பழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில விநோதச் செய்திகள்!- பகுதி 2

Research Article No. 2084

Written by London swaminathan
Date : 19 August  2015
Time uploaded in London :–  14.24

Please read the first part and then read this second part.

I have given the following matter in Tamil in the first part:–

ORIGIN AND DEVELOPMENT OF TAMIL NOVELS

Since the days of Vedanayakam Pillay’s PRATAPA MUDALIYAR CHARITAM

Tamil novels have developed much. There are lot of interesting differences between now and then.  Following differences are found in the pages posted below:

1.In those days, Tamil novels had wrapper printed in English. Only the inside page contained the Tamil title, author’s name in Tamil etc.. This was done probably to convince the ruling British Government that it was just fiction and no anti-government matter was included. But yet one must remember Bengali novels such as Ananda Math by Bankim Chandra Chattopadhyay which kindled patriotic feelings. The British government banned such novels. Patriotic poets like Bharatiyar published National Songs in those days. Bharati published his patriotic songs first in 1908.

2.No pictures were found inside the Tamil novels

3.The back wrapper had advertisement about the books written by the same author or different authors

4.People belonging to different castes wrote novels.

5.Women also wrote many novels in Tamil ( I will give the list separatey)

6.Novels began with prayer to Hindu Gods and finished with auspicious words such as Subham, Mangalam or Om Tat sat.

7.Vedanayakam Pillays novel even had wished the readers a Healthy life like the Hindu Hymns

8.Novels had prefaces where in the author explained why he wrote it.

9.At the end they added all the press reviews or reader’s views, letters etc. (in later editions)

10.Novels were priced between 3 Annas and One Rupee and Four Annas which was exorbitant considering the monthly salary of 8 to 10 rupees in 1900s.

11.Novels were printed 1000 copies at a time and the pages went up to 400 pages.

12.They were about families and social problems, mainly of the Hindus.

13.Novels contained lot of Sanskrit words and philosophical discussions.

14.Tamil Novels published 100 years ago had ‘Contents’!

15.Some translations of Bengali Novels were also published at the early stage.

I have borrowed some old Tamil Novels from the British Library, London and the following pages are used as examples to illustrate the above points:–

IMG_3668 (2)

IMG_3669 (2)

IMG_3671 (2)

IMG_3673 (2)

IMG_3675 (2)

IMG_3676 (2)

IMG_3677 (2)

IMG_3680 (2)

IMG_3681 (2)

IMG_3682 (2)

IMG_3684 (2)

IMG_3698 (2)

IMG_3699 (2)

IMG_3700 (2)

only sample pages are given (not full)

IMG_3704

In the final part (Part 3) we will look at Vedanayakam Pillays Pratapa Mudaliyar Charitam.

to be continued………………………………

பழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில விநோதச் செய்திகள்!- பகுதி 1

IMG_3645 (2)

Research Article No. 2083

Written by London swaminathan

Date : 19 August  2015

Time uploaded in London :–  9-18 am

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தமிழ் புதினங்களை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் வாங்கிப் பார்த்தபோது சில விநோதமான வேறுபாடுகள் புலப்பட்டன.

இன்று நாவல்களுக்கு முன்னுரை எழுதுவதில்லை; அன்றைய நாவலகளில் முன்னுரை இருக்கிறது. இதில், நாவலாசிரியர்களே அதை எழுதியதற்காக காரணங்கள் சூழ்நிலையை விளக்குகின்றனர்.

இப்போது நாவல்களுக்குப் பொருளடக்கம் இருப்பதில்லை. அன்றைய நாட்களில் நாவல்களுக்குப் பொருளடக்கம் எழுதினர். வேதநாயகம் பிள்ளை எழுதிய தமிழின் பழைய நாவலான “பிரதாப முதலியார் சரித்திரம்” முதல் பல நாவல்களில் இதைக் காணலாம்.

எல்லா நாவல்களிலும் அட்டையில் படம் இருக்காது. அட்டையில், ஆங்கிலத்தில் நாவல் பற்றிய விவரங்கள், தலைப்பு எல்லாம் இருக்கும். இதற்கு அடுத்த பக்கத்தில்தான் தமிழில் கதைத் தலைப்பு, எழுதிய ஆசிரியர் பெயர்கள் இருக்கும். பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் பாரதியார் போன்றோர் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ப் போர்க்கொடி உயர்த்தி பல பத்திரிக்கைகளை நடத்தியதாலும், ஸ்வதேச கீதங்கள் என்ற பெயரில் பாரதியார் (1908ல்) பாடல் புத்தகம் மூலம் தேசபக்தத் தீக்கனலை எரியவிட்டதாலும் இந்தத் தேவை ஏற்பட்டது. தங்களுக்கும் அந்த தேசபக்தர்களுக்கும் அல்லது அவரது புத்தகங்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை அறிவிக்கும் முகத்தான் இப்படி ஆங்கிலத்தில் விவரங்களை வெளியிடும் அவசியம் ஏற்பட்டது போலும்.

நாவல்கள் அனைத்தும் இறை வணக்கப் பாடல் அல்லது ஸ்தோத்திரங்களுடன் துவங்குகின்றன. இன்றைய நாவல்களில் இப்படி இறைவனைப் பற்றிய பிரஸ்தாபங்கள் இல்லை.

நாவல்கள் எல்லாம் சுபமாகவே முடியும் (தமிழ் திரைப் படங்கள் போல)! சுபம் என்ற சொல்லும் இறுதியில் இருக்கும்.

நாவல்களை எழுதுவோர் புனைப் பெயர்களைப் பயன்படுத்தாமல் தன் சொந்தப் பெயர்களை, சகல விருதுகளுடன் பயன்படுத்தினர்!

ஆண்களோடு போட்டி போட்டுக் கொண்டு பெண்களும் தமிழ் நாவல்களை எழுதினர் (இதன் பட்டியலைத் தனியாகத் தருகிறேன்)

கடைசி பக்கத்திலும் பின் அட்டையிலும் அதே ஆசிரியர் எழுதிய பிற நூல்கள் பற்றியோ அல்லது வேறு ஆசிரியரின் நூல்கள் பற்றியோ விளம்பரம் இருக்கும்.

பிரதாப முதலியார் சரித்திரம் – என்னும் முதல் தமிழ் நாவலில் கடைசியில் அதுபற்றி வந்த ஆங்கில விமர்சனங்கள், கடிதங்கள் ஆகியனவும் சேர்க்கப் பட்டுள்ளன. அத்தனையும் புகழுரைகள்!

பெரும்பாலும் குடும்பக் கதைகளாகவும், இந்துமதப் பின்னணிக் கதைகளாகவும் இருக்கின்றன.

எல்லா ஜாதி எழுத்தாளர்களும் கதைகள் எழுதினர். பிள்ளையார் சுழி போட்டு தெய்வ பக்தியுடன் நாவலைத் துவக்குகின்றனர். உள்ளே படங்கள் என்பதே இராது. நிறைய சம்ஸ்கிருதச் சொற்களையும் நாவலில் பயன்படுத்துகின்றனர். நாவல்களின் விலை 3 அணா முதல் ஒரு ரூபாய் 4 அணா வரை விலையிட்டனர்! ((ஒரு ரூபாயில் 16 அணாக்கள்)). அக்காலத்தில் மாத சம்பளமே எட்டு ரூபாய், பத்து ரூபய் இருந்தபோது இவ்வளவு விலை உயர்ந்த நாவல்களைப் பணக்காரர்களும், நூல்நிலையங்களும் மட்டுமே வாங்கியிருக்க முடியும். ஆனால் 1000 காப்பிகள் வரை அச்சிட்டிருக்கின்றனர்.நீண்ட நாவல் 400 பக்கம் வரை சென்றுள்ளது.

