டு, பாம்பு வந்தால் என்ன செய்வத? முதலில் கொஞ்சம் அரிசியைக் கொடுத்து யாரிடமாவது எண்ணெய் வாங்கி வா” என்றாள்

 

அக்காளும் அரை மனதுடன் சென்று எண்ணெயுடன் திரும்பி வந்தால்; சாப்பிடத் துவங்கினர். கால் வாசி பானை சோறு கூடத் தீரவில்லை; இருவருக்கும் வயிறு நிறைந்தது.

 

 

தங்கை சொன்னாள், “பார்த்தாயா? நான் சொன்னேன்; நீ கேட்கவில்லை; இவ்வளவு சோறு மிச்சம்”

 

அக்காள் சொன்னாள்,

“இதோ பார், எனக்கே புரியவில்லை; தினமும் இரண்டு படி சோறு வடித்தும் என் வயிறு காயும்; இன்று என்னவோ கொஞ்சம் சாப்பிட்ட உடனே பசி போய்விட்டது; எல்லாம் நீ வந்த முஹூர்த்தம் போலும்” என்றாள்

அப்போது திடீரென்று ஒரு சப்தம்

 

சொக்கா சொக்கா சோறுண்டோ?

சோழியன் வந்து கெடுத்தாண்டோ

 

வா நாம் போவோம்– என்று.

 

உடனே அக்காள் கேட்டாள்,

‘ஏய், யார் அங்கே? யார் சொக்கன்?’

 

அப்போது ஒரு குரல் ஒலித்தது,

“நான் தான் சொக்கன்; நான் ஒரு பேய்; நானூம் எனது நண்பனான பேயும் விளக்கில்லாத வீட்டுக்குப் போய் சாப்பிடுவோம். இதனால் அந்த வீட்டில் அதிகமாக சமைப்பார்கள்; இன்று ஒரு சோழியன் அயலூரில் வந்து கெடுத்துவிட்டாள் என்று என் நட்புப் பேயிடம் செப்பினேன். நாங்கள் இருவரும் வேறு வீட்டுக்குப் போய் விடுகிறோம்”.

 

இதக் கேட்ட அக்காளுக்கும் தங்கைக்கும் ஒரே ஆச்சர்யம், அதிசயம்!

 

அன்று முதல் அவள் அக்காள், வீட்டில் விளக்கு ஏற்றாமல் சமைப்பது இல்லை; எல்லோரும் சாப்பிடும் அளவு சோறுண்ட பின் அவள் வயிறும் நிறைந்தது; வாழ்வும் சிறந்தது.

 

இதுதான் சொக்கா சொக்கா சோறுண்டோ?

சோழியன் வந்து கெடுத்தாண்டோ

பழமொழியின் பின்னாலுள்ள கதை.

வாழ்க தமிழ்! 20, 000 பழமொழிகளுக்கும் கதையோ காரணமோ, அனுபவ அறிவோ உண்டு. எனது கட்டுரைகளைப் படித்து அறிக.

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

சுபம்

கஞ்சி வரதப்பா கதை! காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம் கதை!! (Post No 4644)

கஞ்சி வரதப்பா கதை! காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம் கதை!! (Post No.4644)

 

Written by London Swaminathan 

 

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London 9-37 AM

 

 

 

Post No. 4644

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

2 பழமொழிக்  கதைகள்

 
(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

காஞ்சீபுரம் பற்றி இரண்டு பழமொழிகள் உண்டு; அவைகளின் பின்னால் சிறு கதைகளும் உண்டு.

 

ஒரு ஏழை, வேலை தேடி அலைந்து திரிந்தான் ; வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. செங்கல்பட்டில் ஒரு வீட்டின் திண்ணையில் உடகார்ந்து புலம்பிக் கொண்டிருந்தான். அந்த வீட்டுக் கிழவி, எதேச்சையாக வெளியே வந்தாள். இவன் நிலையைக் கண்டு சோறு போட்டாள். இவன் தன் கதைகளை எல்லாம் சொன்னவுடன் அந்தப் பாட்டி சொன்னாள்,

அட அசடே! காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாமே; இதைக் கேட்டதே இல்லையா?” என்றாள்.

அப்படியா பாட்டி? இதோ உடனே புறப்படுகிறேன் என்று அவள், அன்னம் இட்டதற்கு நன்றி தெரிவித்துவிட்டு, வழி நடந்தான்.

வழியில் ஆங்காங்கே தங்கி அன்ன சத்திரங்களில் கிடைத்ததை உண்டு சின்னாட்களில் காஞ்சீபுரத்தை அடைந்தான். ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். கால்களை ஆட்டத் துவங்கினான். யாரும் வேலை தருவதாகத் தெரியவில்லை. எல்லோரும் அவனை வேடிக்கைப் பார்த்துவிட்டு, இந்தப் பைத்தியம் எதற்காக இப்படிக் காலாட்டுகிறது என்று முனுமுனுத்துவிட்டுப் போயினர்.

 

இவன் நீண்ட நேரம் ஆகியும் ஒரு பலனும் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் மிகவும் வேகமாகக் காலாட்டினான். எதேச்சையாக அந்த வீட்டுக் கிழவி வெளியே வந்தாள். இவன் காலாட்டுவதைப் பார்த்துவிட்டு,

அப்பனே! ஏன் இப்படி நீண்ட நேரமாக காலாட்டி வருகிறாய்? என்ன காரணம்? காலில் நோவா?வலியா?” என்றனள்.

 

பாட்டி! உன்னைப் போலவே ஒரு பாட்டியைக் கண்டேன். எனக்கு வேலை கிடைக்கவிலை என்றேன். அவள் தான் சொன்னாள், ‘காஞ்சிக்குப் போனால், காலாட்டிப் பிழைக்கலாம் என்று.

அவளுக்கு அதைக் கேட்டு சிரிப்பே வந்துவிட்டது.

அட மக்கு! காஞ்சீ புரம் பட்டு சேலைகளுக்கும் மற்ற நெசவு சேலைகளுக்கும் பிரசித்தியான இடம். செசவுத் தொழில் செய்வோர் ஒவ்வொரு வீட்டிலும் தறி இருக்கும். அதில் ஆடவர், பெண்டீர் ஆகிய அனைவரும் தறியில் உட்கார்ந்து வேலை செய்வர். தறி நெசவில் காலாட்டி இயந்திரங்களை இயக்குவர். இப்படி புடவை நெய்வதையே காலாட்டிப் பிழைக்கலாம் என்று சொல்லுவர் என்றாள்.

உடனே அவனும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு  நெசவு வேலையில் அமர்ந்தனன்.

 

கஞ்சி வரதப்பா கதை!

ஒரு கிராமத்தில் ஒரு பரம ஏழை! சாப்பாட்டிற்கு லாட்டரி அடிப்பவன்; உணவுக்கு வழி தெரியாமல் திகைத்தான்.வேலையோ இல்லை. ஊர்ப் பெரியவர்கள் சொன்னார்கள்; “அப்பனே, இந்தச் சிற்றூரில் உனக்கோ  வேலை கிடைக்கவில்லை. ஏன் காஞ்சீபுரம் போன்ற ஒரு பெரிய நகருக்குப் போய் வேலை தேடக்கூடாது? என்றனர். அவனுக்கும் அது நல்ல யோஜனையாகத் தோன்றியது. காலால் நடந்தே காஞ்சி சென்றான்.

 

 

அவனுக்குக் காஞ்சி பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லை. அங்குள்ள காமாட்சி கோவிலும் தெரியாது; வரதராஜப் பெருமாள் கோவிலும் தெரியாது. காஞ்சி என்ற ஊர்ப் பெயர் கச்சி என்றும், சுருக்கமாக கஞ்சி என்றும் வழங்குவதும் தெரியாது.

 

ஒரு வீட்டின் திண்ணையில் போய் அமர்ந்து அடுத்தது என்ன செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். பசியோ வயிற்றைக் கிள்ளியது. அடக் கடவுளே, என்னை காப்பாற்று என்று உரத்த குரலில் புலம்பினான்.

