31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194)

tolkappian-katturai

Written by London swaminathan

Date: 27 September 2016

Time uploaded in London:8-17 AM

Post No.3194

Pictures are taken from various sources; thanks.

 

 

அக்டோபர் (துர்முகி வருஷம், புரட்டாசி/ஐப்பசி) 2016 காலண்டர்

திருவிழா நாட்கள்:-அக்1.-நவராத்திரி ஆரம்பம்;அக்.2-காந்தி ஜயந்தி

அக்.10-சரஸ்வதி பூஜை; அக்.11- விஜயதசமி, தசரா; அக்.29/30- தீபாவளி

அக்.31- கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்.

 

அமாவாசை- 30, பௌர்ணமி-15, ஏகாதசி-12,26, முகூர்த்த நாட்கள்-28

 

tolkappaima

அக்டோபர் 1 சனிக்கிழமை

Tamil alphabet

அகரம் முதல் ன கரம் இறுவாய்

முப்பஃது என்ப;

சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே (1)

 

அக்டோபர் 2 ஞாயிற்றுக்கிழமை

Special letter :three dots

அவைதாம்

குற்று இயல் இகரம் , குற்று இயல் உகரம்

ஆய்தம் என்ற

முப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன (2)

 

அக்டோபர் 3 திங்கட்கிழமை

Vaisya: Business community

வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை -1578

 

அக்டோபர் 4 செவ்வாய்க்கிழமை

Brahmins and Kshatriyas

அந்தணாளர்க்குரியவும் அரசர்க்கு

ஒன்றிய வ ரூஉம் பொருளுமார் உளவே -1572

 

அக்டோபர் 5 புதன்கிழமை

What is mantra?

நிறைமொழி மாந்தர்  ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப – 1434

IMG_3212.JPG

 

அக்டோபர் 6 வியாழக்கிழமை

Brahmins can’t become kings

அந்தணர்க்கு அரசு வரைவு இன்றே -1574

 

அக்டோபர் 7  வெள்ளிக்கிழமை

Women’s Virtues

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும், நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல்  முகைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய -1098

 

 

அக்டோபர் 8 சனிக்கிழமை

God

வழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழிசிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ -1367

 

அக்டோபர்  9 ஞாயிற்றுக்கிழமை

Botanical Classification

புறக் காழனவே புல் என மொழிப

அகக் காழனவே மரம் என மொழிப -1585

 

அக்டோபர் 10 திங்கட்கிழமை

Devaloka

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மையான -1194

 

dance-in-shade

அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை

8 feelings; not Navarasa!

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப –1197

 

அக்டோபர்  12 புதன்கிழமை

Bhagavad Gita:Paritranaya sadhunam vnasaya ca duskrtam

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் -1099

 

அக்டோபர் 13 வியாழக்கிழமை

Dharma, Artha, Kama: Hindu Concept

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே-1038

 

 

அக்டோபர் 14  வெள்ளிக்கிழமை

Sati : wife mounting funeral pyre of husband

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்

சொல்லிடைஇட்ட பாலை நிலையும் -1025

 

அக்டோபர் 15 சனிக்கிழமை

Look at Brahmin’s Vedas

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து

சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து

அகத்து எழு வளி இசை அரில்தப நாடி

அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே

(102)

 

img_3224

அக்டோபர் 16 ஞாயிற்றுக்கிழமை

Brahmins of Six tasks

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

…………….. 1021

அக்டோபர்  17 திங்கட்கிழமை

Literary and World approach

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்

உரியதாகும் என்மனார் புலவர் – 999

 

அக்டோபர் 18 செவ்வாய்க்கிழமை

Dhana/donation

கொடுப் போ ர் ஏத்திக் கொடா அர்ப்ப ழி த்தலும் -1036

 

அக்டோபர் 19 புதன்கிழமை

What is a Sutra/formula?

அவற்றுள்

சூத்திரந்தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே-1425

 

அக்டோபர் 20 வியாழக்கிழமை

Women should not go abroad

முந்நீர் வழக்கம் மகடூஉ இல்லை -980

 

img_4925

அக்டோபர் 21  வெள்ளிக்கிழமை

Six Levels of living beings (Theory of Evolution)

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே-1527

அக்டோபர் 22 சனிக்கிழமை

Borrow from Sanskrit

வடசொற்கிளவி வட எழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே -884

 

அக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை

சிதைந்தன வரினும்  இயைந்தன வரையார் – 885

 

அக்டோபர் 24 திங்கட்கிழமை

Upama from Sanskrit

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்

தள்ளாதாகும் திணை  உணர் வகையே -992

 

அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமை

Indra and Varuna: Tamil Gods!

‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’- 951

 

kuthu-vilakku

அக்டோபர் 26 புதன்கிழமை

12 places adjacent to Chaste Tamil Land

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி -883

 

 

அக்டோபர் 27 வியாழக்கிழமை

Thousand from Sanskrit Sahsram

அத்தொடு சிவணும்  ஆயிரத்து இறுதி

ஒத்த எண்ணு முன்வரு காலை -317

 

அக்டோபர் 28  வெள்ளிக்கிழமை

Matra , winking, snapping

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே  (7)

 

அக்டோபர் 29 சனிக்கிழமை

Mysterious Kandazi!

கொடிநிலை,கந்தழி வள்ளியென்ற

வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே- 1034

 

அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை

Deiva: God

தெய்வம் உணா மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை இ
அவ்வகை பிறவும் கருவென மொழிப.-964 (பொருள் 1-18)

 

அக்டோபர் 31 திங்கட்கிழமை

Mantra again!

பெயர்நிலைக்கிளவியின் ஆஅகுநவும்

திசைநிலைக்கிளவியின் ஆஅகுநவும்

தொல்நெறி மொழிவயின் ஆஅகுநவும்

மெய்ந்நிலை மயக்கின்  ஆஅகுநவும்

மந்திரப் பொருள்வயின்  ஆஅகுநவும்

அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே -932

IMG_4930.JPG

–Subham—

 

பெண்கள் மீது கை வைத்தால்………. கம்பன் எச்சரிக்கை! (Post No.3184)

beauty-with-puukkuutai

Written by London swaminathan

Date: 24 September 2016

Time uploaded in London:6-37 am

Post No.3184

Pictures are taken from various sources; thanks.

 

 

நான் மதுரை யாதவர் தெரு வடக்கு மாசி வீதியில் கால் நூற்றாண்டுக் காலம் வசித்தேன். அப்பொழுது பல காட்சிகளைக் கண்டதுண்டு. திடீரென டவுன் பஸ் நிற்கும். அதிலிருந்து ஒருவனைக் கீழே தள்ளி நாலைந்து பேர் அடிப்பார்கள். உடனே ரோட்டில் போகும் வருவோரெல்லாம் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவனை அடிப்பார்கள். அவன் குத்துயிரும் கொலை உசிருமாக இருக்கையில் அவனை ஓட ஓட விரட்டுவார்கள். கடைசியில் அவன் எப்படியோ தப்பி த்து ஓடி விடுவான். இதே போல மதுரை சித்திரைத் திருவிழாவிலும் கண்டதுண்டு. காரணம் என்ன என்று கேட்டால் அவன் “பெண்கள் மீது கை வைத்துவிட்டான்” சார்! என்பர். ஆனால் அடித்தவர்களில் பாதிப்பேருக்கு ஏன் அடித்தோம், யாரை அடிக்கிறோம் என்றே தெரியாது! இதற்குப் பெயர் தர்ம அடி!

 

இப்போது நான் வசிக்கும் ஊரிலும் (LONDON) பெண்கள் மீது இப்படிக் கைவைப்பதுண்டு. பெரும்பாலும் பஸ்களிலும் அதிகமாக மெட்ரோ

 

(METRO சுரங்க) ரயிலிலும் நடக்கும். அதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் சில கட்டுரைகளில் சி. சி. டிவி. (C C TV= Closed Circuit Television) காமெரா மூலம் படம் எடுத்துப் பிரசுரிப்பார்கள்.

