Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்
நல்லதற்கும் கெட்டதற்கும் காரணம் – ‘சுமதி’, ‘குமதி’!
ச. நாகராஜன்
சுமதி – குமதி
ஒருவனுக்கு நல்லது நடக்கிறது அல்லது கெட்டது நடக்கிறது.
ஒருவன் பணக்காரனாக இருக்கிறான். இன்னொருவன் ஏழையாக
இருக்கிறான்.
இதற்குக் காரணம் என்ன? சுமதி – குமதி தான்!
சு- மதி என்றால் நல்ல மனம்
கு -மதி என்றால் கெட்ட மனம்.
ஒரு கோத்ரத்தில் பிறந்தவன் தனது சுற்றத்தையும் குடும்பத்தினரையும் நன்கு பரிபாலிக்கிறான். வயதானவன் இளம் வயதினருடன் சகவாசம் வைத்துக் கொண்டால் பெண்கள் அவனை ஏற்பதில்லை. ஒரு பெண் ஆணைப் போல நடக்க ஆரம்பித்தால் அந்தக் குடும்பம் விநாசம் அடைகிறது.
இயல்பாகவே அமைந்திருக்கும் நல்ல குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதன்.
மற்றவர்களுக்கு உதவி செய்வது, மற்றவர்களின் துன்பங்களைக் காணச் சகிக்காமல் இருப்பது, தயையுடனும் தாக்ஷிண்யத்துடனும் எப்போதும் இருப்பது – இவை கொண்டிருந்தால் அவனே நல்ல மனிதன்.
பரோபகாரஷீலத்வம் பரதுக்காசஹிஷ்னுதா |
தயாப்ரத்வம் தாக்ஷிண்யம் சதாம் ச்வாபாவிகா குணா: ||
திருமணத்தில் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
ஒரு திருமணம் நிச்சயிக்கப்படும் போது பலரும் பலவற்றிற்கும் முதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
மணப்பெண் நல்ல வரனை – கணவனை எதிர்பார்க்கிறாள்.
மணப்பெண்ணின் அம்மாவோ வருகின்ற மாப்பிள்ளை நல்ல செல்வம் உடையவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்.
மணப்பெண்ணின் தந்தையோ தனது மாப்பிள்ளை நன்கு படித்திருக்க
வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
நட்பும் சுற்றமும் நல்ல குடும்பமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் திருமணத்திற்கு வரும் பொதுவான நண்பர்களும் தெரிந்தவர்களும் சாப்பாடு நன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.(மற்றதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?!)
வரம் வரயதே கன்யா மாதா வித்தம் பிதா ஸ்ருதம் |
பாந்தவா: குலமிச்சந்தை பிஷ்டான்னமிதரே ஜனா: ||
சம அந்தஸ்து தேவை திருமணத்தில்!
இரு குடும்பங்கள் திருமணத்தால் இணைகின்றன.
அது நன்கு அமைய வேண்டுமெனில் இரு குடும்பமும் சம அளவு செல்வத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். இரு குடும்பங்களும் சமுதாயத்தில் சம அந்தஸ்தைக் கொண்டிருக்க வேண்டும். சமமான நட்பு வட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அந்த திருமணம் நல்ல முறையில் அமையும். ஒரு ஏழைக் குடும்பமும் பணக்காரக் குடும்பமும் சம்பந்தம் செய்து கொண்டால் அது சிறப்பாக அமையாது.
யயோரேவ சமம் வித்தம் யயோரேவ சமம் குலம் |
த்யோமைத்ரீ விவாஹஸ்ச ந து புஷ்டவிபுஷ்டயோ:
ஒரு ரிஷி என்பவர் யார்?
உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் நல்லவர்கள் பேசும் போது அர்த்தமானது அவர்கள் பேசும் சொற்களைத் தொடர்ந்து அதற்கான அர்த்தம் ஏற்படுகிறது.
ஆனால் ஒரு ரிஷி பேசும் போதோ அவர்கள் பேசுவதே அர்த்தம் ஆகிறது.
Panchami means Fifth Day in Hindu Calendar. Hindus have divided each month into two halves. One fortnight begins immediately after new moon called Amavasyai; another fortnight begins immediately after full moon called Purnima or Pournami. Therefore they will have two Panchamis every month . Find the 8 Famous Panchami Festivals in the Crossword:-
P
A
N
C
A
M
I
1⇠
2
3
4
5⇡
⇡6
⇡7
8⇠
Across
1.Thyagaraja Aradhana is organised in Tiruvaiyaru in Tamil Nadu. All famous Carnatic singers assemble there. It is called Pushya xxxxxx Panchami.
2.During Holi festival, this was the day people used to throw colour powder on one another and passers-by. Later it was done from Purnima to Seventh day.
3.Snake worship day in Maharashtra and neighbouring areas.
4. in the month of Magha and Chaitra this Panchami is called Sarasvati Puja day or Goddess Panchami day.
8.Seven Stars in the name of seers are worshipped on this Panchami day
Xxxx
Down
5.Bhadrapatha month is the month when Hindus worship departed souls and this period is known as Pitri Paksha or Mahaalaya or Apara paksha. On the fifth day a rite is done for one who has died in the past one year.
6.Ashada month Krishna Panchami day is for the worship of Snake goddess in Bengal. Women in other parts of India also celebrate this Panchami.
7. This Panchami is celebrated every year on the fifth day of the bright half of the Hindu month of Magha, Saraswati Puja is done ; Utsava (festival) is celebrated forty days before spring.
Hindus fast on Ekadasi Days, that is the eleventh days of Hindu months. According to Hindu calendar, each month is divided into two halves. From new moon day, 14 days is a fort night and from full moon day another fortnight. So every month Hindus will have two Ekaadasis, that is two eleventh days. Orthodox Hindus observe strict fasting. It is not like Muslim’s Ramadan fasting. Muslims are allowed to eat as much as possible after sunset. Hindus are not eating for 24 hours during Ekadasi. Depending upon age, they do take fruits and milk or some light food, mostly without salt or chillies.
I have seen Gujarati builders, who do hard manual work, eating only bananas.
Sir Monier Williams says,
“No Christian man—be he Roman Catholic or Anglican—not even the most austere stickler for the most strict observance of every appointed period of humiliation and abstinence for a moment hope to compete with any religious native of India—Hindu or Mohemedan – who may have entered on a course of fasting, abstinence, and bodily maceration”.
I have already said Muslims do eat during the month of Ramadan after sunset. And statistics show their body weight increase after Ramadan Fasting period.
