வேத நிலாவின் பவனி! (POST No.5530)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 12 October 2018

 

Time uploaded in London – 6-59 AM (British Summer Time)

 

Post No. 5530

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

வேத நிலாவின் பவனி!

 

.நாகராஜன்

 

வேத நிலாவின் பவனி – தம்பீ

வீறுபெற் றெழுந்ததைக் கவனி – ஓதும்

நாத ஒலியின் சக்தி – நமக்கு

நல்கிடும் பரசிவ முக்தி

 

நாயென வாழ்ந்தது போதும் – இதோ

ஞாலத் தலைமையென ஓதும் – இன்னும்

பேயென வாழ்க்கை புரிவையோ  – அன்றி

பீடுடை அரியென நடப்பையோ

 

இந்திரன் அக்கினி வளியுடன் – மீண்டும்

அனைவரு மெழுந்தனர் உயிருடன் – ஆஹா

மந்திர வித்தைகள் பாரடா – அதன்

மகிமைகள் ஓர்ந்து தேரடா

 

பட்ட மரம் தளிர்க் குதடா – பருந்துமே

பாம்பை அணைக் குதடா- ஆஹா!

சுட்டவை உயிரோ டாடுதடா – இங்கு

சுடர்ப்பொறி சுழித்துப் பாடுதடா

 

சொல்லவும் குளிருது இதயம் -இங்கு

சுதந்திர ஞானம் உதயம் – தம்பீ

மெல்லெனத் தென்றல் வீசுது – எனது

மேனியும் சிலிர்த்து ஆடுது

 

பாரத நாடிது உயர்ந்தது – அந்தப்

பார்த்தனின் வீரம் மீண்டது – சொல்லினி

பாரதி ஆரிய வாணி – அவளே

பாரினை ஆளும் ராணி!

 

***

களி, துயர் ஒன்றெனக் கருதுவோம்!

 

.நாகராஜன்

 

சிலமலர் வாடி உதிரும்

சிலமலர் தெய்வம் சேரும்

நிலவுல கிதனில் நேர்ந்த

நிலையெலாம் எண்ணி மாய்ந்தால்

கலங்கி நா மழிவோ மன்றோ!

கவலையை விரட்டி ஒழித்தே

உலகியல் களிதுயர் இரண்டும்

ஒன்றெனக் கருதி வாழ்வோம்!

***

வேற்றுமையில் ஒற்றுமை

 

.நாகராஜன்

 

வேற்றுமையில் ஒற்றுமை

விளங்குகின்ற நாடு

நேற்றுமின்றும் நாளையும்

நிலைத்திருக்கும் நாடு   . . பாரத நாடு

 

ஹிந்து முஸ்லீம் சீக்கியர்

புத்தர் ஜைனர் கிறிஸ்தவர்

எந்த மதத்தோர் ஆயிலென்?

இணைந்திருக்கும் நாடு    … பாரத நாடு

 

தமிழ் தெலுங்கு வங்கம்

சிந்தி மராட்டி ஹிந்தி

அமிழ் தினைப் போல் மொழிகள்

அனைத்தும் இங்கே ஒன்றாம் ..  பாரத நாடு

 

உடுத்திடும் உடைகள் வேறு

உண்டிடும் உணவுகள் நூறு

அடுத்திடும் சடங்குகள் பலவாம்

ஆயினும் உணர்வோ ஒன்றாம்  … பாரத நாடு

 

இதுவே பூமியில் சொர்க்கம்

இதுவே அமைதியின் நிலையம்

இதுபோல் ஏதொரு நாடு

இணையிலா இன்ப வீடு   … பாரத நாடு

***

 

பக்தர்கள் ஆனாலும் மருந்து சாப்பிடுக: ஆதி சங்கரர் அறிவுரை (Post No.5473)

         

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 26 September 2018

 

Time uploaded in London – 6-56 am (British Summer Time)

 

Post No. 5473

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

பக்தர்கள் ஆனாலும் மருந்து சாப்பிடுக: ஆதி சங்கரர் அறிவுரை (Post No.5473)

 

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே-“

 

“உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”- திருமந்திரப் பாடல்

 

உலகிலேயே மிகவும் விஞ்ஞான பூர்வமான மதம் இந்து மதம். ஆயுர் வேதம் என்னும் மருத்துவ சாஸ்திரத்துக்கும் கூட ‘வேதம்’ என்ற சொல்லைச் சேர்த்த மதம். வேதம் என்றால் ‘அறிவு’. சித்த மருத்துவத்திலும் கூட ‘சித்த’ என்ற புனிதச் சொல்லைச் சேர்த்த மதம். ‘சித்த’ என்பது, அடையமுடியாத அபூர்வ சக்திகளை, காய கல்பத்தைக் குறிக்கும்.

 

உலகிலேயே கடவுளுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்த மதம் இந்துமதம் ஒன்றே. கடவுளை டாக்டர் என்றும் மருந்து என்றும் யஜூர்வேத மந்திரம் சொல்லும். ‘பேஷஜம்= மருந்து, பிஷக்= மருத்துவர்’.

 

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் இறைவனை ‘ஔஷதம்’ என்று புகழும். மூலிகைகளுக்கு ஓஷதி என்று பெயர். அவற்றிலிருந்து வருவதே ‘அவுசதம்’.