 

அப்போது ஒரு பெரியவருக்கும் ஊர்க் கடவுள் நினைவு வரவே கஞ்சி வரதப்பா! கஞ்சி வரதப்பா!’ என்று கூவி கன்னத்தில் போட்டுக் கொண்டார். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத்தைப் பார்த்து வணங்கினார். அவரைப் பார்க்காமல் குரலை மட்டும் கேட்ட நமது பரம ஏழைக்கு ஒரே சந்தோஷம்!.

 

அடக் கடவுளே என்னைக் காப்பத்து- என்று நான் முழங்கியதுதான் தாமதம்! யாரோ ஒருவர் கஞ்சி வரதப்பா என்கிறாரே என்று.

அவர் அவ்வாறு சொன்னது காஞ்சீபுர வரத ராஜப் பெருமாளை நினைத்துச் சொன்ன பிரார்த்தனை. ஆனால் நமது கதா நாயகன் பரம ஏழைக்கோ நிஜமாகவே கடவுள் சொன்ன பதில் என்று நினைத்து கஞ்சிக்காகக் காத்திருந்தான். எவரும் கஞ்சி கொண்டு வரவில்லை. அப்படியே திண்ணையிலேயே தூங்கி விட்டான். யாரோ ஒருவர் என்னப்பா பசி மயக்கமா? உன்னைப் பார்த்தால்  சாப்பிட்டு பல நாள்  ஆனவன் போலத்தெரிகிறதே என்றார்.

 

அவன் தன் கதையைக் கூறி முடித்தவுடன் கஞ்சி வரதப்பா என்ற வாசகத்துக்கு அவர் அழகாகப் பொருள் உரைத்துவிட்டு, நீ இவ்வளவு நேரம் வரதப்பனை நம்பியது வீண் போகாது; நானே கஞ்சி வார்க்கிறேன் என்று சொல்லி, தனது வீட்டில் சமைத்த உணவை இலையில் பரிமாறினார்.

 

ஆரல்வாய் மொழி என்ற அழகான ஊர் ஆராம்பொலி என்றும், ஐராவத நல்லூர் என்ற ஊர் அயிலானூர் என்றும் திருப்பறாய்த் துறை என்ற ஊர் திருப்ளாத்துறை என்றும் மாறுவது  போல  காஞ்சி என்பதும் கச்சி என்று மாறும் என்று விளக்கினார். அவனுக்கு ஒரு கடையில் நல்ல வேலையையும் வாங்கித் தந்தார்.

 

தமிழில் இந்த இரண்டு பழமொழிகளும் நிலைத்துவிட்டன.
(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

-சுபம்–

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை (Post No.4643)

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London- 6–37 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4643

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை

.நாகராஜன்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

1

கவியரசு கண்ணதாசன் சம்ஸ்கிருதத்தில் கவிதை எழுதி இருக்கிறாரா? முதலில் அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?

கேள்விகள் நியாயமானவை தான்.

ஆரம்ப காலத்தில் சேரக் கூடாதாரோடு சேர்ந்திருந்த காலத்தில் அவர் எழுதிய் கவிதை இது:

 

“செத்த மொழி பெற்ற மகன், தமிழைப் பார்த்துத்

திணறுகிறான்! மயங்குகிறான்! வேற்று நாட்டுப்

பொத்தல்களைத் தமிழாக்கி விற்ப தற்குப்

புறப்பட்டோன், ஆதலினால் புலம்பு கின்றான்!

அத்தியிலே பூத்தம்லர் அனைய நாட்டில்

அழகுமொழி படைத்த மறைமலையைக் கண்டால்

சித்திரமும் தமிழ் பேசும்; திறமில் லாத

சிறுநரிதான் ஊளையிடும்; இட்டான் ஊளை!

வேரெடுத்த செம்மைமொழி தமிழல் லாமல்

வேறெது தான் தமிழாகும்! அத்திம் பேரும்

பூரிகளும் ஸ்வாமிகளும் ஆச்சார் யாளும்

பூரணமும் ஸ்வாகதமும் தமிழா?”

  • தமிழ் போலும் – மொழி இல்லை என்ற கவிதையில்

ஆனால் பக்குவப்பட்ட நிலையில், அவர் கூறியது:

“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வ்டமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழிபெயர்ப்பாளனாகலாம்.”

 

 

2

“தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது அரசியல்; தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா”

இதை விடச் சிறப்பாக இந்த இரு மொழிகளையும் பற்றி வேறு யார் தான் கூற முடியும்? என்னதான் கூற முடியும்!

இதைச் சொல்லி விட்டுச் சும்மா இருக்கவில்லை.

அவர் கூறுகிறார்:

“வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். இரண்டு ஆண்டுகளாக நான் வடமொழியில் பயிற்சி பெற்று வருகிறேன்.”

இந்தப் பயிற்சிக்கு அவரது உற்ற நண்பர் ஒருவர் – ஆல் இந்தியா ரேடியோ அதிகாரி ஒருவர் – துணை புரிந்தார்.

இந்த வட மொழிப் பயிற்சி தமிழுக்குப் பெரிய நலனை அளித்தது.

 

3

ஆம், என்ன நலன்? சில பல நல்ல நூல்கள் வடமொழியிலிருந்து அவர்  மூலமாக தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழுக்குக் கிடைத்தது.

அவரது வார்த்தைகளில் அதைப் பார்ப்போம்;

“வடமொழியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக இப்போது பகவத்கீதை விளக்கவுரையைக் கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளேன்.

 

 

பஜகோவிந்தத்தில் வரும் முப்பத்தோரு பாடல்களையும் விவேக சிந்தாமனியைப் போல சந்தக் கவிகளாக்கியுள்ளேன்.”

மிக அருமையான மொழி பெயர்ப்புக் கவிதைகளாக இவை அமைந்துள்ளதைப் படித்துப் பார்த்து உணரலாம்.

இது மட்டுமல்ல, கீத கோவிந்தத்தில் மனதைப் பறி கொடுத்த அவர் அதை, “கோபியர் கொஞ்சும் ரமணன்” என்று தமிழில் தந்தார்.

 

 

ஜெயதேவரின் அஷ்டபதி பற்றி அவர் தனது கவிதையில் கூறும் போது சொல்வது இது:

கண்ணனின் லீலையை அஷ்டபதி – என்னும்

காவிய மாக்கிய ஜெயதேவன்

எண்ணி உரைத்ததை நானுரைத்தேன் – அதில்

இன்னும் பலப்பல போதையுண்டு!

 

கோலமிகும் இந்தப் பாடலினை – கீத

கோவிந்தம் என்றும் உரைப்பார்கள்

ஞால மொழிகளில் வந்ததிது – கண்ணன்

ரஸ லீலாவினைச் சொல்வதிது!

 

மொத்தம் இருபத்துநான்கு வண்ணம் – அது

மோகச்சுவை ரஸம் ஊறும் கிண்ணம்

அத்தனையில் இங்கு ஒன்பதையே – நான்

அள்ளிக் கொடுத்தனன் என் மொழியில்

 

போஜன் மகன் ஜெய தேவனவன் – இங்கு

போதனை செய்தது ஞான ரஸம்!

ராஜன் பராசரர் வம்சமவன் – அந்த

ஞானியின் பாடலைப் பாடுகவே”

24 அஷ்டபதியில் ஒன்பதைத் தமிழாக்கினார் கவிஞர்.

 

 

4

வடமொழியின் சுவையையும் அருமையையும் உணர்ந்த கவிஞர் அதில் தோய்ந்தே போனார்.

அதன் விளைவு தான் அவர் எழுதிய சம்ஸ்கிருதக் கவிதை.

