கேட்பது நாம்! பதில் சொல்வது அறிஞர்கள்!! (Post No.14,444)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,444

Date uploaded in London – –28 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

MOTIVATION ARTICLE PUBLISHED ON 22-3-25 IN KALKIONLINE 

 கேட்பது நாம்!  பதில் சொல்வது அறிஞர்கள்!!

ச. நாகராஜன்

1)   விமரிசனத்திலிருந்து தப்ப  முடியுமாதப்புவதற்கு என்ன செய்வது?

ஓ, முடியுமே! விமரிசனத்திலிருந்து நீங்கள் தப்பவேண்டுமென்றால் ஒரு வேலையையும் செய்யக் கூடாது. ஒன்றும் பேசக் கூடாது. ஒரு மனிதனாகவும் கூட இருக்கக் கூடாது.    – எல்பர்ட் ஹப்பர்ட்

2)   நம்மை எல்லையற்றவராகச் செய்வது எது?

கற்பனா சக்தி நம்மை எல்லையற்றவராகச் செய்கிறது. –  ஜான் மூர்

3)   எவ்வளவு சுமையை ஒருவன் தூக்க முடியும்?

சுமையின் அளவு குதிரையின் வலிமையைப் பொறுத்தது.   – தால்முட்

4)   வணிகம் எப்படிச் செய்ய வேண்டும்?

சகோதரர்கள் போலச் சேர்ந்து வாழுங்கள்; அன்னியர்கள் போல வணிகம் செய்யுங்கள்.  – அராபிய பழமொழி

5)   யாரைத் தவிர்க்க வேண்டும்?

மூன்றை நீங்கள் தவிர்ப்பது மிகவும் சிறந்தது. 1) தெரு நாய் 2) பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் 3) தனக்கு எல்லாம் தெரியும் தான் ஒரு மேதாவி என்று நினைப்பவன் – வேல்ஸ் பழமொழி

6)   எவன் திறமையுள்ளவன்?

எவன் ஒருவன் தான் திறமையுள்ளவன் என்று நினைக்கிறானோ அவன் திறமையுள்ளவனே.    – வர்ஜில்

7)   எவன் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ளவே மாட்டான்?

முட்டாளும் செத்துப்போனவனும் அபிப்ராயத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

–    ஜேம்ஸ் ரஸ்ஸல் லோவெல்

8)   வெற்றிக்கான முதல் விதி எது?

தன்னை நம்புவதே வெற்றி பெறுவதற்கான முதல் விதி. – ரால்ப் வால்டோ எமர்ஸன்

9)   எதற்கு விதி தேவையில்லை?

நேர்மைக்கு விதியே தேவையில்லை –  ஆல்பர்ட் காமஸ்

10) அதிர்ஷ்டம் யாருக்கு வரும்?

தைரியசாலியையே அதிர்ஷ்டம் தேடி வரும். – வர்ஜில்

11) யாருடைய தவறை மன்னிக்கக் கூடாது?

தன்னுடைய தவறைத் தவிர மற்ற அனைவருடைய தவறையும் மன்னிக்கலாம்.- மார்கஸ் போர்ஸியஸ் கடோ

12) சோதனை வரும் போது எது  முக்கியம்?

சோதனைக் காலத்தில் ஒரு அவுன்ஸ் விசுவாசமானது  ஒரு பவுண்ட் புத்திகூர்மையை விட மேல். – எல்பர்ட் ஹப்பர்ட்

13) வெற்றி அளக்கப்படுவது எப்படி?

இலக்கை நோக்கிக் குறிபார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதாது..இலக்கை நோக்கி தவறாமல் அம்பை எய்து விட வேண்டும். அது தான் வெற்றியின் அடையாளம்  – இத்தாலிய பழமொழி

14) எதற்குக் கெட்ட காலம் கிடையாது?

நல்ல கருத்துக்களுக்கு கெட்ட காலமே கிடையாது. ஹெச். கார்டன் செல்ஃப்ரிட்ஜ்

15) எப்படி மற்றவருடன் பழகுவது?

ஒருபோதும் காது கேளாதவனிடம் முணுமுணுக்காதே; கண் தெரியாதவனிடம் கண் சிமிட்டாதே! அவ்வளவு தான்! –  ஸால்வேனியா பழமொழி

**

Pictures of 2500 Indian Stamps!- Part 21 (Post 14,443)


Written by London Swaminathan

Post No. 14,443

Date uploaded in London –  27 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART  21

I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

UDAYASHANKAR, KATHAKALI GURU, RUBENS, MOTHER  AND BABY MINT, GANDHI KISSING MINT, MOHAMMED ALI, PUNJAB REGIMENT, FOUR PAINTINGS MINT, BHAGAVAD GITA, RAMCHARIT MANAS, DEENDAYA UPADHYAYA, SHYAMAPRASAD MUKERJEE, ANNAI, APPLE ORANGE, AGRI EXPO, WHEAT MINT

–Subham—

Tags-Pictures of 2500 Indian Stamps ,Part 21, UDAYASHANKAR, KATHAKALI GURU, RUBENS, MOTHER  AND BBY MINT, GANDHI KISSING MINT, MOHAMMED ALI, PUNJAB REGIMENT, FOUR PAINTINGS MINT, BHAGAVAD GITA, RAMCHARIT MANAS, DEENDAYA UPADHYAYA, SHYAMAPRASAD MUKERJEE, ANNAI, APPLE ORANGE, AGRI EXPO, WHEAT MINT

நள்ளிரவில் நான் எழுதிய கவிதை (Post.14,442)

Written by London Swaminathan

Post No. 14,442

Date uploaded in London –  27 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு ; லைப்ரரியில் புஸ்தகம் எடுத்தால் இடையிடையே பென்சிலால் சிறிய ஓரெழுத்துக் குறிப்புகள் எழுதுவேன்; சில நேரங்களில்ஆங்கிலப் புஸ்தகத்தில்  தமிழிலும் எழுதுவேன் . சில நாட்களுக்கு முன்னர் லண்டன் பல்கலைக்கழக லைப்ரரிக்குச் சென்று நான்கு புஸ்தகங்களை எடுத்தேன் ; ஜான் ப்ரோ JOHN BROUGH என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸம்ஸ்க்ருதக் காதல் கவிதைகளின் தொகுப்பு அந்தப் புஸ்தகம்; நான் முதல் தடவையாக அதை எடுப்பதாக நினைத்துக்கொண்டு கடைசிப்பக்க இண்டெக்ஸ் பகுதிக்குச் சென்றேன்; என் கையெழுத்தில் 10-3-1999 தேதி எழுதப்பட்டிருந்தது என்ன அதிசயம் அதே புஸ்தகத்தை கால் நூற்றாண்டுக்குப் பின்னர் நான் எடுத்திருக்கிறேன் . உள்ளே புரட்டிப் பார்த்ததில் என்னுடைய ஓரெழுத்துக் குறிப்புகள் இருந்தன

