தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும்

sangam-map1

தமிழ் பூமி- தமிழ் நாடு

Research Paper written by London swaminathan

Research Article No.1652; Dated 15th February 2015.

தமிழ் நாட்டுக்குத் தெற்கே இப்பொழுதுள்ள கன்யாகுமரியைத் தாண்டி ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததும், அது அடுத்தடுத்து வந்த இரண்டு சுனாமி கடல் எழுச்சியால் அழிந்து போனதும் மறுக்க முடியாத உண்மைகள். இதற்கு இலக்கியச் சான்றுகள் இருப்பதோடு கடலியல், பூகர்ப்பவியல் சான்றுகளும் உள.

இந்து மகாசமுத்திர கடலுக்கடியில் உள்ள மலைகள் படத்தை நேஷனல் ஜியாக்ரபிக் மேகசின் (மாத இதழ்) சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. அதிலும் ஒரு புறம் லட்சத் தீவுகள் வரையிலும் மறுபுறம் அந்தமான் நிகோபர் தீவுகள் – இந்தோ நேஷியத் தீவுகள் வரையும் கடலடி மலைகள் இருப்பதைக் காண முடிகிறது. மிகவும் பழங்காலத்தில் ஆஸ்திரேலியா வரை நிலமும் கடலும் விட்டு விட்டு இருந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம்- ஒருவேளை நாகரீகம் மிக்க மனித இனமே தோன்றாத காலத்து இருந்திருக்கலாம்.

நாம் அறிந்த – தென் தமிழ் நாட்டை மூழ்கடித்த சுனாமி எல்லாம் 2300 அல்லது 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்தவையே. இதை மொழி இயலும் மெய்ப்பிக்கிறது.

மூன்று தமிழ் சங்கங்களும் சுமார் 300 அல்லது 500 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க முடியும் என்பதை எனது மூன்று தமிழ் சங்கம் பற்றிய கட்டுரையில் எழுதிவிட்டேன். அதாவது இரண்டாவது தமிழ் சங்க காலப் பாடல்கள் என்று நாம் எதை எதை அறிந்திருக்கிறோமா அவை எல்லாம் அதிக மொழி வேற்றுமை உடையன அல்ல. ஆகவே ஏறத்தாழ ஒரே காலத்தில் உருவானவையே.

south_east_asia_map

தமிழ்க் கொடி பறந்த நாடுகள்

சிலப்பதிகாரமும் கலித்தொகையும்

தென் மதுரை, கபாடபுரம் ஆகிய பாண்டியத் தலைநகர்களை கடல் அழித்தது பற்றி சிலம்பும் கலியும் செப்புவது என்ன?

“வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை;

ஊழிதோறு ஊழி உலகம் காக்க;

அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்  திசை ஆண்ட தென்னவன் வாழி!

(காடுகாண் காதை,சிலப்பதிகாரம்)

—இளங்கோ தந்த இதே செய்தியை முல்லைக் கலியில் சோழன் நல்லுருத்திரனும் (கலித் தொகை) சொல்கிறார்:

map-5

கர்நாடக பிரதேசம்

மலிதிரையூர்ந்து தன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேல் சென்று மேவார் நாட்டு இடம்படப்

புலியொடு வில்நீக்கிப் புகழ் பொறித்த புகழ் கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன்

(முல்லைக் கலி, கலித்தொகை)

அதாவது கடல் கொண்ட பகுதிகளுக்கு நஷ்ட ஈடு கோருவதுபோல இமயம் வரை உள்ள பூமியை வென்றான் தென்னவன் (பாண்டியன்). சுனாமிக்கும், வட இமய விஜயத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிடினும் புகழ்ச்சிக்காக இப்படிப் பாடுவதுண்டு. வட திசையை வென்றதும் உண்மை- தென் திசையை கடலுக்குப் பலி கொடுத்ததும் உண்மைதான். கவிஞர்கள் இணைத்துப் பாடுவது மட்டுமே செயற்கையானது.

பரசுராமன் கேரள பூமியைக் கடலில் இருந்து மீட்டுக் கொடுத்ததால் மலையாள பூமிக்குப் ‘’பரசுராம க்ஷேத்திரம்’’ — என்ற பெயர் உண்டு. இதுவும் பழைய சுனாமியின் போது கடல் பின்னாலுக்குப் போனவுடன் வெளிவந்த பூமியாக இருக்கலாம். ஆயினும் இதை நிரூபிக்க நமக்கு உறுதியான சான்றுகள் வேண்டும்.

Chola_dynasty_map_-_Tamil

தமிழர்கள் இழந்த பூமி பற்றி அடியார்க்கு நல்லார் , தனது சிலப்பதிகார உரையில் நமக்குத் தெரியாத செய்திகளைச் செப்புகிறார்:

“அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடஎல்லை ஆகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன் பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிந்தது”.

அடியார்க்கு நல்லார் பொய் சொல்லவோ எட்டுக்கட்டி கதை எழுதவோ தேவை இல்லை. அவர் சொல்வது எல்லாம் உண்மை என்பது அர்த்தசாஸ்திரத்தில் (கி.மு.300) பாண்டிய கவாடம் என்னும் முத்து பற்றிக் குறிப்பதாலும், வால்மீகி ராமாயணம் கபாடபுரம் என்னும் இரண்டாம் தமிழ் சங்க ஊர் பற்றிக் குறிப்பிடுவதாலும், ராமனுக்கு நினவுப் பரிசாக இலங்கை அரசன் விபீஷணன் ஏழு தங்கப் பனைமர பொம்மைகளைக் (ஏழ்குறும் பனைநாடு) கொடுத்ததாலும், பரசுராமன் காலத்தில் கேரள பூமி கடலுக்கு மேலே வந்ததாலும் உண்மை என்று உறுதியாகிறது.

அடியார்க்கு நல்லார் 700 காதம் என்பதை சிலர் 7000 சதுர மைல் என்பர். அது மிகப் பெரிய நிலப்பரப்பு. அவ்வளவு இருக்க முடியாது. இரண்டு முறை அடுத்தடுத்து சுனாமிப் பேரலைகள் தாக்கியதால் பாண்டிய மன்னன் இருமுறை தலை நகர்களை மாற்றினான். ஆகவே 700 சதுர மைல்களாவது கடலுக்குள் போயிருக்கலாம்.

2000px-India_Tamil_Nadu_locator_map.svg

பஃறுளி என்ற ஆறு வட எல்லையாக இருந்தது. குமரி ஆறு தென் எல்லையாக இருந்தது. இதன் இடையே இருந்த தென் மதுரையைக் கடல் விழுங்கியதால் முதல் தமிழ் சங்கத்தை இழந்தோம். அதன் பிறகு கபாடபுரம் தலை நகரமானது. 200 அல்லது 300 ஆண்டுகளுக்குள் அதையும் கடல்கொண்டது. பின்னர் தற்போதைய மதுரையில் மூன்றாம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டது. தலைநகர் மாற்றம் பற்றி ரோமானிய யாத்ரீகர்களும் சொல்லுவதால் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்த கபாட புரம் அதற்குப் பின் கடலுக்குள் போனதாகவும் ஊகிக்கலாம்.

இந்துமத நூல்கள் 7 கடல், 7 மலை, 7 தீவுகள் என்று ரிக் வேத காலம் முதல் கூறிவருகிறது. இதே போல தமிழர்களும் ஏழு , ஏழாக நாடுகளைப் பிரித்திருப்பது பொருள் பொதிந்ததே. மேலும் கங்கை முதல் காவிரிவரையுள்ள 700 காதம் என்று ஒரு தமிழ் கல்வெட்டு கூறுவதால் நமக்கு அடியார்க்கு நல்லார் கூறும் “700 காவத” விஷயமும் உண்மையே எனக் காட்டும். (நாடு என்பது சங்க காலத்தில், ஒரு தாலுக்கா அல்லது ஜில்லா (வட்டம்/மாவட்டம்) அளவுடைய நிலப்பரப்புகள்).

historical_map_of_Tamil_Nadu

பழந்தமிழ் நாடு

தமிழர் இழந்த நூல்கள்

தமிழ் தாத்தா உ.வே சாமிநாத அய்யர் என்ற ஒருவர் மாட்டு வண்டியில் ஊர் ஊராகச் சென்று சுவடிகளைச் சேகரித்து, நமக்குக் கொடுத்திராவிடில் தமிழர்களின் வரலாறு முற்றிலும் அழிந்திருக்கும். பழைய உரைகளில் இருந்து இது வரை தமிழர்கள் இழந்த நூல்கள் என்ன என்ன என்பதை அறிய முடிகிறது. ஆனால் அடியார்க்கு நல்லார் சொல்லும் பாண்டிய மன்னன் பெயரும் (சயமா கீர்த்தி), கீழேயுள்ள பல நூல்களும் சம்ஸ்கிருதச் சொற்களுடன் இருப்பதையும் நோக்குதல் வேண்டும். தொல் பழங்காலத்தில் மொழிக் காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதை இது காட்டும்:

u-v-2

அகத்தியம், அவிநயம், இசை நுணுக்கம், மயேச்சுரம், மாபுராணம், பூதபுராணம் ( தமிழ் புலவர்கள் வேண்டுகோளை எல்லாம் புறக்கணித்து கணவன் சிதைத் தீயில் பாய்ந்து உயிர்நீத்த பாண்டியன் மனைவி “பூத”ப்பாண்டியன் தேவி என்று புறநானூறு சுட்டுவதையும் நினைவிற்கொள்க), பனம்பாரம், பல்காப்பியம், பன்னிருபடலம், முதுகுருகு, முதுநாரை, முறுவல், சயந்தம், பரதம், செயிற்றியம், பெருங்கலம், பஞ்சமரபு, இந்திரகாளியம், காக்கைபாடினியம், நற்றத்தம், வாய்ப்பியம், வியாழமாலை, பரத சேனாபதீயம், சிற்றடக்கம், பெரும்பொருள் விளக்கம், வெண்டாளி, களரியாவிரை, வாமனம், வையாபிகம், சிகண்டியம், பஞ்சபாரதீயம், குணநூல், மதிவாணம், கழாரம்பம், சங்கயாப்பு, துராலிங்கம் – முதலிய நூல்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

உரைகாரர்கள் மேற்கோள் காட்டியதன் பெயரில் இந்த நூல்களின் பெயர்களும் அவற்றில் உள்ள சில செய்யுட்களும் நமக்குக் கிடைத்துள்ளன.

வாழ்க தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

பாரதி போற்றிய ஐயர்!

Dr_U_V_Swaminatha_Iyer_stamp

உ.வே.சா. தபால்தலை

Post No: 1651;  Dated: 14 February 2015

by S Nagarajan

மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை வணங்கிப் போற்றி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

 

உ.வே.சாமிநாத ஐயர் : தோற்றம் 19-2-1855 மறைவு: 28-4-1942

 

பொதியமலை பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் நீ வாழ்வாய்!

 

எழுதியவர் ச.நாகராஜன்

மகாகவி போற்றிய ஐயர் அவர்கள்!

கவிஞர்களுக்குப் பல சிறப்புக் குணங்கள் உண்டு. இவை அனைத்தையும் கொண்டவர் மகாகவி பாரதியார்.

