சங்க இலக்கியத்தில் கடல்கோள் (Tsunami சுனாமி)Post.9554

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9554

Date uploaded in London – –1 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

உலகத் தமிழர் பேரமைப்பு வெளியிட்ட நாலாம் ஆண்டு நிறைவு மாநாட்டு மலரரில் என் கட்டுரை 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதன் போட்டோ காப்பியை நான் இந்த பிளாக்கில் வெளியிட்டேன். இப்பொழுது அதை சாதாரண வோர்ட் WORD வடிவில் வெளியிடுகிறேன்.எழுதியவர் பெயரையும், பிளாக்கின் பெயரையும் நீக்காமல்  பலரும் வெளியிட்டால் தமிழ் வளரும்; தமிழர்கள் செழிப்படைவர்.

சுனாமி (TSUNAMI) என்னும் கடல்கோள் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட பின்னர் மக்கள் இதைப் பற்றி அறிய பெரிய ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் கடந்தகால கடல்கோள் (சுனாமி) தாக்குதல்கள் குறித்து நிறைய குறிப்புகள் உள்ளன.

      கடலுக்குத் தமிழில் முந்நீர் என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் முந்நீர் என்ற சொல் வருகிறது. (புறநானூற்றுப் பாடல்களில் 9, 13, 20, 30, 35, 60, 66,137, 154 முதலியன) நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர் என்று நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே கடலின் அழிவு சக்தி குறித்தும் சுனாமி எனப்படும் இராக்கதப் பேரலைகள் குறித்தும், தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான்.

      தமிழை வளர்க்க அமைக்கப்பட்ட முதலிரண்டு தமிழ்ச் சங்கங்களையும் கடல் விழுங்கியதால் தற்போதுள்ள மதுரையில் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இந்த சுனாமியை கடல்கோள் என்று பழைய உரைக்காரர்கள் குறிப்பர். தென் மதுரையையும் கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இறையனார் களவியலுரையும் அடியார்க்கு நல்லாரின் உரையும் இதைப்பற்றி விளக்கமாகப் பேசுகின்றன. 

சங்கத் தமிழ் நூலான கலித்தொகையும் சங்கக் காலத்துக்குப்பின் எழுந்த சிலப்பதிகாரமும் பாண்டிய நாட்டின் தென் பகுதியை கடல் விழுங்கியதைப் பின்வருமாறு கூறுகின்றன:

மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர்கெண்டை,
வலியினால் வணக்கிய, வாடாச்சீர்த் தென்னவன்
”  – கலித்தொகை 104

(முற்காலத்தில் கடல் பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகில் உள்ள சேர சோழ நாடுகளை வென்று புலிக்கொடி வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்)

பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி

– சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22

(கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக்  கோட்டையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வட்திசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி  கொண்டான்)

      சிலப்பதிகாரத்தில் மற்றொரு பாடலுக்கு உரை எழுதிய அடி யார்க்கு நல்லார் 700 காதம் பரப்புடைய 49 நாடுகளைக் கடல் விழுங்கியதாகக் கூருகிறார். அந்த 49  நாடுகளின் (வட்டாரங்களின்) பெயர்களையும் நமக்கு அளிக்கிறார். தலைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழ் நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இடைச்சங்கக் காலத்தில் எழுந்த தொல்காப்பியமும், வேறு சில பாடல்களும்  மட்டும்  நமக்குக் கிடைத்தன.

      கொற்கையிலிருந்த தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டதைப் பிளினியும் (Pliny) குறிப்பிடுவதால் இந்த கடல்கோள்கள் கி. மு. முதலிரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம்.

      பல சங்கப் பாடல்கள் சுனாமிக்குக் காரணமான நில அதிர்ச்சி குறித்தும் (Earth quake) கடல் எல்லை மீறுவது பற்றியும் பொதுவாக பாடுகின்றன.

நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்  

குறுந்தொகை 373

நிலம், நீர், தீ ஆகியன அவைகளின் இயல்பான நிலையிலிருந்து மாறினாலும் கடல் எல்லை மாறுபட்டாலும் என்று கூறுவதிலிருந்து இத்தைய இயற்கை மாற்றங்களை மக்கள் அறிந்தது தெரிகிறது.

      “பெருநிலங்கிளறினும்” (நற்றிணை 201) “நிலம்புடை பெயர்வதாயினும்” (நற்றிணை 9) “நிலத்திறம் பெயருங்காலை யாயினும்” (பதிற்றுப்பத்து 63-6) “நிலம்புடை பெயர்வதாயினும்” (புறநானூறு 34-5) ஆகிய அடிகள் நில அதிர்வு பற்றியும் நிலம் அழிந்துபட்டு எல்லை மாறுவது பற்றியும் பேசுகின்றன.

வடவைத்தீயும் மடங்கலும்

      கடலுக்கடியில் வடவை என்னும் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும் அது ஊழிக்காலத்தில் கடல் நீருடன் எழுந்து வந்து உலகை அழிக்கும் என்றும் சங்கநூல்களுக்கு உரை எழுதியோர் கூறுகின்றனர். வடவைத்தீயை வடமுகாக்கினி என்றும் அது குதிரை வடிவமுள்ள பெருந்தீ என்றும் வடமொழி நூல்கள் குறிப்பிடுகின்றன. வடவை என்பது கடலுக்கடியில் உள்ள எரிமலைகளா (Submarine Volcanos)  என்று தெரியவில்லை. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் ராட்சதப் பேரலைகள் வந்து ஆயிரக் கணக்கானோரை உயிர்ப்பலி கொண்டபோது மர்மத்தீ ஒன்று கடலில் தோன்றியது. இது புயலின் போது பேரலைகளின் உராய்வினால் ஏற்பட்ட மின்சார சக்தி என்று அப்போது விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் வடவை தீயா என்றும் தெரியவில்லை. ஆனால் வடவைத் தீ தோன்றும் போது கடல் பொங்கி எழுந்து நாட்டை அழிக்கும் என்று புலவர்கள் நம்பியது உறுதியாகத் தெரிகிறது.

BIG BANG AND BIG CRUNCH

      சங்க இலக்கியத்தில் வரும் மற்றொரு சொல் மடங்கல். இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் ஊழிக்காலத்தில் உலகம் மடங்கிப் போவதை (அழிவதை) இப்படிக் கூறிவதாக எழுதியுள்ளனர். இப்படிப் பிரபஞ்சம் உருவானதற்கு மாபெரும் வெடிப்பு (Big Bang) காரணம் என்று கூறும் வானநூல் அறிஞர்கள் இது ஒரு சுருங்கி (மடங்கி) அழியும் (Big Crunch) என்றும் கூறுகின்றனர். இந்த விளக்கம் சங்கக் காலத்திலேயே இருப்பது வியப்புக்குறியது. (மடங்கல்: பரிபாடல் 1-47, 3-8, கலித்தொகை 2-3, 105-20, 120-8, 122-1, பதிற்றுப்பத்து 62-8 முதலியன)

பாண்டியனும் பரசுராமனும்

      தமிழ்ச் சங்கத்தை அழித்த கடற்கோளுக்குப் பாண்டியனின் செயல்தான் காரணம் என்று பாடல் கூறுகிறது. (சிலப்பதிகாரம் XI 11-17) வடிம்பலம்ப நின்ற பாண்டியன் தனது பாதச்சுவடுகள் போல செய்து அதை கடல் கழுவும்படி கடற்கரையில் வைத்ததாகவும் கடல் பொங்கியபோது வேலை எரிந்து அதை அடக்கியதாலும் கடலுக்குக் கோபம் ஏற்பட்டதாகச் சிலப்பதிகாராமும் திருவிளையாடல் புராணமும் கூறும். இவை பழங்காலச் சடங்குகளையும் நம்பிக்கையையும் காட்டுகின்றன. ஆனால் கடல் பொங்கி நாட்டை அழித்தது உண்மை. இக்கதைகளை புராணக் கதைகள் என்று சொல்லி ஒதுக்கி விடாமல் அதன் பின்னுள்ள உண்மைகளை உய்த்தறிவது நம் கடமை. தென்கிழக்கு ஆசியாவில் கூட கடற்கரையில் மன்னர்கள் பாதங்களைச் (அடிச்சுவடு) செய்து வழிபடும் வழக்கம் இருந்தது. காளிதாசன் என்ற மாபெரும் வடமொழிக் கவிஞனும் சிவனின் பாதச்சுவடுகளைக் குறிப்பிடுவான். இன்றும் இலங்கையில் சிவனின் – புத்தரின் பாதச்சுவடுகள் உள்ளன.