Mahatma Gandhi also said,
“My real difficulty is with my Christian Protestant friends, of whom I have so many, and whose friendship I value beyond measure. Let me confess to them that though from my very first contact with them, I have known their dislike for fasts, I have never been able to understand it”.
Xxx
Let me revert to my original point, the greatness of Ekadasi fasting. One comes across at least 24 such days in a year.
There are some stories behind this Ekaadasi Vrat.
Let me give some stories from Mahabharata:
First Story- Bhadrashila
Galava Muni has a son by name Bhadrashila; he was a devout votary of Lord Vishnu from early boyhood. He even gave up the study of Vedas and the usual rites in order to devote himself to the worship of Vishnu. From the same early age he observed the Ekaadasi fast twice every month.
His father once asked him why he subjects himself to such difficult fasts when many easier ones are laid down in holy books. He said to his father that the merit (Punya) accruing from the observance of the Ekaadasi fast was literally infinite- as infinite as the starlit sky or the boundless ocean. He was able to see his fast birth as well.
Bhadrashila continued,
“In my former life, I was a powerful king named Dharmakirti of the Lunar race. As a man I was a sinner and as a king a hated tyrant; and in both capacities, I heaped a mountain load of sin. One day I went on a hunting expedition, escorted by a company of soldiers. When I saw a lovely deer, I ordered my attendant to make a cordon round the animal so as not to let the game escape. But it so happened that the deer escaped at a point where I was myself standing on guard. I shot an arrow at the deer, and I missed the mark. I was following it in my horse all alone. when I was deep inside the forest the sun was setting. My horse became very tired and rolled down the hill and died. Hunger and thirst were gnawing at my bowels. Benighted, bewildered, bereft almost of sense and motion, I laid myself down at the foot of a tree. Nature refused to sustain my body. I saw two emissaries of Yama, carrying me to the abode of the dead. Yama was very angry with his servants for taking my soul to his region, for he said I was absolved of all sin. The reason was I breathed my last in state of fasting on an Ekaadasi day. Yama paid obeisance to me and my soul was sent to heaven of Vishnu. There I spent millions of years in the uninterrupted enjoyment of felicity such as a man cannot picture even in dreams.”
Bhadrashila’s story made such a profound impression on the mind of his father that the old man also became a convert to Vaishnavism.
களைமான்களில் ஆண் மான்களின் (Buck) கொம்புகள் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படும் காலம் இது
ஏனைய பெயர்கள்
• Berry Moon (Anishinaabe)
• Feather Moulting Moon (Cree)
• Halfway Summer Moon (Anishinaabe)
• Month of the Ripe Corn Moon (Cherokee)
• Moon When the Chokecherries are Ripe (Dakota)
• Raspberry Moon (Algonquin, Ojibwe)
• Salmon Moon (Tlingit)
• Thunder Moon (Western Abenaki)
Xxxx
ஆகஸ்ட் மாத பெளர்ணமி FULL STURGEON MOON
முழு ஸ்டர்ஜன் மீன் மாதம்
அமெரிக்காவின் 2 பெரிய ஏரிகளில் ஸ்டர்ஜன் Sturgeon வகை மீன்கள் பெரிதாக வளர்ந்து வலைகளில் சிக்கும் மாதம் .
ஏனைய பெயர்கள்
• Black Cherries Moon (Assiniboine)
• Corn Moon (Algonquin, Ojibwe)
• Flying Up Moon (Cree)
• Harvest Moon (Dakota)
• Mountain Shadows Moon (Tlingit)
• Ricing Moon (Anishinaabe)
Xxx
செப்டம்பர் மாத பெளர்ணமி
அறுவடை முழு நிலவு
சோளம், மக்காச் சோளம் அறுவடைக் காலம் .உலகில் கோதுமையைவிட அதிகம் பயிராவது சோளம் .
ஏனைய பெயர்கள்
• Autumn Moon (Cree)
• Child Moon (Tlingit)
• Corn Harvest Moon (Dakota)
• Corn Maker Moon (Western Abenaki)
• Falling Leaves Moon (Ojibwe)
• Harvest Moon
• Leaves Turning Moon (Anishinaabe)
• Mating Moon (Cree)
• Moon of Brown Leaves (Lakota)
• Moon When the Rice is Laid Up to Dry (Dakota)
• Rutting Moon (Cree)
• Yellow Leaf Moon (Assiniboine)
Xxxx
அக்டோபர் மாத பெளர்ணமி FULL HUNTER’s MOON or HARVEST MOON
முழு வேட்டைக்காரர் நிலவு
இந்த மாதத்தில் பிராணிகளும் பறவைகளும் கொழுத்துக் கிடக்கும். வேட்டைக்காரர்கள் அவைகளை வேட்டையாடி உண்டு மகிழும் காலம் .
ஏனைய பெயர்கள்
• Drying Rice Moon (Dakota)
• Falling Leaves Moon (Anishinaabe)
• Freezing Moon (Ojibwe)
• Ice Moon (Haida)
• Migrating Moon (Cree)
Xxx
நவம்பர் மாத பெளர்ணமி FULL BEAVER MONTH
முழு பீவர் நிலவு
நீர்நாய்கள் அல்லது நீர்க்கரடிகள் (Beavers) என்ற மிருகங்கள் குளிர்காலம் வருவதை முன்னிட்டு அவைகளின் வளைகளுக்குச் செல்லும் காலம்
• Deer Rutting Moon (Dakota, Lakota)
• Digging/Scratching Moon (Tlingit)
• Freezing Moon (Anishinaabe)
• Frost Moon (Cree, Assiniboine)
• Whitefish Moon (Algonquin)
Xxxx
டிசம்பர் மாதம் பெளர்ணமி FULL COLD MOON
முழு குளிர் கால நிலவு
பூமியின் வட கோளார்த்த நாடுகளில் நீண்ட இரவுப்பொழுது; நல்ல குளிர் வீசும் காலம். நார்வே சுவீடன், பின்லாந்து அமெரிக்கக் கண்டத்தின் வட கோடிப்பகுதிகளில் ஏறத்தாழ ஆறுமாதம் இரவுதான். சூரியனே உதிக்காது பூமியின் தென் ப குதியான அண்டாட்ர்ட்டிக்காவில் சூரியன் மறையவே மறையாது. நீண்ட பகல் பொழுது!
ஏனைய பெயர்கள் (அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.)