எல்லா நோய்களிலும் பெரிய நோய்- பிறவிப் பிணி. அதாவது ஜனன-மரணச் சுழல். பிறப்பு, இறப்பு என்னும் சுழல் வட்டம். ஆகையால் சமய நூல்களில் வரும் நோய் என்பது பிறவிப் பிணியைக் குறிக்கும் என்பது வியாக்கியானக்காரர்கள் சிலரின் விளக்கம். அது சரியல்ல என்பது சமய நூல்க ளைக் கற்றோருக்கு விளங்கும்.

 

பரமஹம்ஸர் போன்ற பெரியோர்கள், ரமணர் போன்ற பெரியோர்களுக்கு மட்டுமே உடல் என்பது ஒரு அழுக்குச் சட்டை போல. அவர்கள் இந்த உடலை நாம் கழற்றித் தூக்கி எறியும் சட்டை, வேட்டி போலக் கருதுவர். அவர்கள் ஜீவன் முக்தர்கள். இவர்கள் இருவருக்கும் புற்று நோய். அப்படியும் நோய் போக இறைவனை வேண்டவில்லை. ஏனெனில் வாழ்க்கையின் உயரிய பலனை இருக்கும்போதே அடைந்துவிட்டார்கள்.

 

நம்மைப் போன்ற அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு உடம்பும், உடல் ஆரோக்கியமும் அவசியம். இதைத்தான் திருமூலர் போன்ற பெரியோர்கள், சித்தர்கள் ஏராளமான பாடல் மூலம் விளக்கினர். கிராமப் புறங்களில் கூட சுவரை வைத்துத் தான் சித்திரம் என்பர். அதாவது உடல் நல்ல நிலையில் இருந்தால்தான் உயரிய லட்சியங்களை அடையமுடியும். சுவாமி விவேகாநந்தரும் அடிக்கடி மேற்கோள் காட்டும் உபநிஷத மந்திரம் – ‘ஆத்மாவை பலவீனமுடையவன் அடைய முடியாது’ என்பதாம்.

 

ஆதிசங்கரர் போன்ற மஹா தத்துவ தரிசிகளும் கூட பாடலில் உவமைகளாக இந்தக் கருத்தைச் சொல்லுவதைப் பார்க்கையில் நமக்கு அதன் பெருமை விளங்குகிறது. திருவள்ளுவரும் கூட சரிவிகித உணவு, மருந்து, நோய்கள் பற்றிப் பத்து குறள்கள் பாடிவிட்டார்.

 

இதோ விவேக சூடாமணி என்ற அற்புதமான துதியில் ஆதி சங்கரர் சொல்லும் இரண்டு பாடல்கள்:

 

பத்யம் ஔஷத ஸேவா ச க்ரியதே யேன ரோகிணா

ஆரோக்யஸித்திர் த்ருஷ்டாஸ்ய ந அன்யானுஷ்டித கர்மணா-53

எந்த ஒருநோயாளி மருந்தையும் பத்தியத்தையும் சரியான முறையில் உபயோகிக்கிறானோ அவன்தான் பூரண குணம் அடைவான்; மற்றவர்கள் அவனுக்காக செய்யும் பணிகளினால் அல்ல”- ஸ்லோகம் 53

 

இதை ஒருவர் பரிபூரண ஞானத்தை அடைவது அவரவர் முயற்சியால்தான் முடியும் என்பதற்கு அவர் உதாரணமாகக் காட்டுகிறார்.

“சொற்களும் , சாஸ்திர அறிவும், துதிகளும் உண்மை ஞானம் ஏற்பட உதவாது (அவைகள் ஏணிப்படிகளே) என்று விளக்கும்போது சங்கரர் சொல்கிறார்:-

 

ந கச்சதி விநா பானம் வ்யாதிர் ஔஷதசப்ததஹ

விநா அபரோக்ஷ அனுபவம் ப்ரஹ்மசப்தைர் ந முச்யதே- 62

“மருந்தைச் சாப்பிடாமல் மருந்தின் பெயரை உரத்த குரலில் சொன்னால் மட்டும் நோய் போய் விடாது; அதே போல பிரம்மன்/ பிரம்மம் என்று சொல்லுவதால் மட்டும் முக்தி கிடைத்து விடாது. மருந்தை எடுத்துச் சாப்பிடுபவன் போல   அதை உணர வேண்டும்”.

 

இது போல பல பாடல்களில் போகிற போக்கில் மருந்து, நோய்கள் பற்றிச் சொல்கிறார். சில நோய்கள் பிராரப்த கர்மத்தினால்- முன் வினைப் பயனால் வரும் என்றும் கூறுகிறார்.

 

திருவள்ளுவர் நேரடியாக நோய்கள் பற்றிச் சொல்கிறார். ஆதி சங்கரர் உவமைகளாகக் காட்டிச் செல்கிறார்.

படித்துப் பயன் பெறுவோம்.

 

 

–சுபம்–

அய்யங்காருக்கு பாரதியார் கடிதம் (5469)

அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-3 (Post No.5469)

 

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 9-17 am (British Summer Time)

 

Post No. 5469

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

இது பகுதி 3

 

பாரதியார், வ,உ. சிதம்பரம் பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் பல சமயங்களில் மு. இராகவையங்காரைப் பாராட்டி எழுதிய கடிதங்கள் இவை.

