யார், யார், யார் அவர் யாரோ? தமிழ் இலக்கிய க்விஸ்/QUIZ (Post No.4536)

Written by London Swaminathan 

 

Date: 23 DECEMBER 2017 

 

Time uploaded in London- 16-24

 

 

Post No. 4536

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

யார் சொன்னார்? எதில் சொன்னார்?

1.கோபத்திலே நாடியிலே அதிர்ச்சியுண்டாம்

அச்சத்தால் நாடியெல்லாம் அவிந்துபோகும்

கவலையால்  நாடியெல்லாம் தழலாய் வேகும்

2.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்

வேறொன்றறியேன் பராபரமே

3.கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக

4.ஆணெல்லாம் காதலை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?

5.மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

 

6.சொல்லிலும் இலாபம் கொள்வர்

7.வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

8.என்று நீ அன்று நான் உன்னடிமை

  1. குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரன்
  2. தன்னைச் சிவமென்றறிந்தவனே அறிந்தான்; தூயதாகிய

நெஞ்சுடையவர்க்குத்தாமே சிவமாய்த்தோன்றுமன்றே

11.வடமொழியைப் பாணிணிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை, உல்கமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்

  1. இம்மென்னுமுன்னே எழுநூறும் எண்ணூறும்

அம்மெனவே ஆயிரம் பாட்டாகாதோ

  1. கவலயற்றிருத்தலே முத்தி
  2. முத்தமிழடைவினை முற்படுகிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

  1. பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்

திருப்பிலே யிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை

16.எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமாள்

  1. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

  1. பேசுவது மானம் இடைபேணுவது காமம்
  2. தேவர் குறளும் திருநான்மறைமுடிவும்

மூவர் தமிழும்  திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகமென்றுணர்

  1. திகடச் சக்கரச் செம்முகம் ஐந்துளான்

 

ANSWERS

1சுப்ரமண்ய பாரதி, 2. தாயுமானவர், 3. இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்), 4. சுப்ரமண்ய பாரதி, 5. இராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்), 6. சிவஞான முனிவர் (காஞ்சிபுராணம்- வணிகர்), 7. திரிகூட ராசப்ப கவிராயர், திருக்குற்றாலக் குறவஞ்சி, 8.தாயுமானவர், 9.குமரகுருபர சுவாமிகள், 10.சிவப்பிரகாச சுவாமிகள், 11.பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், 12.காளமேகப் புலவர், 13. சுப்ரமண்ய பாரதி,14.திருப்புகழ், அருணகிரி நாதர், 15.வரந்தருவார், வில்லிபாரதம், 16.சேக்கிழார், பெரியபுராணம், 17. மூதுரை, அவ்வையார், 18.கம்பன், கிட்கிந்தா காண்டம், 19. மூதுரை, அவ்வையார், 20. கந்த புராணம், கச்சியப்ப சிவாசாரியார்

 

–SUBHAM–

 

 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்- சாணக்கியன்! (Post No.4535)

Written by London Swaminathan 

 

Date: 23 DECEMBER 2017 

 

Time uploaded in London- 9-16 am

 

 

Post No. 4535

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

எல்லோருக்கும் தெரிந்த பழமொழி- ஆயினும்

நாம் அளவோடு சாப்பிடுகிறோமா? இல்லை;

அளவோடு பேசுகிறோமா? இல்லை

அளவோடு செலவழிக்கிறோமா? இல்லை;

அளவோடு FACEBOOK முகநூல், TV டெலிவிஷன், WHATSUP வாட்ஸப்பில் இருக்கிறோமா? இல்லை

 

அந்தக் காலத்திலேயே அளவு பற்றி அழகாகச் சொன்னான் சாணக்கியன்! அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்துதான்.

 

 

அதிரூபேண வை ஸீதா ஹ்யதிகர்வேன ராவணஹ

அதிதானம் பலிர்தத்வா சர்வத்ர வர்ஜயேத்

–சாணக்ய நீதி, அத்தீயாயம் 3, ஸ்லோகம் 12

 

 

பொருள்

சீதைக்கு அதிக அழகினால் ஆபத்து நேரிட்டது;

ராவணனுக்கு அதிக கர்வத்தால் ஆபத்து நேரிட்டது;

பலிச் சக்ரவர்த்திக்கு அதிக கொடையால் ஆபத்து நேரிட்டது.

 

ஷேக்ஸ்பியரும் AS YOU LIKE IT ஆஸ் யூ லைக் இட் என்ற நாடகத்தில் அழகு பற்றி எச்சரிக்கிறான்:

 

ROSALIND

Alas, what danger will it be to us,

Maids as we are, to travel forth so far?

Beauty provoketh thieves sooner than gold.

 

அழகு என்பது தங்கத்தை விட விரைவில் திருடர்களைக் கவர்ந்திழுக்கக்கூடியது- ரோஸாலிண்ட்

 

இதனால்தான் பெரியோர்கள் சொன்னார்கள்: அளவோடு நில்.

வள்ளுவனும் சொல்கிறான்:

மயில் தோகை எவ்வளவு மென்மையானது? அதை, வண்டியில் ஏற்றினாலும் அதற்கும் ஒரு அளவு உண்டு. உச்ச கட்ட பாரத்துக்கும் மேலாக ஒரு மயில் தோகையை ஏற்றினாலும் வண்டியின் அச்சு முறிந்து விடுமாம்! என்ன அற்புதமான உண்மை!

 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின் (குறள் 475)

 

 

பலிச் சக்ரவர்த்தி அதிக தானம் கொடுத்து அழிந்த கதையை நினைவிற்கொண்டு வள்ளுவனும் பாடுகிறான்:

 

உளவரை தூக்காத ஒப்புரவாண்மை

வளவரை வல்லைக் கெடும் (480)

பொருள்

ஒருவனிடம் உள்ள பொருளின் அளவைக் கணக்கிடாதபடி அவன் அதிக தானம் செய்தால்– உபகாரம் செய்தால்- அவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் தேய்ந்து போகும்;

 

( பலிச் சக்ரவர்த்தி நாட்டையும் மன்னர் பதவியையும் இழந்தான்)

இன்னும் ஒரு குறளில் மேலும் தெளிவாக உரைக்கிறார்:

 

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும் (குறள் 479)

 

பொருள்:

ஒருவனின் வருமானத்துக்கு ஏற்ப வாழாதவன் வாழ்க்கை , முதலில் பகட்டான காட்சியைத் தரும் பின்னர் ஒன்றுமில்லாமற் (புஸ்வாணம்) ஆகிவிடும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும்!

 

யம கண்டமே ஏறிப் பாடுவேன், அதற்குத் தயாரா? புலவரின் சவால்! (Post No.4525)

Date: 21  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-54 am

 

Wriien by S NAGARAJAN

 

Post No. 4525

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

தமிழ் இன்பம்

அரிகண்டம் ஏறிப் பாடத் தயாரா? யம கண்டமே ஏறிப் பாடுவேன், அதற்குத் தயாரா? அதிசயத் தமிழ்ப் புலவரின் சவால்!

 

ச.நாகராஜன்

 

1

தமிழ் மொழியின் ஆற்றல் எல்லையற்றது என்றால் அதன் அருமை பெருமைகளை உணர்ந்து அந்த ஆற்றலின் மூழு வீச்சையும் தம் கவிதைகளிலே காட்டிய புலவர்களின் பெருமையும் எல்லையற்றது தான்.

 

அவ்வப்பொழுது காலத்திற்கேற்றவாறு தமிழன்னை கண்ட புதல்வர்கள் ஏராளம். அவர்கள் கவிதைகளின் அருமை ஒரு புறம் இருக்க, அதை அவர்கள் எப்படிப்பட்ட அபாயத்தையும் எதிர்கொண்டு பாட அஞ்சவில்லை என்பது உளத்தை உருக்க வைக்கும்; பிரமிக்க வைக்கும் ஒரு செய்தி.

 

 

இப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலையில் உலகில் வேறு எந்த ஒரு மொழியிலும் ஒரு கவிஞர் தன் திறமையைக் காட்டியிருக்காரா என்றால் இல்லை என்று தான் பதில் சொல்ல வேண்டும்.

 

 

கவி காளமேகம் என்று மிகவும் பிரபலம் அடைந்திருந்த புலவரைப் பற்றிய செய்திகளும், அவரது கவிதைகளும் நம்மை பிரமிக்க வைப்பவை.

 

 

கவி காளமேகப் புலவரின் 160 பாடல்கள் என் தொகுப்பில் உள்ளன. சுவை மிகுந்த பாடல்கள். புத்தி கூர்மையையும், தனக்கு விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் அந்த புத்தி சாதுரியத்தை இலக்கண வழு இல்லாமல், அனைவரும் வியக்கும் படி காட்டியும் அமைக்கப்பட்ட பாடல்கள்.

 

 

தமிழின் மேன்மைக்கும் தமிழ்ப் புலவர்களின் புத்தி கூர்மைக்கும் இன்னும் ஒரு சான்று அரிகண்டப் பாடல் பாடுவீரா என்று கேட்கப் போய் யமகண்டப் பாடல்களையே பாடுவேனே என்று கூறிப் பாடிய கவி காளமேகம் என்னும் அற்புதக் கவிஞர்!

 

2

அதிமதுரக் கவிராயர் என்பவர் 64 தண்டிகைகாரர்கள் புடைசூழ திருமலைராயன் பட்டிணத்தில் தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புடன் கவி அரசோச்சி வந்தார்.