“இதோ எனக்குத் தெரிந்த வடமொழியில் நான் எழுதிய ஒரு பாடல்:” என்று கூறி விட்டு அவர் தரும் அற்புத சம்ஸ்கிருதக் கவிதை இது தான்:-

 

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்

முரளி மோகனம் சுவாமி அசுர மர்த்தனம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்

நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

ஸத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்

சர்வ ரக்ஷகம் சுவாமி தர்ம தத்துவம்

ராத பந்தனம் சுவாமி ராஸ லீலகம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

எப்படி இருக்கிறது சம்ஸ்கிருதக் கவிஞர் கண்ணதாசனின் சம்ஸ்கிருத கவிதை!

 

 

5

என்ன ஒரு வருத்தம் நமக்கெல்லாம்..? நமது கவியரசு இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளாவது கூட வாழ்ந்திருக்கலாம்.

“ஆண்டவன் எனக்கு இன்னும் பத்தாண்டுகள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பானேயானால், ஆங்கிலத்தில் ஒரு சிறு காவியமும், வடமொழியில் ஒரு சிறு காவியமும் எழுதுவேன்.” என்றார் அவர்.

ஆனால் கொடுத்து வைக்கவில்லை – தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும்.

என்றாலும் கூட இறைவன் அருளால் அவர் தமிழில் எழுதியுள்ள ஆன்மீக இந்துக் களஞ்சியம் நிச்சயம் ஒரு அற்புத ஞான  ஓவியமே.

அதைப் படித்து அவரது மேன்மையைத் தெரிந்து கொள்ளலாம்; அப்போது இந்து மதச் சிறப்பும் தானாகவே தெரிய வரும்.

 

 

 

ஆதாரம் :

  1. முதல் பக்கம் – கல்கியில் வந்த கட்டுரை – தலைப்பு “மொழி வெறுப்பு – விழி இழப்பு”

2.கோபியர் கொஞ்சும் ரமணன் – கண்ணதாசன் மாத இதழ் ஜனவரி 1978

3.கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

அவர் சொன்னாரா? இவர் சொன்னாரா? எவர் சொன்னார்? QUIZ (Post No.4641)

 

Written by London Swaminathan 

 

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London 18-13

 

 

 

Post No. 4641

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

அவர் சொன்னாரா? இவர் சொன்னாரா? எவர் சொன்னார்? QUIZ (Post No.4641)

  1. வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய்

 

 

  1. அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி

 

  1. பால்புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணிமிடற்று ஒருவன் போல

மன்னுக — பெரும!

 

 

 

  1. பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்

பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்

 

  1. எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழி வழியாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்

 

  1. தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோ

தலையாயவர் தங்கடன் ஆவதுதான்

 

  1. அருள்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா

அருள்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே

 

  1. வாதக்கால் ஆம்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவு ஆம்;

பேதப் பெருவயிறு ஆம் பிள்ளைதனக்கு!– ஓதக்கேள்!

வந்தவினை தீர்க்க வகை அறியார் வேளூரர்

எந்தவினை தீர்ப்பார் இவர்?

 

  1. ஆரிய பூமியில் நாரியரும் நர

சூரியரும் சொலும் வீரிய வாசகம்

வந்தே மாதரம்- ஜய வந்தே மாதரம்

 

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

 

  1. எங்கெங்கும் காணும் சக்தியடா – தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா

 

 

  (தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்மற்றவர்கள் எழுதியதைஅதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்அதிகம் எழுதுவர்ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்தமிழ் வாழும்!)

ANSWERS

 

1.காளமேகம்,  தனிப்பாடல்கள், 2. கம்பன், கம்ப ராமாயணம்     3. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 4. இளங்கோ, சிலப்பதிகாரம்,      5.பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 6.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 7. திருமூலர் எழுதிய திருமந்திரம், 8.காளமேகம்,  தனிப்பாடல்கள், 9.பாரதி, பாரதியார் பாடல்கள், 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் எழுதிய முதல் பாடல், பாரதியார் எழுதச் சொன்னவுடன் எழுதிய கவிதை

 

 

 

இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ பெண்மணி! (Post No.4638)

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London- 6–47 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4638

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

 

வைணவச் சிறப்பு

 

இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ, ஞானப் பெண்மணி!

 

ச.நாகராஜன்

 

1

இராமானுஜாசார்யார் கருணையே உருவாகக் கொண்ட பெரும் வைஷ்ணவ ஆசார்யர்.

 

எல்லோருக்கும் அருள் பாலிப்பவர்.

ஒரு சமயம் அவர் திருக்கோளூர் என்னும் புனிதப் பதியில் எழுந்தருளியிருந்தார்.

பக்தர்கள் திரளாக வந்து அவரை வணங்கி அவர் அருளைப் பெற்ற வண்ணம் இருந்தனர்.

 

அவர் அங்கிருப்பதைக் கேட்ட பலரும் திருக்கோளூர் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது ஒரு மாதரசி அந்த ஊரிலிருந்து கிளம்பப் போவதாகக் கூறினாள்.

 

அதைக் கேட்ட பலரும் வியந்தனர். அனைவரும் இங்கு வரும் போது நீங்கள் அயலூர் செல்லலாமா என்று அவர்கள் கேட்டனர்.

மாதரசியோ பிடிவாதமாக அங்கிருந்து செல்லப் போவதாக கூறினாள்.

உடனே அவளை ஆசார்யரிடம் அழைத்துச் சென்று விஷயத்தைக் கூறினர்.

 

2

கருணையே உருவான ஆசார்யர் அவளைப் புன்முறுவலோடு நோக்கினார். அவளது உயர்ந்த ஆன்ம நாட்டம் அவருக்குப் புரிந்தது. அவளது உயரிய ஆன்மிக பக்குவமும் அவருக்குத்த் தெரிந்து விட்டது.

அவரது முகக்குறிப்பு ‘சொல்’ என்றது.

மாதரசி, “ நான் திருக்கோளூரை விட்டுச் செல்லப் போகிறேன்” என்றாள்.

ஆசார்யர் கனிவோடு அவளை நோக்கி, “ திண்ணமென்னிளமான் புகுமூர் திருக்கோளூரே! அனைவரும் வந்து சேரும் இந்த புனிதத் தலத்தை விட்டு ஏன் வெளியே போக உத்தேசம்?” என்று வினவினார்.

 

 

அதற்கு அந்த மாதரசி பதில் அளித்தார் இப்படி:-

அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே,

அகமொழிந்து விட்டேனோ விதுரரைப் போலே,

தாய்க் கோலம் செய்தேனோ அநசூயையைப் போலே,

தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே,

மூன்று எழுத்து உரைத்தேனோ க்ஷத்ரபந்துவைப் போலே,

முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே,

அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே,

அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே,

‘அவன் தெய்வம்’ என்றேனோ மண்டோதரியைப் போலே,

‘அகம் வேத்மி’ என்றேனோ விசுவாமித்திரரைப் போலே

‘அநு யாத்ரம்’ செய்தேனோ அணிலங்களைப் போலே,

அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே,

ஆயுதங்கள் ஈந்தேனோ அகத்தியரைப் போலே,

கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே,

‘அனுப்பி வையும்’ என்றேனோ வசிஷ்டரைப் போலே,

மண் மலரை இட்டேனோ குருவநம்பியைப் போலே,

‘மூலம்’ என்றழைத்தேனோ கஜராஜனைப் போலே,

வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே,

வழியடிமை செய்தேனோ இலக்குவனைப் போலே,

அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாள் போலே,

இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே,

இனியதொன்று வைத்தேனோ சபரியைப் போலே,

இங்குமுண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே,

இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே,

காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே,

கண்டு வந்தேனென்றேனோ திருவடியைப் போலே,

இரு கையும் விட்டேனோ திரௌபதையைப் போலே,

அனுகூலஞ் சொன்னேனோ மாலியவானைப் போலே,

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே,

தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே,

 

 

இப்படி நீண்டு சென்றது அவளது பட்டியல்! 81 பேரைச் சொல்லி அவள் முடித்தாள்.

