
Hanumar stamp released by U N O.
Written by London Swaminathan
Date: 7 May 2018
Time uploaded in London – 13-39 (British Summer Time)
Post No. 4986
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) புத்தகத்தில் ராமாயணம் குறித்து பிரெஞ்சு வரலாற்று அறிஞர் மிஷலெ (MICHELET)சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்–
ராமாயணம் இந்து மஹா சமுத்திரம் போலப் பரந்து விரிந்தது. அங்கே நாம் ஒரு தெய்வீக நல்லிணக்கத்தைப் பார்க்க முடிகிறது. பிணக்குகளிடையே பேரமைதி, அளப்பறிய இனிமை, உயிர்கள் அனைத்துடனும் எல்லையற்ற சஹோதரத்துவம், கடல் போன்று பரந்த அன்பு, கருணை, மன்னித்து அருளும் அருங்குணம் நிறைந்தது இந்தப் பெருங் காவியம்”
என்ன அற்புதமான வருணனை!

ராமனின் வர்ணம் பச்சை; லெட்சுமணனின் நிறம் தங்க நிறம்; அனுமனின் நிறம் ஊதா; ராவணனின் கலர் கருப்பு!!! எங்கே என்று கேட்கிறீர்களா? தாய்லாந்து நாட்டில்!
இந்திய- தாய்லாந்து உறவு பற்றிய சில சுவையான செய்திகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
2300 ஆண்டுகளுக்கு முன்னர், மாமன்னன் அசோகன், புத்த மதத்தைப் பரப்புவதற்காக இரண்டு துறவிகளை அனுப்பினான். ஏற்கனவே இந்தியாவுடன் இருந்த தொடர்பு காரணமாகவே இப்படி அனுப்பினான்.
தாய்லாந்தின் பழைய பெயர் சியாம தேசம்’ அதுவே சயாம் (SIAM) என்று மருவியது. இந்திய வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்த காலத்தே, இப்பகுதியை சுவர்ண பூமி (தங்க நாடு) என்று அழைத்தனர்.
குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஆண்ட மன்னர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொண்டனர். அத்தோடு தலைநகரை அயோத்தியா (AYUTHTHAYA) என்றும் அழைத்தனர். அந்த அளவுக்கு ராமாயண காவியத்தின் தாக்கம் அங்கே இருந்தது.
தனபுரி என்னும் பகுதியை ஆண்ட மஹா தக்ஷின் என்பவர் ராமாயணக் கவிதைகளை எழுதத்துவங்கினார். பின்னர் முதலாவது ராமா (1782-1780) அதை 10,000 ஸ்லோகங்களாக எழுதி முடித்தார்.
முதலாவது ராமா ராமகியான் என்று அழைக்கப்படும் ராமாயணத்தை காவிய வடிவில் கொடுத்தார்; இரண்டாவது ராமா (1809-1824) அதை . நாடகம் வடிவில் கொடுத்தார். ஆயினும் 1349 முதல் ராமாயணம் சிறு சிறு பகுதிகளாக எழுதப்பட்டது. நாடகம், ஓவியம், கதைகளில் இடம்பெற்றது.
அருகிலுள்ள வியட்நாம், லாவோஸ், இந்தோநேஷியாவில் இந்து மத அரசர்கள் இருந்ததால் எல்லையோரப் பகுதிகளில் ராமாயணம் பலவகை உருப்பெற்றது. வால்மீகி ராமாயணத்துக்கும் தாய் மொழி ராமகியனுக்கும் பல வேறுபாடுகள் உண்டு.
இந்தோநேஷியாவில் இருந்து நிழல் நாடகம் (பொம்மலாட்டம்) இறக்குமதியானது. இதில் தோல் பயன்படுத்தப்படுவதால் ஹநாங் (தோல்) என்ற பெயரில் இது அறிமுகமானது. இதில் பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் கயிறு, நூல் இல்லாமல் கைகளினாலேயே ராமாயண கதாபாத்திரங்கள் செயலில் இறங்குவார்கள்.

இதில் ராமன் பச்சை வர்ணத்திலும், லெட்சுமணன் தங்க நிறத்திலும், ஹனுமார் ஊதா நிறத்திலும், ராவணன் கருப்பு நிறத்திலும் காட்டப்படுவர். பாமர மக்கள் கதையை அறிந்துகொள்ள இது உதவும். இவ்வாறு ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு வர்ணத்தில் இருப்பது தாய் பொம்மல்லாட்டத்தின் சிறப்பு ஆகும்.
தாய் ராமாயணத்தில் பல விநோதக் கதைகளும் உண்டு. ஹனுமார் லோப் பூரியை ஆண்ட கதையை, அடுத்த கட்டுரையில் சொல்கிறேன். லோப் பூரி என்பது லவ புரி என்பதன் மரு ஆகும். லவன், குசன் ஆகிய இருவரும் ராமனின் புதல்வர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே; லாவோஸ் என்னும் நாடே லவனின் பெயரால் வந்த நாடுதான் என்பர் அறிஞர் பெருமக்கள்!
வாழ்க தாய் ராமாயணம்!! வளர்க ராமன் புகழ்!!!

—சுபம்–