 

காளமேகம் என்னும் ஒரு மாபெரும் கவி அவரையும் விஞ்சும் ஆற்றல் படைத்தவர் என்பதை அறிந்து அவருக்கு அதிர்ச்சி உண்டானது.

காளமேகம் அதிமதுரக் கவிராயருக்கு பராக்கு கூறுகின்றவனை நோக்கி, “ நீ கட்டியம் கூறுகிறாயே, அது முறையா? இவனை அதிமதுரம் என்று கூறுகின்றாயே, அப்படி என்ன புதுமை இவனிடம் இருக்கிறது? காட்டில் உண்டாகும் சரக்கு, காரமில்லாத சரக்கு. தனியே பிரயோகிக்க முடியாமல் வேறு சரக்குடனே கூட்டிப் பிரயோகிக்கும் சரக்காகிய மலைக்குன்றிமணி வேரை உலகத்தார் ஆதிகாலம் தொட்டு அதிமதுரம் என்று வழங்கி வருவது சகஜம். ஆகவே நீ கட்டியம் கூறுவது முறையல்ல” என்று கூறியவர் அதை ஒரு பாடலாகவும் அமைத்தார்.

 

 

‘அதி மதுரமென்றே யகிலமறியத்

துதி மதுரமா யெடுத்துச் சொல்லும் – புதுமையென்ன

காட்டுச் சரக்குலகிற் காரமில்லாச் சரக்குக்

கூட்டுச் சரக்கதனைக் கூறு”

என்ற பாடலை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.

 

அதைக் கண்ட அதிமதுரக் கவி இந்த பகிரங்க சவாலைக் கண்டு அயர்ந்து போனார்.

 

காளமேகம் யார் என்பதை விசாரிக்க ஒருவனை அனுப்பினார்.

அவனைக் கண்ட காளமேகம் தான் யார் என்பதை ஒரு பாடலாகவே தந்து அனுப்பி விட்டார்.

 

தூதைந்து நாழிகையி லாறுநாழிகைதனிற் சொற்சந்தமாலை சொல்லத் துகளிலா வந்தாதி யேழு நாழிகைதனிற் றொகைபட

விரித்துரைக்கப்,

 

பாதஞ்செய் மடல்கோவை பத்துநாழிகைதனிற் பரணியொரு நாண்முழுதுமே  பாரகாவியமெலா மோரிரு தினத்திலே பகரக் கொடி கட்டினேன்,

 

சீதஞ்செயுந் திங்கண்மரபினோ னீடுபுகழ்  செய்ய திருமலைராயன் முன் சீறுமாறாகவே தாறுமாறுகளசொல் திருட்டுக் கவிப்புலவரைக்,

காதறுத்துச் செருப்பிட்டடித்து கதுயபிற்புடைத்து வெற்றிக் கல்லணையினொடு கொடிய கடிவாளமிட்டேறு கவிகாளமேக நானே!”

 

இந்தப் பாடலைக் கண்ட அதிமதுர கவிராயர் திகைத்துப் போனார்.

“ஐந்து நாழிகையில் தூது பாட வல்லவன். (இரண்டரை நாழிகை ஒரு முகூர்த்தம் அதாவது ஒரு மணி நேரம். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். ஐந்து நாழிகை என்றால் இரண்டு மணி நேரத்தில் ஒரு தூது நூல் முழுவதும் இயற்ற வல்லவன்!)

ஆறு நாழிகையில் சொற் சந்த மாலை ( அதாவது ஆறு x 24 நிமிடங்களில் சொற் சந்த மாலை ரெடி!)

 

அந்தாதி வேண்டுமா? ஏழு நாழிகையில் ரெடி!

மடல், கோவை பத்து நாழிகையில் ரெடி ஆகும்!

பரணி பாட தேவை ஒரு நாள் தான்!

பார காவியம் இயற்ற ஓரிரு நாள் போதும்.

 

திருமலைராயனை ஏமாற்றித் திருட்டுக் கவி புனைவோர் கவனிக்கவும்,

இதை எழுதுவது கவி காளமேகமாகிய நான் தான்!”

அதிமதுரகவி தனது 64 தண்டிகைகாரரையும் நோக்கி அந்தக் காளமேகம் இங்கு வந்தாலும் வரலாம். அவரை அரசனை நெருங்க வழி விடாதபடி சுற்றி அரண் அமைத்து அமருங்கள் என்று கட்டளையிட்டார்.

 

திருமலைராயன் அரசவையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கப் புயலென காளமேகம் அங்கு வந்தார்.

தன்னை அரசனிடம் போக விடாதபடி செய்யப்பட்ட சூழ்ச்சியைக் கண்டார்.

 

ஒரு எலுமிச்சம்பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை மன்னனுக்கு நேரே நீட்டி  ஸ்வஸ்தி சுலோகம் ஒன்றைக் கூறலானார்.

 

பிராமணர் ஒருவர் வாழ்த்திக் கூறும் ஸ்லோகத்தையும் அவர் தரும் எலுமிச்சையும் ஒரு மன்னன் நிச்சயம் வாங்க வேண்டும் என்ற விதிமுறையால் மன்னன் தானே வந்து அதை வாங்கிக் கொண்டான்.

 

ஆனால் கவிஞரை அமரச் சொல்லவில்லை.

நேராக மனதிற்குள்ளாகவே அகிலாண்டேஸ்வரி விமானத்தை தரிசித்து அன்னை சாரதை தேவியை மனக் கண்ணில் ஏற்றி, அவர் பாடினார்:

 

“வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணி பூண்டு

வெள்ளைக் கமலத்து வீற்றி ருப்பாள் – வெள்ளை

அரியாசனத்தி னரசரோடென்னைச்,

சரியாசனத்து வைத்த தாய்”

 

இந்தப் பாடலைக் கூறியவுடன் அன்னை மனம் கனிந்தாள். அரசனது அரியாசனம் ஒரு பக்கமாக வளைந்து இடம் கொடுத்தது.

 

அதில் அமர்ந்தார் கவி காளமேகம்.

 

3

அங்கிருந்த அதிமதுரக் கவிராயர் திகைக்க காளமேகம் அவரை நோக்கி, “நீங்கள் யார்?” என்றார்.

‘நானா! என்னையா கேட்கிறாய்? நான் கவிராஜன்” என்று கர்வத்துடன் பதில் கூறினார் அதிமதுரக்கவிராயர்.

காளமேகம் கவி என்பதற்கு குரங்கு என்று பொருள் கொண்டு அவரைக் கிண்டலடித்தார்.

 

“கவி ராஜன் என்கிறாயே! உனது வால் எங்கே? நாலு கால் எங்கே? ஊன் வடிந்த கண்ணெங்கே” என்ற பொருள்பட பாடல் ஒன்றைப் பாடினார்:

 

“வாலெங்கே, நீண்டெழுந்த வல்லுயிரெங்கே நாலு

காலெங்கே யூன் வடிந்த கண்ணெங்கே – சால

புவிராயர் போற்றும் புலவீர்கா னீங்கள்

கவிராய ரென்றிருந்தக் கால்”

 

 

கோபம் கொண்ட அதிமதுரக் கவிராயர், “ நீர் கவி காளமேகம் என்றால், அரிகண்டம் பாடுவீரா?” என்று கேட்டார்.

“அரிகண்டம் என்றால் என்ன?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் காளமேகம்.

 

“கழுத்திலே கத்தியைக் கட்டிக் கொள்ள வேண்டும். எதிரி கொடுக்கும் சமிசைக்கு இணங்க உடனடியாகப் பாடவேண்டும். அப்படிப் பாடுவது தான அரிகண்டம். உன்னால் முடியுமா? பாடத் தயாரா?” என்றார் அதிமதுரக் கவி.

 

பயந்து ஓடி ஒளிவார் காளமேகம் என்று எதிர்பார்த்த அதிமதுரக் கவிக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

 

“பூ! இவ்வளவு தானா! நான் யமகண்டமே பாடுவேன். நீங்கள் பாடத் தயாரா?”

 

யமகண்டம் என்றால் என்ன என்று தெரியாத அதிமதுரகவி யமகண்டம் என்றால் என்ன என்று கேட்டார்.