 

பின்னர் இராமானுஜாசார்யரை நோக்கி அவள் பணிவுடன் கேட்டாள்: “ இப்படிப்பட்ட உயர்ந்தோர் வாழும் ஊர் அல்லவா திருக்கோளூர். இங்கிருக்க இப்படிப்பட்ட தகுதியல்லவோ வேண்டும். எனக்கு ஒன்று கூட இல்லையே! ஆகவே தான் நான் வெளியூர் செல்லப் போகிறேன்” என்றாள் அவள்.

இப்படி ஒரு பெரும் ஆன்ம ஞானப் பட்டியலை அறிந்து அதைத் தான் அடைய வேண்டும் என்ற அவாவுவது ஒன்றே பெரும் தகுதி அன்றோ – திருக்கோளூரில் வசிக்க!

அது போதாதா என்ன?

 

ஆசார்யரின் கருணை வெள்ளம் அவள் மீது  பொங்கி வழிந்தது.

புன்முறுவல் பூத்தார்.

“இவ்விடத்திலேயே இரு” என்று மட்டும் சொன்னார்.

அவர் சொன்ன வார்த்தையின் பொருளை உணர்ந்து கொண்ட அந்த மாதரசி அவரது அனுக்ரஹத்தைப் பெற்றதைப் பெரும் பேறாக எண்ணினாள்.

திருக்கோளூரிலேயே தங்கி விட்டாள்.

 

 

குறிப்பு : விசுவாமித்திரரின் நான் அறிவேன் என்பதற்குப் பொருள் – அஹம் வேத்மி.

அணில் கூடப் போனது அல்லவா, அது தான் அநு யாத்ரம் – ஒரு பயணத்தில் கூடவே செல்லுதல்!

மூலம் என்பது கஜேந்திரன் ஆதி மூலமே என்று அழைத்தது.

 

3

பெண்களுக்கு ஆன்ம ஞானம் லபிக்காது என்று சொல்வதெல்லாம் பொய்.

பேரருள் பெற்ற பெண்மணிகளைப் பற்றிய அருமையான சரித்திரங்கள் நமது இதிஹாஸ, புராணங்களில் உள்ளன.

இராமானுஜாசார்யரைச் சந்தித்த புனிதவதியின் சரித்திரமும் நவீன கால வரலாற்றில் ஒன்று.

இங்கு 81 வரிகளில் 30 மட்டுமே தரப்பட்டுள்ளன.

இதை ‘ வைணவம்’ என்ற கட்டுரையில் படித்தேன்.(கட்டுரையாளர் பெயர் ‘ஓரன்பன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது)

வெளியான இதழ் : பழைய தமிழ்ப் பத்திரிகை: “ஆனந்த போதினி”.

1914ஆம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பாடல் வெளியான இதழ் பிரபவ வருடம் ஐப்பசி மாதம் தொகுதி – 13 பகுதி – 4 பக்கம் 161  1927ஆம் வருடம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியிட்ட இதழ்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல்வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

***

 

 

 

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள் (Post No.4634)

Date: 19 JANUARY 2018

 

Time uploaded in London- 6-39 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4634

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நகைச்சுவையே நல்ல மருந்து!

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள்!

 

ச.நாகராஜன்

 

1

நகைச்சுவை உணர்வு இருந்தால் தான் இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைச் சீருடனும் சிறப்புடனும் இருக்குமாறு அமைத்துக் கொள்ள முடியும்.

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள்!

 

நல்ல நல்ல நகைச்சுவை புத்தகங்களைப் படித்தல், ஜோக் புத்தகங்களை வாங்கிச் சேகரித்து வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது படித்து மகிழ்தல், நல்ல ஜோக்குகளை பத்திரிகைகளிலிருந்து எடுத்து சேகரித்தல் போன்றவற்றால் ஒரு ஜோக் களஞ்சியம் எப்போதும்ச் நம்மிடம் இருக்கும்.

எனது ஜோக் களஞ்சியத்திலிருந்து சில உதிரிகளை இங்கு உதிர்த்து விடுகிறேன் – படித்து மகிழ!

 

நகைச்சுவையில் பல ரகம் உண்டு.

இதைப் பற்றி மிகத் தீவிரமாக் ஆய்ந்து எத்தனை வகை என்று கூறும் அறிஞர்களும் உண்டு.

 

இப்போது நாம் பார்க்கும் நகைச்சுவை என்ன வகை என்பதைப் படித்து முடித்த பின்னர் நீங்களே கூற முடியும்.

2

க்ரிமால்டி என்பவர் உலகின் மிகச் சிறந்த காமடியன். அவர் ‘ஷோ’க்களுக்குச் சென்று சிரிக்காமல் திரும்ப வரவே முடியாது.

அவரைப் பற்றிய் ஒரு ஜோக் இது!

 

There is a famous story told of Grimaldi, a well known comedian.

He went to consult a famous doctor, asking for some cure for acute melancholia.

The doctor suggested: “Go, and see Grimaldi.”

“Alas! I am Grimaldi” replied the patient.

 

3

A one –eyed doctor greeted a patient with “How are you?”

“As you see,” replied the latter.

“Then”, said the doctor, “If you are as I see, you are half dead.”

 

4

A beautiful girl was attending the lectures of a Greek philosopher. A grain of dust flew into her eye.

She begged the professor’s aid for its removal and as he stooped to the gallant task some one cried, “Do not spoil the pupil.”

 

 

 

5

When Dr Barton Warren was informed that Dr Vowel was dead, he exclaimed, “What! Vowel dead? Well, then heaven it was neither you nor I.”

 

 

6

Burke, when pressed by a shopkeeper for the payment of a bill, or for the interest at least, if not for the principal, produced a masterpiece.

“Sir”, he said, “it is not my principle to pay the interest, or my interest to pay the principal.”

 

7

Hurrying to office a busy executive was pestered by his wife to say what time he would be home.

About 7 or 8 or may be 9, he muttered.

“And what is the occasion that leaves you in the such doubt about your forward movements?”

“A meeting of the Society for Long Range Planning.”

 

 

8

A contractor wanted a favour from a Government official.

He tried to offer a small token of appreciation.

He offered the official a nice foreign sports car.

The official bristled and said he could not accept such a gift as it would be a bribe.

The contractor said, “Would it be all right if I sold you the car?”

The official asked for how much.

The contractor said,”One Hundred rupees.”

“The official promptly replied : “in that case, I will take two.”

 

9

ஜோக்குகளைச் சேர்த்து அவ்வப்பொழுது ரசியுங்கள் – சிரித்து மகிழ!

குறிப்பு:  மேலே உள்ளவற்றில் 2 முதல் 6 முடிய : Sun 24-7-1993 இதழில் Inder Mohan Puri  அளித்த ஜோக்குகள்.

7 – ரீடர்ஸ் டைஜஸ்ட் ஜனவரி 1974 இதழில் வந்தது.

8 – ஹிந்து 12-1-1998 தேதியிட்ட இதழில் திரு எஸ். கிருஷ்ணன் அளித்த ஜோக்!

 

 

10

இது போல லட்சத்திற்கும் மேற்பட்ட ஜோக்குகளை சேகரித்துள்ள ஒருவரை எனக்குத் தெரியும்!

அவர் தான் எனது அண்ணன் திரு S.சீனிவாசன், அசோக் நகர், சென்னை.

 

வீடு முழுவதும் ஜோக் புத்தகங்கள்! போதாததற்கு தடி தடியான் ஜோக்குகளை ஒட்டியுள்ள  கணக்கற்ற வால்யூம்கள்!

சிரித்துச் சிரித்து மகிழலாம்!

