திராவிட (தமிழ)ர்களின் மூட நம்பிக்கைகள் (Post No.3239)

tiger-seal-3  tiger-seal

Picture: Indus Valley Seals with Tiger Gods

Written  by London Swaminathan

 

Date: 10 October 2016

 

Time uploaded in London: 16-22

 

Post No.3239

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

கருப்புத் தோல் உடைய அனைவரும் திராவிடர்கள் அல்லது இந்நாட்டுப் பூர்வ குடிகள் என்றும் மற்றவர்கள் எல்லோரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் என்றும் முத்திரை குத்தினர் நாடு பிடிக்க வந்த வெள்ளைத்தோலினர்.

 

இல்லை திராவிடர்களும் வெளிநாட்டி லிருந்துதான் வந்தனர் என்று கால்டுவெல்களும் கனகசபைகளும் பேசினர். ஆனால் இந்திய இலக்கியங்களோ இங்கே வாழும் மக்கள் அனைவரும் இந்த தேசத்தின் பூர்வ குடிகள் என்றும் உலகெங்கும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டினர் என்றும் ((ரிக் வேதமும், அதர்வண வேதமும், சங்கத் தமிழ் இலக்கியங்களும்)) செப்புகின்றன.

 

நரபலி, எருமை பலி, களிமண் குடிசை முதலிய பல பழக்க வழக்கங்களை திராவிடர்களின் வழக்கம் என்று மதத்தைப் பரப்பவந்தோர் சித்தரித்துள்ளனர். உண்மை என்னவென்றால் வேத கால, இதிஹாச-புராண கால, சிந்து சமவெளி கால, சங்கத்தமிழ் காலங்களிலேயே மலைஜாதி மக்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. சிறிய எண்ணிக்கையில் இருந்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்வு யாரையும் பாதிக்கவில்லை. ஆனால் வெளிநாட்டினர் வந்து, அவர்கள் பகுதிக்குள் நுழைந்தவுடன், காம சம்பந்தமான நோய்களும், அமைதி யின்மையும் பரவின.

 

உலகில் மூட நம்பிக்கைகள் இல்லாத சமுதாயமே கிடையாது. இன்றும் கூட மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள், டெலிவிஷன் கலைஞர்கள், திரைப்பட நடிகர் நடிகையர், அரசியல்வாதிகள்— சட்டையின் நிறம், புறப்படும் நேரம், நாள் பற்றி பலவிதமான நம்பிக்கைகள்– வைத்திருப்பதைப் பத்திரிக்கை பேட்டிகளில் படிக்கலாம். ஆனால் கருணாநிதியாரின் ‘மஞ்சள் துண்டு’ போல இதற்குப் பல விளக்கங்கள் கொடுத்து மழுப்புவர்.

 

இதோ திராவிடர்களின் பெயரில், வெளிநாட்டினர், பட்டியலிட்ட மூட நம்பிக்கைகள்:–

tiger-seal-2

பழங்குடி மக்களின் ‘புலித்தேவன்’

பழங்குடி இனத்தவர் தாங்கள் புலிகளாகவோ பாம்புகளாகவோ மாறமுடியும் என்று நம்புகின்றனர். ஆன்மாவில் பாதி மட்டும் வெளியே சென்று மிருக உரு எடுத்து, எதிரியைக் கொல்ல முடியும் அல்லது ஆடு, மாடுகளைச் சாப்பிட்டு பசியாற்றிக்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். இப்படி பாதி உயிர் வெளியே போகையில் சோம்பேறியாய் விடுவர் அல்லது வேலையே செய்யாமல் சோர்ந்துவிடுவர் என்பது அவர்கள் நம்பிக்கை. (இப்படிப் பல புலித் தேவன் முத்திரைகள் சிந்து வெளியில் கிடைக்கின்றன).

 

பெண் வந்தால் அபசகுனம்

 

கோண்ட் இனத்தினர் வேட்டைக்குப் புறப்படும்போது எதிரில் பெண்கள் வந்தால் அபசகுனம். உடனே வீட்டிற்குப் போய்விட்டு, எல்லாப் பெண்களையும் ம றைந்திருக்கும்படி சத்தம் கொடுத்துவிட்டு வெளியே வருவர்.

 

(இதை எழுதும்போது எனக்கு என்னுடைய சென்னை புரசவாக்கம் சித்தி நாள் தோறும் செய்யும் செயல் நினைவுக்கு வருகிறது. எனது சித்தப்பா பக்ககா தி.மு.க. சாமி, பூமி நம்பிக்கை கிடையாது. ஆனால் சித்தியின் பூஜை வழிபாடுகளைத் தடுக்க மாட்டார். தினமும் அலுவலகம் செல்லும்போது மட்டும் மனைவியின் சொல்லுக்கு, ‘மந்திரத்துக்குக் கட்டுண்ட பாம்பு போல’ கட்டுப்படுவார். முத லில் சித்தி வாசல் வரை சென்று இரு புறமும் எட்டிப்பார்ப்பார். எந்த அபசகுனமும் இல்லை என்று தெரிந்தவுடன் கையால் சைகை தருவார். உடனே, தயாராக வாசலில் நின்றுகொண்டிருக்கும் சித்தப்பா புறப்படுவார். நாங்கள் மதுரையிலிருந்து சென்று அவர் வீட்டில் தங்கும் போதெல்லாம் இதை வேடிக்கை பார்ப்போம். இந்து மத சகுன சாஸ்திரப்படி, விதவை, ஒரு பிராமணன் ஆகியோர் வந்தால் அபசகுனம்)

 

கோண்டு இனப் பெண் மாதவிலக்கு காலத்தில் அந்த வீட்டிலுள்ள யாரும்  வேட்டைக்குப் போக மாட்டார்கள். அப்படிப்போனால் ஒரு மிருகமும் சிக்காது என்பது அவர்களுடைய (மூட) நம்பிக்கை!

crow2

காகா நண்பன்!

கோண்ட் இன மக்கள் காகத்தைக் கொல்ல மாட்டார்கள். காகத்தைக் கொன்றால் ஒரு நண்பனைக் கொன்றதற்குச் சமம்! இதற்கு ஒரு கதை சொல்லுவார்கள். கடவுள் உலகத்தைப் படைத்த காலத்தில் ஒர் வயதான ஆணும் பெண்ணும் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளுடன் வசித்துவந்தனர். கொள்ளை நோய் வந்து ஒருவர் ஒருவர் பின் ஒருவராக ஐந்து பிள்ளைகளும் இறந்தார்கள். பெற்றோர்களோ மிகவும் வயதானவர்கள்; வறியவர்களும் கூட. ஆகையால் சடலங்களை எடுத்துச் சென்று தகனம் செய்ய இயலவில்லை. சடலங்களை வீட்டிற்கு அருகிலேயே தூக்கி எறிந்துவிட்டனர்.

ஒரு நாள் இரவில் அவர்களுடைய கனவில் விஷ்ணு தோன்றினார். ஒரு காகத்தைப் படைப்பதாகவும், அது இறந்தவர்களின் சடலத்தைத் தின்றுவிடும் என்றும் கனவில் சொன்னார். ஆகையால் காகங்கள் நண்பர்கள்.

 

 

ஏழாம் நம்பர் ஆகாது!

seven-fire

குறவர்கள் திருடப் போவதற்கு முன்னால் சகுனம் பார்ப்பார்கள். ஏழு என்ற எண் அவர்களுக்குத் துரதிருஷ்டமானது. ஆகையால் ஏழு பேராகச் செல்லமாட்டார்கள். அப்படி ஏழு பேராகச் செல்ல நேர்ந்தால், கன்னம் வைக்கப் பயன்படும் கருவியை ஒரு ஆளாகக் கருதி எட்டு பேர் என்று சொல்லிக் கொள்வார்கள். போகும் வழியில் விதவை, பால் பானை, மாடு கத்துதல் ஆகியாவற்றை அப சகுனமாக கருதுவர். திருமணமாகி வந்தவன், சிறையிலிருந்து வந்தவன் ஆகியோர் திருட்டுக் கும்பலில் இருக்கக்கூடாதாம்.

 

குறவர் இனப் பெண்கள் நீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் வித்தை முதலியன தெரிந்தவர்கள்.  கணவன்மார்கள் நீண்ட நாட்களுக்குத் திரும்பிவராவிடில் கெட்ட சகுனம் ஆம்.  உடனே ஒரு விளக்குமாற்றுக் குச்சியை எடுத்து , அதில் மேலும் பல குச்சிகளைக் கட்டி எண்ணையில் தோய்த்து தண்ணீரில் மிதக்க விடுவர். அது தண்ணீரில் மிதந்தால் கவலைப்படத் தேவை இல்லை. மூழ்கிவிட்டால் கணவனைத் தேடி மனைவி புறப்பட்டுவிடுவாள்.

 

தமிழர்களின் தும்மல் நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் எழுதிய குறள்கள், பல்லி சொல்லுக்குப் பயப்படுதல், காட்டுப் பன்றி கேட்ட பல்லி சொல்– பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள்  ஆகியவற்றை முன்னரே பட்டியலிட்டுவிட்டேன். எனது பழைய கட்டுரைகளைப் படித்தறிக.

 

sneeze-03

Read also my articles:

சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்,Research Article No.1811; Date: 19th April 2015

புதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற சோதிடம்!!, Research Article No.1669; Dated 23 February 2015.

டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும், ஏப்ரல் 15, 2012

தமிழர்களின் சோதிட நம்பிக்கை

 

Can Birds Predict Your Future? (Posted on 22 July 2012)

Beware of Wagtail Birds: Prediction by Varahamihira (19 February 2015)

How to find water in the Desert? Varahamihira on Water Divination (Posted on 16 February 2015)

Tamil Astrology: Rope Trick for Predictions (Posed on 27 February 2013)

Two Tamil Articles posted on 12 April 2012 on Greek Delphi Oracles and Tamils

Birds and Gods.

 

—SUBHAM–

 

 

 

 

 

பேயை வணங்குவோர் தமிழர்கள்! பிஷப் கால்டுவெல் உளறல்! (Post No.3226)

caldwell-four

Written by London Swaminathan

 

Date: 7 October 2016

 

Time uploaded in London: 11-12 AM

 

Post No.3226

 

Pictures are taken from various sources; thanks.