 

காளமேகம் யமகண்டத்தை விளக்கினார் இப்படி:

 

பூமியில் பதினாறு அடி நீளம், பதினாறு அடி அகலம், பதினாறு அடி ஆழம் கொண்ட ஒரு குழியை வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் பதினாறு அடி இரும்புக் கம்பங்களை நாட்ட வேண்டும். கம்பத்தின் மேல் நான்கு பக்கத்திலும் இரும்பினால் செய்த நான்கு சட்டங்களை அமைக்க வேண்டும். அதன் நடுவிலே ஒரு சட்டம் பொருத்த வேண்டும். நடுச் சட்டத்தில் உறி கட்ட வேண்டும். குழிக்குள்ளே பருத்த புளியங்கொட்டைகளை நெருங்க அடுக்கி, கட்டைக்குள் நெருப்பு மூட்ட வேண்டும். அது கனன்று எழுந்து ஜுவாலையுடன் எரியும் போது, அந்த நெருப்பில் ஒரு ஆள் உயரமுள்ள இரும்புக் கொப்பரை ஒன்றை வைக்க வேண்டும். கொப்பரையை எண்ணெயால் நிரப்ப வேண்டும். அதில் அரக்கு, மெழுகு, குங்கிலியம், கந்தகம், சாம்பிராணி ஆகியவற்றை இட்டு நிரப்பி அவை நன்றாகக் காயும்படி செய்ய வேண்டும், அவை காய்ந்து உருகிக் கொதித்துக் கொண்டிருக்க, அப்போது,

 

நான்கு யானைகளை பாகர்கள் மதம் ஏற்ற வேண்டும். அவற்றை கம்பத்திற்கு ஒன்றாக மலைகளைப் போல நிறுத்தி வைத்திருக்க, பின்புறத்தில் வளையம் வைத்து , வளையத்தில் சங்கிலி கோர்த்து,  எஃகினால் கூர்மையாக சமைக்கப்பட்ட பளபளவென்று மின்னும் படி சாணை பிடிக்கப்பட்ட எட்டுக் கத்திகளை, கழுத்தில் நான்கும், அரையில் நான்குமாகக் கட்டிக் கொண்டு , கத்திகளின் புறத்தில் உள்ள சங்கிலிகளை நான்கு யானைகளின் துதிக்கையில் கொடுத்து வைத்து, தான் கொப்பரைக்கு நேராகத் தொங்குகின்ற உறி நடுவில் ஏறி, எவரெவர் என்னென்ன சமிசை கொடுத்தாலும் அவற்றை அரை நொடிக்குள் தடையின்றி கேட்டவர் குறித்த கருத்து வரும்படி பாட வேண்டும், அப்படிப் பாடும்போது வழு ஏற்படுமானால், சமிசை கொடுத்தவர்கள் யானை மேலிருக்கும் பாகர்களுக்கு கண் சைகை காட்ட, அவர்கள் யானைகளின் மத்தகத்தில் அங்குசத்தால் குத்தி அதட்ட,  அவைகள் தமது தும்பிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் சங்கிலிகளை விசையுடன் வேகமாக இழுக்க, அப்படி இழுத்தவுடன் புலவன் கழுத்தும், அரையும் கத்திகளால் துண்டிக்கப்பட்டு தலை ஒரு துண்டமாகவும், அரை முதல் கால் வரை ஒரு துண்டமுமாகி கொதிக்கின்ற எண்ணெய் கொப்ப்ரையில் விழும். இப்படி விழுந்து மாண்டு போவது தான் யமகண்டம்.

 

 

கோரமான இந்த யமகண்டத்தைக் கேட்ட அதிமதுரக் கவிராயரும், 64 தண்டிகைகாரர்களும், திருமலைராயனும், கூடியிருந்த மக்களும் திகைத்துப் போயினர்.

 

திடுக்குற்ற அதிமதுரக் கவி, “இதைச் சொன்ன நீரே செய்து காண்பியும்” என்று சவால் விட சவாலை ஏற்ற கவி காளமேகம் மேகமென கேட்ட கேள்விக்கெல்லாம் கவி மழையாகப் பதில் அளித்தார். கடினமாகக் கொடுக்கப்பட்ட கவிதைப் புதிர்களை எதிர் கொண்டார்.

 

64 தண்டிகைகாரர்களும் அயர்ந்து போக, மன்னன் பிரமிக்க, அதிமதுரக் கவி திகைக்க காளமேகம் பாடிய பாடல்கள் ஒரு தனி வரலாறையே படைத்தன.

 

 

4

சற்று எண்ணிப் பார்ப்போம். கற்பனைக்காகக் கூட உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு புலவர் பாடியதாக கற்பனை கதை கூடக் கிடையாது.

 

ஆனால் நம்மிடமோ கவி காளமேகத்தின் அற்புதமான பாடல்கள அனைத்தும் உள்ளன.

 

கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள்.

இன்றளவும் அவை நிலைத்து நிற்கின்றன!

காளமேகம் யமகண்டம் பாடி அரங்கேறிய கவிதைகள் காலத்தை வென்றவை; அவை கவிஞரின் புகழை மட்டும் நிலை நிறுத்தவில்லை;

தண்டமிழின் பெருமையையும் உயரத்தில் ஏற்றிக் காத்து வருகின்றன, இன்றளவும்.

 

 

5

என்னிடம் இருக்கும் பழைய பிரதி ஒன்றில் உள்ள யமகண்டம் பற்றிய விளக்கத்தையும் காளமேகம் பற்றிய செய்தியையும் இன்றைய நாளுக்கு  ஏற்றபடி எளிய தமிழில் தந்துள்ளேன்.

பாடல்களைத் தனியே பார்க்கலாம்.

 

இவை கால வெள்ளத்தில் அறியப்படாமலேயே போய்விடக் கூடாதென்று தான் இந்தக் கட்டுரையை அளிக்க முற்பட்டேன்.

இதே போல் தமிழகத்திற்கே தனிப்பட்டதான ‘விச்சுளி வித்தை’ பற்றி பாக்யா இதழில் எழுதி, அது www.tamilandvedas.com இல் வெளிவந்ததையும் படித்து மகிழ்ந்திருப்பீர்கள்.

 

இன்னும் இப்படி பல தமிழ் நாட்டிற்கென்றே உரித்தான பல விஷயங்கள் உள்ளன.

 

அவற்றை அறிந்து போற்றுவது இன்றைய தமிழரின்

ஒரு நொடி வாழ்ந்தாலும் போதும்- சாணக்கியன் அறிவுரை (Post No.4522)

Markandeya Painting by Raja Ravivarma from Wikipedia

 

Written by London Swaminathan 

 

Date: 20 DECEMBER 2017 

 

Time uploaded in London-  16-21

 

 

Post No. 4522

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

முஹூர்த்தமபி ஜீவேத்வை நரஹ சுக்லேன கர்மணா

ந கல்பமபி கஷ்டேன லோகத்வயவிரோதினா

சாணக்ய நீதி 13-1

பொருள்

தகாத செயல்களை செய்துகொண்டு யுகக் கணக்கில் வாழ்வதைவிட, குற்றமற்ற தூய செயல்களைச் செய்துகொண்டு ஒரு நொடி வாழ்ந்தாலும் சிறந்ததே. தீய செயல்கள் இக, பர லோக வாழ்வுக்குத் தீங்கு இழைக்கும்.

மார்க்கண்டேயன் 16 வயது வாழ்ந்தும் அழியாத இடம் பெற்றான்.

ஆதி சங்கரர் 32 வயதும், சம்பந்தர் 16 வயதும் தான் வாழ்ந்தனர். பாரதியார் 39 வயதுதான் வாழ்ந்தனர். சுவாமி விவேகாநந்தரும் அவ்வாறே.

 

இவர்கள் அனைவரும் வரலாற்றில், இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டனர். ஆகையால் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற குறிக்கோளைவிட. இருக்கும் காலத்தில் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதே சிறந்த லட்சியம்.

 

மார்கண்டேய புராணம் காட்டிய பாதை

புகழ் சேர்க்கும் 16 வயதுப் புதல்வன் (( மார்க்கண்டேயன் )) வேண்டுமா? பூமிக்குப் பாரமாக வாழும் ஆயிரத்தோடு ஆயிரத்தொன்றாக 100 ஆண்டுகள் வாழும் புதல்வன் வேண்டுமா? என்று மிருகண்டு ரிஷியை இறைவன் கேட்ட போது புகழ் சேர்க்கும்- தோன்றிற் புகழொடு தோன்றும்  — 16 வயதுப் புதல்வன் போதும் என்றனர் ம்ருகண்டுவும் அவரது மனைவி மருத்வதியும். நல்ல அருமையான கதை. இந்துக்களின் லட்சியம் எதுவாக இருக்க வேண்டும் என்று சொல்லும் கதை. வள்ளுவனை புகழ் என்னும் அதிகாரத்தின் கீழ் பத்து குறட்பாக்களைப்  பாடவைத்த கதை!

 

 

ஏதேனும் சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று துடியாய்த் துடித்த பாரதி பாடுகிறான் ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?’ என்று. அவனுடைய ஆசை இந்த பூமிக்குப் பாரமாக இருக்கக்கூடது என்பதே.

உலகமெங்கும் தமிழ் மொழி ஓசையையக் கேட்கச் செய்ய வேண்டும்; வேத முரசு எங்கும் ஒலிக்க வேண்டும்; தமிழில் பழ மறையைப் பாட வேண்டும்; நாடு விடுதலை பெறவேண்டும்; இல்லையென்ற கொடுமை இல்லையாக வேண்டும்; கோடி கவிதைகள் இயற்றல் வேண்டும்; விட்டு விடுதலையாகி (முக்தி)  சிட்டுக்குருவி போல பறக்க வேண்டும்- என்று பாடுபட்டான்; அழியாப் புகழும் பெற்றான்.

 

வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

பாரதி பாடல்

 

 

வள்ளுவனும் சொன்னான்,

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம் (குறள் 239)

 

பொருள்

புகழ்பட வாழாத உடம்பைப் பெற்ற நிலத்தில் விளைச்சல்கூடக் குறைந்து விடும்.

 

வசையொ  ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழாதவர் (240)

 

பொருள்

உலகத்தில் தம் மீது பழியில்லாமல் வாழ்கின்றவரே வாழ்கின்றவர் ஆவார்கள். புகழ் தேடாமல் வாழ்வோர், இறந்தர்கள் போலத்தான்.

