Written by London Swaminathan
Date: 20 JANUARY 2018
Time uploaded in London 18-13
Post No. 4641
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
அவர் சொன்னாரா? இவர் சொன்னாரா? எவர் சொன்னார்? QUIZ (Post No.4641)
- வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய்
- அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
- பால்புரை பிறை நுதற் பொலிந்த சென்னி
நீலமணிமிடற்று ஒருவன் போல
மன்னுக — பெரும!
- பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்
பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்
- எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழி வழியாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
- தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கடன் ஆவதுதான்
- அருள்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருள்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே
- வாதக்கால் ஆம்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவு ஆம்;
பேதப் பெருவயிறு ஆம் பிள்ளைதனக்கு!– ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேளூரர்
எந்தவினை தீர்ப்பார் இவர்?
- ஆரிய பூமியில் நாரியரும் நர
சூரியரும் சொலும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்- ஜய வந்தே மாதரம்
- அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
- எங்கெங்கும் காணும் சக்தியடா – தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா
(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)
ANSWERS
1.காளமேகம், தனிப்பாடல்கள், 2. கம்பன், கம்ப ராமாயணம் 3. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 4. இளங்கோ, சிலப்பதிகாரம், 5.பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 6.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 7. திருமூலர் எழுதிய திருமந்திரம், 8.காளமேகம், தனிப்பாடல்கள், 9.பாரதி, பாரதியார் பாடல்கள், 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் எழுதிய முதல் பாடல், பாரதியார் எழுதச் சொன்னவுடன் எழுதிய கவிதை