தி.வி. பு. உவமைகள்,  உருவகங்கள்-4 தமிழில் மிக நீண்ட வாக்கியம் (Post.14,746)

GODDESS MEENAKSHI COMING OUT OF FIRE PIT LIKE DRAUPADI IN MAHABHARATA.

Written by London Swaminathan

Post No. 14,746

Date uploaded in London –  10 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆர்த்தன தடாரி பேரி ஆர்த்தன முருடு மொந்தை

ஆர்த்தன உடுக்கை தக்கை ஆர்த்தன படகம் பம்பை

ஆர்த்தன முழவம் தட்டை ஆர்த்தன சின்னம் தாரை

ஆர்த்தன காளம் தாளம் ஆர்த்தன திசைகள் எங்கும்.

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) கையாளும் மேலும் சில சுவையான உவமைகள் இதோ:

WEDDING OF GODDESS MEENAKSHI WITH SUNDARA PANDYA, INCARNATION OF SHIVA.

கம்பனுடன் ஒப்பிடும் அளவுக்குப் பாடல்களின் நயம் உள்ளது ; திருமணப் பெண்ணுக்குச் செய்த அலங்காரத்தை உரைநடையில் படிக்கும்போது மூச்சு விடக்கூட நேரம் கிடைக்காது. ஆங்கிலத்தில் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய உரை நடை போல உள்ளது. 

The longest sentence in an English novel is widely considered to be in Jonathan Coe’s The Rotters’ Club, which contains a sentence of 13,955 words. This surpasses the length of Molly Bloom’s soliloquy in James Joyce’s Ulysses, which is a 4,391-word sentence. 

IN TAMIL, PARANJOTHI MAY BE ENTERED IN GUINNESS BOOK OF RECORDS.

மீனாட்சிக்கு, அதாவது தடாதகைப் பிராட்டியார்க்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டதை திருமணப்படலத்தில் வருணிக்கிறார்,

“பின் தடாதகைப் பிராட்டியாரை ஒரு சிங்காதனத்திலிருத்திக்  கஸ்தூரியணிந்து குங்குமச் சேறு பூசி, வாசனைத் திருமஞ்சனத்தால் அபிஷேகம் செய்து, முரசுஞ் சங்கும் முழங்க மெல்லிய பட்டாடை சாத்தி, ராஜகுலத்துக்குத் தக்கபடி வேத பிராமணர்களுக்கு   தானங்கள் கொடுத்துப்பின்பு திருமகளும் கலைமகளும் தங்கள் தவப்பயன் பலித்ததாக மகிழ்ந்து பிராட்டியினதுஅனிச்சப்பூவுக்கும் மெல்லியதான  பாதங்களுக்குச் செம்பஞ்சு பூசி கூந்தலுக்கு மயிர்ச்சாந்தம் வழிய வார்த்துக் கொங்கைகளில் பனி நீரில் குழைய சந்தனம் பூசிக் கால்களில் சிலம்பணிந்து  பாதசாலமும் கிண்கிணியும் புலம்ப , முப்பத்திரண்டு கோவையாக இரிசிகையும், இருபத்தொரு கோவையாக கலாபமும் பதினான்கு கோவையாக பருவமும் எட்டுக்கோவையாக மேகலையும் இரண்டு கோவையாக காஞ்சியும் ஒரு பூங் கொம்பிலே வண்டுகள் புலம்புவது போல பூட்டிக் காந்தலில் வண்டுபோல மணியாழி விரலுக்கிட்டு , கைகளில் வைரக்கடகம் அணிந்து தொழில் கேயூரம் பூட்டி , மரகதமாலை, பொன்மாலை செம்பவள மாலைகளை  மேருவைச் சூழ்ந்த நவக்கிரகங்கள் போல முலைகளைச்  சூழ அணிந்து ,  காதிலே குண்டலம், மேகத்துக்கும் சந்திரனுக்கும் இடையே இந்திரவில்லைப்போல நெற்றிப்பட்டம் கட்டி, புஷ்பமாலைகளால் கூந்தலில் அலங்காரம் செய்து  திவ்யாபாரணங்களெள்ளாம்  விளங்க அணிந்து  சுந்தரக் கடவுளுக்கு மிகவும் மகிழ்ச்சி தோன்றச் சிங்காரித்து, கலைமகளும் திருமகளும் சொப்பனம் என்று வாழ்த்தி , இரு கைகளையும் அவ்விருவரும் தாங்க எழுந்த போது வாத்தியங்கள் முழங்கி சங்கம் தொனிக்க , பூமழை பொழிய, சாமரை வீச பல்லாண்டு முழங்க வேத வாத்தியங்கள் முழங்க,

இந்திராணி அடைப்பை தாங்க, திலோத்தமை கண்ணாடி கொள்ள,  விந்தை சந்தடி விலக்க,  அரம்பை காளாஞ்சி தூக்க ஊர்வசி விசிறி வீச மேனகை கொடிகளேந்த சந்தன களப கஸ்தூரி பனிநீர்  இறைக்க தூப தீபங்கொடுக்க சோபனங்கள் பாட, புஷ்பங்கள் பரத்தின் பூம்படாத்தின் மேலே பாடகக் கால்களை பையப்பைய வைத்து சரஸ்வதியும் லெட்சுமியும் கைப்பற்றித்தொடர செல்வம் கல்வி வேண்டினவர்க்கு இதுவே சமயம் என்று சிலம்புகள் சொல்ல, நடந்து துவண்டு  அன்பு மிக்கிருந்த  பெருமானுக்கருகே பிடரிமேலே தலையைச் சாய்த்துக்கொண்டு  எழுந்தருள அந்த ரத்ன பீடத்தில்  சுந்தரப்பாண்டியன் என்கிற கடவுளோடு  இருந்த தடாதகையைக்   கண்டவர்கள்  மேரு மலை மேலே கற்பகத்தருவைச் சேர்ந்த  பச்சைக்கொடி போலிருக்கிற தென்று புகழ, பண்ணும் இசையும் நீரும் குளிர்ச்சியும் பாலும் சுவையும் பூவும் வாசமும் வெவ்வேறு வடிவு கொண்டிருந்தாற்போல அம்மையும் அப்பனும் இருக்க  எல்லோரும் கடவுளடி  நீழலிற் கலந்தது போலக்   கலந்து கலந்து மகிழ்ந்திருந்தார்கள்.

இதே போல இன்னும் ஒரு நீண்ட பத்தியில் மகாவிஷ்ணு தாரை வார்த்துக் கொடுத்ததை வருணிக்கிறார் .

****

UKARAKUMARA PANDYA RECEIVING VEL, VALAI, SENDU .