சில வங்காள நாவல்களின் மொழி பெயர்ப்புகளும் வந்துள்ளன.

இத்துடன் கீழே இணைத்துள்ள பக்கங்களைக் காணவும்:–

IMG_3646 (2)

IMG_3647 (2)

IMG_3648 (2)

IMG_3649 (2)

IMG_3652 (2)

IMG_3653 (2)

IMG_3654 (2)

IMG_3656 (2)

IMG_3658 (2)

IMG_3663 (2)

IMG_3667 (2)

to be continued……………..

பாரதியார் போற்றும் ஒரு மகமதிய ஸாது: கம்பளி ஸ்வாமி!

bharati

தேசீய கவி சுப்ரமண்ய பாரதி

Article No. 2067

Written by S NAGARAJAN

Date : 13 August  2015

Time uploaded in London :–  9-05

By ச.நாகராஜன்

கம்பளி ஸ்வாமி காட்டும் ஹிந்துமுஸ்லீம் ஒற்றுமை

ஸ்வாமி விவேகானந்தர் போற்றிய மகான். இமயமலையின் ஒரு சிகரத்திலிருந்து இன்னொரு சிகரத்திற்குப் போக ஒரு இரும்புப் பாலம் கட்டியவர். அதற்கென தான் பிரயாசைப்பட்டுச் சேர்த்த கொஞ்சம் பணத்தையும் செலவழித்தவர். பெயர் – கம்பளி ஸ்வாமி!

இவரைப் பற்றி மஹாகவி பாரதியார் போற்றக் காரணம் இவர் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் ஒரு ஸாது என்பதால் தான்.

‘ஒரு மகமதிய ஸாது’ என்ற தலைப்பில் மஹாகவியின் கட்டுரை விஜயா இதழில் 1910ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கம்பளி ஸ்வாமியைப் பற்றிய பாதியாரின் வார்த்தைகள் இதோ:-

“கம்பளி ஸ்வாமி என்று இமயமலைப் பக்கங்களில் ஒரு ஸ்வாமி இருப்பதை நம் நேயர்கள் அநேகர் கேட்டிருக்கலாம். அவர் சில காலமாகத் தென் இந்தியாவிற்கு வந்து அநேக இடங்களில் உபன்னியாசம் செய்து கொண்டிருக்கிறார்.

இப்போது பெங்களூரில் உபன்னியாசம் செய்தார்.அதில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் ஒற்றுமை இருக்கவேண்டுமென்றும், இருவர்களின் மதமும் ஒன்றையே குறிக்கிறதென்றும், நம் மதக் கொள்கையைச் சரியாக அனுசரிக்க வேண்டுமானால் எல்லோரையும் சகோதரர்களாகக் கொண்டாலொழிய முடியாதென்றும் பேசினார். இவருடைய உபன்னியாசத்தைக் கேழ்க்க அநேக ஹிந்துக்களும் மகமதியர்களும் கணக்கில்லாமல் வந்திருந்தார்கள். இவர் பேசிய ஒவ்வொரு பேச்சும் கேட்பவர்களுக்கு வெகு ஆனந்தத்தையும் ஊக்கத்தையும் கொடுத்தது.”

kabir_stamp

இந்தப் பாராவைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் குடுகொண்ட என்ற இடத்தில் பிறந்த இவர் அமரகோசம்,கீதை ஆகியவற்றை மனப்பாடமாகக் கற்றதையும் கபீர், நானக், கனகா முதலானோரின் கீதங்களைக் கற்றதையும் மஹாகவி குறிப்பிடுகிறார்.

கம்பளி ஒன்றைப் போர்த்திக் கொண்டு மலைச் சிகரங்களில் எல்லாம் சுற்றித் திரிவதால் இவர் பெயர் கம்பளி ஸ்வாமி ஆயிற்று.

இப்படிப்பட்ட மகானை நன்கு விவரித்துப் புகழும் பாரதியார் தன் ஆழ்ந்த கருத்து ஒன்றை இப்படிக் கூறுகிறார்:-

இப்படிப்பட்ட மகான்கள் ஹிந்து முஸ்லீம்களுக்குள் ஐக்கியத்தை உண்டாக்கக் கருதினால் அது அதி சீக்கிரத்தில் நடைபெறும்.”

 

இதற்கான காரணத்தையும் அவரே கூறி விடுகிறார்:;” இந்தியாவில் மதக் கோட்பாடுகளை நன்றாயறிந்த ஸாதுக்கள் வந்து ஒரு சீர்திருத்தம் செய்ய வேண்டுமானால் அதைத்தான் ஹிந்துக்களும் மகமதியர்களும் அக்கரையோடு கேட்டு அனுசரிக்க எத்தனிப்பார்கள்.”

இப்படிக் கூறிய மஹாகவி தனக்கே உரித்தான நையாண்டி நடையில் இதை விட்டு விட்டு ஆங்கிலேயர்களின் நடவடிக்கையைப் புத்தகத்தில் படித்து விட்டு அதை இங்கு கொண்டு வர நினைக்கும் போலிச் சீர்திருத்தக்காரர்கள் என்ன தான் கூட்டம் கூட்டினாலும் ஒன்றும் நடக்காது என்று தெளிவுபடக் கூறுகிறார்.

தேசம் ஒன்றே சிந்தனையில்

பாரதியாரின் சொல் செயல் சிந்தனை அனைத்தும் தேச விடுதலை தேச ஒற்றுமை தேச முன்னேற்றம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததையும் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவரது பல கட்டுரைகள் நன்கு விளக்குகின்றன.

அவற்றில் ஒன்று இது! முழுக் கட்டுரையும் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கும்.

*************

கல்விக்கு அழகு கசடற மொழிதல்

narendra-modi-speech

பிரதமர் நரேந்திர மோடி, டில்லி செங்கோட்டை

Article No. 2065

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 12  August  2015

Time uploaded in London :–  9-22 am

 

வாணீ = சொல்வன்மை = நன்மொழி தொடர்பான 30 பொன்மொழிகள்

 

1.அக்னிதா: அபி விசிஷ்டம் வாக் பாருஷ்யம் – சாணக்ய நீதி

சூட்டை விட சுடு சொல்லின் வெப்பம் அதிகம்.

((தீயினாற் சுட்ட புண் ஆறும், நாவினாற் சுட்ட புண் ஆறாது))

 

2.அனவசரே யதுக்தம் சுபாஷிதம் தச்ச பவதி ஹாஸ்யாய

நல்ல விஷயங்களைச் சொல்ல்பவரும் கேட்பவரும் அரிது.

 

3.கர்தவ்யம் ஹி சதாம் வச: — கதாசரித் சாகரம்

நல்லோற் சொற்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

4.கிம் கரிஷ்யந்தி வக்தார: ஸ்ரோதா யத்ர ந வித்யதே – சாணக்ய நீதி

கேட்பாரில்லாவிடில் பேசுபவர் என்ன செய்வார்?

((கடை விரித்தேன், கொள்வாரில்லை (ராமலிங்க சுவாமிகள்))

 netaji

நேதாஜி வங்காளி மொழிப் பிரசங்கம்

5.கோ வா துர்ஜனவாகுராசு பதித: க்ஷேமேண யாத: புமான் – பஞ்ச தந்திரம், பர்த்ருஹரி

கெட்டவர்களின் வலையில் விழுந்தவர்கள், யார் நல்ல நிலையில் மீண்டு வந்தனர்?

((நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும் – பாஞ்சாலி சபதம், பாரதியார்))

 

6.க்ஷீயந்தே கலுபூஷணானி சததம் வாக்பூஷணம் பூஷணம் – பர்த்ருஹரி

உடம்பில் அணியும் அணிகலன்களுக்கு அழிவு உண்டு. சொல் எனும் அணிக்கு அழிவே இல்லை

 

7.ந ஹி ப்ரியம்  ப்ரவக்தும்  இச்சந்தி ம்ருஷா ஹிதைக்ஷிண:  — கிராதார்ஜுனீயம்

உண்மையான நலனை விரும்புவோர், இனிமையாக இருக்கும் என்பதற்காகப் பொய்யைச் சொல்லுவதில்லை.

 

8.நாப்ருஷ்ட: கஸ்யசித் ப்ரூயாத் – மனு

கேட்காததைச் சொல்லாதே

((பாத்திரம் அறிந்து தானம் செய்))

 

9.பரோபகரணார்த்தாய வசனே கா தரித்ரதா

பயனுள்ள சொற்களைச் சொல்வதில் கூடவா தரித்திரம்?

 

10.மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண: –  சிசுபாலவதம்

பெரியோர்கள் இயற்கையிலேயே குறைவாகப் பேசுவர்

(ராமபிரான் மித பாஷி, ஹித பாஷி, ஸ்ரீஉத பாஷி, பூர்வ பாஷி—வால்மீகி ராமாயணம்)

 nehru

பாரதத்தின் முதல் பிரதமர் நேருஜி சொற்பொழிவு

11.மிதம் ச சாரம் சவசோ ஹி வாக்மிதா — நைஷத சரிதம்

குறைவாக – பொருளுள்ள — விஷயங்களைப் பேசுவதே பேச்சுக் கலை

 

12.லௌகிகானாம் ஹி சாதூனாமர்தம் வாகனுதாவதி

ருஷீணாம் புனராத்யானாம் வாசமர்த்தோ அனுதாவதி – உத்தர ராம சரிதம்

 

நாம் காணும் பெரியோர்களின் சொற்கள், பொருளை அடிப்படையாக வைத்துச் சொல்லப்படுபவை. ஆனால் ரிஷிகளின் சொற்களே பொருளாகி விடுகின்றன. (அதாவது ரிஷிகளின் சொற்களே அஸ்திவாரம்)

 

13.ஸ்ருதேன யத்னேன ச வாகுபாஸிதா த்ருவம் கரோத்யேவ கமப்யனுக்ரஹம்  — காவ்யதர்ச:

 

கேள்வி ஞானம் மூலம் அல்லது முயற்சியின் மூலம் கற்றோருக்கு, சரஸ்வதி தேவி, எப்படியாவது நற்பயனைத் தருவாள்.

((கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு))

14.பல சொல்லக் காமுறுவர் மன்றமாசற்ற

சில சொல்லல் தேற்றாதவர் (குறள்  649)

சில சொற்களால் சொல்ல முடியாதோர், பல சொற்களைச் சொல்வர் (நேரத்தை வீணடிப்பர்)

 

15.சுமங்களோ பத்ரவாதி வதேஹ  — ரிக் வேதம்

மங்களகரமான, நன்மை பயக்கும் சொற்களைச் சொல்

 

indira UN Conference

ஐ.நா. சபையில் முன்னாள் பிரதமர் – இந்திராகாந்தி பேருரை

16.சதாம் ஹி வாணீ குணமேவ பாஷதே – கிராதார்ஜுனீயம்

நல்லோர்கள் எப்போதும் நற்குணங்களை மட்டுமே உரைப்பர்

 

17.சுதுர்லபா: சர்வமனோரமா கிர: – கிராதார்ஜுனீயம்

எல்லோரும் ஏற்கக் கூடிய இனிய சொற்களைப் பேசுவது கடினம்

 

18.ஹிதம் மனோஹாரி ச துர்லபம் வச: – – – கிராதார்ஜுனீயம்

நலம்பயக்கும், பிரியமான சொற்கள் கிடைப்பது அரிது.

 

19.ஆ நோ பத்ரா: ருதவோ யந்து விஸ்வத: – ரிக்வேதம் 1-89-1

எல்லா திசைகளிலிருந்தும் எங்களுக்கு உயர்ந்த கருத்துகள் வரட்டும்

 

20.சில்லெழுத்தினாலே பொருளடங்கக்

காலத்தால் சொல்லுக செவ்வி அறிந்து (ஆசாரக்கோவை)

கொஞ்சமாகப் பேசு, பொருளோடு பேசு, காலம் அறிந்து பேசு, கேட்பவர் விருப்பம் அறிந்து பேசு

 

21.சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்

செவ்வனாடியிற் செறித்தினிது விளக்கும் – நன்னூல்

 martinluther

மார்ட்டின் லூத கிங்

  1. கல்விக்கு அழகு கசடற மொழிதல் — வெற்றி வேர்க்கை

 

23.சொற்சோர்வுபடேல் – ஆத்திச் சூடி

சொல்ல வேண்டியதை மறக்காமல் சுவைபடச் சொல்லுக

 

24.மிகைபடச் சொல்லேல் — ஆத்திச் சூடி

அதிகமாகப் பேசாதே

 

25.பிழைபடச் சொல்லேல் – ஆத்திச் சூடி

 

26.மொழிவதறமொழி — ஆத்திச் சூடி

பேசும் பொருளை சந்தேகம் வராதபடி விளக்குக

 

27.சொல்லுங்கால் சோர்வின்றிச் சொல்லுதல் மான்பினிது – இனியவை நாற்பது

 

28.பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்

மெய் போலும்மே மெய் போலும்மே – வெற்றி வேர்க்கை

பொய் சொல்பவன் தேன் ஒழுகப் பேசுகையில் அது உண்மை போலத் தோன்றும்

  1. மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையினால்

பொய் போலும்மே பொய் போலும்மே – வெற்றி வேர்க்கை

பேசத்தெரியாதவன் உண்மை பேசினாலும் அது பொய் போலத் தோன்றிவிடும்.

vajayee

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயீ

30.சிறந்தமைந்த கேள்வியராயினும் ஆராய்ந்து

அறிந்துரைத்தல் ஆற்றல் இனிது – இனியவை நாற்பது

பல நூல்களை நன்கு படித்திருந்தாலும், ஆராய்ந்த பின்னர் ஒன்றைச் சொல்லுவதே இனியது (நல்லது)

திருவள்ளுவரின் திருக்குறளில்  சொல்வன்மை (65 ஆவது) என்னும் அதிகாரத்தை ஒப்பிட்டு மகிழ்க!

பாரதியாரின் தீர்க்கதரிசனம்

Article No. 2064

Written by S NAGARAJAN

Date : 12  August  2015

Time uploaded in London :–  6-05 am

 

மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த எதிரிகள்! – 2

By .நாகராஜன்

 1430101410-1335_india1200AD

பாரதியாரின் தீர்க்கதரிசனம்

ஆங்கிலேயர்களின் முக்கிய நோக்கம் எந்த விதத்திலெல்லாம் பிரிக்க முடியுமோ அந்த விதத்திலெல்லாம் பாரதீயர்களைப் பிரித்து இந்திய சுதந்திரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான்.