***

 

எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன கிடைக்கும்? மநு தரும் அதிசய தகவல்! (Post.4632)

 

Written by London Swaminathan 

 

Date: 18 JANUARY 2018

 

Time uploaded in London  7-54 am

 

 

 

Post No. 4632

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

மநு நீதி நூல்- Part 11

எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன

கிடைக்கும்? மநு தரும் அதிசய  தகவல்! (Post.4632)

மநு நீதி நூல் இரண்டாம் அத்யாயம் தொடர்ச்சி

 

163.பிராமணர்கள் வில்வம் அல்லது பலாச மரத்தால் ஆகிய தண்டத்தையும் (கையில் வைத்திருக்கும் குச்சி), க்ஷத்ரியர்கள் ஆல், கருங்காலியால் ஆகிய தண்டத்தையும், வைஸ்யர்கள் அத்தி, இரளி ஆகிய தண்டத்தையும் வைத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டில் ஒரு தண்டம் மட்டுமே இருக்கலாம்.. (2-45)

164.தடியின் அல்லது குச்சியின் உயரம் பிராமணன், க்ஷத்ரியன், வைஸ்யன் ஆகியோருக்கு தலை, நெற்றி, மூக்கு அளவில் இருக்க வேண்டும்.

 

165.இந்த குச்சிகள் வடுக்கள் இல்லாததாகவும், கோணல் இல்லாமலும், அழகானதாகவும், தீயினால் கருகாததாகவும், பார்ப்போருக்குப் பயம் ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும். மேலும் அந்தந்த மரத் தோலுடன் இருக்க வேண்டும்.

 

166.அவரவர்க்குரிய தண்டத்துடன் புறப்பட்டு, சூரியனை நமஸ்கரித்து, அக்னியை (தீ) வலம் வந்து அவரவர்களுக்குரிய கோஷங்களுடன் பிச்சை கேட்க வேண்டும்.  இனி சொல்லப் போகிற விதிப்படி பிச்சை கேட்க வேண்டியது.

 

  1. பிராமணன் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்றும், க்ஷத்ரியன் பிக்ஷாம் பவதி தேஹி என்றும், வைஸ்யன் தேஹி பிக்ஷாம் பவதி என்றும் சொல்லி பிச்சை கேட்க வேண்டும் (Permutation combinations!)

168.பூணூல் போட்டவுடன் எடுக்கும் முதல் பிச்சையை தாயிடம், அல்லது அவளுடைய சஹோதரிகளிடம், அல்லது தனது சொந்த சஹோதரியிடம் செய்ய வேண்டும். இவர்கள் இல்லாத பட்சத்தில் அந்த மாணவன் மீது அன்புடையோரிடம் எடுக்க வேண்டும்.(2-50)

 

169.இவ்வாறு மூன்று பேரிடம், போதுமான அளவு வாங்கிய பின்னர், அதை குருவுக்கு நிவேதனம் செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து ஆசமனம் செய்துவிட்டுப் புசிக்க வேண்டும்.

 

  1. ஆயுளை விரும்புபவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை (புகழ்) விரும்புபவன் தெற்கு முகமாகவும், சம்பத்தை (செல்வம்) விரும்புபவன் மேற்கு முகமாகவும் சத்தியத்தை விரும்புபவன் வடக்கு முகமாகவும் அமர்ந்து சாப்பிடுக.

 

171.இரு பிறப்பாளன் (மூன்று வருணத்தார்) தினமும் கைகால் கழுவி, உணவைப் பூஜித்துவிட்டு, பரிசேசனம் செய்து அன்னத்தை உண்ண வேண்டும்; பின்னர் ஆசமனம் செய்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்

(பரிசேசனம்+ மந்திரம் சொல்லி நீரால் அன்னத்தைச் சுற்றுதல்.

ஆசமனம்; கையில் உளுந்து மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து மந்திரம் சொல்லி உண்ணல்).

 

 

172.தினமும் உண்ணும் உணவு இறைவனின் வடிவம் (பரப் பிரம்ம ஸ்வருபம்) என்பதால் உணவை நிந்திக்கக்கூடாது. அதைப்போற்றிப் புகழ்ந்து, பார்த்து, சந்தோஷத்துடன் உண்ண வேண்டும்.

 

173.அன்னத்தைப் பூஜித்து உண்டால் தைரியமும் உணவின் சத்தும் (பலன்) கிடைக்கும்;  இல்லாவிடின் இது அழிந்துபோகும்

 

174.தான் உண்ட மிச்சத்தை எவனுக்கும் இடக்கூடாது. இரவும் பகலும் மட்டும் இரண்டே முறைதான் சாப்பிடலாம். அதிகமாகப் புசிக்ககூடாது; அதிகமாக உண்பது இக, பர லோக நன்மைகளைத் தராது.

எனது கருத்துகள்:

 

மநு ஒரு பெரிய உளவியல் நிபுணன் (great Psychologist). மநு ஒரு பெரிய விஞ்ஞானி- அறிவியல் வித்தகன் (great scientist); மநு ஒரு டாக்டர் (physician). எப்படி?

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என்றனன் வள்ளுவன்.

 

மூன்று வர்ணத்து பாலகர்களும் முதலில் பிச்சை எடுப்பது அம்மாவிடமோ சின்னம்மாவிடமோ அல்லது பெரியம்மாவிடமோ, அவர்கள் வராவிடில் அல்லது அப்படி உறவுகள் இல்லாவிடில் சொந்த சஹோதரியிடமோ செய்ய வேண்டும். அவர்களும் பூணூல் விழாவுக்கு வரவில்லையென்றால் உன்னிடம் அன்பு பாராட்டுவரிடம் முதல் பிஷையை வாங்கிக்கொள்! என்ன அற்புதமான அறிவுரை!!

 

பச்சிளம் பிராஹ்மணப் பையன், அல்லது க்ஷத்ரியப் பையன் அல்லது வைஸ்யப் பையன் முதல் நாளிலேயே தெருவில் சென்று பிச்சை எடுத்து, அவர்கள் சீ’, போ!’ என்று சொல்லிவிட்டால் அந்த இளம் உள்ளம் எவ்வளவு வருந்தும்? இந்த அற்புதமான உண்மை தெரிந்த அன்பே உருவான மாபெரும் ரிஷி மநு!

 

மஹா அற்புதம்; அவர் ஒரு மாபெரும் ஸைகாலஜிஸ்ட் (Psychologist).

 

எந்த திசையில் அமர்ந்து எந்த திசையை நோக்கி உணவு அருந்தினால் என்ன கிடைக்கும் என்றும் சொல்கிறார். அவர் ஒரு பெரிய டாக்டர். இன்னும் விஞ்ஞானம் கண்டு பிடிக்காத விஷயங்களை அவர் ஞான த்ருஷ்டியில் கண்டு நமக்கு வழங்கியுள்ளார். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நியூ ஸைன்டிஸ்ட் அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் (New Scientist or Scientific American) பத்திரிக்கையில் “திசையும் உணவும்” என்று ஆராய்ச்சிக் கட்டுரை வரும்போது நாம் வியப்போம்; அன்றே சொன்னார் எங்கள் மநு என்று!

மநு ஒரு பெரிய பொடானிஸ்ட் (Botanist); அவரது தாவரவியல் அறிவு வியக்கத்தக்கது. மரம் வளர்ப்பது பற்றியும், மரங்களை வெட்டுவது பாவம் என்றும் வரப்போகும் அத்தியாயங்களில் விளம்புவார். இப்போது எந்த ஜாதிக்காரன் எந்த குச்சி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மொழிவது அவர்தம் தாவரவியல் அறிவுக்குச் சான்று

 

 

இங்கே மேலும் ஒரு கருத்தையும் சுட்டிக் காட்டுவேன். மநு தர்ம சாஸ்திரம் 2200 ஆண்டுகளுக்கு முந்தையது எனது மேலை நாட்டாரும், அவர்தம் அடிவருடும் அரை வேக்காடுகளும் சொல்லும்.