 

வாரம் தோறும்  நாங்கள் ‘ஸ்கைப்’ SKYPE மூலம் நடத்தும் கம்ப ராமாயணம் வகுப்பில், கிஷ்கிந்தா காண்டம் படிக்கையில் இப்படி ஒரு காட்சி வந்தவுடன் , மதுரையில் பழைய காலத்தில் பார்த்த அவ்வளவும் நினைவுக்கு வந்து விட்டது. மன திற்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். காரணம் இல்லாமல் இல்லை. எங்கள் வீட்டுப் பக்கத்துச் சந்தில் ஒரு ஐயர், இட்டிலிக் கடை வைத்து நடத்தி வந்தார். அவரது இட்டிலியும் பக்கோடாவும் மதுரை முழுதும் பிரசித்தம். அவரும் ஒரு முறை இப்படி தர்ம அடி கொடுக்கும் கும்பலில் நாலு அடி போட்டு விட்டுத் திரும்பி வந்தார்.

 

 

“என்ன மாமா? நீங்களும் அடித்தீர்கள்? ஏதாவது உங்களி டம் விஷமம் செய்தானா? என்று நாங்கள் கேட்டோம். இல்லை எனக்குத் தெரியாது. எல்லோரும் அடித்தார்கள். நானும் அடித்தேன். என்ன? பொம்பளை மீது கை வச்சிருப்பான். அல்லது பிக் பாக்கெட் அடிச்சிருப்பான். நாலு சாத்து சாத்த வேண்டியதுதானே? என்றார் !!!

இதுபேர்தான் தர்ம அடி!!!

 

இதை எல்லாம் கேட்ட பின்னர் நாங்கள் (என் சகோதர்கள்) எல்லோரும் வீட்டிற்குள் போய் சிரி, சிரி என்று சிரிப்போம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் ‘தர்ம அடி’ நினைவுக்கு வரும்.

 

நிற்க. கம்பன் பாட்டைப் பார்ப்போம்.

img_4413-2

ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை

வேறு உளார் வலி செயின் விலக்கி வெஞ் சமத்து

ஊறுற தம் உயிர் உகுப்பர் என்னையே

தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்

–கலன் காண் படலம் , கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

 

 

பொருள்:-

வழியில் செல்லும் மகளிரை வேறு எவரேனும் வருத்தினால் (ரோட்டில் போகும் பெண்கள் மீது யாரேனும் கை வைத்தால்), அவர்களுடன் தமக்குத் தொடர்பில்லையானாலும், அது செய்ய முடியாதபடி (தர்ம அடி போட்டு),  தடுத்துப் போர் செய்து உயிரையும் கொடுப்பர் உலகத்தார். அப்படியிருக்கையில் நானோ என்னை நம்பியிருந்த என் மனைவியின் (சீதா தேவியின்) துயரத்தைப் போக்க மாட்டாதவனாய் உள்ளேன் (இவ்வாறு ராம பிரான் புலம்புகிறார்)

 

இதைப் பார்க்கும்போது கம்பன் காலத்திலும் சாலையில் இப்படி நடந்து, அதில் பலர் தலையிட்டு,  தர்ம அடி கொடுத்து, சிலர் உயிர் கூட போனதுண்டு என்று தெரிகிறது.

 

எங்கள் லண்டனிலும் கூட மாதம் தோறும் இப்படிச் சில செய்திகள்

வருகின்றன. சூப்பர்மார்க்கெட் கார் பார்க்கிலும் (CAR PARK) ‘பப்’ (PUBLIC HOUSE) பிலும் (மது பானக்கடை) சண்டை போடுவோர் இடையே சமரசம் செய்யப்போய் கத்திக் குத்து வாங்கி இறந்தோர் பற்றிய துயரச் செய்திகளை படிக்கிறோம்.

bob-painting-3

வாழ்க கம்பன்! வளர்க தமிழ்! அனைவரும் படிக்க கம்ப ராமாயணம்!!!

 

-SUBHAM-

தமிழ் மொழிக்கு சிவபெருமான் சான்றிதழ்! (Post No.3174)

tamil-1

Written by London swaminathan

Date: 21 September 2016

Time uploaded in London: 8-02 AM

Post No.3174

Pictures are taken from various sources; thanks.

 

தமிழ் மொழி பழைய மொழி, சிவன் உருவாக்கிய மொழி, அகத்தியரால் இலக்கணம் படைக்கப்பட்ட மொழி, சிவ பெருமானும் முருகனும் பேசிய மொழி —  என்ற கருத்துக்களை 2000 ஆண்டுகளாக மக்கள் நம்புகின்றனர்.

 

 

இந்த உண்மைகள் பற்றி அவ்வப்போது மனதில் சில சந்தேகங்கள் எழும். ஆகவே தடைகலை எழுப்பி விடை காண்போம்:-

 

ரொம்ப நாளாக எனக்கு ஒரு டவுட்டு (Doubt)

 

ஆசிரியரிடம் மாணவன் கேள்வி

siva-with-jewels

அகத்தியனோ பார்ப்பனன்; இமய மலையில் வாழ்ந்த ரிஷி; அவரை ஏன் சிவன் அனுப்பினார்?

 

அகத்தியன் வெறும் ரிஷி மட்டு மல்ல. பூகோளமும் ( Geography நிலவியல்), சரித்திரமும் (History வரலாறு), அரசியல் தந்திரமும் (Politics), பொறியியலும் (Enginering எஞ்சினீயரிங்), தெரிந்தவர். ஆகையால் தமிழ் மொழிப் பணி மட்டும் அன்றி காவிரியை திருப்பிவிட்ம் பொறியயல் பணி, தென் கிழக்கு ஆசியா (South East Asia)  முழுதும் இந்திய கலாசாரத்தைப் பரப்பும் பணி, வாதாபி, இல்வலன் போன்ற மனிதர்களை உண்ணும் அரக்கர்களை (Cannibals) தந்திரத்தால் வெல்லும் பணி ஆகிய வற்றை மனதிற்கொண்டு சிவன், அவரைத் தெரிவு செய்தார். பகீரதன் பெரிய (Engineers) எஞ்சினீயர்களுடன் கலந்தாலோ சித்து எப்படி கங்கையைத் திருப்பிவிட்டானோ அது போல காவிரியையும் திருப்பிவிடும் செயல்திட்டத்துடன் அனுப்பி வைத்தார்.

 

அது சரி, சிவனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

சிவன் எழுப்பிய உடுக்கை ஒலியிலிருந்து ஒரு புறம் சம்ஸ்கிருதமும் மறுபுறம் தமிழ் மொழியும் வந்தன என்பது தமிழ்ச் சான்றோர்களின் நம்பிக்கை. மஹேச்வர சூத்திரம் எனப்படும் 14 ஒலிகளிலிருந்து சம்ஸ்கிருதம் வந்ததை பாணினி என்ற உலகப் புகழ் பெற்ற இலக்கண வித்தகன் காட்டி இருக்கிறான். தொல்காப்பியர் இதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அங்கே தெரிந்துகொள்க என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.

 

ஆஹா! அப்பொழுது அகத்தியருக்கு முன்னரே தமிழ் மொழி இருந்ததை ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா?

 

ஆமாம் , இதில் என்ன சந்தேகம். பாரதி கூட

 

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

 

மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்

ஆன்ற மொழிகளுனுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

-என்று பாடியுள்ளார். பாரதிக்கும் மேலான தமிழன் எவரேனும் உண்டோ.

 

அவரே உயர் சம்ஸ்கிருத மொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்னை சிவ பெருமான் படை த்தார்  என்று சொல்லுகிறார்.

tamil-2

சரி, அகத்தியரோ வேத மந்திரங்ங்களைக் கண்டுபிடித்த அகத்திய கோத்திரத்தில் வந்த ஒரு ரிஷி. அவரது பெருமை ரிக்வேதம் மற்றும் இதிஹாச, புராணங்களில் உள்ளது. அவருக்குத் தமிழ் தெரியுமா?