Drift Clearing Moon (Cree) • Frost Exploding Trees Moon (Cree) • Hoar Frost Moon (Cree) • Little Spirit Moon (Anishinaabe) • Long Night Moon (Mohican) • Mid-winter Moon (Lakota, Northern Ojibwe) • Moon of the Popping Trees (Oglala) • Moon When the Deer Shed Their Antlers (Dakota) • Snow Moon (Haida, Cherokee) • Winter Maker Moon (Western Abenaki)
Xxxx
ஏன் இப்படி பெயர் சூட்டினார்கள் ?
பழங்குடி மக்களிடையே அந்தக் காலத்தில் கடிகாரம் கிடையாது ; காலண்டரும் கிடையாது. நிலவுதான் அவர்களுக்கு காலண்டர். முழுநிலவுக் காலத்தில் என்ன நிகழ்கிறதோ அதை வைத்து அவர்கள் காலத்தைக் கணக்கிட்டார்கள் .
xxx
apogee- பூமியிலிருந்து தொலைவில் இருக்கும் நிலை ; perigee – பூமிக்கு அருகில் இருக்கும் நிலை
சூப்பர் மூன் / பெரிய நிலவு என்றால் என்ன ?
சூரியனைச் சுற்றி பூமி ஓடுகிறது; பூமியைச் சுற்றி நிலவு வருகிறது இது வட்டப்பாதை அல்ல; கோழி முட்டை போன்ற கோளப்பாதை . இதன் காரணாமாக சில பெளர்ணிமி கள் பூமிக்கு அருகில் நிகழும்; அப்போது அவை வழக்கத்துக்கு மாறாகப் பெரிதாகத் தோன்றும் இவைகளை சூப்பர் மூன் அல்லது மிகப்பெரிய நிலவு என்பார்கள்.
How Many Supermoons Are There in 2023?
பழைய விவாசாயிகள் பஞ்சாங்கத்தின்படி 2023 ஜுலை , ஆகஸ்ட், செப் டம்பரில் ஏற்படக்கூடிய பெளர்ணமிகள் / முழு நிலவுகள் சூப்பர் மூன் எனும் பெரிய நிலவுகள் ஆகும் .
இன்னும் ஒரு அதிசயம் என்ன வென்றால் 2023 ஆகஸ்ட் மாதம் ஒரே மாதத்தில் இரண்டு சூப்பர் மூன்கள் வருகின்றன. அதில் இரண்டாவது வரும் பெளர்ணமி ப்ளூ மூன் Blue Moon எனப்படும் .
xxxx
ப்ளூ மூன் BLUE MOON என்றால் என்ன?
ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் வந்தால் — பெளர்ணமிகள் வந்தால் —
ஒரே மாதத்தில் இரண்டு முழு நிலவுகள் வந்தால் — பெளர்ணமிகள் வந்தால் — அதில் இரண்டாவது வருவதை இவ்வாறு அழைப்பர். அதன் நிறம் நீலம் என்று கருதி விடக்கூடாது. அமெரிக்க விவசாயிகள் காலண்டர் ஜனவரியில் துவங்கி டிசம்பரில் முடிவதல்ல. அது டிராபிகல் இயர் Tropical Year எனப்படும் வேறு கணக்காகும். ஆயினும் 1946 முதல், நாம் பின்பற்றும் காலண்டரில் இரண்டு முழுநிலவுகள் வந்தாலும் ஒன்றை ப்ளூ மூன் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர்.
எப்போதாவது அதிசயமாக நிகழ்வதை ஆங்கிலத்தில்Once in a blue moon என்பார்கள். இதையே தமிழில் நாம் அத்தி பூத்தாற்போல என்போம். அல்லது பேச்சு வழக்கில் ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை என்போம் .
31 August 2023
The next blue moon takes place on 31 August 2023. As this Moon is also a supermoon, it will be a Super Blue Moon.
அடுத்த நீல முழு நிலவு 2023 ஆகஸ்ட் 31ம் தேதி நிகழ்கிறது. இது சூப்பர் நிலவாக இருப்பதால் சூப்பர் ப்ளூ மூன் எனப்படும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் நாளிதழில் 1-6-2023 அன்று வெளியான கட்டுரை – இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது
ஜூன் 1 – ஹெலன்கெல்லர் நினைவு நாள்
தடைகளை அகற்றும் விடைகள்! – 2
ச.நாகராஜன்
மரங்களின் நாயகி!
2021 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்களுள் கர்நாடகாவைச் சேர்ந்த 72 வயதான துளஸி கௌடாவும் ஒருவர்.
அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இவரைப் பற்றிய செய்திகள் சுவையானவை; ஆச்சரியகரமானவை. உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஹளகி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ஹொன்னளி என்ற கிராமத்தில் வாழ்பவர்.
30000 மரங்களை அவர் இதுவரை நட்டிருக்கிறார்! மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்ட தாவர வகைகளில் இவரது ஞானம் அபாரமானது.
காடு பற்றிய என்சைக்ளோபீடியா இவர். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தனது கணவனை 17ஆம் வயதிலேயே இழந்து விதவையானார். பின்னர் தன்னார்வலராக வனத் துறையில் சேர்ந்தார். சில காலம் கழித்த பின்னர் இவரது வேலை வனத்துறையால் உறுதிப் படுத்தப்பட்டது.
அறுபது ஆண்டுகளாக 30000 மரங்களை இவர் நட்டிருக்கிறார். நீரின் தரம் அதிகரிக்க வேண்டுமா, நீர் வளம் சிறந்து இருக்க வேண்டுமா அப்போது மரங்கள் அதிகமதிகம் தேவை என்பதே இவரது தாரக மந்திரம். அதே போல மண் வளம் சிறக்கவும் காடுகளே காரணம் என்கிறார் இவர்.
சுற்றுப்புறச் சூழல் சிறக்கவும், காற்றின் நச்சுத் தன்மை நீங்கி அது சுத்தமாக இருக்கவும் காடுகள் இன்றியமையாதது என்று கூறும் இவர் மரங்களின் பால் அலாதி அன்பு கொண்டவர். தினமும் நூற்றுக் கணக்கான மரங்களை அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் வெட்டித் தள்ளுகிறோம். அதே அளவோ அதற்கு அதிகமாகவோ மரங்களை நட்டு வளர்க்க வேண்டியது நமது தலையாய கடமை அல்லவா என்று கேட்கிறார் இவர். மரங்களின் பால் இவர் கொண்டுள்ள அன்பைப் பார்த்த மக்கள் இவருக்கு ‘விருக்ஷ தேவி’ என்ற செல்லப் பெயரைச் சூட்டி அழைக்கின்றனர்.
