ஆண்டுகள் அறுபது ஏன்?

60

Written by ச.நாகராஜன்

Article no. 1716; dated 14 March 2015

Up loaded at 12-30 London time

 

கலைமகளில் முன்பு வெளியான பழைய கட்டுரை இது. அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மறுபதிப்பு செய்யப்படுகிறது.

ச.நாகராஜன்

தமிழரின் வானவியல் அறிவு

தமிழரின் வானவியல் அறிவு பிரமிக்கத் தக்கது.  பிரபவ ​தொடங்கி அக்ஷய முடிய அறுபது ஆண்டுக​ளைத் தமிழ் வருடங்கள் என்​றே கூறுகி​றோம்.  ஆண்டுகள் ஐம்பதாக​வோ, நாற்பதாக​வோ ஏன் வகுக்கப்படவில்​லை?  ​​மே​லை நாடுகளில் ஆண்டுகளுக்குப் ​பெயர் சூட்டும் வழக்கமும் இல்​லை; அறுபது வருடச் சுழற்சியால் வருடங்க​ளைப் பிரிப்பதும் இல்​லை.  நமது முன்​னோர் மட்டும் ஏன் இப்படி வகுத்தனர் என்ற வினா எழுவது இயல்​பே!  அறிவியல் ரீதியில் வானிவியல் அடிப்ப​டையில் அற்புதமாக அமைக்கப்பட்ட ஏற்பா​டே அறுபது வருடச் சுழற்சி ஆகும்.  குரு கிரகம் ஒரு மு​றை வான வட்டத்​தைச் சுற்றி வர (12 ராசிக​ளைக் கடக்க) 12 வருடங்கள் ஆகும்.  சனி கிரகம் வான வட்டத்​தைச் சுற்றி  வர 30 வருடங்கள் ஆகும்.  குருவும், சனியும் அசுவதி ​நட்சத்திரத்தில் காணப்படும் ​போது ​தோன்றும் வருட​மே பிரபவ ஆகும்.

ஐந்து மு​றை ஒரு வானவட்டத்​தைச் சுற்றி வர 60 ஆண்டுகள்.  இந்த பிரஹஸ்பதி சக்கரத்தின் அறுபது மாதங்க​ளே பிரபவ, விபவ, சுக்ல முதலான அறுபது வருடங்கள் ஆகும்.  இது மட்டுமின்றி ஆண்டுக்குப் ​பெயர்  சூட்டிய​தோடு அதன் மூலம் அந்த ஆண்டின் இயல்​பையும்  நம் முன்​னோர் குறித்து ​வைத்துள்ளனர்.  அது மட்டுமின்றி வருஷத்திய பலனுக்கான ​வெண்பா ​வேறு தனி​யே தரப்படுகிறது.  எடுத்துக்காட்டாக பிரபவ எனில் ​பொருள் உற்பத்தி ஆகுதல் என்று ​பொருள்;  விபவ என்றால் ஐஸ்வர்யம்; சுக்ல என்றால் நன்​மை.  இப்படி அறுபது வருடத்திற்கும் தனித்தனி ​பொருள் உண்டு. சித்ரபானு வருஷத்திய பலன் பற்றிய ​வெண்பா பின்வருமாறு:-

60-days-green-white-hi

சித்ர பானிற் சிறக்கம​ழை மிகுந்து

வித்துள்ள ​வெல்லாம் வி​ளையு​மே – எத்தி​சையும்

பார்பாருக் காகாது பா​வேந்தர்க்​கே நலமாம்

தீர்ப்பாக பூமிபயஞ் ​செப்பு.

​தைத்திரீய சம்ஹிதா 60 வருடங்க​ளை விரிவாக விளக்குகிறது.

 

 tamil years 

சூரிய வருடமும் சந்திர வருடமும்

சூரிய வருடம் என்றும் சந்திர வருடம் என்றும் வருடங்க​ளை இரண்டு விதமாகக் கணக்கிடுவது ​வேத காலம் தொட்டு இருந்து வருகிறது.  சூரிய வருடம் என்பது பூமி சூரிய​னைச் சுற்ற எடுத்துக் ​கொள்ளும் காலமாகும்.  சந்திர வருடம் என்பது சந்திர​னை அடிப்ப​​டையாகக் ​கொண்டது.  இரண்டுக்கும் உள்ள ​வேறுபாடு சுமார் 11 நாட்கள் ஆகும்.  5 வருடத்திற்கு ஒரு மு​றை ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு அமாவா​சை வரும்.  தமிழர்கள் சூரிய​னை அடிப்ப​டையாகக் ​கொண்ட வருடத்​தை​யே க​டைப்பித்து வந்தனர்.  ஆக​வே அறுபது வருடங்களும் தமிழ் வருடங்கள் ஆகிவிட்டன.  பஞ்சாங்க கணித சாத்திரத்தில் தமிழர்கள் மிக நுணுக்கமாகக் காலத்​தை நிர்ணயிக்கும் ஆற்றல் ​பெற்றிருந்தனர்.  ஒரு சூரிய வருடத்திற்கு 365 நாட்கள், 15 நாழி​கை, 31 வினாடி, 15 தர்ப்ப​ரைகள் என்று துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.  அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ என்ற ஒன்பது எழுத்துகளி​லே​யே பஞ்சாங்கத்​தைக் கணித்து விடுகின்றனர்.  இது மிக்க ஆச்சரியத்​தை வி​ளைவிக்கும் ஒன்று.