 

அவருக்குத் தமிழ் தெரியாது ஆனால் முதலில் சிவ பெருமானும், பின்னர் முருகனும் சொல்லிக் கொடுத்தனர்.

 

அட, இது என்ன புதுக்கதை? முருகனுக்கு எப்படித் தமிழ் தெரியும்?

 

சிவ பெருமான் மகனாகப் பிறந்தாலும் அவர் பிறவியிலேயே பெரிய ஜீனியஸ் Genius – எல்லாம் அறிந்தவர் — ஓம் என்னும் ஒலியிலிருந்துதான் உலகமே தோன்றியது– அந்தப் பிரணவ மந்திரத்தின் பொருளை யே அவர் சிவனுக்குச் சொல்லிக் கொடுத்ததால் அவனுக்கு சாமி நாதன் என்று பெயர். அவருக்குத் தமிழ்மீது அலாதிப் பிரியம்; அதனால் தமிழில் திட்டினால்கூட , அட இனிமையாக இருக்கிறதே என்று அவருக்கு வரம் கொடுப்பான் என்று அருணகிரி நாதரே சொல்லிவிட்டார் – தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் என்கிறார். தமிழ் மொழி அவ்வளவு இனிமையான மொழி. இதை வைத்துதான்

பாரதியும் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் – என்றார்.

 

சரி, தமிழ் மொழி பழைய மொழி என்பதை ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்; ஆரியத்துக்கு (சம்ஸ்கிருதத்துக்கு) நிகரானது என்றும் ஒப்புக் கொண்டீர்கள்; அகத்தியருக்கு முன்னர் அதற்கு இலக்கணம் இல்லையா?

 

அகத்தியர்தான் முதலில் இலக்கணம் படைத்தார் என்பதே ஆன்றோர் வாக்கு. இதற்குப் பின்னர் வந்ததே ஐந்திரம், தொல்காப்பியம் என்னும் இலக்கணங்கள்

 

shiva-ganesh

நான் இப்பொழுது ஒரு பாயிண்டில் (One Point) உங்களைத் திணறடிக்கப் போகிறேன்/ ஆரியம் என்று சம்ஸ்கிருதத்துக்கு பாரதியாரே பெயர் சூட்டி விட்டார். மேலும் பாணினி இலக்கணம் தான் சம்ஸ்கிருததின் புகழ்மிகு இலக்கணம் என்று சொல்லுகிறீர்கள். அகத்தியரின் காலமோ கி.மு800 முதல் கி.மு1000 என்று பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறுகின்றன; பாணினியின் காலத்தை கி.மு 700 என்றே சொல்லுவர். அப்படியானால் ஆரியர்கள் பேசியது சம்ஸ்கிருதம் என்பதையும் பாணினி இலக்கண த்துக்கு முன்னரே சம்ஸ்கிருத இலக்கணம் இருப்பதையும் ஒப்புக்கொண்டுவிட்டீர்களே!!

அருமையான கேள்வி; முதலில் ஆரிய என்ற சொல்லுகு சரியான பொருள் தெரிந்துகொள்ளுங்கள் ‘திராவிட’ என்ற சொல்லே சம்ஸ்கிருதச் சொல். இதே போல ‘ஆரிய’ என்ற சொல்லும் சம்ஸ்கிருத சொல். பாரதியார் பாடல்களில் ஆரிய என்ற சொல்லை நூறுக்கக் ணகான இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். புற நானூற்றுப் புலவர்களும் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆரிய என்றால் பண்பாடுடையோர், வடக்கில் வாழும் ரிஷி முனிவர்கள் என்றே பொருள்.

 

மதத்தைப் பரப்ப வந்த , நாடு பிடிக்க வந்த அயோக்கியர்கள் 300 ஆண்டுகளாக திராவிட (தென் பகுதி) ஆரிய (மாண்புமிகு, முனிவர்) என்ற சொற்களில் இன விஷத்தைப் புகுத்திவிட்டனர். இதைக் கேட்ட ஹிட்லரும் நான் தான் ஆரியன்;  ஜெர்மானிய வெள்ளையர்தான் ஆரியன் என்று சொல்லி லட்சக்கணக் கானோரைக் கொன்றுவீட்டான்.

 

பாணினி இலக்கண த்துக்கு முன்னர் இலக்கணம் இருந்திருக்கலாம் அது இன்று நம்மிய்டையே இல்லை என்பது பெரிய குறையே! ஆனால் பாணினி சம்ஸ்கிருத மொழியின் முதல் இலக்கண கர்த்தா அல்ல. அவனுக்கு முன்னர் இருந்த இலக்கண வித்தகர்களின் நீண்ட பட்டியலை அவனும் பலரும் தந்திருக்கின்றனர். அவைகளும் அகத்தியம் போல ம  ந்துவிட்டன. நாம் எப்படித் தொல்காப்பியருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த பவனந்தி முனிவரின் நன்னூலைப் பயன்படுத்துகிறோமோ அதுபோல சம்ஸ்கிருத மக்களும் பாணினியைப் பயன்படுத்துகின்றனர். பாணினிக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேத கால சம்ஸ்கிருத இலக்கணமே வேறு –

 

ரிக் வேதத்திலேயே 400-க்கும் மேலான புலவர்கள் பெயர்கள் உண்டு; விந்தையிலும் விந்தை அவர்களில் இருபது பேர் பெண் புலவர்கள்! இது உலக அதிசயம். எந்த மொழிக்கும் இல்லாத சிற ப்பு; சம்ஸ்கிருதத்துக்கு 2000 அல்லது 3000 ஆண்டுக்கு பின் எழுந்த சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இப்படிப் பெண் புலவர்களை ப் பார்க்கலாம். உலகிலேயே முதலில் எழுத்தறிவு பெற்றவர்கள், நாகரீகம் படைத்தவர்கள் இந்துக்களே  என்பதற்கு இந்த இரண்டும் சான்றுகள்.

 

tamil-4

சரி இன்னும் ஒரே ஒரு சந்தேகம்; பார்ப்பன அகத்தியன் தமிழுக்கு இலக்கணம் படைத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்ரனர். ஆனால் பார்ப்பனர்கள், சம்ஸ்கிருதம் பேசுபவர்கள்;  தமிழ் நாட்டின் பூர்வகுடிகள் இல்லை என்று திராவிடங்களும் அதுகளும் இதுகளும் அவ்வப்போது வெட்டி முழங்குகின்றனவே!

 

உண்மைதான் ‘வோட்டு’களுக்காக அரசியல் நடத்துவோர், நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். நீங்களே அதுகளும் இதுகளும் என்று அஃறிணை யில் பேசிவிட்டீர்கள் அதுவே போதும்.

 

உண்மை யில் சங்கத் தமிழ் இலக்கியத்தில் மூன்றில் ஒரு பகுதி பார்ப்பனர் இயற்றிய பாடல்கள்தான்; கபிலன் என்னும் “புல ன் அழுக்கற்ற  அந்தணாளந்தான்” அதிக பாடல்களை  இயற்றிய ர்; “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” ஞான சம்பந்தனும் பார்ப்பனனே! மூழ்கிப் போகும் நிலையில் இருந்த  தமிழ் மொழியை கரையேற்றிய பாரதியும் உ.வே.சா.வும் பார்ப்பனர்கள்; அதிகமாக உரைகள் எழுதிய மதுரை பாரத்வாஜ கோத்ர “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியன்”  ஒரு பார்ப்பனன்.