 

caldwell

கால்டுவெல் பாதிரியார் (BISHOP CALDWELL) அதிபயங்கர உளறல் பேர்வழி. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அவருடைய நூலுக்கு எவ்வளவு பாராட்டுதல்கள் கிடைத்ததோ அவ்வளவுக்கு மறுப்புரைகளும் எழுந்தன. ஆனால் இரண்டையும் படித்தறியாத அசடுகள் இன்று வரை அவரைப் புகழ்ந்துகொண்டு நிற்கும்.

 

கால்டுவெல்லின் மிகப்பெரிய உளறல் சம்ஸ்கிருதம் பற்றியதாகும். அவரது நூலை வெளியிட்ட எல்லோரும் அடிக்குறிப்பில் மன்னிப்புக் கேட்கும் தொனியில் “இது கால்டுவெல்,அறியாமையின் காரணமாக எழுதியது” என்று எழுதிச் சேர்த்துள்ளனர். சம்ஸ்கிருதத்தில் இலக்கியம் எதுவும் இல்லை என்று அந்த அசடு உளறி வைத்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பிஷப் கால்டுவெல்லின் அறியாமைக்கு வேறு உதாரணங்களும் தருவேன். சாணார் ஜாதியினர் பேயை வணங்கு கின்றனர் என்றும் தமிழர்கள் அனைவரும் பேயை வனங்குவோர் என்றும் ஆரியர்   னைவரும் தெய்வங்களை வணங்குவோர் என்றும் அது எழுதிவைத்துள்ளது.

 

சம்ஸ்கிருதத்திலுள்ள எல்லா கடவுள் பெயர்களும் தெய்வத்தைக் குறிக்கும் பெயர்கள் என்றும்  தமிழில் உள்ள எல்லா தெய்வப் பெய ர்களும் “பேய்” அடிப்படையில் அமைந்தவை என்றும்  இதை திருநெல்வேலி சாணார் வழிபாட்டின் மூலம் கண்டுபிடித்ததாகவும் கால்டுவெல் பாதிரியார் ‘திருவாய் மலர்ந்து அருளி’ இருக்கிறார். இதை அவர் எழுதிய சில வருடங்களுக்குள்ளேயே ஈ. கோவர் (E Gower) என்ற வெள்ளைக்காரர் அவருக்கு சம்மட்டி அடி கொடுத்துவிட்டார். தென்னிந்திய நாட்டுப்புற பாடல்களை எல்லாம் தொகுத்து 1871 ஆம் ஆண்டில் கோவர் வெளியிட்ட நூலின் முன்னுரையில் செமை அடி — சொல்லடிதான் — கல்லடி அல்ல — கொடுத்து இருக்கிறார்.

 

பேய் என்பது “பே, பிணம்” என்பதுடன் தொடர்புடைய சொல் என்றும் ஆனால் ஆரியர்களின் “தெய்வ என்பது தேவ” என்ற சொல்லுடன் தொடர்புடையதென்றும் கால்டுவெல் பிதற்றினார்.

 

கோவர் மறுப்புரையில் பேய் என்பது “பை—சாச” என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து பிறந்தது என்றும் பெண், பெண்ணு என்பது ஒளியைக் குறிக்கும் என்றும் எழுதினார். கோண்ட் இனப் பழங்குடியினர் “பூரா பெண்ணு, பெல்லா பெண்ணு, தாரி பெண்ணூ” என்றெல்லாம் கடவுள் பெயர்கள் வைத்துள்ளனர். அதில் பெண்னு என்பது ஒளி என்பதாகும் பெல்லா பெண்ணு என்பது சூரியனைக் குறிக்கும் என்றும் கோவர் எழுதினார்.

 

அத்தோடு நில்லாமல் கால்டுவெல் தூய தமிழ்ச் சொல் என்று கொடுத்துள்ள பட்டீயல் முழுதும் வடமொழிப் பெயர்கள் என்பதை வேறு ஒரு வெள்ளைக்காரர் மறுத்து எழுதியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

தேவன் DEVA (கடவுள்)  என்பதும் டீமன் DEMON (பேய்) என்பதும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சொல்லே. ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றைப் பயன்படுத்தலாம் (INTER CHANGEABLE); இரண்டும் ஒளி எனப் பொருள்படும் என்பதும் அவரது துணிபு.

“பா” என்ற சம்ஸ்கிருதச் சொல் ஒளியைக் குறிக்கும்.

 caldwell-book

எனது கருத்து

நான் கோண்டு இன ஆராய்ச்சியில் இறங்கியிருக்கும் தருணத்தில் எனக்கு கோவரின் 1871ஆம் ஆண்டு புத்தகம் கிடைத்தது வியப்பை உண்டாக்கியது. ஏனெனில் எனது கருத்தை வலுப்படுத்துல் சில வாக்கியங்களை அதில் கண்டேன். அவர் சம்ஸ்கிருதத்திலிருந்து இவை தமிழுக்கு வந்ததா? அல்லது தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்துக்குப் போனதா என்று தெரியாது என்று எழுதியுள்ளார்.

 

நான் சிவனின் உடுக்கை ஒலியின் ஒரு புறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் மற்றொரு புறத்திலிருந்து தமிழும் வந்ததாகவும் அதனால்தான் வட இமய வெள்ளிப் பனித் தலையனான அகத்தியனை தமிழுக்கு இலக்கணம் எழுத சிவன் அனுப்பினான் என்றும் எழுதினேன். அது மட்டுமல்ல; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் மூல மொழி ஒன்று உண்டென்றும் உ லகிலுள்ள பழைய மொழிச் சொற்கள் அனைத்தும் இந்தியர்கள் கற்பித்ததே என்றும் எனது ஆராய்ச்சி முடிபை எழுதினேன். இதனால்தான் ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருக்கிறது என்றும் எழுதினேன். அது எல்லாம் இப்பொழுது வலுப்பட்டு வருகிறது.

 

இதை எல்லாம் ஆராயும் போது இன்னொரு பேருண்மை வெளிச்சத்துக்கு வந்தது. எகிபது நாட்டின்ன பிரமிடுகளில்  திருமூலர் கருத்துகள் இருப்பதை ஒரு கட்டுரையில் தந்தேன். வேத மந்திரங்களின் மொழி பெயர்ப்பு இருப்பதி ந்னும் சில கட்டுரைகளில் ஹந்தேன். எகிப்திய பிரமிடு கட்டினோர் சூத்ர (நூல் பிடித்தல்) முறை கொண்டு கோணததை அலந்தௌ வடமொழியில் இருப்பதை எல்லாம் ஆதாரம் காட்டினேன். கோவர் கட்டுரையை படித்துவிட்டு கடவுள் பெயர் கலைக் களஞ்சியத்தைத் திரந்து பார்த்தால் அங்கேயும் பெண்ணு என்ற கடவுள் ஒளிக்கடவுள்– சூரியனைக் குறிப்பது- என்று என்சைக்ளோபீடியா சொல்கிறது.

 

பேனு

எகிப்தியரின் சூரிய கடவுள்.— கி.மு. 2500 வாக்கில் எகிப்திய பிரமிடுகளில் காணப்படும் பெயர். — பறவை வடிவத்தில் குறிக்கப்படுகிறது.— ஹீலியோபாலிஸில் (Heliopolis) ஆதம் ATUM என்ற சூரியக்கடவுளுடன் தொடர்பு படுத்தபடும் சொல்.  ஆதிகா ல கடலில் இருந்து படைக்கப்பட்டது. மறுபிறப்பையும் பரலோக வாழ்வவையும் குறிப்பது. ஒருவேளை தீயிலிருந்து மீண்டும் உயிர்த்தெ ழும் பீனிக்ஸ்  PHOENIX என்ற பறவைக் கதை இதிலிருந்துதான் உருவானது போலும். ஏனெனில்  முதலில் வாலாட்டிக் குருவிப் பறவையாகவும், பின்னர் நாரையாகவும் காட்டப்படுகிறது. UPPER EGYPT  “மேல் எகிப்து” மன்னர் கிரீடத்தில் இரண்டு இறக்கைகளாகக் காட்டப்படுகிறது.

caldwell-book-2

பூரா பெண்ணு

இது ஒரிஸ்ஸா மாநிலத்தில் கோண்ட் இன மக்களின் ஒளிக்கடவுள். பூமிக்கடவுளான தாரிப்  (தரை = தரணி == தாரி=Terra = Terrain) பெண்ணையும் பல கடவுளரையும் உண்டாக்கியது. மரியா என்னும் சடங்கில் நரபலி கொடுக்கப்பட்ட தெய்வம் இது.

 

இவை இரண்டும் கடவுள் பெயர் என்சைக்ளோபீடியாவிலிருந்து (Encyclopaedia)  எடுக்கப்பட்டவை. எல்லா விஷயங்களும் வேதத்திலும் தமி ழிலிலும் உள்ள சொற்கள்.

வேதத்தில் ‘சுபர்ண’ SUPARNA என்ற பொன்னிறப் பறவையை சூரியனுடன் ஒப்பிடுவர். அதுவே பிற்காலத்தில் விஷ்ணுவின் வாஹனம் ஆகியது.

 

பெண் என்பவளை “மனைக்கு விளக்கு” என்று புறநானூறு  ம் மனு தர்ம சாத்திரமும் போற்றுகின்றன. பெண் என்பதை விளக்கு, ஒளி என்று இந்துமதமும் பாராட் டுகிறது. “பெண்”ணு என்பது பேணுதல் என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும் கருதலாம்.

 

எது எப்படியாகிலும் பெண்ணு என்பது ஒளி என்பது கோண்ட் இனத்திலும் எகிப்திலும் இருக்கி ற து. மரியா என்ற சொல் ம்ருத்=மரணம் MORTAL என்பதுடன் தொடர்புடையதால் நரபலிக்கு கோண்ட் இன மக்கள் ‘மரியா’ சடங்கு என்பர். அவர்களை திராவிட இனம் என்று வெள்ளைக்கார எழுதுவர். சிந்து சமவெளி, எகிப்து நரபலி முதலியன குறித்து நான் எழுதிய விஷ்யங்களையும் படித்து ஒப்பிடுக.

 

கால்டுவெல் எழுதிய தூய தமிழ் சொற்கள் எப்படி வடமொழிச் சொறள் என்று நிரூபிக்கப்பட்டதோ அதே போல பைபிளிலுள்ள  கபி, துகி என்பன தமிழ்ச் சொற்கள் என்று கென்னடி கூறியது தவறு என்று நானும் நிரூபித்து கட்டுரை எழுதினேன். நீர் என்ற ரிக்வேதச் சொல் கிரேக்கத்திலும் இருப்பதால் அது தமிழ் சொல் என்று சுநீத் குமார் சாட்டர்ஜி எழுதியது தவறு என்றும் ஒரு கட்டுரையில் காட்டினேன்.