 

‘They alone live for who live others; the rest are more dead than alive’ -Swami Vivekananda

பிறருக்காக வாழ்பவனே — அதாவது சுயநலம் இல்லாமல் — வாழ்பவனே வாழ்பவன்; மற்ற எல்லோரும் செத்தாருள் வைக்கப்படும் – என்று சுவாமி விவேகாநந்தரும் சொன்னார்.

 

வள்ளுவன், பாரதி, விவேகாநந்தர், 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சாணக்கியன்– எல்லோரும் சொன்னது ஒன்றே:

லட்சியத்துடன் வாழ்; புகழுடன் வாழ்.

–SUBHAM-

 

 

சாணக்யன் சொன்ன பெண்மணி கதை (Post No.4512)

WRITTEN by London Swaminathan 

 

Date: 18 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-34

 

 

Post No. 4512

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பெண்களைத் தவறான எண்ணதுடன் நெருங்கும் ஆண்களுக்கு, பெண்கள் பலவகைகளில் பதில் சொல்லுவர். சில நேரங்களில், அவர்கள் குறிப்பால் உணர்த்துவர். இன்னும் சில நேரங்களில் நேரடியாகவே சொல்லுவர். இதெல்லாம் பழங்கால இந்தியாவில்.இப்போதெல்லாம் இதற்குத் தேவையே இல்லை; முதலில் எச்சரிப்பர்; அத்துமீறினால் காலில் போட்டிருப்பதைக் கையில் எடுத்துக் காட்டுவர்; தேவையானல் போலீஸாரையும் அழைப்பர். அந்தக் காலத்திலோ ஆண்களுக்கு முன் நிற்கவே கூசிய பெண்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். இருந்த போதிலும் அழகாக எண்ண

த்தைத் தெரிவித்தனர். இதை விளக்க சாணக்ய நீதியின் ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுகிறேன்.

 

சாணக்கிய நீதி நூலின் 17 ஆவது அத்தியாயத்தில் கடைசி ஸ்லோகம் இதோ:

 

அதஹ பஸ்யஸி பாலே பதிதம் தவ கிம் புவி

ரே ரே மூர்க்க ந ஜானாஸி கதம் தாருண்ய மௌக்திகம்

பொருள்:

ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்த ஒரு இளைஞன், அவளை வசப்படுத்த எண்ணினான். நடுத்தர வயது என்று அவள் ‘முகத்தில் எழுதி ஒட்டியிருந்தபோதிலும்’, புன்னகைத்த முகத்துடன் அவளை அழைத்தான்.

 

” ஓ இளம் பெண்ணரசியே, எதையோ தேடுகிறாய் போலும்? எதைக் குனிந்து பார்த்துக்கொண்டு தேடுகிறீர்கள்?” என்றான்

அவளுக்கு இவன் எண்ணம் புரிந்தது. உடனே நேரடியாகவே பதில் சொல்லிவிட்டாள்.

“ஆமாம், அன்பரே! என்னுடைய இளமை என்னும் முத்து உதிர்ந்துவிட்டது அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்”- என்றாள்.

 

இளைஞனுக்குப் புரிந்தது; ஏமாற்றத்துடன் திரும்பினான்.

 

xxxx

இதே போல பிராக்ருத மொழியில் உள்ள காதா சப்த சதியில் ஒரு ஸ்லோகம் உள்ளது. புது மணத் தம்பதிகள் புகுந்த வீட்டில் குடியேறினர். அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பம். எல்லோரும் சேர்ந்து வாழ்ந்தனர். புதுக் கணவன் வணிகம் காரணமாக வெளியூர் செல்ல நேரிட்டது.

 

 

 

 

புதுமணப் பெண்ணை, புகுந்த வீட்டில் கொழுந்தன் ஒருவிதமான பார்வையில் பார்த்தான். அதை எப்படி கண்டிப்பது அல்லது நிறுத்துவது என்று தவியாகத் தவித்தாள்.  அதைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் கஷ்  டப்பட்டாள். கணவனிடம் சொன்னாலோ குடும்ப உறவுகள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள்.

 

நல்ல வேளையாக அந்த வீட்டுச் சுவரில் ஒரு ராமாயண ஓவியம் இருந்தது. இந்தக் காலத்தில் நாம் காலண்டர் அல்லது ஓவியங்களை கண்ணாடி போட்டுச் சுவரில் மாட்டிவைக்கிறோம்; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லார் வீட்டுச் சுவரிலும் தெய்வத்தின் படங்கள் வரையப்பட்டிருந்ததை சங்கத் தமிழ் நூல்களும் குறிப்பிடுகின்றன. அது போல இந்த வீட்டில் ராமனும் லெட்சுமணனும் சீதையும் காட்டில் செல்லும் காட்சி வரையப்பட்டிருந்தது.

 

லெட்சுமணன், அண்ணன் மனைவியான சீதையின்  முகத்தைக் கூடப் பார்க்க மாட்டான்.அவள் காலில் அணிந்திருந்த மெட்டி மட்டுமே அவனுக்குத் தெரியும். அந்தப் படத்தைக் காட்டி அவள் லெட்சுமணனின் பெருமையை கதை சொல்லுவது போலச் சொல்லுகிறாள். இலட்சுமணன் போல அண்ணியை நீயும் தாயாக மதிக்க வேண்டும் என்று சொல்லாமற் சொன்னாள்.

 

இதைச் சொல்லும் பிராக்ருத மொழி ஸ்லோகத்தை மு.கு.ஜகந்நாத ராஜா அழகாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது சாலிவாஹநன் என்ற மன்னன் எழுதியது:

கோதுறு மனமுடைக் கொழுந்தனை நோக்கி

மாதவள் தினமும் போதனை செய்தாள்

இராமனுடன் செலும் இலக்குவன் சரிதம்

சுவரில் வரைந்த சுடரோவியத்தே

–சாலிவாஹனன் (ஹாலன்) 1-35, காதா சப்த சதி

 

கோது= குற்றம்

 

எங்கள் மதுரையில் அந்தக் காலத்தில் கணவன் பெயரைக்கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். கணவன் பெயர் சொக்கன் , சுந்தரம், சுந்தரேஸ்வரன் என்றிருந்தால், ‘அதான் இந்த ஊர்க்கடவுள் பெயர்’ என்பார்கள். ராமன், கிருஷ்ணன் என்றிருந்தால் சுவற்றில் மாட்டி இருக்கும் படத்தைக் காண்பிப்பாள் அல்லது சுற்றி வளைத்து ஏதேனும் ஒரு வகையில் விளங்க வைத்துவிடுவாள்.

பெண்கள் கெட்டிக்காரிகள்!

 

–சுபம்—

 

இதை எழுதிய மாங்காய் மடையன் யார்? அது, நான்தான்! (Post No.4507)

WRITTEN by London Swaminathan 

 

Date: 17 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-35 AM

 

 

Post No. 4507

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஆஸ்திரிய நாட்டு இசை மேதையும் சாஹித்ய கர்த்தாவுமான மோசார்ட் (Mozart) திரு ஞான சம்பந்தர் போல இளம் வயதிலேயே பாடல்களை எழுதியவர்; பாடியவர். அவரிடம் ஒரு பையன் வந்தான்.

ஐயா, எப்படி ஸிம்பனி (symphony ஸ்வரத் தொகுப்பு) எழுதுவது என்று எனக்குச் சொல்லுங்கள் – என்றான்

 

“அட, நீ ரொம்பச் சின்னவன். முதலில் நாட்டுப் பாடல், கதை பாட்டு (ballads) ஆகியவற்றை எழுதிப் பழகு” – என்றார்.

 

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் மட்டும் பத்து வயதிலேயே ஸ்வரங்களை எழுதினீர்களே!”

 

 

அது உண்மைதான். ஆனால் ஸிம்பனி எப்படி எழுதுவது என்று நான் யாரிடமும் போய்க் கேட்கவில்லையே – என்றார்.

 

வான மயிலாடக் கண்டு தானும் அதுவாகப் பாவித்த வான் கோழியின் கதை போல உள்ளது அந்தப் பையன் கதை!

 

XXXX

பிரபல ஜெர்மன் தத்துவ ஞானி (Nietzsche) நீட்ஸே, வாக்னருடன் பேசிக்கொகொண்டிருந்தார்.

“நான் நினைக்கிறேன்; மோசார்ட் எழுதிய  F பிகாரொவில் (Figaro) அற்புதமான இசையைக் கண்டு பிடித்து இருக்கிறார்”.

 

வாக்னர் (Wagner) சொன்னார்: அவர் அற்புதமான இசையைக் கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் சொன்னதற்கு நேர்மாறாக நடந்தது. அவர் இசையில் அற்புதத்தைக் கரைத்துவிட்டார்”.

 

XXX

 

 

அற்புத நினைவு சக்தி!

 

பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த குனோட் (Gunod) ஒரு சாஹித்யகர்த்தா (composer) ; பியானோ வாத்யக்காரர். அவர் மற்றொரு மேதையான பெர்லியோஸ் (Berlioz) எழுதிய  ரோமியோவும் ஜூலியட்டும் என்ற இசை நிகழ்ச்சியின் ஒத்திகைக்குப் போயிருந்தார். மறுநாள் வீட்டுக்கு பெர்லிசோவை அழைத்தார். முதல்நாள் கேட்ட இசையை அப்படியே அ ட்சரம் பிசாகாமல் பெர்லியோஸுக்கு வாசித்துக் காண்பித்தார்.

