
Written by London swaminathan
Date: 24 JULY 2018
Time uploaded in London – 8-02 am (British Summer Time)
Post No. 5252
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
அவுரங்கசீப் என்ற மொகலாய மன்னன் ஒரு முரடன்; அசடன்; முஸ்லீம் வெறியன்; இந்துக்கள் மீது வரி போட்ட நரியன்; சொறியன்; கரியன்.
முகந்த்தாஸ் என்ற ரஜபுத்ர தளபதி அவுரங்க சீப்பை துச்சமாக மதித்து தனது கருத்துகளை வீரன் போல முழங்கி வந்தான். அவன், அவுரங்க சீப்பின் அரசவைக்குள் நுழைந்தவுடன், இந்த ஆளை புலியின் கூண்டுக்கள் தூக்கி எறியுங்கள்; கடித்துக் குதறுவதைப் பார்க்க ஆசை என்றான். உடனே சேவகர்களும் அவனை புலி இருக்கும் வட்டத்துக்குள் தூக்கி எறிந்தார்கள்; அவன் புலியைப் பார்த்தான்; உற்று நோக்கினான்; கோபக் கனலை வீசினான்.
“ஏய், டில்லிப் புலியே! இது ரஜபுத்ரப் புலி, இது எனது அரசன் ஜஸ்வந்த் அனுப்பிய புலி.தெரியுமா?” என்றான்.
புலியும் பார்த்தது. ஆமாம் உண்மைதான் என்று வாய்திறந்து சொல்லாமல் தலையால் ஒரு சலாம் போட்டது. அது தன் வேலையைப் பார்க்கத் திரும்பிப் போனது.
பார்த்தான் அவுரங்க சீப். இது போன்ற ஆட்கள் நமது தரப்பில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று அவனுக்குப் பரிசுகள் கொடுத்தான்.
அடடா! என்ன வீரம்; இந்த வீரத்தை எல்லாம் உன் மகனுக்கும் அளித்தாயா? என்று கேட்டான் அவுரங்க சீப்.
“போடா போக்கத்த பயலே! உன்னைப் போன்றவர்கள், எங்களை எந்நேரமும் சண்டைக்கு இழுக்கும்போது மனைவியுடன் படுக்கையில் படுக்க நேரம் ஏது? என்று பதில் கொடுத்தான்.
அவன்தான் பெரிய வீரன்.
XXX

மன்னனுக்கு ‘கால்’ மரியாதை
தேவ்ரா இளவரசனை முகுந்த் தாஸ் அவுரங்க சீப்பிடம் அழைத்துச் சென்றான். அவர்களுக்கு எல்லாம் ராஜாவான ஜஸ்வத் சிங், ‘போய் வா, உனக்கு தக்க மரியாதைகள் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன்’ என்றான். அவனை அழைத்துச் சென்ற முகுந்தாஸோ, மொகலாய மன்னனுக்கு முன்னால் அனைவரும் சிரம் தாழ்த்தி மண்டியிட்டு வணக்கம் செய்தல் வேண்டும்; யாருக்கும் இதில் விதி விலக்கு என்பதே இல்லை’ என்றான்
இளவரசன் பதில் சொன்னான்
‘’ஹா ஹாஹ் ஹா! என் உயிர் வேண்டுமானால் மன்னன் கையில் இருக்கலாம்; என் மானம் அனைத்தும் என் கையில்தான்; ஒரு பயலும் தொட முடியாது என்றான்.
அரசனுக்கு முன்னால் இந்த ஆள் தலை வணங்க மாட்டான் என்பதால் ஒரு விஷேச ஏற்பாடு செய்தார்கள். இவன் குனிந்து வருவதற்காக ஒரு சிறிய நுழை வாயிலை அமைத்தார்கள்; அதில் மன்னனே நுழைந்தாலும், தலை குனிந்துதான் நுழைய வேண்டும்!
தேவ்ரா இளவரசன் சொன்னான்,
டேய்! நான் கள்ளனுக்கும் குள்ளன்; நீ பாய்க்கு அடியில் புகுந்தால் நான் கோலத்துக்கு அடியில் புகுவேன் என்று சொல்லி விட்டு அந்த குட்டி நுழைவாயில் முதலில் காலை விட்டான். பின்னர் ஊர்ந்து முன்னேறி தலை பின்னால் வரும்படிச் சென்றான். அதாவது மன்னனுக்கு ‘கால்’ மரியாதை!
மன்னன் அதைக் கேட்டுவிட்டு மலைத்துப் போனான்
ரஜபுத்ர வீரர்கள் அஞ்சாத சிங்கங்கள்! அ வர்களுடைய மனைவியர், மாற்றான் படைகள் தொடுவதற்குள் தீப்பாய்ந்து மானம் காப்பார்கள். சித்தூர் ராணி பத்மினி கதை அனைவரும் அறிந்ததே!
XXXX