 new-year-tamil-cards

​நாரத புராணத்தில் வரும் கதை

தேவி பாகவதம் மற்றும் நாரத புராணத்தில் 60 வருடங்க​ளை நாரதருடன் ​தொடர்பு படுத்தி சுவாரசியமாக க​தை ஒன்று உள்ளது.  ஒரு மு​றை கிருஷ்ணர் நாரத​ரைத் தன் ரதத்தில் ஏற்றிக் ​கொண்டு ​சென்றார்.  வழியி​லே நீ​ரோ​டை ஒன்​றைக் கண்ட நாரதர் நீர் அருந்தச் ​சென்றார்.  முதலில் குளித்துவிட்டு நீ​​ரை அருந்துமாறு கிருஷ்ணர் கூறினார்.  ஆனால் இந்தக் கட்ட​ளை​யைப் புறக்கணித்து விட்டு நாரதர் குளிக்காம​லே​யே நீ​ரை அருந்தினார்.  என்ன ஆச்சரியம்!  உட​னே அவர் ஒரு அழகிய ​பெண்ணாக ஆகி விட்டார்.  அங்​கே கிருஷ்ணரும் இல்​லை; ரதமும் இல்​லை.  நாட்டி​லே சுற்றி அ​லைந்த ​பெண் உருவிலான நாரதர், ரிஷி ஒருவரின் ஆசிரமத்​தை அ​டைந்தார்.  சமாதியிலிருந்து மீண்ட ரிஷி தன் எதி​ரே அழகிய ​பெண் நிற்ப​தைக் கண்டார்.  தன்​னை சிஷ்​யையாக ஏற்றுக் ​கொள்ளுமாறு அவள் ​வேண்ட​வே அவ​ளை​யே மணந்தார்.  அந்தப் ​பெண்ணும் 60 பிள்​ளைக​ளைப் ​பெற்​றெடுத்தாள்.  ஒரு நாள் 60 பிள்​ளைகளும், கணவனான ரிஷியும் இறந்து விட்டனர்.  துக்கம் தாளாமல் கதறி அழுத ​பெண் ஈமக் கிரி​யைக​ளைக் கூடச் ​செய்ய முடியாத அளவில் மிகவும் ​சோர்ந்து ​போனாள்.  அதி பயங்கரப் பசி அவ​ளை வாட்டியது.

பக்கத்திலிருந்த மாமரத்தின் கனி​யைப் பறிக்க ​கை​யை உயர்த்தினாள்.  ஆனால் அது எட்டவில்​லை.  ​வேறு வழியின்றித் தன் கணவன் மற்றும் 60 பிள்​ளைகளின் பிணத்​தை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி ​மே​லே ஏறிக் கனி​யைப் பறித்தாள்.  அப்​போது அங்​கே வந்த ம​றையவர் ஒருவர், கணவன் பிள்​ளைகள் இறந்த தீட்​டைப் ​போக்காமல் சாப்பிடுவது தவறு என்று அறிவுறுத்தி முதலில் குளிக்குமாறு கூறினார்.  அ​தைக் ​கேட்ட ​பெண் ​கையில் மாங்கனி​யைத் தூக்கிப் பிடித்தவா​றே குளித்தாள்.  ​பெண் உரு நீங்கிப் ப​ழைய படி வ​ளையல் மட்டும் மாங்கனி​யோடு அப்படி​யே இருந்தது.  மறையவர் கிருஷ்ணனாக மாறினார்.  கிருஷ்ணரின் கட்ட​ளைப்படி மீண்டும் நீரில் இறங்கிக் குளித்த நாரதர் முழு உருவத்​தைப் ​பெற்றார்.  அவர் ​கையில் இருந்த மாங்கனி வீ​ணையாக மாறியது.  கிருஷ்ணர் நாரத​ரை ​நோக்கி, ”உங்களுடன் வாழ்ந்த ரிஷி யாரும் இல்​லை; அவ​ரே காலபுருஷன்!  60 பிள்​ளைகளும் பிரபவ, விபவ முதலான 60 வருடங்கள்” என்று கூறினார். ​

மா​யையின் மகி​மை​யை அறிய விரும்பிய நாரதர், ‘காலத்திற்கு உருவம் கி​டையாது; ஆனால் அந்தக் கால​மே மா​​யைக்கு உருவமாக இருக்கிறது’ என்ற உண்​மை​யை உணர்ந்தார்.  நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட 60 ​குண வி​சேஷங்க​ளை​யே 60 பிள்ளைக​ளான வருடங்கள் ​வெளிப்படுத்துகின்றன.  இவ்வாறு காலத்தின் மகி​மை​யை ​வெளிப்படுத்தும் அழகிய புராணக் க​தை பல அரிய உண்​மைக​ளை ​வெளிப்படுத்துகிறது.

musicians-in-60-

ஜைன சித்தாந்தம்

ஜைன சித்தாந்தப்படி ஐந்து வருட சுழற்சியில் 60 சூரிய மாதங்களும், ​ 61 ருது மாதங்களும், 62 சந்திர மாதங்களும், 67 ​நட்சத்திர மாதங்களும் குறிப்பிடப்படுகிறது.  ஒரு ​சூரிய வருடத்திற்கு 366 நாளும், ஒரு ருது வருடத்திற்கு 360 நாளும் ​சித்திர வருடத்திற்கு 354 12/62 நாளும், ​ ஒரு நட்சத்திர வருடத்திற்கு 327 51/67 நாளும் குறிப்பிடப்படுகிறது. ​ என்றாலும் தமிழர்கள் ஏற்ற சூரிய வருடத்​தை​யே உல​கெங்கும் இன்று க​டைப்பிடித்து வருவ​தை நி​னைக்கும் ​போது தமிழ் ​நெஞ்சங்கள் உவ​கை அடைவதில் வியப்​பே இல்​லை!

***************************