 

அவருக்கு ஒரு பக்கம் வியப்பு; மற்றொரு பக்கம் திகைப்பு.

நன்றாக வாசித்தீர்கள் ஆனால் இதை எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்? என்று வியப்புடன் கேட்டார்.

அவருக்கு ஒரு சந்தேகம்; யாரோ தன்னுடையதைத் திருடிக் கொடுத்து இருக்க வேண்டும்; அல்லது இரண்டு பேர் ஒரே மாதிரி இசை அமைத்த உலக அதிசயம் நடந்திருக்க வேண்டும் என்று.

 

குனோட் சொன்னார்: “நான் உங்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கு வந்தேனல்லவா?அப்போது கேட்டதைத்தான் நினைவில் வைத்து எழுதினேன்!”

 

XXX

அருவருக்கத்தக்க இசை!!!

 

சீஸர் ப்ராங்க் (Caesar Frank) என்பவர் நல்ல இசை அமைப்பாளர்; மிகவும் சாது. அதிகமாக வெளியே வந்தவர் அன்று; இதனால் அவரைப் பலருக்கும் தெரியாது. அவர்  அமைத்த இசை முழங்கிய  கச்சேரியில் அவர் ரஸிகப் பெருமக்களுடன் உட்கார்ந்திருந்தார். பொதுவாக புதிய இசை அமைப்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும். அவருக்கும் பிற்காலத்தில்தான் அங்கீகாரம் கிடைத்தது.

 

அவர் உட்கார்ந்திருந்த வரிசைக்குப் பின்னால் செல்வச் செருக்குள்ள ஒரு சீமாட்டி உட்காந்திருந்தாள். அவள் அகந்தையின் உறைவிடம். ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டுக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளி நேரத்தில் அந்தப் பெண் உரத்த குரலில் எந்த மடையன் அருவருக்கத்தக்க இந்தப் பாட்டை எழுதினானோ! என்று நகைத்தாள்.

ஸீஸர் ப்ராங்க் மெதுவாகப் பின்னால் திரும்பி, அம்மணி, இந்தப் பாட்டை எழுதியவன் நான்தான் – என்றார்

TAGS:- இசை ,மேதைகள், நினைவு சக்தி, இளம் வயது, மோசார்ட், குனோட், மடையன்

–subham–

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 9 (Post No.4501)

 

Date: 16  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-34 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4501

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 9

 

ச.நாகராஜன்

15

மாக்ஸ்முல்லர் காலத்தில் அவருக்குச் சாதகமாக இந்தியாவில் நடந்த  ஒரு நிகழ்ச்சி பிரம்ம சமாஜத்தின் தோற்றம்.

இதைத் தோற்றுவித்தவர் ராம் மோகன ராய் என்ற வங்காள பிராம்மணர். (தோற்றம் 22-5-1771 மறைவு 27-9-1833) பிரம்ம சமாஜத்தை அவர் 20-8-1828 அன்று தோற்றுவித்தார்.

அதனுடைய பிரதான கொள்கைகள்:

எந்த ஒரு புனித நூல் அல்லது சாஸ்திரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை.

அவதாரங்களில் நம்பிக்கை இல்லை.

உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

பல தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை.

ஜாதி பேதத்தில் நம்பிக்கை இல்லை

கர்ம பலன் மற்றும் புனர் ஜென்மத்தை நம்புவோர் நம்பட்டும்; நம்பாதவர் நம்ப வேண்டாம்.

ஏறத்தாழ கிறிஸ்தவ மாதத்தை பாலிஷ் போட்டு பளபளப்பாக்கி இந்தியாவுக்கு அன்பளிப்பாகத் தருவது போல இருக்கிறதல்லவா இது!

இதைத் தான் ராம் மோகனராய் உருவாக்கினார்.

ஆனால் கால வெள்ளத்தில் அது அடிபட்டுப் போயிற்று என்பது வேறு விஷயம்!

அவர் கிறிஸ்தவ மதத்திற்குத் துணை போனது  மாக்ஸ்முல்லருக்கு மிகவும் சௌகரியமாகப் போயிற்று.

ஏற்கனவே நல்ல விதமாக மேலை நாட்டு கல்வி முறையை (கிறிஸ்தவ மத பிரச்சாரக் கல்வி என்று அர்த்தம் கொள்க) இந்தியாவில் புகுத்தினால் கிறிஸ்தவத்திற்கு ஈடான ஒன்று இந்தியாவில் பிறந்து இந்து மதம் ஒழியும் என்று மனப்பால் குடித்தார் அவர்.

அதற்காக சௌகரியமான வழியாக பிரம்ம சமாஜம் இருக்கவே அதை நாடினார்; அத்துடன் தொடர்பு கொண்டார்.

ராம் மோகன ராய் இரண்டாம் அக்பரின் அரசவையில் இடம் பெற்றார். அக்பருக்கு ஒரு பிரச்சினை. அவருக்கு பிரிட்டிஷாரின் கருணைத் தொகை (மானியம்) போதவில்லை.

ஆகவே ராம் மோகன ராயைத் தன் சார்பில் பேச்சு வார்த்தை நடத்த இங்கிலாந்து அனுப்பி வைத்தார். அவருக்கு 30000 பவுண்டு அளவில் அதை ராம் மோகனராய் பேச்சு வார்த்தை நடத்தி உயர்த்தினார்.

அவருக்கு  இரண்டாம் அக்பர் ராஜா என்ற பட்டத்தையும் அளித்தார்.

ராம் மோகன ராய் என்ற வங்காள பிராம்மணர் இப்போது ராஜா ராம் மோகன ராய் ஆனார்.

இங்கிலாந்து சென்ற அவர் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் ‘எழுத்துச் சேவை’ பணி புரிய முன் வந்தார்.

பின்னர் வில்லியம் கேரி என்பவரிடம் பணி புரிந்தார். இவர் பணி புரிந்த இடமெல்லாம் மத பிரசாரம் (கிறிஸ்தவத்தைப் பரப்புவது; இந்து மதத்தை ஒழிப்பது) அரசியல் ( இந்தியாவை நிரந்தரமாக பிரிட்டிஷாரின் கொள்ளை அடிக்கும் சொர்க்க பூமியாக வைத்திருப்பது) ஆகியவை ஆதிக்கம் செலுத்தின.

இறுதியில் அவர் கேரியையே தாக்க ஆரம்பித்தார். கடும் மிஷனரியான கேரிக்கு கோபம் வந்தது நியாயமே.

ராஜா ராம் மோகன ராயே பின்னால் பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்துச் செல்லும் தொகை வருஷத்திற்கு 30 லட்சம் பவுண்டுகள் என்பதை கண்டுபிடித்து வெளியிட்டார்.

“அவர் சதியை ஒழித்தார்; பெண்ணுக்கு உரிமை கோரினார்.” ஆகிய இவை அவரது சாதனைகளாகச் சித்தரிக்கப்படுகின்றன.

அவரது வரலாறை ஆராய்வது இந்தத் தொடரின் நோக்கமல்ல என்பதால் அவரை இத்துடன் விட்டு விடுவோம்.

அவர் பற்றிய விக்கிபீடியா தரும் செய்தியின் ஒரு பகுதி இது: விளக்கம் வேண்டுவோர் முழுமையாக அங்கு படிக்கலாம்.

 

From 1803 till 1815, Ram Mohan served the East India Company’s “Writing Service”, commencing as private clerk “munshi” to Thomas Woodroffe, Registrar of the Appellate Court at Murshidabad[  (whose distant nephew, John Woodroffe — also a Magistrate — and later lived off the Maha Nirvana Tantra under the pseudonym Arthur Avalon). Roy resigned from Woodroffe’s service and later secured employment with John Digby, a Company collector, and Ram Mohan spent many years at Rangpur and elsewhere with Digby, where he renewed his contacts with Hariharananda. William Carey had by this time settled at Serampore and the old trio renewed their profitable association. William Carey was also aligned now with the English Company, then head-quartered at Fort William, and his religious and political ambitions were increasingly intertwined.

The East India Company was draining money from India at a rate of three million pounds a year in 1838. Ram Mohan Roy was one of the first to try to estimate how much money was being driven out of India and to where it was disappearing. He estimated that around one-half of all total revenue collected in India was sent out to England, leaving India, with a considerably larger population, to use the remaining money to maintain social well-being. Ram Mohan Roy saw this and believed that the unrestricted settlement of Europeans in India governing under free trade would help ease the economic drain crisis.

During the next two decades, Ram Mohan launched his attack against the bastions of Hinduism of Bengal, namely his own Kulin Brahmin priestly clan (then in control of the many temples of Bengal) and their priestly excesses.[The Kulin excesses targeted include sati (the co-cremation of widows), polygamy, idolatry, child marriage and dowry.

From 1819, Rammohun’s battery increasingly turned against William Carey, a Baptist Missionary settled in Serampore, and the Serampore missionaries. With Dwarkanath’s munificence he launched a series of attacks against Baptist “Trinitarian” Christianity and was now considerably assisted in his theological debates by the Unitarian faction of Christianity.”

 

 

ஆக மாக்ஸ்முல்லர் பயன்படுத்த நினைத்த பிரம்ம சமாஜம் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையான உருவ வழிபாட்டை எதிர்த்தல், பல் தெய்வ வழிபாட்டை ஒழித்தல் போன்றவற்றை ஆதரித்தாலும் மறுஜென்மக் கொள்கை பற்றிய வழவழா என்ற கொள்கையைக் கொண்டிருந்தது, ராம் மோகன் ராய் கிறிஸ்தவ மிஷனரிகளைத் தாக்கி பேச ஆரம்பித்தது ஆகியவற்றால் கலகலத்துப் போனது.