 

முதல் இரண்டு பகுதிகளைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

 

 

 

 

–subham–

 

அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-2 (Post No.5468)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

 

Post No. 5468

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

UP TO 60 YEARS OF RAGHAVA IYANGAR

 

 

HIS RESEARCH PUBLICATIONS

 

TO BE CONTINUED IN PART 3

 

–SUBHAM–

 

அய்யங்காரின் அற்புத தமிழ் சேவை-1 (Post No.5467)

Compiled by London Swaminathan

swami_48@yahoo.com
Date: 25 September 2018

 

Time uploaded in London – 7-12 am (British Summer Time)

 

Post No. 5467

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

மு.இராகவையங்கார்

பிறந்த ஆண்டு – 1878

இறந்த ஆண்டு- 1960

 

மு.ராகவ அய்யங்கார், தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவை மிகவும் அற்புதமான சேவை. காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், மஹா கவி பாரதி, வ.உ.சி, உ.வே. சாமிநாத அய்யர் மற்றும் அவரது சம காலத்திய அறிஞர் பெருமக்கள் அனைவராலும் ஒருங்கே பாராட்டப்பட்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட புகழ்மிகு செந்தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியர்.

 

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். அவரது 60 ஆண்டு நிறைவின் போது வெளியான மலரில் அவரைப் பற்றிய முழு விவரங்களும் வெளியாகின. இதோ வையாபுரிப் பிள்ளை எழுதிய முகவுரை, ராமசந்திர தீக்ஷிதரின் கட்டுரை ஆகியன.

 

அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

 

அவரது ஆராய்ச்சியின் சிறப்பு

 

 

 

அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

to be continued in part 2 and 3…………………….

அவர் எழுதிய ஆராய்ச்சி நூல்கள்

அவரது வாழ்க்கைக் குறிப்பு ( 60 வயது வரை)

பாரதியின் பாராட்டும் வ.வு.சியின் பாட்டும்

–subham-

தமிழில் அலங்காரம்! (Post No.5455)

Written by S NAGARAJAN

Date: 22 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 5-42 AM (British Summer Time)

 

Post No. 5455

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழில் அலங்காரம்!

 

.நாகராஜன்

 

ஒரு கவிதையை நன்கு ரசிக்க அலங்காரம் அல்லது அணி பற்றிய அறிவு நிச்சயம் தேவை.

 

முகம் அழகாக இருக்கிறது என்று சொல்வதை விட சந்திரன் போன்ற முகம் என்றால் நமக்கு இன்னும் நன்றாகப் புரியும்.

அவள் அழகில் ரம்பா என்று சொல்லும் போது ரம்பையை நாம் நேரில் கண்ட்தில்லை என்றாலும் அர்த்தம் என்னவோ புரிகிறது.

இப்படி உவமை, உருவகம் என பல்வேறு அணிகள் நமது புரிதல் தன்மையையும் அர்த்தத் தெளிவு காணலையும் தருவதோடு அழகு உணர்தலையும் மேம்படுத்துகின்றன.

 

பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தில் நான்கு அலங்காரங்களைப் பற்றிச் சொல்கிறார்.

 

சம்ஸ்கிருத இலக்கணத்திலோ சப்தாலங்காரம், அர்த்தாலங்காரம் என இரு வகை அலங்காரங்களைப் பார்க்கிறோம். இவற்றின் பட்டியல் நீளமானது.

 

தமிழில் சிறு எண்ணிக்கையில் ஆரம்பித்த அணிகளின் பட்டியல்  வீர சோழியம் நூலில் 35ஐ எட்டியது.

 

பின்னர் தண்டியலங்காரம் அலங்காரங்களின் பட்டியலில் 35ஐத் தர மாறனலங்காரமோ 64ஐத் தொட்டது.

 

திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அணியிலக்கணமோ 100 அணிகளைப் பட்டியலிட்டு விளக்கியுள்ளது.

இறுதியாக வந்த குவலயாநந்தம் என்ற நூலோ 120 அணிகளின் பட்டியலைத் தருகிறது.

 

