
Written by London Swaminathan
Date: 8 September 2017
Time uploaded in London- 18-28
Post No. 4194
Pictures are taken from various sources; thanks.
குன்றினுச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்திராப் பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே
–திருநெடுங்களம், சம்பந்தர் தேவரம் முதல் திருமுறை
பொருள்
உச்சிமேல் விளங்கும் இலங்கைக் குன்று; அதைக் கொடிய மதில் சூழ்ந்துள்ளது அன்று உன்னை எதிர்த்த இராவணனை அடர்த்தாய் – என்று துதித்து, இராப்பகலாக உருகித் தொழுகின்ற அடியார்களின் இடரினைக் களைவாயாக. திரு நெடுங்களத்து இறைவா!
அன்றி= கோபித்து, பகைத்து
வாய்மொழி= தோத்திரம், துதி
நைவார் = மனங்கனிவார்
ஒரு காலத்தில், மேரு மலையிலிருந்து, வாயு தேவனால் பெயர்த்து வீழ்த்தப்பெற்ற மூன்று சிகரங்களுல் ஒன்றாகிய இலங்கைக் குன்று.

இந்தப் பாட்டிலிருந்து கிடைக்கும் புவியியல் செய்திகள்
1.ஒரு காலத்தில் பெரிய சுனாமி அல்லது கடலடி பூகம்ப வெடிப்பில் இலங்கைக் குன்று. தோன்றியது.
2.அதன் உச்சியில் இலங்கை இருந்தது
- 1400 ஆண்டுகளுக்கு முன்னர், சம்பந்தர் காலத்தில் கூட, இலங்கை பற்றி தெளிவான தகவல் மக்களுக்குத் தெரிந்திருந்தது.
- நூற்றுக் கணக்கான தேவாரப் படல்களில் கடல் சூழ் இலங்கை என்று வருவதால், அது ஆதி காலம் முதல் தீவு நாடாக இருந்தது.
- அந்த எழில் மிகு, பொன்னால் வேயபட்ட குன்று மேல் இருந்த இலங்கை, எப்படித் தோன்றியதோ அப்படியே கடலுக்குள் மறைந்திருக்க வேண்டும்
- கடலடி ஆராய்ச்சி மூலம், இந்த அழிவு ஏற்பட்ட காலத்தைக் கணக்கிடுவது, ராமாயண காலத்தை அறிய உதவும்

7.நமக்குத் தெரிந்தவரை கி.மு1600ல் கிரேக்க Santorini/ Theraசான்தொரினி (தேரா) யில் ஏற்பட்ட வெடிப்பு உலக மஹா நில- கடல் மாற்றங்களை ஏற்படுத்தியது.
–subham–