கோவிலில் தமிழ் புத்தக அரங்கேற்றங்கள்!!

madurai-meenakshi-temple

Madurai Sri Meenakshi Temple

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1540; தேதி 2 January, 2015.

தமிழர்கள் தெய்வ பக்திமிக்கவர்கள். அவர்களுடைய முக்கிய நூல்கள் எல்லாம் கோவில்களில் கடவுள் சந்நிதியில் அரங்கேற்றப்பட்டன.

இதோ ஒரு சுவையான பட்டியல்:

சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரங்கேறியது.

கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணம், காஞ்சீபுரம் குமர கோட்டத்தில் அரங்கேறியது.

கம்பர் எழுதிய கம்பராமாயாணம், ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கேறியது.

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்,

திருவள்ளுவனின் திருக்குறள்,

குமரகுருபரரின் மீனாட்சி பிள்ளைத் தமிழ்

ஆகிய புனித நூல்கள் மதுரை மீனாட்சி திருக்கோவிலில் அரங்கேறின.

srirangam ranga gopuram

நாராயண பட்டதிரி வடமொழியில் எழுதிய நாராயணீயம் குருவாயூர் கோவிலில் அரங்கேறியது.

தொல்காப்பியம் இலக்கண நூல் என்பதால், நிலந்தரு திருவில் பாண்டியன் சபையில் நான்கு வேதங்களைப் படித்த பிராமணன் அதங்கோட்டு ஆச்சார்யர் தலைமையில் அரங்கேறியது.

பார்ப்பனர்களை இலக்கியங்கள் பூசுரர் என்று அழைக்கின்றன – அதாவது பூவுலகில் வசிக்கும் தேவர்கள். மேலே தேவலோகத்தில் வசிக்கும் தேவர்களுக்கு இணையாக, பூலோகத்தில் வாழும் புனிதர்கள் என்பதால் அவர் முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேறியது என்றும் கொள்ள இடமுண்டு.

தேவாரப் பதிகங்கள் அனைத்தும் செல்லரித்த நிலையில் சிதம்பரம் கோவிலில் கண்டெடுக்கப்பட்டன. அதற்கு முன்னரே தேவாரங்கள் இருந்த போதிலும், எஞ்சியவற்றை அழியாமல் பாதுகாக்கும் முகத்தான், ராஜ ராஜ சோழன் அவைகளை யானை மீது ஏற்றி மரியாதையுடன் ஊர்வலம் விட்டான்.

Natraja_Temple

Chidambaram Sri Natarajar Temple.

தமிழ் வேதமாகிய தேவாரங்களுக்கு அவ்வளவு மதிப்பு. அரசனுக்கும் இறைவனுக்கும் என்ன மரியாதை உண்டோ அத்தனையையும் தேவாரத்துக்கு அளித்தான்.

இன்றும் சீக்கியர்கள் அவர்களுடைய புனித நூலான ஆதிக்கிரந்தத்துக்கு–ஒரு குருவுக்குக் கொடுக்கும் மரியாதையுடன், சாமரம் வீசி அந்த நூலை ஊர்வலமாக எடுத்துச் செல்வதைக் காண்கிறோம்.

பாரதம் முழுதும் புனித நூல்களுக்கு எவ்வளவு மரியாதை!!! இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை!! வட நாட்டில் பாராயணம் செய்யப் பயன்படுத்தும் பகவத் கீதை, ராமாயணம் ஆகியவற்றைத் தரையில் வைக்காமல் பலகையில்தான் வைப்பர். எத்தனை மரியாதை!!

அன்னமாச்சாரியாரின் கீர்த்தனைகள் அனைத்தும் திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் தாமிரப் பட்டயங்களில் கண்டெடுக்கப்பட்டன!!

கோவில்களே நமது கலாசாரப் பொக்கிஷங்களின் இருப்பிடம்.

Annamacharya

Sri Annamacharya, composer of Telugu Kritis.

இது தவிர சங்கீத மும்மூர்த்திகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பக்தர்கள் ஆகியோர் ஒவ்வொவு கோவிலிலும் பாடிய ஒவ்வொரு பாடல் பறியும் தனிக் கட்டுரைகளே எழுதலாம். நேரம் கிடைக்கும் போது வைகளையும் காண்போம்.

சுபம்–

contact swami_48@yahoo.com