 

அவரோ தொல்காப்பியனும் ஒரு பார்ப்பனன்; அவன் பெயர் த்ருண தூமாக்கினி என்றும் சொல்லுகிறார். அதை ஒப்புக்கொள்ளாத வர்களும் தொல்காப்பியத்துக்கு சர்ட்டிபிகேட் CERTIFICATE கொடுத்தது அதங்கோட்டு ஆச்சார்யன் என்பதை மறுக்கவில்லை. ஆக ஒரு பார்ப்பனன் சர்ட்டிபிகேட் கொடுத்த பின்னரே அதை தமிழ் கூறு நல்லுலகம், நிலந்தரு திருவில் பாண்டியன் அவைக்கு வெளியே உலா வர அனுமதித்தது. தமிழ் மன்னர்கள் செய்த யாக யக்ஞங்களை யும் தமிழில் வேள்வி போன்ற மூலச் சொற்கள் இருப் பதும் தமிழ் பண்பாடுதான் இந்தியா முழுவ தும் நிலவிய பண்பாடு என்று ஐயம் திரிபறச் சொல்லும்.

 

வாழ்க தமிழ்

 

பார்ப்பனர்களை பாரதி சாடியது ஏன்? வர்ணம் வேறு, ஜாதி வேறு- பகுதி-3 (Post No.3161)

brahmin4

Written by London swaminathan

Date: 17 September 2016

Time uploaded in London: 7-30 AM

Post No.3161

Pictures are taken from various sources; thanks.

 

வேதங்களையும், பிராமணீயத்தையும் பல இடங்களில் புகழ்ந்து பாடிய பாரதி, சில இடங்களில் பிராமணர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளான். இது ஏன்? என்று பார்ப்போம்.

 

பாரதியே ஒரு பிராமணன் என்பதையும் வேதங்களைக் கற்றவன் என்பதையும்,  தீவிர தெய்வ நம்பிக்கை உடையவன் என்பதையும் மறந்து விடக்கூடாது.

 

சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல தலைவர்கள் அந்தணர்களே. ஆனால் அதை    விட அதிக அளவுக்கு வெள்ளைக்காரனிடம் வேலை பார்த்ததும் அந்தணர்களே. இவர்களில் பலர்,  பாரதிக்கு எதிராக நின்றனர். உளவும் சொன்னார்கள்.

 

பாரதியின் சீர்திருத்தக் கருத்துகளை ஜீரணிக்கும் அளவுக்கு அறிவின் வளர்ச்சியும் பல பிராமணர்களுக்கு இல்லை. மனைவி செல்லம்மாவுடன் கைகோர்த்து, ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லி, தெருக்களில் நடந்தது அவர்களுக்குப் பிடிக்கவும் இல்லை. அதைக் கிண்டலும் செய்தார்கள்.

 

 

இதற்கெல்லாம் மேலாக பெரும்பாலான பிராமணர்கள் வேதங்களின் உண்மைக் கருத்துகளைப் பின்பற்றாமல் சடங்குகளில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்தனர். இன்னும் பலரோ எந்த வித அனுஷ்டானங்களையும் பின்பற்றாமல் — அதாவது சந்தியா வந்தனம் முதலியன செய்யாமல் — பிறப்பினாலும், பூணுல் போட்டதாலுமே — தாங்கள்தான் சமுதாயத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று எதிர்பார்த்தனர். இந்த போலித் தனத்தை பாரதி ஏற்கவில்லை. மற்ற விஷயங்கள் அவனது பாடல் வரிகளிலேயே இலகு தமிழில், பழகு தமிழில் உள்ளன. நான் விளக்கத் தேவை இல்லை.

brahmin3

வேதம் அறிந்தவன் பார்ப்பான்

 

வேதங்களில், நான்கு வர்ணம் என்று தொழில் ரீதியில் ஜாதியை அணுகியதை, பாரதி ஏற்கிறான். அவனே அதைப் பாடலிலும் தருகிறான்:-

 

வேதம் அறிந்தவன் பார்ப்பான், பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி தவறாமல் – தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

(நாய்க்கன் = அரசன்)

 

 

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறர்

பட்டினி தீர்ப்பவன் செட்டி

தொண்டரென்றோர் வகுப்பில்லை – தொழில்

சோம்பலைப் போல் இழிவில்லை

 

நாலு வகுப்பும் இங்கு ஒன்றே- இந்த

நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே- செத்து

வீழ்ந்திடும் மானிடச் சாதி

 

இதே கருத்து ரிக் வேதத்தின் புருஷ சூக்த மந்திரத்தில் இருப்பதை முதல் பகுதியில் கொடுத்துள்ளேன்.( இது மூன்றாவது கட்டுரை.)

 

நாலு குலங்கள் அமைத்தான்; – அதை

நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்

சீலம் அறிவு கருமம் – இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்

 

மேலவர், கீழவர் என்றே – வெறும்

வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்

போலிச் சுவடியை எல்லாம் – இன்று

பொசுக்கி விட்டால் எவர்க்கும்நன்மை யுண்டென்பான்

(கண்ணன் என் தந்தை – பாடல்)

 

 

bharati-stampz

பேராசைக்காரனடா பார்ப்பான்!

 

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் – ஓதுவார்

மூன்று மழை பெய்யுமடா மாதம்

இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் — இவர்

ஏதுசெய்தும் காசு பெறப் பார்ப்பார்.

 

பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்

பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான்

யாரானாலும் கொடுமை…………….

………………………………………. (வரிகள் கிடைக்கவில்லை)

 

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் – நம்மைப்

பிச்சுப் பணம் கொடு எனத் தின்பான்

கொள்ளைக் கேசெந்—————-(வரிகள் கிடைக்கவில்லை)

 

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் – வெறும்

சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்

 

……………………….

…………………………………(வரிகள் கிடைக்கவில்லை)

 

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு

நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு

பாயும் கடி நாய்ப் போலீசு – காரப்

பார்ப்பானுக்கு உண்டிதிலே பீசு (fees)”

 

பூணூல் போட்டுக் கொண்டதால் மட்டும் உயர்வு என்ற கொள்கையை பாரதி ஏற்கவில்லை. மஹாபாரதம் சொல்லுவது போல (முதல்  இரண்டு பகுதியில் காண்க), குண நலன்களால் பிராமணனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆகையால் வெள்ளைக்கரனை எப்படி “துரை” என்று சொல்லக்கூடாதோ அப்படி பிராமணர்களையும் இனிமேல் “ஐயர்” (பண்பாடுமிக்க உயர்ந்தோர்) என்று சொல்லாதீர்கள் என்றார்:-

bharati-b-w

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே

வெள்ளைப் பறங்கியை துரை என்ற காலமும் போச்சே

ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (ப்ராக்ருதம்)= ஐய(ர்)-தமிழ்

பொருள்: பண்பட்ட மக்கள், மதிப்பிற்குரியோர்.

 

சுங்க வம்ச பிராமணர் ஆட்சிக்காலத்தில் மனு ஸ்மிருதியில் ஏராளமான இடை செருகல் நுழைக்கப்பட்டன. அதில் பல ஸ்லோகங்கள் சூத்திரர்களுக்கு எதிராக உள்ளன. ரிக் வேதத்தில் முதற்கொண்டு இடைச் செருகல், பிற்சேர்க்கை கண்டு பிடித்த வெளி நாட்டு “அறிஞர்களும்”, அவர்களுடைய இந்திய அடிவருடிகளும் மனு ஸ்மிருதியை மட்டும் அப்படியே எடுத்துக்கொண்டனர். ஏனெனில் திட்டுவதற்கு அதில் நிறைய சரக்குகள் இருந்தன. அந்த மனு நீதி எங்கேயும் பின்பற்றப்பட்டு சூத்திரர்களை தண்டித்ததாக வரலாறு இல்லை. அவரவர் குற்றத்துக்கு ஏற்பவே தண்டனைகள் கொடுக்கப்பட்டன. வெள்ளைக்கா ரன் காலத்திலும் அவனை எதிர்த்த பிராமணர் அனைவரும் தூக்கில் போடப்பட்டனர் அல்லது சுட்டுக்கொல்லப்பட்டனர். இப்படி இறந்தோர் ஏராளம் (குறிப்பாக வங்கத்தில்). இந்த மனு நீதியைத் “தமது” என்று சொல்லிய சில பேதைகளைக் கண்டிக்கும் முகத்தான் பாரதியும் பாடினான்.

சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,

சாத்திரம் சொல்லிடு மாயின்
அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”.

 

பாரதிக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சங்கத் தமிழில் அதிகப் பாடல்களைப் பாடிய கபிலன் என்ற “புலன் அழுக்கற்ற அந்தணாளன்”, பாரியின் மகள்களை ஊர் ஊராக அழைத்துச் சென்று மாப்பிள்ளை வரன் தேடினான். இது போல ஜாதிக் கட்டுப்பாடுகளைத் தகர்த்து எறிந்து, மனு நீதியைப் பின்பற்றாமல், பணியாற்றியோர் ஏராளம். மயில் வளர்க்கும் கீழ் ஜாதி மக்களை அழைத்து மாபெரும் மௌர்ய சாம்ராஜ்யத்தை உண்டாக்கிய சாணக்கியன் கடைசி வரையில் குடிசையில் வாழ்ந்தான். மனு தர்மமும் கூட பிராமணன் பொருளே சேர்த்துவைக்கக் கூடாதென்கிறது..

 

இந்தப் பிண்ணனியில் பாரதியின் வரிகளைப் படித்தால் அவன் ஏன்

சாத்திரத்தை “சதி” என்று சொன்னான் என்று தெளிவடைவோம்.

brahmin2

முன்னாள் ராஷ்டிரபதியும், தத்துவ வித்தகருமான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், அவரது பகவத் கீதை வியாக்கியானத்தில், ஜாதிகள்/வர்ணம் பற்றி விள்ளக்குகையில்,  கீழ்கண்ட ஸ்லோகங்களைக் கொடுத்துள்ளார்:-

 

அந்த்யஜோ விப்ர ஜாதி ச ஏக ஏவ சஹோதர:

ஏக யோனி ப்ரசூதஸ் ச ஏக சாகேன ஜாயதே

 

அந்தணர்களும், ஐந்தாவது ஜாதியினரும் சஹோதர்களே; அவர்கள் ஒரு தாயிடத்தில் பிறந்தவர்களே (பழைய கால ஸ்லோகம்)

 

ஏகவர்ணம் இதம் பூர்வம் விஸ்வம் ஆசீத் யுதிஷ்டிர

கர்மக்ரியா விஷேசேன  சாதுர்வர்ண்யம் ப்ரதிஷ்டிதம்

 

ஓ, யுதிஷ்டிரா! ஆதிகாலத்தில் ஒரே ஜாதிதான் இருந்தது; தொழில் வேறுபாட்டால் நான்கு பிரிவுகளாக அவை பிரிக்கப்பட்டன.

 

எல்லாரும் ஓர் குலம்

 

எல்லாரும் ஓர் குலம் – எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்;

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர்- நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் — ஆம்

 

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே — வாழ்க வாழ்க

பாரத சமுதாயம் வாழ்கவே — ஜய ஜய ஜய

பாரத சமுதாயம் வாழ்கவே  – சுப்பிரமணிய பாரதி

 

–Subham–

 

 

Interesting Titbits about Asvamedha Yajna- Part 1(Post No.3159)

gupta-empire-samudragupta-i-c-330-70-av-dinar-7-70g

Written by London swaminathan

Date: 16 September 2016

Time uploaded in London: 15-45

Post No.3159

Pictures are taken from various sources; thanks.

 

Asvamedha Yajna means Horse Sacrifice. It was performed by the Hindu Kings of India. We have good references to this sacrifice in historical as well as Vedic records. It took two years to complete it.

 

Mysterious number 4 and 400 are connected with this Asvamedha. It is a very interesting coincidence that Tamils also gave very much importance to number 4, 40 and 400. Tamil Sangam Literature which is 2000 year old compiled most of the books in 400 verses. Even after the Sangam period this custom continued and important works of 18 minor didactic book are also in 4, 40 and 400. (Please read y article about Tamils fascination with 4, 40 and 400).

 

The second mystery is about the gold and pearls. Horses were decorated with gold and 1000 pearl jewellery! Where did the pearls come from? If it is from Pandya country whose pearl is even praised by Kautilya/Chanakya or even if it is from Gujarat coast, it will explode all the foreign bluffing about Vedic geography. Still I see some foreign jokers writing that Vedic society did not know sea! Asvamedha horse decorated with pearls- is a slap on their face.

Another mystery is about sacrifice of the horse. This horse had 34 ribs according to Rig Veda, the oldest book in the world. This explodes the half-baked foreign clowns’ account that Aryans came from Central Asia with their horses. Those horses have 36 ribs!

kumara-4842-1bv-344-31

Another mystery is horse is equated with the Sun. It is a symbol of Sun according to Rig Veda. There the number 34 (ribs) is interpreted as 27 stars+ five planets+ Sun +Moon. This explodes the foreign half-baked jokers’ account of our astrology and astronomy. They say we imported them from the Greeks! Greeks started writing 1000 years after the Vedas!

 

When kings performed Asvamedha Yajna, they released coins as mementoes. We have beautiful gold coins issued by the Gupta kings. Even a Tamil Pandya king by name Peruvazuthi performed this Yajna and released a coin with horse image. This explodes the myth of foreign invaders’ account that Tamils have a separate culture. There is at least one Hindu reference per every ten lines in Sangam literature!

Another great mystery is that Indus Valley Civilisation alias Sarasvati Valley civilisation! They never used Cow or Horse on their seals. Probably they considered them too sacred to wear or use in business. Horse bones and lot of seals with bulls are recovered!

Rig Veda even got a prince named Asvamedha (RV 5-27-4/6; 8-68-15)

 

Horses from Indus and Sarasvati river areas were of special value according to Vedic literature (It is in Brhadaranyaka Upanishad and Sankyayana Aranyaka). Atharva Veda praises white horses with black ears. They are priced high.

Lepers were used and honoured in Asvamedha! Prisoners were released from prisons on the day of Asvamedha!

 

609 Animals!

609 different creatures representing animal kingdom were collected and released after the sacrifice. And the wild animals were released into forest. So much protection for the forest animals!

Those who said Aryans came from outside India couldn’t show anything similar to Asvamedha, Rajasuya, and Vajapeya sacrifices in Europe or Central Asia! They struggled very hard to compare some killings outside India but did not succeed. This explodes the theory of Aryans coming from outside India. Now these Yajnas prove that they were the sons of the soil. They are in Vedic literature, epics and Puranas and Sangam Tamil literature! They went outside to spread culture. But those people only learnt our languages and some customs.

Huge gifts were given to the priests; thousands of cows and hundreds of horses!

 malayalam-coin

Symbolism

Yajur Veda describes

Morning as Horse’s head

Sun as its eye

Vayua as its breath

Moon as its ear

Asvamedha was a symbolic ritual.

 

It was believed that the performance of 100 such Yagas would enable a mortal king to overthrow the throne of Indra, and to become a ruler of the universe and sovereign of the Gods. Indra would spoil their attempts by tempting them to fall for money or women.

There are lot of riddles used in the Asvamedha Yajna mantras! This shows the high standard of life at Vedic times and higher level of literacy. Obscene dialogue was also used. No one knew why and what they really meant in a big sacrifice like this.

 

Manu and Valluvar

 

Manu says vegetarian food is better than 100 Asvamedhas! Tamil Poet Tiruvalluvar repeated this in his Tirukkural but multiplied100 by 10 and said it is better than 1000 sacrifices: –

“The man who offers a horse sacrifice  every year for a hundred years , and the man who does not eat meat, the two of them reap the same fruit of good deeds”– Manu 5-53

 

“More meritorious than a thousand sacrifices is to give up

The practice of killing a living creature, and eating its carcass” – Kural 259

In this couplet Tiruvalluvar uses the Sanskrit word avi (Havis) which stands for boiled rice and ghee.

Parasurama organised Vajapeya and one hundred Asvamedha sacrifices at Ramatirtha.

Indra performed 100 Asvamedha Yajnas under the supervison of Brihaspati.

