
Written by London Swaminathan
Date: 15 July 2017
Time uploaded in London-6-59 am
Post No. 4083
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
மதுரையில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கடைத் தமிழ்ச் சங்கத்தில் புலவரிடையே காழ்ப்புணர்ச்சியும் பொய்யும்,புரட்டும் மிகுந்திருந்தது. இது பற்றி திருவிளையாடல் புராணத்தில் பல படலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.
1931ஆம் ஆண்டில் வெளியான திருவள்ளுவர் சரித்திரத்தில் சில சுவையான பாடல்கள் உள்ளன:
சங்கத்தாரை வெல்ல வேண்டி அவ்வையார் ஞானக் குறிகளால் கை சைகைகள் பண்ணி இவை என்னென்று கேட்கச் சங்கத்தார் சொல்லியது:-

இவ்வளவு கண்ணினாள் இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்ற இளமுலையாள் – இவ்வளவாய்க்
காமத் தலைவனையும் காணாது கன்றினால்
நாமத்தை காட்டுகுறி நன்கு
இஃது தகுதியான உத்தரவன்றென்று அக்குறிகளுக்கு ஔவை சொல்லியது
ஐயமிடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்
இவ்வளவேனும் மனத்தை இட்டுண்மின்– றெய்வம்
ஒருவனே யென்ன உணரவல் லீரேல்
அருவினைகள் ஐந்தும் அறும்
இப்படியென்று ஔவை சொல்ல சங்கத்தார் நாணமுற்று இவளை வெல்லப் படாதென்று திருவள்ளுவரைப் பார்த்து நீர் எந்த வூரென்றதற்கு அவர் சொல்லியது

எந்தவூர் என்றீர் இருந்தவூர் நீர் கேளீர்
அந்தவூர்ச் செய்தி அறியீரோ – வந்தவூர்
முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்
அப்பாலும் பாழாயறும்
என்றிது முதலான ஞானார்த்தமான செய் யுட்களளாலவர் வினவியவைகளுகெல் யு லா முத்தரவு சொல்ல (உத்தரவு=பதில்)
சொல்ல, இவரையும் வெல்வ தரிதென்று இடைக்காடருடனே பேச, அவர் சொல்லியது
ஆற்றங்கரையின் அருகிருந்த மாமரத்தில்
காக்கை யிருந்து கஃகஃகென்னக் — காக்கைதனை
எய்யக்கோல் இல்லாமல் இச்சிச் செனவெய்தான்
வையக்கோ னார்தன் மகன்
இது போன்ற அனேகஞ் செய்யுட்களை அவர்களாலெழுதப் படாமலும்
கற்றுக்கொள்ளப்படாமலுஞ் சொல்ல நாணித் தோற்படைந்தார்கள்
திருவள்ளுவ நாயனார் திருவடி வாழ்க!
xxx
நாகலிங்க முதலியார் வெளியிட்ட திருக்குறள் மூலமும் பரிமேலழகர் இயற்றிய உரையும் என்ற நுலில் திருவள்ளுவர் சரித்திரம் என்ற பகுதியில் உள்ள விஷயம், ஆண்டு 1931.
(நான் முன்னர் வெளியிட்ட கட்டுரைகளில் திருவள்ளுவருடன் பிறந்த ஆறு பேர் கதைகளையும், தமிழ்ச் சங்கத்தில் ஏற்பட்ட மோதல்கள் பற்றிய திருவிளையாடல் புராணக் கதைகளையும் கொடுத்துள்ளேன்)

–சுபம்–