அந்தப் பட்டியல் வருமாறு:-

1) உவமையணி

2) இயையின்மையணி

3) புகழ்பொருளொப்பணி

4) எதிர்நிலையணி

5) உருவக அணி

6) திரிபணி

7) பலபடப்புனைவணி

8) நினைப்பணி

9)  மயக்கவணி

10) ஐயவணி

11) வெற்றொளிப்பணி

12) தற்குறிப்பணி

13) உயர்வுநவிற்சியணி

14) ஒப்புமைக்குழுவணி

15) விளக்கணி

16) பின்வருவிலக்கணி

17) தொடர்முற்றுவுவமையணி

18) எடுத்துக்காட்டுவமையணி

19) காட்சியணி

20) வேற்றுமையணி

21) உடனவிற்சியணி

22) இன்மை நவிற்சியணி

23) சுருங்கச் சொல்லணி

24) கருத்துடையணி

25) கருத்துடையடைகொளணி

26) சிலேஷையணி

27) புனைவில்லிப் புகழ்ச்சியணி

28) புனைவுள்ளி வினையணி

29) பிறிதினவிற்சியணி

30) வஞ்சப்புகழ்ச்சியணி

31) வஞ்சப்பழிப்பணி

32) எதிர்மறையணி

33) முரண்மேல் வினையணி

34) பிறிதாராய்ச்சியணி

35) காரணவாராய்ச்சியணி

36) கூடாமையணி

37) தொடர்பின்மையணி

38) தகுதியின்மையணி

39) தகுதியணி

40) வியப்பணி

41) பெருமையணி

42) சிறுமையணி

43) ஒன்றுக்கொன்றுயுதவியணி

44) சிறப்புநிலையணி

45) மற்றதற்காக்கலணி

46) காரணமாலையணி

47) ஒற்றைமணிமாலையணி

48) மாலை விளக்கணி

49) மேன்மேலுயர்ச்சியணி

50) நிரல்நிறையணி

51) முறையிற்படர்ச்சியணி

52) மாற்றுநிலையணி

53) ஒழித்துக்காட்டணி

54) உறழ்ச்சியணி

55) கூட்டவணி

56) வினைநுதல் விளக்கணி

57) எளிதின் முடிவணி

58) விறல் கோளணி

59) தொடர்நிலைச் செய்யுட் பொருட் பேறணி

60) தொடர்நிலைச் செய்யுட்  குறிப்பணி

61) வேற்றுப்பொருள் வைப்பணி

62) மலர்ச்சியணி

63) கற்றோர் நவிற்சியணி

64) பேருய்த்துணர்வணி

65) பொய்த்தற்குறிப்பணி

66) வனப்பு நிலையணி

67) இன்பவணி

68) துன்பவணி

69) அகமலர்ச்சியணி

70) இகழ்ச்சியணி

71) வேண்டலணி

72) இலேசவணி

73) குறிநிலையணி

74) இரத்தினமாலையணி

75) பிறிதின் குணம்பெறலணி

76) தொல்லுருப் பெறலணி

77) பிறிதின்குணப்பேறின்மையணி

78) தன்குணமிகையணி

79) மறைவணி

80) பொதுமையணி

81) மறையாமையணி

82) சிறப்பணி

83) இறையணி

84) நுட்பவணி

85) கரவுவெளிப்படுப்பணி

86) வஞ்சநவிற்சியணி

87) குறிப்பு நவிற்சியணி

88) வெளிப்படை நவிற்சியணி

89) உத்தியணி

90) உலகவழக்கு நவிற்சியணி

91) வல்லோர் நவிற்சியணி

92) ம்டங்குதனவிற்சியணி

93) தன்மை நவிற்சியணி

94) நிகழ்வினவிற்சியணி

95) வீறுகோளணி

96) மிகுதி நவிற்சியணி

97) பிரிநிலை நவிற்சியணி

98) விலக்கணி

99) விதியணி

100) ஹேதுவணி

101) சுவையணி

102) கருத்தணி

103) வன்மையணி

104) சேர்க்கையணி

105) பாவகத் தோற்றவணி

106) பாவகச் சேர்க்கையணி

107) பாவகக் கலவையணி

108) காட்சிப் பிரமாணவணி

109) அநுமானப் பிரமாணவணி

110) ஒப்புப் பிரமாணவணி

111) சொற் பிரமாணவணி

112) பொருட்பேற்றுப் பிரமாணவணி

113) நுகர்ச்சியின்மை

114) பிறப்புப் பிரமாணவணி

115) எடுத்துக்காட்டுப் பிரமாணவணி

116) சேர்வையணி

117) உறுப்புறுப்பிக் கலவையணி

118) இரண்டு முக்கியமாகக் விளங்குங் கலவையணி

119) ஐயக் கலவையணி

120) ஒரே சொல்லையணுகி விளங்குங் கலவையணி

 

இப்படி 120 அணிகளைப் பற்றியும் தெரிந்து கொண்டால் கவிஞனின்  கவிதா ஞானமும் பொருள் வீச்சும் நன்கு புரியும்.

இதற்கான செய்யுள்கள் தமிழிலக்கியத்தில் ஏராளம் காணலாம்.

அவற்றை அணி விளக்கத்தோடு இனி வரும் கட்டுரைகளில் சிறிது காண்போம். சம்ஸ்கிருதத்தில் உள்ள அலங்காரங்களையும் தமிழ்க் கவிஞர்கள் விடவில்லை. அதையும் ஆங்காங்கே ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழின் அருமையும் பெருமையும் நன்கு புரியுமல்லவா! சிறிது தமிழிலக்கியக் களத்தினுள் இறங்குவோமா?

***

72 தமிழ்க் கவிஞர்களின் சரிதம் தந்த முருகதாஸ் சுவாமிகள் (POST No.5421)

WRITTEN by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 12 September 2018

 

Time uploaded in London – 8-29 AM (British Summer Time)

 

Post No. 5421

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

தமிழுக்கு பெரும் சேவை செய்த பெரியார்களில் ஒருவர் முருகதாஸ் சுவாமிகள். இவர் பத்து வயதிலேயே கவி பாடியவர். கோலிக் குண்டு விளையாடும் இடை வேளையிலும் கவி எழுதுவாராம். எப்பொழுதும் இதற்காக எழுத்தாணியையும் பனை ஓலையையும் கூடவே எடுத்துச் செல்வாராம். அப்படிச் சிறுவயதிலேயே இவர் பாடிய முதல் நூல் பன்னிருமாலை ஆகும். முருகப் பெருமான் அவரது 12 கரங்களில் தாங்கிய ஆயுதம் முதலியவற்றை போற்றித் துதி பாடிய கவிகள் அவை. இவர் செய்த மஹத்தான சாதனை- எவரும் செய்யாத சாதனை- 72 தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தாம் அறிந்த முறையில் செய்யுட்களில் தந்தமை ஆகும். அகத்தியர் முதல் துவங்கி நாம் அதிகம் அறியாத அறிவுத்தன்மைப் புலவர் வரை 2828  செய்யுட்களில் பாடிவிட்டார்.