ஜான் ப்ரோ JOHN BROUGH அந்த நூலில் முன்னுரையில் கவிதை என்றால் என்ன, யாப்பு என்றால் என்ன , மொழிபெயர்ப்பில் என்ன சிக்கல்கள் உள்ளன என்பதையெல்லாம் மிக அழகாக எடுத்துக்காட்டுகளுடன் வெளியிட்டுள்ளார் அவை கிரேக்க, லத்தீன், ஆங்கில மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டவை ஒரு ஜெர்மன் மொழிக்கவிதையை  ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கலாம் என்பதையும் காட்டியுள்ளார் .எனக்குள்ள கெட்ட பழக்கங்கள் ; இரவில் ஒன்பது மணிக்கே தூங்கப் போய் காலை நாலு மணிக்கு எழுந்திருப்பதாகும்; சமீப காலமாக இன்னும் ஒரு கெட்ட பழக்கமும் வந்துவிட்டது ;நள்ளிரவில் அல்லது இரவு ஒரு மணி வாக்கில் எழுத்து ஒரு மணி நேரத்துக்கு ஏதாவது படித்தல் அல்லது நான் சேகரித்த 20,000 தபால்தலைகளின் ஆழகினை ரசித்தல் போன்றவற்றில் ஈடுபடுவேன்; அப்படிப் படித்தபோது என்ன நிகழந்தது என்பதைச்  சொல்கிறேன்:

ஜான் ப்ரோ JOHN BROUGH மொழிபெயர்த்த ஒரு எறும்புக் கவிதையை படித்தேன். நள்ளிரவில் எழுந்த நான் அந்த எறும்புக் கவிதையை படித்தேன் . மீண்டும் தூக்கம் கண்களை சிமிட்டும் முன்பாக அதைத் தமிழில் மொழிபெயர்த்தேன் ; இதோ ஜெர்மன், ஆங்கில மொழிபெயர்ப்பும் என்னுடைய தமிழ்த் தழுவல் கவிதையும்

IN HAMBURG LEBTEN ZWEI AMEISEN

DIE WOLLTEN  NACH AUSTRALIEN REISEN

BEI ALTONA AUF DER CHAUSSEE

DA TATEN IHNEN DIE BEINE WEH

UND DA VERZICTETEN SIE WEISE

DANNAUF DEN LETZTEN TEIL DER REISE (German)

MEANING

In Hamburg there lived two ants who made up their minds to travel to Australia. Then, on the pavement at Altona  (just outside Hamburg) their feet hurt; and thereupon they sensibly  gave up the last part of the journey.

ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகரில் வாழும்  இரண்டு எறும்புகள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடிவுசெய்தன . நகரின் வெளிப்புறத்துக்குச் சென்றபோதே கால்கள் வலி எடுத்தன உடனே அடுத்த பகுதி பயணத்தை புத்திசாலித்தனமாகக் கைவிட்டன.

இதை அப்படியே மொழிபெயர்த்தால் ஆங்கிலம் படித்தோருக்கு முழு வீச்சு புரியாது என்பதற்காக ஜான் ப்ரோ பின்வருமாறு ஆங்கிலத்தில் எழுதுகிறார்

Two ants who lived in London planned

To walk to Melbourne overland

, but footsore in Southampton Row

When there were still some miles to go,

They thought it wise not to extend

The journey to the bitter end. (English)

POEMS FROM THE SANSKRIT; TRANSLATED WITH INTRODUCTION BY JOHN BROUGH; PENGUIN BOOKS

கவிதையில் எதுகை, மோனை வருவதற்காக ஐயாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஆஸ்திரேலியாவை சம்பந்தப் படுத்துகிறார்கள்; தேசப்பட புஸ்தகத்தில் இந்த இடங்கள் எங்கே, எங்கே உள்ளன என்று பார்த்தால் கவிதையின் முழுத்தாக்கம் தெரியும்.

இதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்று இரவு ஒரு மணிவாக்கில் யோசித்தேன்; வேகமாகப் பேனாவை எடுத்து ஒரு தாளில் எழுதினேன். இதோ அந்தக் கவிதை

சென்னை எறும்பிரண்டின் பயணம் திரு

வெண்ணையை நோக்கி நடந்தனவே வேகமாக (ஆனால்)

எண்ணெயில் சிக்கிக்கொண்டன கால்கள்  (அந்தோ|)

என்னைப் பாட  வைத்தது வெகு சோகமாக

எதுகை, மோனைகளை தடித்த எழுத்துக்களில் காட்டியுள்ளேன்.

–subham—

Tags – ஜான் ப்ரோ, நள்ளிரவில், நான் எழுதிய,  கவிதை, ஜெர்மன் , மொழிபெயர்ப்பு

London Wonders Never Stop – My Latest Book

நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் book title

முன்னுரை

மகாராஷ்டிர கோவில்கள் , கர்நாடக கோவில்கள் , ஆந்திர கோவில்கள் பற்றி மூன்று புஸ்தகங்களை எழுதி வெளியிட்ட பின்னர் பல கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது ; சில கோவில்கள் ஏற்கனவே சென்ற கோவில்கள்; மீண்டும் சென்றேன்; புதியன கண்டேன்; ஏனையவை புதிய கோவில்கள் . இவைகளையெல்லாம் தொகுத்தால் ஆஸ்திரேலியாசிங்கப்பூர்மலேஷியா ஆந்திரம்= தமிழ் நாடு (தென் இந்தியா)  என்ற  நான்கு நாடுகளை குறிப்பிட வேண்டியுள்ளது ; ஆஸ்திரேலிய கோவில்கள் மூன்றும் ஏற்கனவே ஆஸ்திரேலிய புஸ்தகத்தில் வந்தாலும் கோவில்கள் பற்றிய புஸ்தகத்தில் ஆலய விஷயம் இருக்க வேண்டும் என்று சேர்த்துள்ளேன்; மற்றவை புதியவை.