மேற்கூறிய செய்திகளைப் பரஞ்சோதியாரின் பாடல்களில் காண்போம்:–

752.     மாமணித் தவிசில் வைகி மணவினைக்கு அடுத்த ஓரை

தாம் வரும் அளவும் வானத் தபனிய மலர்க் கொம்பு                                                   அன்னார்

காமரு நடன நோக்கிக் கருணை செய்து இருந்தான்                                                   இப்பால்

கோமகள் வதுவைக் கோலம் புனைதிறம் கூறல்                                                   உற்றேன். 153

753.     மாசு அறுத்து எமை ஆனந்த வாரி நீராட்டிப்                                                   பண்டைத்

தேசு உரு விளக்கவல்ல சிவபரம் பரையைச்                                                   செம்பொன்

ஆசனத்து இருத்தி நானம் அணிந்து குங்குமச் சேறு                                                   அப்பி

வாச நீராட்டினார் கண் மதிமுகக் கொம்பர் அன்னார்.   154

754.     முரசொடு சங்கம் ஏங்க மூழ்கிநுண் தூசு சாத்தி

அரசியல் அறத்திற்கு ஏற்ப அந்தணர்க்கு உரிய தானம்

விரை செறி தளிர்க்கை ஆர வேண்டுவ வெறுப்பத்                                                   தந்து

திரை செய் நீர் அமுதம் அன்னாடு திருமணக் கோலம்                                                   கொள்வாள்.     155

755.     செம் மலர்த் திருவும் வெள்ளைச் செழுமலர்த் திருவும்                                                   தங்கள்

கைமலர்த் தவப் பேறு இன்று காட்டுவார் போல                                                   நங்கை

அம்மலர் அனிச்ச மஞ்சு மடியில் செம் பஞ்சு தீட்டி

மைம் மலர்க் குழல் மேல் வாசக் காசறை வழியப்                                                   பெய்து.    156

756.     கொங்கையின் முகட்டில் சாந்தம் குளிர் பனிநீர்                                               தோய்த்து அட்டிப்

பங்கய மலர் மேல் அன்னம் பவளச் செவ்வாய் விட்டு                                                   ஆர்ப்பத்

தங்கிய என்ன வார நூபுரம் ததும்பச் செங்கேழ்

அங்கதிர்ப் பாதசாலம் கிண் கிணி அலம்பப் பெய்து.    157

757.     எண் இரண்டு இரட்டி கோத்த விரிசிகை இருபத்து                                                   ஒன்றில்

பண்ணிய கலாபம் ஈர் ஏழ் பருமநால் இரண்டில் செய்த

வண்ணமே கலை இரண்டில் காஞ்சி இவ் வகை ஓர்                                                   ஐந்தும்

புண்ணியக் கொடி வண்டு ஆர்ப்ப பூத்த போல்                                                   புலம்பப் பூட்டி.  158

758.     பொன் மணி வண்டு வீழ்ந்த காந்தளம் போது போல

மின் மணி ஆழி கோத்து மெல் விரல் செங்கைக் ஏற்ப

வன் மணி வைர யாப்புக் கடகமும் தொடியும் வானத்

தென் மணிக் கரங்கள் கூப்ப இருதடம் தோளில் ஏற்றி. 159

759.     மரகத மாலை அம் பொன் மாலை வித்துரும மாலை

நிரைபடுவான வில்லின் இழல் பட வாரத் தாமம்

விரைபடு களபச் சேறு மெழுகிய புளகக் கொங்கை

வரைபடு அருவி அன்றி வனப்பு நீர் நுரையும் மான்.   160

760.     உருவ முத்து உருவாய் அம் முத்து உடுத்த பல் காசு                                               கோளாய்

மருவக் காசு சூழ்ந்த மாமணி கதிராய்க் கங்குல்

வெருவ விட்டு இமைக்கும் ஆர மேருவின் புறம்                                                    சூழ்ந்து ஆடும்

துருவச் சக்கரம் போல் கொங்கை துயல் வர விளங்கச்                                                       சூட்டி.     161

761.     கொடிக் கயல் இனமாய் நின்ற கோட்சுறா வேறும் வீறு

தொடிக் கலை மதியும் தம் கோன் தொல் குல                                           விளக்காய்த் தோன்றும்

பிடிக் இரு காதின் ஊடு மந்தணம் பேசு மாப் போல்

வடிக்குழை மகரத் தோடு பரிதி வாண் மழுங்கச்                                                       சேர்த்து.   162

762.     மழைக்கும் மதிக்கும் நாப்பண் வானவில் கிடந்தால்                                                       ஒப்ப

இழைக்கும் மா மணி சூழ் பட்டம் இலம்பக இலங்கப்                                                       பெய்து

தழைக்குமா முகிலை மைந்தன் தளை இடல் காட்டு மா                                                       போல்

குழைக்கு நீர்த் தகர ஞாழல் கோதை மேல் கோதை                                                       ஆர்த்து.   163

763.     கற்பகம் கொடுத்த விந்தக் காமரு கலன்கள் எல்லாம்

பொற்ப மெய்ப் படுத்து முக்கண் புனிதனுக்கு ஈறு                                                       இலாத

அற்புத மகிழ்ச்சி தோன்ற அழகு செய்து அமையம்                                                       தோன்றச்

சொல் கலையாளும் பூவின் கிழத்தியும் தொழுது                                                       நோக்கி.   164

764.     சுந்தர வல்லி தன்னைச் சோபனம் என்று வாழ்த்தி

வந்து இருகையும் தங்கள் மாந்தளிர் கைகள் நீட்டக்

கொந்தவிழ் கோதை மாது மறம் எலாம் குடிகொண்டு                                                       ஏறும்

அந்தளிர் செங்கை பற்றா எழுந்தனண் மறைகள்                                                       ஆர்ப்ப.    165

765.     அறைந்தன தூரியம் ஆர்த்தன சங்கம்

நிறைந்தன வானவர் நீள் மலர் மாரி

எறிந்தன சாமரை ஏந்திழையார் வாய்ச்

சிறந்தன மங்கல வாழ்த்து எழு செல்வம்.   166

766.     அடுத்தனல் சுந்தரி அம் பொன் அடைப்பை

எடுத்தனள் ஆதி திலோத்தமை ஏந்திப்

பிடித்தனள் விந்தை பிடித்தனள் பொன்கோல்

உடுத்த நெருக்கை ஒதுக்கி நடந்தாள். 167

767.     கட்டவிழ் கோதை அரம்பை களாஞ்சி

தொட்டனள் ஊர்பசி தூமணி ஆல

வட்டம் அசைத்தனள் வன்ன மணிக்கா

சிட்டிழை கோடிக மேனகை கொண்டாள்.   168

768.     கொடிகள் எனக் குளிர் போதொடு சிந்தும்

வடி பனி நீரினர் விசு பொன் வண்ணப்

பொடியினர் ஏந்திய பூம்புகை தீபத்

தொடி அணி கையினர் தோகையர் சூழ்ந்தார்.     169

769.     தோடு அவிழ் ஓதியர் சோபன கீதம்

பாட விரைப் பனி நீரொடு சாந்தம்

ஏடு அவிழ் மென் மலர் இட்டப் படத்தில்

பாடக மெல்லடி பைப்பய வையா.     170

770.     செம் மலராளொடு நாமகள் தேவி

கைம்மலர் பற்றின கல்வி ஒடு ஆக்கம்

இம்மையிலே பெறுவார்க்கு இது போது என்று

அம்மணி நூபும் ஆர்ப்ப நடந்தாள்.     171

771.     ஒல்கினண் மெல்ல ஒதுங்கினள் அன்பு

பில்கி இருந்த பிரான் அருகு எய்தி

மெல்கி எருத்தம் இசைத்த தலை தூக்கிப்

புல்கிய காஞ்சி புலம்ப இருந்தாள்.

