யாழ்ப்பாணக் கவிஞர் சருப்பதோபத்திரம்

saraswati

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1512; தேதி 24 டிசம்பர், 2014.

 

தமிழ் என்னும் விந்தை! -14

சருப்பதோபத்திரம் – 3

ச.நாகராஜன்

யாழ்ப்பாணத்துக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றிய ஒரு சருப்பதோபத்திரம் இது:-

தேவா நாதா தாநா வாதே            

  வாரா தேதா தாதே ராவா                                        

 நாதே னாகா கானா தேநா                                            

தாதா காயா யாகா தாதா

 

 

இதன் பொருள் :-

தேவா – பிரகாசம் உடையவரே!                                         

நாதா – தலைவரே!                                                

தாநா – வலிமையினை உடையவரே!                                       

தாதா – பிதாவே!                                                      

  வாநா – ஆகாயமானவரே!                                                  

 தேன் நாகா – (கூண்டுகள் தூங்கும் கீரி) மலையை உடையவரே!      

கானா – கீதப்பிரியரே!                                                 

தே – தெய்வமே!                                                      

காயா – திருமேனியை உடையவரே!                                     

  யாகா – யாகங்களுக்கு உரியவரே!                                      

தாதா – கொடையாளரே!                                                 

வாது வாராதே – வாது வாராதபடி                                

தேரா – சேர்ந்து                                                  

 நா தா தா – நா வன்மை தந்தருள்க!

இனி இதை 64 அறைகளில் பொருத்திப் பார்ப்போம்:

bandhamnew14

தே வா நா தா தா நா வா தே
வா ரா தே தா தா தே ரா வா
நா தே னா கா கா னா தே நா
தா தா கா யா யா கா தா தா
தா தா கா யா யா கா தா தா
நா தே னா கா கா னா தே நா
வா ரா தே தா தா தே ரா வா
தே வா நா தா தா நா வா தே
               

 

எந்த வாயில் வழியாக நுழைந்தாலும் பாடலைப் படிக்க முடிகிறது. அது தான் சருப்பதோபத்திர பந்தம்!

இனி கவிஞர் பா.முனியமுத்து (உவமைப்பித்தன்) இயற்றிய ஒரு சருப்பதோபத்திரத்தைப் பார்ப்போம்:-

பாகா நாதா தாநா காபா                                                காவே நீகா காநீ வேகா                                                நாநீ தாமா மாதா நீநா                                                 தாகா மாதே தேமா காதா!

இதை 64 கட்டங்களில் பொருத்திப் பார்த்தால் வரும் சருப்பதோபத்திரம் இது தான்:-

பா கா நா தா தா நா கா பா
கா வே  நீ கா கா  நீ வே கா
நா நீ தா மா மா தா நீ நா
தா கா மா தே தே மா கா தா
தா கா மா தே தே மா கா தா
நா நீ தா மா மா தா நீ நா
கா வே  நீ கா கா நீ வே கா
பா கா நா தா தா நா கா பா

தமிழ் என்னும் அமுத சாகரம் பரந்து விரிந்த எல்லை காண முடியாத ஒன்று. முடிந்த வரை அதை அள்ளி அள்ளிப் பருகலாம்.

-தொடரும்