 

இப்பொழுது எல்லாவற் றை யும் மறந்துவிட்டு உலக மொழிகள் அனைத்தும், தமிழ்–சம்ஸ்கிருத மூல மொழியில் இருந்து வந்தன என்று பார்த்தால் அதுவே சரி என்று தோன்றுகிறது. கி.மு 2500ஆம் ஆண்டிலேயே எகிப்திய பிரமிடுகளில் “பெண்ணு” இருப்பதால் என் கருத்து மேலும் வலுப்படுகிறது.

 

–subham—

 

 

கோண்ட் பழங்குடி இன நட்புறவு ஒப்பந்தம் (Post No.3222)

pic-gaund

Written by London Swaminathan

 

Date: 6 October 2016

 

Time uploaded in London:5-45 AM

 

Post No.3222

 

Pictures are taken from various sources; thanks.

 

 

Contact swami_48@yahoo.com

 

 

 

கோண்ட் இன மக்களை திராவிடப் பழங்குடி என்றும் அவர்களுடைய “கோண்டி” மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் வெள்ளைத் தோல் “அறிஞர்”களும் அவர்களை ஆதரிக்கும் திராவிடங்களும் மார்கஸீயங்களும் கதைக்கும்.

 

நேற்று,  முதல் பகுதியில் அவர்களுடைய விநோத வழக்கங்களைப் பட்டியலிட்டேன். சில வழக்கங்கள் பிராமணர்கள் வழக்கங்களை ஒத்திருக்கும். மற்ற பல காட்டுமிராண்டித் தனமான வழக்கங்களாக இருக்கும்.

 

கோண்ட் இன மக்களுக்கு மாய மந்திரங்களில் நம்பிக்கை உண்டு. விசாகப் பட்டிணம் பகுதியில் கோண்ட் இன மக்களிடையே நடந்த ஒரு படுகொலை சென்னை போலீஸ் ரிகார்டுகளில் இருக்கிறது.

 

மூன்று சகோதரர் உள்ள குடும்பத்தில் இளைய சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவரது சடலத்தை எரித்தபோது சடலத்தின் மேல்பகுதி எரியவில்லை. இது எதிரிகள் செய்த பில்லி சூனிய வேலை என்று 2 சகோதரர்கள் கருதினர். யார் மீது சந்தேகம் எழுந்ததோ அந்த கோண்ட் இன ஆளைக் கொன்று அவரது சடலத்தை வெட்டி மேல்பகுதியை, இளைய சகோதரர் சடலத்தின் மேல்பகுதி எரிய மறுத்த இடத்தில் வீசினர்.

 

இந்தக் குற்றத்துக்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது போலிஸ் குறிப்பேடுகளில் இருப்பதாக ஆர்தர் மைல்ஸ் என்பவர் எழுதிய புத்தகத்தில் உள்ளது.

 

ஒரு கிராமத்தில் காலரா நோய் பரவிவிட்டால் அவர்கள் பன்றிக் கொழுப்பை மேலே தடவிக்கொண்டு வளைய வருவர். காலரா நோய் ஒழியும் வரை இது நீடிக்கும். பன்றிக் கொழுப்பானது காலராவை உண்டாக்கும் தேவதையை விரட்டிவிடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

 

அந்த தேவதை கிராமத்துக்குள் நுழையாமல் இருக்க வழிகளில் பள்ளங்களைத் தோண்டி அதில் முட்களை நிரப்பி நாற்றம் வீசும் எண்ணையையும் ஊற்றி வைப்பர்.

 

கோண்ட் இன மக்கள் ஒரு நட்புறவு பிரமாணம் (உறுதி மொழி) எடுப்பர். புரி நகர ஜகந்நாதர் ஆலயத்து அட்சதை (புனித அரிசி) மீது சத்தியம் செய்வர். இந்துக்களின் ஏழு புனிதத் நகரங்களில் ஒன்றான புரி (ஒரிஸ்ஸா) ஆலயத்துக்குச் செல்லுவோர் இந்த அட்சதையை வாங்கி யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விநியோகிப்பர். அந்த புனித அட்சதை ஒருவர் கையில் இருக்கும்போது அவர்கள் பொய் சொல்லக்கூடாது. கிராமங்களில் உள்ள ஏழைக் குடியானவர்களுக்கும் நகர மாந்தர்களுக்கும் இடையே இப்படி நட்புறவு ஒப்பந்தம் செய்வதுண்டு. இப்படி ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டால் திருவிழாக் காலங்களில் அவர்கள் பரிசுகளை ஒருவருக்கொருவர் கொடுப்பர். ஒருவர் வீட்டு விழாவுக்கு மற்றொருவரை அழைப்பர்.

 

நட்புறவு சத்தியப் பிரமாணம் செய்த இருவரில் ஒருவர் இறந்துவிட்டாலும் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவர். இதற்கு “சொங்காதோ” என்று பெயர் (சங்காத்தம்) பழங்குடி மக்களிடையே பல தலைமுறையினருக்கு இடையேகூட இப்படிப்பட்ட நட்புறவு நீடிக்கும்.

 

மற்றொரு பழங்குடி இனம் சிறுத்தைப் புலியின் தோல் மீது நின்றோ அல்லது மயில் இறகைக் கையில் வைத்துக்கொண்டோ சத்தியப் பிரமாணம் செய்வர்.

pic-gond

வாக்குறுதியின் பெயரில் இப்படிப்பட்ட நட்புறவு, பல தலை முறைகளுக்கு நீடிப்பது சத்தியத்தின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. எவ்வளவுதான் வன்முறை, மூட நம்பிக்கை இருந்தாலும் சங்க இலக்கியம் குறிப்பிடும் “வாய்மொழிக் கோசர்” (Truthful Kosas of Sangam Tamil Literature)  போல கோண்ட் இன மக்களும் ‘சத்திய கோண்ட்’ இனத்தினரே.

 

கோண்ட் இனம் உருவானது பற்றி ஒரு நரபலிக் கதையும் இருக்கிறது. பூமியில் முதலில் இரண்டே பெண்கள்தான் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பூமிக்கடியிலிருந்து புதல்வர் இருவர் கிடைத்தனர். ஒரு பெண்மணி செடிகொடிகளை வெட்டும் போது கை விரலில் கத்தி படவே ரத்தம் வழிந்தோடி தரையில் விழுந்தது. அந்த இடம் காய்ந்து அதிலிருந்து மரம் செடி கொடிகள் உருவாயின. அதைச் சமைத்தபோது சுவையாக  இருந்தது. அவளுடைய மகன் காரணம் கேட்டான். உடனே அவள் தன் மகனை அழைத்து என்னைத் தாயென்று எண்ணித் தயங்காதே. என் முதுகை வெட்டிப் புதை என்றாள். அவனும் அப்படியே செய்தான். உலகில் ஜீவ ராசிகள் உண்டாயின. அதிருந்து அவர்கள் ஆண்டுக்கு ஒரு சிறுவனை நரபலி கொடுக்கத் தீர்மானித்தனர். போரா பெண்ணு என்ற கடவுளுக்கு இப்படி நரபலி கொடுக்கப்படும்.

 

இப்போது நரபலிக்குப் பதிலாக எருமை பலி தரப்படுகிறது. ஆனால் கோண்ட் இன பூசாரி சொல்லும் உச்சாடனம் நரபலி உச்சாடனமே: “ஆண் அடிமையே வா, பெண் அடிமையே வா; நீ என்ன சொல்லுகிறாய்? ஹட்டியினால் நீ சிறைப் பிடிக்கப்பட்டய். டொம்பாவினாவால் நீ சிறைப் பிடிக்கப்பட்டாய். நீ எனது குழந்தையாகவே இருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்?  ஒரு பானைச் சோற்றுக்கு நீ விற்கப்பட்டுவிட்டாய்”.

 

தமிழ்க் கடவுள்களா?

 

கோண்ட் இன நரபலியில் தொடர்புடைய இரண்டு கடவுளரும் தமிழ்ப் பெயர்கள் உடைய கடவுளர். போரா பெண்ணு,  தரைப் பெண்ணு; இந்தச் சடங்கிற்கு மறியா (மறித்தல்=இறத்தல்) என்று பெயர். மரியா என்பது “ம்ருத்” என்ற சம்ஸ்கிருத வேர்ச் சொல்லில் இருந்து வந்தது. தீவிரமாக ஆராய்ந்தால் சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் மூலமான வேர்ச் சொல் கிடைக்கும். பெண் என்பதும் அந்த மூலச் சொல்லில் இருந்தே வந்தது என்பது புரியும். தரை என்பது “தரணி” என்ற சம்ச்கிருத சொல்லில் இருந்து வந்தது. மற்ற மொழிகளில் இது டெர்ரா TERRA என மருவி வரும்.

 

 

சிந்து சமவெளியிலும் நரபலி காட்சி இருக்கிறது. சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே என்று வாதிடுவோர் இந்த நரபலிக் காட்சியை கோண்ட் இன திராவிடக் குடிகளுடன் ஒப்பிடுவர். உலகில் நரபலி இல்லாத நாகரீகமே கிடையாது. வேதத்திலும் “புருஷ மேத யக்ஞம்” இருக்கிறது. ஆனால் இது நடந்ததற்கான சான்று வேதத்தில் கிடையாது. கம்பத்தில் நரபலிக்காகக் கட்டப்பட்டிருந்த ஒரு சிறுவனையும் புரட்சிக் கவிஞன் விஸ்வாமித்திரன் விடுதலை செய்ததாகவே இருக்கிறது. ஆதி சங்கரரை நரபலி கொடுக்க காபாலிகர் முயன்றபோது அவரது சீடர்களில் ஒருவரே நரசிம்மாவதாரம் எடுத்து அந்தக் காபாலிகனை துவம்சம் செய்ததாகவே இருக்கிறது.

 

 

-subham–

 

 

 

 

 

 

கோண்டு இன மக்களின் விநோதப் பழக்க வழக்கங்கள் -Part 1 (Post No.3219)

india-group-of-gonds

Compiled by London Swaminathan

 

Date: 5 October 2016

 

Time uploaded in London: 6-30 AM

 

Post No.3219

 

Pictures are taken from various sources; thanks.