      பரசுராமன் (விட்டுணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று) கேரளத்துக்கு வந்தபோது கடலும் மலையும் ஒட்டியிருந்ததாம். பரசுராமனின் வேண்டுகோளுக்கிணங்கி கடல் பின்னோக்கிச் சென்று கேரள மாநிலத்தை அவருக்கு வழங்கியதாகவும் புராணங்களும் கேரள மகாத்மியங்களும் கூறுகின்றன. இதிலுள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் கடல் சுவற வேல்விட்ட பாண்டியன் ஆட்சி செய்த காலாத்தில் தமிழ்நாட்டிலும் பரசுராமன் வந்தபோது கேரளத்திலும் கடல் பின்வாங்கிச் சென்றது என்பதுதான். கடல் எல்லை மாறி நிலம் வெளிப்பட்ட புவியியல் மாற்றம்தான் இப்படி புராணக்கதைகளாக மாறிவிட்டன .

      (அகத்திய முனிவர் விந்திய மலையை பங்கம் செய்தார், கடலைக் குடித்தார் என்பதெல்லாம் அவர் நிலம் வழியாக தென்னிந்தியாவுக்கு வந்து தென்கிழக்கு ஆசியாவரை சென்று நாகரிகத்தை நிலைநாட்டினார் என்பதையே கூறுகிறது)

      இராவணன் மலையை தூக்கியதாகவும் சிவபெருமான் கோபம் கொண்டு அவன் கைகளையும் தலையையும் நசுக்கிப் பின்னர் அவன் மன்னிப்புக் கேட்டு ஓடியதாகவும் ஒரு கதை (தேவாரப் பாடல்களிலும்  புராணத்திலும்) உள்ளது. ராமனின் தண்டனை பொறுக்காமல் சீதையை பூமாதேவி நிலத்தைப் பிளந்து அழைத்துச் சென்றதாகவும் இராமாயணம் கூறுகிறது. இவை எல்லாம் அந்தந்த காலத்தில் நடந்த பூகம்பங்கள்தான். (Earth quakes) காலப்போக்கில் ஏதாவது இரண்டு நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்தி மக்கள் கதை கட்டிவிடுகின்றனர். தற்காலத்தில் கூட ஒருவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தால், ‘மண்ணைக் கவ்வினார்’, ‘மூக்குடைப்பட்டார்’, ‘முகத்தில் கரிபூசிக் கொண்டார்’, ‘பலத்த அடி வாங்கினார்’ என்றெல்லாம் பத்திரிக்கைகள் எழுதும். ஆனால் இவைகளின் உண்மைப் பொருள் என்ன என்று எல்லாருக்கும் விளங்கும்.

      கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனின் பாடல் புறநானூற்றில் உள்ளது. இந்த பாண்டிய மன்னன் சுனாமியில் இறந்தானா அல்லது கடற்படையெடுப்பில் இறந்தானா என்பது ஆராய்ச்சிக்குரிய செய்தி.

      ஊழிக்காலத்தில் கடல் பொங்கி எழுவதைத் தாயங்கண்ணனார் (புறம் 397) இப்படிப் பாடுகிறார்.  

பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட

விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லபரிபாடல் 2-1/4

ஊழியின் இறுதியில் உலகம் முழுதும் இருள் பரவிக் கடல் பொங்கி எழுந்து நிலப்பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும். என்றும் பின்னர் பன்னிரு சூரியர்களும் வடவைத் தீயும் தோன்றி நீரை வற்றச் செய்யும் என்றும் அரிசில் கிழார் எழுதிய பாடலுக்கான (பதிற்றுப் பத்து 72-8/16) உரை கூறுகிறது. மற்றொரு பாடல் (62-5) மடங்கல் பற்றி விரிவாகக் கூறுகிறது. இறைவனிட்ட சாபத்தால் கடற்கோள் தோன்றும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

வானவன் விழாக்கோண் மாநகரொழிந்தது

மணிமேகலா தெய்வ மற்றது பொறாஅள்

அணிநகர்தன்னை யலைகடல் கொள்கென

விட்டனள் சாபம் பட்டதிதுவால்

இந்திர விழாவை மன்னன் கொண்டாடா விட்டால் மன்னனது நாட்டை கடல் அழிக்கும் என்பது இதன் பொருள்.

      வராகவதாரத்தில் விட்டுணு பன்றி (Wild Boar)  வடிவம் கொண்டு பூமியை கடலிலிருந்து மீட்டதாக கூறுவதும் புவியியல் மாற்றத்தையே (Geological Change after the Ice Age) . கடல் நீரால் மூடியிருந்த உலகில் நீர் வடிந்து நிலப்பகுதி வெளியானது என்ற உண்மையைத்தான் புராணக்கதை வழியாகத் தருகிறார்கள். இது போன்ற பல உண்மைகள் சங்க இலக்கியத்தில் மறை பொருளாகக் கூறப்பட்டுள்ளன. அவைகளை பகுத்தறிவது நம் கடமை.

Xxxxx subham xxxxx

tags- சுனாமி, சங்க இலக்கியம், கடல்கோள், பஃறுளி , குமரிக்கோடு,

வடவைத் தீ , மடங்கல், முந்நீர்

சுனாமி (Tsunami) வந்தாலும் பெரியோர்கள் பிறழ மாட்டார்கள்- வள்ளுவன், பர்த்ருஹரி கூற்று(Post 6654)

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com


Date: 20 JULY 2019


British Summer Time uploaded in London – 10-13 AM

Post No. 6654


Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial blog. 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722)

adisesha

 

tsunami snake

 

sesha, pullaboothangudi

Written by london swaminathan

Date: 14 April, 2016

 

Post No. 2722

 

Time uploaded in London :– காலை 6-19

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நான் வாகன ஆராய்ச்சி செய்பவன். பல வாகன ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, இதே பிளாக்கில் வெளியிட்டிருக்கிறேன். அப்படி நாக வாஹன படம் ஒன்றை எனது பைலில் ‘சேவ்’ செய்துவிட்டு அடுத்த நிமிடம் ஒரு சுனாமி படத்தைப் பார்த்தவுடன் அசந்தே போய்விட்டேன். ஏனெனில் அதே நாக வாஹனம் அந்த ஆழிப் பேரலைகளில் இருந்தது. இதை கண்கள் காணும் மாயத்தோற்றம் – ஆப்டிகல் இல்லூஷன் OPTICAL ILLUSION – என்பதா அல்லது இந்து மதம் கூறும் விஞ்ஞான உண்மை என்பதா என்பதை கட்டுரையைப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.

 

15 நாடுகளில் 2004-ஆம் ஆண்டிலும், ஜப்பானில் 2011 ஆம் ஆண்டிலும் சுனாமி என்னும் ராட்சதப் பேரலைகள் தாக்கிப் பல லட்சம் மக்கள் உயிரிழந்தை நாம் அறிவோம். இதில் வரும் ராட்சதப் பேரலைகள் பாம்பு உருவத்தில் வருகின்றன. ஆயிரம் தலையுடைய ஆதி சேஷனின் படுக்கையில், பால் கடலில் பள்ளி கொண்ட பரமனை இந்து மத நூல்கள் துதி பாடுகின்றன. இந்த ஆதி சேஷன் ஒரு கல்பத்தின் முடிவில் விஷம் கக்கி உலகை அழிப்பான் என்று நமது புராணங்கள் சொல்லும். அது மட்டுமல்ல பாதாள உலகத்தின் அரசன் நாக தேவன் என்றும் நமது நூல்கள் செப்பும். (கல்பம் என்பது ஒரு பிரம்மாவின் ஆயுள்).

