
ரொம்பவும் நல்லவனாக (இளிச்சவாயனாக, அப்பாவியாக) இருக்காதே! சாணக்கியன் ‘அட்வைஸ்’!!! (Post No.4605)
Written by London Swaminathan
Date: 11 JANUARY 2018
Time uploaded in London 7-39 AM
Post No. 4605
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
சாணக்கியன் சொல்லுகிறான்:
மிகவும் நேர்மையாக நிமிர்ந்து நிற்காதே! காட்டுக்குப் போய் மரங்களைப் பார்; நேராக நிமிர்ந்து சென்ற மரங்களை எல்லாம் வெட்டி எடுதுக் கொண்டு போய் விட்டார்கள்; கூனிக் குறுகிய மரங்களை யாரும் தொடவில்லை. அப்படியே நிற்கின்றன.
நாத்யந்தம் ஸரலைர்பாவ்யம் கத்வா பஸ்ய வனஸ்தலீம்
ச்சித்யந்தே ஸரலாஸ்தத்ர குப்ஜாஸ்திஷ்டந்தி பாதபாஹா
–சாணக்கிய நீதி, அத்யாயம் 7, ஸ்லோகம் 12

இதைப் படித்தவுடன் சாணக்கியனைத் தப்பாக எடை போட்டுவிடதீர்கள்; அவன் மஹா மேதாவி; மகதப் பேரரசை உருவாக்கிய பின்னரும் குடிசையில் வாழ்ந்த ஏழைப் ப்ராஹ்மணன் அவன். இங்கே சொல்ல வந்தது எல்லாம் அரசியலுக்கு மட்டுமே பொருந்தும்; மேலும் அசத்தியத்தை, அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் போல சாம, தான, பேத, தண்டத்தைப் பின்பற்றலாம் என்பதே அவன் சொல்ல வந்த விஷயம்.
‘தூங்கும் புலியைத் தட்டி எழுப்பாதே’,
‘தூங்கும் புலியை சீண்டாதே’, என்றும் ‘தூங்குகின்ற புலியை இடறிய சிதடன்’ என்றும் தமிழில் சொல்லுவர்.
எந்த ஏழு பேர் தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்பலாம் , யாரை எழுப்பக்கூடாது என்று பட்டியல் தருகிறான் சாணக்கியன்
((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))

எழுப்பு! எழுப்பு! ஏழு பேரை எழுப்பு!!!
கீழ்கண்ட ஏழு பேர் தூங்கினால் உடனே எழுப்பிவிடு
வித்யார்த்தி சேவகஹ பாந்தகஹ க்ஷுதார்த்தோ பயகாதரஹ
பண்டாரீ ச ப்ரதிஹாரீ ஸப்த ஸுப்தான் ப்ரபோதயேத்
——சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 6
கீழ்கண்ட ஏழு பேரை எழுப்பு:
மாணவன், வழிப்போக்கன், வேலைக்காரன், பசியால் வாடுபவன், பயத்தால் நடுங்குபவன், பண்டகசாலை பொறுப்பாளர், வேலைக்காரன்

எழுப்பாதே, எழுப்பாதே, ஏழு பேரை எழுப்பாதே!
அஹிர் ந்ருபம் ச சார்தூலம் கிடிம் ச பாலகம் ததா
பரஸ்வானம் ச மூர்க்கம் ச ஸப்த ஸுப்தான் ந போதயேத்
—சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 7
கீழ்கண்ட ஏழு பேரைத் தூங்கும் போது எழுப்பாதே:
பாம்பு, அரசன், புலி, காட்டுப்பன்றி, குழந்தை, வேறு ஒருவரின் நாய், முட்டாள்.
அருமையான புத்திமதிகள்; நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு வியாஸமே எழுதலாம்.
வாழ்க சாணக்கியன்!
–சுபம், சுபம்–