 

After any sacrifice, the one who organised it,  for instance the king in the Asvamedha Yajna,  must give the Brahmins whatever they ask. Even if his kingdom or half of his kingdom is asked he must give it. But Brahmins were not greedy in those days and they never asked stupid things. When Parasurama conducted Asvamedha he gave honorarium to every participant. But Drona was not a participant. Being a Brahmin, Drona made a demand at the end of the Yajna. Parasurama accepted his demand and taught him Dhanurveda as Yajna Dakshina (fees for the priest).

 

 

I will give more interesting details of the Horse yajna (fire sacrifice) in the second part.

 

To be continued……………………………

 

 

 

 

ஒரு புதிய பென்சில்! (Post No 3157)

pencil-first

Written by S NAGARAJAN

Date: 16 September 2016

Time uploaded in London: 5-48 AM

Post No.3157

Pictures are taken from various sources; thanks.

 

 

ஒரு  புதிய பென்சில்!

ச.நாகராஜன்

 pencil-024

உத்வேகமூட்டும் சிறு கதைகளுக்கு வாழ்க்கையில் தனி இடம் ஒன்று உண்டு. இரண்டு கதைகளைப் பார்ப்போம்:

 

புதிய பென்சில்!

 

பென்சில் வியாபாரி ஒருவன் புதிய பென்சில் ஒன்றை பென்சில்களுக்கான பெட்டியில் வைக்கப் போனான். அந்த பென்சிலை ஒரு அன்புக்குரியவனாகப் பாவித்து அவன் பென்சிலுக்கு சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்.

“இதோ பார், வெளி உலகிற்குச் செல்ல இருக்கிறாய். நீ தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஐந்து உண்டு. அவற்றைச் சொல்கிறேன். கவனமாகக் கேட்டுக் கொள். இதை நினைவில் வைத்து நடந்து கொண்டாயானால் நீ தான் மிகச் சிறந்த பென்சிலாக இருப்பாய்.

 

முதலாவது விஷயம், நீ மிகப் பெரும் காரியங்களைச் சாதிக்க முடியும், ஆனால் நீ இன்னொருவர் கையில் இருந்தால் தான் அது சாத்தியம், அதை  மறக்காதே!

 

 

அடிக்கடி உன்னைக் கூர்மைப் படுத்தும் போது உனக்கு வலிக்கும். ஆனால் அதை நீ பொருட்படுத்தாதே. அது தான் உன்னைச் சிறந்த வேலையைச் செய்ய வைத்து சிறந்த பென்சிலாக உன்னை ஆக்கும்!

 

 

நீ உன்னால் ஏற்படும் தவறுகளை சரி செய்யவும் முடியும் என்பதை மறந்து விடாதே.

இன்னொன்று, உனக்கு உள்ளே இருப்பது தான் முக்கியம் அதை நினைவில் இருத்திக் கொள்.

 

நீ போகும் மேற்பரப்பின் மீது உனது அடையாளத்தை நன்கு விட்டுச் செல். உன்னைப் பயன்படுத்தும் எந்த பரப்பையும் உன் செயலினால் அழகு படுத்து. என்ன ஆனாலும் சரி, தொடர்ந்து எழுது!

 

 

இந்த ஐந்து விஷயங்களையும் புதிய பென்சில் கவனமாகக் கேட்டது. இதன் படியே நடப்பேன் என்று பென்சில் வியாபாரியிடம் உறுதி கூறியது. அதன் முழு மனதையும் இந்த விதிகளில் ஊற வைத்து அது நடந்தது. சிறந்த பென்சிலாக ஆனது!

 

 world-7-wonders-1

 

உலகின் ஏழு அதிசயங்கள்!

 

வகுப்பறையில் ஆசிரியர் குழந்தைகளை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார். உலகின் சிறந்த அதிசயங்கள் ஏழு எவை? நீங்கள் உங்களுக்குள் விவாதித்தும் ஒரு  முடிவுக்கு வரலாம். தனியாகவும் பதிலைச் சொல்லலாம்.

 

 

சில குழந்தைகள் விவாதித்தன. ஒரு  முடிவுக்கு வந்தன. தங்கள் பட்டியலை அளித்தன இப்படி:

 

 

  • எகிப்தில் உள்ள பிரமிடுகள்
  • தாஜ்மஹல்

3) க்ராண்ட் கேன்யான்

4) பனாமா கால்வாய்

5) எம்பயர் ஸ்டேட் பில்டிங்

6) சீன நெடுஞ்சுவர்

7) பைசா கோபுரம்

 

 

இந்தப் பட்டியலால் மகிழ்ந்த ஆசிரியர் வகுப்பறையை நோக்கிய போது ஒரே ஒரு சிறுமி மட்டும் தனியாக எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.

 

“என்ன, உனக்கென தனி லிஸ்ட் ஒன்று வைத்திருக்கிறாயா” என்று கேட்டார் ஆசிரியர்.

 

அந்தச் சிறுமி மௌனமாக வந்து தனது பட்டியலைத் தந்தாள்.

 

 

1) பார்க்க முடிவது

2) கேட்க முடிவது

3) தொட  முடிவது

4) சுவைக்க முடிவது

5) உணர்ச்சிபூர்வமாக உணர முடிவது

6) சிரிக்க முடிவது

7) அன்பு செலுத்த முடிவது

 

 

இவை நமக்குக் கிடைத்திருக்கிறதே! இவற்றையே உலகின் ஏழு சிறந்த அதிசயங்களாக நான் கருதுகிறேன் என்றாள் அந்தச் சிறுமி.

 

வகுப்பே அமைதியானது.

மேலோட்டமாக மனிதனால் அமைக்கப்பட்டவற்றை சிறந்த அதிசயமாகக் கருதுதல் சரியில்லை.

 

 

இயற்கையாக அமைந்துள்ள இவையல்லவோ சிறந்த அதிசயங்கள்!

 

 

அனைவரும் அந்தச் சிறுமியைப் பாராட்டி அந்தப் பட்டியலையே ஏக மனதாக ஆதரித்தனர்!

**********

 

 

ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1

pyramid_of_caste_system_in_india

Written by London swaminathan

Date: 15 September 2016

Time uploaded in London: 7-38 AM

Post No.3155

Pictures are taken from various sources; thanks.

 

 

ஜாதிகள் என்பன பிற்காலத்தில் தோன்றியன. வர்ணம் என்பது வேத காலத்தில் தோன்றின. நால் வர்ணம் என்பது பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திரர்களைக் குறிப்பதாகும். இன்றோ பல்லாயிரம் ஜாதிகள் உள்ளன. இது எப்படிப் பல்கிப் பெருகின என்பது உலகிலேயே மிகவும் அதிசயமான ஒரு விஷயம். யாரும் தீவிரமாக ஆராய்ந்து எழுதவில்லை. வெள்ளைக்காரர் காலத்தில் தர்ஸ்டன் முதலியோர் பட்டியலிட்டு, அவர்களின் பழக்க வழக்கங்களை பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். ஆனால் அவை ஏன் இப்படிப் பிரிந்தன, தோற்றம் என்ன? என்பதெல்லாம் இன்று வரை கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கின்றன.

 

தமிழ் இலக்கியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து பகு திகளிலும் இருந்த மேற்குடிகள், கீழ்க்குடிகள், புற நானூற்றில் குறிப்பிடப்படும் ஜாதிகள் பற்றி முன்னரே ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன்.

 

வேத காலத்தில் வர்ணம் என்று சொன்னது தோலின் நிறத்தை வைத்து அல்ல. வர்ணம் என்ற உடனே பலரும் கலர் = நிறம் = வர்ணம் என்றே நினைப்பர். வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள். ஒவ்வொருவரும் சில தொழில்களைத் தேர்ந்தெடுக்கலாம். அந்தத் தொழி லின் அடிப்படையில் அவர்கள் வர்ணம் நியமிக்கப்பட்டது. ஆனால் இந்தக் காலத்தில் நடிகர் மகள் நடிகை யாவது போலும், அரசியல்வாதி மகன் அரசியல் தலைவர் ஆவது போலவும் அந்தக் காலத்திலும் இயற்கையாக, இயல்பாக அவரவர் குடும்பத் தொழில்களைப் பின்பற்றினர். ஆயினும் விஸ்வாமித்திரர், தேவாபி போன்ற வேதகால அரசர்கள் பிராமண ர்களாக மாறியதும் மஹாபாரதத்தில் உள்ளது.