Wave

உலகில் நாகம் பற்றிக் குறிப்பிடாத மதமோ கலாசாரமோ கிடையாது. ஆஸ்திரேலிய வானவில் பாம்பு—ரெயின்போ ஸ்னேக்- பற்றி எனது ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். இந்தியாவில் அர்ஜுனனும் கிருஷ்ணனுன் காண்டவ வனத்தை (கோண்ட்வானா லாண்ட்) எரித்து வெளியேற்றிய மய தானவன் துவக்கிய கலாசாரம்தான் தென் அமெரிக்க மாயன் பண்பாடு என்றும் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். பைபிளில் பாம்பு உள்ளது; ரிக் வேதத்தில் பாம்பு உள்ளது. ரிக் வேதத்தில் உள்ள பாம்பு ராணியைத் தான் மினோவன், சிந்து சமவெளிகளில் அப்படியே படமாகக் காட்டியுள்ளனர் என்று இன்னுமொரு ஆராய்ச்சிக் கட்டுரையில் குறிப்பிட்டேன்.

காண்க: (Please read my post Serpent Queen: Indus Valley to Sabarimalai – posted on 17th June 2012)

 

velli naga asana

 

wavesp57arch

 

யுக முடிவில் ஆதி சேஷன் விஷம் கக்கி உலகம் அழியும் என்பதை, சுனாமி பேரலைகள் கக்கி உலகம் அழியும் என்று பொருள் கொண்டு சுனாமிப் படங்களைப் பார்த்தால் இன்னும் நன்கு விளங்கும்.

 

ஏனெனில் உலகில் இது வரை எந்த விஞ்ஞானியும், உயிரியல் அறிஞனும் பல தலைகளைக் கொண்ட பாம்புகளைக் கண்டதில்லை. மிக மிக அதிசயமாக இரண்டுதலை ஒட்டிப் பிறந்த பாம்புகள் மட்டுமே உண்டு. அவையும் உடனே இறந்து விடும். இது மனிதர்களுக்குப் பிறக்கும் சயாமிய இரட்டைக் குழந்தை வகை Siamese Twins. பேஸ்புக், பத்திரிக்கை முதலியவற்றில் நாம் காணும் பல தலை பாம்புகள் வெறும் ரப்பர் பொம்மைகள், கம்ப்யூட்டர் ஏமாற்று வித்தைகள் என்பதை கற்றோரும் மற்றோரும் அறிவர். பின்னர் ஏன் இந்துமத நூல்கள் ஆயிரம்தலை ஆதிசேடன் பற்றிப் பகருகின்றன? என்னை (ஏனெனில்), சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

 

உலகில் நாகர் பற்றிப் பகராத பண்பாடு இல்லை என்று முன்னரே சொன்னேன். ஆயினும் ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்! ஆயிரம் தலையுடைய வகனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

 

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’ பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. எக்காலத்திலும் இப்படிப்பட்ட பாம்பு இல்லாததால், நமது நூல்களை நாம் விஞ்ஞான முறையில் அனுகினால் அது சுனாமி பாம்பு அலைகள்தான் என்பது விளங்கும். அகத்தியர் கடல் நீரைக் குடித்தது, பகீரதன் கங்கையை திசை திருப்பிவிட்டது முதலிய பல ‘எஞ்சினீயரிங்’ பணிகளையும் மனதிற்கொண்டு பார்த்தால் நமது “மறை”மொழி விளங்கும்

nagadevata,tamil uma,fb

 

tsunami snake2

(எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் புராதன பாரதத்தின் எஞ்ஜினீயர்கள் – அகத்தியன், பகீரதன், பலராமன் – பற்றிப் படிக்கவும்).

–சுபம்–