 

 

‘புலவர் புராணம்’ என்ற பெயரில் 1901-ஆம் ஆண்டு முதல் 1906-ஆம் ஆண்டு வரை மூன்று தொகுதிகளில் இவை வெளியாகிற்று. திருவள்ளுவர், அவ்வையார் ஆகியோர் சஹோதர சஹோதரிகள் என்ற பழைய கதைப் படியே இவர் சரிதம் எழுதியுள்ளார். இவர் முருகன் மீது பக்தி பூண்டதால் முருக தாசர் என்று அழைக்கப்பட்டார். தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள் என்ற பெயர்களும் உண்டு. இவர் திருநெல்வேலியில் 1838ல் பிறந்து 1898-ல் இறந்தார் என்று 1901 ஆம் ஆண்டு வெளியான ‘புலவர் புராண’ முகவுரையில் வி. கிருஷ்ணமாச்சாரியார் எழுதியுள்ளார்.

 

 

இது ஒரு புது வகை இலக்கியம் என்றும் வருங்கால சந்ததியினர் இவர் விட்டுவிட்ட விஷயங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் கிருஷ்ணமாச்சாரி முகவுரை கூறுகிறது. முருகதாசர் இந்துக் கவிஞர் வரலாறு மட்டுமே யாத்துள்ளார். பௌத்த, சமணர்கள் எவரும் இல்லை. மேலும் அவர் அறிந்த வகையில் கால வரிசைப்படி கவிஞர்களை வைத்துள்ளார். நல்ல தூய, செம்மையான பாக்கள் அவை. முருக்தாசரின் மகன் கொடுத்த தகவலின் படி அவர் எழுதிய வேறு நூல்கள்:–

 

தில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம்,தெய்வத் திருவாயிரம், பழனித் திருவாயிரம், அருணகிரிநாதர் புராணம், நான்கு நூல், திருச்செந்தூர் திருப்புகழ்,  திருச்செந்தூர் கோவை, திருவாமாத்தூர் தலபுராணம்,ஏகபாதத்திதழகலந்தாதி, பதிகச் சதகம், சதகப் பதிகம், திருமகளந்தாதி.

தமிழ் நாட்டிலுள்ள பல தலங்களையும் இலங்கையிலுள்ள தலங்களையும் இவர் தரிசித்தார். இவர் பல பெரியோர்களைச் சந்தித்து சைவ மடங்களுடன் தொடர்பு கொண்டார். ஆயினும் சைவ வைணவ வேற்றுமை இவருக்கில்லை என்பது சிதம்பரம், திருவரங்கம் ஆகிய இரு கோவில்கள் மீதும் பாடியிருப்பதிலிருந்து புலப்படும். இவர் இருபது வயதாகும் முன்னர் சென்னைக்கும் வந்து அங்குள்ள கந்தசாமிக் கோவிலில் தனது சொற்பொழிவாலும் கவி புனையும் திறத்தாலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை புரிந்தாலும் வேறு எவரும் செய்யாத ‘புலவர் புராணம்’ என்ற புதுமைப் படைப்பே இவருக்குப் புகழ் ஈட்டித் தந்தது. அறுபது வயது வரை தென் ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் ஒரு குடிசையில் இவர் வாழ்ந்தார் என்றும் தெரிகிறது.

சென்னைத் தமிழ்ப் பண்டிதர் வி. கிருஷ்ணமாச்சாரி கையில் அவரது படைப்புகளை அவரது குடும்பத்தினர் தந்ததால் அவர் மூன்று பகுதிகளாக 72  புலவர் வரலாற்றையும் வெளியிட்டார்.

 

இதோ 72 புலவர்க்ளின் பெயர்கள்:

 

 

 

 

(ஒவ்வொரு புலவர் பற்றியும் முருகதாசர் பாடியதைத் தனியே இன்னொரு கட்டுரையில் தருகிறேன்)

 

-சுபம்-

 

‘கொழ கொழ கண்ணே’ – எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

Compiled by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 10 September 2018

 

Time uploaded in London – 19-34 (British Summer Time)

 

Post No. 5415

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கொழ கொழ  கண்ணே எங்க அம்மா சொன்ன தமிழ் நர்ஸரி ரைம் (Post No.5415)

 

இப்பொழுது ‘ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்’ (Twinkle twinkle Little Star) தெரியாத தமிழ்க் குழந்தைகள் கிடையாது. ஆனால் ‘நிலா நிலா ஓடிவா’ பாட்டோ, ‘கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு’ நர்ஸரி ரைமோ (Nursery Rhyme) தெரிந்த தமிழ்க் குழந்தை இருக்கிறார்களா என்பது ஐயப்பாடே.