 

 

Contact swami_48@yahoo.com

 

 

 

 

ஒரிஸ்ஸா, ஆந்திரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேச எல்லைப் பகுதி காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் கோண்ட் இன மக்களை திராவிடர்கள்  வெள்ளைக்கார அறிஞர்கள் முத்திரை குத்தி வைத்துள்ளனர். நட்புறவு ஒப்பந்தம் முதல் நரபலி வரை பலவகை விநோத வழக்கங்களை உடையவர்கள் இவர்கள்.

 

எல்லா கருப்புத் தோல் ஆட்களையும் திராவிடர்கள் என்று வெள்ளைக்காரர்கள் முத்திரை குத்தினாலும் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையில் “ஸ்நானப் ப்ராப்தி” உறவு கூடக் கிடையாது! இதைப் பற்றி படித்தவர்கள் அவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கலாம்!

 

காண்டவ இனப் பழங்குடி நாகர்கள் பற்றி மஹாபாரதத்தில் உள்ள விஷயங்களையும், கிருஷ்ணனுக்கும் அவர்களுக்கும் நடந்த மோதலுக்குப் பிறகு அவர்கள் தென் அமெரிக்காவுக்குக் குடியேறி அஸெடெக், மாயன் நாகரீகங்களுக்கு அடிகோலியதையும் முன்னரே எழுதியுள்ளேன். கோண்ட் என்னும் சொல், காண்டவ வனம் என்பதிலிருந்து வந்ததையும் அதிலிருந்தே GONDWANA LAND கோண்ட்வானா (காண்டவ+வன) லாண்ட் என்ற சொல் வந்ததையும் முன்னரே எழுதிவிட்டேன்.

 

gond-women-grinding-corn

 

சில வழக்கங்களை மட்டும் காண்போம்.

 

கோண்ட் இன மக்கள் மண் சுவர் எழுப்பிக் குடிசை கட்டுகின்றனர்.

(சிந்துசமவெளியிலிருந்து விரட்டப்பட்டவர்களாக இருந்திருந்தால் அவர்கள் இப்படி மண்குடிசைகளில் வசிக்காமல் செங்கல் வீட்டில் வசித்திருப்பார்கள். வெள்ளைக்கார திருடன் தத்துப் பித்து என்று உளறியதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு).

 

அவர்கள் மஞ்சள் முதலியவற்றைப்  பயிரிடுகின்றனர். மஞ்சளை இரத்த பலி தொடர்பான சடங்குகளில் பயன்படுத்துவர். மஞ்சளே இரத்தத்தின் சிவப்பு நி ற த்திற்குக் காரணம் என்பது அவர்களின் நம்பிக்கை.

 

ஆண்களும் பெண்களும் முடியை நன்கு அலங்கரிப்பர். பெண்கள் மலர் சூடி மான் கொம்பு ஊசிகளை கொண்டை ஊசியாகப்   பயன்படுத்துவர்.

ஆண்கள் வேஷ்டி போன்ற ஒரு துணியையும், பெண்கள் புடவை போல ஒன்றையும் மேலே சுற்றிக்கொள்வர். பெண்கள் கல்யாணம் ஆகும்வரை காதில் தோட்டுக்குப் பதிலாகக் குச்சியைச் சொருகிக் கொள்வர். கல்யாணமான பின்னர் காதில் தோடுகள் அணிவர். காப்பு, மூக்குத்திகளையும் அணிவர்.

 

(சில அறைகுரை ஆராய்ச்சியாளர்கள் இந்த மூக்குத்தி அணியும் வழக்கமெல்லாம் வெளி நாட்டிலிருந்து வந்ததென்று எழுதியுள்ளனர். ஆனால் பழங்குடி மக்களிடையே இதை யார் புகுத்தியது?)

 

பெண்களிடையே ஒழுக்கம் குறைவுதான். பழம் பறிக்க, மீன் பிடிக்க என்று காட்டிற்குள் போவார்கள்; கள்ளத் தொடர்பு ஏற்படும் பின்னர் பெற்றோர்கள் கல்யாணம் செய்துவைப்பர்.

பெண்களுக்கு ஒரு “கோண்டி” சீதனம் தர வேண்டும்; ஒரு “கோண்டி” என்பது ஒரு ஆடு அல்லது ஒரு பன்றி அல்லது, ஒரு பித்தளைப் பானை ஆகும்.

 

கோண்ட்,  தனது கிராமத்துகாரரைத் திருமணம் செய்யக் கூடாது (பிராமணர்கள் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யமாட்டார்கள் என்பதைப் போல)

 

பெண்ணை, அவளுடைய மாமன் தூக்கிக் கொண்டுபோய், மணமகன் வீட்டில் விட வேண்டும். அவளை ஒரு சிவப்புக் கம்பளத்தில் சுற்றி தூக்கிக் கொண்டு செல்வர் ( பிராமணப் பெண்கள் சிவப்பு நிறக் கூரைப் புடவை கட்டிக் கொண்டு தாலி கட்டிக்கொள்வதையும், மாமன் தோளில் ஏறி மால மாற்றிக் கொள்வதையும் ஒப்பிடுக)

gonds1

(ஆரியர்- திராவிட என்று பகச் சொல்லி கேளிர் பிரிப்போரைப் பார்த்து நகைக்க இவை எல்லாம் உதவும்).

 

கிராம எல்லையில்  பெண் வீட்டுக்காரர்களை மணமகன் வீட்டுக்காரர்கள் கம்பு கொண்டு தாக்கி வேடிக்கை செய்வர். சில நேரத்தில் பெண் வீட்டுக்காரகள் தா குவதும் உண்டு. மணமகன் வீடு செல்லும்வரை இந்த சண்டை நீடிக்கும். ( பிராமணர் திருமணத்தில் நடக்கும் காசி யாத்திரை, திரு மணத்துக்குப் பின்னர் நடக்கும் நலுங்குப் போட்டிகள் ஒப்பிடற்பாலது)

 

திருமண விருந்தில் ஒரு பன்றி அல்லது எருமையை வெட்டி உண்ணுவர். குடித்துவிட்டு கூத்தாடுவர். மூன்று நான்கு நாட்களுக்குப் பின்னர் மணமகனின் சகோதரன் ஒரு விருந்து கொடுப்பார்.

பெண்ணே நீ நல்லபடி நடந்துகொண்டால், புலி போல ஒரு மகன் பிறப்பான். கண்டபடி நடந்தால் உனக்கு குரங்குதான் பிறக்கும் என்று சகோதரன் புத்திமதி சொல்லுவான். கூடியிருக்கும் பெரியோர் அனைவரும், உனக்கு நிறைய ஆண்பிள்ளைகள் பிறக்கட்டும் என்று ஆசீர்வாதம் செய்வர்.

 

சில கோண்ட் இன மக்கள் பெண்ணின் கைகளில் 20 அல்லது 30 பவுண்டு எடையுள்ள பித்தளை விலங்கு பூட்டுவர். அப்படி மூன்று நாட்களுக்கு வைப்பர். அப்பா வீட்டுக்கு (பிறந்தகத்துக்கு) ஓடிவிடக்கூடாதென்பதற்காக.

 

(அந்தக் காலத்தில் பெண்ணை கடத்தி வந்து கல்யாணம் செய்ததால் இது வழக்கத்தில் வந்திருக்கலாம் (மனுவும் தொல்காப்பியரும் சொல்லும் எண்வகை திருமணங்களில் இவ்வகை இராக்கத திருமணமும் ஒரு வகையாகும்).

 

சிலந்தியின் சாம்பல்

பிரசவம் பார்க்கும் தாதி கர்ப்பிணியின் வயிற்றில் விளக்கெண்ணை தடவுவார். ஒரு சிலந்தியை மெழுகுவர்த்தித் தீயில் எரித்து சாம்பலை விளக்கெண்ணையில் குழைத்து பிறந்த குழந்தையின் தொப்புளில் தடவுவார். ஒரு மாதம் வரை குங்குமப்பூ/  விளக்கெண்ணை சாந்தையும் பூசுவர்.

 

பிறந்த ஆறாவது மாதத்தில் பெயர் சூட்டும் வைபவம் நடக்கும். ஒரு அரிவாளையும் அரிசியையும் பயன்படுத்துவர்.முன்னோர்களின் பெயர்க ளைச் சொல்லுவர். மேலிருந்து தொங்கும் அரிவாள் எந்தப் பெயர் சொல்லும்போது நகர்கிறதோ அந்தப் பெயரை குழந்தைக்கு வைப்பர். எல்லோருக்கும் விருந்து படைப்பர்.

 

கோண்ட் இன மக்களின் ஈமச் சடங்குகளும் வேறுபட்டவையே. சடலத்தை எரித்துவிட்டு அந்த இடத்தில் சமைத்த சோறை வைப்பர்; (பிராமணர்களின் பிண்டக் கிரியை ஒப்பிடுக) மந்திர உச்சாடனம் செய்து உணவைச் சாப்பிடச் சொல்லுவர். அந்த ஆவியை புலி உடலிலோ, பேயின் உடலிலோ புகாமல் இருக்க வேண்டுவர்.

 

ஒருவர் இறந்த மூன்றாம் நாளன்று இறந்தவரின் உருவ பொம்மை செய்து, அதை இறந்தவரின் வீட்டுக் கூரையில் வைப்பர். எல்லா உறவினர்களும் நண்பர்களும் அதைப் பார்த்து அழுவர். ஏழாவது நாளில் ஒரு எருமை மாட்டை பலி கொடுத்த பின்னர் தீட்டு கழியும்.

 

சில கோண்ட் இனங்களில் பிணத்தின் காலில் ஒரு ஆட்டை கட்டி தர தர என்று இழுத்துச் செல்லுவர். சுடுகாட்டுக்குச் சென்ற பின்னர் கட்டி அதை அ வி ழ்த்து விடுவர்.

 

 

ஈமச் சடங்குகளில் ஆண்களின் நடனமும் இருக்கும். 12ஆம் நாளன்று பெரிய ஆட்டமும் எருமை மாட்டு மாமிசத்துடன் விருந்தும் நடைபெறும்.

 

(எனது கருத்து:– இறந்தோருக்கு எருமை மாட்டை பலி கொடுப்பது நீலகிரி தோடர்கள் இனத்திலும் உண்டு. சொல்லப்போனால் எங்கு எல்லாம்  எருமைகள் வசிக்கின்றனவோ அங்கெல்லாம் இது இருக்கிறது. எமனின் வாஹனம் எருமை என்பதால் இப்படி இருக்கலாம். இந்தோநேஷியாவின் செலிபிஸ் தீவுகளில் 10 எருமைகள் வரை பலி கொடுப்பர்)

நட்புறவு ஒப்பந்தம், நர பலி முதலியன குறித்து அடுத்த பகுதியில் காண்போம்

 

தொடரும்……………….

