
Translated by London swaminathan
Date: 13 September 2016
Time uploaded in London: 20-20
Post No.3151
Pictures are taken from various sources; thanks.
இந்தியாவில் பல வகையான ஆண்டுகள்/ காலண்டர்கள் பின்பற்றப்படுகின்றன. கலியுகம் (துவக்க ஆண்டு கி.மு.3101) பற்றி எல்லோருக்கும் தெரியும். இதே ஆண்டை மாயா நாகரீகம் , எகிப்திய நாகரீகம் எல்லாம் பெயர் சொல்லாமல் பின்பற்றி வருவது பற்றி முன்னரே எழுதினேன். கலியு கத்தை நாள் கணக்கில் குறிப்பிடம் கோ கருநந்தடக்கனின் பழங்கால தமிழ் கல்வெட்டு பற்றியும் எழுதிவிட்டேன். இந்தியாவின் தேசிய “சக” வருடம் தினமும் வானொலியில் அறிவிக்கப்படுவதால் அனைவரும் அறிந்ததே. பஞ் சாங்கத்தின் முதல் பக்கத்தில் கலியுகம் முதல் நாமாக உண்டாக்கிய திருவள்ளுவர் ஆண்டு வரை இருப்பதையும் பெரும்பாலோர் அறிவர்.
சில நாட்களுக்கு முன்னர் டாக்டர் எஸ்.என்.சர்மா எழுதிய ஒரு புத்தகம் படித்தேன். அதில் விக்ரம ஆண்டு பற்றிய பல தெரியாத தகவல்கள் உள்ளன. வரலாறு படிப்போருக்குப் பயனுள்ள தகவல்கள்.
விக்ரம ஆண்டு என்பது விக்ரமாதித்யன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. இது கி.மு.57-ல் துவங்கியது. சக இன வெளிநாட்டுப் படை எடுப்பாளர்களை நாட்டைவிட்டு விரட்டியதைக் கொண்டாட இந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.

இது குறித்த விசித்திர விஷயங்கள் என்ன?
1.முதலில் இதை கிருத வர்ஷம் என்றும் பின்னர், மாளவ வருஷம் என்றும் பின்னர் விக்ரம வருஷம் என்றும் அழைத்தனர். ஏன் இப்படிப் பல பெயர்கள்? அவற்றின் உண்மைப் பொருள் என்ன? பெரிய புதிர்!
- இதை விக்ரம ஆண்டு என்று அழைத்தது அது தோன்றி சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின்னரே!
- இவர்கள் குறிப்பிடும் கி.மு.57-ல் விக்ரமாதித்யன் என்ற ஒரு மன்னன் இந்தியாவின் ஒரு பகுதியை ஆண்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை! யார் இந்த விக்ரமாதித்யன்?
4.இந்தியாவில் பல மன்னர்கள் விக்ரமாதித்தன் என்ற பெயருடன் ஆண்டனர். வேதாளக் கதைகளில் புகழ்மிகு விக்ரமாதித்தன் வருகிறான். கதா சரித் சாகரத்தில் அவன் பற்றிக் குறிப்பு வருகிறது.
மஹேந்திர ஆதித்தன் என்ற மன்னனுக்கு சிவபெருமான் அருளால் விக்ரமாதித்தன் என்ற மகன் தோன்றியதாகவும் அவன் சகரர்களை விரட்டியடித்து பல மன்னர்களை வென்றதாகவும் கதா சரித் சாகரம் என்னும் (கதைக்கடல்) நூல் கூறுகிறது. ஆனால் அது கூறும் மன்னர்களில் ஒருவர் கூட வரலாற்றுப் புத்தகத்தில் இல்லை.
கௌட (வங்க) தேச சக்திகுமாரன்
லாட தேச விஜயவர்மன்
சிந்து தேச கோபாலன்
கர்நாடக தேச ஜயத்வஜன்
காச்மீர் தேச சுநந்தனன்
பாரசீக தேச நிர்முகன்
ஆகியோரை விக்ரமாதித்தன் வென்றதாக அந்த நூல் செப்புகிறது.
5.வரலாற்றில் எல்லோரும் அறிந்த விக்ரமாதித்தன் இரண்டாவது சந்திரகுப்தன். இது அவனது பட்டங்களில் ஒன்று.
5.உலகப் புகழ்பெற்ற காளிதாசனை– விக்ரமாதித்தன் அவைப் புலவர்களில் ஒருவர் என்று கூறும் சம்பிரதாயமும் உளது. அவன் உஜ்ஜைனி நகரத்திலிருந்து ஆண்டவன்.
6.சமண மத நூல்கள் மேலும் பல புதிய கதைகளை மொழிகின்றன. ஆனால் இவை அனைத்தும் 12-ஆம் நூற்றாண்டில் எழுத்துரு பெற்றவை. மஹாவீரருக்குப் பின்னர் காலகன் என்பான் 60 ஆண்டுகள் ஆண்டதாக அவை கூறும். கர்தபில்லா என்பவனை சகர்கள் தோற்கடித்ததாகவும் அவநது மகன் விக்ரமாதித்தன் –சகர்களை விரட்டி பழி வாங்கினான் என்றும் தபாகச்ச பட்டாவளி (சமண நூல்) சொல்லும்.
7.நூற்றுக்கு மேற்பட்ட மன்னர்களின் பெயர்களைப் பட்டியலிட்ட புராணங்கள் விக்ரமாதித்தன் பெயரைச் சொல்லவில்லை!!
நாளந்தா கல்வெட்டில் (கி.பி.226) மாளவ வருடம் குறிப்பிடப்படுகிறது.
மாண்டசூர் கல்வெட்டும் (கி.பி.493) மாளவ கண பற்றி பேசுகிறது. மாளவ கண என்ற சொல்லை 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினியும் இலக்கணப் புத்தகத்தில் எடுத்துக் காட்டுகிறார்.
தோல்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட சௌஹான் கல்வெட்டில்தான் முதல் முதலில் விக்ரம சம்வட் (ஆண்டு) வருகிறது. அது கி.பி..842 ஆம் ஆண்டுக் கல்வெட்டு!
நேபாள த்தில் விக்ரம சம்வட் (வருஷம்) பயன்படுத்தப்படுகிறது. சமணர் புத்தககங்களில் பல கதைகள் உள்ளன. ஆனால் வரலாற்று ஆதாரங்கள் இல்லை.