772.     அற்பக இமைக்கும் செம்பொன் அரதன பீடத்து                                                       உம்பர்ப்

பொற்பு அகலாத காட்சிப் புனிதன் ஓடு இருந்த நங்கை

எற்பகல் வலம் கொண்டு ஏகு எரிகதிர் வரையின்                                                       உச்சிக்

கற்பக மருங்கில் பூத்த காமரு வல்லி ஒத்தாள்.  173

773.     பண்ணுமின் இசையும் நீரும் தண்மையும் பாலும் பாலில்

நண்ணும் இன் சுவையும் பூவும் நாற்றமும் மணியும்                                                       அம் கேழ்

வண்ணமும் வேறு வேறு வடிவு கொண்டு இருந்தால்                                                       ஒத்த

அண்ணலும் உலகம் ஈன்ற அம்மையும் இருந்தது                                                       அம்மா.    174

774.     விண் உளார் திசையின் உள்ளார் வேறு உளார்                                              பிலத்தின் உள்ளார்

மண் உளார் பிறரும் வேள்வி மண்டபத்து அடங்கி                                                       என்றும்

பண் உளார் ஓசை போலப் பரந்து எங்கும் நிறைந்த                                                       மூன்று

கண் உளார் அடியின் நீழல் கலந்து உளார் தம்மை                                                       ஒத்தார்.   175

775.     ஆய போது ஆழி அங்கை அண்ணல் பொன் கரக                                                       நீரால்

சேயவான் சோதி ஆடல் சேவடி விளக்கிச் சாந்தம்

தூய போது அவிழ்ச் சாத்தித் தூபமும் சுடரும் கோட்டி

நேயமோடு அருச்சித்து ஐய நிறை அருள் பெற்று                                                       நின்றான்.  176

776.     விண் தலத்து அவருள் ஆதி வேதியன் பாத தீர்த்தம்

முண்டகத் அவனும் மாலும் முனிவரும் புரந்தர் ஆதி

அண்டரும் நந்திதேவு அடுகணத்தவரும் ஏனைத்

தொண்டரும் புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி                                                       செய்தார்.

SHIVA KILLIKNG THE MAD ELEPHANT SENT BY JAINS.

–SUBHAM—

TAGS-  தமிழில் மிக நீண்ட வாக்கியம், தி.வி.பு. உவமைகள், உருவகங்கள்-4

ராஜீவ் காந்தியின் பலஹீனம்! (Post No.14,745)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,745

Date uploaded in London – 10 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பழைய கதை – புதிய வெளிச்சத்தில்…

ராஜீவ் காந்தியின் பலஹீனம்!

ச. நாகராஜன்

1988ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்திற்குப் பெயர் : Agreement on the Prohibition of Attack against Nuclear Installations and Facilities. 

1988ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கையெழுத்திடப்பட்டு 1991 ஜனவரி மாதம் 27ம் தேதி இது அமுலுக்கு வந்தது.

 இந்த ஒப்பந்தத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் இரு தேசங்களும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் பட்டியலை வெளியிட வேண்டும்; அத்துடன் ஒரு தேசத்தின் மீது இன்னொரு தேசம் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தக் கூடாது. 

இந்த அணு ஆயுத ஒப்பந்தம் பற்றி பாரதீய ஜனதா கட்சியிநன் எம்.பி. நிஷிகாந்த் டுபே ஒரு செய்தியை எக்ஸ் தளத்திலிருந்து எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன் எப்படி இது இருக்க வேண்டுமென்று  செயல்பாட்டுத் திட்டத்தை வகுத்தார் என்றும் அதன்படியே நியூடெல்லிக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

 அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் படி நாம் பாகிஸ்தான் ஜனாதிபதி ஜெனரல் ஜியாவுடன் பேசினோம். ஆனால் செயல் திட்டம் அமெரிக்க ஜனாதிபதியால் வகுக்கப்பட்டது.

 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்கா தந்த அழுத்தத்திற்கு பணிந்ததையே இது காட்டுகிறது என்பது டுபேயின் வாதம்.

30-5-25 டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் Signed Under Pressure

என்ற தலைப்பில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

 டுபே இன்னொரு கடிதத்தையும் குறிப்பிடுகிறார்.

 ராஜீவ் காந்தி ரீகனுக்கு எழுதிய கடிதம் இது. ராஜீவ் காந்தி ரீகனை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும்படி வேண்டிக் கொண்ட கடிதம் இது.

 1972ல் சிம்லா ஒப்பந்தம் என்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு தேசங்களுக்கும் இடையே எந்த தேசமும் புகுந்து சமரசம் பேசக் கூடாது என்ற ஷரத்து இருக்கிறது.

 இதை ராஜீவ் காந்தி மீறி இரு தேசங்களுக்கும் இடையே சமரசம் செய்ய ரீகனை அழைத்தார் என்கிறார் டுபே.

 இப்போது பெகல்ஹாம் விஷயத்தில் அமெரிக்காவின் ஆதரவில் மோடிஜி பாகிஸ்தானுடன் சமரசம் செய்து கொண்டார் என்று காங்கிரஸ் கூறினால் அது தவறு என்கிறார் டுபே.

 காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அமெரிக்க செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட், மார்கோ ரூபியோ அமெரிக்கா தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்தியது என்று சொல்வதை வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஏன் மறுக்கவில்லை என்று கேட்கிறார்.

  (ஆனால் மோடிஜியே இதைத் தெளிவாக மறுத்திருக்கிறார்!)

 ஆக ராஜீவ் காந்தி காலத்தை விட மோடிஜியின் காலம் தெளிவானதாகவும் வலுவானதாகவும் இருக்கிறது என்பதை டுபேயின் செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது!*

Source  and Thanks: Truth Kolkata Weekly Volume 93 Issue no 9 Dated 13-6-2025

Two Beautiful Self Introductions in Ancient Tamil Literature- Part 2 (Post No.14,744)

HUNCH BACKED PANDYA  ON HIS THRONE

Written by London Swaminathan

Post No. 14,744

Date uploaded in London –  9 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

APPAR AND SAMBANDAR MEETING; BOTH DID LOT OF MIRACLES; 600 CE; PALLAVA PERIOD.

SAMBANDAR, THE BOY SAINT CURED THE DISEASE OF A DEVOTEE

TO HELP THE PEOPLE AFFECTED BY SEVERE FAMINE, LORD SHIVA GAVE  APPAR AND SAMBADAR GOLD COINS

WHEN AN ATHEIST MOCKED AT SAMBANDAR HE MADE THE MALE PALMYRA TO BRING OUT FRUITS****
In the first part we saw the answer given by Kannaki to the question “Who are you?”

Tamil saint Tiru Gnana Sambandar got a slightly different question from another Pandya king . His name was Kun Pandya meaning Hunchback Pandya. Later by the divine blessing of miracle boy saint Sambandar, his hunch back condition was cured and he beame Nindraseer Nedumaran, meaning Straight Standing Nedumaran.

That king gave a golden seat to Sambandar and asked him to sit near his head. He looked at him and asked “Where are you from?”

Sambadar answered his question by explaining the glory of his birth place Sirkazi (also spelt Sirkali).

****

Here is the Question as reported by Sekkizar in Periya Puranam:

  753.     As the Paandya was blessed with the sight     Of the divine person of the godly child     And as he cast deep looks on him, his fever     Abated a little; his ruffled mind grew calm;     He addressed him, the very life of the Brahmins,     Thus: “May I know of your (native) place?”        (2651)  

****

Here is what Sambandar said:

754.     “It is hoary Kazhumalam of impregnable walls     Girt with watery fields in the Chola realm     Made fecund by the Ponni.” Thus spake the godly child,     And in grace hymned in the king’s presence     The divine decad that celebrates     Its twelve glorious names.                (2652) 

****

Following is from the Tevaram verse sung by Sambandar

BRAHMAURAM

I am from Sirkali called Brahmapuram. Brahma, the four faced, recites the Vedas without any flaw. With great desire and dedication, he ruled over the city Piramapuram (Seekaazhi

****

VENUPURAM/ BAMBOO TOWN

Indira having lost his kingdom “Indra Loka”, came to this earth and remained incognito as bamboo tree. Later he ruled over the city Venupuram (Seekaazhi) according to the best laws of the land and happily lived there.  Venu= Bamboo.