மனம் போன போக்கில் மரங்களை வெட்டி காடுகளை அழித்து இயற்கைச் செல்வத்தை மனித குலம் அழிக்க முற்படும் போது அதைத் தடுத்து விழிப்புணர்வை ஊட்டும் துளஸிகள் நிறைய பேர் நமது நாட்டிற்குத் தேவை அல்லவா!
இயற்கையை அழித்தால் வரும் தடைகள் ஏராளம்! அந்தத் தடையைப் போக்கும் விடையாக அமைகிறார் துளஸி!
கல்லூரியில் படிக்க 2500 மைல் நடந்தவர்!
கயிரா : தோற்றம் : 1942 மறைவு 14-10-2012
ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் நியாஸாலேண்டில் மப்லே என்ற கிராமத்தில் பிறந்தது ஒரு ஆண் குழந்தை. அந்தக் குழந்தையின் பெயர் லெக்ஸன் கயிரா. பிறந்தவுடன் குழந்தையை அதன் தாயார் டிடிமு ஆற்றில் தூக்கி எறிந்து விட்டார். ஏனென்றால் குழந்தையை வளர்ப்பதற்குப் போதுமான வசதி அவரிடம் இல்லை. அண்டை அயலார் அலறி அடித்துக் கொண்டு குழந்தையை டிடிமு ஆற்றிலிருந்து காப்பாற்றினர். அன்றிலிருந்து அந்தக் குழந்தையின் பெயரில் டிடிமு சேர்ந்து அவர் லெக்ஸன் டிடிமு கயிரா ஆனார். பள்ளிப் படிப்பை முடித்த லெக்ஸனுக்குச் சிறந்த கல்லூரியில் படிக்க ஆசை. அவரது பள்ளியில் இருந்த குறிக்கோள் வாசகம் : நான் முயற்சி செய்வேன் – I will Try – என்பது.
தனது தாயாரிடம் சென்று, “அம்மா. நான் அமெரிக்கா சென்று கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். உனது ஆசியும் அனுமதியும் வேண்டும்” என்றார்.
அம்மாவிற்கு அமெரிக்கா என்றால்அது எங்கு இருக்கிறது என்பதே தெரியாது.
அவர், “ ஆஹா! அதற்கென்ன! தாராளமாகப் போய் வா” என்று ஆசி கூறி அனுமதி தந்த அவர், “ எப்போது கிளம்பப் போகிறாய்?” என்றார்.
அவருக்கு அமெரிக்கா எங்கு இருக்கிறது என்பது தெரிந்தால் என்ன நடக்கும் என்பதை ஊகித்த கயிரா பரபரப்புடன் “நாளைக்கே” என்றார்.
மறுநாளே கிளம்பி விட்டார்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் நியாஸாலேண்டிலுருந்து கெய்ரோ 3000 மைல் தூரத்தில் இருந்தது. அதை நான்கு நாட்களில் அடைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த கயிரா ஐந்து நாட்கள் கழித்து 25 மைல் தூரம் மட்டுமே நடந்திருந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.
காட்டு வழியாகவும் குக்கிராமங்கள் வழியாகவும் ஆங்காங்கு கிடைத்த வேலைகளைச் செய்து பசியாறி ஒரு வருடம் நடந்து கொண்டே இருந்த கயிரா உகாண்டா நாட்டை வந்தடைந்தார். அங்கு செங்கல் சூளை ஒன்றில் வேலை கிடைத்தது. கம்பாலாவில் அமெரிக்க கல்லூரிகளைப் பற்றிய விவரம் அடங்கிய டைரக்டரி அவருக்குத் தற்செயலாகக் கிடைத்தது.
வாஷிங்டனில் உள்ள மவுண்ட் வெர்னானில் உள்ள ஸ்காகிட் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் கேட்டு விண்ணப்பித்தார்.
மூன்று வாரங்களில் கல்லூரியில் இடம் தருவதாகவும் கூடவே ஒரு வேலையும் தருவதாகவும் பதில் வந்தது.
திரும்பவும் நடக்க ஆரம்பித்தார் கயிரா. அவரது ஆர்வத்தையும் விடாமுயற்சியையும் ஏழ்மை நிலையையும் கேட்டு பரிதாபப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரி கல்லூரி நிர்வாகத்திற்கு அவரைப் பற்றி விளக்கமாக கடிதமொன்றை அனுப்பினார்.
உடனே அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் நிதி திரட்ட ஒரு சிறப்பு உதவி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து 1700 டாலர் சேர்த்து அவருக்கு அனுப்பினர்.
ஒரு வழியாக நடையாய் நடந்து அவர் ஸ்காகிட் கல்லூரியை அடைந்த போது அவருக்கு அங்கு ஒரு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
“உனக்கு என்ன ஆசை?” என்று கேட்ட போது எனது நாட்டிற்குப் பிரதம மந்திரி ஆக வேண்டும் என்று ஆசை என்றார்.
அனைவரும் நகைத்தனர். கயிரா சொல்லக் கூடாத எதையேனும் சொல்லி விட்டோமோ என்று திகைத்தார்.
அங்கு படித்தார்; தேர்ந்தார். ‘தி லூமிங் ஷேடோ’ என்ற நாவலை எழுதினார். இங்கிலாந்தை தனது வசிப்பிடமாகக் கொண்டு கேம்பிரிட்ஜில் பேராசிரியராகப் பணி புரிய ஆரம்பித்தார்.
தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஐ வில் ட்ரை’ என்ற தலைப்பிட்டு ஒரு நூலாக எழுதினார். அது உலகெங்கும் பரபரப்பாக விற்பனையானது. அவர் பெயரில் அவரது நாட்டில் ஒரு பள்ளியும் சிம்பம்பா என்ற கிராமத்தில் துவக்கப்பட்டது. 2016இல் அவரது அஸ்தி அங்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
வாழ்க்கையே தடைக் கல்லாக இருந்தாலும் அதைப் படிக்கட்டுக் கல்லாக மாற்றிய கயிராவின் லக்ஷிய வாசகம் – நான் முயற்சி செய்வேன் என்பது தான்!
இடும்பைக்கு இடும்பை படுப்பர்
தங்களுக்குத் துன்பம் அளிக்க வந்த தடைகளை எல்லாம் எதிர்கொண்டு துன்பம் கண்டு பயப்படாதிருத்தல், மனம் தளராமை, உற்சாகம், குறிக்கோளை அடைய இடைவிடா உழைப்பு உள்ளிட்டவற்றை தங்களது விடைகளாக அளித்த இவர்கள் நமது வாழ்க்கைக்கான வழிகாட்டிகள்!