 

கவிஞன் காலத்தின் கண்ணாடி. கவிஞன் ஒரு தீர்க்கதரிசி. இந்த இரண்டு குணங்களையும் அவரது மகாமகோபாத்தியாயர் என்ற கவிதையில் காண்கிறோம்.

தமிழுக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த மேதையான உ.வே.சாமிநாதையரைப் பாராட்டி பிரஸிடென்ஸி காலேஜில் ஒரு விழா   நடந்தது. அதில் கலந்து கொண்டு மகாகவி அவரை வாழ்த்தி ஒரு பாடல் பாடினார். இறவா வரம் படைத்த பாடல் அது. காலத்தின் கண்ணாடியாகத் திகழ்ந்த பாரதி தமிழ் மேதையின் அன்றைய நிலைமையை அப்படியே வடித்து விட்டார்


who-are-these-people

உ.வே.சாமிநாத  ஐயரின்  அபூர்வ புகைப்படம்.

இதிலுள்ள தமிழழறிஞர்கள்  யாரென்று தெரியவில்லை.

இந்தியன்     எக்ஸ்பிரஸ்  டீ.ஏ. சீனிவாசன் கொடுத்த படம்

.

“நிதியறியோம், இவ்வுலகத்தொரு கோடி         இன்பவகை நித்தம் துய்க்கும்                                   கதியறியோம் என்று மனம் வருந்தற்க              குடந்தை நகர்க் கலைஞர் கோவே!”

என்ற இந்த வரிகளால் தமிழுக்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் நிதியின்றி வாடினார்; உலகத்தில் உள்ள கோடி வகை இன்பங்களையும் அனுபவிக்கவில்லை என்பதை படம் பிடித்துக் காட்டி விட்டார்.


உ வெ ச

அதே சமயம் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதால், “

“பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்  காலமெலாம் புலவோர் வாயிற்                                 துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்      இறப்பின்றித் துலங்குவாயே”

என்று தீர்க்கதரிசன வாக்கால் தமிழ் உள்ளளவும் அவர் தமிழை உண்மையாக நேசித்துப் போற்றும் நல்லோரால் நினைக்கப்படுவார் என்று கூறி அவரை வாழ்த்துகிறார்.

மகாகவியே பிறிதோரிடத்தில் கூறியபடி,”பார்ப்பனக்குலம் கெட்டழிவெய்திய பாழடைந்த கலியுகமாதலால்” சாமிநாத ‘ஐயர்’ என்ற மேதைக்கு அவர் வாழ்ந்த காலத்திலும் உரிய மரியாதை இல்லை; மறைந்த பிறகும் மரியாதை இல்லை என்பதை உளம் சோர, வருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியதாயிருக்கிறது.

 

அவர் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டதை தினமணி நாளிதழ் 2014, டிசம்பர் 14ஆம் தேதி பதிவு செய்கிறது.

உ.வே சா வீடு படம்

தமிழை அரசியலாக்கி அதன் பெயரைச் சொல்லி தன் நலத்தையும் தன் வாரிசுகள் நலத்தையும் பேணுவோர் இருக்கும் இன்றைய தமிழகத்தில் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது தான்.

ஆங்கில அரசும் பாண்டியர் அரசும்

மகாகவி தன் கவிதையில் ஆங்கில அரசையும் முன்னமிருந்த பாண்டியர் தம் அரசையும் ஒப்பிடுகிறான். மனதால் ஆங்கில அரசை முழுவதும் வெறுத்தாலும அப்படிப்பட அரசே உ.வே.சாமிநாதையரைப் பாராட்டுவதை உள்ளக் களிப்புடன் ஏற்றுக் கொண்ட மகாகவி, முன்னம் இருந்த பாண்டியர் அரசு இருந்தால் இவரை உச்சி மேல் வைத்து எப்படியெல்லாம் கொண்டாடி இருப்பார்கள் என்று மனதால் எண்ணிக் களிக்கிறான்.

“அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்    இன்றெம்மை ஆள்வோ ரேனும்

பன்னிய சீர் மகாமகோ பாத்தியாயப்      பதவி பரிவுடன் ஈந்து

பொன்னிலவு குடந்தை நகர்ச் சாமிதா      தன்றனக்குப் புகழ் செய்வாரேல்,

முன்னிவனப் பாண்டியர் நாள் இருந்திருப்பின்  இவன் பெருமை மொழியலாமோ?”

என்ற மகாகவியின் பாடல் எவ்வளவு பொருள் பொதிந்ததாக ஆகிறது, இன்று!

uvesa_table1_320x115

பிரான்ஸ் நாட்டவரின் வருத்தம்

 

ஐயர் அவர்கள் எழுதிய ‘நினைவு  மஞ்சரி’யின் முதல் பாகத்தில் முதல் கட்டுரையாக ‘கடல் கடந்து வந்த தமிழ்’ என்ற கட்டுரை இடம் பெறுகிறது. அதில் பிரெஞ்சு அறிஞரான ஜூலியன் வின்ஸோன் என்பவர் தனது தமிழ் சுவடி ஆராய்ச்சி குறித்து எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதை ஐயர் அவர்கள் விளக்குகிறார். ஜூலியன் விண்ன்ஸோனின் மாணாக்கரான பொண்டெனூ என்பவர் புதுச்சேரிக்கு வந்திருந்தார். அவர் அங்கிருந்து ஐயர் அவர்களைப் பார்க்க அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் வந்த போது தான் இருந்த நிலையை ஐயர் அவர்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்:-
“நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், “இந்தமாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார். நான், “என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத்திண்ணை யிலும் இருந்து படித்து வந்த மாகா வித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்” என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது.”

 

இது போன்று  தமிழ் ஆராய்ச்சியை எந்தெந்த நிலையில் எல்லாம் அவர் செய்ய வேண்டி இருந்தது என்பதை அவரது நூல்களைப் படிப்போர் நன்கு அறிய முடியும். பல்லாயிரக் கணக்கான பக்கங்களில் அவ்வப்பொழுது உதிரியாக அவர் தம்மைப் பற்றிக் குறித்தவை தாம் இவை. தனது கஷ்டங்களைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவை அல்ல இவை.

 

91க்கும் மேற்பட்ட நூல்களை அயராது உழைத்த ஆராய்ச்சியால் வெளியிட்டவர் தமிழ்த் தாத்தா. அவரது நல்லுரைக் கோவை (4 பாகங்கள்), நினைவு  மஞ்சரி உள்ளிட்ட பல நூல்களை www.projectmadurai.org  தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

தமிழ் வளர்த்த பாண்டியர் நாள் மலருமாக!

அவரை நினைப்பவர் மனதில் அவர் புகழோடு இன்றும் இலங்குகிறார். கெட்ட கலி யுகம் அழிந்து பாண்டியர் நாள் ஒரு நாள் எழும்; அன்று மாமேதை நன்கு போற்றப்படுவார்! தமிழை உளமார நேசிக்கும் நல்லோர்கள் மனதில் அவர் என்றும் இற்வாமல் புகழோடு வாழ்வார்.

அவரது பிறந்த நாளான இன்று உண்மையாக தமிழை நேசிப்போர் அவரை ஒரு கணம் நினைந்து அவரை உளமார வணங்குவோமாக! அப்படி வணங்கும் போது அவரால் மறும்லர்ச்சி கண்ட தமிழ்த்தாய் நம்மை ஆசீர்வதிப்பாள் என்பதில் ஐயமில்லை!

********

2014 டிசம்பர் 14ஆம் தேதி, தினமணி நாளிதழ் வெளியிட்ட செய்தி  கீழே தரப்பட்டுள்ளது:

uvasae_2242800f

சென்னை திருவல்லிக்கேணியில் இடிக்கப்பட்ட தமிழறிஞர் உ.வே.சா வாழ்ந்த வீடு.

சென்னையில் தமிழ் தாத்தா உ.வே.சா. வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது.

 

தமிழின் தொன்மையான ஓலைச்சுவடிகளையும், இலக்கியங்களையும் மீட்டுத் தந்தவர் உ.வே. சாமிநாத ஐயர். இவர் தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஓலைச் சுவடிகள், கையெழுத்து ஏடுகள், நூல்கள் ஆகியவற்றை பத்திரமாக மீட்டு, பதிப்பித்தார்.

இன்று தமிழில் உள்ள பெரும்பான்மையான இலக்கியங்கள் இவரால் மீட்கப்பட்டவை. புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் என தமிழில் உள்ள சிறந்த இலக்கியங்கள், இவரின் முயற்சியாலேயே தமிழர்களுக்குக் கிடைத்தது.

 

கும்பகோணம் உத்தமதானபுரத்தில் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்ற 1903-ஆம் ஆண்டு சென்னை வந்தார்.

 

அப்போது திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டையில் இருந்த ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். பின்னர் அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார்.

இரண்டாம் உலகப்போரின் போது சென்னையில் இருந்து வெளியேறி, திருக்கழுக்குன்றத்தில் இருந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் வசித்தார். காலப்போக்கில் உ.வே.சா.வின் உறவினர்களின் பராமரிப்பில் இருந்த திருவல்லிக்கேணி வீடு, பிறருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டின் உள்பகுதியை இடிக்கும் பணி நடைபெற்றது. அதனைக் கண்டித்து தமிழறிஞர்கள் குரல் கொடுத்தனர்.

 

தமிழின் இலக்கியங்களை மீட்டுத் தந்த உ.வே.சா.வின் நினைவாக அந்த வீட்டை உ.வே.சா. நினைவு இல்லமாக தமிழக அரசு பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

uvesa_table2_420x187

இந்த நிலையில் வீட்டை விலைக்கு வாங்கிய புதிய உரிமையாளர்கள் வீட்டை இடிக்கும் பணியை கடந்த ஒரு வாரமாக மேற்கொண்டுள்ளனர். இப்போது அந்த வீடு முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது என்று அந்தப் பகுதியினர் தெரிவித்தனர்.

*******

நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று!!

ruby

மாணிக்கம்/ கெம்பு

Research Paper written by London swaminathan

Research Article No.1647; Dated 13th February 2015.

 

கடந்த சில நாட்களில் முத்து, வைரம், ரத்தினக் கற்களின் எடை, விலை ஆகிய தலைப்புகளில் வராஹமிகிரர் கருத்து என்ன என்பதை அவரது சம்ஸ்கிருதக் கலைக் களஞ்சிய நூலான பிருஹத் சம்ஹிதையில் இருந்து கண்டோம். இன்று மரகதம், மாணிக்கம், நாகரத்தினம் பற்றி அவர் செப்புவதைக் காண்போம்.

வராகமிகிரர் 66 ஸ்லோகங்களில் ரத்தினக் கற்கள் பற்றிப் பாடினார். அவற்றில் முத்து பற்றி மட்டும் 36 பாடல்கள் பாடிவிட்டு, மரகதம் பற்றி ”ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு” — என்று ஒரே ஒரு பாடலோடு முடித்துவிட்டார்! இதோ அது:–

Group-emerald

மரகத மகிமை

சுக வம்சபத்ர கதலி சீரிஷ குசுமப்ரபம் குணோபேதம்

சுர பித்ரு கார்ய மரகதம் அதீத சுபதாம் ம்ருனாம் விஹிதம்

 

இதன் பொருள்:– கிளியின் சிறகு, மூங்கில் இலை வாழைத் தண்டு (சாம்பல்/மஞ்சள்), சீரிச மலரின் நிறம் (வெள்ளை/மஞ்சள்) ஆகிய வர்ணங்களில் உள்ள மரகதக் கற்கள் நல்ல ஜாதிக் கற்கள். இதை தெய்வங்களைக் கும்பிடும்போதும், முன்னோருக்கான கிரியைகளைச் செய்யும் போதும் அணிந்தால் மிகவும் நன்மை பயக்கும்.