 

நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது (65 ஆண்டுக்கு முன்னால்) என்னுடைய தாயார் எங்களுக்கு ‘கொழ கொழ கண்ணே’ கதையைச் சொல்லுவார்கள். அதை ஒவ்வொரு நாள் இரவிலும் சொல்லச் சொல்லிக் கேட்போம். இது தஞ்சைப் பகுதியில் மட்டும் வழங்கியதா அல்லது மற்ற பகுதிகளிலும் வழங்கியதா என்று தெரியவில்லை. ஆனால் மாவட்டம் தோறும் பல குழந்தைகள் பாடல்கள் வழங்கியதை அறிகிறோம். 1899ம் ஆண்டு வெளியான விவேக சிந்தாமணி என்ற சென்னை மாத இதழைப்  பார்த்தவுடன் மஹா சந்தோஷம்.அதில் இன்று படித்த, முன்னொரு காலத்திலென் தாயார் சொன்ன குழந்தைப் பாட்டு இதோ.

 

‘கொழ கொழ  கண்ணே’ என்று துவங்கி

 

‘என் பெயர் ஈ, இது தெரியாதா’? என்று முடிவடையும் தமிழ் நர்ஸரி ரைம்.

 

 

 

 

 

 

FULL  RHYME

தமிழ் வாழ்க

 

–சுபம்–

ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்! (Post No.5392)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 4 September 2018

 

Time uploaded in London – 6-34 am (British Summer Time)

 

Post No. 5392

 

TAMIL WORDS IN THE RIG VEDA

உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். கி.மு 1700 முதல் கி.மு.6000 வரை பலராலும் தேதி குறிப்பிடப்பட்ட நூல். இந்துக்களைப் பொறுத்தமட்டில் இதன் பழமைக்காக மதிக்கவில்லை. வேதம் இன்றி இந்து மதம் இல்லை. இந்தப் பெருமைமிக்க நூலில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன. மொழியியல் விதிகளைப் பயன்படுத்திப் பார்த்தால் மறைந்திருக்கும் மேலும் பல தமிழ்ச் சொற்கள் மேலுக்கு வரும்.

 

எதற்காக இந்த ஆராய்ச்சி?

 

நிறைய பேர் ரிக் வேத ஸம்ஸ்க்ருதம் பழமையானது என்றும் அதற்குப் பின்னர் வந்த பாணினி-காளிதாசன் கால ஸம்ஸ்க்ருதம் வேறு என்றும் சொல்லுவர். ஓரளவுக்கு அது உண்மைதான். இது எல்லாப் பழைய மொழிகளுக்கும் பொருந்தும். பழங்கால தமிழ், ஆங்கிலம் ஆகிய எந்த மொழியின் பழைய இலக்கணமும் வேறு; சொற்களின் பொருளும் வேறு.

இவ்வளவு பழமை வாந்த நூலில் உள்ள சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துவது வியப்புக்குரிய விஷயம்!

 

இதோ சில தமிழ்ச் சொற்கள்:-

எண்கள் பற்றி:-

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண்களில்முதலில் மண்டலம், பின்னர் மந்திரத் துதியின் எண், அதிலுள்ள மந்திர வரியின் எண் என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இந்த எண்களை எடுக்க உதவிய நூல் பகவான் சிங்கின் ‘வேதிக் ஹரப்பன்ஸ்’ Vedic Harappans என்ற நூலாகும்.

 

உஷ் ட் ர – ஒட்டகம் (ரிக். 1-138-2; 8-5-37;8-6-48)

கர்தப- கழுத (ர=ல)/ கழுதை (1-29-5; 3-53-23)

காகம்பிர- காகம் (6-48-17)

மயூர- மயில் (1-191-4; 3-45-1; 8-1-25)

சிம்ஹ- சிங்கம் (5-44-1)

உட்ச- ஊற்று (2-16-7)

கூப – கூவம்/ கிணறு 1-105-17

குல்யா – குளம் , கால்வாய்

நீர் – நீர்

பூமி-புவி 2-14-7

யூப – 5-2-7 சங்கத் தமிழ்

புஷ்ப/ பூ – அதர்வ 8-712

பலி- 1-70-9

மது- தேன் 1-90-6

மத்ஸ்ய/ மச்ச – 10-68-8

ரத்ன- 1-20-7

ரஜ்ஜுப் பொருத்தம் – ரஜ்ஜு 1-162-8

ராஜசூயம்- அதர்வ – 4-8-1

புறநானூற்றின் அடிக்குறிப்பில் ராஜசூயன் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் உள்ளது

சங்கு- அதர்வ 4-10-1

களம்- நெல் அடிக்கும் களம் (10-48-7)

XXXX

 

சில சொற்களை அப்படியே தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளனர். அது ரிக்வேத காலம் முதல் இன்று வரை புழக்கத்தில் இருப்பதும் வியப்புக்குரிய செய்தி. இதோ சில சொற்கள்:

 

ரிஷபம் (6-16-47) (இடபம்/விடை – தேவாரத்தில்

வாரணம் (யானை) – ஆண்டாள் வாரணம் ஆயிரம்

கபி/கவி – குற்றாலக் குறவஞ்சி (10-86-5)

கோ (3-1-23)- கோவலன்/ கோபாலன் சிலப்பதிகாரம்

xxx

இன்னும் சில சொற்கள் சர்வ சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பத்திரிக்கைகளிலும் புழக்கத்தில் இருக்கின்றன.