 

இது முடியாத நிலையில் ஒரு வேளை இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டால் அதை உருப்படியாகத் தக்க வைத்துக் கொள்ளாமல் ஏராளமான பிரிவினைகளுக்கு வித்திட்டு இந்தியாவை கூடிய சீக்கிரம் சிதறுண்டு சின்னாபின்னமாக்குவது தான் ஆங்கிலேயரின் நோக்கம்.

 

இந்த வெள்ளைக்கார குள்ளநரி தந்திரத்தை நன்கு தீர்க்கதரிசனத்தால் கண்ட மஹாகவி பாரதியார் முஸ்லீம்கள்ஹிந்துக்கள் பிளவுபட்டு அழியக் கூடாது, சுதந்திரம் பெறுவதை எந்தக் காரணம் கொண்டும் தள்ளிப் போட்டு விடக் கூடாது என்று ஆரம்பமுதலே குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

அதன் வெளிப்பாட்டையே முந்தைய பாராக்களில் பார்த்தோம். இனி அவரது கட்டுரையின் தொடர்ச்சியில் வரும் ஒரு முக்கிய பாராவைப் பார்ப்போம்:-  

 

 “ஆதி முதல் அந்தியம் வரையில் இந்தியா மேல் படையெடுத்து வந்த ஒவ்வொரு மிலேச்ச ஜாதியும் இந்தியர்களில் வேற்றுமைகளுண்டுபண்ணி அவர்களில் தேசத்துரோகிகளாயும், ஸகோதரத் துரோகிகளாயுமிருந்த சிலரைத் தம் வசம் சேர்த்துக் கொண்டு வஞ்சனையாலும் பலவித மோசங்களாலும் இராஜ்யங்களைக் கைவசப்படுத்திக் கொண்டார்களேயொழிய வீரத்தன்மையோடும் தரும வழியிலும் ஒருவராவது ஒரு அடி பூமி கூட ஸம்பாதிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் சென்னை இராஜதானியிலும் மற்றுமுள்ள இந்தியாவின் பிராந்தியங்களிலும் என்னென்ன மோசங்களும் மித்திர துரோகங்களும் செய்து இராஜ்யம் ஸம்பாதித்தார்களென்பது சரித்திரங்களை வாசிக்கத் தெரியும். பூர்வீக பிரதேச மஹம்மதீய எதிரிகளும் இவ்வாறேதான் ஸம்பாதித்தார்கள். இன்றைக்கும் நாளைக்கும் இது தான் ஆங்கிலேயரின் இராஜதந்திரம். ஸர்வ ஜீவதயாபரக் கொக்கைப் போல் (ஓடு மீனோட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாங் கொக்கு) இந்தியா காரியதரிசியாகிய மிஸ்டர் மார்லீ துரை இந்தியாவுக்கு நன்மை செய்வது போல் சில சீர்திருத்தங்களைக் காட்டி மஹம்மதீயர்களுக்கும் மற்ற இந்தியர்களுக்கும் புதிய வேற்றுமையையும் விரோதத்தையும் மூட்டி விட்டார்

 

எப்படி இருக்கிறது கட்டுரையின் வேகமும், வீச்சும்? துரோகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டதே ஒவ்வொரு அடியும் என்ற வார்த்தைகளில் தான் எவ்வளவு தீவிரம்!!

 

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள். சிறந்த பகுப்பாய்வு. மார்லியின் சீர்திருத்தங்களைசர்க்கரையால் மூடப்பட்ட விஷம்என்று அடுத்து வர்ணிக்கிறார் மஹாகவி.

 

 

பிளவுபடுத்தும் சக்திகளை தூர எறிவீர்!

 

ஒற்றுமை குன்றி இன்னும் நாசமாய்ப் போக வந்த மாயை என்பதையுணராது நம் மஹம்மதீய சகோதரர்களும் மற்ற இந்தியர்களும் மனஸ்தாபப்படுவது என்ன மதியீனம்!” என்று அவர் மனம் நொந்து கொள்கிறார்.

 

இன்று இந்தியாவில் வாழும் முஸ்லீம்களின் பிரச்சினைகளுக்கு அவர்களே காரணம். அதைத் தீர்க்க அவர்களால் மட்டுமே முடியும். இதை பாரதியாரின் அணுகுமுறையில் சென்றால் அவர்களால் ஒரு நொடியில் சரி செய்து விட முடியும்.

ஆங்கிலேயன் செய்து வைத்த பிரிவினைகளின் வேரை அடியோடு முஸ்லீம்கள் பிடுங்கி எறிய வேண்டும்.

இந்தோனேஷியாவில் ராமர் தேசீய வீரர். கர்ணன் வியந்து பார்க்கப்படும் கதாபாத்திரம்.

 

 

இதனால் தான் சுகர்ணோவின் தந்தை தனக்குப் பிடித்த கதா பாத்திரமான கர்ணனின் பெயரைத் தன் மகனுக்கு வைக்க விரும்பினார். ஆனால் கர்ணன் போல தீயோருக்குத் தோள் கொடுக்கக் கூடாது என்ற காரணத்தால் சுகர்ணன் என்று பெயர் வைத்தார். இந்தோனேஷியாவின் ஏர்லைன்ஸின் பெயர் கருடா ஏர்வேஸ்.

 

பெரிய முஸ்லீம் தேசமான இந்தோனேஷியாவில் இதெல்லாம் சாத்தியமெனில் இந்தியாவில் இது முடியாதா என்ன? தேசம் மதத்தினால் பிளவு படும் ஒன்று அல்ல; அது உணர்வினாலும், நடை, உடை, பாவனைகளினாலும் ஒன்று பட்டு உயிர் அமுதம் தரும் அன்னை என்பதை இந்தியர்கள் அனைவரும் உணரும் போது இந்தியா ஒளிரும்!

 

இதற்கு ஒரே வழி முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் பிரிவினைக்குத் தூபம் போடும் தங்களின் இன்றைய (2015ஆம் ஆண்டு) தலைவர்களுக்குமுழுக்குப் போட்டு விட்டுபுதிய தலைமுறைக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும்; ஒருவேளை அவர்கள் உருவாகி இருந்தால் அவர்களை ஏற்க வேண்டும்; உயரத்தில் ஏற்ற வேண்டும்.

 

இதற்கு ஒவ்வொரு ஹிந்துவும் முஸ்லீம்களுக்கு உதவ வேண்டும்.

மஹாகவிக்கு உண்மையில் நாம் செய்யும் அஞ்சலி இதுவே ஆக இருக்கும்.

***************

இலக்கியத்தில் எண் ஐந்து

kumara

Article No. 2062

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 11  August  2015

Time uploaded in London :– காலை 9-55

தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழி வல்லுநர்களும் எண் ஐந்துக்கு ஒரு சிறப்பிடம் தந்துள்ளனர். எவ்வளவோ நூல்கள் இருந்தும் பஞ்ச மஹா காவ்யங்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ் சிறு காப்பியங்கள் என்றெல்லாம் பிரித்திருக்கின்றனர். அது மட்டுமல்ல, உரை வகைகளும் ஐந்து; சொற்குற்றங்களும் ஐந்து; அத்வைத சிறப்பு நூல்களும் ஐந்து — என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இங்கே ஏழு தலைப்புகளில் நூல்களின் மற்றும் அடைமொழிகளின் பெயர்களை மட்டும் காண்போம்.

silambu-book1

1.ஐம்பெரும் காப்பியங்கள்

சிலப்பதிகாரம் (எழுதியவர் – இளங்கோ அடிகள்)

மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்

குண்டலகேசி – நாகுதத்தனார்

வளையாபதி – பெயர் கிடைக்கவில்லை

கடைசி இரண்டு நூல்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை.