தெய்வ வழிபாடு, இறந்தோர் வழிபாடு ஆகிய காலங்களில் ரத்தினம் அணிவது அற்றி இந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே உள்ளது.

நாகரத்தினக் கல் உண்மையா?

மாணிக்கக் கல் (சிவப்புக் கல்), முத்து பற்றிய பாடல்களில் நாகரத்தினம் பற்றிய விவரங்களைத் தருகிறார்:

நாகரத்தினக் கல் உண்மை என்றே வராஹமிகிரர் நம்புகிறார். ஆனால் விஞ்ஞான முறைப்படி இது வரை யாரும் கண்டதில்லை. நாகரத்தினக் கல் தருவதாகச் சொல்லி பலர் மோசடி செய்து வருவதால் இதைப் படிக்கும் எமது வாசகர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

இதோ வராகமிகிரரின் கூற்று:

ப்ரமர சிகி கண்ட வர்ண: தீபசிகாசப்ரப: புஜங்கானாம்

பவதிமணி கில மூர்த்தனியோஅனர்கய சஹ விக்னபா:

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82

இதன் பொருள் என்ன?

பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருப்பதாச் சொல்லுவர். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்;  ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்; அது விலை மதிக்க ஒண்ணாதது.

snake worship

இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்:

நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் (வேர் அறுப்பான்) செய்வான்.

நாகரத்தினக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட ‘’ஆஸ் யூ லைக் இட்’’ — நாடகத்தில் குறிப்பிடுகிறார். நாகரத்தினம் உண்மையா என்று நான் எழுதிய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் விவரம் காண்க:

Please read my research paper, “How did Shakespeare know about the Indian Cobra Jewel-Nagaratna?”– Posted on 1 October 2011.

http://swamiindology.blogspot.co.uk/2011/10/how-did-shakespeare-know-about-indian.html

வராகமிகிரர் மேலும் கூறுவதாவது: தக்ஷக, வாசுகி வம்சத்தில் வந்த பாம்புகளின் தலையில் ஒளிவீசும் நீல நிற முத்துக்கள் இருக்கும். இந்திரன் பெய்யும் மழை, இந்த பூமியில் அதிர்ஷ்டம் மிக்க இடத்தில் வெள்ளிப் பாத்திரத்தில் முத்தாகப் பொழிவதுண்டு. அவைகளும் பாம்பிடம் இருந்து வந்த முத்துகளே என்று அறிக!

இத்தகைய பாம்பு முத்துக்களை மன்னர்கள் அணிந்தால் எதிரிகள் அழிவர். மன்னரின் புகழும் வெற்றியும் ஓங்கும்.வெற்றி கிட்டும்.

ஆக, முத்து என்ற அத்தியாயத்தில் பாடுகையில் பாம்பின் தலை முத்து பற்றியும், மாணிக்கம் என்னும் அதிகாரத்தின் கீழ் பாடுகையில் நாகரத்தினம் என்றும் இரண்டு வகைக் கற்கள் பற்றிப் பகரும் பிருஹத் சம்ஹிதை!

நாகப்பாம்பு

எனது விளக்கம்:

நாகரத்தினம் என்பது பாம்புகளின் அகச்சிவப்பு உணரும் உறுப்பைக் குறித்துச் சொல்லி  இருக்கலாம்; பிற்காலத்தில் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு நாகரத்தினக் கல் என்று சொல்லிவிட்டனர். பாம்புகளுக்கு காதுகள் கிடையாது; கண்களே காதுகள் என்பதால் தமிழில் கட்செவி (கண்+செவி) என்றும் சம்ஸ்கிருதத்தில் சூன்ய கர்ண என்றும் சொல்லுவர். இருட்டில் இரை தேட அகச்சிவப்பு கதிர்கள் உதவும் .இப்பொழுது இரவு நேரத்தில் எதிரிகள் நடமாட்டத்தைக் காண அகச் சிவப்பு (இன்ப்ரா ரெட் பைனாகுலர்ஸ்) பைனாகுலர்களை ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர். இது பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரையை “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்”– (நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை, ஆண்டு 2009) புத்தகத்தில் காணுங்கள். இந்தப் புத்தகம் 1990-ம் ஆண்டுகளில் நான் லண்டனில் இருந்து வெளியான மேகம் பத்திரிக்கையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு.

மாணிக்கக் கல்=குருந்தம்=குருவிந்தம்=கெம்பு

மாணிக்கம் என்னும் சிவப்புக் கல் — குருவிந்தம், ஸ்படிகம், சௌகந்திகம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது (சௌகந்திகம் என்பது கந்தகக் கல்)

மாணிக்கக் கற்களின் விலை (1500 ஆண்டுகளுக்கு முன்)

ஒரு பலம் ( 4 கார்ஷா) எடையுள்ள கல்= 26,000 கார்ஷாபணம்

அரைப் பல கல்= 20,000 கார்ஷாபணம்

ஒரு கார்ஷா எடை= 6000 கார்ஷாபணம்

எட்டில் ஒரு குந்துமணி எடை= 3000 கார்ஷாபணம்

நாலில் ஒரு மாசா எடை கல் = 1000 கார்ஷாபணம்

(இதைப் புரிந்து கொள்ள நேற்று கொடுத்த எடைக் கல் வாய்ப்பாட்டைப் பார்க்கவும்)

குறைகள் உள்ள, ஒளி குன்றிய, மட்டான பிரகாசம் உடைய கற்களுக்கு விலை என்ன விகிதாசாரத்தில் குறையும் என்றும் வராகமிகிரர் விளக்கி இருக்கிறார்.

ஆர்வம் உடையோர் 66 பாடல்களையும் அதற்கு உரைகாரர்கள் எழுதிய வியாக்கியானங்களையும் படித்துப் பயன் அடைக!

முடிவுரை:

யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே அன்றி உண்மை அல்ல!! அல்ல!!

எனது பழைய கட்டுரை நிலாசாரல்.காம்  – இல் வெளியானது:–

Ruby_Jewel

தமிழ் இலக்கியம் கூறுவது என்ன?

பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் சிவப்புக் கல் இருக்கும் என்றும் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு பாம்பு இதைப் பயன்படுத்தும் என்றும் கூறுவர். சங்கத் தமிழ் நூல்களிலும், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்களிலும் நாகரத்தினம் பற்றிய குறிப்புகள் உண்டு. வடமொழி நூல்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு. இது இங்கிலாந்து வரை பரவி சேக்ஷ்பியர்(Shakespeare) கூட ஒரு நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அகநானூறு 72,92,138,192, புறநானூறு 172, 294 மற்றும் பல நூல்களில் பல இடங்களில் இதைக் காணலாம். காளிதாசர் முதல் சேக்ஷ்பியர் வரை நாகரத்தினத்தின் புகழைப் பாடினர். இதுவரை நாகரத்தினம் கிடைக்கவில்லை. நாகரத்தினம் என்பது என்ன என்பதை ஊகித்தறியலாம்.

நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்”

அகம் 72

உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்
திருமணி விளக்கிண் பெறுகுவை”

அகம் 92

பாம்புகள் தனது இரையைப் பார்க்கும் போது அவைகளின் கண்ணுக்கு அவை சிவப்பாகவே தெரியும்! அதுதான் நாகரத்தினம்! இது எப்படி என்பதைக் கீழே காணலாம் :-

பாம்புகளுக்கு தமிழில் நிறைய பெயர்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஆழமான பொருளும் உண்மையும் அடங்கியுள்ளது. இன்று அதிநவீன கருவிகளைக் கொண்டு உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்ததை தமிழர்கள் நுட்பமான பார்வையால் கண்டுபிடித்துள்ளனர்.

பாம்புக்கு ‘கட்செவி’ என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. கட்செவி என்றால் கண்ட செவி என்று பொருள். பாம்புக்கு கண்கள்தான் செவி (காது) என்றும் காதுகள்தான் கண் என்றும் இரண்டுவிதமாக இதற்குப் பொருள் கூறலாம் .நவீன அறிவியல் இதை உண்மை என்றே கூறுகிறது.

corundumpink

குருவிந்தம் (குருந்தம்)

இரவில் இரைதேடுவதற்கு பாம்புகள் அகச் சிவப்பு கதிர்களை (Infra red rays) பயன்படுத்துகின்றன. இருட்டு நேரத்தில் எலி, தவளை போன்ற பிராணிகளை நாம் பார்க்கமுடியாது. ஆனால் பாம்புகள் அவைகளை நாகரத்தினம் போல சிவப்பாக காணும். இது எப்படி என்றால் எலி,தவளை ஆகியவற்றின் உடல்வெப்பத்தைக் கொண்டு அவை இருக்குமிடத்தை பாம்புகள் அறிந்துகொள்ளும். இந்த அகச்சிவப்பு கதிர்களை பகுத்தறியும் உறுப்பு பாம்பின் கண்களுக்கு அருகில் உள்ளது. இது கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு குழி போன்ற உறுப்பில் உள்ளது. இதைக் கண்டுபிடித்த தமிழன் அதற்கு ‘கட்செவி’ எண்று பெயரிட்டான்!

நாகரத்தினம் பற்றிய செய்திக்கு இந்தக் கட்செவிதான் காரணம். ஏனெனில் இரவு நேரத்தில் பாம்புக்கு இரைகள் பெரிய சிவப்புக் கல் போலவே தோன்றும். பாம்புகள் தன்னைச் சுற்றியுள்ள வெப்பநிலை சிறிது மாறினாலும் கண்டுபிடித்துவிடும். மேலும் நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளே இழுப்பதால் காற்றிலுள்ள வாசனையைப் பிடித்து வாய்க்குள் உள்ள நரம்பு மூலம் பிராணிகள் இருப்பதை அறியும். இதை அறியும் உறுப்புக்கு ஜாகப்சன் உறுப்பு (JACOBSONS ORGAN) என்று பெயர்.

opal
ஒபல் — ஓரளவு மதிப்புடைய ரத்தினக் கற்கள்

பாம்புகளுக்கு கண் பார்வையும் குறைவு! காது கேட்பதும் குறைவு. ஆனால் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு வெப்ப நிலை மாற்றத்தை அறியும் உறுப்புகள் (HEAT PITS) உண்டு. கண்ணுக்கு அருகிலுள்ள இந்தக்குழிகள் காதுகளின் பணியைச் செய்வதால் இதற்கு கட்செவி (கண் காது) என்ற பெயர் ஏற்பட்டது.

ஆக, ஜாகப்சன் உறுப்பு,ஹீட் பிட்ஸ் (வெப்பக் குழிகள்), அகச் சிவப்புகதிர்கள் (Infra Red Rays) மூலம் பார்ப்பது இவைகளை வைத்துத்தான் நாகரத்தினம் பற்றிய கதைகள் எழுந்துள்ளன! இரவில் இரை தேட இந்த விசேஷ உறுப்புகளே பயன்படுகின்றன. நாகரத்தினம் என்று தனியாக ரத்தினக்கல் எதுவும் இல்லை!