 

வெள்ளைக்கார்கள் அடிக்கடி சுட்டிக்காட்டும் வர்ணம் பற்றிய மந்திரம்:-

 

ப்ராஹ்மணோஸ்ய முகமாசீத் பாஹு ராஜன்ய: க்ருத:

ஊரு ததஸ்ய  யத்வைஸ்ய: பத்ப்யாஹும் சூத்ரோ அஜாயத

–ரிக் வேதம் 10-90-12

the-caste-system-during-vedic-civilisation

பிராமணர்கள் வாயிலிருந்தும் (முகம்), அரசர்கள் தோள்களிலிருந்தும் வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் கால்களில் இருந்தும் வந்தனர் என்பது புருஷ சூக்த மந்திரம் ஆகும். இந்த மந்திரம் இவர்கள் அனைவரும் கடவுளின் விராட ஸ்வரூபத்திலுந்து தோன்றினர் என்று சொல்வதிலிருந்து அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல. வாய் மூலம் வேதம் சொல்லிப் பிழைப்பு நடத்துவோர் பிராமணர், தோள்வலி மூலம் அரசாட்சி செய்வோர் க்ஷத்திரியர்கள், தொடைகள், வயிற்றுப் பகுதிக்கு வாழ்வளிப்போர் வணிகர்கள், கால் உழைப்பினால் பணி புரிவோர் சூத்திரர்கள் என்பதும் தெளிவாகும். இந்த உடல் உறுப்பில் ஒன்று இல்லாவிடிலும் ஒருவன் முழு மனிதன் இல்லை. சமுதாயத்தில் இந்த 4 வகையான தொழில் புரிவோர் இல்லாவிடில் அந்த சமுதாயம் இயங்கா து என்பதையும் அறியலாம்.

 

மனுவும் தனது மானவ தர்ம சாஸ்திரத்தில்,

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே என்பார். அதாவது பிறப் பினால் எல்லோரும் சூத்திரர் களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர். இரு பிறப்பாளர் என்பது வேத  காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது . பின்னர் “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல” பிராமணர்களை மட்டுமே குறித்து நின்றது!

 

கிருஷ்ண பரமாத்மாவும், பகவத் கீதையில் “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச: ( 4-13) என்கிறார். அதாவது நான்கு வர்ணம் என்பது குணங்களின் அடிப்படையில் என்னால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறார். இதற்கு இந்தியாவிலுள்ள அறிஞர்கள் பலரும் விரிவான விளக்க உரைகள் எழுதியுள்ளனர். அத்தனையும் தொகுத்தால் அதுவே தனி புத்தகமாகிவிடும். மஹாத்மா காந்தி முதலியோரும் இதை நியாயப்படுத்தி விளக்கம் அளித்துள்ளனர்.

 

ஜாதிகள் பற்றி மஹாபாரதம் முதல் பாரதியார் வரை என்ன சொல்லுகின்றனர் என்பதை இரண்டாவது பகுதியில் காண்போம்.

 

–சுபம்—

My old articles on the same subject:–

Caste Divisions in Ancient Tamil Nadu

Posted on July 4, 2014

 

Eighteen groups of Indians!

Research paper written by London Swaminathan
Research article No.1390; Dated 4 November 2014.

 

 

To be continued……………………………..

ஐயர்கள் உஷார்! பெண்களும் போட்டிக்கு வருகிறார்கள்!! (Post No.3153)

chanda-2

Translated by London swaminathan

Date: 14 September 2016

Time uploaded in London: 9-16 AM

Post No.3153

Pictures are taken from various sources; thanks.

 

“வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்

வேண்டி வந்தோமென்று கும்மியடி

சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்

சாதி படைக்கவும் செய்திடுவோம்”

–தேசியகவி சுப்பிரமணிய பாரதி

cahnda-3

இதனால் சகல ஐயர்களுக்கும் (Priests) அறிவிப்பது என்ன வென்றால் , உங்கள் பிஸினஸ் பார்ட்னர்களாகப் (Business Partners) பெண்களும் வரவிருக்கிறார்கள். போட்டிக்குத் தயாராகுங்கள்!

 

பிரிட்டனில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் நகரம் லெஸ்டர் (Leicester). லண்டனிலிருந்து 130 மைல் தொலைவில் உள்ளது. அங்கே ஒரு புரட்சி நடந்திருக்கிறது. ஒரு இந்துப் பெண்மணி இந்துசமயப் புரோகிதர் ஆகிவிட்டார். அட! அவர் தன்னை புரோகிதர் என்று அறிவித்தால் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? லெஸ்டர் இந்து சமூகம் அவளை புரோகிதராக ஏற்றுக் கொண்டது! அவர் பெயர் சந்தா வியாஸ்.

 

 

பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே ஆசை — புரோகிதராக வேண்டும் என்று. எல்லா ஆசைகளும் அவ்வளவு எளிதில் நிறைவேறிவிடுமா? இல்லை.

 

அவர் கல்யாணம் முடித்து மூன்று மகள்களை   பெற்றெடுத்தார். சமூக ஊழியராகப் பணியாற்றினார். பழைய ஆசை திடீரென மேலுக்கு வந்தது. அப்பாவிடம் அனுமதி கேட்டார். விவாக மந்திரங்களைப் பயின்றார். கல்யாணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளை மட்டும் நடத்துவதென்று முடிவு செய்தார். செய்தி பரவியது.

 

பிரிட்டனில் வசிக்கும் இந்துக்கள், கால, தேச, வர்த்தமானத்தை மனதில் கொண்டு மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் படைத்தவர்கள். மேலும் வேத காலத்தில் கார்கி, மைத்ரேயி போன்ற உலகப் புகழ் அறிஞ ர்கள் இந்து மதத்தில் இருந்ததையும் அவர்கள் அறிவர். சாவித்திரி, திரவுபதி போன்ற பேரறிஞர்கள் இந்து மதத்தில் இருந்ததும் அவர்களுக்குத் தெரியும். பெரிய வழக்கறிஞர்களைத் தோற்கடிக்கும் அளவுக்கு திரவுபதியும் சாவித்ரியும் வாக்குவாதம் செய்ததை அவர்கள் மஹாபாரதத்தில் படித்துள்ளனர். அது மட்டுமல்ல; அவ்வையா ர் போன்ற சங்க காலப் புலவர்களையும் சபரி போன்ற வேடர் குலப் பெண்களையும் அவர்கள் அறிவர். பெண்களில் மாமேதைகள் அவர்கள்.

 

இந்தப் பிண்ணனியில் சந்தா வியாசுக்கு திருமணம், பிறந்த நாள் வைபவங்கள், புதுமனை புகு விழாக்கள் (கிருஹப் ப்ரவேசம்) நடத்த அழைப்புகள் வந்த வண்ணமுள்ளன.

 

சந்தா வியாசுக்கு ஆங்கிலமும் குஜராத்தி மொழியும் தெரியும் என்பதால் மந்திரங்களின் விளக்கங்களை ஆங்கிலத்திலும் சொல்லி நடத்துவதால் இளம் தலை முறையினருக்கு பெரு மகிழ்ச்சி.

chanda-vyas1

 

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்

–தேசியகவி சுப்பிரமணிய பாரதி

 

–subham–

 

 

 

தீப்போல தகிக்கும் ஐந்து விஷயங்கள் (Post No.3141)

copper-_copper

Written by London Swaminathan

 

Date: 10 September 2016

 

Time uploaded in London: 21-45

 

 

Post No.3141

 

Pictures are taken from various sources; thanks.