இவர்கள் அனைவரது வாழ்க்கையும் ஒரு ஆங்கிலப் பொன்மொழியை நினைவூட்டுகிறது.
When troubles come to trouble you, don’t allow the troubles to trouble but allow the trouble to trouble the troubles so that no trouble is free to trouble you. Let not the troubles trouble you but let the troubles trouble the troubles.
தொந்தரவுகள் உன்னைத் தொந்தரவு செய்ய வரும் போது அவற்றை உன்னை தொந்தரவு செய்ய விடாமல் தொந்தரவுகளை தொந்தரவு செய்ய தொந்தரவுகளை அனுமதித்து விடு. அப்போது ஒரு தொந்தரவும் உன்னைத் தொந்தரவு செய்யாது. தொந்தரவுகளை உன்னைத் தொந்தரவு செய்ய விடாதே; தொந்தரவுகளைத் தொந்தரவுகளே தொந்தரவு செய்யட்டும்.
அழகாக சுருக்கமாகத் தான் சொன்னார் வள்ளுவர்:
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். குறள் எண் 623
1.அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு.,இனிப்புச் சுவை அதிகம்.
3.ரியால்கர் அல்லது ரெட் ஆர்ஸெனிக் எனப்படும் விஷச் சரக்கு ⇠
4. போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். செடியிலிருந்து பெறப்படுகின்றது. இந்தச் செடியை தமிழில் கசகசாச் செடி என்பர்.
8. (Across)ஒரு வகைமானிலிருந்து கிடைக்கும் வாசனைப் பொருள் ; ஒரு மஞ்சளின் பெயரில் ஒட்டிகொள்கிறது மருந்துகளில் பயன்படுகிறது
11.வீட்டுவாசலில் வளர்த்தால் கண் திருஷ்டி போகும். சொறி சிரங்குகளுக்கு எதிரி
12.எரி …….., சவுக் ……..அக்கர ………. இனிப்பு………. வகைகள் இங்கே கிடைக்கும் என்று படிக்கிறோம் . இதில் அக்கர ……. என்பது ஒரு மூலிகையின் பெயர்.
13. ஜீரணத்துக்கு உதவும் ‘ரகம்’; பல ரகங்கள் இருந்தாலும் இதை சீ , சீ என்று ஒதுக்கக் கூடாத ‘ரகம்’.⇠
14.திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி ஆகிய இரண்டுடன் சேர்க்கப்படும் மூன்றாவது பொடி⇠
xxx
கீழே
2.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்ட xxxxx ‘ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி ‘அரிசித்xxxxx என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
5.இதை வைத்து xxxxx நீர் செய்வார்கள். ஆங்கிலத்தில் xxxxxx வாட்டர் என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் .வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு xxxx திரவம் அற்புதமாக வேலை செய்யும் .(Go up)⇡
6.ஜீரணத்துக்கு உதவும் ; சாறு, துவையல், ஊறுகாய் எல்லாம் செய்யலாம்.(go Up)⇡
7 இதனுடைய நிறத்தை வைத்தே இதன் பெயர் வந்தது அல்லது நிறத்துக்கே இது பெயர் தந்தது . இந்திய உணவில் இது அதிகம் பயன்படுகிறது.’
8.Down `காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் xxxx மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’, `- இது சித்தர்கள் வாக்கு. `xxxx உண்டால் மிடுக்காய் வாழலாம்’, `ஈனாத மாட்டுக்கு ஒரு xxxxxx ; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு xxxx ‘என்ற பழமொழிகளை அறிந்தால் விடை கிடைக்கும்.
9.இதைக் காட்டினால் நல்ல பாம்பும் பிரக்ஞை அற்றுப்போகுமாம். இது இருக்கும் இடங்களில் பாம்பு வராதாம்
10.மற்றவர்களை அண்டி /சுரண்டி வாழ்வோரை இந்தத் தாவரத்தின் பெயரைச் சொல்லித் திட்டலாம்..(Go up)⇡
15.கறுப்பு நிறம் ஆனாலும் சாப்பிடலாம், பச்சை நிறம் ஆனாலும் சாப்பிடலாம்; கேரளத்தில் வீடு தோறும் தோட்டத்தில் கொடியாகப் படரும் ; மிளகாய் என்பதை இந்தியர் அறியாத காலத்தில் இதுதான் காரம்.. (Go up)⇡
இந்துக்கள் ஒவ்வொரு பெளர்ணமிக்கும் ஒரு பெயர் கொடுத்தார்கள் . சித்திரா பெளர்ணமி என்றால் சித்திரை நட்சத்திரமும் முழுநிலவும் ஒன்று சேரும் நாள் ; வைகாசி விசாகம் என்றால் விசாக நட்சத்திரமும் முழு நிலவும் ஒன்றுசேரும் நாள்; இதேபோல மாசி மகம் என்றால் மகம் நட்சத்திரமும் முழு நிலவும் ஒன்று சேரும் நாள்; தைப்பூசம் என்றால் பூச நட்சத்திரமும் முழுநிலவும் ஒன்று சேரும் நாள்; இப்படி இறைவனுடன் ஒவ்வொரு பெளர்ணமியையும் சம்பந்தப்படுத்தி விழா எடுத்தோம். ஆனால் மேலை நாட்டு பஞ்சாங்கத்தில் சில மூட நம்பிக்கைகளின் பெயரிலோ அல்லது அப்பொழுது நடைபெறும் அறுவடை போன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலோ ஒவ்வொரு பெளர்ணமிக்கும் பெயர் சூட்டினார்கள் ; குறிப்பாக அமெரிக்க பழங்குடி மக்களின் பஞ்சாங்கப்படி இது நடந்தது. 2023 ஆகஸ்ட் 31ம் தேதி SUPER BLUE MOON சூப்பர் ப்ளூ மூன் வருகிறது!
xxxx
கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்தால் அது விளங்கும்
ஜனவரி நிலவு – ஓநாய் நிலவு WOLF MOON –
காரணம் ஓநாய்களின் அலறல் சப்தம் கேட்கும் மாதம்
மற்ற பெயர்கள் :
• Canada Goose Moon (Tlingit)
• Center Moon (Assiniboine)
• Cold Moon (Cree)
• Freeze Up Moon (Algonquin)
• Frost Exploding Moon (Cree)
• Great Moon (Cree)
• Greetings Moon (Western Abenaki)
• Hard Moon (Dakota)
• Severe Moon (Dakota)
• Spirit Moon (Ojibwe)
அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.