***

PUGALI/ REFUGE TOWN

Unable to get any refuge, the Devas come and settle down for long in the famed city of Pugali (Seekazhi). Oh! Lord Civa! You are enshrined in this

****

VENGURU/ JUPITER TOWN

Dharma Raajan ,the god of death is wrongly personified as a cruel king. To nullify that impression and to prove that his actions are justifiable as per Divine laws, he came to Venguru (Seekaazhi). Guru/Jupiter worshipped here.

***

THONIPURAM/ BOAT CITY

At the time of the final deluge (), the entire earth got submerged in the deep-sea waters. By the grace of Your divinity, the sea calmed down and You floated in the boat over the wide expanse of sea water. Thonipuram =Boat City

***

POONTHARAI/ VISHNU TOWN

 In the days of yore, Thirumaal incarnated as a wild boar and killed an Asura called Hiranya Kasipu . To atone for this sin Thirumaal came to the earth and selected the city Poontharai .

****

SIRAPURAM/ HEAD TOWN; HEAD IS SNAKE HEAD- RAHU PLANET

Silamban was an Asura (Raakshasan) who later became Raaghu. He was an expert archer and ruled over the earth, and lived in Sirapuram.

****

PURAVAM/ PIGEON TOWN

The Chola emperor Cibi  was a mighty charioteer. He saved the dove/puravam. So  it became Puravam/ Pegeon city.

***

SANBAI/ GRASS TOWN

Sanbai is the name of this place, because krishna worshipped to atone for sanbai grass killing the yadavas.

***

SIRKALI/ GODDESS KALI TOWN

Kali worshipped from here so it became srikali.

***

KOCHAIVAYAM/PARASARAR TOWN

The saint Paraasaran ,  son of Brahma had union with the girl Mach-cha-ganthi (u) while she was in the middle of a river. She was also called Satyavathi. She gave birth to sage Vyaasa (fl). To nullify the evil effect that might affect Paraasaran for his sinful act, he came down to Koch-chai-vayam (Seekaazhi) and did penance

***

KAZUMALAM/ BAD QUALITIS REMOVAL TOWN

My town is called Kazumalam because Ramasa Muni worshipped here to remove the bad qualities/Malam.

Thus Sambandar sang the glory of his place and explained the Twelve Names of his town. HE NEVER SAID THAT ANYTHING PERSONAL OR BOASTED ABOUT HIS FAMILY OR CLAN.

–Subham—

Tags- Sambandar answer, Where are you from, Self Introduction, Tamil Litearure.

தி.வி. பு. உவமைகள், உருவகங்கள்- 3 (Post No.14,743)

picture–வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்

Written by London Swaminathan

Post No. 14,743

Date uploaded in London –  9 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) கையாளும் மேலும் சில சுவையான உவமைகள் இதோ:

பாண்டியன் சுரம் தீர்த்த படலத்தில்,

பிசாசுகள் சூழ்ந்தாற்போல எங்கும் சமணர் கூட்டங்கள் நிலைகொள்வதாயின ..

****

சோழநாட்டிலிருந்து வந்த ஒரு வேதியரைப் பார்த்து சோழநாட்டில் என்ன புதுமையென்று மங்கையற்கரசியாரும் குலச்சிறையாரும் கேட்க , அந்தச் சைவப் பிராமணன்  , புதுமையுண்டு கேளுங்கள் ; சிவபாத இருயதரிடத்திலே  சிவனருளால் இந்த உலகமெல்லாம் தெளிவுபெற இளஞ்சசூரியனைப்போல ஒரு பிள்ளை அவதரித்தனர் … என்று சம்பந்தரின் பெருமைகளைக் கூறினார் .

உடனே அவ்விருவரும் சம்பந்தருக்குச் சொல்வதற்காக அந்தப் பிராமணன்  கையில் ஓலை விண்ணப்பம் கொடுத்துவிட்டு வ்விருவரும் மீனாட்சி சுந்தரேசரை வணங்கிவிட்டு வீட்டுக்குப் போனார்கள்

****

இதற்கு முன்னர் பாணபத்திரன் கையில் சிவன் எழுதிக்கொடுத்த லெட்டரையும் கண்டோம் . இதே போல ஒரு பிராமணன்  கையில் மாதவி எழுதிக்கொடுத்த லெட்டரை / ஓலையை அவன் கோவலனிடம் கொடுத்த செய்தியை சிலப்பதிகாரம் கூறுகிறது ஒரு பிராமணன் காட்டு வழியே அடுத்த நாட்டு மன்னனுக்கு  லெட்டர் கொண்டுபோனபோது அவனை மறவர்கள் கொன்றுவிட்டு, அடடா இவனைக் கொன்றுவிட்டோமே என்று கையை நொடித்த செய்தி புறநானூற்றில் வருகிறது. பிராமணர்கள் மட்டுமே தூது போகலாம் என்று தொல்காப்பியரும் சொல்கிறார் . வாஸ்கொட காமா கப்பலுக்குள் ஓலையுடன் நுழைந்த பிராமணனை அந்த போர்ச்சுகீசிய அரக்கன் கண்டம் துண்டமாக வெட்டி சாக்குப்பையில் கேரள மன்னனுக்கு திருப்பி அனுப்பிய செய்தி  போர்ச்சிகீசியர் வரலாற்றில் உள்ளது ஆயினும் இந்த சோழநாட்டுப் பிராமணன் சம்பந்தர் கையில் கொடுத்த லெட்டர் தமிழ் நாட்டின் வரலாற்றையே மாற்றிவிட்டது . லெட்டரில் இருந்த விஷயத்தையும் பரஞ்சோதியார் எழுதியுள்ளார்.

****

பரஞ்சோதியாரின் இன்னும் ஒரு உவமை ,

picture–நாரைக்கு முக்தி கொடுத்த படலம்

சமணர்கள் மதுரைக்குள் நுழைந்த சம்பந்தரைத் தடு த்தபோதும் வெற்றிகரமாக மதுரைக்குள் பிரவேசித்தார் . அதை அதிகமாக மதம் ஒழுகுகின்ற மதயானையைத் தாமரை நூலினால் கட்டினால்அதற்குத்தடை பட்டு யானை நிற்குமா? என்று உவமிக்கிறார்  பரஞ்சோதி.

சமணர்கள் தலை மயிரைக் கைகளால் பிடுங்க வேண்டும் என்பது நியதி; அவர்கள் தலையில் அப்போது உண்டான கொப்புளங்கள் போல வானத்தில் நடச்சத்திரங்கள் தோன்றின என்பது இன்னும் ஒரு உவமை..

பரிசுத்தமான சைவமாகிய பயிரை வளர்க்க வேலி போல அமைந்த பாண்டிமாதேவியும் மந்திரியாகிய குலச்சிறை நாயனாரும்…….

