
Written by S NAGARAJAN
Date: 17 MAY 2018
Time uploaded in London – 8-20 AM (British Summer Time)
Post No. 5018
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஒசை இன்பம் கொண்ட வோர்ட்ஸ்வொர்த்தின் டாஃபோடில்ஸ் -1
ச.நாகராஜன்
1
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ (குயில் பாட்டு – 194)
என்றான் மகாகவி பாரதி.
ஒசை நுட்பமானது. அதை உணர்பவர்களே நல்ல கலா ரஸிகர்கள். கவிதையை ரஸிக்க வல்லவர்கள்.
கவிஞர்கள் இந்த ஓசை நுட்பத்தில் கரை கண்டவர்கள்.
அவர்கள் மனமும் சிந்தனையும் சொற்களின் வாயிலாக உயர் கருத்துக்களை அள்ளித் தெளிக்கும் போது ஓசை நுட்பத்திற்கு உயரிய இடம் கொடுத்து படிப்போரை ஈர்த்து தன்னுடன் லயப்படுத்துவர்.
ஒரு சொல்லை இன்னொரு சொல்லால் மாற்றிப் போட முடியாதபடி கவிதை தருபவனே உண்மைக் கவிஞன். ஒரே அர்த்தம் தரும் பல சொற்கள் உண்டு. ஆனால் கவிஞன் அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே தனது சொல்லைத் தேர்ந்தெடுக்கிறான்.
கோவில் மணியோசை தன்னைக் கேட்டதாரோ (கிழக்கே போகும் ரயில் 1978 வெளியீடு; இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்)

என்ற பாட்டில் ஓசைக்குப் பதிலாக நாதம் என்ற சொல்லைப் போட்டு
கோவில் மணிநாதம் தன்னைக் கேட்டதாலே
என்று சொல்லிப் பாருங்கள். ரஸனை இடிக்கும்.
தேவன் கோவில் மணியோசை – இதுவும் திரைப்படப் பாடல் தான். (படம் மணியோசை-1962 வெளியீடு)
தேவன் கோவில் மணி நாதம் – கேட்கவே சரியில்லை.
சரி, நாதமென்னும் கோவிலிலே
ஞானவிளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே ….
(படம் : மன்மத லீலை; இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்)
இதுவும் திரைப்படப் பாடல் தான்.
ஓசை என்னும் கோவிலிலே ஞான விளக்கு ஏற்றி வைத்தேன் ?!
ரஸனை இடிக்கிறது.
இந்தப் பாடலில் நாதம், நாதம் தான்; ஓசை, ஒசை தான்!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அதனால் தான் கம்பன் வால்மீகியின் ராமாயணத்தைப் புகழும் போது
‘வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்’ என்று கூறி வால்மீகி முனிவரின் பாதம் ஒன்றைக் கூட மாற்ற முடியாது என்று புகழ்ந்து கூறினான். ( ஒரு சுலோகத்திற்கு நான்கு பாதம் உண்டு. விருத்தச் செய்யுளிலில் நான்கு அடிகள் இருப்பது போல!)
ஆக இந்த ஓசை இன்பம் தமிழுக்கு மட்டும் அல்ல; ஆங்கிலத்திலும் இதர எல்லா மொழிகளிலும் கூட உண்டு.
ஆங்கிலக் கவிஞர்களும் இதில் வல்லவர்கள்.
எடுத்துக் காட்டாக வோர்ட்ஸ்வொர்த் எழுதிய அற்புதக் கவிதையான டாஃபோடில்ஸ் கவிதையைப் பார்ப்போம்.
இந்தக் கவிதை கீழே தரப் படுகிறது.
இதை எனது பழைய கால சேதுபதி ஹை ஸ்கூல் உபாத்தியாயர் திரு எம்.எஸ்.ஆர் என்பவர் செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற ராகத்தில் அழகுறப் பாடுவார்.
அதில் சொக்கிப் போன எங்களுக்கு பாடல் அப்படியே மனப் பாடம் ஆகி விட்டது!
ஓசை இன்பம் அப்படிப்பட்டது இந்தப் பாடலில்.
பாடலைக் கீழே முதலில் பார்ப்பொம். பிறகு ஓசை இன்பத்திற்கு வோர்ட்ஸ்வொர்த் என்ன செய்தார் என்பதைப் பார்ப்போம்.

2
I Wandered Lonely as a Cloud
I wandered lonely as a cloud
That floats on high o’er vales and hills,
When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze. (வரிகள் 1 முதல் 6)
Continuous as the stars that shine
And twinkle on the milky way,
They stretched in never-ending line
Along the margin of a bay:
Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance. (வரிகள் 7 முதல் 12)
The waves beside them danced; but they
Out-did the sparkling waves in glee:
A poet could not but be gay,
In such a jocund company:
I gazed—and gazed—but little thought
What wealth the show to me had brought: (வரிகள் 13 முதல் 18)
For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils. (வரிகள் 19 முதல் 24)
***