கடவுள் பெயரை எத்தனை முறை சொன்னாலும் கேட்டாலும் புண்ணியம்தான் . இதுவரை இந்தக் கோவில்களை பார்க்காதோருக்கு இது ஒரு கைடு/ வழிகாட்டி நூல் அல்லது ஆற்றுப்படை நூலாகும். மேலும். எந்தக் கோவிலுக்குப் போகும் முன்னரும் அதன் சிறப்புகளை அறிந்து சென்றால் குறுகிய நேரத்தில் நிறைய பலன்களைப் பெறலாம். இறைவன் புகழ் மட்டுமின்றி கட்டிடக் கலை, சிற்பக் கலை, கல்வெட்டு , இடர்ப்பாடுகள் என எத்தனையோ விஷயங்களை நினைவிற்கொண்டு எழுதினேன். ஆனால் இது முழுவதும் சொன்னதாகாது;. சொல்லாமல் விட்ட புராணக் கதைகள் , நம்பிக்கைகள் ஆகியனவும் இருக்கின்றன. அவற்றை அந்த ஊர் மக்களிடமிருந்து நீங்களே அறிவீர்கள் .

கோவில்களைத் தவிர பல ஆஸ்ராமங்களுக்கும், சித்தர் சமாதிகளுக்கும் சென்றுவந்தேன் ; ஆந்திரத்தில் சத்ய சாய்பாபாவைத்  தரிசிக்க புட்டபார்த்திக்கு பல முறை சென்றேன்; மந்திராலயத்திலுள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் சமாதிக்கும்  சென்றுவந்தேன். அந்த அனுபவங்களைத் தனியாக எழுதுவேன் .

படிப்பதோடு நில்லாமல் பயணம் செய்யுங்கள்; காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள். உடல் வலு ,மன வலு, பண பலம் எல்லாம் இருந்து,  புயல்- மழை இல்லாமல் இருந்தால், உடனே புறப்படுங்கள் .நான் ஆஸ்திரேலியா வரை சென்று இடையே இந்தியா, சிங்கப்பூர் மலேஷியாவுக்கும் சென்றதால்- 45,000 கிலோமீட்டர் பயணம் செய்ததால்– உடல் எடையில் ஏழு கிலோ குறைந்தது! இது ஒரு போனஸ். உங்களுக்கும் நிறைய போனஸ் கிடைக்கட்டும் ; அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

ஏப்ரல் 2025

swami_48 @yahoo.com

swaminathan.santanam  @ gmail.com

நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் book title

பொருளடக்கம்

1.பத்து மலை முருகனைப் பார்க்க மலேசியாவுக்கு வாருங்கள்!

2.சிங்கப்பூர் வீர மா காளி அம்மன் கோவில் – கார்த்திகைத் திருவிழா 

3.ஆஸ்திரேலியாவில் 50 இந்துக் கோவில்கள்

4.நான் பார்த்த ஆஸ்திரேலியக் கோவில்கள்

5.ஆஸ்திரேலியாவில் அழகான சிவன் கோவில்

6.ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்!

8.பஞ்சபூத தலங்களை நினைவில் வைக்க ஒரு பாடல்

9.கும்பேஸ்வரர் கோவிலில் மீண்டும் நல்ல தரிசனம்

10. கடவுள் இருக்கும் இடம் பாஸ்போர்ட் பை !

11.திருமீயச்சூர் கோவிலுக்கு மீண்டும் பயணம்!

12.காஞ்சீபுரத்தில் திவ்ய தரிசனம்

13.வைத்தீஸ்வரன்கோவிலில் அப்பனும் , சுவாமிமலையில் மகனும் தரிசனம்!

14.மஹாரண்யத்தில் முரளீதர சுவாமிகள் தரிசனம்

15.சென்னை நங்கநல்லூர் கோவில்கள்

16.கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் தரிசனம்!

17.பரிக்கல் நரசிம்மர் கோவில்- மீண்டும் விஜயம் !

18.காணக் கண் கோடி வேண்டும் கங்கைகொண்ட சோழபுரம் நடராஜர் புன்சிரிப்பு !

19..கடப்பாவில் முஸ்லீம்கள் வணங்கும் விஷ்ணு கோவில்

20.ராயசோட்டி வீரபத்ர சுவாமி கோவில்

21..யாகந்தி உமாமஹேஸ்வரர் கோவில்

22. ஆக்கிரமிக்கப்பட்ட ராமர் கோவில்:

23.காகிநாடா கோவில்கள்

24.நெல்லூர் கோவில்கள்

25.அந்தர்வேதி, அரசவல்லி, முரமல்ல கோவில்கள்

27.உண்டவல்லி குகைக் கோவில்

28.குடிமல்லம் சிவன் கோவிலில் அதிசய உருவம் !

42.ஹேமாவதியில் 4 நுளம்ப வம்ச கோவில்கள்

29.சோமபாலம்/ சோமபால்யம் கோவில்

30.கபிலேஸ்வரம் சிவன் கோவில்

31.பிக்கவோலு விநாயகர் கோவில்

32.பீமாவரம் கோவில்கள்

33.முதலில் வெளியான ஆந்திர கோவில் நூலின் பொருளடக்கம்

*******

அட்டைப்  படத்தில் மலேஷியாவில் உள்ள  பத்துமலை முருகன் (Batu Caves Temple) கோவில் படம் உள்ளது.

Buddhist Temple in Australia

Title – நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள்  

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – April 2025

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

+ 44 07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 140+2 Tamil and English Books.

Shiva Temple, Australia 

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

Voltaire of Kashmir – Poet Kshemendra (Post No.14,441)

Compiled by London Swaminathan

Post No. 14,441

Date uploaded in London –  27 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

R S Pandit who translated Kalhana’s Rajatarangini from Sanskrit into English praised poet Kshemendra as Voltaire of Kashmir. He added more information about the poet in his footnote to one of the slokas in the book.

“Kshemendra was of a wealthy parentage, well-educated and had travelled extensively abroad. Although he was born within the fold of Saivism he had been drawn towards Vaishnavism owing to his studies with Soma Bhagavata .  His unbiased mind led him to the study of Buddhism which he esteemed very highly. A number of his works have survived, a list of which is given by Pandit M S Kaul . According to him Kshemendra lived in the period of 990-1065 CE.