2.ஐஞ்சிறு காப்பியங்கள்

சூளாமணி –

நீலகேசி – தோலாமொழித் தேவர்

உதயணகுமார காவியம்

நாககுமார காவியம்

யசோதா காவியம்

(நான்கு நூல்களை யாத்தவர்களின் பெயர்களை தமிழ்கூறு நல்லுலகம் மறந்துவிட்டது)

sisupalavatam

3.பஞ்ச மஹா காவியங்கள் (சம்ஸ்கிருதம்)

குமார சம்பவம்– காளிதாசன்

ரகுவம்சம் – காளிதாசன்

கிராதார்ஜுனீயம் – பாரவி

சிசுபாலவதம் – மாக

நைஷதசரிதம் – ஸ்ரீஹர்ச

4.கிரந்த பஞ்சகம்

அத்வைத வேதாந்தத்தின் ஆதாரமாக ஐந்து நூல்கள் கருதப்படுகின்றன. அவையாவன:-

பிரம்மசூத்திரம்

சங்கர பாஷ்யம்

பாமதி ( வாசஸ்பதி மிஸ்ரா எழுதியது)

கல்பதரு (அமலாநந்தா)

பரிமளா (அப்பைய தீக்ஷிதர்)

brahma_sutra_bhasya_of_shankaracharya_idj504

5.சொற்குற்றங்கள் ஐந்து என அர்த்த சாஸ்திரம் விளம்பும்

அகாந்தி = விளங்காமை

வ்யாகாத = தான் சொன்னதையே மறுத்தல்

புனருக்த = கூறியது கூறல்

அபசப்த = இலக்கண வழு

சம்ப்லவ = சரியான வரிசை இல்லாமை

 

“அகாந்திவ்யாதாத: புனருக்தமபசப்த: சம்ப்லவ இதி லேகதோஷா:” — அர்த்தசாஸ்திரம் 2-10-57

 

6.தவிர்க்க வேண்டிய பேச்சுகள் ஐந்து என சரகர் செப்புவார்:

பருசம் = சுடு சொற்கள்

அதிமாத்ர = மிகைப்பட கூறல்

சூசக = நியாயமற்ற தாக்குதல்

அந்ருத = பொய் கூறல்

அகாலயுக்த= சொல்லக்கூடாத நேரத்தில் சொல்லுதல்

“பருஷஸ்யாதிமாத்ரஸ்ய சூசகாந்ருதஸ்ய ச

வாக்யஸ்யாகாலயுக்தஸ்ய தாரயேத்வேகமுத்திதம்”

—சரக சம்ஹிதா, சூத்ரம் 7-28

 mahabhasya

7.உரை வகைகள்

சூத்திரம் (மூல நூல்)

விருத்தி

பாஷ்யம்

டீகா

வார்த்திகா

–மஹாபாஷ்யம் (பதஞ்சலி எழுதியது)

உரை, விளக்க உரை, மறுப்புரை, அதற்கு எதிரான கண்டன உரை எனப் பல. இவை பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தெய்வத்தின் குரலில் விளக்கி இருக்கிறார்.

–சுபம்–

ஶ்ரீ சிவாஜி உத்ஸவம்

shivaji,fb

Article No. 2058

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 10  August  2015

Time uploaded in London :–7-48 AM

BY ச.நாகராஜன்

பாரதியாரின் முக்கியமான கட்டுரை

‘ஶ்ரீ சிவாஜி உத்ஸவமும் ஆங்கிலோ இந்தியர்களும்’ என்ற தலைப்பிட்ட மகாகவி பாரதியாரின் கட்டுரை அருமையான ஒன்று.

பரவலாகப் படிக்கப்படாத இந்த கட்டுரை அபூர்வமான ஒன்று. 1910 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியிட்ட விஜயா இதழில் இது வெளி வந்துள்ளது.

மிக நீண்ட கட்டுரையான இதில் நல்ல பல கருத்துக்களை அள்ளித் தந்துள்ளார் மாபெரும் கவிஞர்.

ஆங்கிலேயருக்கு பதில்

ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் அராஜகம்  விருத்தியாகிறதாம் என்ற ஆங்கிலேயர்களின் கூற்றைச் சொல்லி பாரதியார் தரும் மறுமொழி இது:-

“ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் நாடெங்கும் அராஜகம் எப்படிப் பரவும்? இவருடைய ஜன்ம தினத்தன்று இவருடைய ஜீவ சரித்திரம் ஒவ்வொரு கூட்டத்திலும் நன்றாக விளக்கப்படுகிறது.இவருடைய அந்தரங்கக் கருத்தை ஒரு சிறிது கூட மறைக்காமல் வெளியிடுகிறார்கள். இவர் முதல் முதலில் சிறு கூட்டம் கூட்டமாக மராட்டியர்களைச் சேர்த்துக் கொண்டு மகமதிய அதிகாரிகளைத் தாக்கினதையும், அவருடைய சேனை மெல்ல மெல்ல அதிகரித்ததையும், அவருக்கு நேர்ந்த தோல்விகளையும் கஷ்டங்களையும் வெளிப்படையாகத் தான் சொல்கிறார்கள். அவர் அப்சல்கான் என்னும் மகமதிய அதிகாரியைக் கொன்றதையும் அவர் தனித் தனி மகமதியர்களுக்குச் செய்த உதவியையும் ஒத்திட்டுப் பார்த்தால் அவருடைய செய்கை சுயநலத்தின் பொருட்டல்லவென்றும், மகமதியர்களின் பேரில் வீணான துவேஷத்தால் செய்யவில்லையென்றும் விளங்குகிறது. அவர் விடாமுயற்சியோடு போர் செய்தது கொடுங்கோன்மையோடு தான் என்பது அவர் ஆட்சிக்குள்ளிருந்த மகமதிய குடிகளின் காபந்து ஒன்றினாலேயே விளங்கும்.”

இப்படி சிவாஜி மத சமரஸத்துடன் தன் கீழ் வாழ்ந்த முஸ்லீம்களை நல்ல முறையில் நடத்தினார் என்பதை பாரதியார் வலியுறுத்துகிறார்.

sivaji afsal

ஆரிய பூமியாகிய இந்தியாவில் ஆரிய தர்மம் தழைக்கட்டும்!

ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் வாழ முடியாவிடில் அவர்கள் எங்கு தான் போவார்கள்? இந்தக் கவலையை அடுத்து வரும் பாராவில் அவர் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:-

மகமதிய தர்மம் அபிவிருத்தியடைய எப்படி துருக்கி, அராபியாபாரசீகம் முதலியவை இருக்கின்றனவோ அதே மாதிரி ஆரிய தர்மம் அபிவிருத்தியடைய உலகத்தில் ஒரு இடம் வேண்டாமா என்னும் சர்ச்சை தான் அவர் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. ஆரிய தர்மம் தழைத்தோங்க ஆரிய பூமியாகிய இந்தியாவை விட வேறு எந்த இடம் சிலாக்கியமானது?

 

 

 இந்தியாவில் ஆரிய தர்மம் வளர வேண்டுமானால் ஹிந்துக்கள் சுதந்திரமடைவது முக்கியமல்லவா? இதுதான் மஹாராஜாவாகிய சத்திரபதி சிவாஜியை ஸ்வராஜ்யம் ஸ்தாபிக்க முயலும்படி செய்தது

மிக அருமையாக சிவாஜியின் நோக்கத்தை இப்படிக் கூறும் மகாகவி சுதந்திர இந்தியா பற்றிய தன் கற்பனையையும் தெளிவாக்கி விட்டார்.