****

சங்கப் பலகை தந்த படலத்தில்,

picture–இசைவாது வென்ற படலம்

பிரமதேவன் கங்கையில் தனியாகக் குளிக்கவே சரஸ்வதி நானில்லாமல் நீர் என் இப்படி ஸ்நானம் செய்தீர்? என்று கேட்க , நீ தாமதமாக வந்துவிட்டு என்னைக் கேள்வி கேட்கிறாய். நீ பூமியில் போய் பிறக்கக்கடவது என்று சாபமிட்டார் . உடனே வாணி , சுவாமி பிறப்பில்லாத உமக்கு பாரியையான நான் பூமியில் பிறந்து என்ன செய்வேன் என்று புலம்பினாள்.

உடனே பிரம்மா சொன்னார்

ஓ  வாணியே , உன் சொரூபமான 51 எழுத்தில் அகரமுதலாக 48 எழுத்துக்களும் 48 புலவர்களாக உலகில் பிறக்கக்கடவன; வெவ்வேறு உச்சரிப்புகள் தோன்ற , உயிர்க்கு முதலாக விளங்குகின்ற கடவுள் திருவாலவாயன் ஆதலால்  அக்கடவுளும் ஒரு புலவராய் பிறந்து சங்கப்பலகையில் ஏறியிருந்தது மற்ற 48 புலவருக்கு ஞானம் தோன்ற செய்து அங்கே முத்தமிழ்ப்  பு  லமையும் நிரம்ப அருள் செய்வாரென்று பிரம்மா சொன்னார்.

அப்படியே அந்த 48எழுத்தும் உலகத்திலே வெவ்வேறு மனித ஜாதிகளாகப் பிறந்து தமிழ்ப் புலமையில் தலைமையானவர்களாய் உயர்ந்து , வயிர, இரத்தின ஆபரணங்களை அணியாமல் ருத்ராக்ஷ மாலைகளையணிந்து  திருநீறுமணிந்த திருமேனியராய் சோமசுந்தரக் கடவுளுக்கு தமிழ் மாலை சூட்டுவதோடு பூமாலையும் சூட்டுவார்கள் என்றார்

இன்றும் கோவிலுக்குள் ,சோமசுந்தரக்கடவுளுக்கு வட மேற்கே சங்க மண்டபம் உள்ளது அதில் 49 புலவர்களின் சிலைகள் உள்ளன .

யாரவது ஒருவர் இந்த கோவிலுக்குள் 49 சிலைகளையும் நன்றாகக் புகைப்படம் எடுத்து வெளியிட வேண்டும்.

(நான் மதுரைக் கோவிலுக்குப் போன நூற்றுக்கணக்கான  முறைகளில் , உயரமான படிகள் ஏறி, இந்த சங்க மண்டபத்துக்கு ஒரு கும்பிடு போடுவது வழக்கம்; ஆனால் சிறிய நுழைவாயில் கயிறு கட்டி உள்ளே போகாமல் தடுத்து இருப்பார்கள். அதையும் மீறி உள்ளே போனது இல்லை; வெளியிலிருந்து பார்த்தால் சிறிய சிறிய சிலைகளாகத் தென்படும் ; அவைகளை மேலும் ஆராய்வது நல்லது.

****

மண் சுமந்த படலத்தில் வரும் வசனங்கள்:

அப்போது மாணிக்கவாசகர் புத்தனைப் பார்த்து (இலங்கையிலிருந்து வந்த புத்த குரு ) திருட்டு வார்த்தை சொல்லப்பட்டவனே! நீ வந்த காரணத்தைக் சொல்லென்று கேட்க , அவ்வுரை கேட்ட புத்தனானவன் பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) எங்கள் புத்தரை வைக்க விரும்பி நேற்று வந்தேன் என்றான் .பொல்லாங்கைத்தருகிற கொலைகளவு, பொய், கள்ளுண்ணல்  என்னும் நான்கு குற்றங்களையும் நீக்கி  மேன்மை சிறந்த அரசமரத்தின் கீழ் எமது கடவுள் சேர்ந்திருப்பான் . பொருந்திய கர்ப்பத்திற் சேர்கின்ற உருவம் – வேதனை- குறிப்பு- பாவனை- விஞ்ஞானம் ஆகிய பஞ்ச கந்தங்களும் கூடி ஒளிவில்லாத அநேக வறிவுண்டாய் நீங்குவது பிறவித் துன்பமாம் ; அது நீங்க கேடாய்ழிவது  மோட்சமென்றான் . 

To be continued……………..

–subham—

Tags– 51எழுத்துக்கள், 49 புலவர்கள், உவமைகள் ,உவமேயங்கள், பகுதி 3, திருவிளையாடல் புராணம்

கல்லான காடு! (Petrified Forest) அரிஜோனா அதிசயம்!! (Post.14,742)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,742

Date uploaded in London – 9 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

29-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

உலகின் அதிசய இடங்கள்!

கல்லான காடு! (Petrified Forest) அரிஜோனா அதிசயம்!! 

ச. நாகராஜன்                   

 அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது அரிஜோனா. 

இதன் வடகிழக்குப் பகுதியில் உள்ளது பெரிய பாலைவனம் ஒன்று 

இங்குள்ள மலைப் பகுதிகள் பாறைக்கற்களால் ஆனவை. இதில் ஏராளமான பெரிய மரங்கள் விழுந்து கிடப்பதைப் பார்க்கலாம். 

ஆனால் யாரேனும் ஒருவர் மரத்தில் தன் பெயரைப் பொறிக்க விரும்பி அதில் எழுதத் தொடங்கினால் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். ஏனெனில் மரம் மரமாய் இருக்காது. கல்லாக ஆகி விட்டிருப்பதைப் பார்த்து அசந்து போவார்கள்!

 அது மட்டுமல்ல, அந்த கற்களிலிருந்து ஒளி வீசும் ஆரஞ்சு, நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு வர்ணங்களைக் கண்டு பிரமித்துப் போவார்கள்!

 லெப்டினண்ட் லோரென்ஸோ என்ற ராணுவ அதிகாரி தான் முதன் முதலாக இதை 1851ம் ஆண்டு கண்டார்; அதிசயப்பட்டார். படிமமாக ஆகி விட்ட இந்த காட்டை வெளி உலகிற்கு அவரே அறிவித்தார்.

 க்ரீக் ஐலேண்டில் சிக்ரி என்ற இடத்திலும் கூட கல்லான காடு உள்ளது.

 இரும்பாகி ஆகி விட்ட இந்த மரங்களின் கதை இருபது கோடி வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான கதை.  அந்தக் காலத்தில் இந்தப் பாலைவனம் ஒரு சதுப்பு நிலமாக இருந்தது. இங்கு டைனோஸர்கள் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. தொண்ணூறு சதவிகித மரங்கள் இங்கு நூறு அடிக்கும் மேலாக வளர்ந்தவையாகும். அதன் குறுக்களவோ ஆறரை அடி.  சில மரங்களோ இதை விட இரு  மடங்கு உயரம் – அதாவது 200 அடி – கொண்டவை.

 இந்த மரங்களுக்கு அறிவியல் ரீதியாக ARAUCARIOXYLON ARIZONICUM  என்று பெயரிடப்பட்டது.

 இந்த மரங்களின் கதையே தனிக் கதை! காலப் போக்கில் இவை பட்டுப் போக இதன் அடி மரங்கள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டன. ஆங்காங்கே தடுக்கப்பட்ட இவைகள் சகதியாலும் மண்ணாலும் அருகில் வெடித்த எரிமலையிலிருந்து வந்த சாம்பலினாலும் மூடப்பட்டன.