 

ராஜா ராம் மோகன ராய் பிரிஸ்டலில் இறந்தார்.

பிரம்மசமாஜத்தைப் பயன்படுத்தும் மாக்ஸ்முல்லரின் நோக்கம் வெற்றி பெற வில்லை. பிரம்ம சமாஜமே இல்லாமல் போயிற்று. 2001இல் இந்தியாவில் எடுத்த ஜனத்தொகைக் கணக்கெடுப்பில் 177 பேரே பிரம்மசமாஜத்தில் உறுப்பினராக இருப்பது தெரிகிறது.

முப்பது கோடி ஹிந்துக்களை உருத்தெரியாமல் ஆக்கவும் உருவவழிபாட்டை ஒழிக்கவும் ஆரம்பித்த ஒரு  “சீர்திருத்த” சமாஜம் 177இல் முடிந்தது. கிறிஸ்தவம் எடுத்த ஏராளமான உத்திகளில் ஒன்றான கைக்கூலியை ஆதரித்தல் என்ற உத்தி இன்னொரு முறை தோற்றது; இந்து மதம் நிலைத்தது. (இந்த பிரம்ம சமாஜ கூட்டங்களுக்கு கல்லூரியில் படிக்கும் போது விவேகானந்தர் போய் வந்தார் என்பது ஒரு சுவையான செய்தி)

 

மாக்ஸ்முல்லரின் மீது கிறிஸ்தவ மிஷனரிகளின் கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது.

 

16

இந்த நிலையில் இதன் வெளிப்பாடாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

1860ஆம் ஆண்டு போடன் சம்ஸ்கிருத பேராசிரியர் பணிக்கான தேர்தலில்  நின்ற மாக்ஸ்முல்லர் தோற்றுப் போனார். இந்தப் பணிக்கு அவர் தகுதி படைத்தவர் தான். ஆனால் அவரை விட குறைந்த தகுதி பெற்றவரான மோனியர் வில்லியம்ஸுக்கு அது தரப்பட்டது.

மிகவும் வருத்தமடைந்தார் மாக்ஸ்முல்லர். அவருக்குப் பெருத்த ஏமாற்றம் இது. தேர்தல் முடிந்தது. அவர் தோற்றார். மோனியர் வில்லியம்ஸ் வென்றார். உடனே அவர் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் , “எல்லா சிறந்த மனிதர்களும் எனக்கு வோட்டுப் போட்டனர்.புரபஸர்களில் ஏறத்தாழ அனைவருமே எனக்குத் தான்  வோட்டுப் போட்டனர். ஆனால் பொதுவில் இருந்த கூட்டம் தான் மெஜாரிட்டியை நிர்ணயம் செய்தது.”

இப்படியாக கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எதிரான போக்கு, அவரது ஜெர்மன் பிறப்பு உள்ளிட்ட பல காரணங்கள் அவரது தோல்விக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஒரு காரணம், அவர் இந்தியாவையே பார்த்ததில்லை என்பது. மோனியர் வில்லியம்ஸ் இந்தியாவில் இருந்திருக்கிறார்.

விக்கி பீடியா தரும் ஆங்கில மூலத்தைக் கீழே பார்க்கலாம்:

 

He was defeated in the 1860 election for the Boden Professor of Sanskrit, which was a “keen disappointment” to him.[6] Müller was far better qualified for the post than the other candidate (Monier Monier-Williams), but his broad theological views, his Lutheranism, his German birth and lack of practical first-hand knowledge of India told against him. After the election he wrote to his mother, “all the best people voted for me, the Professors almost unanimously, but the vulgus profanum made the majority”.

17

பெரும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக மாக்ஸ்முல்லருக்கு, 1868ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் ஒப்பீட்டு மொழியியல் அறிவில் பேராசிரியர் பணி தரப்பட்டது. அப்போது அவருக்கு வயது 45. (1875இல் அவர் ஓய்வு பெற்ற போதிலும் கூட, அதை அவர் இறுதி வரை (1900ஆம் ஆண்டு மாக்ஸ்முல்லர் மரணமடைந்தார்) வகித்தார்.

(விக்கிபீடியாவின் வரி இது:

Later in 1868, Müller became Oxford’s first Professor of Comparative Philology, a position founded on his behalf. He held this chair until his death, although he retired from its active duties in 1875.)

மாக்ஸ்முல்லரின் நிதானமான மனமும் அறிவும் இந்தியாவின் புகழோங்கிய வரலாறைப் பற்றிப் புகழ ஆரம்பித்தது.

ஈஸ்ட் இந்தியா கம்பெனியும், கிறிஸ்தவ மிஷனரிகளும் நொந்து போக உலகம் வியந்தது – இந்தப் புகழுரைகளால்.

அவற்றில் சிலவற்றை இனி பார்ப்போம்!

நன்றி: விக்கிபீடியா (ஆதாரபூர்வ தகவல்களுக்காக விக்கி மேற்கோள்கள் தரப்பட்டன)

-தொடரும்

****

 

 

தர்மத்தின் நான்கு அடையாளங்கள்; மநு நீதி நூல்-8 (Post No.4499)

Written by London Swaminathan 

 

Date: 15 DECEMBER 2017 

 

Time uploaded in London-  19-18

 

 

Post No. 4499

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

முதல் அத்யாயம் ஸ்லோகம் 111 முதல்

 

111.உலகத்தின் படைப்பு, குருகுலக் கல்வி, அதற்குப் பின்னுள்ள நடைமுறைகளையும்,

 

112.திருமண முறைகள், இல்வாழ்க்கை, யாக யக்ஞ கர்மங்களையும்,

 

113.வாழ்க்கையின் தேவைகளையும், இல்வாழ்வானின் கடமைகளையும், உணவு விஷயத்தில் கொள்ளுவன, தள்ளத்தக்கன, தீட்டு, பொருட்களின் அசுத்தம், சுத்தப்படுத்தும் முறைகளையும்

 

114.பெண்களின் கடமைகளையும், வானப்பிரஸ்த தர்மங்களையும், மோட்சத்துக்கு உதவும் துறவு விஷயங்களையும், ராஜ நீதியையும், வாதப் பிரதிவாதங்களில் காணவேண்டிய துணிபுகளையும்

 

115.சாட்சி விசாரணை முறைகளையும், ஆடவர் மாதர் தர்மங்களையும்,

சூதாடுதல், சொத்துக்கள் பிரிவினை, (குற்றவாளிகளைக் களைதல்) திருடர்களுக்கான தண்டனை ஆகியவற்றையும்

 

  1. வைஸியர், சூத்திரர் தர்மத்தையும், கலப்பு வர்ணத்தாரின் வரிசைக் கிரமத்தையும், எல்லா ஜாதிகளுக்கும் உரிய ஆபத்துக் கால தர்மத்தையும் பிராயச்சித்தங்களையும்

 

117.வேறு பிறவி எடுப்பதற்கான கர்மங்களையும், உயர்தர, நடுத்தர, கீழ்த்தர சுப, அசுப செயல்களின் பிரிவையும், மோட்ச மார்கமான ஆத்ம தியானத்தையும், குண தோஷங்களைப் பகுத்தறிவதையும்

 

118.பழமையான தேச, சாதி, குல ஒழுக்கங்களையும், வேதங்களை ஒப்புக் கொள்ளாதவர்களின் ஒழுக்கத்தையும் மநுப் பிரஜாபதியானவர்  வரிசையாகச் சொல்லியிருக்கிறார்.

  1. நான் கேட்டதால் இதை அவர் எனக்கு எடுத்துரைத்தார். இந்த சாஸ்திரத்தை அவர் சொன்ன வாறே நான் உங்களுக்குச் சொல்லுவேன்.

 

இரண்டாவது அத்தியாயம் துவக்கம்

  1. விருப்பு, வெறுப்பற்ற கற்றோர், நல்லோரிடமிருந்து, ஆய்ந்தவிந்தடங்கிய சான்றோரிடமிருந்து தர்மத்தைக் கற்கவேண்டும் (2-1)

 

121.ஆசையின் காரணமாக செய்யக்கூடிய எதுவும் அறச் செயல் அன்று; ஆனால் இவ்வுலகில் ஆசையில்லாமல் செய்யும் கருமம் எதுவும் இல்லை. வேதத்தைக் கற்றலும், வேள்வி முதலியவற்றை இயற்றலும் கூட ஆசசையின் காரணமாகவே நடைபெறுகிறது (2-2)

 

122.இந்தச் செய்கையால் இந்தப் பலன் கிடைக்கும் என்று சொல்லுவது சங்கல்பம் எனப்படும்; அதனால் விருப்பம் உண்டாகின்றது. அதனல்தான் வேள்விகள், சடங்குகள் விரதங்கள், நியமங்களைச் செய்கின்றனர்.

 

123.பலனை எதிர்பாராது செய்யும் சடங்கு எதுவுமே இல்லை; ஆசையை ஒழித்தவனுக்கு எந்தவிதச் செயலும் தேவை இல்லை. கொஞ்சம் செய்கை இருந்தாலும் அது காமத்தின்பாலே செய்யப்படுகிறது (காமம்= ஆசை)

 

124.எவன் ஒருவன் பலனை எதிர்பார்க்காமல் எதையும் செய்கிறானோ அவன் மோட்சத்தை அடைகிறான். இந்த உலகத்திலும் விரும்பியதெல்லாம் கிடைக்கும்.

