![]()
WRITTEN BY S NAGARAJAN
Date: 6 November 2018
Time uploaded in London – 4-56 AM (GMT)
Post No. 5630
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
தீபாவளி நல் வாழ்த்துக்கள்
நெஞ்சில் கண்ணன் வருவான்!
ச.நாகராஜன்
1

அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
இனிய தீபாவளியை குடும்பத்துடன், உறவினர்களுடன், நண்பர்களுடன் கொண்டாடுவோமாக!
அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும் இப்பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுவதே உலக அங்கீகாரம் பெற்ற பண்டிகையாக இது இருப்பதைக் காட்டுகிறது.
ஹிந்து மதத்தின் முக்கிய கொள்கையான அறம் வெல்லும்; மறம் மடியும் என்பதைச் சொல்லும் பண்டிகை இது.
நரகாசுரனை மாய்த்து அறம் காத்த கண்ணனை நினைவு கூரும் பண்டிகை இது.
அறம் செழிக்கட்டும்; மறம் அழியட்டும்!
இந்த நேரத்தில் இவாஞ்சலிஸ்ட் தொலைக்காட்சி சேனல்கள் தீபாவளி கொண்டாடப்பட வேண்டுமா என்பன போன்ற தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தியதையும் நாம் நினைவில் வைத்துக் கொண்டு இவர்களை இனம் காண வேண்டும்.
இது போல கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட வேண்டியது அவசியம் தானா, மொஹரம், பக்ரீத் தேவையா என்று ஒரு நிகழ்ச்சியை நடத்த இவர்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?
சிந்திப்போம்!
2

நெஞ்சில் கண்ணன் வருவான்!
நெஞ்சம் நிறைந்திட சஞ்சலங் குறைந்திட
நெஞ்சில் கண்ணன் வருவான் – களி
மிஞ்சக் கொஞ்சிக் குழைவான்
வண்ணம் கண்டிட வார்த்தை மறந்திட
எண்ணமும் எங்கோ ஓடும் – கனி
கண்ணனைப் பின்னும் நாடும்
கன்னம் குழைந்திட வன்மை இசைந்திட
மோகனக் குழலை இசைப்பான் – பல
வாவன ராக மழை தான்!
குறிப்பு :29-10-1967 இல் இயற்றிய பாடல்!
****