எது மிகுந்த நன்மையைத் தரும்? (Post No.4317)

Written by S.NAGARAJAN

 

 

Date:20 October 2017

 

Time uploaded in London- 6–42 am

 

 

Post No. 4317

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

சம்சார சாரம் என்ன? எது மிகுந்த நன்மையைத் தரும்?

 

ச.நாகராஜன்

 

சம்ஸ்கிருத சுபாஷித ஸ்லோகங்களில் கிம் என்று ஆரம்பிக்கும் ஸ்லோகங்கள் ஏராளம் உள்ளன.

 

கிம் என்றால் என்ன, எது (what) என்ற வினாச் சொல்லாகும்.

ஆகவே நமக்கு பல விஷயங்களைப் பற்றிய நல்ல விடைகள் கிடைக்கும்.

 

இரண்டு செய்யுள்களை இங்கு பார்ப்போம்.

 

கிம் சம்ஸாரே சாரம்

பஹுஷோபி விசிந்த்யமானமிதமேவ I

மனுஜேஷு த்ருஷ்டதத்வம்

ஸ்வபரஹிதாயோக்யதம் ஜன்ம II

 

ஆதிசங்கரர் அருளிய ப்ரஸ்னோத்தர ரத்னமாலாவிலிருந்து எடுக்கப்பட்ட சுபாஷித ஸ்லோகம் இது.

 

இது அமைந்துள்ள சந்தம் ஆர்யா.

 

இதன் பொருள்:

உலக வாழ்க்கையின் சாரம் என்ன? (சம்ஸார சாரம் தான் என்ன?)

-இதை அடிக்கடி சிந்திக்கவேண்டும்.

 

இப்படிப் பட்ட சிந்தனையிலிருந்து மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை, வாழ்க்கையானது மற்றவருடைய நன்மைக்காகவும் தனது நன்மைக்காகவும் வாழப்பட வேண்டும்.

இதை ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்ளார் கே.வி.சர்மா இப்படி:

 

What is the essence of worldly life? – This is to be pondered over frequently. The truth that is found by men (through such ponderings) is that life should be lived for others’ good as well as one’s own. (Translation by K.V.Sarma)

 

இன்னொரு கிம் ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

 

கிம் சௌர்யேன சராகஸ்ய மதக்ஷீபஸ்ய தந்தின: I

பந்தகீலாமலோபேன ய: க்ஷிபத்யவடே தனும் II

 

இதன் பொருள்:

எளிதில் உணர்ச்சிவசப்படுபவனுக்கு வீரம் இருந்து என்ன பயன்?

மதம் பிடித்திருக்கும் யானையால் என்ன பயன்?

தூய்மையற்ற பெண்ணை விரும்பும் பேராசைக்காரன் தனது உடலைக் கிணற்றில் போடுகிறான்.

 

இதை ஆங்கிலத்தில் அழகுற மொழிபெயர்த்துள்ளார் திரு ஏ.ஏ.ராமநாதன்:

What is the use of valour to one who is passionate?

What use is an elephant that is in rut?

That man throws his body into a well, who is greedy for the gain of an unchaste woman.

(Translation by A.A.Ramanathan)

 

இதை இயற்றியவர் பிரசித்தி பெற்ற காஷ்மீரைச் சேர்ந்த கவிஞரான க்ஷேமேந்திரர். இவர் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

 

தர்ப தலனம் என்ற நூலை இவர் இயற்றியுள்ளார். 587 சம்ஸ்கிருத செய்யுள்கள் அடங்கியுள்ள நூல் இது.. விசாரம் அல்லது எண்ணங்கள் என்ற தலைப்பில் அழகுற அமைந்துள்ள ஏழு அத்தியாயங்களைக் கொண்ட கவிதைச் செல்வம் இது.

மனித நடத்தைகளை நையாண்டி செய்து எழுதப்பட்டுள்ள நூல் இது.

 

சம்ஸ்கிருதத்தில் இது போன்ற கேலி செய்யும் அல்லது நையாண்டி செய்யும் பாடல்கள் இல்லை என்று சொல்லும் மேலை நாட்டவர் முகத்தில் கரி பூசும் அளவு அழகுற அமைந்துள்ள நையாண்டிக் கவிதைகள் ஏராளம் உள்ளன.

இதைப் படித்து இதில் கேலி செய்யப்படும் தீமைகளின் பலன்களை அறிந்து அவற்றை நீ நல்வாழ்க்கை வாழ ஒருவன் தலைப்பட வேண்டும் என்பதே நூலின் நோக்கமாகும்.