The Narmamala written by the poet is a remarkable work in Sanskrit language in the style of Voltaire . Kshemendra is bitterly critical of government officials of his day – Kayasthas , but with regard to the numerous other caricatures and scenes from the daily life of the period his sarcasm is much less bitter and often Addisonian. He tells us that he was the first person to render into Sanskrit, the work of Gunadhya , Brhat-Katha or Great Story which was in Pisaca dialect . The work composed in ancient Pushto in the first century CE  must have rivalled Mahabharata which has 100 000 verses.

One of Kshemendra’s strikingly original poems which is extant in the Samayamatrka describing the rakish progress of a courtesan throughout the Kashmir valley.  The various scenes of the courtesan Kankali’s thrilling adventures  can all be easily traced  on the map.

Kshemendra was a lover and patron of the stage and a frequent play-goer. Kashmir remained the refuge of the Indian theatre after it had ceased to exist in India. In his work, Kavi Kanthabharana , Kshemendra advises aspirants  to poetic frame to improve their taste by the study of current theatrical representations. At the end of his book, the Sanskrit drama, Professor A B Keith referring to the work of Kshemendra adds

“doubtless the Mohammedan conquest seriously affected the vogue of the classical drama , which was obnoxious to the Mohammedan rulers is being closely identified both with the national religion and the national spirit of India. The kings, who had been the main support of the actors and poets alike , disappeared from their throne or suffered reverses in fortune. The tradition of dramatic performances gradually vanished”.

Kalhana in his Rajatarangini criticised Kshemendra in sloka 1-13

“While owing to incompressible lack of care in the work of Kshemendra, known as the list of kings, even a portion of it is not free from error, although it is the composition of a poet”.

***

We have lost many of Kshemendra’s works. Now we have the following books:

Abridgements

·         Ramāyaṇamanjari 

·         Bhāratamanjari 

·         Brihatkathāmanjari 

·          Brihatkatha 

·          

Poetics

·         Auchitya Vichāra Charchā

·         Kavikanthābharaṇa

·         Suvrittatilaka

Satires

·         Kalāvilasā — “A Dalliance with Deceptions”

·         Samaya Mātrikā — “The Courtesan’s Keeper”

·         Narmamālā — “A Garland of Mirth”

·         Deśopadeśa — “Advice from the Countryside”

·          

Didactic works

·         Nitikalpataru

·         Darpadalana

·         Chaturvargasaṃgraha

·         Chārucharya

·         Sevyasevakopadeśa’

·         Lokaprakāśa

·         Stūpāvadāna 

·          

·         Devotional works

·         Avadānakalpalatā 

·         Daśavataracharita 

·          

·         Historical Work

·         Nrpavali

Fourteen other works are known only from references in other literature.

***

Humour

Kshemendra’s “Kalaavilasa deals humorously with the follies of men. In “Desopadesa”, a miser wanting to take his wealth with him after death ( A lawyer may advise that a cheque may be placed in his coffin!).

***

From Wisdom Library website:

Kṣemendra (क्षेमेन्द्र) (11th century) is one among the Kashmiri scholars who glorified the legacy of rhetorics with a new interpretation of the soul of poetry namely aucitya. He is not only a poet but also a scholar of high repute. His compositions focus on a wide range of topics which mark his in depth knowledge on various subjects including treatises on poetics and prosody. He composed Kāvyas, Mahākāvyas, a drama, many didactic poems, poetical epitomes of the Rāmāyaṇa, the Mahābhārata and Bṛhatkathā of Guṇāḍhya (which is lost to us).

Vyasadeva

Kṣemendra was otherwise known as Vyāsadāsa as most of the colophons of his works attribute to him. He was the son of Prakāśendra, grandson of Sindhu and father of Somendra and also the brother of Cakrapāla. He was also the descendant of Narendra, the minister of King Jayāpīḍa. Kṣemenda was the disciple of Abhinavagupta, and Somapāda, who was well versed in Bhāgavata. He also studied under Gaṅgaka and Vīryabhadra (a Buddhist). He was the preceptor of Bhaṭṭa Udaya Siṃha and prince Lakṣmaṇāditya.

***

Kshemendra (c. 990 – c. 1070 CE) was a Kashmirian poet of the 11th century, writing in Sanskrit. Born into an old, cultured, and affluent family, both his education and literary output were broad and varied. He studied literature under “the foremost teacher of his time, the celebrated Shaiva philosopher and literary exponent Abhinavagupta”. He also studied — and wrote about — both Vaishnavism and Buddhism.

Kshemendra’s literary career extended from at least 1037 (his earliest dated work, Brihatkathāmanjari, a verse summary of the lost “Northwestern” Bṛhatkathā; itself a recension of Gunadhya’s lost Bṛhatkathā — “Great Story”) to 1066 (his latest dated work, Daśavataracharita, “an account of the ten incarnations of the god Visnu”). In addition to the genres listed below, Kshemendra also composed plays, descriptive poems, a satirical novel, a history, and possibly a commentary on the Kāma Sūtra (all now known only through references in other works).

***

More information is available from Ksemendra – The Peoples’ Poet

Written by  Prof. K. N. Dhar

–subham—

Tags- Kshemendra, Kashmir, Poet, satirist, dramatist, Voltaire, Brhatkatha , Vyasadeva

அதிகம் டிவி பார்ப்பதினால் ஏற்படும் 15 தீய விளைவுகள்! (Post No.14,440)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,440

Date uploaded in London – –27 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹெல்த்கேர் இதழில் ஏப்ரல் 2025 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

நெடுநேரம் டிவி பார்ப்பவரா? அபாய எச்சரிக்கை இது!

அதிகம் டிவி பார்ப்பதினால் ஏற்படும் 15 தீய விளைவுகள்! 

ச. நாகராஜன் 

எப்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை – 15 தீங்குகள் இதனால் ஏற்படும்!

என்னென்ன தீய விளைவுகள் – இதோ பார்க்கலாம்!

1)      உடல் எடை கூடுதல் : தொலைக்காட்சியை ஒரு இடத்தில் இருந்து உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தால் உடல் எடை கூடும். குண்டானதற்கு விசேஷமாக ஒரு காரணத்தை நீங்கள் தேட வேண்டிய அவசியமே இல்லை.

2)    தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து  வெளிவரும் ஒளியானது மெலடோனின் என்ற ஒரு முக்கியமான ஹார்மோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. (Suppresses the production of the key hormone – Melatonin). இது பாலின முதிர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும்.