-ச.சுவாமிநாதன் M.A (LIT), M.A (HIST)
நிலாச்சாரல்

amethist4

அமெதிஸ்ட்

agate

அகேட்

எவ்வழி உலகம் அவ்வழி அனைவரும்! உலகின் போக்கு!

NRF-cow-herd960

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. எவ்வழி உலகம் அவ்வழியே அனைவரின் வழியும்!

 

ஆய்வுக்கட்டுரை எண்: 1646; தேதி 13 பிப்ரவரி 2015

எழுதியவர் ச.நாகராஜன்

 

நியாயங்களைத் தொகுக்கப் போனால், தொகுப்பானது சுமார் 900 நியாயங்களையும் தாண்டி விடும். பல்வேறு நூல்களில் மேற்கோள்களாக எடுக்கப்பட்டவைகளைத் தொகுத்தாலோ அது ஒரு பெரிய நூலாக ஆகி விடும். மேலும் சில முக்கியமான நியாயங்களை

ப் பார்ப்போம்:-

खलमैत्रीन्यायः

khalamaitri nyayah

கலமைத்ரி நியாயம்

மைத்ரி – நட்பு

 

ஒரு வில்லனை- அயோக்கியனை- நண்பனாகக் கொள்வது பற்றிய நியாயம் இது.

ஒரு அயோக்கியனின் நட்பு ஆரம்பத்தில் பிரமாதமாக இருக்கும். போகப்போக அதன் தீவிரம் குறைவு படும். ஒரு கெட்டவனின் சிநேகம் மண்ணாங்கட்டி போல நம்புதற்கு உரியது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட வரும் நியாயம் இது.

stars-and-moon

தேய் பிறை நிலவின் படம்

திருக்குறளில் இதே கருத்தைக் காணலாம்:

 

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு      – திருக்குறள் 782

நாலடியாரில் 125 பாடல் இதனுடன் ஒப்பு நோக்குதற்கு உரியது:

 

“பெரியவர் கேண்மை பிறை போல நாளும்,

வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்

வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு”    – நாலடியார் பாடல் 125


pigeon
புறாவும் தானியக் களஞ்சியமும்

खलेकपोतन्यायः

khalekapota nyayah

கலேகபோத நியாயம்

தானியக்களஞ்சியமும் புறாக்களும் என்ற நியாயம் இது.

 

ஒரு தானியக் களஞ்சியம் இருந்தது. பெரிய புறாக்களும் குஞ்சுப் புறாக்களும் அங்கு சென்று வேண்டியபோதெல்லாம் வயிறு முட்ட தானியங்களைச் சாப்பிட்டுக் காலம் கழித்தன.அதன் அடிப்படையில் எழுந்த நியாயம் இது.

ஆக இது போல நல்ல மனமுடைய ஒரு பெரும் தனவந்தன் இருந்தால் அவனை அண்டி தங்கள் தேவைகளை ஏழை எளியோர் பூர்த்தி செய்து கொள்வர்.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சொல்லப்படும் நியாயம் இது..

 

.

wood apple

விளாம் பழம்

गजभुक्तकपित्थन्यायः

gajabhuktakapittha nyayah

கஜபுக்தகபித்த நியாயம்

 

கஜம் – யானை கபித்தம் – விளாம்பழம்

யானை சாப்பிட்ட விளாம்பழ நியாயம் இது.

யானை சாப்பிட்ட விளாம்பழக் கதை அனைவரும் அறிந்த ஒன்று தான். யானை விளாம்பழத்தைச் சாப்பிட்டால் அது உள்ளே இருக்கின்ற பழத்தைச் சாப்பிட்டு விடும். ஆனால் வெளியே பார்த்தால் ஓட்டுடன் பழம் முழுவதுமாக அப்படியே இருக்கும். ஆகவே யானை சாப்பிட்ட விளாம்பழம் போல என்ற பழமொழி வழக்கில் உள்ளது.

பார்வைக்குப் பெரிதாகத் தோன்றும் ஒருவன் உள்ளீடற்று இருக்கும் போது, இந்த நியாயத்தைச் சொல்லி அவன் சுட்டிக் காட்டப்படுகிறான்.


elephant

गतानुगतिको लोकःन्यायः

gatanugatiko lokah nyayah

 

கதானுகதிகோ லோக: நியாயம்

குருட்டுத்தனமாக ஒரு விஷயத்தைப் பின்பற்றுவதைக் குறிக்கும் நியாயம் இது.

ஒரு லேடஸ்ட் ஃபாஷன் சிலரால் பின்பற்றப்படுகிறது என்றால் ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாமல் அதை அப்படியே குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது உலக வழக்கமாகி விட்டது. அது சரியா தவறா என்ற ஆராய்ச்சியெல்லாம் எழுவதில்லை. உலகம் எவ்வழி அவ்வழி நம் வழி என்ற நிலைப்பாடில் எழும் நியாயம் இது. லோகம் என்ன செய்கிறதோ அதை அனுசரி என்ற இந்த நியாயத்தைச் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம்!


Blind Faith- Blind leading Blind

குருடன் குருடனைப் பின்பற்றுதல்

गोबलीवर्दन्यायः

gobalivarda nyayah

 

கோபலிவர்த நியாயம்

பசு மந்தையும் காளையும் என்னும் நியாயம் இது.

 

சாதாரணமாக பசு என்ற வார்த்தை இலக்கண ரீதியாக ஆண் மாட்டையும் குறிக்கும்; பெண் மாட்டையும் குறிக்கும். ஆனால் பசு என்றால் பெண் மாட்டையே நாம் குறிப்பிடுகிறோம். ஆண் மாட்டை காளை என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம்.

cow_herd

இதே போல ஒரு வார்த்தையை நாம் வழக்கில் ஒத்துக் கொண்டாலும் கூட அது எதை நிஜமான பொருளாகக் கொண்டிருக்கிறதோ அந்தப் பொருளால் வழங்கப்படுவதில்லை.

இது போன்ற தகுந்த சந்தர்ப்பத்தில் இந்த நியாயம் கையாளப்படுகிறது.

bull-and-cow

பசுவும் காளையும் படம்

***************

ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!!

nose_ring_wikipedia

ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1645; தேதி 12 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

 

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

 

முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:

த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி

முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81

பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.

வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும்  கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.

pearl-large

முத்து கிடைக்கும் இடங்களைக் குறிப்பிடுகையில் தாம்ரபரணி நதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளையும் பரளி என்னும் இடத்தையும் இவர் குறிப்பிடுதல் சிறப்புடைத்து.

வராகமிகிரருக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே- இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் — சாணக்கியன் எனப்படும் உலக மகா அறிவாளிப் பிராமணன் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலும் ‘பாண்டிய கவாடம்’ என்று பாண்டிய நாட்டு முத்தை சிறப்பிகின்றான்.

முத்து என்ற சொல்லும் பரல் (பேர்ள்) என்ற சொல்லும் சம்ஸ்கிருத வேத கால (முக்தா) இலக்கியங்களிலும், ஆங்கிலத்திலும் இருப்பது தமிழர் பெருமைப்படவேண்டிய விஷயம். பரளி என்ற ஊரின் பெயரில் இருந்து பரல் (முத்து) என்ற சொல் உண்டாகியதா அல்லது முத்து என்ற ரத்தினமே பரளி என்ற  பெயரை உண்டாகியதா என்பதையும் ஆராய வேண்டும். பரளி என்ற ஊரும் ஆறும் கேரளத்தில் உள்ளது. லட்சத் தீவுகளில் பரளி  என்ற தீவும் உளது.

வேத கால இலக்கியங்களில் வரும் முத்து பற்றிய சத்தான விசயங்களை கீழேயுள்ள எனது ஆய்வுக்கட்டுரையில் கண்டு கொள்க:

Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014

http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html

pearl-oyster

ரத்னங்களின் குணங்கள்

ஸ்னிக்த: ப்ரபானுலேபி ஸ்வச்சோ அர்சிஷிஷ்மான் குரு: சுசம்ஸ்தான:

அந்த: ப்ரபோ அதிராகோ மணிரத்னகுணா: சமஸ்தானாம்

—–(பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82)

ரத்தினக் கற்களின் சிறப்புத் தன்மை என்ன? ஒரு கல் சிறப்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது:- அது ம்ருதுவாக வழுவழுப்பானதாக இருக்கவேண்டும். தடவிப்பார்த்தால் கையில் எதுவும் நெருடக் கூடாது. கல்லுக்குள் மாசு, மரு, குற்றம், குறை இருக்கக் கூடாது. மின்னல் (டால்) அடித்து பளபளக்க வேண்டும்; ஒளிவீச வேண்டும்.  கனமாகவும் நல்ல வடிவத்திலும் இருக்க வேண்டும். மாணிக்கக் கல்லானால் நல்ல சிவப்பு வர்ணத்தில் இருக்கவேண்டும்.

என்ன கிடைக்கும்?

ஏதானி சர்வானி மஹா குணாணி சுதார்த்த சௌபாக்ய யசஸ்கரானி

ருக்சோக ஹந்த்ருனி ச பார்த்திவானாம் முக்தாபலானி ஈர்ச்சித காமதானி — (பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81)

இந்த ஸ்லோகம் முத்து பற்றிய அத்தியாயத்தில் வருகிறது. இது எல்லா ரத்தினக் கற்களுக்கும் பொருந்தும் என்பது உரைகாரர்களின் கருத்து.

இதன் பொருள் என்ன? எல்லா வகை முத்துக்களும் மிகவும் மதிப்பு மிக்கவை. இவைகளை அணிவோருக்கு புத்ர (மகன்கள்) பாக்கியம், பணம், புகழ், செல்வாக்கு ஆகியன வந்து குவியும்; நோய்களையும் துக்கத்தையும் அழிக்கும்; அரசர்கள் அணிந்தாலோ இஷ்டப்பட்டது எல்லாம் கிடைக்கும்.

குறையுள்ள வைரங்கள் படுகொலைகளை உருவாக்கும் என்பதால் கிருஷ்ண பரமாத்மாவே சியமந்தக மணியை கொடுத்துவிட்டதையும் அது இப்பொழுது அமெரிக்காவில் மியூசியத்தில் முடங்கிக் கிடப்பதையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏற்கனவே எழுதிவிட்டேன்:
1)Lord Krishna’s Diamond in USA? –  posted on 23 April 2012

https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/

2)அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

http://swamiindology.blogspot.co.uk/2012/05/blog-post.html

3)Gem Stones in Kalidasa and Tamil Literature

13th February 2012

http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html

mthangi sevai

அம்மனுக்கு முத்து அங்கி

தென் இந்தியக் கோவில்களில் முத்து மாலை, முத்து அங்கி போட்டு சுவாமியையும் அம்மனையும் அலங்கரிப்பது விஷேசமான ஒன்று. இதைக் காண பெண்கள் அணி திரண்டு படை படையாகச் செல்வர். எங்கள் ஊர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முத்து அங்கி, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்து அங்கி சேவை, திருப்பதி பாலாஜி கோவில் முத்து ஆபரணங்கள் மிகவும் பிரபலமானவை. இது வராகமிகிரர் காலத்துக்கும் முன்னரே இருந்திருப்பது அவர்தம் ஸ்லோகங்களில் இருந்து வெள்ளிடை மலை போல விளங்குகிறது.