ஏனடி கோபம் என் மேல்? சம்ஸ்கிருதச் செல்வம் (Post No.4242)

Written by S.NAGARAJAN

 

Date: 25 September 2017

 

Time uploaded in London- 5-18 am

 

Post No. 4242

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

ஏனடி கோபம் என் மேல்! கவர்ச்சிப் பாவையே!! – ஒரு காதலனின் புலம்பல்!!!

 

ச.நாகராஜன்

 

காதலன் ஒருவன் தவிக்கிறான். ஏனெனில் அவனது காதலி திடீரென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள்.

கோபம்.ஏனென்று தான் தெரியவில்லை.

அவனோ இன்னொரு பெண்ணை வார்த்தையால் கூடத் தொட்டதில்லை.

அவனது புலம்பல் கவிதையாக மலர்கிறது.

சார்தூலவிகிரிதிதா சந்தத்தில் அமைந்த அழகிய கவிதை இது:

 

 

உக்தம் துர்வசனம் மயா ந சுபகே ஹாஸ்யேபி துக்கப்ரதம்

த்யக்த்வா ஸ்வாமபி மாஷிதைரபி மயா நான்யாங்கனா லாலிதாI

ஸ்வாமேகாமனவத்யம் பூஷணபரை: சம்பாவயாமி த்வயா

ஹே! நிஷ்காரணகோபனே வ்த க்ருத: கிமர்த்தம் மயி II

 

 

கவிதையின் பொருள் இது தான்:

 

வலியைத் தரும் சுடுசொல் ஒன்றைக் கூட ஒருபொழுதும் நான் பேசியதில்லை;

ஓ! கவர்ச்சிப் பாவையே!

 

விளையாட்டாகக் கூடப் பேசியதில்லையே!

நீ இல்லாத போதும் கூட எந்த ஒரு பெண்ணையும் வார்த்தைகளினால் கூட நான் தொட்டதில்லை!

குற்றமற்ற குணங்களென்னும் செல்வத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உன்னை நான் போற்றுகிறேன்.

 

ஓ!அன்பே!

எந்த விதக் காரணமும் இன்றி என் மீது கோபம் கொண்டிருக்கிறாயே,

என்னிடம் நீ ஏன் கோபம் கொண்டிருக்கிறாய் என்று சொல்லேன்.

 

அருமையான இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் தருகிறார் திரு ஏ.ஏ,ஆர் (A.A.R. – A.A.Ramanathan)

 

Never have I spoken a harsh word which may give pain,

Oh, Charming one, Even during jokes;

Even in your absence no other girl was carassed by me even in words;

I honour you alone adorned with a wealth of faultless merits;

Oh, Dear who get angry for no cause,

Tell me why you are angry with me.

 

**

இன்னொரு கவிதை

தன் விருப்பத்திற்குகந்த காதலியை எப்படி அணுக வேண்டும்.

யோசனை தருகிறார் ஒரு கவிஞர் இப்படி:

 

உக்தம் தே ருதிரேணாஹம் ஸ்ப்ருஷ்டம் தே மஸ்தகம் மயா I

இத்யேதாஞ் சபதான் க்ருத்வா சா வை கம்யா புன:புன: II

 

விதவிருத்தம் என்ற சந்தத்தில் அமைந்த கவிதை இது.

பொருள்:

 

 

“உனது ரத்தத்தால் நனைக்கப்பட்டவன் நான். உனது தலை என்னால் வருடப்பட்ட ஒன்று” என்று இப்படி உறுதி மொழிகள் சொல்லிக் கொண்டே மீண்டும் மீண்டும் நெருக்கமாக அவளை அணுக வேண்டும்.

 

 

“I have been wetted by your blood, your head has been touched (fondled)by me” – swearing words such as these, she must be approached closedly again and again.

(Translation by A.A.Ramanathan)

 

சம்ஸ்கிருதத்தில் காதல் கவிதைகள் என்று எடுத்துக் கொண்டால் ஆயிரக் கணக்கில் உள்ளன.

சம்ஸ்கிருதத்தை –

வேத மொழி என்பர் சிலர்;

தெய்வ மொழி என்பர் சிலர்.

வித்தக ஞான மொழி என்பர் சிலர்.

ராஜ நீதி மொழி என்பர் சிலர்

இசை மொழி என்பர் சிலர்.

புராண இதிஹாஸ தர்ம சாஸ்திர மொழி என்பர் சிலர்.

கம்ப்யூட்டருக்கான மொழி என்பர் சிலர்.

ஆனால் மேலே உள்ளது போன்ற கவிதைகளைப் படிப்போர்

சரஸ சல்லாப மொழி என்பர்.

 

எல்லாம் சரி தான்.

 

சம்ஸ்ருதம் அறிவோம்! சுகமாய் வாழ்வோம்!!

****