3)    உடலின் இயல்பான எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். குறைந்த அளவே மெலடோனின் இருந்தால் அது உடல் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும். மரபணுக்களில் சிதைவு ஏற்படும். அதனால் கேன்ஸர் அபாயம் ஏற்படும்.

4)    குறைந்த அளவே மெலடோனின் இருந்தால் பூப்பெய்துவதை காலத்திற்கு முன்னாலேயே ஏற்படுத்தும். உடல் உறுப்புகளை ஊக்குவிப்பதால் தூக்கம் வராது.

5)    உடல் கொழுப்பு அதிகமாவதால் ஆடிஸம் வரலாம். ஏனெனில் லெப்டின் மற்றும் க்ரெலின் கொழுப்பைக் கூட்டி பசி உணர்வைத் தூண்டும். (Hormones Leptin and Ghrelin produce fat and boost appetite.)

6)    கவனக்குறைவு எல்லாவற்றிலும் ஏற்படும். கவனத்தை ஊக்குவிக்கும் மூளை செல்கள் பாதிக்கப்படும்.

7)    படிப்பதில் கஷ்டம் ஏற்படும். இளமையிலேயே மந்தமான புத்தி ஏற்படும்.

8)    தொலைக்காட்சியைப் பார்த்தக் கொண்டே உணவை உண்பதால் அதிக கலோரிகள் உள்ள உணவு உள்ளே செல்வதால் டைப் 2 டயபடீஸ் ஏற்படும்.

9)    டி.வி. பெட்டியிலிருந்து வெளி வரும் அலைகள் தோலில் உள்ள

MAST CELLSகளைப் பாதிப்பதால் தோலின் எதிர்ப்பு சக்தி போய் வியாதிகள் உருவாகும்.

10. அதிக கொலஸ்ட்ரால் உருவாகும். ஏனெனில் உடலின் இயக்கத்தை மந்தப்படுத்துவதால் குழந்தைகளிடம் இது ஏற்படும்.

11. ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் இருக்கலாம்,  ஆனால், டிவி பார்ப்பதானது மெடபாலிஸம் எனப்படும் வளர்சிதைமாற்றத்தை வெகுவாக பாதிக்கும்.

12. அருகிலிருந்து பார்த்துக் கொண்டே இருப்பதால் கிட்டப்பார்வை கோளாறு ஏற்படும்.

13. மிகுதியாகப் பார்ப்பது அல்ஜெமீர் வியாதியில் கொண்டுபோய் விட்டு விடும்.

14. நியூஜிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்ந்து டிவி பார்க்கும் குழந்தைகள் 26ம் வயதில் கல்வியில் மிகவும் பின் தங்கி குறைந்த மதிப்பெண்கள் பெறுவதைக் காட்டுகின்றன.

15. குறைந்த நேர கவனம் மட்டுமே கொள்ள முடிவதால் ATTENTION DEFICIT HYPERACTIVIRY DISCORDER எனப்படும் வியாதி உருவாக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு உண்டு.

ஆகவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை கண்டிப்பாக அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

டாக்டர் சிக்மன் (Dr. Aric Sigman – British Psychological Society) நீண்ட கால ஆய்வுகளை நடத்தி இந்த முடிவுகளை அறிவித்ததை மேற்கொண்டு செய்யப்பட்ட பல ஆய்வுகள் ஆமோதிக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கு முன்னர் 1995ல் ஒரு தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் ஏ.ஜே. வாக்கர் மற்றும் டாக்டர் சச்சின் ஷா ஆகிய இரண்டு புனே நகரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் டிவி பார்ப்பது பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

வன்முறைக் காட்சிகள், ஆபாசக் காட்சிகள் பார்ப்பதானது அமிலத்தன்மை கூடுதல், அஜீர்ணம், உயர் அழுத்தம், தீவிர தலைவலி

உள்ளிட்ட பல வியாதிகளை உருவாக்கும் என்பதை ஆய்வின் முடிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறும் வியாதிகளின் பட்டியல் : Acidity, Indigestion, Palpitartion, Dyspnoea, Hypertension, Ulcerative Colitis, Severe Headache, Eye Strain and even Schizophrenia and depressive psychoneurosis!

இதைத் தவிர பெண்கள் அதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க்கும்போது அவர்களுக்கு ஹார்மோன்களில் சமச்சிர்தன்மை போய் பல வித வியாதிகளையும் தரும்.

சீரியலே கதி என்று இருக்கும் பெண்மணிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக கர்ப்பிணிகள் எக்ஸ்ரே கதிர்களை அதிகமாக எப்போதும் தங்கள் மீது பாய்ச்சிக் கொண்டே இருப்பதால் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு சொல்லவொண்ணா தீங்குகளைத் தருவர்.

உடல்நலம் இப்படி பாதிக்கிறது என்றால் மனநலம் பாதிப்பது என்பது இன்னொரு பெரிய விஷயம்.

குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற தன்மை போகிறது. ஆண்களையும் பெண்களையும் இது உளவியல்,  மற்றும் உடலியல், ரீதியாகப் பாதிப்பதோடு ஒழுக்கத்திலும் பாரம்பரியப் பழக்கங்களை விட்டு விடுவதற்கான காரணமாகவும் அமைகிறது. 

ஆகவே பெற்றோர்கள் முதலில் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். பின்னர் குழந்தைகளுக்கு இது பற்றிய விழிப்புணர்ச்சியை ஊட்ட வேண்டும்.

***

Pictures of 2500 Indian Stamps!- Part 20 (Post No.14,439)

Written by London Swaminathan

Post No. 14,439

Date uploaded in London –  26 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I have been collecting stamps for over 60 years. I have decided to post all the 2500++++ Indian stamps, part by part.

இந்தியா வெளியிட்ட தபால்தலைகளை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சேகரித்து வருகிறேன். 2500 தபால்தலைகளையும் பகுதி பகுதியாக வெளியிடுகிறேன் .