 

சிவ பெருமானுக்கு மீசை! விஷ்ணுவுக்கு ‘ஷேவ்’ ஏன்? (Post No.3215)

siva-ravi-varma

Written by London Swaminathan

Date: 3 October 2016

Time uploaded in London: 12-36

Post No.3215

Pictures are taken from various sources; thanks.

Contact swami_48@yahoo.com

வேதத்தில் உள்ள நூற்றுக் கணக்கான சொற்களை இன்றும் தமிழர்கள் உள்பட நாட்டிலுள்ள எல்லோரும் பயன்படுத்துவது வியப்புக்குரிய்து. உலகிலேயே பழமையான நாகரீகம் இந்து நாகரீகமே என்பதையும் உலகிலேயே பழைய மொழிகள் சம்ஸ்கிருதமும் தமிழும்தான் என்பதையும் இது காட்டும்.

 

கேசம் என்ற சம்ஸ்கிருதச் சொல் இன்றும் கூந்தல் வளர் தைல விளம்பரங்களிலும் பெயர்களிலும் இருப்பதை முந்தைய கட்டுரைகளில் கண்டோம்.

 

முடி என்பது தலை முடியையும், மன்னர் முடியையும் (கிரீடம்) குறிக்கும் என்பதுமிரு மொழிகளுக்கும் பொது. இது இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்தவை என்பதைக் காட்டும். ஆரிய மொழிக் குடும்பம் – திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் பிதற்றல் என்பதையும் விளக்கும்.

indus-valley-priest

சிந்து சமவெளி யோகி முத்திரையில் காணப்படும் குருவின் தாடி விநோதமாக இருப்பது பலருக்கும் பெரும் புதிராக இருக்கிறது.

 

இதைவிட வேடிக்கை இந்துமதக் கடவுளரின் உருவங்களின் வரை படங்கள் வெவ்வேறாக இருப்பதாகும். புகழ் பெற்ற ரவி வர்மா வரைந்த ஓவியங்களில் சிவன் மீசையுடன் காட்சி தருவார். இன்னும் சில சிலைகளில், குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சிவன், இந்திரன் முதலியோர் மீசையுடன் காணப்படுவர். ஆனால் எல்லா இடங்களிலும் விஷ்ணு, கிருஷ்ணன் ஆகியோர் நல்ல ‘ஷேவ்’ (சவரம்) செய்த முகத்துடன் காட்டப்படுவர். இது ஏன் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

 

இதை விட வியப்பான விஷயம் சிகை (குடுமி) என்ற வேத கால சம்ஸ்கிருதச் சொல்லாகும். பிராமணர்கள் இன்றும் இந்தச் சொல்லை பயன்படுத்துவதில் வியப்பில்லை.ஆனால் கிராமப்புறத் தமிழர்களும் இதை பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்பதைத் தெளிவாக்கும்.

 

சிகைக் காய் பொடி (சீயக்காய் பொடி) என்பதை அறியாதோர் இல்லை. எண்ணை தேய்த்துக் குளிப்போருக்கு இது அவசியம். சிகை+ காய் = சீயக்காப் பொடி. சிகை என்பது குடுமி என்னும் பொருள்படும் சம்ஸ்கிருதச் சொல்!

 

வேத காலத்தில் வாழ்ந்த இரண்டு குருமார்களின் பெயர் சிக, அனு சிக. இதைக் குடுமி, துணைக் குடுமி என்றும் மொழி பெயர்க்கலாம். சிக என்பது சிகரம் (உச்சி, மலை உச்சி), சிகாமணி போன்ற சொற்களிலும் புழங்குகிறது.

 

persian-2

சிகா (குடுமி, நீண்ட தலை முடி), புலஸ்தி (நேரான முடி), சிகண்ட (குடுமி), ஸ்மஸ்ரு (தாடி, மீசை Rig veda (2-11-17; 8-33-6 etc), சீமன் (தலை வகிடு) ஆகிய சொற்கள் வேதங்களிலும் பின் வந்த இலக்கியங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்தியர்கள் சாகும் வரை மீசை, தாடியை போற்றி வளர்த்ததாக மெகஸ்தனீஸ் 2300 ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார்.

 

பாரசீகர்கள், தேன்கூடு போல தாடி வைத்திருப்பதை உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் சம்ஸ்கிருதத்தில் பாடிப் பரவியுள்ளான்.

 

persian-beard

—subham–

 

 

ஆதிவாசிகளின் சிகை அலங்காரம்

kampti-woman

Written by London Swaminathan

 

Date: 3 October 2016

 

Time uploaded in London: 9-01 AM

 

Post No.3214

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

பெண்கள்,  பிறந்த நாள் முதலே,  தங்களை அலங்கரிக்கத் துவங்கி விட்டார்கள். இதற்கு ஆதிவாசிப் பழங்குடிகளும் விலக்கல்ல. இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஜாதிகளும் பல நூற்றுக்கணக் கான பழங்குடி இன மக்களும் வசிக்கின்றனர். ஒவ்வொரு இனத்தினரும் வெவ்வேறு வகை திருமணச் சடங்குகள், ஈமச் சடங்குகள், நடை, உடை, பாவனை கொண்டு வாழ்கின்றனர். இப்பொழுது நாகரீகம் வேகமாகப் பரவி வருவதால் அவர்களும் மாறி வருகின்றனர். வெளிநாட்டுக்காரர்கள் நம்மைத் திட்டுவதற்காக எழுதி வைத்த பல குறிப்புகள் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.

 

கருப்புத் தோல் உடைய அவ்வளவு பெயரும் “திராவிடர்கள்” என்றும் அவர்கள் உயரிய நாகரீகம் வாய்ந்தவர்கள் என்றும், அவர்களைக் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் விரட்டி அடித்ததாகவும் வெள்ளைக்காரன் பொய்யுரைகளை பரப்பி இருந்தான். ஆனால் இந்த “திராவிடப் பழங்குடியினரோ” கொஞ்சமும் நாகரீகம் இல்லாத, காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதும் அவர்களில் ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பழக்க வழக்கங்கள் இருப்பதுமாராய்ச்சி செய்வோருக்கு வெள்ளிடை மலையென விளங்கும். இந்த திராவிட– ஆரிய கதைகள் எல்லாம் நல்ல கட்டுக்கதை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும்.

 

இதோ சில சிகை அலங்காரங்கள்:

 

பர்மா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் எல்லையில் காம்டி இன மக்கள் வசிக்கின்றனர். அந்த இனப் பெண்கள் திருமணமானவுடம் தலைமுடியை உயர்த்தி ‘கொண்டை’ போடுவர். திருமணமாகாத பெண்கள் முடியைக் கழுத்தின் பின்புறத்தில் தொங்கவிட்டு முடித்து வைப்பர்! ஆக ஒரு பார்வையிலேயே யார் திருமணமானர் என்று கண்டுபிடித்துவிடலாம்!

 

ஒரிஸ்ஸா, ஆந்திரா, மத்தியப்பிரதேச எல்லைகளில் காடுகளில் வசிக்கும் கோண்டு இன ஆண்களும் பெண்களும் முடியைப் பராமரிப்பதில் பெரும் கவனம் செலுத்துவர். மான் கொம்புகளினால் ஆன பெரிய கொண்டை ஊசியைத் தலையில் குத்திக்கொள்வர். மலர்களையும் சூடுவர். திருமணமாகாத பெண்கள் காதில் விளக்கு மாற்றுக்குச்சியை சொருகிக் கொள்வர். திருமணமானபின்னர் நிறைய தோடுகளை அணிவர்.

 

காதுகளைப் பார்த்துதான் காதலிக்க வேண்டும்!!!

 

நாயர் இனப் பேரழகிகள்

nayars-of-kerala-wiki

கேரளத்தில் வசிக்கும் நாயர் இனப் பெண்கள் பற்றி ஆர்தர் மைல்ஸ் என்பவர் 1933 ஆம் ஆண்டில் எழுதியது:-

“இந்தியாவிலேயே பேரழகிகள் நாயர் இனப் பெண்களே. அவர்கள் தலை முடி பிசுக்கில்லாமல் பள பள என்று இருக்கும் . எப்போதும் சிகைக்காய் பொடியால் கழுவி சுத்தமாக வைத்து மலர் சூடுவர். தோலில் ஒரு பருவோ கொப்புளமோ வந்தால் அதைப் பெரிய அவமானமாகக் கருதுவர். மற்ற இனப் பெண்கள் போலல்லாது இடது மூக்கில் மூக்குத்தி அணிவர். குளிக்காமல் எதையும் செய்யார். ‘சுத்தம் சோறு போடும்’ என்பதை அறிந்த இனம். ஒரே ஒரு உடற்குறை! காதில் பெரிய தொளையிட்டு தங்க நகைகளை அணிவதே!”

 

இங்கிலாந்துக்கு வரும் திருப்பதி முடி

 

ஆர்தர் மைல்ஸ் 1933ல் எழுதியது:–

 

ஒருமுறை என் வீட்டுத் தோட்டக்காரன் மீசை, தலை முடி எல்லாவற்றையும் சிரைத்துவிட்டு வெழுமூன பள பள என்று வேலைக்கு வந்தான். எனக்கோ அதுபற்றிக் கேட்கத் தயக்கம். இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின்னர் அவனே சொல்லத் துவங்கினான். நேர்த்திக் கடனுக்காக் கடவுளுக்கு முடியைக் கொடுத்ததாகச் சொன்னான்.

 

இந்தியாவில் பணக்காரகளுகுச் சமமாக ஒரு ஏழையும் தானம் செய்யக்கூடியது தலை முடி ஒன்றே. அதில் அவர்களுக்குப் பரம திருப்தி. அதுவும் பெண்கள் தனது  தலை மயிரை கொடுப்பது பெரிய தியாகமே. இப்படி அவர்கள் திருப்பதியிலும் பழனியிலும் முடி காணிக்கை செலுத்தாவிடில் நாம் ஐரோப்பாவிலும், குறிப்பாக இங்கிலாந்திலும் முடிகளால் ஆன மெத்தைகளில் உறங்க முடியுமா?

 

பிராமணப் பெண்கள், கணவனை இழந்து விட்டால் தலை முடியை எடுத்துவிட்டு தலையை புடவையால் மறைத்துக் கொள்ளுவர். ஆனால்  ஐயங்கார்களில் தென்கலை சம்பிரதாயத்தினர் இப்படிச் செய்வதில்லை என்றும் ஆர்தர் மைல்ஸ் எழுதியுள்ளார்.