 

125.தர்மத்தின் ஆணிவேர் வேதம் ஆகும். அதற்கடுத்தாற்போல வேதங்களைக் கற்றுணர்ந்த பெரியோர்களின் ஆசார அனுஷ்டானங்களும், அதற்கடுத்த நிலையில் நல்லோரின் நடத்தையும், எது ஒருவனுக்கு மகிழ்ச்சி தருமோ அதுவே தர்மத்தின் அடிப்படையாக அமைகிறது.

அதாவது,

வேதம், ஸ்ம்ருதி, நல்லோர் நடத்தை, மனதிற்கு சுகம் தருவது இந்த நான்கே தர்மத்தின் அடிப்படை

 

126.ஒவ்வொருவர்க்கும் மனு விதித்த தர்மமானது, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. வேதத்தில் எல்லா அறமும் உளது (2-7)

 

  1. கற்றறிந்த ஒருவன் ஞானக் கண்களினால் பார்த்து, இவை அனைத்தையும் வேதத்தில் சொல்லப்பட்டதாகவே அறிந்து அதன் படியே நடப்பானாகுக. (2-8)

 

  1. வேதத்திலும் ஸ்ம்ருதி எனப்படும் சட்டப் புத்தகத்திலும் சொன்னவற்றை எவன் ஒருவன் பின்பற்றுகிறானோ அவன் இக பர சௌபாக்கியங்களைப் பெறுவான். இவ்வுலகத்தில் பெரும் புகழ் பெறுவான்; இறந்த பின்னரோ சுவர்க்கத்தை அடைகிறான்.

 

  1. வேதத்தை சுருதி (கேள்வி) என்றும் தர்ம சாஸ்திரத்தை ஸ்ம்ருதி என்றும் அறிக. இவை இரண்டையும் யாரும் புறக்கணிக்கக்கூடாது; இவை கேள்வி கேட்பதற்கு அப்பாற்பட்டவை. இவற்றினால்தான் அறம் நிலைத்து நிற்கிறது (2-10)

 

130.எவன் ஒருவன் தர்மத்தின் மூலாதாரமான இவ்விரண்டையும் தர்க்க சாஸ்திர யுக்திகளால் எதிர்க்கிறானோ அவனைத் தள்ளிவைக்க வேண்டும்; அவனைக் கர்மானுஷ்டானங்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்; வேதத்தை நிந்திப்பவன் நாஸ்தீகன்; தெய்வம் இல்லை என்று சொல்லுபவன் ஆவான் (2-11)

 

131: தர்மத்தின் அடையாளங்கள் நான்கு:

1.வேதம், 2.நீதி நூல்/ஸ்ம்ருதி, 3.பெரியார்களின் அனுஷ்டானம் (மேலோர் மரபு)/ பெரியார்களின் செய்கைகள், 4.எது ஒருவனுக்கு மகிழ்ச்சி (ஆத்ம திருப்தி )தருமோ அது. இவை சான்றோர் அறிந்த, கண்கண்ட உண்மை.(2-12)

 

xxx

எனது கருத்து:-

 

இரண்டாவது அத்தியாயத்தின் முதல் 11 ஸ்லோகங்களைப் படித்தால் மநு எவ்வளவு பெரியவர், எவ்வளவு பெரிய அறிவாளி, எவ்வளவு நீதிமான் என்பது புலப்படும். சில கடுமையான- சூத்திரர்களுக்கு எதிரான விஷயங்களை

இவர் எழுதி இருக்க முடியாது; அவை இடைச் சொருகல்களே என்பது வெள்ளிடை மலை என விளங்கும்.

 

தர்மத்துக்கு  என்ன அற்புதமான விளக்கம்!

தர்மத்தின் நான்கு அடையாளங்கள்

வேதம், அறநூல்கள், காலாகாலமாக பெரியோர் பின்பற்றும் நடைமுறைகள் எல்லாவற்றுக்கும் மேலான ஒருவனின் மனச்  சாட்சி. நம் எல்லோருக்கும் எது நல்லது எது கெட்டது என்று தெரியும் ஆயினும் ஆசையால், பேராசையால், காம உ  ர்ச்சியால் தவறு செய்கிறோம். நம் எல்லோருக்கும் எது சிற்றின்பம், எது பேரின்பம் என்றும் தெரியும். அதாவது சிறிது நேரம் மட்டும் இன்பம் தருவது எது, வாழ்நாள் முழுதும் இன்பம் தருவது எது , இறந்த பின்னரும் புகழ் தருவது எது என்பது தெரியும். அப்படி இருந்தும் தெரியாதவர் போல நடிக்கிறோம். சிறைச் சாலை நிரம்பி வழியவும், டாக்டர்கள் க்ளினிக்கில் கூட்டம் அதிகரிக்கவும், வக்கீல்கள் ஆபீஸில் கூட்டம் அதிகரிக்கவும் நம் ஆசைதானே காரணம்? மனு எவ்வளவு அழகாக தர்மத்தின் நான்கு அடையாளங்களச் சொல்லிவிட்டார்.

 

அதற்கும் முன்னதாக வேதத்தை நிந்திப்பவன் நாஸ்தீகன் என்று இலக்கணம் கற்பிக்கிறார்.

அதற்கும் முன்னதாக உலக மஹா உண்மை ஒன்றை எடுத்துரைக்கிறார்

ஆசை இல்லதவன் ஒருவனும் இல்லை; வேத கர்மங்களைச் செய்வோனும் எதையோ எதிர்பார்த்தே செய்கிறான். ஆசையில்லாமல் கர்மம் இயற்றுபவன் இக, பர நலன்களைப் பெறுவான் என்றும் அடித்துச் சொல்கிறார் மநு.

இதனால்தான் எல்லா அற நூல்களையும் ஒதுக்கிவிட்டு மநுதர்ம நூலை அனைவரும் ஏற்றனர்.

 

தொடரும்…………..

 

–சுபம்–

இசை மேதையின் அபார ஞாபக சக்தி!

Written by  London Swaminathan 

 

Date: 14 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7-26 am

 

 

Post No. 4493

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஆர்டுரோ டோஸ்கானினி  (ARTURO TOSCANINI) இசை இயக்குநர் ஆவார். ஆரம்ப காலத்தில் அவர் ஸெல்லோ (CELLO) வாத்தியம் வாசிப்பவராக இருந்தார். பிரபல வயலின் வித்வான்கள்; சாஹித்ய கர்த்தாக்ளுடன்க நல்ல தொடர்பு வைத்திருந்தார். வயலின் மேதைகள்  ரோமானினி, என்ரிகோ போலோ, இசை அமைப்பாலர் போல்சோனி ஆகியோர் ஒரு முறை சந்தித்தனர் அவர்கள் அப்பொழுது போல்சோனி எழுதிய அடாகியோ ஒன்றை வாசித்தனர்.

 

அடாகியோ (ADAGIO) என்பது ஆமைவேகத்தில் ஊர்ந்து செல்லும் ஒரு (ITEM) ஐட்டம். நம்மூர் தில்லானாவுக்கு எதிர்ப்பதம் என்றும் சொல்லலாம்.

 

மற்றொருத் தடவை போல்சோனி தவிர மற்ற எல்லோரும் சந்திக்கும் வாய்ப்பு கிடடைத்தது. அவர்களுக்குள் போல்ஸோனி பற்றி சம்பாஷணை எழுந்தது. அடடா! அவருக்குதான் இசை அமைப்பதில் என்ன திறமை? அவர் மட்டும் இப்பொழுது இருந்தால் அடகியோவை மீண்டும் வாசித்து இன்புறலாமே! அதை எழுதி வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று அங்கலாய்த்தனர்.

 

திடீரென்று டோஸ்கானினி  ஒரு பேப்பரும் பென்ஸிலும் கொடுங்கள் என்றார். காகிதம் கையில் கிடைத்தவுடனே, ம்ள மளவென்று அடாகியோவுக்கான நொடேஷன் எல்லாவற்றையும் ஸ்வரம் தப்பாமல் எழுதிக் கொடுத்தார். அனைவரும் அதை வாசித்து மகிழ்ந்தனர்.

அந்த அடாகியோவில் நான்கு பகுதிகள் உண்டு

நம்ம ஊரில் ஒரு சாகித்யகர்த்தா எழுதிய ஒரு பாடலை அவர் கச்சேரி முடிந்து திரும்பியவுடன் அவர் பாடிய புதிய பாடலை ஸ்வரம் தப்பாமல் எழுதிக்கொடுப்பது போலாகும் இது.

 

XXXX

ஆசை, அகந்தை, அலட்சியம்!!!

 

ப்ரூனோ வால்டர்ஸ் (BRUNO WALTERS) நல்ல இசை அமைப்பாளர். மிகவும் அமைதியானவர்; அடக்கம் உடையவர்; பழகுதற்கு இனியர்.