 

 

பார்யா வியோக: சுஜனா அபவாத:

ருணஸ்ய சேஷம் குஜனஸ்ய சேவா

தாரித்ரய காலே ப்ரியதர்சனம் ச

வினாக்னினா பஞ்ச தஹந்தி காயம்

 

பொருள்:–

தீ இல்லாமலே உடலை தகிக்க வைக்கும் ஐந்து விஷயங்கள்:–

மனைவியின் பிரிவு, நல்லவர்கள் செய்யும் தீய செயல், கடன் மிச்சம், கெட்டவர்களிடம் வேலை செய்தல், வறுமையில் வாடுகையில் விருந்தினர் வருகை ஆகிய ஐந்தும் உடலை தகிக்க வைக்கும் ஐந்து விஷயங்கள்.

 

Xxxx

cloth

பங்கிடக்கூடாதவை

வஸ்த்ரம் பாத்ரம் அலங்காரம் க்ருதான்னம் உதகம் ஸ்த்ரிய:

யோகக்ஷேமம் ப்ரசாரம் ச ந விபாஜ்யம் பஞ்சக்ஷதே மனு 9- 219

 

சொற்ப விலையுள்ள துணி

செம்பு (தான் பயன்படுத்தும் பாத்ரம்)

அலங்காரப் பொருட்கள் (தான் உபயோகிப்பவை)

சமைத்த உணவு (சாப்பிடுகையில்)

கிணறு (தன் வீட்டு)

வேலைக்காரிகள்

மந்திரி

புரோகிதன்

தெருக்குறடு

வழிநடை (ரேழி)

 

இவை அனைத்தும் ஒருவருடைய உபயோகத்தில் இருக்கையில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆரோக்கியத்துக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும்.

 

–Subham–

 

வேதநாயகம் பிள்ளையின் விநோதக் கடிதம் (post No.3106)

vedanayagam_pillai

Written by London Swaminathan

 

Date: 31 August 2016

 

Time uploaded in London: 8-32 AM

 

Post No.3106

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக விளங்கிய மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் ஒரு பெரிய தமிழ் அறிஞர். அவரை வந்து சந்திக்கும் தமிழ்ப் புலவர்களுக்குப் புரவலராக விளங்கினார். பலருக்கும் தமிழ் நூல்களை விளக்கிப் பாடம் சொன்னவர் அவர். அவரது பெருமையைக் கேட்ட மாயூரம் முன்சீப்பு வேதநாயகம் பிள்ளை ஒரு நாள் அவரைக் காணவந்தார். அவர் கிறிஸ்தவர். சுப்பிரமணிய தேசிகர் மடாதிபதி. ஆயினும் தமிழ் என்னும் பாலம் அவர்களை இணத்தது.

 

மடாதிபதியும், நீதிபதியும் பல மணி நேரம் கலந்துரையாடினர். பொழுது சாயும் வேளையில் மாட்டு வண்டியில் ஏறி வேதநாயகம் பிள்ளை மாயூரத்துக்கு விரைந்தார். வண்டிதான் முன்னே சென்றதே தவிர அவர் மனம் பின்னேயே சென்றது; அதாவது திருவாவடுதுறையை நோக்கியே எதிர்த் திசையில் போய்க்கொண்டிருந்தது.

 

மறுநாள் காலையில் வேதநாயகம் பிள்ளை எழுந்தார். ஆனால் வேலையே ஓடவில்லை. திருவாவடுதுறையிலேயே ஒரு பொருளை விட்டுவந்ததால் ஒரு தவிப்பு. உடனே அந்தப் பொருளைக்கேட்டு கடிதம் எழுதினார். இருவரும் தமிழ் அறிஞர் ஆனதால் கவிதை வடிவில் கடிதம் எழுதினார்:–

 

சுருதியோர் உருக்கொண்டென்ன

சுப்பிரமணிய மேலோய்!

கருதி இன்னொருகால் உன்னைக்

காணலாம் எனும் அவாவால்

பொ ரு தி என்மனம் பின் ஈர்க்கப்

பொறையுறும் வண்டி பூட்டும்

எருதுகள் முன்னே ஈர்க்க

என்பதி அடைந்திட்டேனே

 

பொருள்:-

வேதமே உருவாய் நின்றது போல விளங்கும் சுப்பிரமணியப் பெரியவரே! இன்னும் ஒருமுறை உம்மைக் கணுவோம் என்று மனம் பின்னே செல்கிறது. வண்டியோ எருதுகளால் இழுக்கப்பட்டு முன்னே விரைந்தோடுகிறது.

 

 

மனம் ஓரிடத்திலும் உடல் வேறொரு இடத்திலும் இருந்தால் எப்படி வேலை செய்யமுடியும். ஆகையால் என் மனத்தை உடனே அனுப்பிவையுங்கள் என்று இன்னொரு பாடல் எழுதி கடிதத்தை அனுப்பிவைத்தார்.

சூர்வந்து வணங்கு மேன்மை சுப்பிரமணியத் தேவே

நேர்வந்து நின்னைக் கண்டு நேற்றிராத்திரியே மீண்டு

ஊர்வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து  சேரக்காணேன்

ஆர்வந்து சொலினும் கேளேன் ; அதனையிங்கனுப்புவாயே

 

 

தமிழ் மீது கொண்ட அன்பு, எப்படி இருவேறு மதத்தினரைச் சேர்த்து   வைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நல்ல நட்புக்கும் எடுத்துக் காட்டு.

 

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு (குறள் 786)

 chariot mbh

காளிதாசனும் வேதநாயகம் பிள்ளையும்

 

வேதநாயகம் பிள்ளை பயன்படுத்திய ஒரு உவமை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே காளிதாசனாலும் பயன்படுத்தப்பட்டது.

 

கச்சதி புர: சரீரம்

தாவதி பஸ்சாதசம்ஸ்திதம் சேத:

சீனாம்சுகமிவ கேதோ:

ப்ரதிவாதம் நீயமானஸ்ய

–சாகுந்தலம் 1-33

 

சகுந்தலை என்னும் பேரழகியை, கண்வரின் ஆசிரமத்தில், மாமன்னன் துஸ்யந்தன் கண்டான்; கண்டதும் காதல் மலர்ந்தது. இருந்தபோதிலும் மாமன்னன் என்பதால் உடனே அவளை அணுக மனமில்லை. மேலும் அவளோ தோழிகளுடன் சென்று விட்டாள். மாமன்னரின் தேர் தலைநகரை நோக்கி விரைந்தோடியது. தேரிலுள்ள அவரது உடல்தான் முன்னே சென்றது. மனமோ தேருக்கு எதிர்த் திசையில் சென்றது. அதாவது பேரழகி சகுந்தலையை நோக்கிச் சென்றது. காளிதாசன் உவமை மன்னன். ஆயிரத்துக்கும் மேலான உவமைகளை தனது ஏழு நூல்களிலும் அள்ளித் தெளித்திருக்கிறான்.

 

மனம் பின்னே சென்றது; உடல் முன்னே சென்றது என்பதற்கு அவன் பயன்படுத்திய உவமை: தேர் முன்னே சென்றது; தேரின் உச்சியில் கட்டப்பட்ட கொடியோ எதிர் திசையை நோக்கிப் பறந்தது! தேர் = உடல்; கொடி= மனம்.

 

கொடியும் காற்றில் படபடக்கும்; மனமும் காம வேகத்தில் படபடக்கும். அருமையான உவமை.

 

வேதநாயகம் பிள்ளையும் இந்த சாகுந்தல ஸ்லோகத்தைப் படித்திருப்பார். அதனால் மனம் பின்னோக்கிச் சென்றது, வண்டி முன்னே சென்றது என்ற உவமையைப் பயன்படுத்தி இருக்கலாம்; அல்லது பெரியோர் ஒரே மாதிரி எண்ணுவர் “GREAT MEN THINK ALIKE” என்றும் கருத இடமுண்டு!

 

–subham–