ஸர்ப- சர்ப்பம்/பாம்பு (10-16-6),serpent

ம்ருக (மான்) – மிருகம்

மேஷ- மேட ராசி/ மேஷராசி

வராக – வராஹ அவதாரம்

ஹம்ச- அன்னம் (2-34-5)

ஆரண்யப் பசு – காட்டு மிருகம்/ எருமை (10-90-8) ;ஆரண்யம் (காடு) என்ற சொல் வேதாரண்யம் முதலிய ஊர்ப்பெயர்களில் காணப்படும்

பாச (கயிறு)- 2-27-16)

பஹு அன்ன – நிறைய உணவு

 

(பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ)

அன்னம் – உணவு இப்பொழுதும் புழக்கத்தில் உள்ள சொல் – அன்ன தானம்

அங்குச- அங்குசம் (8-17-10)

 

கச (கசையடி)- (5-83-3)

தண்ட – தடி (8-33-6)

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – தமிழ்ப் பழம்ழொழி

 

பந்தன – கட்டுதல் (5-12-4); ரக்ஷா பந்தன்

தான்ய – தானியம் (5-53-13)

பீஜ – விதை (ப=வ) (5-53-13)

சகன் – சாணம் (அதர்வண வேதம் 3-14-4)

வது/ பெண்5-37-3

ஸ்வப்ன – சொப்பனம் – 2-28-10

வசனம், வாக்கியம், வார்த்தை

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?

ரிக் வேதம் என்பது உலகிலேயே பழைய நூலாக இருந்தாலும் அவற்றிலுள்ள சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் தவிர நூற்றுக் கணக்கான சொற்கள் உள்ளன. இன்னும் ஆங்கிலத்தில் நமக்குத் தெரிந்த சாதாரன சொற்களையும் ஒப்பிட்டால் அடுத்த நிமீடமே நமக்கு ஏறத்தாழ ஆயிரம் ரிக்வேதச் சொற்கள் தெரிந்து விடும். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு அறிஞர்கள் வேதங்களைப் பற்றி எழுதியுள்ளனர். இப்படி வெளிநாட்டுக்காரர்களே வேதத்தைப் படிக்க இயலுமானால் நம்மால் முடியாதா? இதை உணர்ந்து அனைவரும் முறையாக வேதத்தைப் பயிலல் வேண்டும்.

நிற்க

 

நான் ஒரு புதிய கருத்தை வெளியிட்டு வருகிறேன். பரஞ்சோதி முனிவர்கள் முதலானோர் மறைமுகமாக வெளியிட்ட கருத்து அது. அதாவது தமிழும் ஸம்ஸ்ருதமும் சிவ பெருமானின் உடுக்கையின் இரண்டு பக்கங்களில் இருந்து பிறந்தன. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகள்.

வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியைஉலகமெலாம் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்

கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்

 

–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

கடவுள் தந்த தமிழ்

வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி

நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்

தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)

 

 

அவ்வாறில்லாவிடில் சிவ பெருமான், அகத்தியனை வடக்கிலிருந்து அனுப்பித் தமிழுக்கு இலக்கணம் செய்யக் கேட்டிருக்க மாட்டார். இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் முதலிய பல அம்சங்களில் இரண்டும் ஒன்றே!

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்க்ருதம்!!

 

–subham–

 

 

 

கம்போடியாவில் கந்தன், காமராஜ்! (Post No.5383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 September 2018

 

Time uploaded in London – 9-09 am (British Summer Time)

 

Post No. 5383

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கந்தன், காமராஜ் பொன்ற பெயர்கள்  தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும்  பெயர்கள்;  இந்தப் பெயர்கள்  ஸம்ஸ்ருதச் சொற்கள் என்றாலும் தமிழ்நாட்டில் நிறைய புழக்கத்தில் உள்ளது. இந்தப் பெயர்களும்  ஏனைய சில பெயர்களும் கம்போடியா நாட்டிலும் உள்ளன.  இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு நிலவிய தமிழர்களின்  செல்வாக்கைக் காட்டும்.

 

லண்டன் (SOAS) பல்கலைக்கழகத்தில் சீனியர் விரிவுரையாளராக வேலை செய்த ஜூடித் ஜாகப் (CAMBODIAN LINGUISTICS, LITERATURE AND HISTORY BY JUDITH JACOB AND EDITED BY DAVID A SMYTH) எழுதிய புஸ்தகத்தை நான் ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் இதோ:

 

ஒரு கல்வெட்டில் ‘மே கந்தன், தா கந்தன், கு கந்தன்’ என்று வருகிறது – இதன் பொருள் கந்தனின் தாய், கந்தனின் தந்தை, அவர்களுடைய மகன் கந்தன் என்பதாகும்.

 

(வா என்பது திரு, கு என்பது குமாரி அல்லது திருமதி)

 

கம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் நாட்டுப்புற கதைகளில் தனஞ்ஜயன் (அர்ஜுனனின் பெயர்) மிகவும் அடிபடும். கிட்டத்தட்ட தெனாலிராமன் கதைகள் போல பல நிகழ்ச்சிகள் இருக்கும்.

 

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ‘தாக்கு அணங்கு’ கம்போடிய கதைகளிலும் உண்டு . காடு, மலை, மரம், ஏரி, குளம் ஆகியவற்றை ஆக்ரமிக்கும் பிரம்ம ராக்சஸ் போன்றவை அணங்கு என்னும் தேவதைகள்

 

ஒரு நாட்டுப்புற கதையிலும் கந்தன் வருகிறான்.