அவர் முதல் தடவை நியூயார்க் பிலார்மானிக் நிகழ்ச்சி நடத்தியபோது முதல் ஸெல்லோ வாத்யம் (CELLIST) வாசிப்பவற்கான நாற்காலியில் ஆல்ப்ரெட் வாலென்ஸ்டைன் (ALFRED WALLENSTEIN)  உட்கார்ந்து கொண்டார்.அத்தோடு நில்லாமல் ஒத்திகை நடந்தபோதும் சரி, இன்னிசை நிகழ்ச்சியிலும் சரி,  நடத்துநர் ப்ரூனோவைக் கண்டுகொள்ளவில்லை. வேண்டுமென்றே அலட்சியம் செய்தார். அங்குமிங்கும் ‘பராக்’ பார்த்துக் கொண்டிருந்தார். வேறு ஒரு இசை அமைப்பாளராக இருந்தால், கோபத்தில் அவரை திட்டியிருப்பார். ஆனால் ப்ரூனோ அவரிடம் சென்று, என்னைத் தனியாகச் சந்தியுங்கள் என்றார்.

 

வாலென்ஸ்டைனும் தனிச் சந்திப்புக்காக வந்தார்.

 

“வாலன்ஸ்டன், உங்களுக்கு என்னதான் வேண்டும்? ஒருமாதிரி இருக்கிறீர்களே, உங்கள் ஆசை அபிலாஷைகள்தான் என்ன? சொல்லுங்கள்”.

 

வாலன்ஸ்டைன் சொன்னார்: “நான் ஒரு சிறந்த இசை நடத்துநர் (CONDUCTOR) ஆக வேண்டும்”.

 

உடனே ப்ரூனோ, அமைதியாகச் சொன்னார்:

“அதற்கென்ன, ஆகுங்களேன் ஆனால் வாலன்ஸ்டைன் போன்றவரை முதல் வரிசையில் உட்கார வைத்துவிடாதீர்கள்!”

 

XXXX

சங்கீத அவுரங்கஸீப்புக்கு சிபாரிசுக் கடிதம்!

 

லியோபோல்ட் ஸ்டோகோவ்ஸ்கி (LEOPOLD TOKOWSKI) என்பவர் பெரிய இசை அமைப்பாளர் (MUSIC CONDUCTOR); அவருக்கு ஒரு பிரபல வயலின் வித்வான் சிபாரிசுக் கடிதத்துடன்,  வேறு ஒரு இளம் வயலின் வித்வானை அனுப்பி இருந்தார்.

 

அது நல்ல சிபாரிசு என்பதால், ‘இப்போதைக்கு பிலடெல்பியாவில் இசைக் குழுவில் இடம் இல்லை. சில நாட்கள் பிலடெல்பியாவில் தங்கினால் ஏதேனும் உதவி செய்வேன்’ என்றார் ஸ்டோகோவ்ஸ்கி.

 

வந்த ஆளின் அதிர்ஷ்டம், ஒரு முக்கியக் கச்சேரிக்கு முன், இசைக்குழு வயலின் வித்வானுக்கு உடம்பு சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

 

ஆகையால் சிபாரிசுக் கடிதத்துடன் வந்தவரிடம் டோகோவ்ஸ்கி வந்து, பீதோவனின் (BEETHOVEN SYMPHONY) பாட்டுக்கு நீங்கள் ஈடுகொடுத்து வாசிப்பீர்களா? என்றார். அவரும் தலையை அசைத்துவிட்டு, அவ்வாறே வாசித்தார்.

 

ஆனால் நேரம் ஆக ஆக அவர் முகத்தில் கொஞ்சமும் சுரத்து இல்லை; பிடிக்காத விஷயமாக இருந்தால் குழந்தைகள் எப்படி நெளியுமோ, முகத்தைச் சுழிக்குமோ அப்படி சுழித்தார்.

டோகோவ்ஸ்கி அவரிடம் சென்று என்ன விஷயம்? என்று கேட்டார்.

உடம்பெல்லாம் சரியா? ஏதேனும் உடம்பு கோளாறா? டாக்டரைக் கூப்பிடவா? என்று கேட்டார்.

அவர் இல்லை என்று சொன்னவுடன்,

மிகவும் கோபத்துடன், பின்னர் ஏன் இப்படி முகத்தை, குரங்கு மூஞ்சி போல வைத்துக்கொண்டு முழிக்கிறீர்கள் என்று விரட்டினார்.

 

அதுவா……….. அதுவா,,,,,,,,,,,,,,,,, எனக்கு சங்கீதம் பிடிக்கவே பிடிக்காது! — என்றார் கோணமூஞ்சி வயலின் வித்வான்!

 

 

Tags:-சங்கீத சம்பவங்கள், அபார ஞாபக சக்தி, வயலின் வித்துவான், அவுரங்கசீப், அகந்தை

 

–சுபம்–

ஏழு வகை ஸ்நானம் , குளியல் முறைகள் (Post No.4490)

Written by  London Swaminathan 

 

Date: 13 DECEMBER 2017 

 

Time uploaded in London-  18-17

 

 

Post No. 4490

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

குளியல் போடுவது எப்படி? ஸ்நானம் செய்வது எப்படி? இந்து மதத்தில் ஏழு வகை ஸ்நானங்கள் சொல்லப் பட்டுள்ளன. அவையாவன:

 

ஏழு வகைகளின் விவரம்:

1.வாருண ஸ்நானம்

ஜலத்தில் அமிழ்ந்து தலை முழுகுவது. ஆற்றிலோ, குளத்திலோ, குழாயடியிலோ, கிணற்றடியிலோ தலையில் தண்ணீர் விட்டுக் கொண்டு செய்யும் குளியல் இது.

 

2.பார்த்திவ ஸ்நானம்:

‘ம்ருத்திகே ஹநமே பாபம்’ என்று தொடங்கும் மந்திரத்தால் தேஹம் முழுதும் சுத்தமான மண்ணைப் பூசிக்கொள்வது; அதாவது மண் குளியல். மேல் நாட்டிலும் கூட MUD BATH ‘மட் பாத்’ பிரசித்தம்.

 

3.ஆக்நேயம்:

அக்னிஹோத்ர பஸ்மத்தை ஈசாநம் முதலிய மந்திரங்களால் தேஹத்தில் பூசுவது (அதாவது திரு நீற்றுக் குளியல்)

 

4.வாயவ்யம்:

பசுக்களின் குளம்பு தூள்களை கோ ஸாவித்ரியால் ஜபித்து உடலில் பூசிக்கொள்வது; அதாவது பசுத் தூசி குளியல்; பசு நிற்கும் இடமும் அதன் கால் தூசும் அவ்வளவு புனிதமானது.

5.திவ்ய ஸ்நானம்

உத்தராயண மத்யத்தில் வெயிலுடன் கூட மழை பெய்யும்போது அதில் நனைவது திவ்ய ஸ்நானம் என்று அழைக்கப்படும்.

 

6.மந்த்ர ஸ்நானம்

பிராமணர்கள் தினமும் மூன்று காலங்களில் செய்யும் ஸந்தியாவந்தனத்தில் வரும் ‘ஆபோஹிஸ்டா’ என்ற மந்திரத்தைச் சொல்லி, மந்த்ரத்தின் ஒவ்வொரு பாதத்தால் கால், தலை, மார்பு, தலை, மார்பு, கால்,  மார்பு, கால், தலை என்ற வரிசையில் தீர்த்தத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். அதாவது இந்த மந்திரங்களால் உடலின் பாகங்களில் நீரைத் தெளித்துக்  கொள்ள  வேண்டும்

 

  1. மாநஸம்

சங்கு சக்ர தாரியாய் சூர்ய மண்டல மத்தியத்தில் தங்க நிறத்தில் பகவான் எழுந்தருளி இருப்பதாகவும் அவர் திருவடி பெரு விரலில் இருந்து கங்கை நதி ப்ரவாஹம் எடுத்து, ப்ரஹ்மரந்த்ரத்தின் வழியாக நம் தேஹத்தில் விழுவதாகவும், அதனால் உள்ளும் புறமும் உள்ள மலம் (அழுக்கு) யாவும் கழிந்து விட்டதாகவும் தியானம் செய்வதே மாநஸம்.

 

இவை தவிர இரண்டு கால்களையும் கைகளையும் முகத்தையும் அலம்புவது பஞ்சாங்க ஸ்நானம் ஆகும்

ஈரத்துணியால் உடம்பு முழுவதையும் துடைத்துக் கொள்வது காபில ஸ்நானம் எனப்படும்

நெற்றிக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் விபூதி அல்லது திருமண் தரிப்பதும் ஒருவகை ஸ்நானம் ஆகும் உடலின் 12 இடங்களில் இந்த அடையாளக் குறி இடுவர்.

நெற்றிக்குத் திலகம் , பொட்டு, திருமண், திருநீறு  இல்லாமல் ஈரத் துணியுடன் செய்வது வேறு காரியங்களாகும்; அதாவது சுப காரியங்கள் அல்ல.

யாரும் ஈரத்துணியுடன் நல்ல காரியங்களைச் செய்யக் கூடாது. குளித்துவிட்டு உலர்ந்த வஸ்த்ரத்தை தரித்துக்கொண்டு (காய்ந்த ஆடையை உடுத்திக்கொண்டு) ஜப, தபங்கள் (தப= தவ) செய்யலாம்.அவரவர் ஆசாரப்படியோ சம்ப்ரதாயப்படியோ நெற்றிக்குத் திலகமிட்டுக்கொண்டு செய்ய வேண்டும்.

 

(காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன ஐந்து வகை ஸ்நானங்களையும் படிக்கவும்)

 

TAGS:– ஸ்நான வகைகள், குளியல் முறைகள், ஏழு

–Subham–