Here are stamps of India:

ALBERT EINSTEN, E V RAMASWAMY NAICKER, FOUR MORE NEW PAINTINGS, STAMP EXHIBITION, CHILDREN’S DAY, SENAPATI BAPAT, CASHEW NUTS, APPLE, FIVE VEENAS, ASIANA 77, MOTHER AND BABY, PAEDIATRICS CONFERENCE  LEO TOLSTOY, J POOLEY, UNICEF, RAJAJI, GANDHIJI KISSING , RUSSIN REVOLUTION, CHARLI CHAPLIN

–SUBHAM—

TAGS- ALBERT EINSTEN, E V RAMASWAMY NAICKER, FOUR MORE NEW PAINTINGS, STAMP EXHIBITION, CHILDREN’S DAY, SENAPATI BAPAT, CASHEW NUTS, APPLE, FIVE VEENAS, ASIANA 77, MOTHER AND BABY, PAEDIATRICS CONFERENCE, LEO TOLSTOY, J POOLEY, UNICEF

 London Wonders Continue…142 books by One Person!

London Swaminathan’s latest book on Foreign Proverbs Vs Tamil Proverbs

ABOUT THE BOOK AND THE AUTHOR 

Title – வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

Book Title

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – April 2025

Subject – Culture

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

+ 44 07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 140+2 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

 வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

         Book Title

முன்னுரை

பழமொழிகள் புழங்காத நாடு உலகில் இல்லை ; அனுபவம் மிக்கவர்கள் அழகாக, சுருக்கமாக அந்தக் காலத்தில் சொன்னதை மக்கள் நினைவு வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் வருகையில் பயன்படுத்துகிறார்கள் அந்தக் காலத்தில் எழுத்தில் கொணர வழி இல்லாததால் நிறைய அழிந்து போய்விட்டன. இப்போது நல்ல முன்னேற்றம்! எல்லாம் எழுத்தில் வந்ததோடு பல நாட்டுப் பழமொழிகளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழவும் முடிகிறது . பல பழமொழிகளைப் படித்தவுடன் நான் அவைகளை ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தேன்; அந்தத் தொகுப்பு இதில் இடம்பெறுகின்றன.

வெளிநாட்டுப் பழமொழிக் கதைகள் மிகவும் சுவையாக உள்ளன ; மேலும் வெளிநாட்டுப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் இடையே வியப்பான ஒற்றுமையும் உளது .

பழமொழிகள் விஷயத்தில் தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும்  தனி இடம் உண்டு. தமிழில் உள்ள இருபதாயிரம் பல மொழிகளை மூன்று வெள்ளைக்காரர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொகுத்து வெளியிட்டுவிட்டனர். சம்ஸ்க்ருதத்தில் காளிதாசன் , பாஷா, சாணக்கியன்  முதலியோர் நூல்களில் காணப்பட்ட பழமொழிகள் போன்றவை தனித்தனியே வந்துவிட்டன. ஆனால் சுபாஷிதம் என்ற பெயரில் இருபதாயிரத்துக்கும்  மேலான சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் அந்தக் காலத்திலேயே அச்சேறிவிட்டன.  இவை எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் சம்ஸ்க்ருதத்திலும் மட்டுமே கிடைக்கின்றன. தமிழில் இன்னும் எவ்வளவோ செய்யவேண்டிய பணிகள் இருப்பதை இது காட்டுகிறது;  எனது ‘பிளாக்’கில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பழமொழிகளும் நூற்றுக் கணக்கான சுபாஷித ஸ்லோகங்களும் வெளியாகியுள்ளன. பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் யானைகள் பற்றிய 200 பழமொழிகள் ; கழுதை, நாய் குதிரை பற்றிய பழமொழிகள்  என்றெல்லாம் தனித்தனியே கட்டுரைகள் எழுதினேன். இந்த நூலில் வெளிநாட்டுப் பழமொழிகளைத் தமிழ்ப் பழமொழிகளுடன் ஒப்பிட்டுள்ளேன். படித்து மகிழுங்கள் .

முதல் பத்து கட்டுரைகளுக்குப் பின்னர் பொதுவான பழமொழிக் கட்டுரைகளும் , பிற கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. புத்தகம் மிகவும் சிறியதாகிவிடக் கூடாதே என்பதைக் கருத்திற்கொண்டு இவைகளைச் சேர்த்தேன் ஆனால் சுவையில் குறை இராது. 

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

ஏப்ரல் 2025

swami_48 @yahoo.com

swaminathan. santanam @gmail.com

 வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

Book Title

பொருளடக்கம்

 1.உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்

2.பீமன் பற்றிய பழமொழி!

3.அர்ஜுனன் கதையும் சீனப்பழமொழியும்

4. ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது: இரண்டு கதைகள்

5.சீனக் கதை: செவிடன் காதில் சங்கு ஊதியது போல!

6.சீனப் பழமொழிக்கு தமிழில் நான்கு கதைகள்!

7.கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

8.தமிழ்ப் படுகொலைகளும் உலகப் பழமொழிகளும்

9.ஜப்பானிய பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

10.கோழி அடிக்க குறுந்தடி வேண்டுமா? 

11.உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா

12.உடையது விளம்பேல்! வல்லமை பேசேல்!

13. தைவான் நாட்டுப் பழமொழிக் கதைகள்

14.அவனின்றி ஓர் அணுவும் அசையாது- கதை

15.கண்டோம்! கண்டோம்!! கண்டோம்!!! கண்ணுக்கினியன கண்டோம்!! 2 குட்டிக் கதைகள்

16.வண்ணாத்தி அழுதது ஏன்? பாடகர் ஓடியது என்?

17.“உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடவா?”

18.அண்ணன் தலையைக் கண்டு ஆனந்தம் அடைந்த அவுரங்கசீப்

19.கோமுட்டிகளைக் கொட்டிய கொண்டித் தேள் !

20.இந்திரன் நரியாக மாறியது ஏன்? நாஸ்தீகர்களுக்கு எச்சரிக்கை!

21.கடவுளுக்குக் கடிதம் !

22.டயோஜெனிஸ், உமாபதி சிவம், அலெக்ஸாண்டர்!

23.ராமனிடம் வருணன் சொன்ன நொண்டிச் சாக்கு! கம்பன் நகைச்சுவை?

24.சிவனா, விஷ்ணுவா யார் பெரியவன்? கம்பன் பதில்

25.கம்பன் மனைவி ரொம்ப மோசம்! ராமாயணத் தகவல்.

