
Post No. 9674
Date uploaded in London – –1 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
T S ELIOT தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட்
(1888 – 1965)


தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட் (THOMAS STEARNS ELIOT) இந்த நூற்றாண்டின் முக்கியமான கவிஞரும் இலக்கிய விமர்சகரும் ஆவார். அமெரிக்காவில் மிஸ்ஸௌரி மாநிலத்திலுள்ள செயிண்ட் லூயிஸில் பெரிய குடும்பத்தில் பிறந்தார். அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் பாரிஸில் சார்போன் பல்கலைகழகத்திலும் பயின்றார். 1914இல் ஆக்ஸ்போர்டிலுள்ள MERTON கல்லூரிக்குச் சென்றார்.
பின்னர் இங்கிலாந்தில் பள்ளி ஆசிரியாராகவும் வங்கி ஊழியராகவும் பணியாற்றினார்.
1915இல் அவர் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் முக்கியமானதொரு கவிதையை எழுதினார். அதற்கடுத்த ஆறு ஆண்டுகளில் மேலும் பல கவிதைகளையும் இலக்கிய கட்டுரைகளையும் படைத்தார். ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியராக அமர்ந்தார்.
1922ஆம் ஆண்டில் முக்கியக் கவிதையான THE WASTE LANDஐ வெளியிட்டு விருதும் வென்றார். அது ஒரு முக்கிய இலக்கிய விருதை வென்றது. இந்த கவிதை நீண்ட சிக்கலான கவிதை. பலருக்கு இந்த கவிதை பிடிக்கவில்லை. இருந்தபோதும் இந்தக் கவிதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு T S ELIOT அவர்களின் புகழைப்பரப்பியது.
வேஸ்ட் லாண்ட் கவிதையில் இந்திய உபநிஷத வரிகளை பயன்படுத்தியுள்ளார். இந்திய தத்துவ ஞான விஷயங்களில் மிகவும் ஈடுபட்டவர் எலியட்.
THE CRITERION என்னும் பத்திரிகையையும் துவக்கினார்.
1932ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றார். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தபோது அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை.
HARVARD பல்கலைகழகத்தில் கவிதைத் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார்.
1939ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான கவிதை நூல் “OLD POSSUM’S BOOK OF PRACTICAL CATS” என்ற நூலை வெளியிட்டார்.
பல நாடகங்களை எழுதத்துவங்கிய இவர் THE FAMILY REUNION, MURDERIN THE CATHEDRAL ஆகிய நாடகங்களை எழுதினார்.
1948ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றார். அதே ஆண்டில் ஆர்டர் ஆஃப் மெரிட் (ORDER OF MERIT) விருதும் வென்றார்.
The Wasteland | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › the-wasteland
19 Feb 2014 — But 3000 years before Kanchi Shankaracharya and T S Eliot, the Vedic seers of the Brihad Aranyaka (Big Forest) Upanishad wrote this episode. It …
–SUBHAM–





tags- அமெரிக்க கவிஞர், டி .எஸ். எலியட், Wasteland, T S Eliot
