
Written by London Swaminathan
Date: 14 November 2016
Time uploaded in London: 6-48 AM
Post No.3352
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com

நாட்டியம் பற்றித் தெரிந்த எல்லோரும் அறிந்த நூல் பரத நூல். பரத முனிவரால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாட்டிய சாத்திர நூல் பரதம் எனப்படும். அதிலிருந்து வந்ததுதான் பரத நாட்டியம் என்ற சொல். அந்த நூலில் நாடகம் பற்றியுமுளது. அந்தக்காலத்தில் நாட்டியம் மூலம் நாடகங்கள் நடித்துக் காண்பிக்கப்பட்டன. ஆனால் சுரத நூல் பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சுரத நூல் என்பது காம சாத்திரம். இதை எழுதியவர் வாத்ஸ்யாயனர் என்பவராவார். அவருக்கு முன்னரும் பல நூல்கள் இருந்தன.
கம்பனும் சில இடங்களில் காளிதாசன் போல கொஞ்சம் செக்ஸி (SEXY)யாக எழுதி இருக்கிறார். இது போன்ற பாடல்களாகப் பொறுக்கி எடுத்து கம்பரசம் என்னும் நூலை எழுதினார் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை. கம்பனோ அறிவுக்கடல். அவரைப் புரிந்துகொள்ள அரசியல்வாதிகளுக்கு இயலாத காரியம். ஒரு சில பாடல்களை மட்டும் வைத்து கம்பனை மட்டம்தட்ட நினைத்தவர்கள் எல்லாம் தோற்றுப் போனார்கள்.
இதோ பாடல்:-
சரத நாள் மலர் யாவையும் குடைந்தன தடவிச்
சுரத நூல் தெரிவிடர் எனத் தேன் கொண்டு தொகுப்ப
பரத நூல் முறை நாடகம் பயன் உறப் பகுப்பான்
இரதம் ஈட்டுறும் கவிஞரைப் பொருவின தேனீ
பொருள்:-

சிற்றின்பம் பற்றிக் கூறும் நூலைக் கற்ற காமுகர்கள், பல மகளிரிடம் சென்று இன்பம் துய்ப்பதுபோல தேனீக்களும் அனறலர்ந்த பல பூக்களுக்குச் சென்று தேனை உறிஞ்சி அமகிழ்கின்றன. இந்த தேனீக்கள்ப பரதரத நூலில் கூறியபடி நவரசம் மிக்க நாடகங்களைப்ண்போ படைப்போர்ரு போல இருந்தன.
தேனீக்கள்= காமுகர்கள்=கவிஞர்கள்
ஒரு பக்கம் தேனீக்களைக் காமுகர்களுக்கும் மற்றொரு பக்கம் கவிஞர்களுக்கும் ஒப்பிடுவது கம்பனின் தனித் திறமையைக் காட்டும்.
தேனீக்கள் பல வகையான மலர்களைக் குடைந்து தேனை எடுக்கின்றன. காமுகர்கள் பல பெண்களை அணுகி இன்பம் அடைகின்றனர். கவிஞர்கள் பரத நூலில் கண்ட நவரசங்களையும் சேர்த்து நாடகம் படைக்கின்றனர்.
பல மலர்த் தேன்= பல பெண்கள் தரும் காம சுகம்= கவிஞர் தரும் நவரச நாடகச் சுவை.

From Tamil Dictionary:-
சுரத நூல் = காம நூல்; சுரத தாது= இந்திரிய நீர்; சுரத மங்கை= வேசி; சுரத வித்தை= புணர்ச்சி விற்பன்னம்
–SUBHAM–