 

ஆனா மநுவோ மூன்று ஜாதியினரும் பூணூல் போடுவது, கையில் தண்டம் வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது, ஒவ்வொருவரும் வெவ்வேறு வாக்கியங்களுடன் பிக்ஷை எடுப்பது,  பற்றி எல்லாம் பகர்கின்றார். இந்த வழக்கங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் கூட இருந்ததில்லை. அப்படி இருந்தால் அது புத்தர், மஹாவீரர் கதைகளில் வரும்; அவர்கள் க்ஷத்ரியர்கள்; சம்ஸ்கிருத நாடகங்களில் வந்திருக்கும்.

முன்னரே சொன்னேன்; மநு ஸரஸ்வதி நதியின் முழு நீளம் பற்றிப் பேசுகிறார். மனைவியை எரிக்கும் உடன்கட்டை வழக்கம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. மேலும் ரிக் வேதத்தில் பல மநுக்களைப் பற்றிய குறிப்புகள் உள. ஆகையால் ஒரிஜினல் மநு நீதி நூல் மிகவும் பழையது; அதில் பல இடைச் செருகல்கள் நுழைக்கப்பட்டுள்ளன. அதுவே இன்று நம் கைகளில் தவழ்கிறது என்பது என் வாதம்.

மேலும் பிராமணர்கள் இன்று அரச மரக் குச்சியையே கையில் வைத்துப் பூணூல் கல்யாணம் நடத்துகின்றனர். மற்றவர்கள் நடத்துவதும் இல்லை. இந்தக் குச்சி, பிச்சிசை எடுக்கும் முறை, வேதக் கல்வி ஆகியனவும் அவர்களிடையே இல்லை.

 

இவை எல்லாம் எந்தக் காலத்தில் விடுபட்டது? என்பதை ஆராய்ந்தால் மநுவின் பழமை விளங்கிவிடும்!

 

இன்று டெலிவிஷன் பார்த்துக்கொண்டே உண்ணுவதால் ஏற்படும் தீங்குகளை பிரபல ஹிப்னாடிஸ்ட் (Hypnotist) பால் மக்கென்னா சொன்னதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன். உணவை வணங்க வேண்டும்; புகழ வேண்டும்; சந்தோஷத்துடன் கண்ணால் பார்த்து உண்ண வேண்டும்– இவை எல்லாம் இன்று எடையைக் குறைக்க நவீன விஞ்ஞானம் சொல்லும் உத்திகள்; இதைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மநு சொல்லிவிட்டார்! மேலும் உணவை நிந்திக்கக் கூடாது என்பதால் தாயையும் மனைவியையும் சமையல் அறையில் ஏசும் வழக்கமும் அறுபட்டுப் போகும். மநு மாபெரும் ஸைகாலஜிஸ்ட் (Psychologist) ; பெரிய விஞ்ஞானி! எதைச் சாப்பிட வேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று சொல்லும் உணவியல் நிபுணன் (Dietician). மாணவர்கள் அதிகம் புசிக்கக் கூடாது; அளவோடு உண்டால்தான் மூளையில் பாடங்கள் பதியும் என்கிறான்; இது மேல் உலகிலும் உதவும் என்பான்.

இப்போது நாம் ஏற்றுக் கொண்ட நவீன மநு– அம்பேத்கரின்– அரசியல் சட்டத்தையே பார்லிமெண்ட் பலமுறை திருத்திவிட்டது! ஆகவே ஒரிஜினல் மநுவும் பல முறை திருத்தப் பட்டிருக்கும். இந்த மநு நூலின் சில ஸ்லோகங்களை மட்டும் எடுத்துக் காட்டும்- திராவிடங்களையும் மார்கஸீயங்களையும் பார்த்து அழுவதா சிரிப்பதா?

 

இரண்டாயிரத்து அறுநூற்று எண்பைத்தைந்து ஸ்லோகங்களில் சுமார் 200 மட்டுமே கண்டுள்ளோம்; இனியும் வரும்!!! பல வியப்பான விஷயங்கள் வரும்!!!

TAGS—உணவு, திசை, தண்டம், குச்சி, பிராமண, க்ஷத்திரிய, வைசிய, பூணூல்

–தொடரும்………………

சுவத்துக் கீரையை வழித்துப் போடடி……… பழமொழிக் கதை (Post No.4623)

Written by London Swaminathan 

 

Date: 16 JANUARY 2018

 

Time uploaded in London  7-54 am

 

 

 

Post No. 4623

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சுவத்துக் கீரையை வழித்துப் போடடி, சுரணை கெட்ட வெள்ளாட்டி – தமிழ்ப் பழமொழிக் கதை

 

((இதை ஷேர் SHARE செய்யலாம்; ஆனால் எழுதியவர் பெயரையோ, பிளாக் BLOG பெயரையோ நீக்கக் கூடாது; அப்படி நீக்கினால் நீங்கள் தமிழை அழித்த பாவத்துக்கு உள்ளாவீர்கள்))

 

1886 ஆம் ஆண்டு நடேச சாஸ்திரி என்னும் பெரியார் திராவிட பூர்வ காலக் கதைகள் என்ற புத்தகத்தில் 49 கதைகளை அக்காலத் தமிழில், அக்கால வழக்கப்படி ஜாதி, மதப் பெயர்களுடன், தான் கேட்டவாறு வெளியிட்டுள்ளார். அதிலிருந்து ஒரு பழமொழிக்கதையை புதுத் தமிழில் புதுக்கி வரைவேன்.

 

இதை ‘மூன்று செவிடன் கதை’ என்றும் வழங்குவர்.

 

ஒரு ஊரில் ஒரு மஹா செவிடன் இருந்தான். அவன் மனைவி, அவனைவிடச் செவிடு; அணுகுண்டு வெடித்தாலும் காதில் விழாது! இவர்கள் வீட்டில் ஒரு வழக்கம் உண்டு; திங்கள் என்றால் கீரை மசியல், செவ்வாய் என்றால் வாழைக்காய் கறி, புதன் என்றால் கத்தரிக்காய் பொடித்துவல், வியாழன் என்றால் பூசணிக்காய் கூட்டு … என்று. இருவருக்கும் அவ்வளவு ஞாபக சக்தி. நாள் தவறாமல் அதற்குரிய கறி, கூட்டு!

 

ஒரு நாள் நமது செவிட்டுக் கதா நாயகன் சாப்பிட அமர்ந்தான். அன்றும் கீரை மசியல்; அதற்கு முதல் நாளும் கீரை மசியல்! சூரியன் கிழக்கே உதிக்கத் தவறினாலும் சமையல் ‘மெனு’ MENU மாறாத வீட்டில் பூகம்பம்! வந்ததே கோபம்; ஏனடி! இன்றும் கீரை மசியல்? உனக்கு ஸ்மரணை தப்பிவிட்டதா? என்று பல சுடு சொற்களைப் பெய்து

வசை மாரி பொழிந்தனன்; அவளும் கணவன் சொற்களைக் குறிப்பாலும், உதட்டசைவாலும் ஊகித்து விளக்கம் கொடுத்தாள்; அடி அசடே! என்னை எதிர்த்துவேறு பேசக் கற்றுக் கொண்டு விட்டாயா என்று மேலும் சீறினான். வீட்டை வீட்டு வெளியேறினன்; அப்படிச் செல்லும் முன், நமது கதாநாயகன் இலையில் பரிமாறப்பட்ட கீரையை எடுத்து சுவரில் எறிந்தனன்.