ஆக்ஸிஜன் இல்லாததால் உருமாறி இவை கல்லாக ஆகி விட்டன!

 மரங்கள் கல்லாக ஆகி விடவே இங்குள்ள தாதுக்களும் சிறிய சிறிய கற்களாக ஆகி ஜொலிக்க ஆரம்பித்தன.

ஆறரைக் கோடி வருடங்களுக்கு முன்னர் பூமி இந்தப் பகுதியில் வெடிக்கவே, மெதுவாக மலைகள் எழும்ப ஆரம்பித்தன.

 டைனோஸர் இங்கிருந்ததற்கான அடையாளங்களாக அவற்றின் படிமங்கள் இங்கு காணக் கிடைக்கின்றன! இங்குள்ள அயிடோஸர் (Aetosaur) என்ற மிருகத்தின் பற்களைப் பார்த்தால் இவை சைவ உணவையே சாப்பிட்டு வந்திருப்பது தெரிய வருகிறது. அசைவ உணவு இவற்றிற்கு ஆகாது!

 இந்த பாலைவனப் பகுதியில் ஒரு வருடத்திற்கு ஒன்பது அங்குல மழையே பெய்கிறது. இவையும் பலத்த இடி மின்னலுடன் வருபவையேயாகும்.

 கல்லான மரத்தின் அடிப்பகுதியைப் பார்ப்பதே பிரமிக்க வைக்கும் காட்சியைத் தருகிறது.

 இந்த கல் காடு 150 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது.

 விசித்திரமான வரலாற்றைக் கொண்டுள்ள இந்த கல் காடு உலகின் ஒரு மிகப் பெரிய அதிசயமே தான்!

**

Two Beautiful Self Introductions in Ancient Tamil Literature (Post No.14,471)

Written by London Swaminathan

Post No. 14,741

Date uploaded in London –  8 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Who are you ? A Pandya King asked Mrs Kannaki 1800 years ago.

Who are you ? A Pandya King asked the Miracle Boy Saint Gnana Sambandar 1400 years ago.

Both introduced themselves beautifully. Before going into their answers, let me put the same question today to my Tamil friend.

His answers would include,

My uncle is a ruling party MLA. My father was a police office clerk; now my mother works for the chairman of the town. My elder brother has just passed IAS and waiting for his post. Most probably he would be appointed as collector of our district.

The person who asked the question would be in a great dilemma to believe it or not.

Kannaki, wife of executed husband Kovalan, answered the king , glorifying her choza country. Sambandar also glorified his birth place Sirkazi inside Choza Country.

Both believed that past history is better than today’s history.

Here is what they said

From Tamil Epic Silappadikaram

Valakkurai katai  (Chapter of Reporting a case )

Translated by Prof V R Ramachandra Dikshitar

“The gate keeper reported to the king,

Someone waits at the gate. She appears to be filled with resentment. She seems to swell with rage. She has lost her husband. She has in her hand an anklet of gold, and she waits at the gate.

The king said,

Let her come; bring her here.

Kannaki enters.

O lady with the tear stained face! who are you? my young lady. What has brough you here before us

She replied,

Inconsiderate king!

I have something to say. I am a native of much celebrated Pukar, one of whose kings of untarnished glory once allayed the suffering of a dove to the wonderment of gods, and another sacrificed at his chariot  wheel his dear and only son, grieved at the sight of a cow whose eyes were filled with pearl like tears and who rang the bell at the palace gate for justice. From that city Kovalan, the son of the merchant Masattuvan , belonging to a reputed and exalted family of faultless name , driven by fate, entered your city. O,king with tinkling anklets,  to earn his livelihood, when he was murdered by you while out to sell my anklet. I am his wife.  My name is Kannaki.”

The king replied,

“Divine lady. It is not injustice to put a thief to death. Know that it is kingly justice.”

The lustrous lady retorted

“O lord of Korkai

You have fallen from your righteous course. My golden anklets contain gems inside.”

The king said,

“O lady! what you have said is well said. Our anklet contains pearls inside. Give it here. It was given and placed before him. Kannaki then broke open her beautiful anklet, and gems flew into king’s face.

When he saw that gem, the king with his umbrella falling and his sceptre faltering said,

“Am I a ruler- I who have listened to the words  of a goldsmith; it is I who am the thief. The protection of the subjects of the southern kingdom has failed in my hands for the first time. Let me depart from this life”.

Speaking thus the king fell down in a swoon and his great queen collapsed and shuddered saying,

“It is impossible for woman to replace the loss f a husband. Worshipping both his feet, she fell down. Poor woman !”

Silappadikaram was written by Tamil poet Ilango around second century CE.

My comments

Chozas were not Tamil kings; they came from North West India , where the Sibi ruled. Sibi is not the name of the king. It is the name of the tribe according to Panini of Seventh century BCE.

The story of Sibi Chakrvarthy is in Sangam Poems Pura Nanuru verses 37, 39 and in many inscriptions. The story of Manu Neethi Choza  is also repeated many times. We have his statues at Tiruvarur and Madras High Court. Chozas were ardent Hindus who built hundreds of temples for Lord Shiva.

Later Pandyas put to death 1000 goldsmiths to avenge the injustice according to the epic.

Dravidians don’t touch this epic because of innumerable references to the temples and Hindu Gods. There is a beautiful praise for Jainism in the epic.

Now let us look at Sambandar’s answer to the question Who are you?

To be continued…………..

—Subham—

Tags- Silappadikaram, Kannaki, Who are you, Self Introduction, Tamil Literature

NEWS IN PICTURES ; RAMA HUGGING THE KING OF HUNTERS

குகனுடன் ஐவரானோம் ‘துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப் பின்பு உளது; “இடை, மன்னும் பிரிவு உளது” என, உன்னேல்; முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 43

உத்தரபிரதேசம் ப்ரயாக்ராஜில் உள்ள 10 ஏக்கர் பூங்காவில் நிஷாத்ராஜைக் கட்டிப் பிடிக்கும் ராமரின் 51 அடி உயர வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜெய் ஸ்ரீ ராம்

LORD SRI RAMA HUGGING HEAD OF  HUNTERS GUHA THE STATUE IN PRAYAGRAJ S 51 FEET  HIGH. IT IS IN A BIG PARK.

SEE THE SATELLITE WITH YOUR OWN EYES

International Space Station to Be Visible Across India This Week

Skywatchers can spot the ISS with the naked eye from July 7–12 during twilight ஹௌர்ஸ்.

Stargazers in India are in for a treat this week as the International Space Station (ISS) will be visible across the country on several occasions from July 7 to July 12. The ISS, a marvel of global collaboration in space, will appear as a bright, fast-moving star streaking across the sky during early mornings and twilight hours.

–SUBHAM–

GUHA STATUE, RAMA HUGGING, SPAVCE STATION VISIBLE

CARTOONS UPTO 8-7-2025 IN DECCAN CHRONICLE

CARTOONS UPTO 8-7-2025 IN DECCAN CHRONICLE 

POSTED BY LONDON SWAMINATHAN ON 8TH JULY 2025

ENJOY THE BEST CARTOONS FROM INDIAN NEWSPAPER.

—SUBHAM—

 TAGS– CARTOONS, 8-7-2025 ,DECCAN CHRONICLE 

DRAVIDIANS ATTACK CHANAKYA

POSTED BY LONDON SWAMINATHAN ON 8-7-2025;LIFTED  FROM THE COMMUNE MAGAZINE.

