
Written by S.NAGARAJAN
Date: 11 September 2017
Time uploaded in London-5-51 am
Post No. 4201
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பாரதியாரின் நினைவுக்கு அஞ்சலி!
அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!
ச.நாகராஜன்

இருளகற்றும் இனிய தமிழ் பெருமையினை நிலை நாட்டினாய்
மருளகற்றும் விதமெனவே வெள்ளையரை விரட்டி ஓட்டினாய்
****
நல்லோர்கள் புகழ்தம்மை நாளும் சொல்லிக் கவி பாடினாய்
அல்லோர்கள் அரக்கர்தமை இனம் காட்டிச் சாடினாய்
** தெய்வ பக்தி தேசபக்தி இரு கண் என இனிய மொழி கூறினாய்
செய்வதறியா மக்களுக்கோர் வழிகாட்டிப் புகழேணியில் ஏறினாய்
***
தமிழ்க்கவியே! சொற்கள் எனும் தேர் ஓட்டும் சாரதியே!
அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!
***