முதல் காட்சி முடிந்தது;

இரண்டாவது காட்சி எங்கு தெரியுமா? ஊர் மன்றத்தில்! அவன் கோபக் கனலோடு ஒரு ஆல மரத்தடியில் உட்காந்தனன்; அங்கே இவ்விருவரையும் விட மஹா மஹா செவிடு ஒன்று வந்தது; வாலறுந்த ஒர் கன்றுக் குட்டியுடன் வந்த அந்த இடையன், “ஐயா, என் மாடு தொலைந்துவிட்டது;கன்று மட்டும்தான் இருக்கிறது; இதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மாட்டைப் போய்த் தேடிக் கண்டு பிடிக்கிறேன்” என்று செப்பினன். அவன் நுவன்றது நமது கதாநாயகனுக்கு வேறு எண்ணத்தை உண்டாக்கியது; காதில் விழாததால் வந்த குறை அது. கன்றுக் குட்டியின் வாலை அறுத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டி, காம்பன்சேஷன் COMPENSATION (நஷ்ட ஈடு) கேட்கிறான் என்று அவன் நினைத்தான். ஆகவே அவன் சொன்னான்:

சீ, சீ; எனக்கும் இந்தக் கன்னுக்குட்டிக்கும் சம்பந்தமே இல்லை; நான் எப்படி வாலை அறுக்க முடியும்? என்று அவன்

 

அவன் கைகளை ஆட்டி வாதாடியதை இடையன் செவிடன் தவறாகப் புரிந்தனன்; ஓஹோ மாடு இந்தப் பக்கம் போனதாகச் சொல்கிறாயா: நான் மட்டும் மாட்டைக் கண்டுபிடித்தால் உனக்கு இந்தக் கன்றுக் குட்டியையே பரிசாக அளிப்பேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டனன். நமது கதா நாயகனோ பயந்து உளறத் துவங்கினன்; ஐயஹோ! ஊர்ப் பஞ்சாயத்துத் தலவரை அழைத்து பஞ்சயத்துச் செய்யப் போகிறாயா? Please! ப்ளீஸ் வேண்டாம் என்று கெஞ்சினான்.

 

இதை எல்லாம் ஒரு மஹா போக்கிரி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது; இரண்டும் செவிடு; ஒன்று சொல்லுவது மற்றொன்றுக்கு விளங்காமல் பயந்து நடுங்குகிறது. நாம் இதில் நல்ல ஆதாயம் அடையலாம் என்று நினைத்து. இரண்டு பேரிடமும் போய் ஒருவனைத் தனியாக அழித்துச் சென்று உரத்த குரலில் டமாரம் அடித்தான்.

 

இதோ பார்! நீ கன்றுக் குட்டியின் வாலை அறுத்ததாகக் குற்றஞ்சாட்டி ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்ட அந்த மாடு மேய்க்கும் இடையன் முயல்கிறான்; நீ ஓடி விடு; நான் அவனை சமாளிப்பேன் என்றான்.

 

அடுத்தபடியாக அந்த இடையனிடம் சென்று, நீ கவலைப் படாதே; முதலில் போய் மாட்டைத் தேடிக் கண்டுபிடி; அவன் கன்று போதாது; கூடுதல் பணமும் வேண்டும் என்கிறான். நீ போய்த் திரும்பி வருவதற்குள் நான் அவனை சமாதானம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி அவனையும் ஒட்டினான்.

 

இருவரையும் வெவ்வேறு திசையில் ஓட்டிய பின்னர் அந்தக் கன்றுக்குட்டியுடன் கம்பி நீட்டினான்.

காட்சி மூன்று:

 

அவன் விட்டிற்குத் திரும்பி வருவதற்குள் அவன் மனைவி சுவற்றில் வழிந்த கீரையை எல்லாம் சுத்தப் படுத்திவிட்டு, மிகுந்த உணவைச் சாப்பிட்டு விட்டு, சட்டி முதலிய பாத்திரங்களை அலம்பிவிட்டு, “என் பிராண நாதா! எங்கே போனீர்? நாளை முதல் நாள்தோறும் MENU ‘மெனு’வை மாற்றாமல் சமைப்பேன்; இது ஸத்யம்” என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பசியுடன் வீடு திரும்பிய கதா நாயகன் சாப்பிடும் பலகையில் அமர்ந்து சாப்பாடு போடு என்றனன்; இவளதைக் குறிப்பால் உணர்ந்து ஜாடையாகச் சொன்னாள் –எல்லாம் காலி என்று; அலம்பிவைத்த பாத்திரங்களையும் கவிழ்த்துக் காட்டினள்;

 

அவன் சொன்னான்,

அது கிடக்கட்டும் ஒரு புறம்; சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி என் சுரணை கெட்ட வெளாட்டி என்று.

 

இடதுதான் இப்பழமொழி உருவான மூன்று செவிடன் கதை!

 

தமிழில் 20, 000 பழமொழிகள் உள. இவற்றின் பின்னால் உள்ள பல கதைகளைப் பல்வேறு பழைய– நூறாண்டுக்கும் முந்தைய—- நூல்களில் இருந்து நுவன்றேன்; மேலும் பல விளம்புவேன்

-சுபம், சுபம்—

 

TAGS:  சுவற்றுக், சுவத்து, கீரை, வெள்ளாட்டி, பழமொழிக் கதை, மூன்று செவிடன்

கண்ணதாசனின் நல்- எண்ணதாசன் நான்! (Post No.4622)

Date: 16 JANUARY 2018

 

Time uploaded in London- 5–59 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4622

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

இணையிலா இந்து மதம்!

கண்ணதாசனின் நல்- எண்ணதாசன் நான்!

 

ச.நாகராஜன்

 

1

சென்ற நூற்றாண்டின் பெருமை தரும் கவிஞர்களுள் ஒருவர் கண்ணதாசன்.

 

அவருடைய நல்லெண்ணதாசன் நான்.

நல் – எண்ணதாசன் நான்!

 

அவர் வாழ்க்கையில் அனைத்தையும் கண்டவர்.

கடவுள் இல்லை என்ற கயவர் கழகத்திலும் இருந்தார்.

கடவுள் அனுபவத்தைத் தானே நேரிலும் உணர்ந்தார்.

இதை நான் சொல்லவில்லை.

 

அவரே சொல்கிறார் இப்படி ‘சுய சரிதம்’ என்னும் கவிதையில்!

இந்தக் குட்டிச் சுய சரிதம் ஏழு கண்ணிகள் கொண்டது.

கண்ணதாசனின் நல்லெண்ணதாசர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று:

 

இதோ கவிதை:

ஆசை வெட்கம் அச்சம் துன்பம்

பாசம் பற்று பதவி உதவிக்

காதல் கடமை கவனம் மறதி

ஈதல் பெறுதல் ஏற்றம் இறக்கம்

எத்தனை எத்தனை படிகளில் ஏறி

இத்தனை வயதை எய்தி விட்டேன் நான்.

 

இது முதல் கண்ணி. இதை அவர் 1978இல் கல்கியில் ‘கண்ணதாசன் பக்கத்’தில் ஒரு வாரம் எழுதினார். அப்போது அவருக்கு வயது 48 தான்!

 

 

மேலே பார்ப்போம்:

கடவுளை ஒருநால் கல்லென் றவனும்

கல்லை ஒரு நாள் கடவுளென் றவனும்

உண்டென் றதனை இல்லையென் றவனும்

இல்லையென் றதனை உண்டென் றவனும்

உயர்பெரும் தரணியில் ஒருவன் ஒருவனே

நானே என்பதை நன்றாய் அறிவேன்.

 

 

எப்படிப்பட்ட ஒரு சுய விமரிசனம் பாருங்கள்.

சத்திய விமரிசனம்! சத்திய சோதனையில் விளைந்ததோ!

 

அவர் பட்ட இன்ப துன்பங்களைப் பற்றிச் சொல்கிறார் மூன்றாவது கண்ணியில், இப்படி:

 

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்.

பார்த்தது கோடி பட்டது கோடி

சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்!

 

இந்த அனுபவம் உதிர்த்த மொழிகள் ஆயிரம். அவை நல்லெண்ணத்தில் தோன்றியவை.

அதனால் தான் அந்த நல்லெண்ணதாசன் ஆகி விட்டேன் நான்!

 

கடைசிக் கண்ணியில் அவர் கூறுகிறார்:

காலம் வருமுன் காலனும் வருமுன்

காணும் உறவினர் கதறியே அழுமுன்

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள்

எழுதி எழுதி என்னையான் ரசிப்பேன்

யானே யானாய் எனக்குள் அடங்கினேன்

வானும் மண்ணும்என் வாழ்வைஎன் செய்யும்?