அவர் 17 வகை முத்து மாலைகளை வருணிக்கிறார். இதை கோவிலில் உள்ள நகைகளும் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கற் சிற்பங்களில் உள்ள நகைகளும் மெய்ப்பிக்கின்றன; யக்ஷி, யக்ஷர் சிலைகளில் உள்ள நகைகள் ப்ரமிப்பூட்டுகின்றன. அஜந்தா, சிகிரியா (இலங்கை) ஓவியங்களும் இந்த நகைகளைக் காட்டும்.

17 வகை முத்து மாலைகளில் சில:

1008 வடம் (நாலு முழ நீளம்) = இந்து சந்தா (கடவுளுக்கானவை)

504 வடம் (இரண்டு முழ நீளம்) = விஜய சந்தா

108 வடம் (இரண்டு முழ நீளம்) = ஹாரம் (மாலை)

81 வடம் = தேவ சந்தா

64 வடம் = அர்த்த ஹார

54 வடம் = ரஸ்மி கலாப

32 வடம் = குச்ச

20 வடம் = அர்த்த குச்ச

16 வடம் = மாணவக

12 வடம் = அர்த்த மாணவக

எட்டு வடம் = மந்தர

ஐந்து வடம் = ஹார பலக

27 முத்துக்கள் கொண்ட மாலை (ஒரு முழ நீளம்) = நட்சத்திர மாலா

இவ்வாறு முத்துக்களின்  பெருமைகளை 36 பாடல்களில் பாடிப் பரவியுள்ளார்.

muthangisrivaishnavism-site

எடைகள் பற்றிய வாய்ப்பாடு

ரத்தினக் கல் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு சின்னச் சின்ன எடைக் கற்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

1500 ஆண்டுகளுக்கு நாம் பயன் படுத்திய எடைகள், பணம், காசு முதலியன பற்றியும் அந்தக் காலத்தில் ரத்தினக் கற்களின் விலை பற்றியும் வராக மிகிரர் விரிவாக எடுத்துரைக்கிறார். இதோ வாய்ப்பாடு:

விம்சதி: ஸ்வேதிகா: ப்ரோக்தா: காகின்யேகா:

விசக்ஷணை: தத் சதுஷ்கம் பண: இதி சதுர்த்தம் தத் சதுஷ்டயம்

 

சதுர்த்தக சதுஷ்கம் து புராண: இதி கத்யதே

கார்ஷா பண; சஹ ஏவ உக்த: க்வசித் து பண விம்சதி:

 

20 வெள்ளிக் காசு= ஒரு காகினி

4 காகினி = ஒரு பணம்

4 பணம் = ஒரு சதுர்த்தம்

4 சதுர்த்தம் = ஒரு புராண அல்லது கார்ஷா பணம்

80 வெள்ளிக்காசு =ஒரு பணம்

20 பணம் = ஒரு கார்ஷா பணம்

muthu angi

8 வெள்ளைக் கடுகு (ஐயவி)= ஒரு அரிசி

20 அரிசி எடை வைரம் = 2 லட்சம் கார்ஷா பணம்

14 அரிசி அடை= 1 லட்சம் கார்ஷா பணம்

முத்து விலை

5 குந்து மணி (ரத்தி/குஞ்சா/கிருஷ்ணல) = 1 மாச

16 மாச = 1 சுவர்ண

4 சுவர்ண = ஒரு பல

அரை பல = தரண அல்லது சுவர்ண

4 மாசக எடை (16 குந்துமணி) முத்து= 53,000 கார்ஷா பணம்

ஒரு மாசக எடை முத்து = 135 கார்ஷா பணம்

இப்பொழுது அவர் சொல்லும் ரத்தினக் கற்களின் விலை பொருள் உடைத்து அல்ல. ஆயினும் அவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பை அறிய முடியும். இடம், நேரம் ஆகியவற்றின் அருமை கருதி, இங்கே எல்லாவற்றையும் தர இயலவில்லை.

68-March-Pearl

அடுத்த கட்டுரையில் நாகரத்தினம் (பாம்பின் தலையில் உள்ள ரத்தினம்), மாணிக்கம், மரகதம் பற்றி வராகமிகிரர் சொல்லுவதைக் காண்போம்.

—தொடரும்……………………………..

கர்ணன் பெயரில் ஒரு நியாயம்! கிணறு பெயரில் இரு நியாயம்!!

Karnan

கட்டுரை எண் 1644; தேதி 12 பிப்ரவரி 2015

எழுதியவர் ச.நாகராஜன்

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. ராதேயன் கர்ணன்!

 

நியாயங்களின் வரிசையில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:-

कूपखानकन्यायः

kupakhanaka nyayah

கூபகானக நியாயம்

கூபம் – கிணறு

கிணறு வெட்டுவது பற்றிய நியாயம் இது.

ஒரு கிணறை வெட்டும் போது அதை வெட்டுபவனுடைய உடலில் சகதிகள், மண், சேறு முதலில் படியும். ஆனால் வெட்ட வெட்ட கிணற்றிலிருந்து தண்ணீர் ஊறும். அந்த நீரினாலேயே அவன் தன் உடல் முழுவதையும் கழுவிக் கொண்டு சுத்தமாக ஆகி விடுவான். இதே போல ஒருவன் செய்யும் பாவங்கள் எல்லாம் கூட அவன் பின்னால் செய்யும் தான தர்மங்களினால் கழுவப் பட்டு விடும். இதை அழகாக எடுத்துரைக்கும் நியாயம் கூப கானக நியாயம்.


communal-well_kerala1

कूपयन्त्रघटिकान्यायः

kupayantraghata nyayah

கூபயந்த்ரகடிகா நியாயம்

ஒரு கிணறில் நீர் எடுக்க உதவும் உருளையில் பக்கட்டுகளை இணைத்திருப்பது பற்றிய நியாயம் இது.

கிணறிலிருந்து நீர் எடுக்கும் போது சில பக்கட்டுகள் நீர் நிரப்பப்பட்டு மேலே வரும். சில சமயம் நீர் இல்லாமலேயே மேலே வரும். கீழே போகும் போதோ காலியாக கீழிறங்கும். அதே போல உலகியலில் வாழ்க்கையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நீர் நிரம்புவதும் நீர் நிரம்பாமல் இருப்பதுமாக, மேலே ஏறுவதும் கீழே இறங்குவதுமாக எத்தனை எத்தனையோ மாறுதல்கள்.

இந்த மாறுதல்களைச் சுட்டிக் காட்டுவது தான் கூபயந்த்ரகடிகா நியாயம்.

 

drinking09-village-well_13106_600x450

कैमुतिकन्यायः

kaimutika nyayah

கைமுதிக நியாயம்

“இன்னும் எவ்வளவு” என்னும் நியாயம் இது. வேலையே பார்க்காமல் இன்னும் எவ்வளவு அதிகமாகக் கிடைக்கும் என்று அதிகம் பெறுவதையே நோக்கமாக ஒருவர் கொள்ளும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

Karnan29211

कौन्तेयराधेयन्यायः
kaunteyaradheya nyayah
கௌந்தேய ராதேய நியாயம்
கௌந்தேய ராதேய என்னும் நியாயம் இது பிரபலமான ஒன்று.

மஹாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்ட நியாயம் இது. குந்தியின் மகனான கர்ணன் அவளால் ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விடப்பட அந்தக் கூடையை எடுத்துப் பார்த்துத் திகைக்கிறாள் ராதா என்னும் பெண். அவனைத் தன் மகனாக வளர்க்க ஆரம்பிக்கிறாள்.ராதையின் மகன் என்று அவனைச் சுட்டிக் காட்டப்படுகிறான் அவன்.

ஆகவே அவனை ராதேயன் என்று சாதாரணமாகக் கூப்பிடுவது வழக்கம்.

பேச்சு வாக்கில் கடைப்பிடிக்கப்படும் ஒரு பழக்கம் எப்போதுமே வழங்கப்பட்டு நிஜமான ஒன்றாக ஆவது போல இருக்கும் சமயத்தில் இந்த நியாயம் வழங்கப்படும்.

குந்தியின் மகன் தான்; ஆனால் ராதேயனாக ஆகி அதுவே நிஜமாகி விட்டது. அதைப் போன்ற தருணங்களில் வழங்கப்படும் நியாயம் இது!

bald

खल्वाटबिल्वीयन्यायः

khalvatabilviya nyayah

கல்வாடபில்வீய நியாயம்

வழுக்கைத் தலையரும் வில்வப் பழமும் என்னும் நியாயம் இது.

இதற்கு அடிப்படையான கதை ஒன்று உண்டு.

 

ஒரு நாள், வழுக்கைத் தலையரான ஒருவர் வெய்யிலின் கொடூரம் தாங்காமல் களைப்பாறுவதற்காக ஒரு வில்வ மரத்தின் அடியில், நிழலில் வந்து அமர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய வில்வப் பழம் அவர் மண்டை மீது திடீரென்று விழுந்து காயம் ஏற்பட அவர் துடிதுடித்துப் போனார். துரதிர்ஷ்டம் எங்கு போனாலும் தொடர்ந்து வரும் என்பது போல சிலருக்கு எங்கே போனாலும் ஏதாவது இப்படி நடந்தால் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

WoodApple_12339

*****************

பெண்கள் வைரங்களை அணியலாமா வராஹமிகிரர் கருத்து என்ன?

diamonds-loose-certified-1

ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்- லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக்கட்டுரை எண்:–1642; தேதி 11 பிப்ரவரி 2015

கடந்த சில நாட்களில் எழுதிய கட்டுரையில் 1500 ஆண்டுகளுக்கு முன் வராகமிகிரர் என்ற மாமேதை யாத்த பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத நூல் பற்றிக் கண்டோம். இது சம்ஸ்கிருதத்தில் உள்ள ஒரு கலைக் களஞ்சியம் என்றும் அவர் பேசும் 106 தலைப்புகள் பற்றியும் கண்டோம். இன்று வைரங்கள், ரத்தினக் கற்கள் பற்றி அவர் சொன்ன சில சுவையான விஷயங்களைக் காண்போம்.

22 வகை ரத்தினக் கற்கள்

மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம் என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது  அறிஞர்கள் இருந்ததை நவரத்தினங்கள் என்று அழைக்கிறோம். இதே போல பெண்கள், குதிரை, யானையில் சிறந்த ஜாதிகளை ரத்தினம் என்பர். சிறந்த பெண்ணை நாரீரத்னம் என்பர். இதை வராகமிகிரரும் அமரகோசம் நிகண்டு எழுதிய அமரசிம்மனும் பகர்வர்:

ரத்னம் ஸ்வ ஜாதி ஷ்ரேஷ்டேயி – என்று செப்புகிறது அமரம்.

ரத்னக் கற்கள் எங்கே தோன்றுகின்றன?