 

இதோ அந்தக் கதை:-

பிரம்ம தத்தன் என்ற அரசனின் மனைவி பெயர் காக்கி. (கார்கி என்பவள் உபநிஷத்தில் வரும் புகழ்பெற்ற பெண்மணி). கருடர்களின் அரசனுடன் ராஜா, சதுரங்கம் விளையாடுவான். அவன் காகியைக் காதலிக்கத் துவங்கினான். அரசனுக்குத் தெரியாமல் காதல் சமிக்ஞைகளைச் செய்வான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். ஒருநாள் கருட அரசன் ஒரு புயலை உருவாக்கி, எல்லோரும் பயந்துகொண்டு இருந்த சம்யத்தில் ராணியை அணுகி தன்னுடைய நாட்டுக்கு வரும்படி வலியுறுத்தினான். அரசனுக்கு நடந்தது தெரியாது. புயல் ஓய்ந்த பின்னர் கருட அரசன் வழக்கம்போல சதுரங்கமாட வந்தான். அரசனுக்கு அவன் மீது சந்தேகம் ஏற்படவே தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி கந்தனை அழைத்து ஒரு பூச்சி ரூபத்தில் கருடனுன் போய், ரஹஸியத்தை அறிந்து வா என்று அனுப்பினான்

அங்கே கந்தனும் காக்கியைக் காதலித்தான்; பின்னர் திரும்பி வந்தான்; மறு நாளன்று வழக்கம்போல கருட ராஜா ‘செஸ்’ விளையாட வந்தபோது யாழ் வாத்தியத்தையும் வாசித்தனர். அப்போது காக்கியின் வேசித்தனத்தையும் ஏசினர் (கந்தனும் அவனுடைய ராஜா பிரம்மத்ததனும்).

 

கருட ராஜாவுக்குக் கோபம் வரவே அவளைத் திருப்பிக் கொண்டுவந்து விட்டான். பிரம்மதத்தனும் அவள் மீது கோபம் கொண்டு ஒரு படகில் வைத்து நதியில் அனுப்பிவிட்டான்.

 

இந்தக் கதையிலும் கந்தன் என்ற பெயர் தமிழ் வழக்குப்படி ‘கந்தன்’ என்றே வருகிறது; ‘ஸ்கந்த’ என்பது ஸம்ஸ்க்ருத மூலம்.

காமராஜ், அருண்ராஜ்

 

மற்றொரு கதையில் காமராஜ், அருண்ராஜ் என்ற பெயர்கள் வருகின்றன. இன்னொரு கதையில் கிருஷ்ணகுமார், சுவண்ண (ஸ்வர்ண) குமார் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்றபோதிலும் அவை தமிழர் பயன்படுத்தும் வடிவத்தில் இருப்பது தமிழ் மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

 

 

 

 

அடிமைகளின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

 

அங்கோர் ஆட்சிக்கு முந்தைய கம்போடியாவில் (Pre-Angkhor) படித்த மக்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையே பயன்படுத்தினர். அப்படிப்பட்ட பெயர்கள் அடிமைகளாக இருந்தவர்களிடமும் காணப்படுகின்றன. ‘வசந்த மல்லிகா’ என்பது ஒரு அடிமைப் பெண்ணின் பெயர்.

 

அடிமைகள், நாம் பயன்படுத்தும் பலசரக்கு சாமான்களைப் போல,

நடத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் எப்படி அடிமை ஆயினர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

 

கோவிலுக்கு தானம் செய்யும் போது இத்தனை அரிசி மூட்டை அல்லது நிலம், இத்தனை அடிமை என்று எழுதப்பட்டது.

 

 

இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளைப் போலவே, கம்போடியக் கல்வெட்டுகளில் பின்வரும் தகவல்கள் இருக்கின்றன:

 

1.ஆளும் அரசனின் பெயர் அல்லது ஆண்டு;

2.தானம் செய்வோரின் பெயர்கள், பதவி;

3.எந்தக் கடவுளுக்கு தான்ம்

4.யார் யார் கொடுத்ததை அறக்கொடைக்கு எழுதுகின்றனர்.

5.அறக்கொடைக்காக அப்படி நிலத்தை விட்டுக் கொடுத்தோருக்கு என்ன நஷ்ட ஈடு அளிக்கப்பட்டது;

6.தானம் செய்யப்பட்ட நிலங்களின் பரப்பு

7.நிலத்துடன் தானம் செய்யப்பட அடிமைகளின் பெயர், அவர்கள்

செய்யப் போகும் வேலை;

8.குருமார்களுக்கான ஊதியம்

9.அறக்கொடை நிறுவனங்களுக்கு இத்தோடு கூடுதலாகத் தரப்படும் நந்தவனம், கடை முதலியன.

10.கொடுக்கப்படும் வேறு விலையுயர்ந்த பொருட்கள்

11.வருவாயை என்ன செய்வது, எப்படிச் செலவிடுவது;

12.எவரேனும் இந்த தானத்துக்குப் பாதகம் செய்தால் அவருக்குக் கிடைக்கும் தண்டனை.

இந்தக் கல்வெட்டு அமைப்பும் இந்தியாவின் செல்வாக்கைக் காட்டுகிறது. தமிழ்க் கல்வெட்டுகளும் இதே வரிசையில் விஷயங்களைத் தருகின்றன.

 

–சுபம்–