 

(இப்போது முடியைக் களையும் வழக்கம் மிக மிகக் குறைந்துவிட்டது)

vv-anni-5

Nilgris:-Toda Tribal woman

பெண்கள் வகிடு எடுப்பது — ஒரு புறம் சக்தியையும் மறுபுறம் சிவனையும் குறிக்கும் என்றும் இது பாசிட்டிவ், நெகட்டிவ் POSITIVE & NEGATIVE சக்திகளை இணைக்கிறது என்றும் 1926ல் ஒருவர் ஆற்றிய உரையையும் மைல்ஸ் விரிவாக கொடுத்துள்ளார் ( எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க).

vv-aani-4

–subham——

 

 

பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்? (Post No.3210)

balinese_rite_of_suttee_in_houtman_1597_-1

Written by London Swaminathan

 

Date: 2 October 2016

 

Time uploaded in London: 7-07AM

 

Post No.3210

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

 

sati-3

புறநானூற்றில் ஒரு அழகான பாடல் வருகிறது; இது பாண்டிய மன்னன் இறந்தவுடன் அவனது மனைவி பூதப்பாண்டியன் தேவி, கணவனுடைய சிதைத்தீயில் பாய்ந்து உயிர்விட்ட சம்பவம் பற்றிய பாடலாகும். பார்ப்பனர்கள், அமைச்சர்கள் அனைவரும் தடுத்தும் “போங்கடா, போங்க! போக்கத்த பயல்களே” என்று சொல்லி அவள் தீயில் பாய்ந்தாள்.

புறநானூறு பாடல் 246:–
பல் சான்றீரே! பல் சான்றீரே!
செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!


–பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.’’

ஒரு மஹாராணி பாடிய பாடல் இது. கணவனின் சிதைத் தீ, தாமரைக் குளம் போல குளிர்ச்சி பொருந்தியது என்று பாடுகிறாள். அப்பர் பெருமானை மஹேந்திர பல்லவன் சுண்ணாம்புக் காளவாயில் போட்ட போது அவர் ‘’மாசில் வீணையும்’’ பாடல் பாடியது நினைவுக்கு வருகிறது!

 

இதற்குத் தொல்காப்பிய சூத்திரமே காரணம் என்று தோன்றுகிறது. தொல்காப்பியர் என்பவர் த்ருண தூமாக்கினி என்ற பெயர் கொண்ட பார்ப்பான் என்று மதுரை பரத்வாஜ கோத்திரப் பார்ப்பான் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் கூறுவார். தொல்காப்பியர் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கததை தமிழ் வழக்கமாக காட்டியுள்ளார்.

Sati : wife mounting funeral pyre of husband

 

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்

சொல்லிடைஇட்ட பாலை நிலையும்

 தொல்காப்பியம், சூத்திரம் –1025

 

 

பூதப் பாண்டியன் பெருந்தேவி போலவே போல, ஆய் அண்டிரன் மனைவியரும் தீப்பாய்ந்தனர்.

இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை “சதி” (sati) என்பர்.

((Reference:-சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)–கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்–கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.))

 

கர்நாடகத்தில் இப்படி உடன்கட்டை ஏறிய கற்புக்கரசிகளின் கைச் சின்னங்கள் இன்னும் இருக்கின்றன.

sati3

பாண்டியன் நெடுஞ்செழியன், கோவலனைக் கொன்றது தப்பு என்று தெரிந்தவுடன், மாரடைப்பால் – Heart Attack ஹார்ட் அட்டாக்கால் — இறந்தார். உடனே அவன் அருகில் இருந்த அவன் மனைவியும் ஹார்ட் அட்டாக்கால் இறந்தாள் என்பதை சிலப்பதிகாரம் மூலம் அறிவோம்.

 

உலகப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி மீது எப்படியாவது கை வைக்க வேண்டும் என்று படை எடுத்துவந்த அலாவுதீன் கில்ஜியின் கண்,,,,,,,,ல் மண்ணைத்தூவி விட்டு சித்தூர் ராணி பத்மினி, தனது நூற்றுக் கணக்கான ழியருடன் தீப்பாய்ந்து வரலாறு படைத்தாள் ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள். தன் மானத்துக்கும் கற்புக்கும் மதிப்பு கொடுத்த கற்புக்கரசிகள்!

 

ஆனால் உடன் கட்டை ஏறுவது COMPULSORY கம்பல்ஸரி/ கட்டாயம் அல்ல. தசரதன் இறந்தவுடன் அவன் மனைவியர் நால்வரும் உயிருடன் இருந்ததை வால்மீகி ராமாயணம் மூலம் அறிவோம். அதே போல பாண்,,,,, மஹாராஜன் இறந்தும் குந்தி உயிர் வாழ்ந்ததை மஹா பாரதம் மூலம் அறிவோம்.

 

 

மதத்தைப் பரப்ப வந்தவர்களும், நாடுபிடிக்க வந்தவர்களும் அந்தக் காலத்தில் எழுதிய புத்தகத்தில், —- எல்லா இந்தியப் பெண்களையும் கணவன் சிதைத்தீயில் தள்ளுவது போலப் படம் போட்டு — புத்தகங்களை எழுதினர்! ஆனால் அவர்கள் பிரசாரம் எல்லாம் விழலுக்கு இரை த்த நீர் போல ஆகிவிட்டது.

வேதங்களில் வரும் இந்திரனையும் வருணனையும் தமிழர்கள் தெய்வங்களாகத் தொல்காப்பியர் குறித்ததும், பலராமனின் பனைக்கொடியைப் பற்றி அவர் சூத்திரம் சொல்லுவதும், மனு தர்ம சாத்திரத்திலுள்ள எட்டு வகைத் திருமணத்தை தொல்காப்பியம் விதந்துதுரைப்பதும், கார்த்திகைத் திருவிழாவை அவர் குறிப்பால் உணர்த்துவதும், பாரதம் ஒன்றே என்ற கொளகையுடையோருக்கு வியப்பளிக்காது. ஆனால் அவர் “சதி” என்னுமுடன்கட்டை ஏறும் வழக்கத்தையும் (இறந்த கணவனுடன் சிதைத்தீயில் எரிவதும்) தமிழர் வழக்கமாகக் கூறுவது பலருக்கும் தெரியாது.

 

திராவிட “அறிஞர்கள்”, இது பற்றி மவுனம் சாதிப்பதும் ஒருவர் இதை ‘இடைச் செருகல்’ என்பதும் மற்றொருவர் 30, 40 பக்கம் எழுதி சப்பைக் கட்டு கட்டுவதும் தொல்காப்பியத்தை நன்கு படித்தவர்கள் அறிந்ததே. சிலர் இது “ஆரிய வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுந்தது” என்பதைக் காட்டுவதாகச் சொல்லுவதும் “கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை பார்” என்ற பழமொழியை நினைவுபடுத்தும்.

 

இன்னும் பலர் உலகப் புகழ் பெற்ற, தமிழில் அதிகமாக உரைகளை எழுதிக் குவித்த மதுரை நகர பாரத்துவாஜ கோத்ரப் பார்ப்பனன் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியன் எழுதிய உரை எல்லாம் சரிதான், ஆனால் அவர் தொல்காப்பியனை “த்ருணதூமாக்கினி” என்னும் ரிஷி என்று சொல்லுவது மட்டும் ‘பொய்’ என்று பிதற்றுவதெல்லாம் நல்ல நகைச்சுவையாக அமையும். நிற்க.

sati2

சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம், சுயம்வரம் என்னும் கணவனைத் தேடும் பெண்களின் சுதந்திரம், அஸ்வமேத யக்ஞம, ராஜ சூய யக்ஞம் மற்றும் பார்ப்பனர் அன்றாடம் செய்யும் சந்தியாவந்தனம், தென்பக்கத்தில் யமன் உள்ளான் என்ற நம்பிக்கை இவை எல்லாம் இமயம் முதல் குமரி வரை உளதே! ஏனடா இவை எல்லாம் ஆரியரின் சொந்த பூமி என்று நீங்கள் கூறும் மத்திய ஆசியாவிலோ, ஐரோப்பாவிலோ இல்லை என்று வெள்ளைத் தோல் “அறிஞ ர்களை” கேள்வி கேட்டால் முழி பிதுங்க பேதைகளாக நிற்பர். உண்மையில் இந்துக்கள் உலகம்     எங்கும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டியது ரிக் வேதத்திலேயே உளது “ச்ருன்வந்தோ விஸ்வம் ஆர்யம்= உலகம் முழுதும் சென்று பண்பாட்டைப் பரப்புக” என்ற வாக்கியம் வேதத்தில் உள்ளது. உலக மக்கள் அனனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்— மாதா பூமி, புத்ரோஹம்— (பூமி நமது அன்னை, நாம் அதன் புதல்வர்; யாதும் ஊரே யாவரும் கேளிர்) என்பது அதர்வண வேதத்தில் உள்ளது.

 

ஆக உலகம் முழுதும் நாம் மொழிகளையும் கலாசாரத்தையும் பரப்பினோம் என்பதை ஒப்புக்கொண்டால் ஏன் சில வழக்கங்களை மட்டும் அவர்கள் எடுத்துக் கொண்டனர், ஏன் தமிழ்ச் சொற்களும் சம்ஸ்கிருதச் சொற்களும் உலக மொழிகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன என்பது விளங்கும்.

 

வாழ்க தமிழ் மொழி! வளர்க தொல்காப்பியன் புகழ்!!

 

இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 2 (Post No.3207)

chidambaram-1

Picture: சிதம்பரம் தீட்சிதர்

Written by London Swaminathan

 

Date: 1 October 2016

 

Time uploaded in London: 10-12 AM

 

Post No.3207

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டு இரண்டாம் பகுதியைப் படித்தால் பொருள் நன்கு விளங்கும்.

dikshitar-priests-festival-ceremony

Picture: சிதம்பரம் தீட்சிதர்கள்

கேசம்=முடி

 

கேச என்னும் சொல் மயிர் என்பதைக் குறிக்க அதர்வண வேத காலத்திலிருந்து பயன்படுத்தப்படுகிறது. அநேகமாக கேசம் என்றால் என்ன என்பது எல்லா இந்தியருக்கும் தெரியும். முடி வளர் தைலங்கள் அனைத்தும் ‘கேச’ என்ற பெயருடனேயே துவங்கும். நீண்ட முடி வளர்த்தால் பெண்போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அடர்த்தியான முடிக்கான பிரார்த்தனை  அதர்வண வேதத்தில் உள்ளது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயிலப்பட்ட சொல் இன்றும் அதே பொருளில் நம்மிடையே புழங்குவது — தமிழ் நட்டிலும் — புழங்குவது குறிப்பிடத்தக்கது.