26 .தன்னைத் தானே புகழாதே-குறள் கதை

**********

பழமொழிகளுக்கு எவ்வளவு மதிப்பு என்பதை  சீனப் பழமொழிகளின் கதைகளை தைவான் எனப்படும் தேசீய சீனா தபால்தலைகளாக வெளியிட்டதிலிருந்து அறியலாம் . அட்டைப்படத்தில் இவை உள்ளன

Rare Pictures from 1907 Book (Post No.14,438)


Written by London Swaminathan

Post No. 14,438

Date uploaded in London –  26 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Book Title– Indian Pictures and Problems

Publication Year– 1907.

Author — Ian Malcolm

Over twenty pictures are posted here.

Picture of Warren Hastings

Pictures of Maharajas/ Kings of Indian States: Bikanir, Patiala, Jaipur, Gwalior, Idar, Dungarpur etc

Camel Corps

Lamas from Tibet

Pictures from Burma/ Myanmar

Potter, oil Worker, Common people, barbers

Burmese Princess

Bhutanese ladies

Grand Funeral

Burmese Pagoda

Husking Rice, 

Famine in British Rule

Oil Extraction.

—Subham—

Tags- Rare Pictures, Images, Indian Maharajas, Kings, Burmese People, Lamas, Pagodas, Ian Malcolm, Year 1907, Warren Hastings, Oil workers, Husking rice

சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – PART 4 (Post No.14,437)

Written by London Swaminathan

Post No. 14,437

Date uploaded in London –  26 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

35.கல்ஹணர்

காஷ்மீரின் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத கவிஞர் கல்ஹணர்; இவரை வெள்ளைக்கார்கள் மெத்தப் புகழ்வர். புராணங்களில் 140 தலைமுறை மன்னர்களின் பெயர்கள் இருந்தாலும் வருஷம் குறிப்பிடவில்லை. கல்ஹணர்தான் முதல் முதலில் வருஷத்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதினார் என வெளி நாட்டினர் விளம்புவர். ஆனால்  கல்ஹணரின் கலியுகக் கணக்கு இந்துக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது போல கி.மு 3102 துவங்குவது அல்ல, இவர் கி.மு 2600 வாக்கில் என்று செப்புவார். கல்ஹணர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.

காஷ்மீரின் வரலாற்றை கல்ஹணர் , 3400-க்கும் மேலான சம்ஸ்கிருத பாக்கள் மூலமாக எழுதினார். அப்புத்தகத்தின் பெயர் ராஜதரங்கிணி. அதில் பல அதிசயமான விஷயங்களும் சுவையான செய்திகளும் உள. திராவிட என்ற சொல்லை அவர் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார். இந்த நூல் சுமார் 1000 ஆண்டு பழமை உடைத்து.

36.மனோவினோத

பல கவிதைத் தொகுப்புகளில் மனோவினோத என்ற புலவரின் தனிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வரைபற்றிய வேறு விவரம் கிடைக்கவில்லை .மனோவினோத என்பது இருடைய புனைப்பெயர். இவர் வங்காளத்தைச் சேர்ந்த 12- ஆம் நூற்றாண்டு கவிஞர்.

37.முராரி

அனார்கராகவ என்ற நாடகத்தை எழுதியவர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பதாம் நூற்றாண்டு ஆசிரியர்.

38.விஷ்ணுசர்மன்

விஷ்ணு சர்மா எழுதிய நூலின் பெயர் பஞ்சதந்திரம்

அவர்  80 வயதுப் பிராமணன் . அவரது ஊர் மயிலாப்பூர் , தமிழ் நாட்டிலுள்ள மயிலாப்பூர்/ Madras! விஷ்ணு சர்மா சம்ஸ்க்ருதத்தில் எழுதியதால் இதை மகிழாரூப்யம் என்று எழுதியுள்ளார். எண்பதுக்கும் மேலான கதைகள் உள்ளன. அத்தனையிலும் மிருகங்கள், பறவைகள், மற்றும் அசட்டுப் பிராமணன்– கதா பாத்திரங்கள்.

அவர் எழுதிய ஒரிஜினல் இல்லை ; ஒருவேளை நாளந்தா நூலகத்தை முஸ்லீம்கள் எரித்தபோது கரியாகி இருக்கலாம்.

பாரசீக மொழியில் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்க்கப்பட்டது ; பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றியவுடன் அராபிய வணிகர்கள் மூலம் ஐரோப்பாவுக்குப் பரவியது.

ஐம்பதுக்கும் மேலான மொழிகளில் இது வெளியாகியுள்ளது

பஞ்சதந்திரக் கதைகள் உலகம் முழுவதும் பரவி விட்டது. இந்துமதக் கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் பெளத்தர்கள் காப்பி அடித்து அவை எல்லாம் புத்தரின் பூர்வ ஜென்மம் ;போதி சத்துவர் அவர்; என்று பொய்யுரை பரப்பினர். அவைகளை ஜாதகக்கதைகள் என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிவைத்தனர்; அதில் மஹாபாரதம், ராமாயணமும் உள்ளன.

ஆங்கிலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தவர் இதை பிட்பாய் என்று எழுதியுள்ளார் யார் அந்த பிட்பாய் ?  இது வித்யாபதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் அல்லது வாஜ்பேயீ என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் என்று ஆராய்சசியாளர்கள் முடிவு செய்துள்ளனர். ( Vajpeyee = Vidyapathi=Bidpai=பைபிளை) ஆங்கிலத்தில் The Fables of Bidpai (or Pilpai in various European languages, Vidyapati or Vajpeyee in Sanskrit) என்று முதலி வெளியாகியது .

ஆங்கிலத்தில் அண்மைக்காலத்தில் மொழிபெயர்த்தவர்

ஆர்தர் W. ரைடர் / Arthur W. Ryder, மற்றும்  டில்லி பல்கலைக்கழகப் பேராசிரியை சந்திரா ராஜன்

லா பாந்தேன் 400ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துறவி பிப்லாய் Bidpai or Piplai எழுதியது என்கிறார். அதை ஐரோப்பியர்கள் பிட்பை என்றும் மொழிபெயர்த்தனர்

39.நாராயண

ஹிதோபதேசம் என்ற பெயரில் பிராணிகள் பற்றிய கதைகளைத் தொகுத்து எழுதியவர் . பால வம்ச தவள சந்திரன் காலத்தவர்; காலம் பத்தாம்  நூற்றாண்டு . இதில் ஏராளமான நீதி மொழிகள் உள்ளன. காலம் எட்டாம் அல்லது ஓன்பதாம் நூற்றாண்டு.