On 30 June 2025, during a casual exploration on social media, as I came across this interesting post – the DMK Youth Wing had posted a picture of Chanakya with the caption “#DidYouKnow? The ‘Arthashastra’ written by Chanakya states that those who criticize religious superstitions should be labeled as ‘atheists’ and ‘traitors’ and kept away from the public.”

The image said, “The ‘Arthashastra’ written by Chanakya states that ‘Kings should always keep the public stupid. For that, they should spread religious superstitions. Those who criticize this should be accused of being ‘atheists’ and ‘traitors’ and kept away from the public.”

I was prompted to see if Acharya Chanakya really had said such a thing.

As I had not come across such strong statements against atheism in any traditional text in Sanskrit, I dug into the Arthashastra again.

What Is Arthashastra?

Arthashastra is a comprehensive traditional text authored by Chanakya. It deals with the subject of the monarch, their assembly, the subjects, wealth, and governance of the kingdom. Chanakya clearly cites earlier authors or schools of thought making the Arthashastra an important example of the legacy of intellectual heritage of ancient India. The Arthashastra and its contents were referred to by later texts and developed in their own way. 

What Does The Text Actually Say?

Chanakya starts the text first describing the subjects that a monarch must be well acquainted with as part of the eternal discipline a Monarch must have – Anvikshiki (logical philosophy, metaphysics), Trayi (the three Vedas), Varta (agriculture, cattle breeding and trade), and Dandaniti (science of government). He mentions the differences in opinions too. Check out this table to understand it better.

A table with text on it

AI-generated content may be incorrect.Tabel 1: The accepted subjects for the monarch’s attention according to different schools of thought

Anvikshiki, according to Chanakya, comprises the subjects of Sankhya, Yoga, and Lokayata. The Sankhya philosophical tradition forms the philosophical basis of which the Yoga philosophical tradition is the practical implementation. However, Lokayata is the Nastika or the Charvaka philosophical tradition. This Lokayata tradition looked at only those which could be perceived by the sense organs as real and anything else as unreal. Direct perception is given importance. It also does not consider imperceptible concepts like God or Devas and processes such as accumulation and fructification of Punyakarmaphala (result of meritorious action) and Papa (result of unmeritorious action) as valid. Oftentimes, this tradition is called Atheism in English.

The Monarch learns Dharma (righteousness) and Adharma (non-righteousness) from Trayi, Artha (wealth) and Anartha (non-wealth) from Varta, and Naya (good governance) and Apanaya (bad governance) from Dandaniti (science of government). Thus, Chanakya’s stance is that only after learning all these four can a Monarch learn both Dharma and Artha properly so as to properly govern the kingdom.

In fact, Chanakya is all in praise of Anvikshiki because it keeps the mind steady and firm and bestows excellence of foresight, speech, and action. This is why the chapter right after introducing the contents of the Arthashastra is partly called “Anvikshikisthapana” (establishment of Anvikshiki) and the first word of this chapter is Anvikshiki.

Amongst the dozen or so existing commentaries to the Arthashastra, let us take just two.

In the Vaidikasiddhantasamrakshini, one of the commentaries to the Arthashastra, Anvikshiki, also called Hetuvidya (the science of causation, i.e. logic), helps to understand reality as it is, includes the proper analysis of means of valid knowledge, and comprises Nyaya, Vaisheshika, and Lokayata philosophical traditions.

The Jayamangalakrodapatra, another commentary to the Arthashastra, says that Anvikshiki helps in understanding oneself and also the wisdom associated with cause and effect. 

Now there is a question that arises about this subject of study that has been praised as a fundamental academic eligibility for a Monarch according to a key text on governance in Sanathana Dharma – Why is the association of Nastika/Charvaka/Atheism considered against Dharma or the society?

Perhaps it is our own ignorance about the Arthashastra and associated literature that has pushed us to this state of consuming secondary information to sow doubts and malice within our minds about our heritage! Perhaps Chanakya’s own name can be used to dissuade the ignorant people of his country from studying his work!

Abhinav Rajaputra is an Indology researcher, educator, and a traditional student practitioner of Yoga.

தி.வி. பு. உவமைகள், உருவகங்கள் -2 (Post No.14,740)

Picture shows dead Malaiyadwaja Pandya returning to earh in Space Shuttle.மலையத்வஜனை அழைத்த படலம், அவர் விண்ணுலகத்திலிருந்து ஸ்பேஸிஷட்டிலில் ஸ்  வந்து செல்லும் காட்சி 

Written by London Swaminathan

Post No. 14,740

Date uploaded in London –  8 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஏழுவகை பருவ மங்கையர்

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) பயன்படுத்தும் மேலும் சில உத்திகளைக் காண்போம்.

திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் தங்கி இருந்தபோது, அழகான பேதை- பெதும்பை-மங்கை- மடந்தை- அரிவை- தெரிவை- பேரிளம் என்னும் ஏழுவகை பருவ மங்கையர்களெல்லாம் மார்கழி மாதத்தில் திருவாதிரைக்கு பத்து தினங்களுக்கு முன்னே வீடுகள் தோறும் போய் அழைத்துக்   கொண்டு விடியற்காலத்திலே தீர்த்தத்தில் போய் ஸ்நானம் செய்வார்கள் . அவர்களைக்கண்ட மாணிக்கவாசகர்  திருவெம்பாவை பாடினார்.

****

சிவன் தலையில் மூன்றாம் பிறை நிலவு

தெள்ளிய மூன்றாம் பிறையைத் தரித்த சடாபாரத்தையுடைய  கடவுளானவர் அன்பில்லாதவர்களேயானாலும் தன்னைப் பாடினவர்களிடத்தில் இரக்கஞ்செய்வார் என்று நினைத்து எண்ணுதல் பெற,

நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க   — என்று — சிவபுராணம்– பாடினார் . இது மண்சுமந்த படலத்தில் வருகிறது .

*****

இவன்தான் வந்தி என்பவளுடைய கூலியாள் என்று காட்டிவிட  பாண்டியன் கண்டு கோபித்துத் தன் கையிலே பொற்பிரம்பு (Golden Stick) கொண்டு  அண்டங்களையும் அளவில்லாத உயிர்களையும்  தனக்குச் சரீரமாகக்கொண்ட கடவுள் முதுகிலே ஓங்கி அடித்தான்.

இந்த அண்டம் என்ற சொல்லுக்கு முட்டை மற்றும் கோளமான என்ற பொருள் உண்டு. திருவாசகத்திலும் அதற்கு முந்தைய நூல்களிலும் இந்தச் சொற்பிரயோகத்தைக் காணலாம் ; பூமி மட்டுமல்ல ; அண்ட சராசரங்கள் அனைத்தும் வட்ட வடிவமானவை என்று இந்துக்கள் முதல் முதலில்  கண்டுபிடித்ததை இது காட்டுகிறது..

****

கடற்கரையில் மீன்வியாபாரம் செய்யும் மீனவப் பெண்கள் பற்றி  வலை வீசின படலத்தில் பரஞ்சோதி எழுதுகிறார் ,

பின்னும் அந்த நுளைப் பெண்கள்  விலை கூறி விற்கிற கெண்டை மீனுக்கு நேராக அவர்கள் கண்களே பிறழ்ந்து  விலையுயர்த்தவும் , பேசுகிற வாய் வாசமும்  கூந்தலில் முடித்த தாழம்பூ வாசமும்  மீனின் நாற்றத்தை ஒழித்து நல்ல மணம் வீசவும்……….