 

 

க்ஷுரா= Razor

 

சவரம் செய்தல் என்பது பிளேட் என்று பொருள்படும் க்ஷுரா’ (சவரக் கத்தி) என்ற சொல்லிலிருந்தே வந்தது. இது ரிக் வேதத்தில் மூன்று இடங்களில் வருகிறது. ஆனால் முயல் விழுங்கிய ‘க்சுரா’ என்று ஒரு மந்திரத்தில் வருவதால் அந்த இடத்தில் சவரக் கத்தி என்பது பொருத்தமாக இல்லை.

 

வேதத்துக்கு சங்க கால தமிழர்கள் “மறை” என்ற அழகான சொல்லை தெரிவு செய்துள்ளனர். வேத காலப் புலவர்கள் எதையும் நேரடியாகச் சொல்லாமல் மறை பொருளில் சொல்லுவதால் தமிழன் இச்சொல்லைக் கண்டுபிடித்து வைத்தான். ஆக முயல் விழுங்கிய பிளேடு என்பது ஏதோ ரகசியப் பொருளுடைத்து என்றே நான் கருதுகிறேன்.

 

சங்கத் தமிழ் இலக்கியம் மயிர்குறை கருவி (Scisors or Shaving Razor) என்ற சொல்லைப் பயிலுகிறது (பொரு.29, பலைக் கலி.31,35)

 

தட்சிண கபர்தா Rig Veda (7-33-1) (வலது பக்க குடுமி)

மலையாள தேசத்தில் நம்பூதிரி பிராமணர்களும், சோழ தேசத்தில் முன் குடுமிச் சோழியர், சிதம்பரம் தீட்சிதர்களும் தலை முடி வைத்திருக்கும் தனிப் பாணியை (Style) இன்றும் காணலாம். இது வேத காலத்திலேயே துவங்கியதற்கு தட்சிணதாஸ் கபர்தா என்ற சொல் சான்று தரும். ஒரு வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பது மிகவும் அதிசயமானது. இது தென்னாட்டு பார்ப்பனர்களின் பழமையையும் காட்டும்.

 

nampudiri

படம்: நம்பூதிரி பிராமணர்

பலித (நரைமுடி)

ரிக்வேத (1-144-4, 1-164-1, 3-55.9) காலம் முதல் இச்சொல் பயிலப்படுகிறது. ஜமதக்னி முனிவரின் வழிவந்தோர் நரை அடைவதில்லை என்றும் பாரத்வாஜர் தனது கிழப்பருவத்தில் ஒல்லியாக ஒடிந்து, நரை முடியுடன் காணப்பட்டதாகவும்  வேதங்கள் வருணிக்கின்றன.

 

சதபத பிராமனணம் முதலில் தலிலையில் தோன்றும் நரை முடி பிறகு உடலிலும் கைகளிலும் பரவுவதை பேசும்

 

இந்த நரை முடி பற்றிய விஷயம் புறநானூற்றிலுள்ள (பாடல் 191) புகழ்பெற்ற பிசிராந்தையாரின் பாடலை நினைவு படுத்தும்.

 

ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்? என்று பாடுகிறாரார்:–

 

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்

அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

——(புறநானூறு ,பாடல் எண். 191)

 

பொருள்:-

நுமக்குச் சென்ற ஆண்டுகளோ  பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?

என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும்  தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)

holy-man-of-india

–subham–

 

 

 

தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை! (Post No.3203)

ammami

Written by London Swaminathan

 

Date: 30 September 2016

 

Time uploaded in London:10- 39 AM

 

Post No.3203

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

தொல்காப்பியர்—  தமிழ்ப் பெண்கள் கடல் கடந்து  வெளிநாடு செல்லக்கூடாது என்கிறார். மனுவோ,  பிராமணர்கள் வெளிநாட்டிற்குச் செல்லாக் கூடாதென்கிறார்.

 

முந்நீர் வழக்கம் மகடூ உ வோடு இல்லை – 980

—-பொருளதிகாரம், அகத்திணையியல், தொல்காப்பியம்

 

கடல் வழிப்பயணம் செல்லும்போது பெண்டிரை அழைத்துச் செல்வதில்லை– 980

 

“காலில் பிரிவு, கலத்தில் பிரிவு இரண்டனுள் கலத்திற் பிரிவு தலை மகளுடன் இல்லை.

முந்நீர் = கடல், கலம் = கப்பல்

beauty-long-hair-baack

கப்பல் ஏறிக் கடல் பயணம் செய்ய மகளிர் உரிமை பெறார். எனவே தலைவன், தலைமகளை உடன் கொண்டு கால்களால் நடந்து செல்லும் பிரிவு மட்டுமே மகளிர்க்கு உண்டு.

முந்நீர் வழக்கம் = ஓதலும் தூதும் பொருளும் ஆகிய மூன்று நீர்மையால் செல்லும் செலவு என்பார் நச்சினார்க்கினியர் (ம்துரை பாரத்வாஜ கோத்ரப் பார்ப்பனன் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியன்)

.

 

காளிதாசனும் மற்ற சம்ஸ்கிருதப் புலவர்களும் கூட இப்படித்தான் எழுதுகின்றனர். வியாபாரம், போர், அரசியல், தூது ஆகியவற்றுக்காக வெளி நாட்டிற்குச் சென்றவர்கள் திரும்பிவரும் வரை பெண்கள் சிகை அலங்காரம் செய்யக்கூடாதென்று எழுதி வைத்துள்ளனர். பிரிவு குறித்து ஏங்குவது பற்றியும் பருவ காலம் மாறுவதால் கணவன் வரும் அறிகுறிகள் தென்படுவதாகவும் எழுதி வைத்துள்ளனர்.

 

தொல்காப்பியர் மிகத் தெளிவாகவே சொல்லுகிறார்:–

பெண்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று.

 

சீதை போன்றவர்கள் ‘கடத்தப்பட்டதால்’, கடல் கடக்க வேண்டி இருந்தது. அதற்கும் கூட ஒரு வண்ணா ன் சொன்னான் என்பதற்காக தீப்புகுந்து தன் தூய்மையையும் நாணயத்தையும் நிரூபிக்க வேண்டி இருந்தது.

 

ஆண்கள் வெளி நாடு சென்றாலேயே கலாசாரச் சீரழிவுகள் ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பெண்களும் போய், அவர்களும் தன் பண்பாட்டை விட்டு விட்டால், இப்பொழுது அமெரிக்கா, பிரிட்டனில் பிறந்த குழந்தைகள் போல ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று வாழ்க்கை நடத்துவர். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கோ “மம்மி, டாடி” –யயைத் தவிர அம்மா, அப்பா என்பதும் தெரியாது. அம்மா, அப்பாவின் பாசமும் பற்றும் புரியாது.

 

girls-painting

பிராமணர் மீது மனு விதித்த தடை மிகப் பொருத்தமானதே. தருமத்தை காக்கவேண்டிய அவனே தர்மத்தைப் பின்பற்ற முடியாத ஓரிடத்தில் சென்றால், வசித்தால் அமாவாசையும் கிடையாது பவுர்ணமியும் கிடையாது. தீபாவளி, பொங்கல் எல்லாம் காலண்டரில் மட்டுமே. அல்லது சங்கங்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே.

 

ஆக தொல் காப்பியர் சொன்னது, மனு சொன்னது முதலியவற்றை அந்தக்காலத்தில் வைத்து அதன் பின்னணியில் பார்க்க வேண்டும்.

 

தொல்காப்பியர் பெண்களுக்கு வேண்டிய குணநலன்கள் பற்றிச் சொல்லுவதையும் கூட இன்று பெண்கள் ஏற்பார்களா என்பது ஐயப்பாடே!சந்தேகமே!

 

இதோ பெண்கள் பற்றி அவர் சொன்னது:–

 

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும்நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும்சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல்  முகைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய – தொல்காப்பியம் 1098

 

 

பொருள்:-

உயிரினும் மேலாகக் கற்பு நெறியைப் போற்றலும், தலைவன் மீது மிகுந்த அன்பு காட்டுதலும், சான்றோர் கூறிய நல்லொழுக்கம் பேணலும், மென்மையான தன்மையுடைய சொற்களால் பிறர் கூறும் கடுஞ் சொற்களைப் பொறுத்தலும், ரகசியம் வெளிப்படாத வாறு மனதில் வைத்துக் கொள்ளலும், விருந்தினரை வரவேற்று உணவு படைத்தலும், சுற்றத்தாரைக் காத்தலும் — இவை போன்ற பிற பண்புகளும்  தலைவியிடம் அமைந்துள்ள நல்ல குணங்களாம்  . அவளுடைய செயல்களை முகம் மகிழ்ந்து  கேட்கும் நிலையில்  தலைவனிடம் உரைத்தல், மனைக்கண் பழகும் பாணர் , பாங்கர் போன்றோர் கூற்றுகளாக அமையும்.

 

azaki-with-metal-pot

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்

பொற்புடை நெறிமை இன்மையான – 981

 

எந்த நிலத்திலும் பெண்கள் மடல் ஏறுதல் இல்லை அது சிறப்புடைய ஒழுக்கம் இல்லாததால்.

 

(ஆண்கள் மட்டும் பனை மர மடலால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி ஊரறிய, காதலை வெளிப்படுத் துவது தமிழரின் தனி வழக்கம்)

 

–subham–

 

இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1 (Post No. 3201)

bengali-3

Research article written by London Swaminathan

 

Date: 29 September 2016

 

Time uploaded in London: 17-40

 

Post No.3201

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

வேதத்தில் சிகை அலங்காரம்!

 

வேத காலத்தில் முடி,  தலை மயிர், சிகை அலங்காரம் பற்றி ஏராளமான இடங்களில் பல வகையான வேறுபட்ட சொற்கள் பயிலப்படுவதால் அவர்கள் நகர நாகரீகத்தின் உச்ச நிலையை அடைந்தது தெளிவாகிறது; பல அரைவேக்காடு திராவிடங்களும் மார்காசீயங்களும்,அசட்டுப் பிச்சுகளும் தத்துப் பித்து என்று உளறி அவர்களை “நாடோடி” என்று எழுதியுள்ளன!! நீரளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு.