 

 

ஆலம் விழுதாய் ஆயிரம் விழுதுகள் எழுதி எழுதிக் குவித்தார் இல்லையா! அவை அற்புதமானவை. அதனால் தான் அவரது நல்லெண்ணதாசன் நான்.

அவரது நல் எண்ணங்களைப் பரப்பும் தாசர்கள் கோடி கோடியாகப் பெருக வேண்டும்!]

2

அவரது அற்புதமான எழுத்துக்களில் அவர் ‘ நான் ஏன் ஒரு ஹிந்து’ என்பதை விளக்குகிறார்.

அது அனைத்து ஹிந்து மக்களும் படிக்க வேண்டிய ஒன்று.

அதை அப்படியே தருகிறேன்.

அதைப் படிக்கும் போது நீங்களும் கண்ணதாசனின் நல்லெண்ணதாசன் ஆகி விடுவீர்கள் – இதுவரை ஆகாமல் இருந்தால்.

கீழே இருப்பது அவரது சொற்கள்!

 

 

3

நான் ஒரு ஹிந்து

கவிஞர் கண்ணதாசன்

நான் ஒரு ஹிந்து.

 

ஹிந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

 

நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன். ஆனால் ஹிந்துவாகவே வாழ விரும்புகிறேன்.

 

 

நான் கடவுளை நம்புகிறேன். அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன். அந்தக் கடவுளைக் கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.

 

ஆன்மா இறைவனோடு ஒன்றி விடும் போது அமைதி ஹிருதயத்தை ஆட்சி செய்கிறது.

 

நாணயம் சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

 

நேரான வாழ்க்கையை ஹிருதயம் அவாவுகிறது.

 

பாவங்களைக் கண்டு அஞ்சுகிறது.

 

குறிப்பாக, ஒரு ஹிந்துவுக்குத் தன் அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.

 

கடைசி நாத்திகனையும் அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.

 

 

‘என்னைத் திட்டுகிறவன் தான் அடிக்கடி என்னை நினைத்துக் கொள்கிறான். எனவே அவன் தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.

 

ஹிந்து மதத்தைப் போல் சகிப்புத் தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எங்கும் இல்லை.

நீ பிள்ளையாரை உடைக்கலாம். பெருமாள் நாமத்தை அழிக்கலாம்.மதச் சின்னங்களைக் கேலி செய்யலாம். எதை செய்தாலும் ஹிந்து சகித்துக் கொள்ளுகிறான்.

 

 

ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறப்பது போல் எண்ணி கொண்டு பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாத்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்தவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்?

 

கடந்த நாற்பது வருடங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லையே!

 

பாவப்பட்ட ஹிந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி அதை நம்புகிற அப்பாவிகளிடம் ரேட்டு வாங்கிச் சொத்து சேர்க்கும் ‘பெரிய’ மனிதர்களைத் தான் நான் பார்த்திருக்கிறேன்.

 

அவர்கள் பேசும் நாத்திக வாதம் அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல் வாழ்க்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.

 

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல, ஆரம்ப காலத்தில் இந்த நாத்திக வாதம் மிகவும் கவர்ச்சிகரமாகவே இருந்தது.

 

 

நடிகையின் ‘மேக்-அப்பை’க் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப் போல், அன்று இந்த வார்த்தை கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

 

அந்தக் கவர்ச்சி எனக்குக் குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே.

 

என்னை அடிமை கொண்ட கண்ணனும் ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமை கொண்டு, ஆன்மீக வெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.

 

 

அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறி விட்டது!

 

வேண்டுமானால் ‘பணத்தறிவில்’ முன்னேறி விட்டது என்று சொல்லலாம்.

 

உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர வென்றதாக இல்லை.

 

இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டிருக்கிறான்.

 

இந்த நாலரைக் கோடி மக்களில் நீங்கள் சலித்து எடுத்தாலும் நாலாயிரம் நாத்திகர்களைக் கூடக் காண முடியாது.

 

 

பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும் திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

சித்தம் பொய் சொன்னாலும் வேதம் பொய் சொல்வதில்லை. சித்தாந்தம் தவறக்கூடும்; வேதாந்தம் தவறாது.

 

வேதாந்தம் பரசுராமர் காலத்திலும் ஒன்று தான், ஆதி சங்கரர் காலத்திலும் ஒன்று தான், நமது காலத்திலும் ஒன்று தான்.

 

நமது மூதாதையர்கள் மாபெரும் மேதைகள். தெய்வ நம்பிக்கையின் மீதே சகல நியாயங்களையும் நிர்மாணம் செய்தார்கள்.

 

 

மனிதர்களின் எழுத்துக்களும் கருத்துக்களும் தோற்றுப் போன இடத்தில் தெய்வ நியாயமே தீபம் போல் எரிகிறது.

 

வெள்ளைக்காரனை நாம் விரட்டியது பாதி தூரம் தான். மீதி தூரம் அவனை விரட்டியது தெய்வமே.

 

அன்று பாரதப் போரை முன்னின்று நடத்திய கண்ணன், நமது பாரதப் போரையும் மறைந்து நின்று நடத்தினான்.

 

 

தேர்தல் வைப்பதும் வைக்காததும் ஒருவர் கையிலேயே இருந்த போது அவர் தேர்தலை நடத்துவானேன்? தோற்றும் போய் ஒதுங்குவானேன்?

 

மனிதன் வெளியில் நின்று விளையாடுகிறான். தெய்வம் மறைந்து நின்று விளையாடுகிறது! தெய்வத்தை நம்புகிறவன் தோற்றாலும் ஜெயிக்கிறான். நம்பாதவன் ஜெயித்தாலும் தோற்கிறான்.

 

 

இயக்கத்தின் கர்த்தா இறைவன். கருவி மனிதன்.

 

என் வீடு, என் வாசல், என் தோட்டம், எனக்கு வரும் கூட்டம், எனக்கு வரும் ஓட்டு, நான் அமரும் பதவி என்றெல்லாம் சிந்திப்பவனும் பேசுபவனும் மடையர்கள்!

 

நீ ஏறுகிறாய் என்றால் ‘இறைவன் ஏற்றி விட்டுப் பார்க்கிறான்’ என்று பொருள். இறங்குகிறாய் என்றால் ‘சிந்திக்க வைக்கிறான்’ என்று பொருள்.

 

உனது பெருமை கடவுளின் மகிமை. உனது சிறுமை கடவுள் உனக்குத் தரும் அடக்கம்.

 

 

நோக்கம் உன்னுடையது. ஆக்கம் அவனுடையது.

 

பகவான் சொன்னபடி, ‘மனிதன் மரத்திலிருந்து விழும் இலை. அது தண்ணீரில் விழுந்தால் கொஞ்ச நாட்கள் மிதக்கும். மாலையில் கட்டப்பட்டால் சாமியின் கழுத்துக்குப் போகும். அதிலும் சிக்காமல் இருந்தால் காற்றடிக்கும் திசையெல்லாம் அலையும். நெருப்பில் விழுந்தால் சாம்பலாகும்.’

 

‘எதிலே விழுவது’ என்பது இலையின் விருப்பத்தைப் பொறுத்ததல்ல.

 

 

ராதையின் கற்புக்குக் கண்ணனே சாட்சி. சீதையின் கற்புக்கு அக்கினியே சாட்சி. மானிட ஜாதி முழுமைக்கும் இறைவனே சாட்சி. சாட்சி இல்லாதவன் வழக்கு வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை

4

படித்து முடித்து விட்டீர்களா?

இந்த நல்- எண்ணங்களுக்கு கர்த்தா கண்ணதாசன். கண்ணதாசனின் நல்லெண்ண தாசன் நான்.

நீங்களும் தான் என்பது எனக்குப் புரிகிறது.

அடுத்த கட்டுரை: கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை!

விரைவில் மலரும்.

 

***