இது குறித்து தனது காலத்துக்கு முன் ஆயிரக்கணக்கான, ஆண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கைகளை எழுதிவிட்டு தனது அறிவியல் பூர்வ கருத்தையும் மொழிகிறார் வராகமிகிரர்:

பலன் என்னும் அசுரனின் எலும்புகளில் இருந்து ரத்தினக் கற்கள் உற்பத்தியானதாகச் சிலரும், ததீசி முனிவர் இடமிருந்து உற்பத்தியானதாகச் சிலரும், பூமியின் குணங்கள் மூலம் உற்பத்தியானதாகச் சிலரும் கூறுவர். இதற்கு வியாக்கியானம் எழுதிய உத்பலர் என்பவர் சில புராண ஸ்லோகங்களை முன்வைத்து பூமியின் நிலையே காரணம் என்பார். தற்கால அறிவியலும் பூகர்ப்ப இயலின் ஒரு பகுதியாகவே ஜெம்மாலஜி (ரத்ன பரீக்ஷா) சாஸ்திரத்தை வைத்துள்ளது.

a_pair_of_diamonds

22 வகை ரத்தினக் கற்களை இரு ஸ்லோகங்களில் தருகிறார் வராக மிகிரர்:

வஜ்ரேந்திர நீலசரகதககர்தே பத்மராகருதிராக்யா:

வைடூர்யபுலகவிமலக ராஜமணிஸ்படிக ஸஸிகாந்தா:

சௌகந்திககோமேதகசங்ரவ மஹாநீல புஷ்பராகாக்யா:

ப்ரஹ்மணிஜ்யோதிரஸஸஸ்யகமுக்தாப்ராவாலானி

(இந்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சந்தி பிரித்துப் படித்தால் பல ரத்னக் கற்கள் நமக்கு முன்னரே தெரிந்தவை என்பதை உணர்வீர்கள்)

வைரம், நீலம், மரகதம், பச்சைக்கல் (அகேட்), மாணிக்கம், சிவப்புக்கல் (பிளட் ஸ்டோன்),வைடூர்யம், அமெதிஸ்ட், விமலக, ராஜமணி (க்வார்ட்ஸ்), ஸ்படிகம், சந்திரகாந்தம், சௌகந்திகம், ஓபல், சங்கு, நீலநிறக் கல், புஷ்பராகம், பிரம மணி, ஜோதிரஸ, சஸ்யக, முத்து, பவளம்

ஒவ்வொரு ரத்தினக் கல்லுக்கும் யார் அதிதாவதை என்றும் வராஹமிகிரின் பிருஹத் சம்ஹிதா சொல்கிறது:

வெள்ளை நிற அறுகோண வைரம்= இந்திரன்

பாம்பின் வாய் போன்ற கறுப்புநிற வைரம்=யமன்

வாழைத் தண்டு நிறம்= விஷ்ணு

கர்ணிகார பூவின் நிறம்=வருணன்

நீலம்,சிவப்பு கலந்தது= அக்னி

அசோக மலர் வர்ணம்= வாயு

வைரம் கிடைக்கும் இடங்களை இன்னும் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:

வேணா நதிக் கரை, கோசலம், சௌராஷ்ட்ரம்,சௌர்பார தேசம், இமயமலை, மதங்க, கலிங்க, பௌண்டிர தேசங்கள்.

diamonds-1

ஜாதியும் வைரமும்

பிராமணர்கள் வெள்ளை நிற வைரங்களை அணியலாம்; சிவப்பு, மஞ்சள் நிறம் க்ஷத்ரியர்களுக்கும், வெள்ளை-மஞ்சள் (சீரிச மலர்) வைரம் வைஸ்யர்களுக்கும், வாளின் நிறம் உடைய வைரம் சூத்திரர்களுக்கும் நன்மை பயக்கும் என்று ஒரு ஸ்லோகத்தில் சொல்லுவார்.

வைரங்களின் எடை, அதன் விலைகள் ஆகியவற்றையும் பட்டியல் இடுகிறார் (என் ஆங்கிலக் கட்டுரையில் விவரம் காண்க)

பெண்கள் வைரம் அணிவது பற்றி அவர் சொல்கிறார்: குழந்தைகளை வேண்டும் பெண்கள் வைரங்களை அணியக்கூடாது என்று சிலர் சொல்லுவர். ஆனால் என் கருத்து, ஆண் குழந்தைகளை விரும்பும் பெண்கள் முக்கோண வடிவுள்ள அல்லது, கொத்தமல்லி விதை வடிவமுள்ள வைரங்களை அணியலாம்.

இன்னும் ஒரு ஸ்லோகத்தில் வராஹமிகிரர் செப்புவது யாதெனில்: குறையுள்ள வைரங்களை அணிவது வாழ்க்கையையே பாதிக்கும்; செல்வம், குழந்தை, குடும்பத்தையே பாதிக்கும்; நல்ல வைரங்களோவெனில் எதிரிகளை அழித்து வெற்றிக்கொடி நாட்டவைக்கும்; விஷம், இடி, மின்னல் கூட அவர்களைப் பாதிக்காது. மன்னர்கள் அணிந்தால் கூடுதல் சுகபோகங்கள் கிட்டும்.

Good-Type-of-Diamond-Investment

பிருஹத் சம்ஹிதா கூறும் முத்து, நீலம், மரகத விஷயங்களை இன்னும் ஒரு கட்டுரையில் சுருக்கி வரைவேன்.

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 3

rojaraja

Post No 1641; Dated 11th February 2015

written by Santanam Nagarajan

by ச.நாகராஜன்

Part 2 is published under the Title:– ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்!(தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2 (Post No 1635; Dated 9th February 2015)

கம்பனின் கவினுறு பாடல்கள்

மாபெரும் கற்புக்கரசியாகவும், பேரழகியாகவும், திருவுடைச் செல்வியாகவும் விளங்கிய சீதையையும் ராமனையும் கம்பனைப் போல ரசித்து, வணங்கித் தொழுது புகழ்ந்தவ வேறு யாரும் இல்லை.

 

அவனிடம் ராமருக்ர்கும் சீதைக்கும் எல்லாமும் இருப்பதாகப் புகழ்கிறீர்களே, அவர்களுக்கு இல்லாதது ஒன்றுமே இல்லையா என்று கேட்ட போது, உடனே, பளிச்சென்று இருக்கிறதே, “ஐயனுக்கு வசையில்லை; அன்னைக்கு இடையே இல்லை” என்று பதில் அளித்தானாம்!

அவனது பெண் பார்க்கும் படலத்தின் சிறப்பை பல நூறு பாடல்கள் காட்டினாலும் எடுத்துக் காட்டிற்கு இங்கு மூன்றே மூன்று பாடல்களை மட்டும் பார்க்கலாம்:

 

“எண் அரும் நலத்தினாள் இனையள் நின்றுழி,

கண் ஒடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள் – மிதிலைக் காட்சிப் படலம்  பாடல் 35

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள் – இந்த வரி உலக இலக்கியத்தில் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் தாக்கம் பற்றி எழுத ஒரு தனி நூல் அல்லவா வேண்டும்!

 

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்,

கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!   – பாடல் 38

நங்கைக்கு இல்லாதது இடை; நம்பிக்கு இல்லாதது வசை!கண்ணோடு கண் நோக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல! விஷ்ணு லோகத்தில் பாற்கடலிலிருந்து பிரிந்து வந்து மீண்டும் ஒருவரை ஒருவர் மீண்டும் பார்த்தவர்கள் பேசவும் வேண்டுமோ!

rama green

சீதையின் அழகு!

 

அடுத்து சீதையின் அழகு எப்படி இருந்தது? ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு காணலாம். கோலங்காண் படலத்தில் 28வது பாடலாக மலர்கிறது இது:

பொன்னின் ஒளி,

பூவின் வெறி,

சாந்து பொதி சீதம்,

மின்னின் நிழல் – அன்னவள் தன் மேனி ஒளி மான,

அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழுதும் நாண,

மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்

இதைப் படித்தோருக்கு கம்பனை முழுவதுமாகக் கற்கும் ஆசை எழுவது இயல்பே அல்லவா!

கவிஞன் கம்பனைத் திட்ட வேண்டும் என்று அவனது காவியத்தில் குதித்து அதிலிருந்தும் அதன் சுவையிலிருந்தும் மீள வழி தெரியாமல் திகைத்து பெரும் ஆத்திகனாக மாறி பல ஆயிரம் பாடல்களைப் பாடினார் கண்ணதாசன் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!

ஆகவே தான் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தான் அனுபவித்து மகிழ்ந்த கம்பனைத் தமிழ் மக்களுக்குத் தன் பாடல்கள் மூலம் இனம் காட்டி மகிழ்ந்தார்

அவர்.


rama sudhai

‘ஜனகனின் மகளைபாடல்

கண்ணதாசன் பாடல் எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்க பி.சுசீலா பாடிய இன்னொரு பெண் பார்க்கும் படலப் பாடல் 1976ஆம் ஆண்டு வெளியான ரோஜாவின் ராஜா படத்தில் இடம் பெற்றது. இயக்குநர் கே.விஜயன்.

சிவாஜிகணேசன், ஏ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ, மேஜர் சுந்தரராஜன் என பிரபல நடிகர்கள் நடித்து வெளியான படம் இது. கதையின் நிலைக்களனுக்கு ஏற்ப இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. வாணிஸ்ரீ பாடலைப் பாட சிவாஜிகணேசனும் ஏ.வி.எம்.ராஜனும் அதைக் கேட்க சிவாஜி தன் முகபாவங்களினாலேயே வேதனையைத் தெரிவிக்கும் காட்சி இது.பாடலைப் பார்ப்போம்:

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்

ராஜாராமன் நினைத்திருந்தான்

அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார் –

மிதிலைக்கு வந்திருந்தார் .

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்

இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள்

நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை மறுபுறம்

அவள் நிலைமை திரிபுறம்

கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே

அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

 

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை

அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீ ர் மறைத்தும் மறையவில்லை


rama garland

முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்

சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்

 

மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்.

ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்

ஜானகி கலங்கி விட்டாள்.

 

ஜானகி கலங்க கதாநாயகியும் கண்களில் நீர் விழ எழுந்து செல்கிறாள்.பாடல் முடிகிறது. பாடலின் பின்னணியில் அழகிய சித்திரக்காட்சிகளாக சீதையின் படமும் பல்லக்கும் பல்லக்கின் முன்புறமும் பின்புறமும் பலரும் செல்வதும் சித்தரிக்கப்படுகிறது.

ராமரின் கதை எந்தச் சூழ்நிலைக்கும்  ஏற்பக் கையாளப்பட முடியும் என்பதைச் சுட்டிக் காட்டும் பாடல் இது. நேயரின் விருப்பமாக இது இன்றும் கேட்கப்பட்டு ரசிக்கப்படுகிறது.

சுயம்வரத்தில் சீதை வரும் காட்சியை அமைத்த கம்பரின் காவிய வரிகளை முதலில் மேலே பார்த்தோம். திரைப்படக் காட்சிக்கேற்ப கண்ணதாசன் அமைத்த வரிகளையும் மேலே பார்க்கிறோம். ஒப்பிட்டு மகிழலாம்.

ராமரின் பெருமையே பெருமை!

 

– தொடரும்

ஏசு கிறிஸ்து செய்த பாத பூஜை!