என் கருத்து:–
1.வெள்ளைக்காரர்கள் எழுதிய புத்தகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு நாமாக மகாநாடு கூட்டி ஆராய வேண்டும். வெளிநாட்டினர். அங்கிருந்து ஒன்று, இங்கிருந்து ஒன்று என்று பிச்சுப் பிடுங்கி ஒரேயடியாகக் குழப்பிவிட்டுள்ளனர். எங்கெங்கெல்லாம் முரண்பட்ட தகவல்கள் உள்ளனவோ அவைகளில் தனக்கு ஆதரவாக உள்ள விஷயங்களை எடுத்துக் கொண்டு மற்றவைகளை ஒதுக்கிவிட்டனர். சமணர் நூல்கள், கதா சரித் சாகரம் முதலியன பொய் சொல்லத் தேவையே இல்லை.
2.விக்ரமாதித்தன் என்பது ஒரு பட்டமே தவிர மன்னன் பெயர் இல்லை. ஆகையால் மன்னன் பெயர் என்பதை மற ந்துவிட்டு அக்கால மன்னர்களில் இது யாருக்குப் பொருந்தும் என்று பார்க்க வேண்டும். காளிதாசன் போன்றோர் இப்படி ஒரு மன்னன் பெயரைச் சொல்லவில்லை.
3.கடைசியாக இரண்டாவது சந்திரகுப்தன் விக்ரமாதித்தன் என்ற பட்டத்தைக் கொண்டதால் அவனை கி.மு57-ல் ஆண்ட மன்ன என்று கொண்டால் இந்திய வரலாறு தலை கீழாக மாறும் அதாவது எல் லா மன்னர்களின் காலமும் 400 ஆண்டுகளுக்கு முன்போடப்படும். இந்தியாவின் பழமை இன்னும் வலிவு பெறும். இந்தக் கோண த்திலும் ஆராய வேண்டும். இந்தப் புதிர் இன்றுவரை தீர்க்கப்படா மல் இருப்பதால் இது பற்றி விவாதிக்க ஆராய்ச்சி மகாநாடு கூட்ட வேண்டும். இது தமிழ் வரலாற்றை மாற்றி எழுதவும் — காலத்தை முன் போடவும் — உதவும்.

–Subaham–
You must be logged in to post a comment.