 

ஶ்ரீ சிவாஜி உத்ஸவம் ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அவர் நியாயப் படுத்துகிறார். ஆங்கிலேயர்கள், 1) இதனால் அராஜகம் விருத்தியாகிறது 2) ஶ்ரீ சிவாஜி மஹாராஜாவின் ஜன்ம தினத்தைக் கொண்டாடுவதினால் தேசபக்த கட்சிக்காரர்கள் அதிகமாகிறார்கள் என்ற இரு காரணங்களை முன் வைத்ததைச் சுட்டிக் காட்டிய மகாகவி முதல் குற்றச்சாட்டை காரணம் காட்டி ஏற்க மறுத்து விட்டார்.

அடுத்ததைப் பற்றி அவர் கூறுவது இது:- “இதில் ஒன்று வாஸ்தவம் தான். ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் தேசபக்தர்கள் அதிகமாகிறார்கள். இந்த உத்ஸவமே அதற்காகத் தான் ஏற்பட்டது. நமக்குள் தேசபக்தியில்லையென்பது ஒரு குறைவாக ஆங்கிலேயர்களே சொல்லியிருக்கிறார்கள். அதை நம்மில் நிலைநாட்டுவதற்காகத் தான் நம் தேச சரித்திரங்களை நமக்குச் சொல்வதாக பெருமை சொல்லிக் கொண்டு வந்தார்கள். இந்த தேசபக்தி ஆங்கிலேயர்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்ல்லை. நம் முன்னோர்களின் சரித்திரத்திலேயே இருக்கிறதை நம் ஜனங்களுக்கு தெளிவாக எடுத்துக்காட்ட ஶ்ரீ சிவாஜி உத்ஸவம் நடத்தினால் இவர்களால் பொறுக்க முடியவில்லை. ஆகையால் தான் தேசபக்தர்களிளினின்று அராஜகர்கள் உண்டாகிறார்கள் என்கிறார்கள்.”

இளம் வயது மேதையின் தீர்க்கதரிசனம்

1882ஆம் ஆண்டு பிறந்த மகாகவிக்கு இந்தக் கட்டுரை எழுதும் போது வயது 28 தான்!

ஆனால் தெளிவான சிந்தனையையும் தீர்க்கதரிசன நோக்கையும் அவரது கட்டுரைகள் அனைத்தும் கொண்டிருப்பது நமக்கு பிரமிப்பை ஊட்டுகிறது.

நடை, உடை, பாவனை மாறாத நிலையில இன்றும் இருக்கும் முஸ்லீம்களை பூர்வத்தில் ஹிந்துக்களாய் இருந்தவர்கள் என்பதைச் சொன்னவர் ஒரு தாய் வயிற்றினராக ஒருங்கிணைந்து வாழ்வதை வற்புறுத்துகிறார்; ஆனால் அதே சமயம் அவர்களை மதம் மாறுமாறு தூண்டவில்லை. தேசத்தை நேசி என்கிறார்.

பாரதியாரின் ஹிந்து தேசீயம் பற்றிய கட்டுரைகள் பரவலாக அறியப்படவில்லை.

இவற்றைப் படிப்பதும் பரப்புவதும் பாரதி ஆர்வலர்களின் பணியாக அமைதல் வேண்டும். வலிமை வாய்ந்த இந்தியா உருவாக வேண்டும்!

(படங்கள், பிற வெப்சைட்டுகளிலிருந்து, எடுக்கப்பட்டவை; நன்றி)

**************

சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது- 2

sivaji

மகாகவி பாரதியாரின் அற்புத கவிதை! – Part 2

 

Research Article No. 2056

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 9  August  2015

Time uploaded in London :–  14-37

 

 

.நாகராஜன்

கஜினி அடித்த கொள்ளை

   பாரத தேசத்தின் மீது கண் வைத்து, குறி வைத்து அன்னியரால் செய்யப்பட்ட கொலைகளும் கொள்ளைகளும் கணக்கில் அடங்கா!

உலக சரித்திரத்தை எழுத வந்த வில் ட்யூரண்ட் என்ற அறிஞர் மனித குல சரித்திரத்திலேயே இந்தியாவின் மீதான முகமதியர்களின் படையெடுப்பு தான் மகா மோசமானது என வர்ணிக்கிறார்

அழித்த ஆலயங்கள் பல்லாயிரம்.செய்த கொலைகளோ பல லட்சம். கொள்ளையடித்ததோ யாராலும் மதிப்பிட முடியாத அளவு மாபெரும் செல்வம்!

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

‘THE MUSLIM EPOCH’ ‘என்ற நூலை எழுதியுள்ள J.D.REES I.C.S தனது நூலில் இரண்டாவது அத்தியாயமாக ‘THE HOUSE OF GHAZNI (1001-1030) என்ற அத்தியாயத்தில் கொள்ளை அடித்த விவரங்களைஒரு சிறிதுகுறிப்பிடுகிறார். (1894ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த நூல்)

 

உத்தரபிரதேசத்தில் உள்ள கன்னௌஜ் பழைய காலத்தில் பிரசித்தி பெற்ற கன்யாகுப்ஜ நகரமாகத் திகழ்ந்தது. பேரரசர் ஹர்ஷரின் தலைநகரம் இது. ஹிந்துஸ்தானத்தின் இதயப் பகுதியில் கான்பூருக்கு சற்று வடக்கே கங்கை நதியின் அருகில் அமைந்திருந்த மாபெரும் கலை நகரம் இது. இதை கஜினி முகம்மது அழித்தொழித்து தரைமட்டமாக்கினான்.

 

 

மகத்தான கன்யாகுப்ஜம்

இந்த நகரின் பெருமையை ஜே.டி.ரீஸ் விவரிப்பதைப் பார்க்கலாம்:-

The greatness of this may be inferred from the fact that it is said to have contained 30,000 shops for the sale of betel-nut, as who would say there are 30,000 tobacconists’ shops in London!

 

வெற்றிலை, பாக்கு, புகையிலைக் கடைகள் மட்டும் 30000 என்று வியக்கிறார் ரீஸ்!

 

இன்னும் ஒரே ஒரு பாரா அவரது நூலின் இரண்டாம் அத்தியாயத்திலிருந்து:-

The wealth and sanctity of Muttra (Mathura), a city on the Jumna, north   of Agra, next marked it out for attack. Its idols were broken, and the temple was spared only because of its exceeding solidity. The Sultan wrote to his governor of Ghazni, “Here are a thousand edifices as firm as the faith of the faithful, mostly of marble, besides innumerable temples. Such other could not be constructed under two centuries. The Raja of Mahaban, seeing his people massacred and driven into the river, made away with his family and with himself, while the Rajputs of the garrison of another city he attacked, burned themselves and their wives and children. The plunder of this expedition is estimated at £ 416,000, besides 5300 captives, and 350 elephants, excluding the ruby eyes of idols and their necklaces of pearls and sapphires.

எத்தனை கொடுமை! படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

 

 shivaji picture

உக்ரமான அறைகூவல்

இந்தக் கொடுமையை எல்லாம் அறிந்திருந்தார் மகாகவி.ஆகவே தான் சிவாஜியின் உக்ரமான ஆவேச அறைகூவலை அப்படியே வீராவேசமாகத் தந்து விட்டார், கவிதையில்!

“தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி  நாயென வாழ்வோன் நமரிலிங்குளனோ?’

என்றும்

‘பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!’

என்றும்

செற்றினி மிலேச்சரைத் தீர்த்திட வம்மின்!

ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழுமின்!

நீட்டிய வேல்களி னேரலர்த் தெறுமின்

வாளுடை முனையிலும்  வயந்திகழ் சூலினும்

ஆளுடைக் கால்கள் அடியினும் தேர்களின்

உருளையின் இடையினும் மாற்றலர் தலைகள்

உருளையில் கண்டு நெஞ்சுவப்புற வம்மின்!

என்றும் பாடுகிறார்.

மகமதியர்களே கோபப்படாதீர்கள்

“சரித்திர சம்பந்தமான செய்யுள்கள் புனைவதில் இக்காலத்துத் தமிழர்கள் சாதாரணமாகப் பிரவேசிப்பதில்லை” என்று குறிப்புரையில் கூறும் மகாகவி பின்னும் தொடர்கிறார் இப்படி:-

“மேற்கூறிய விதமான செய்யுளிலே நமது மகமதிய சகோதரர்களுக்கு விரோதமாகச் சில வசனங்கள் உபயோக்கிக்க நேர்ந்திருப்பது பற்றி விசனமடைகிறோம். இக்காலத்து மகமதியர்கள் பாரத பூமியின் சொந்தப் புத்திரர்களென்பதையும், ஹிந்துக்களும் மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் பலமுறை வற்புறுத்தியிருக்கிறோமென்றபோதிலும், சிவாஜி மகாராஜா காலத்தில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் விரோதமிருந்தபடியால், அவர்களைப் பற்றி மஹாராஜா சிவாஜி சில கோபமான வார்த்தைகள் சொல்லி இருப்பது வியப்பாக மாட்டாது. செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீர ரஸத்தை மட்டும் கவனிக்க வேண்டுமேயல்லாமல் மகமதிய நண்பர்கள் நமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறோம்.”

பாரத பூமியின் சொந்தப் புத்திரர்கள் மதமாற்றத்தால் வேறு மதம் தழுவ நேர்ந்ததைப் பலகாலும் பாரதியார் வற்புறுத்தி இருக்கிறார்.

ஆகவே ஒரு தாய் பிள்ளைகளாக அவர்கள் ஒருங்கிணைந்து வெள்ளையனை விரட்ட வேண்டும் என்பதே அவர் அவா!

இதற்காகத் தோன்றியது தான் சிவாஜி உற்சவம்!

-தொடரும்

யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை செய்த திருத் தில்லை நீரோட்டக யமக அந்தாதி

Article No. 2039

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 3  August  2015

Time uploaded in London : -15-45

தமிழில் சிற்றிலக்கியத்தில் 96 பிரபந்த வகைப் பாடல்கள் உள்ளன. அவைகளில் ஒன்று அந்தாதி. அந்தாதியில் பல வகை அந்தாதிகள் உண்டு. அவை:

ஒலியந்தாதி

பதிற்றந்தாதி

நூற்றந்தாதி

கலியந்தாதி

கலித்துறை அந்தாதி

வெண்பா அந்தாதி

யமக அந்தாதி

சிலேடை அந்தாதி

திரிபு அந்தாதி

நீரோட்டக யமக அந்தாதி

யமகம் என்றால் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வரும்; ஆனால் அதற்கு வெவ்வேறு பொருள் இருக்கும். அந்தாதி என்றால் முதல் பாடலில் அந்தத்தில் (இறுதியில்) வரும் சொல் அடுத்த பாடலில் ஆதியில் (துவக்கத்தில்) வரும். இவையெல்லாமே சம்ஸ்கிருதச் சொற்கள். “ஆதி அந்தமில்லாத”, “வேதாந்தம்” (வேதத்தின் அந்தம்/இறுதி = உபநிஷத் கூறும் தத்துவம்) ஆகிய சொற்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

ஆக அந்தாதி என்றால் தெரிந்து விட்டது. யமகம் என்றால் புரிந்துவிட்டது. நீரோட்ட யமக அந்தாதி என்பதில் நீரோட்டம் என்றால் என்ன. இதுவும் சம்ஸ்கிருதச் சொல்லே! நிர்+உஷ்ட என்றால் உதடு ஒட்டாத என்று பொருள். உஷ்ட என்ற வடமொழிச் சொல்லும் உதடு என்ற தமிழ் சொல்லும் ஒரே மூலம் உடையவை. (தமிழ் திராவிட மொழியும் இல்லை, சம்ஸ்கிருதம் ஆரிய மொழியும் இல்லை. இரண்டும் சிவன் உடுக்கை ஒலியின் இரு புரத்திலிருந்து வந்த இரு பாரதீய மொழிகள் என்று எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நிரூபித்துள்ளேன்)

ஒட்டகத்துக்கு உஷ்ட்ரம் என்ற சம்ஸ்கிருதப் பெயரும் ஒட்டகம் என்ற தமிழ்ப் பெயரும் அதன் தடித்த உதடுகளால் வந்த பெயரே! சிறப்பான கை உடைய மிருகம் யானை, சிறப்பான மயிர் உடைய மிருகம் சிங்கம் (கேச+அரி); அதே போல சிறப்பான உதடு உடைய மிருகம் ஒட்டகமும் கழுதையும். இதனால் வடமேற்கு இந்திய எழுத்துக்கு கரோஷ்டி என்று பெயர் (கழுதை உதட்டு எழுத்து). அசோகர், காஞ்சீபுரம் வரை பிராமி எழுத்தில் எழுதிவிட்டு, வடமேற்கு இந்தியாவில் மட்டும் கழுதை உதடு போல தடிப்பாக இருக்கும் கரோஷ்டியில் எழுதிவைத்தார்.

ஆக நிர்+உஷ்ட =உதடு ஒட்டாத என்ற சம்ஸ்கிருதச் சொற்கள் நீரோட்டம் எனத் தமிழ்படுத்தப்பட்டது. இவ்வாறு உதடு ஒட்டாத சொற்களை வைத்துப் பாடுவது கடினம், அதில் யமகம் வைத்துப் பாடுவது அதைவிடக் கடினம்; அதில் அந்தாதி அமைப்பது அதைவிடக் கடினம். இது போன்ற சாதனைகளைத் தமிழ்ப்புலவர்கள் அந்தக் காலத்தில் செய்துள்ளனர்.

இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை யாத்த திருத் தில்லை நீரோட்டக யமக அந்தாதி இத்துடன் பதிப்பிக்கப்படுகிறது.1892 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மியூசியத்தில் சேர்க்கப்பட்டதால் அதற்கு முன் எழுதப்பட்டது புலப்படும்.

ஐன்ஸ்டீன் மூளை பற்றிய ரகசியங்கள்!

usa e=mc2

Research Article No. 2033

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 1st August  2015

Time uploaded in London : – 13-25

(This is already published in English a few days back)

ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்க ஒரு கணித வல்லுநர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டு அந்த கொள்கையை விளக்க முற்பட்டார். மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த அறிஞர்கள் பொறுமை இழந்தனர்; ஒரு துணிச்சல்காரர் எழுந்து சொன்னார்:

“அன்பரே! ஐன்ஸ்டீனின் தத்துவம் 12 பேருக்கே புரிந்தது என்று கேள்விப்பட்டேன். நீங்கள் பேசியதோ எங்களில் ஒருவருக்கும் விளங்கவில்லை. ஆகவே நீவீர் ஐன்ஸ்டீனுக்கும் மேலான அறிஞரே!”

(பழிகரப்பு அங்கதம் வாழ்க)

Xxxxx

india eistein

நான் கணித மேதை அல்ல!!