1-jesus_washing_peter's_feet

பீட்டரின் பாதங்களை ஏசு கழுவுமோவியம்

ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 3

ஆய்வுக் கட்டுரை எண்: 1638; தேதி : 10 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன் என்ற முதல் இரண்டு பகுதி கட்டுரைகளில் அவர் பிறந்தது ஈசன்னியர் எனப்படும் யோகியர் (சந்யாசிகள்) ஜாதியில் என்பதையும், அவரது 18 ஆண்டு இளமைப் பருவம் குறித்து பைபிள் மவுனம் சாதிப்பது மர்மமாக உள்ளது என்றும், விவேகாநந்தர் கண்ட அதிசயக் கனவில் ஏசு என்று ஒருவர் இல்லை என்றும், அசோகர் பரப்பிய புத்தமத பழக்க வழக்கங்களை “சர்ச்” இன்று வரை பின்பற்றி வருகிறது என்றும் கண்டோம். அவ்விரு பகுதிகளையும் படித்துவிட்டு இந்த கடைசி பகுதியைப் படிப்பது பொருள் உடைத்தாம்.

பாத பூஜை

உலகம் முழுதும் முதலில் இருந்த மதம்- இந்து மதம்தான் என்றும் அதனால்தான் இந்த மதத்துக்கு சநாதன தர்மமென்று பெயர் என்றும் காஞ்சி மஹா ஸ்வாமிகள் போன்ற பெரியோர் சொல்லியதைப் படித்திருக்கிறோம். இதே போல இந்தியாவில் தோன்றி உலகம் முழுதும் பரவிய சம்ஸ்கிருத — தமிழ் மொழிச் சொற்களை உலகம் முழுதும் காண முடியும். எந்த வீடுகளுக்கு சங்கராச்சார்யார் போன்ற பெரியோர்கள் வந்தாலும் பாத பூஜை செய்வது வழக்கம். இதை இமயமலையில் ஆஸ்ரமத்தில் கற்றதனால் ஏசுவும் செய்கிறார். இதே போல 500 ஆண்டுகளுக்கு முன் வரைந்த ஓவியங்களில் ஏசு அஞ்சலி ஹஸ்தத்தில் கும்பிடுவதையும், பக்தர்கள் அதே போல அஞ்சலி ஹஸ்தமாக (கூப்பிய கைகள்) வணங்குவதையும் படங்களில் காணலாம். எனது இத்தாலிய, பிரெஞ்சு பயணங்களில் பல மியூசியங்களில் இத்தகைய சித்திரங்களைக் கண்டு இருக்கிறேன். இந்த பிளாக்-கில் வெளியிட்டும் இருக்கிறேன்.

பலர் அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதையும், அவரே ஸ்பர்ச தீக்ஷை — (குருநாதர் தலையைத் தொட்டு தனது சக்தியை பக்தனுக்கு ஏற்றுதல்) — பெறுவதையும், ஞான ஸ்னாநம் என்ற பெயரில் தீர்த்தம் வாங்கிச் சாப்பிடுவதும், ஆஷ் வெட்னெஸ்டே என்ற பெயரில் விபூதியின் மகிமையைப் பறை சாற்றுவதும் கிறிஸ்தவ மதத்தில் எஞ்சி நிற்கும் இந்து வழக்கங்களாம்.

padapuja

நாம் சொன்னதையே அவர்கள் செய்துவந்ததால் படித்த இந்து மக்களை பாதிரிமார்கள் மதம் மாற்ற முடியவில்லை. மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா கண்டம் முழுவதையும் மதம் மாற்றிய கிறிஸ்தவர்களும், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு முழுவதும் முஸ்லீம்கள் ஆக்கிய இஸ்லாமிய ராஜாக்களும் இந்தியாவில் எட்டு சதவிதமே மதமாற்றம் செய்ய முடிந்தது. ஏனெனில் அவர்களிடம் இந்துவுக்குக் கற்பிக்கும் விஷயங்கள் எதுவுமே இல்லை. எதைச் சொன்னாலும் இதோ இந்து மதத்தில் சொல்லியதைத்தானே நீங்கள் சொல்லுகிறீர்கள் என்று சுட்டிக்காட்ட முடிகிறது. ஆனால் இந்துக்களுக்கு உள்ள பரிபக்குவமும், உயர்ந்த மன நிலையும் அவர்களுக்கு இல்லாததாலும், ஏராளமாக – ஏ……. ர்ரா …..ரா…. ளள…. மா…. மாக (இன்னும் 100 தடவை ஏராளம் என்ற சொல்லைப் போட்டுக் கொள்ளுங்கள்) பணம் விளையாடுவதாலும் மத மாற்றம் ஒரு பிஸினஸ் ஆகிவிட்டது.

எங்கள் லண்டனில் மதம் ‘’மாற்றி’’னாலும், மதம் ‘’மாறி’’னாலும் காசு கிடைக்கும். வாரத்துக்கு ஒரு மசூதி உருவாகி வருகிறது. இந்தியாவின் எல்லைப் பகுதி முழுதும் வரிசையாக இப்படி மசூதிகள் உருவாகி வருவது குறித்தும் ஒரு கட்டுரை படித்தேன்.

KrishnaJesusAllahBuddhaareallsame

பாதி — ரியும், சாஸ்தி —- ரியும்!!

(நாங்கள் சின்னப் பையன்களாக இருந்தபோது என் தந்தை எங்களை மதுரை ஆதீனகர்த்தரிடம் அழைத்துச் செல்வார். அவர் யாழ்ப்பாணக்காரர். மிகவும் கற்றவர். இப்போது அவரில்லை. நிறைய கிறிஸ்தர்கள் மீண்டும் தாய் மதம் திரும்புவதை வாரம் தோறும் நடத்தி வந்தார். என் தந்தையும் தினமணியில் வாரம் தோறும் அதை வெளியிட்டு உதவுவார். ‘’இறந்தவர்கள் வாழும் நிலையும் அவர்களுடன் பேசும் முறையும்’’ என்ற புத்தகம் எழுதி ஆவி உலக ஆராய்ச்சி, ஆவிகளுடன் பேசுவது மூலம் அவர் பிரபலம் அடைந்தார். அவர் எங்களிடம் ஜோக் அடிப்பார். தம்பி! அவங்களையெல்லாம் கூட்டிட்டு வாங்க. அவங்க எல்லாம் பாதி+ரி. நாம எல்லாம், ஜாஸ்தி+ரி (கிறிஸ்தவ பாதிரிகளையும் பிராமண சாஸ்திரிகளயும் அவர் குறிப்பிடுகிறார்) அவர்கள் பாதி, நாம் முழுசு என்பார். காசு விஷயத்தில் மகா சிக்கனம். தம்பி! நம்மிடம் அருட் பிரசாதம் மட்டுமே உண்டு; பொருட் பிரசாதம் கிடையாது என்று சொல்லி ஒரு ‘’சிட்டிகை அளவு’’க்கு மட்டும் விபூதி தருவார். அந்த விபூதியோ தேவலோக விபூதி. பத்து நாட்களுக்கவது சுகந்த மணம் வீசும். அவர் இருந்த மடம் திருஞான சம்பந்தர் தங்கிய போது சமணர்கள் தீ வைத்த மடம். 1500 ஆண்டு பழமை உடைத்து!)

மண்டல கால விரதம்

பைபிள் முழுதும் 40 என்ற எண் சிறப்பிடத்தைப் பெறுகிறது. இந்துக்கள் ஒரு மண்டலம் என்பதை 40 அல்லது 45 என்று கணக்கிற்கொண்டு விரதங்கள் இருப்பர். மூன்று 40 ஆண்டுகள் = 120 ஆண்டுகள் —ஒரு மனிதனின் பூரண ஆயுள் என்று இந்து மத நூல்கள் விளம்பும். இந்த 40, 120 என்பன மோசஸ், ஜீசஸ் வாழ்க்கையிலும் பல இடங்களில் வருவதைக் காணலாம். இது மிச்சம் சொச்சம் என எஞ்சி நின்ற இந்து மத வழக்கங்களே. ஈஸ்டர் பண்டிகைக்கு முன் 40 நாள் விரதம் இருப்பதை இன்று கூட ஆர்த்தடாக்ஸ் சர்ச் பின்பற்றி வருகிறது.

namste jusus

பக்தர்கள் காலில் விழ, இந்து சந்யாசி போல, ஏசு வலது கையால்  ஆசி வழங்குகிறார்!

ஏசுத் தச்சன்

ஏசுவின் குலத் தொழில் தச்சுத் தொழில். அவரது தந்தையும் இதே வேலை செய்து வந்தார். 18 ஆண்டுக்காலம் இந்தியாவில் ரிஷி முனிவர்களிடம் உபதேசம் பெற்றுவிட்டு பாலஸ்தீனத்தில் உபதேசம் செய்வதைக் கண்ட மக்கள், ‘’அட! நம்ம தச்சன் மகனா இவன்?’’ என்று வியந்ததாக பைபிள் பகரும். கிரேக்க மொழி பைபிளில் ‘’டெக்டன்’’ என்ற சொல் இருக்கிறது. தக்ஷ என்ற சம்ஸ்கிருத சொல் கிரேக்க மொழியில் டெக்டன் என்றும் தமிழில் தச்சன் என்றும் மருவி நிற்கிறது. இன்று வரை நாம், மர வேலைகள் செய்பவரை தச்சன் என்ற சம்ஸ்கிருத சொல் மூலமே அழைக்கிறோம். பைபிளில் சம்ஸ்கிருதம் என்ற எனது இரண்டு பகுதி ஆங்கிலக் கட்டுரையில் கிதார் முதலிய இசைக்கருவிகள் எப்படி சம்ஸ்கிருதத்தில் இருந்து பைபிளில் குடியேறி உள்ளன என்று விரிவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியுள்ளேன் (ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க)

pada puja

பகவத் கீதையும் பைபிளும்

பகவத் கீதையில் உள்ள பல வசனங்கள் பைபிளில் அப்படியே உள்ளன. பாவ மன்னிப்பு – என்ற இந்து மதக் கொள்கையை பைபிள் அப்படியே ஸ்வீகரித்துக் கொண்டது. பிராமணர்கள் தினமும் மூன்றுதடவை செய்யும் சந்தியா வந்தனத்தில் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் வாயிலாக நான் செய்த பாவங்கள் எல்லாம் சூரிய ஒளியிலும், தீயிலும் எரிந்து அழியட்டும் என்று வேண்டி நீர் அருந்துவர். பிராமணர் அல்லாதார், புரோகிதர்களைக் கூப்பிட்டு பூஜை நடத்தும்போதோ, கோவில் பூஜைகளில் கலந்து கொள்ளும்போதோ புரோகிதர்கள் ‘’யானி கானி ச பாபானி’’ என்ற மந்திரத்தைச் சொல்லி ஈரேழு ஜன்மங்களில் செய்த பாபங்களையும் அழியச் செய்வர். இந்துக்கள் தினமும் செய்யும் பாவ மன்னிப்பு சடங்குகளை ‘சர்ச்’ எபோதோ ஒரு முறை மட்டும் செய்யும். இதுவும் எஞ்சி நிற்கும் இந்துமதப் பழக்கங்களில் ஒன்றே!

