புலிப்பல், யானை முடி, பசு மூத்திரம், மான் தோல்: விநோத இந்து நம்பிக்கைகள்!!

gomutra

புலிப்பல், யானை முடி, பசு மூத்திரம், மான் தோல்: விநோத இந்து நம்பிக்கைகள்!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1438; தேதி 26 நவம்பர், 2014.

1.மதுரையில் எனது தந்தை வெங்கட்ராமன் சந்தானம், கொஞ்ச காலம் புலித்தோலில் உடகார்ந்து கொண்டு வீட்டில் தியானப் பயிற்சிகளைச் செய்து வந்தார். பின்னர் மான் தோலில் உட்கார்ந்து தியானம் செய்து வந்தார். பெரிய ரிஷி முனிவர்களின் படத்தைப் பார்த்தால் கீழே மான் தோல் அல்லது புலித்தோல் இருப்பதைக் காணலாம். ஏன்? ஏன்?

2.எனது தாயார் ராஜலெட்சுமி சந்தானமும் எங்கள் வீட்டு சமையல்கார மாமி சுப்புலெட்சுமியும் தினமும் இரவில் நாங்கள் எல்லோரும் சாப்பீட்டு முடித்த பின்னர் பசுஞ் சாணத்தை வைத்து அடுப்பை மெழுகுவர். ஏன்? ஏன்?

3. எனது தங்கை தினமும் காலையில் வாசலைத் தெளிக்கும் போது பசுஞ் சாணத்தைக் கலந்து தெளித்துவிட்டு ஜியோமெட்ரி பாக்ஸ், ரூலர், அடிஸ்கேல் என்றும் எதுவும் இல்லாமல் கன கச்சிதமாக சதுரங்கள், கோணங்கள் வட்டங்களுடன் மாக் கோலம் போடுவாள். ஏன்? ஏன்?

4.நாங்கள் மதுரை வடக்குமாசி வீதி யாதவர் தெருவில் வசித்தோம். எல்லோரும் மாட்டுச் சாணியையும், எரு வரட்டியையும் வாங்கிச் செல்வர். எங்காவது பசு மாடு மூத்திரம் பெய்தால் ஓடி வந்து கையில் ஏந்தி தலையில் ப்ரோக்ஷித்து / தெளித்துக் கொள்வர். ஏன்? ஏன்?

cow urinating

5. எங்கள் தெரு வழியாக வாரத்துக்கு ஒரு முறையாவது யானைப் பாகன் மீனாட்சி கோவில் யானை, அல்லது பெருமாள் கோவில் யானையை அழைத்து வருவான். நாங்கள் எல்லோரும் வீட்டு வாசலில் அரிசி, வெல்லம் வைத்துக் கொண்டு காத்திருப்போம். அதை வாங்கிக் கொண்டு நாங்கள் காசு கொடுத்தால் எங்களை மேலே ஏற்றிக் கொண்டு கொஞ்ச தூரம் போய் வருவான். கூடவே காசு கொடுத்தால் ஒரு சொம்பில் அல்லது வாளியில் வைத்திருக்கும் தண்ணீரைத் துதிக்கையால் உறிஞ்சி எங்கள் மீது —கஜ லெட்சுமிக்கு யானை அபிஷேகம் செய்வது போல — எங்கள் எல்லோரையும் “குளிப்பாட்டி” விடுவான். ஏன்? ஏன்?

6. தெருவில் போகும் யானை அங்கேயே காலைக் கடன்களை முடித்தால் அனைத்து சிறுவர்களும் ஓடிச் சென்று அந்த யானை ‘லத்தி’ மீது கால்களை வைத்து மிதித்து ஆனந்திப்பார்கள். காலில் சேற்றுப் புண் உடைய பெண்களும் வந்து மிதிப்பார்கள். ஏன்? ஏன்?

elephant-poo-11

7.எனக்குப் பூணூல் போட்ட போது, வீட்டு புரோகிதர் (சாஸ்திரிகள்/ வாத்தியார்) வந்து பூணூலில் ஒரு மான் தோலை முடித்து வைத்தார். சின்னப் பையானாக இருந்தால் கோவணத்தைக் கட்டி கையில் அரசங் குச்சியையும் கையில் கொடுத்து, இடுப்பில் அரைஞான் கயிறு கட்டும் இடத்தில் முஞ்சிப் புல்லால் கட்டியும் விடுவார். (எனக்கோ இரண்டு எருமை மாடு வயதானபோதுதான் பூணுல் கல்யாணம் நடந்தது!!!)