Xxxx
பிப்ரவரி மாதம் முழுப்பனி நிலவு FULL SNOW MOON
காரணம் பிப்ரவரி மாதத்தில் பூமியின் வட பகுதியில் கடும் பனி பெய்யும்.
ஆஸ்திரேலியா போன்ற தென் கோளார்த்தப் பகுதிகளில் வெய்யில் அடிக்கும் ; ஆகையால் இந்தப் பெயர் பொருந்தாது.
அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.
Xxxx
மார்ச் மாத முழு நிலவு FULL WORM MOON
புழு நிலவு
இந்தக் காலத்தில் மண்புழுக்கள் வெளியே வரும் அல்லது மரப்பட்டை , பொந்துகளில் வாழும் புழுக்கள் வெளியே வரும் என்பதால் புழுக்கள் நிலவு என்று பெயர் சூட்டினார்கள்.
ஏனைய பெயர்கள் (அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.)
இந்த வசந்த காலத்தில் சிறிய இளம் சிவப்பு (Pink Flowers) மலர்கள் பூக்கின்றன
ஏனைய பெயர்கள் (அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.)
• Breaking Ice Moon (Algonquin)
• Broken Snowshoe Moon (Anishinaabe)
• Budding Moon of Plants and Shrubs (Tlingit)
• Frog Moon (Cree)
• Moon of the Red Grass Appearing (Oglala)
• Moon When the Ducks Come Back (Lakota)
• Moon When the Geese Lay Eggs (Dakota)
• Moon When the Streams are Again Navigable (Dakota)
• Sucker Moon (Anishinaabe)
• Sugar Maker Moon (Western Abenaki)
Xxxx
மே மாதம் பெளர்ணமி FULL FLOWER MOON
முழு மலர் நிலவு
இந்த மாதத்தில் வசந்த கால மலர்கள் மிக அதிக அளவில் பூத்து மலர் வனங்களாக காட்சி தருவதால் இந்தப் பெயர்
• Budding Moon (Cree)
• Egg Laying Moon (Cree)
• Frog Moon (Cree)
• Leaf Budding Moon (Cree)
• Planting Moon (Dakota, Lakota)
• Moon of Shedding Ponies (Oglala)
Xxx
ஜுன் மாத பெளர்ணமி FULL STRAWBERRY MOON
முழு ஸ்ட்ராபெரி நிலவு
நிலவின் வர்ணத்தை ஒட்டி எழுந்த பெயர் அல்ல. அமெரிக்காவின் சில பகுதிகளில் ஸ்ட்ராபெரி (Strawberry) பழங்கள் ஏராளமாகக் காய்க்கின்றன ; இந்தப் பழங்கள் செக்கச்செவேல் என்று இருக்கும் .
ஏனைய பெயர்கள்
• Berries Ripen Moon (Haida)
• Birth Moon (Tlingit)
• Blooming Moon (Anishinaabe)
• Egg Laying Moon (Cree)
• Hatching Moon (Cree)
• Green Corn Moon (Cherokee)
• Hot Moon
• Hoer Moon (Western Abenaki)
Xxx
To be continued……………………………
Tags- நிலவின் பெயர்கள், பெளர்ணமி , பெயர்கள் காரணம், அமெரிக்க பழங்குடி மக்கள்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மொபைல் போன், வாட்ஸ் அப், இன்டர்நெட், கூகுள் பே , மேலை நாடுகளில் மொபைல் போன் மூலம் பயணம் செய்தல் முதலியன இல்லை. இப்பொழுது மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது சில வாரங்களுக்கு முன்னர் அறிவியல் பத்திரிகைகளில் வெளியான செய்தி காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று சொல்கிறது. இந்தியா ,சீனா போன்ற நாடுகளில் நிலக்கரியை எரித்து நீரை வெப்பமாகிக்கி எடுக்கும் மின்சாரத்தால் காற்றும், புறச் சூழலும் மாசுபடுகிறது என்பது பெரிய குற்றச்சாட்டு . யுரேனியம், ப்ளூட்டோனியம் மூலம் உண்டாக்கும் அணுசக்தி மின்சாரத்தால் அந்தக் கழிவுப் பொருட்களில் (RADIO ACTIVE WASTE) உள்ள கதிரியக்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு கதிரியக்கத்தை (RADIATION) உண்டாக்கும் என்பது இன்னும் ஒரு குற்றச்சாட்டு ; இப்படி வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுப்பது காற்று மின்சாரம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதை யாரேனும் சொல்லியிருந்தால் என்ன கிண்டல் செய்கிறாயா? என்று பதில் கொடுத்து இருப்போம். இப்போது அப்படிச் சொன்னால் உனக்கு விஞ்ஞான அறிவு கொஞ்சமும் கிடையாதா? என்று திருப்பிக் கேட்டுவிடுவார்கள் .
Scientists generate ‘electricity from thin air.’ Humidity could be a boundless source of energy, they say.
வெய்யில் காலம் வந்தால் உடல் வேர்க்கிறது; தோல் எல்லாம் பிசு பிசு என்று ஒட்டிக்கொள்கின்றது ; இதற்கு காரணம் காற்றிலுள்ள ஈரப்பதம் (Humidity) ஆகும். இதிலிருந்து மின்சாரத்தை பெற முடியும் என்பதுதான் புதிய செய்தி.
சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் (SOLAR POWER) மின்சாரத்துக்கு வெய்யில் தொடர்ந்து அடிக்கவேண்டும். காற்றாடி மூலம் (WIND POWER) எடுக்கும் மின் சாரத்துக்கு காற்று தொடர்ந்து அடிக்கவேண்டும். ஆனால் காற்றிலுள்ள ஈரப்பத மின்சாரத்துக்கு இந்தத் தடைகள் இல்லை. அது எப்போதும் கிடைக்கும். மேலும் அது கிடைக்காத நாடு இல்லை.
அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக University of Massachusetts-Amherst பேராசிரியர்கள் இது பற்றி சொல்கிறார்கள் : நாம் எல்லோரும் மேகங்கள் சூழ்ந்த வானத்தில் மின்னல் (Lightning) அடிப்பதை பார்க்கிறோம். இது மிகப்பெரிய சக்தியுள்ள மின்சாரம் என்பதை அறிவோம். ஆயினும் அதை அறுவடை செய்யும் வகை நமக்குத் தெரியாது. நாங்கள் என்ன செய்தோம் என்றால் அது போல ஈரப்பத சூழ்நிலையில் செயற்கையாக மின்னலைத் தூண்டி அந்த மின்சாரத்தை அறுவடை செய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ளோம். .