எல்லாம் எனக்கே (கடவுளுக்கே) அர்ப்பணம்

பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறார்:

யத் கரோஷி யதஸ்னாசி யஜ்ஜுஹோஷி ததாமி யதி

யத் தபஸ்யஸி கௌந்தேய த குருஷ்வ மதர்ப்பணம் – 9-27

பொருள்:–குந்தீ புத்ரனே! நீ எதைச் செய்தாலும், சாப்பிட்டாலும், எதை ஹோமம் செய்தாலும், என்ன தவம் செய்தாலும் – அவற்றை எல்லாம் எனக்கு அர்ப்பணம் செய்து விடு -9-27

இப்பொழுதும் கூட இந்துக்கள் எல்லா பூஜைகளையும் செய்துவிட்டு அதன் பலன்களை ‘’கிருஷ்ணார்ப்பணம் அஸ்து’’ என்று அவனுக்குக் கொடுத்து விடுவார்கள். இது பைபிளில் அப்படியே உள்ளது:

(I.Cor.x.31)’whether therefore ye eat or drink, whatever ye do, do all to the glory of God.’

asirvatha jesus

இந்துக்கள் போல தலையைத் தொட்டு ஆசீர்வாதம்! குருநாதர் கையில் தண்டம்.

கீதையில் உள்ள—

“சர்வ தர்மான் பரித்ஜ்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி, மா சுச: -18-66

பொருள்:— எல்லா அறங்களையும் பற்று இல்லாமல் ஒழித்து விட்டு என்னையே சரண் அடை. நான் உன்னை எல்லா பாபங்களில் இருந்தும் விடுவிக்கிறேன், வருந்தாதே! -18-66

இதுவும் பைபிளில் அப்படியே இருக்கிறது:

in Mathew ix.2. We read, Be of good cheer; thy sins be forgiven thee.’

வள்ளுவன் சொன்னது, விதுரன் சொன்னது!

மற்றவர்கள் தீயது செய்தால் அவர்களே வெட்கப்படும்படி நல்லதைச் செய். மற்றவர்கள் உனக்கு என்ன செய்யக் கூடாது என்று நீ நினைக்கிறாயோ அதை நீயும் பிறருக்குச் செய்யாதே என்று முதலில் சொன்னவர்— 5000 ஆண்டுகளுக்கு முன் சொன்னவர் – விதுரர்:

தம்மபதம், விதுரநீதி முதலிய நூல்களில் உள்ள கருத்தை பைபிளும் திருக்குறளும் பிற்காலத்தில் கையாண்டன.

ந தத் பரஸ்ய சந்தத்யாத் ப்ரதிகூலம் யதாத்மன: — 7-17, விதுர நீதி

தஸ்மாத் தர்ம ப்ராதீனேன பவிதவ்யம் யதாத்மனா

ததா ச சர்வபூதேஷு வர்திதவ்யம் யதாத்மனீ

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 167-9

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல் – குறள் 314

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல் – குறள் 318

Última_Cena_-_Juan_de_Juanes

படத்திலலிருவர் கைகூப்பி வணக்கம் செய்வதைக் காணலாம்.

இதுவும் பைபிளில் அப்படியே இருக்கிறது:

Jesus Christ also said :

Therefore all things whatsoever ye would that men should do unto you, do ye even so unto them (Matt.7,12)

கம்சனும் ஹெராட் மன்னனும்

கம்சன் குழந்தைகளைக் கொன்ற கதை ஹெராட் மன்னன் கதையிலும், கிருஷ்ணர் செய்த அற்புதங்கள் ஏசுவின் வாழ்விலும் இருப்பதை கடந்த 200 ஆண்டுகளில் பலரும் சுட்டிக்காட்டி இவை அனைத்தும் இந்தியாவில் இருந்து சென்ற கதைகளை கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்டனர் என்றும் எழுதியுள்ளனர்

சூரியனும் சந்திரனும் அக்னியும் பிரகாசிக்காத இடம் ஒன்று உண்டு. அங்கு எல்லோரும் அவரவர் பிரகாசத்திலேயே ஜொலிப்பார்கள். சொர்க்கலோகம் இப்படிப்பட்ட ஒரு இடம் என்று இந்துமத நூல்கள் நூற்றுக் கணக்கான இடங்களில் செப்புவதை பைபிளும் பயன்படுத்துகிறது

The Heaven described in Revelation xxi.23 is a city which had no need of the sun, neither of the moon to shine in it, for the glory of god did lighten it.’

கீழ்கண்ட இரண்டு ஆங்கிலப் புத்தகங்களில் இதுபோன்ற நூற்றுக் கணக்கான விஷயங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர்கள் அனைவரும், இவை அனைத்தும் இந்துக்களிடமிருந்தும் பௌத்தர்க ளிடமிருந்தும் கிறிஸ்தவர்களால் கடன்வாங்கப்பட்டவை என்றும் இயம்புவர்.

Indian Philosophy,  J.F.Kennedy

‘The Original Jesus’ written by E R Gruber and G Kersten

இந்த மூன்று பகுதிக் கட்டுரை இத்துடன் நிறைவு பெறுகிறது.

Jesu Krishna

இந்து கலைக்களஞ்சியம்: பிருஹத் சம்ஹிதா!

Brhat1

ஆய்வுக் கட்டுரை எண்: 1637; தேதி : 9 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

இந்துக்களின் விஞ்ஞான நம்பிக்கைகள், ஜோதிட நம்பிக்கைகள் அடங்கிய நூலின் பெயர் பிருஹத் சம்ஹிதை. சம்ஹிதை என்றால் தொகுப்பு என்று அர்த்தம். வராஹமிகிரர் என்ற பேரறிஞர், அவருக்கு முன் இருந்த காலத்திய செய்திகளை எல்லாம் தொகுத்தார். அதை பெரிய தொகுப்பு (பிருஹத் சம்ஹிதை) என்ற பெயரில் சம்ஸ்கிருதத்தில் எழுதினார். இதில் 106 தலைப்புகளில் அவர் தொகுத்துள்ள விஷயங்களைப் பார்த்தலேயே அவர் எவ்வளவு பெரிய அறிஞர் என்பது விளங்கும்.

வராகமிகிரர் ஜோதிடம் பற்றி பிருஹத் ஜாதகம் என்ற வேறு ஒரு நூலையும் எழுதியுள்ளார்.

இதைப் பார்த்தவுடன் சம்ஸ்கிருதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். ராமகிருஷ்ண பட் என்பவரும் வேறு பலரும் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளபோதிலும், பல இடங்களில் சொற்களின், ஸ்லோகங்களின் வியாக்கியானத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் காணலாம். உண்மையில் சம்ஸ்கிருதம் படித்தால் இதை ஒப்பிட்டு புதிய பொருளையும் காணலாம்.

domestic

தமிழ் படித்தவர்கள் சம்ஸ்கிருதமும் கற்றால் வேறு எவரும் செய்ய முடியாத செயற்கரிய செயல்களைச் செய்யலாம். எடுத்துக் காட்டாக வெள்ளி (வீனஸ்) கிரகத்துக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு பற்றிப் புறநானூற்றில் பல பாடல்கள் உள்ளது பற்றி நான் ஏற்கனவே ஆய்வுக் கட்டுரை எழுதினேன். இது மேல் நாட்டினரும் அறியாத விஷயம். வராகமிகிரருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே – சங்க இலக்கியத்தில் – இக்கருத்து உள்ளது. இவற்றை எல்லாம் ஒப்பிட்டு ஆராயலாம். ஏனெனில் தமிழில் உரை எழுதியவர்களும் பல செய்திகளைக் கூறுகின்றனர்.

வராகமிகிரர் தனக்கு முன் இருந்த பல அறிஞர்கள் பெயர்களை ஆங்காங்கே எடுத்துரைத்து அவர்களது கருத்தை ஒட்டியும் வெட்டியும் வாதாடுகிறார். எடுத்துக் காட்டாக பெண்கள் வைரங்களை அணியலாமா, கூடாதா? என்பது பற்றி அவர்  கூறுவதை அடுத்த கட்டுரையில் தருகிறேன். 22 ரத்தினக் கற்களின் பெயர்களைப் பட்டியலிட்டுவிட்டு, வைரம்- முத்து – மரகதம் – மாணிக்கம் ஆகிய நாலு கற்களுக்கு ஒவ்வொரு அத்தியாயம் ஒதுக்கி அற்புதமான விஷயங்களைச் சொல்லுகிறார். 1500 ஆண்டுகளுக்கு முன் அவற்றின் விலை என்ன என்ற பட்டியலையும் சொல்லுகிறார். அவர் சொல்லும் கார்சா பணத்தின் இன்றைய மதிப்பு நமக்குத் தெரியாவிடினும், பல ரத்தினக் கற்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது பயன் தரும்- இன்பம் பயக்கும்!!

விவசாயம், மற்றும் மரங்களுக்கு வரும் வியாதிகள், நிலத்தடி நீர் கண்டுபிடிப்பது, கோவில் கட்டுவது, விக்ரகம் வைப்பது, சகுன சாஸ்திரம், கட்டிடம் கட்டுவது, வீடுகளின் வகைகள், மலர்கள், யானை, குதிரை, பசுமாடுகள் தொடர்பான சாஸ்திரங்கள், மழை –வானிலை- மேகம் தொடர்பான சாத்திரங்கள், மன்னர்களின் சின்னங்கள் இப்படி அவர் தொட்டுக் காட்டாத விஷயமே இல்லை. இவர் சொல்லக் கூடிய அத்தனை நூல்களும் நமக்குக் கிடைத்தால் அது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கலாம். அழிந்து போன நூல்களை எண்ணி வருந்துவதை விட, இருக்கும் நூல்களை, இன்றைய விஞ்ஞான பிண்ணனியில் ஆராய்வது பலன் தரும்.

gems

இவர் சொன்ன 106 விஷயங்களையும், அவர் மேற்கோள் காட்டும் அறிஞர் பெருமக்களின் பட்டியலையும் இக்கட்டுரையின் ஆங்கில வடிவில் காண்க. அடுத்த சில கட்டுரைகளில் வராஹ மிகிரர் சொல்லும் அற்புத தகவல்களைத் தருவேன்.

இவர் வேதங்களைக் கற்று அறிந்தவர் என்பது ஆங்காங்கே குறிப்பிடும் மந்திரங்களில் இருந்து தெரிகிறது. இவர் ஒரு கணித மேதை- கவிஞரும் கூட. சாதாரண சோதிட விஞ்ஞான விஷயங்களை விளம்ப வந்தவர் திடீரென்று கவிதை மழை பொழிகிறார். இதை சம்ஸ்கிருதம் படித்தவர்களே ரசிக்க முடியும்.

அவர் இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அந்தக் காலத்திலேயே – கலைக் களஞ்சியம் என்னும் – என்சைக்ளோபீடியா போல — இவர் எழுதியதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம். நமக்கு முன்னால், கிரேக்கர்கள் இப்படிப்பட்ட நூல்கள் எழுதி உள்ளனர். நம்மிடம் இருந்த பல்லாயிரக் கணக்கான நூல்கள் முஸ்லீம் படை எடுப்புகளில் தீக்கிரையாக்கப் பட்டுவிட்டன. அது போக எஞ்சியதைக் கொண்டு பார்க்கையில் கிரேக்கர்கள், இத்துறையில் முன்னால் இருக்கலாம்.

வராகமிகிரர் எழுதியதை ஆல்பிரூனி (கிபி1000) என்ற அராபியர் அவரது அராபிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.