40.நயசந்திர சூரி

சமண மதத் துறவியான இவர் ஹம்மீர  மஹாகாவ்ய என்ற நூலை எழுதினார் . ரந்தம்போர் என்ற இடத்திலிருந்து ஆண்ட மன்னர் வரலாற்றினை இது கூறுகிறது அவனை 1301-ஆம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜி என்ற முஸ்லீம் தளபதி போரில் கொன்றான்.

41.நீலகண்ட தீட்சிதர்

மதுரையை ஆண்ட திருமலை நாயகரின் (1623–16 February 1659 CE) அமைச்சராக இருந்தவர்  நீலகண்ட தீக்ஷிதர் . இவர் அப்பைய தீக்ஷிதரின் தம்பியான ஆச்சான் தீக்ஷிதரின் பேரனாவார். இவரது தந்தையார் மிக பிரசித்தி பெற்ற அறிஞரும் கவிஞருமான நாராயணத்வாரி ஆவார்.  அவர் 62 வயதுக்கு மேல் வாழ்ந்தவர் கண்களை இழந்த நிலையில் அவர் பாடிய  அற்புத நூல்  ஆனந்தஸாகரஸ்தவம் .

இவரது பாடல்களில் சொல் நயம், பொருள் நயம், கற்பனை நயம், நையாண்டி, அறிவியல் நோக்கில் விளக்கம், ஆழ்ந்த தெய்வ பக்தி, தனது சொந்த அனுபவங்களின் தொகுப்பு, மகான்களின் பெருமை உள்ளிட்ட ஏராளமானவற்றை உணர்ந்து ரஸிக்கலாம். நீலகண்ட தீக்ஷிதர் இயற்றியதாக 18 நூல்கள் உள்ளன. மஹாகாவியம் என்ற வகையில் சிவலீலார்ணவாகங்காவதரணம், முகுந்தவிலாஸம் ஆகிய மூன்று நூல்களும், நாடகம் என்ற துறையில் நளசரித்ரமும் சம்பு நூல் வரிசையில் நீலகண்ட விஜய சம்பு என்ற நூலும், கவிதை நூல்களில் அன்யாபதேச சதகம்கலிவிடம்பனம், சபாரஞ்ஜன சதகம், சிவோக்தகர்ஷ மஞ்சரி,  சிவதத்வ ரஹஸ்யம், ஆனந்தஸாகரஸ்தவம், சண்டிரஹஸ்யம், ரகுவீரஸ்தவம், குருதத்வமாலிகா, வைராக்ய சதகம், சாந்தி விலாஸம் ஆகிய பத்து நூல்களும், சமய சம்பந்தமான நூல்களுள் சௌபாக்ய சந்த்ராதபா என்ற நூலும் பாஷ்ய நூல்களுள் கையடரின் மஹாபாஷ்யப்ரதீபத்திற்கான ப்ரகாஸா என்ற நூலும் ஆக இப்படி 18 நூல்கள் அவரால் இயற்றப்பட்டவை.

42.ராஜசேகர

இவர் எழுதிய நூல்களில் மிகப்புகழ்பெற்றது காவ்ய மீமாம்ச ;இது கவிதை மற்றும் கவிஞனின் இலக்கணத்தை வரையரை செய்கிறது இவர் ஒரு கவிஞர், விமர்சகர், நாடக ஆசிரியரும் ஆவார் . இவர் எழுதிய ஏனைய நூல்கள் – கற்பூர மஞ்சரி வித்தசால பஞ்சிகா . இவரது காலம் பத்தாம் நூற்றாண்டு.

கூர்ஜர பிரதிகார வம்ச மன்னர்களின் அரசவைப்புலவர்.  மஹேந்திர பாலா, மஹிவம்ச மன்னர்களிடம் சேவை செய்தவர் .

43.ரவிகுப்தா

இவரது நூல்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஏனைய கவிதைத்தொகுப்பு நூல்களில் இவருடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன

44.அப்பைய தீட்சிதர்

வட ஆர்க்காடு மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் உள்ள அடையபலம் என்ற ஊரில் 1520ஆம் ஆண்டு பிறந்தார்.அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விநாயக சுப்ரமண்யன். தீக்ஷிதரின் தந்தையாரின் பெயர் ரங்கராஜாத்வாரி.   ராம கவி என்ற ஒரு வைஷ்ணவ ஆசாரியரிடமே அவர் தன் இளமைக் கல்வியைக் கற்றார். சிவ வைணவ பேதத்தை அகற்றி அத்வைத சித்தாந்தத்தைக் கடைப்பிடித்தவர். மிகச் சிறந்த பண்டிதரான அவர் 104 நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. உரைகளுக்கு உரை, மறுப்புரை என எழுதியவர்  பெரிதும் பாராட்டப்படும் நூல்கள் – பரிமளம் ,  சதுர்மத சாரம் ;அதில்  நயமஞ்சரி என்பது அத்வைதத்தையும், நயமணிமாலை என்பது  கண்டமதத்தையும் நய-மயூக மாலிகா ராமானுஜ சித்தாந்தத்தையும் நய முக்தாவளி என்பது மத்வருடைய சித்தாந்தந்த்தையும் விரித்துரைக்கிறது.

சித்தாந்தலேச  சங்கிரகம் மிகவும் பிரபலமான ஒரு நூல். அத்வைதம் பற்றிய அனைத்தையும் சொல்லும் நூல் இது.

ஆனந்த லஹரி சந்திரிகா என்ற அவரது நூல் பற்பல வித்தியாசமான தத்துவங்களை விளக்குகிறது.

வயதான காலத்தில் ஒரு நாள் அவர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்கச் சென்று சந்நிதியில் நடராஜரோடு ஐக்கியமானார்.

அப்போது அவர் கூறிய ஸ்லோகம்பத்தியில் முடிந்தது . இதன் மீதி பாதியை அவரது சகோதரரின் பேரனான  நீலகண்ட தீக்ஷிதர் பின்னால் நிறைவு செய்தார்.    அப்பைய தீக்ஷிதர் 1593ஆம் ஆண்டு 73ஆம் வயதில் மறைந்தார்.

To be continued……………………………

Tags-

அப்பைய தீட்சிதர், ராஜசேகர, நீலகண்ட தீட்சிதர் ,நாராயண ,ஹிதோபதேசம், விஷ்ணுசர்மன், பஞ்சதந்திரம் ,கல்ஹணர்,சம்ஸ்க்ருத மழை,  அறுபது கவிஞர்கள் – PART 4