சர் வில்லியம் ராதென்ஸ்டைன் என்ற ஓவியர் ஐன்ஸ்டீனின் ஓவியத்தை வரைந்தார். இதற்காக ஓவியருக்கு முன்னால் ஐன்ஸ்டீன் மணிக்கணக்கில் உட்கார வேண்டி வந்தது. ஆனால் ஐன்ஸ்டீன் கொஞ்சமும் நேரத்தை வீணாக்க வில்லை. அவருடன் ஒருவர் வந்திருந்தார். அவர் ஒரு மூலையில் சிவனே என்று அமர்ந்திருந்தார். அவ்வப்பொழுது ஐன்ஸ்டீன் சில கணிதப் புதிர்களைப் போடுவதும் அதை அவர் விடுவிப்பதுமாக இருந்தது.

ஓவியம் வரைந்த பின்னர் ராதென்ஸ்டைன், மெதுவாக ஐன்ஸ்டீனிடம் யார் அந்த ஆசாமி என்று கேட்டார். “அவரா? அவர்தான் என்னிடம் கணிதமேதையாக வேலை செய்பவர். எனக்கு கணக்கு வராது. ஆகையால் அவ்வப்பொழுது நான் போடும் கணக்குகளைச் சரிபார்க்க அவரை வைத்திருக்கிறேன்” என்றார். பணக்காரர்கள் எல்லோரும் கணக்குப்பிள்ளை ஒருவரை வேலைக்கு வைத்திருப்பார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். விஞ்ஞானிகள் , “கணிதமேதைப்பிள்ளை”-களையே வேலைக்கு வைத்திருக்கிறார்கள்!!

Xxxx

E= mc2

ஐன்ஸ்டீனுக்கு சின்ன மூளை!!!

ஆங்கிலத்தில் யாருக்காவது சின்ன புத்தி இருந்தால் “பறவை அளவுக்குதான் மூளை— bird’s brain பேர்ட்ஸ் பிரயின் – என்று கேலி செய்வர். டால்பின் போன்ற பிராணிகளுக்கு மூளை மிகவும் பெரிதாகையால் அவை மிகவும் புத்திசாலிப் பிராணிகளாக இருக்கின்றன என்றும் படிக்கிறோம். ஆனால் வியப்பான செய்தி ஐன்ஸ்டீனுக்கு நம்மைப் போன்ற சாதாரண ஆட்களைவிட மூளை சிறியது என்பது அவர் இறந்தபின்னர் உடலைப் பரிசோதித்த போதுதான் தெரிந்தது!

ஐன்ஸ்டீனின் மூளையை 240 துண்டு போட்டு உலகெங்கிலும் உள்ள மூளையியல், நரம்பியல் ஆராய்ச்சியாளர்களுக்குக் கொடுத்தனர். அதை ஆரய்ந்ததில் ஒரு குறிப்பிட்ட (ப்ரீ Fராண்டல் கார்டெக்ஸ்) உறுப்பு அவருக்கு சிறப்பாக அமைந்திருந்ததைக் கண்டனர். இதுதான் அவரை உலகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானியாக்கி இருக்கிறது ((The researchers noted a uniquely formed pre-frontal cortex and concluded that this would explain the kind of abstract thinking Einstein would have needed for his experiments on the nature of space and time – such as imagining riding alongside a beam of light.))

Xxxx

Albert_Einstein_1979_USSR_Stamp

மந்தமான ஐன்ஸ்டீன்!

ஐன்ஸ்டீன் சிறுவயதில் யாருடனும் அதிகம் பேச மாட்டார். தனியாகவே விளையாடுவார். உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி ஆகியன எல்லாம் வயதுக்கேற்றவாறு இல்லை .பேச்சே வரவில்லை. டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவரும் இந்தக் குழந்தை – கொஞ்சம் மந்தம்தான் – என்று சொல்லிவிட்டார். பெற்றோர்களுக்கோ பெரும் கவலை.

ஒரு நாள் இரவுச் சாப்பாட்டிற்கு அனைவரும் மேஜையில் அமர்ந்தனர். திடீரென சின்னப் பயல் ஐன்ஸ்டீன், “அம்மா இந்த சூப்பு மிகவும் சூடாக இருக்கிறது” என்று தாய்மொழியில் (ஜெர்மன் மொழியில்) கத்தினான். பெற்றோர்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. பேரானந்தம்! ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

“அடப் பாவி மகனே! தேனே! பாலே! கற்கண்டே! என் அமுதமே! குஞ்சு மணியே! ஏனடா இவ்வளவு காலம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை?” என்று சொல்லி கட்டி அணைத்துக் கொண்டனர்.

சின்னப் பையன் ஐன்ஸ்டீன் சொன்னான்:

“இவ்வளவு காலம் வரை எல்லாம் சரியாக இருந்தது!” (அதனால் பேசத் தேவை எழவில்லை).

இதற்குப் பின்னர் இப்படி சிறு வயதில் வளர்ச்சி குன்றி, பிற்காலத்தில் பெரும் மேதைகளாக வரும் “நோய்க்கு” ஐன்ஸ்டீன் சிந்Dரோம் என்று பெயர் சூட்டினர் மருத்துவ வல்லுநர்கள்.

உங்கள் பிள்ளை கொஞ்சம் மந்தமாக இருந்தால் கவலைப்படாதீர்கள்” யார் அறிவார்? ஐன்ஸ்டீனை விடப்பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்யக் கூடும்!!!

Xxxxxx

mocambiqe

ஐன்ஸ்ட்டீனும் கடவுளும்

ஐன்ஸ்டீனுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? அவரே சொன்ன பதில்:–

ஒரு சிறுவன் ஒரு நூலகத்தில் நுழைகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறுவன் வியப்பான் இவ்வளவு புத்தகங்களையும் யார் எழுதியது? எவ்வளவு மொழிகள்? யாரோ இதை அழகாக ஒரு வரிசையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்தைப் பையன் வியப்பான். நூல்களை அடுக்கியவரோ, புத்தகத்திலுள்ள மொழிகளோ , அவைகளின் ஆசியரோ – யாரையும் அவனுக்குத் தெரியாது.

எவ்வளவு பெரிய அறிஞரானாலும் இப்படித்தான் பிரபஞ்சத்தைப் பார்த்து வியப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு மர்மமான முறையில் இந்தப் பிரபஞ்சமே இயங்குகிறது. அற்புதமான, அபாரமான ஒரு வரிசைக் கிரமத்தில் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. அதன் முழு விளக்கங்களும் நமக்குப் புரிவதில்லை”.

s_einstein-8

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்………………………

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்…….. என்று தமிழில் ஒரு பழ மொழி உண்டு. இது போல எல்விஸ் பிரஸ்லி என்ற பாடகர், மர்லின் மன்றோ என்ர நடிகை முதலான பத்துப் பேர் இறந்த பின்னரும் அவர்களின் பாடல், நடிப்பு, பெயர்கள், பிராண்டுகள் மூலம் ஏராளமான ராயல்டி தொகை கிடைக்கிறது. அதாவது உலகிலேயே பெரிய பத்து – செத்துப் போன—இப்போது பணம் உண்டாக்கும் பணக்காரர்கள்– என்று சொல்லலாம். இந்த பத்துப் பேரில் ஐன்ஸ்டீனும் ஒருவர். ஆண்டுக்கு அவர் பெயர் – புகழ் – மூலம் கிடைக்கும் வருவாய் இருபது மில்லியன் ( 2 கோடி) டாலர்கள்!!!

Einstein.stamp

–சுபம்–