 

இதோ வேதங்களில் உள்ள சிகை அலங்காரச் சொற்கள்

 

ஓபாச:–

ரிக் வேதம், அதர்வண வேதத்தில் பயிலப்படும் இச் சொல்லுக்கு பொருள் விளங்கவில்லை; ஒருவேளை பின்னல் என்று பொருள்படலாம்; சீனீவாலீ என்னும் பெண் தெய்வத்துக்கு ‘ஸ்வௌபாச’ என்ற சொல் இருக்கிறது; இது வேதகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பொய் முடி, சௌரி என்று ஒரு வெளிநாட்டுக்காரர் எழுதியுள்ளார். இதை இந்திரனுக்குப் பயன்படுத்துகையில் கிரீடம் என்று பொருள் கொள்ளுவர்.

 

எனது கருத்து:

இது கொண்டை, ஆண்டாள் கொண்டை போல சிகை அலங்காரமாக இருக்கலாம். தமிழில் முடி என்றால் மயிர் என்றும் கிரீடம் என்றும் பொருள்படுவது போல; இந்திரனுக்குச் சொல்லும்போது கிரீடம்; சீனீவாலீ என்னும் தேவதைக்குச் சொல்லும் போது முடி/கொண்டை

 

கபர்தா (ரிக் வேதம் 10-114-3)

 

கபர்தா என்பது சடை, பின்னல் என்று பொருள்படும். வேதத்தில் பெண் ‘நான்கு சடை’யுடன் (சதுஸ் கபர்தா) இருப்பதாகவும் சினீவாலி (சு கபர்தா) என்ற கடவுள் நல்ல (அழகிய) சடையுடன் இருப்பதாகவும் வருகிறது. ஆண் கடவுளரில் ருத்ரனும் பூசனும் கபர்தீன் என வருணிக்கப்படுகின்றனர்.

 

வசிஷ்டர்கள், வலது பக்க குடுமியுடனும் மற்றவர்கள் (புலஸ்தி) நேரான சடையுடனும் இருந்ததாகக் குறிப்பு உளது.

 

எனது கருத்து

சினீவாலீ என்ற தேவதைக்கு பல முடி அலங்காரங்கள் கூறப்படுவதால் வேத கால நாகரீகம் நகர நாகரீகம் என்பது உறுதியாகிற து. நாடோடி மக்கள் இப்படிப் பல சில சிகை அலங்காரங்கள் செய்வதுமில்லை. அதை வேதம் போலக் கவிதை வடிவில் பாடுவதும் இல்லை. பாடியதைப் பல்லாயிரம் ஆண்டுகள் பாதுகாத்ததும் இல்லை. ஆக வேத கால மக்களை நாடோடிகள் என்று சொன்னவரின் அறிவை எண்ணி எண்ணி சிரிக்கலாம். நல்ல நகைச் சுவை!

 

இதில் இன்னும் சுவையான செய்திகளும் வருகின்றன. சங்கத் தமிழ் இலக்கியங்களில் தமிழ்ப் பெண்கள் ‘ஐம்பால் கூந்தல்’ அணிந்ததாக வருகிறது. இதற்கு ஐந்து வகையான கொண்டைகள் என்று விளக்கமும் உண்டு. ஆனால் இராக்கிய மலைகளில் வாழும் பழங்கால இந்து மக்களான யாசிதிகள் (Yazidis of Iraq) பற்றி நான் ஏற்கனவே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன் அவர்கள் அக்னியையும் மயிலையும் வழிபடுவர். வேதத்தில் கூறப்பட்டுள்ளது போல நாற்பால் கூந்தலையும் தமிழ்ல் கூறப்பட்டுள்ளது போல ஐம்பால் கூந்தலையும் அணிவர்.

yazidis

Yazidis of Iraq ( Vedic and Tamil Hair Style)

சிதம்பரம் தீட்சிதர்கள், கேரள நம்பூதிரிப் பிராமணர்கள், முன் குடுமிச் சோழியர்கள் ஆகியோர் குடுமி அணியும் வழக்கத்தை இத்தோடு ஒப்பிடுகையில் பொருள் இன்னும் நன்றாக விளங்கும். வேதத்தில் கூறப்படும் ‘பாணி’ (Style) இன்று வரை நாட்டின், குறிப்பாக தென்னாட்டின்,  பல பகுதிகளில் இருப்பது சிறப்புடைத்து.

 

குரீர

ரிக் வேதத்திலுள்ள திருமண மந்திரங்களில் (10-85-8) இச் சொல் மணமகளின் சிகை அலங்கார அணிகலணாகப் பேசப்படுகிறது அதர்வ வேதத்திலும் (6-138-3) அதே பொருள்.

 

யஜூர் வேதத்தில் சினீவாலீ என்னும் தேவதைக்கு அடைமொழியாக வருகையில் அவள் சு-கபர்தா, சு-குரீர, ஸ்- ஓபாச என்று போற்றப்படுகிறதால் நல்ல அழகிய அணி அணிந்தவளே என்பது பொருள்.

 

கெல்ட்னர் என்பார் இதை கொம்பு என்று மொழி பெயர்ப்பார்.

 

என் கருத்து

திருமணத்தில் மணப் பெண்கள் கிரீடம் போல , மகுடம் போல தலையில் அணிகளை அணியும் வழக்கம் இன்றும் வட நாட்டில் உண்டு. இப்படிப்பட்ட உயரிய நாகரீகம், வேத காலத்தில் இருந்ததை இரண்டு பழைய வேதங்களில் இருந்து அறிய முடிகிறது. இதை அறியாத மண்டுகள், வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று சொல்லி இன்று ‘ஜோக்கர்’கள் என்று நம்மிடையே பட்டம் பெறுகின்றனர்.

 

எல்லா கலாசாரங்களிலும் — ஆதிவாசிகளும் கூட –தலையில் ஏதேனும் அணிந்திருப்பது உண்மையே. ஆனால் பல்வேறு விதமான அணிகளை, ஆபரணங்களை சினீவாலீ அணிவதாகப் பாடுவதும் அதை பல்லாயிரம் வருடம் போற்றி இன்றும் துதி பாடுவதும் உலகின் உன்னத நாகரீகம் வேத கால நாகரீகம் என்பதை வெள்ளிடை மலையென விளக்கும். மார்க்சீய அரை வேக்காடுகளும் திராவிட அரை வேக்காடுகளும் இனிமேலாவது அறிவு பெறுவார்களாக.

 

கும்ப

அதர்வ வேதத்தில் குரீர, ஒபாசவுடன் , கும்ப என்பதும் பெண்களின் தலையில் வைக்கப்படும் ஆபரணமாக சொல்லப்படுகிறது.கெல்ட்னர் இவைகளைக் கொம்பு என்று மொழி பெயர்த்தாலும் கீத், மக்டொனெல் (Keith and Macdonell)  ஆகிய இருவரும் ஏற்கவில்லை. இந்திய பாரம்பர்யமானது இவைககளை ஆபரணங்களாகவே கருதுகின்றன.

 

bengali-wedding-dress-4

அமரகோசத்தில்

உலகின் முதல் நிகண்டான அமரகோசத்தில் முடி, சிகை அலங்காரம் பற்றிய ஸ்லோகங்கள்/பாடல்கள்:-

 

1.சிகுர: குந்தலோ வால: கச: கேச:  சிரோருஹ:

தத் வ்ருந்தே கைசிகம் கைஸ்யம் அலகாஸ்சூர்ண குந்தலா:

 

சிகுரஹ– முடித்துவைக்கப்படுவது முடி

குந்தலHஅ- நீண்டு இருப்பதால் கூந்தல்

சிரோருஹ:-சிரஸில்/தலையில் முளைப்பதால்

கேஸஹ- தலைக்கு க என்று பெயர்; க-வில் முளைப்பதால் அது கேசம்

வாலஹ – பூக்களால்அ லங்கரிக்கபடுவதால் வால:

கைசிகம், கைஸ்யம் — கேசங்களின் கூட்டம் (கட்டோடு குழல் )

அலம் – அலங்கரிக்கப்படுவது

வாரி – வாரப்படுவதால் (Eg. தலையை வாறு)

கசஹ- கட்டப்படுவதால் (உ.தாரணம்: கச்சை)

கைசிகம், கைஸ்யம்- கேசங்களின் கூட்டம் (கட்டுக் குடுமி)

 

2.தே லலாடே ப்ரமரகா: காகபக்ஷ: சிகண்டக:

கபரீ கேசவேசோ அத தம்மில்ல: சம்யதா: கசா:

ப்ரமரகாஹா- நெற்றியில் (லலாடத்தில்) விழும் வண்டுகள்; பெண்களின் முடி நெற்றியில் விழுவது வண்டுகள் மொய்ப்பது போல உள்ளதால்;

காக பக்ஷ:- காக்கை சிறகு அடித்துப் பறப்பது போல இருப்பதால்; வால்மீகி ராமாயணத்தில் ராம லெட்சுமனர்களின் முடி இப்படி இருந்ததாக வால்மீகி வருணிக்கிறார்.

 

சிகண்டஹ- வகிடு எடுத்து வாருவதால்;

கபரி- தலையில் வாருவதால் இப்பெயர்;

கேசவேசோ – கட்டிவைக்கப்பட்ட முடி;

தம்மிலாஹா – நடுத் தலையில் கொண்டை; புத்தர் தலையில்; சீக்கியச் சிறுவர்கள் தலையில் இவ்வாறு முடியை நடுவில் குவிப்பர்.

 

3.சிகா சூடா கேசபாசீ வ்ரதிநஸ்து ஜடா சடா

வேணிப்ரவேணீ சீர்ஷன்யசிரஸ்யௌ விசதே கசே

 

சிகா- தலை முழுவதும் ‘பரவி’ இருப்பதால்;

சூடா – காற்றில் அசைவதால்; சூடப்படுவதால் (சந்திர சூடன், பூச்ச் சூடி)

 

கேசபாசி- தலையைக் காப்பதால்

 

ஜடா- பின்னப் படுவதால் (ஜடாவர்மன் சுந்த்ர பாண்டியன், சடைய வர்மன்)

 

வேணி- அழுக்கில்லாமல் பிரகாசிப்பதால்

ப்ரவேணீ – மேற்கூறிய பொருளே; இதுவுமது.

 

சீர்ஷன்ய: – தலையிலுள்ளது

 

To be continued…………………………………………….

 

–Subham–