
நவம்பர் 2019 நற்சிந்தனை காலண்டர்
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 31 OCTOBER 2019
Time in London – 16-42
Post No. 7161
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஆடுகள் பற்றிய 30 பழமொழிகள் இந்த மாத காலண்டரில் இடம் பெறுகின்றன.
பண்டிகை நாட்கள்:–
நவம்பர் 2- சூர சம்ஹாரம்/ கந்த சஷ்டி; 9- துளசி விவாகம்; 12- குருநானக் ஜயந்தி, அன்னாபிஷேகம் (வட நாட்டில் கார்த்திக் பௌர்ணமி; தென்னாட்டில் டிசம்பர் 10 கார்த்திகை பௌர்ணமி; 16 — கோபி அஷ்டமி; 18- சகல சிவாலயங்களிலும் சங்காபிஷேகம்; 23- சத்ய சாய் பாபா பிறந்த தினம்; 24- சீக்கிய குரு தேஜ் பஹாதூர் உயிர்நீத்த தினம்.
அமாவாசை – 26, பௌர்ணமி — 12
ஏகாதஸி விரத தினங்கள் — 8 & 22/23
சுப முகூர்த்த நாட்கள்– – November 1,3, 10, 15, 22, 24.

நவம்பர் 1 வெ:ள்ளிக்கிழமை
ஆடு கிடந்த இடத்தில் நெல்லை விதை.
நவம்பர் 2 சனிக் கிழமை
ஆடு இருக்க இடையனை விழுங்குமா?
கிழமை 3 ஞாயிற்றுக் கிழமை
ஆடு திருடிய கள்ளனைப் போல விழிக்கிறான்.

நவம்பர் 4 திங்கட் கிழமை
ஆடு எட்டுதான் , ஆனாலும் கோட்டை குட்டிச் சுவர் ஆகிவிட்டது
நவம்பர் 5 செவ்வாய்க் கிழமை
ஆடு கடிக்குமென்று இடையன் உறியேறிப் பதுங்குவானாம்
நவம்பர் 6 புதன் கிழமை
ஆடு கெட்டவன் ஆடித் திரிவான் , கோழி கெட்டவன் கூவித் திரிவான்.
நவம்பர் 7 வியாழக் கிழமை
ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம்
நவம்பர் 8 வெ:ள்ளிக்கிழமை
ஆடு கொடாத இடையன் ஆவைத் கொடுப்பானா?

நவம்பர் 9 சனிக் கிழமை
ஆடு தின்பாளாம் 2 ஆடு தின்பாளாம், ஆட்டைக் கண்டால் சீ சீ என்பாளாம்
நவம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை
ஆடு தீண்டாப் பாளையை மாடு தீண்டுமா?
நவம்பர் 11 திங்கட் கிழமை
ஆடு நனைகிறது என்று ஓநாய் (கோநாய்) கூவி கூவி அழுகிறதாம்
நவம்பர் 12 செவ்வாய்க் கிழமை
ஆடு நனைந்தாலும் குட்டி நனையாது
நவம்பர் 13 புதன் கிழமை
ஆடு பயிர் காட்டும், ஆவிரை நெல் காட்டும்.

நவம்பர் 14 வியாழக் கிழமை
ஆடு பகையும் குட்டி உறவுமா?
ஆடு பிடிக்க கரடி அக்ப்பட்டது போல்
நவம்பர் 15 வெ:ள்ளிக்கிழமை
ஆடு பெருத்தால் கோனானும் பெருப்பான்
நவம்பர் 16 சனிக் கிழமை
ஆடு மிதியாக் கொல்லையும் ஆளானில்லாப் பெண்ணும் வீண்
கிழமை 17 ஞாயிற்றுக் கிழமை
ஆட்டில் ஆயிரம், மாட்டில் ஆயிரம், வீட்டில் கரண்டிப் பால் இல்லை
நவம்பர் 18 திங்கட் கிழமை
ஆடுக்கடா சண்டையில் நரி செத்தது போல்

நவம்பர் 19 செவ்வாய்க் கிழமை
ஆட்டுக்கு ஆறு மாதம் அம்மாவுக்கு எட்டு மாதம்
நவம்பர் 20 புதன் கிழமை
ஆட்டுக் குட்டிக்கு ஆனையைக் காவு கொடுக்கிறதா?
நவம்பர் 21 வியாழக் கிழமை
ஆட்டுக்குத் தோற்ற கிழப் புலியா?
நவம்பர் 22 வெ:ள்ளிக்கிழமை
ஆட்டுக் குட்டி மேல் ஆயிரம் பொன்
நவம்பர் 23 சனிக் கிழமை
ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, இந்த மதி கெட்ட மாட்டுக்கு மூனு கொம்பு.

கிழமை 24 ஞாயிற்றுக் கிழமை
ஆட்டுக்கு வால் அளவறுத்து வைத்திருக்கிறது
நவம்பர் 25 திங்கட் கிழமை
ஆட்டு மந்தை போல
நவம்பர் 26 செவ்வாய்க் கிழமை
ஆட்டுக் குட்டியைத் தோளிலே வைத்து நாடெங்கும் தேடினது போல
நவம்பர் 27 புதன் கிழமை
ஆட்டுக் கிடையிலே கோனாய் (தோண்டான்) புகுந்தது போல
நவம்பர் 28 வியாழக் கிழமை
ஆட்டுக் கடா முறைக்கிறது போல முறைக்கிறான்
நவம்பர் 29 வெ:ள்ளிக்கிழமை
ஆட்டு வெண்ணை ஆட்டு மூளைக்கும் காணாது
நவம்பர் 30 சனிக் கிழமை
ஆட்டுரம் ஓராண்டு நிற்கும், மாட்டுரம் ஆறாண்டு நிற்க்கும்

bonus proverb
ஆடு பிடிக்க கரடி அகப்பட்டது போல்
xxxxxxxxxxxxx


November 12: Guru Nanak


November 2 Kantha Sashti:–

ஆடு பிடிக்க கரடி அகப்பட்டது போல்
–subham–