****

நால்வகைக் சொற்கள் பற்றிய உரையில் தவறு

              நாமகள்

பழுதகன்ற நால்வகைச்சொல் மலரெடுத்துப்

     பத்திபடப் பரப்பித் திக்கு

முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி

     பெறமுக்கண் மூர்த்தி தாளில்

தொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்

     சூட்டவரிச் சுரும்புந் தேனுங்

கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா

     ளடிமுடிமேற் கொண்டு வாழ்வாம்.

     (பொருள்- குற்றநீங்கியபெயர் –வினை –இடை –உரி என்னும் நான்கு

வகையை யுடைய சொற்களாகிய மலர்களை எடுத்து,  நிலல் பெற வைத்து,  எல்லாத்

திக்குகளினுஞ் சென்று, கமழ்ந்து, கூசை ஒழுகப்பெற்று,  அழகுபெற, அகன்ற

பெரிய அன்பாகிய நாரினால், பாமாலையாகச் செய்து, மூன்று கண்களையுடைய

இறைவனுடைய,  திருவடிகளில், வணங்கி, அணிவதற்கு,  கீற்றுக்களையுடைய,

ஆண்வண்டும் பெண்வண்டும்,  குடைதலினால், விரிந்த, வெண்மையான இதழ்களையுடைய தாமரைப்பூவை

இருக்கையாகவுடைய நாமகளின், திருவடிகளை,  சென்னியிற் சூடிவாழ்வாம்

Picture: பிரம்மா சரஸ்வதி வழிபடும் காட்சி 

நால்வகைச் சொற்கள் என்பதற்கு உரைகாரர்கள் பெயர்ச் சொல்வினைச்சொல், இடைச் சொல், உரிச்சொல் என்று உரை எழுதியுள்ளனர். இது தவறு என்று நான் கருதுகிறேன் ஏனெனில் தொல்காப்பியம் சொல்லும் நான் வகைச் சொற்கள் வேறு (அடியிற் காண்க).

உண்மையில் இது சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள நான்குவகைச் சொற்கள் ஆகும் . வாதாபி கணபதிம் பாடலில் முத்து சுவாமி தீட்சிதரும் இதைப்படியுள்ளார் பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்…….

அதாவது பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

ஆகவே சரஸ்வதியைத் துதிக்கும்போது இதையே பரஞ்சோதி முனிவர் மனதிற் கொண்டிருக்க வேண்டும்

ஏனெனில் பிற இடங்களிலும் அவர் உபநிஷத் வாக்கியங்களை பயன்படுத்துகிறார்; நேதி நேதி – இது இல்லைஇது இல்லை என்ற பாடலை முன்னரே எழுதியுள்ளேன். ; ஏனெனில்,

நேதி நேதி – இது இல்லை, இது இல்லைஎன்பது உபநிஷத வாக்கியம்

இன்னும் ஒரு பாடலில் அநோ ராணீ யாம் மஹதோ மஹீயாம் என்ற உபநிஷத வசனத்தை

Picture- Lord Shiva carrying sand  to strenghen the banks of flooded River Vaigai in Madurai (மண் சுமந்த படலம்)

பெரியதினும் பெரியதுமாய்ச் சிறியதினுஞ் சிறியதுமாய்

அரியதினு மரியதுமா யெளியதினு மெளியதுமாய்க்

கரியதுமாய்க் காண்பானுங் காட்சியுமா யவைகடந்த

துரியமுமாய் நின்றாயென் சோதனைத்தோ நின்னியல்பே— கல்லானைக்கு  கரும்பருதித்ய படலம்

     Aṇor aṇīyān mahato mahīyān (Kaṭha Upaniṣad 1.2.20). என்பது கடோபநிஷத் வாக்கியம்.

****

வேங்கடசாமி நாட்டார் உரை

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனலுமாம்;

“இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்

றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே”  என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும்..

ஆகவே தொல்காப்பியர் சொன்னதை ஒப்புக்கொள்ளவேண்டும்; அல்லது சரஸ்வதி துதி

என்பதால் முத்துசுவாமி தீட்சிதர் பாடலில் உள்ளதை ஒப்புக்கொள்ளவேண்டும்

 *****

வேதக்கிளி

பல தலங்களில் திருஞானசம்பந்தர் கண்ட ஒரு காட்சி கிளிகளும் வேதங்களைச் சொல்லும் காட்சியாகும்

அக்கிரகார பிராமணர்கள் வீட்டில் கிளிகளை வளர்த்த செய்தி சம்ஸ்க்ருத நூல்களிலும் இருக்கிறது

மதுரைத் திருநகரப்படலத்தில் பரஞ்சோதியார் சொல்கிறார்:–

தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேத

நாவுரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப்

பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக்

காவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ.

பார்ப்பனரின் சிறுவர்கள்,  பயிலுதற்குரிய மறைகளை,

(தமது) நாவினால் உருப்போடுதலைக் கேட்டு,

(அவ்வில்லங்களிலுள்ள) கிளிகள் மட்டுமா  கூறாநிற்கும் (அன்று);

அயலிடங் களிலுள்ள நாகணவாய்ப் புட்களும் கற்று, தேவருலகத்தில்

கற்பகச் சோலையின் கிளிகளுக் கெல்லாம், குற்றம் நீங்கக் கற்பிக்கும் .

இது ஒரு நல்லகற்பனைச் சித்திரம் ; பிராமணச் சிறுவர்களிடம் கிளிகள் வேதம் கற்றன; அவைகளிடமிருந்து பூவைப் பறவைகள   கற்றன ; அவைகள் தேவலோகத்துக்குப் போய் அங்குள்ள கிளிகளுக்கு வேதம் கற்பித்தன !

 *****   

பாண்டியன் திருநகரம் கண்ட படலம், (Madurai City)

நாத்தீகம் பேசுவோர்

மறையவர் வீதி

ஆத்திக ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும்

நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி கருவி யாக

ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ளந் தேறித் தீர்த்தராய்

முத்தீ வேட்குஞ் செல்வர்தம் மிருக்கை சொல்வாம்.

ஆத்திகர்கள்  உண்டு என்று சொல்லுகின்ற, அறம் தலிய நான்கு பொருள்களையும், நாத்திகம் பேசும் வஞ்சர்

இல்லையென்று கூறுகின்ற வஞ்சகரின்,  நாவினை அறுக்கின்ற வாளாக, இறைவன்  அருளிய மறையீன் முடிவை

உணர்ந்து,  மனந் தெளிந்து தூய்மையுடையராய்,  மூன்று தீ வேள்வியை முடிக்கும், மறையவரின்

வீதியின் பெருமையைச் சொல்வாம்.

     ஆத்திகர் – உண்டென்பார்; மறுபிறப்பும் இருவினைப்பயனும்

கடவுளும் உண்டென்பார், அறம் பொருள் இன்பம் வீடு என்னும்

நாற் பொருளும் உண்டென்பார், மற்றும் இத்தன்மைய மெய்ம்மைகள்

உண்டென்பார். நாத்திகர் – இல்லையென்பார்; 

–subham—

Tags- திருவிளையாடல் புராணம்,  உவமைகள், உருவகங்கள் , பகுதி 2 , நால் வகைச் சொற்கள், வேதம் சொல்லும் கிளிகள் , பெண்களின் 7 பருவங்கள் நாத்தீகம் பேசுவோர்