8. நான் லண்டனில் 28 ஆண்டுகளாக வசிக்கிறேன். எங்கள் ஹாரோ பகுதியிலும் சரி, கிழக்கு லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியிலும் சரி, நரிகள் அதிகம். அது காலலையில் தோட்டத்தில் வந்து ஊளையிட்டால் என் மனைவி ஓடிப் போய் அதன் மூஞ்சியில் விழிப்பாள்/ முழிப்பாள். நானும் அவள் சொன்னதற்காக நரி முகத்தில் முழிப்பேன். ஏன்? ஏன்?

9. எனது சக மாணவர்களில் ஒருவன் சேதுபதி உயர் நிலைப் பள்ளிக்கு வரும்போது கழுத்தில் தங்கச் சங்கிலியில் புலிப்பல் அணிந்திருப்பான். இன்னும் சில பெரியவர்கள் புலி நகத்தை அணிந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஏன்? ஏன்?

cow urine cola

10. எங்கள் வீட்டில் (அகத்தில் = ஆத்தில்) என்ன பூஜை புனஸ்காரம் நடந்தாலும் வீட்டு வாத்தியார் — (அதாவது ஐயர், அதாவது புரோகிதர், அதாவது சாஸ்திரிகள்) — வந்து கையில் பவித்ரம் என்று ஒரு தர்ப்பைப் புல் மோதிரத்தை அணியச் சொல்லுவார். தர்ர்பைப் புல் இல்லாமல் நல்லதோ கெட்டதோ எந்தக் காரியமும் செய்ய மாட்டார்கள். ஏன்? ஏன்?

11.என் மனைவி கர்ப்பமாக இருந்த போது வளைகாப்பு / சீமந்தத்துக்கு வந்த புரோகிதர் அவளுடைய தலையில் – நடு வகுட்டில் — ஒரு முள்ளம் பன்றி முள்ளால் கோடு போடச் சொன்னார் (அக்யூப்ரெஸ்ஸர்?)– ஏன்? ஏன்?

12.குருவாயூருக்குப் போனபோது 70, 80 யானைகள் வசிக்கும் யானைகள் காப்பகத்திற்கு வேடிக்கை பார்க்கச் சென்றோம். யானை பாகர்கள், ரகசியமாக, இடது கையில் காசு வாங்கிக் கொண்டு வலது கை வழியாக யானை வாலின் முடியைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். திருஷ்டி வராது- நோய் வராது என்றெல்லாம் சொல்லி எல்லோரும் வாங்கினர். எனக்கோ யானையின் மீது பரிதாபம் அதிகரித்தது. இப்படி ஆளுக்கு ஒரு முடி வாங்கினால் யானைக்கு வாலே இருக்காதே! யானை முடிக்கு அப்படி என்ன கிராக்கி! ஏன்? ஏன்?

Cow-Urine

13.முக்கியப் பண்டிகைகளில் பிராமணர்கள் ‘’பஞ்ச கவ்யம்’’ சாப்பிட வேண்டும். இதில் பால், வெண்ணை, தயிர், பசுஞ் சாணம், பசு மூத்திரம் – ஆகிய ஐந்தும் மிகச் சிறு அளவில் கலந்திருப்பர். உடல்-பொருள்-ஆவியைச் சுத்திகரிக்கும் அதிசய மருந்து என்பர். நானும் கஷ்டப்பட்டுதான் சாப்பிட்டேன். இது ஏன்? ஏன்?

14.பழைய கால ரிஷி, முனிவர்கள் எல்லோரும் கமண்டலம் என்னும் சிறிய கலசத்தில் தண்ணீர் கொண்டு செல்லுவர். இது தாகத்தைத் தணிக்கவா? அல்லது வேண்டியோருக்கு அபூர்வ வரங்களைக் கொடுத்து வேண்டாதவர்களைச் சபிக்கவா? தண்ணீருக்கு அதிசய சக்தி உளதோ! ஏன்? ஏன்?

இப்படி நூற்றுக் கணக்கான பழக்க, வழக்கங்களை, சம்பிராதாயங்களைச் சேர்த்துக் கொண்டு போனால் பட்டியல் நீண்டு விடும்.

எல்லா “ஏன்”?—களுக்கும் சுருக்கமான விடை:– இந்துக்கள் வாழ்வு இயற்கையோடு இணைந்தது — இயைந்தது. இதில் குறிப்பிட்ட எல்லாப் பொருட்களும் “ரீசைக்கிள்” ஆகி மீண்டும் நம் உபயோகத்துக்கே வரும். .புற ச்சூழலை பாதிக்காது.
coffee elephant poo

பசுஞ் சாணம், பசு மூத்திரம் ஆகியவற்றுக்கு உள்ள “பாக்டீரியா எதிர்ப்பு சக்தி” பற்றி நமக்குத் தெரியும். இருந்த போதிலும் முறையாக அறிவியல் சோதனைக் கூடங்களில் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டால் வேற்று மதத்தினரும், கலாசாரத்தினரும் பயன்படுத்துவர்.

ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ……….. ………….. இந்து விஞ்ஞான சங்கம் வைத்து எல்லாவற்றையும் ஆராய — நெடு நாளைய ஆசை எனக்கு.

தர்ப்பைப் புல் பற்றியும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்த – குறிப்பாக கிரகண கால – ஆய்வுகள் பற்றிப் படித்தேன். முறையான – சோதனைச் சாலை ஆய்வுகள் நடத்த வேண்டும், முடிவுகளை உலகமே ஏற்க வேண்டும்!

selous-game-reservesmoking elphant poo

மான் தோல் சத்வ குணத்தை உண்டாக்கும் என்றும், புலித்தோல் ஒருமுக மனக் குவியத்தையும், குறிக்கோளை அடைவதில் முனைப்பையும் உண்டாகும் என்றும் சொல்லுவர்.

புலிப்பல் தாலி முதலியன குறித்து சிலப்பதிகாரம், பெரிய புராணம் முதலிய நூல்கள் பேசும். வீரம், மன உறுதி, லட்சியத்தை அடையும் முனைப்பு, வேகம் ஆகியவற்றை அளிக்க வல்லது புலி நகம், புலிப்பல் தாயத்து என்பர்.

பசு மூத்திரம் இப்பொழுது பாட்டில்களில் கூட விலைக்கு வந்துவிட்டது. யானை லத்தி பற்றி ஆராயாவிட்டாலும் யானை லத்தியுடன் வரும் காப்பிக் கொட்டைக்கு மதிப்பு அதிகம். யானை லத்தி காப்பி ஒரு கோப்பை ரூ.300! (இது பற்றிய எனது பழைய கட்டுரையைப் படிக்கவும்). யானை லத்தியை புகையிலை போல சிகரெட் செய்து புகைப்பர் ஆப்பிரிக்க மலைஜாதி மக்கள். அது மட்டுமல்ல ஆப்பிரிக்க பபூன் குரங்குகள், யானை லத்தியைச் சாப்பிடுகின்றன. நமக்கும் முன்பாக மிருகங்களும் பழங்குடி மக்களும் இது போல பல ரகசியங்களைக் கண்டுபிடித்து வைத்திருக் கின்றனர். உலகிலேயே இரண்டு பிராணிகளின் மலம் தான் நாற்றம் எடுக்காமல் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தி வாய்ந்தவை எனத் தெரிகிறது.

OLYMPUS DIGITAL CAMERA

தண்ணிரின் சக்தி பற்றி இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது. வரம் கொடுக்கவும், சபிக்கவும் ஏன் தண்ணீரை பயன் படுத்தினர்? பிராமணர்கள் தினமும் முக்கால சந்த்யா வந்தனத்தில் தண்ணிரை மட்டுமே அளித்து காயத்ரியைத் த்ருப்திப் படுத்துவது ஏன்? இறந்து போன முன்னோர்களுக்கும் எள்ளும் நீரும் மட்டும் இரைத்து அவர்களை த்ருப்திப் படுத்துவது எப்படி? இவைகளுக்கு நம்பிக்கை அடிப்படையில் பதில் தரலாம். விஞ்ஞான் அடிப்படையில் பதில்தர ஆய்வு நடத்த வேண்டும் “இந்து விஞ்ஞான சங்கம்” அமைத்து ஆராய்வதே இதற்கு விடைதரும்.

அண்மையில் குதிரைகள் தோன்றியதும் இந்தியாவில்தான் என்று அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சொல்வதை எல்லாம் வைத்துப் பார்க்கையில் உலகம் முழுதும் நாகரீகத்தைப் பரப்பிய பெருமை இந்தியர்களுக்குதான் என்பது உறுதியாகிறது. இரும்பின் பயனைக் கண்டுபிடித்து அதை உலகம் முழுதும் பரப்பியதற்கு டில்லியில் நிற்கும் குப்தர் கால இரும்புத் தூண் சான்று பகரும்.
Nara_Narayana_Deogarh (1)
Gupta Period Statues of Nara-Narayana at Deogarh. Look at the deer on the chest of one of the figures.

மனுவும் கூட கறுப்பு நிற மான் (கிருஷ்ணசாரம்) எங்கு இருக்கிறதோ அதுதான் புண்ய பூமி. மற்றதெலாம் மிலேச்ச பூமி என்பார். சங்க இலக்கியமும் அராபியர்கள், யவனர்கள், ரோமானியர்களை கடுஞ்சொல் யவனர் என்று ஏசுகின்றன. அந்த கறுப்பு நிற மான் தோலை கிருஷ்ணாஜினம் என்பர். அதையே பிராமணச் சிறுவர் பூணூலில் அணிவர்.

வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்று வாழ்க என்று கொட்டு முரசே – பாரதியார்.
–சுபம்–