காற்றிலுள்ள ஈரப்பத்தில் மின்சாரத்தை உண்டாக்க காற்றின் சக்தியையே பயன்படுத்தும் ஒரு மயிரிழை அளவுள்ள ஜெனெரேட்டர் உளது . இதன் மூலம் ஒரு வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை எடுக்கலாம். இதையே எல்லா இடங்களிலும் உண்டாக்கினால் ஆண்டுமு னுத்தும் 24 மணிநேரமும் மின்சக்தியைப் பெறலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்குப் பேராசிரியர்கள் பேட்டி கொடுத்துள்ளனர்
The device mentioned in the study is the size of a fingernail and thinner than a single hair. It is dotted with tiny holes known as nanopores, The Washington Post reported. “The holes have a diameter smaller than 100 nanometers, or less than a thousandth of the width of a strand of human hair,” The Post said.
மேலும் பேராசிரியர் யாவோ இது பற்றிப் பத்திரிகையாளரிடம் பேசுகையில் கோடி கோடி மயிரிழை ஜெனரேட்டர்களை வைத்தாலும் அது ஒரு ரெப்ரிஜிரேட்டர் (குளிர்ப்பதன சாதனம்) அளவுதான் இருக்கும். ஒரு வீட்டிற்கான ஒரு கிலோவாட் சக்தியை அது கொடுக்கும் என்கிறார்
Yao told The Washington Post that roughly 1 billion air-gens, stacked to be roughly the size of a refrigerator, could produce a kilowatt and partly power a home in ideal conditions.
கடலிலிருந்து தங்கம் எடுக்கும் கதை
கடலில் டன் கணக்கில் தங்கத் துகள் உள்ளது ஆனால் இதை எடுப்பதற்கான செலவு பூமியிலுலிருந்து தங்கம் வெட்டி எடுக்கும் செலவைவிட அதிகம் என்பதால் செயல்முறையில் பயன்படவில்லை. அது போல இந்தத் திட்டமும் ஆராய்ச்சியும் போய் விடாது என்று நம்புவோமாக .(Source- USA TODAY NEWSPAPER )
தடைகள் உண்டு எனில் அவற்றை அகற்றும் விடைகளும் உண்டு!
நவீன உலகில் அன்றாடம் பிரச்சினைகளைச் சந்திக்காதவரே இல்லை.
அதிலும் நகர் சந்தடியிலிருந்து விலகி வாழ்வோர் படும் துன்பங்கள் அதிகம்.
ஒரு விதமான ஆதார வளம் இல்லாமல் செல்வமும் இல்லாமல், ஆதரிப்போர் இல்லாமல் ஏராளமானோர் செய்வதறியாது திகைப்பதையும் அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் உடல் குறைபாடுகளைக் கொண்டிருந்தாலோ சொல்லவே வேண்டாம். அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.
ஆனால் விதி என்று இவற்றைச் சொல்லி அனுபவித்துத் துன்பப்படுவதை விட இதை மாற்றும் வழி உண்டா?
உண்டு என்று நிரூபித்திருப்போர் ஏராளம.
அவர்களில் சிலர் இதோ!
அபூர்வப் பெண்மணி ஹெலன் கெல்லர்
ஹெலன் கெல்லர்: ஒரு அபூர்வப் பெண்மணி (தோற்றம் ஜூன் 27,1880 மறைவு ஜூன் 1, 1968)
மனம் தளராத விடாமுயற்சி எந்த சூழ்நிலையிலும் வெற்றி தரும்.
இது ஹெலன் கெல்லர் என்ற அபூர்வ பெண்மணி உலகிற்குக் காட்டிய உண்மை.
19 மாதக் குழந்தையாக இருந்தபோது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார். அவரால் பேசவும் முடியவில்லை.
ஹெலனின் தாயார் அவரை மசாசூசெட்ஸில் (அமெரிக்கா) பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்தார். அங்கு ஆன்னி சல்லிவன் என்ற கண் பார்வை இழந்த ஒரு ஆசிரியை அவருக்கு ஒவ்வொரு பொருளையும் தடவிப் பார்க்கச் சொல்லி அதன் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.
பயிற்சியின் போது, நீரை அவர் கை மீது பாய்ச்சி ‘வாட்டர்” என்று சல்லிவன் சொன்ன போது ‘சாவிலிருந்து மீண்டு ஒரு புது பிறப்பை எடுப்பது போல இருந்தது’ என்று பின்னால் ஹெலன் கெல்லர் கூறினார்.
ஆம், அவர் படிக்க ஆரம்பித்து விட்டார்!
பல வருட கால கடுமையான உழைப்பிற்குப் பின்னர் ஆங்கிலத்தை முழுதுமாகக் கற்றதோடு, பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம், லத்தீன், கண் பார்வையற்றோருக்கான ப்ரெயிலி ஆகிய மொழிகளில் அவர் தேர்ந்தார்.
1904ஆம் ஆண்டில் அவர் பட்டம் பெற்றார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து முதலில் பட்டம் பெற்ற பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.
எனது வாழ்க்கை சரிதம் (The Story of My Life) என்ற மனதை உருக்கும் ஒரு புத்தகத்தை எழுதியதோடு மொத்தம் 14 புத்தகங்களை அவர் எழுதினார்.
30 நாடுகளுக்குப் பயணம் செய்து அனைவருக்கும் உத்வேகம் ஊட்டினார்; பெண்களின் உரிமைக்காகப் போராடினார்.
87ஆம் வயதில் அவர் மறைந்தார். 1964ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி பி.லிண்டன் ஜான்ஸன் அவருக்கு அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.
நெஞ்சம் தளராது உற்சாகத்தோடு தனது அனைத்துக் குறைகளையும் புறம் தள்ளி வெற்றி பெற்ற வீராங்கனை அவர்.
சரி, இவர் போலல்லாது கண் பார்வையும் செவிப் புலனையும் தக்க ஆதரவையும் கொண்டுள்ள ஆயிரக் கணக்கானோர் எப்படி எல்லாம் முன்னேறலாம்?!.
தன் தடைகளை அகற்றி அவற்றைப் போக்கப் பல விடைகளைத் தந்தவர் ஹெலன் கெல்லர் என்பதே உண்மை!
மலைகளை நகர்த்திய மா மனிதன்!
மனித மனத்தில் ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று உறுதியாகிவிட்ட பட்சத்தில் முடியாதது ஒன்றும் இல்லை.
