
Written by London Swaminathan
Date: 10 September 2016
Time uploaded in London: 21-45
Post No.3141
Pictures are taken from various sources; thanks.
பார்யா வியோக: சுஜனா அபவாத:
ருணஸ்ய சேஷம் குஜனஸ்ய சேவா
தாரித்ரய காலே ப்ரியதர்சனம் ச
வினாக்னினா பஞ்ச தஹந்தி காயம்
பொருள்:–
தீ இல்லாமலே உடலை தகிக்க வைக்கும் ஐந்து விஷயங்கள்:–
மனைவியின் பிரிவு, நல்லவர்கள் செய்யும் தீய செயல், கடன் மிச்சம், கெட்டவர்களிடம் வேலை செய்தல், வறுமையில் வாடுகையில் விருந்தினர் வருகை ஆகிய ஐந்தும் உடலை தகிக்க வைக்கும் ஐந்து விஷயங்கள்.
Xxxx

பங்கிடக்கூடாதவை
வஸ்த்ரம் பாத்ரம் அலங்காரம் க்ருதான்னம் உதகம் ஸ்த்ரிய:
யோகக்ஷேமம் ப்ரசாரம் ச ந விபாஜ்யம் பஞ்சக்ஷதே மனு 9- 219
சொற்ப விலையுள்ள துணி
செம்பு (தான் பயன்படுத்தும் பாத்ரம்)
அலங்காரப் பொருட்கள் (தான் உபயோகிப்பவை)
சமைத்த உணவு (சாப்பிடுகையில்)
கிணறு (தன் வீட்டு)
வேலைக்காரிகள்
மந்திரி
புரோகிதன்
தெருக்குறடு
வழிநடை (ரேழி)
இவை அனைத்தும் ஒருவருடைய உபயோகத்தில் இருக்கையில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஆரோக்கியத்துக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும்.
–Subham–
You must be logged in to post a comment.