இதற்கு உதாரணம் தசரத் மஞ்சி (Dasjrath Manjhi). (தோற்றம் 14-1-1929 மறைவு 17-8-2007)
பீஹார் மாநிலத்தில் கயாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஜெஹ்லௌர்.
அதில் வாழ்ந்தவர் தசரத் மஞ்சி. ஒரு துயரமான சம்பவம் அவர் வாழ்க்கையில் 1959இல் நிகழ்ந்தது. அவரது மனைவி பல்குனி தேவி மலையிலிருந்து கீழே விழ பலத்த காயம் பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அந்த மலைப் பகுதியில் சாலையே இல்லை. அவர் இறந்து போனார். அப்போது மனதிற்குள் ஒரு உறுதியை எடுத்தார் தசரத். இந்த மலையை வெட்டி ஒரு சாலை அமைப்பது என்ற முடிவு தான் அது. அவரிடம் மூன்று ஆடுகள் தாம் இருந்தது. அதை விற்று ஒரு சுத்தியலையும் உளியையும் வாங்கினார். வேலையை ஆரம்பித்தார்.
மலையை வெட்டி ஒரு ரோடு போடுவது தான் அவரது கனவு. 22 வருடங்கள் இடை விடாது உழைத்தார் – தனி ஆளாக! 1960இல் அவர் ஆரம்பித்த பாதை 1982இல் முடிந்தது.
ஆரம்பத்தில் பைத்தியக்காரன் என்று அவரை எள்ளி நகையாடிய அனைவரும் அவரது உறுதியைப் பார்த்து வியந்தனர்.
அவர் இருந்த இடத்திலிருந்து ஆஸ்பத்திரி 55 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அயராமல் உழைத்து 110 மீட்டர் நீளமும் 9.1 மீட்டர் அகலமும் உள்ள ஒரு சாலையை அவரே அமைத்து முடித்தார். மலையின் சரிவில் பக்கவாட்டில் அவர் இந்த சாலையை அமைத்து முடித்தார். இந்த சாலையால் 55 கிலோ மீட்டர் தூரமானது 15 கிலோமீட்டர் தூரமானது.
இந்திய அரசு இவரை கௌரவித்து ஒரு தபால்தலையை 26-12-2016இல் வெளியிட்டது. பீஹார் அரசும் அவரைக் கௌரவித்தது.
2011இல் அவரைப் பற்றிய டாகுமெண்டரி படம் ஒன்று ‘The Man who moved the mountain’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.
2015இல் மஞ்சி – மலை மனிதர் – Manji – The Mountain Man -என்ற பெயரில் அவரைப் பற்றி ஒரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டது.
இந்த சாலையின் மூலம் அவரது கிராமம் வெளி உலகுடன் இணைக்கப்படவே பள்ளி, ஆஸ்பத்திரி வசதி கிராம மக்களுக்குக் கிடைத்தது; வேலை வாய்ப்புகளும் உருவாயின.
2007இல் அவர் இறந்த போது பீஹார் அரசு அவரது இறுதிச் சடங்கில் அரசு மரியாதைகளைச் செய்து கௌரவித்தது.
முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு தசரத் மஞ்சி ஒரு சிறந்த உதாரணம்!
xxxxx
சாதனை படைத்த கரிகாலன்!
டாக்டர் க்ளென் கன்னிங்ஹாம் (தோற்றம் 4-8-1909 மறைவு 10-3-1988)
அமெரிக்காவில் அட்லாண்டாவில் பிறந்தவன் கன்னிங்ஹாம் என்ற அந்தப் பையன். அவனுக்கு எட்டு வயது ஆகும் போது ஒரு கோர விபத்து ஏற்பட்டது. பள்ளியில் அறையைக் கதகதப்பாக வைக்க அடுப்பை மூட்ட வேண்டிய பணி அவனுடையது. ஒரு நாள் மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெட்ரோலை விட்டதால் பள்ளி தீப்பிடிக்க அதில் கால் கருகி கால்களை இழந்து கரிகாலன் ஆனான் அவன்.
அவனால் இனி நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவனுக்கு அசாத்திய மன உறுதி இருந்தது. சாதிப்பேன் என்று தனக்குத் தானே முடிவு கட்டிக் கொண்டான். தாயார் அவன வீல்சேரில் உட்கார்த்தி வீட்டின் முன்புற முற்றத்தில் வேலி வரை அழைத்துச் செல்வார். ஒரு நாள் வீல் சேரிலிருந்து மெதுவாக எழுந்தான். விழுந்தான். பின்னர் மெதுவாக நிற்க ஆரம்பித்து வேலியைப் பிடித்து நடக்க ஆரம்பித்தான்.
பள்ளிக்குச் செல்ல ஆசை வந்தது. பள்ளிக்கு முதலில் மெதுவாக நடந்து செல்ல ஆரம்பித்தான். பின்னால் பள்ளிக்குச் செல்ல ஓட ஆரம்பித்தான். ஓடினால் அவனுக்கு ஒரு ஆனந்தம்!
ஒரு நாள் மாடிஸன் ஸ்குயர் கார்டனில் நடந்த ஒரு மைல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டான். என்ன ஆச்சரியம்! அதில் அவனே வெற்றியும் பெற்றான்.
1933இல் ஜேம்ஸ் இ.சல்லிவன் என்ற உயரிய விருதையும் பெற்றான்.
அமெரிக்கா அவனைத் தனது தலைமை விளையாட்டு வீரனாகப் பார்க்க ஆரம்பித்தது.
1932இல் ஒலிம்பிக் போட்டிகளில் 1500 மீட்டரில் கலந்து கொண்ட கன்னிங்ஹாம் நான்காவதாக வந்த போது உலகம் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தது. 1936இல் அதே ஒலிம்பிக் போட்டியில் அவர் இரண்டாவதாக வந்தார்.
நான்கு நிமிடங்களில் ஒரு மைலை ஓடிக் கடக்க வேண்டும் என்பது அவரது ஆசை.
1934இல் ஒரு மைலை 4.06.8 நிமிடத்தில் ஓடி முடித்தார். உலக சாதனை படைத்தார்.
இது மட்டுமல்ல, நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி பட்டத்தையும் பெற்றார்.
1940இல் அவர் ஓய்வு பெற்றார்.
டாக்டர்களால் நடக்கவே முடியாது என்று கூறப்பட்ட அவர் உலக சாதனை படைத்த வீரராக மாறியது எதனால்?
அவரது மன உறுதியும், எண்ண வலிமையும் அதற்கான இடையறாத உழைப்புமே தான் காரணம், இல்லையா?!