பாரதி போற்றி ஆயிரம் – 22 (Post 4570)

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London-5-58 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4570

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 22

  பாடல்கள் 135 முதல் 136

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

 நாடக விமர்சனம்

ஒரு நாள் பாரதியார் நண்ப ரோடும்

   உட்கார்ந்து நாடகம் பார்த்திருந்தார், அங்கே

ஒரு மன்னன் விஷ மருந்தி மயக்கத்தாலே

    உயிர் வாதை அடைகின்ற சமயம், அன்னோன்

இருந்த இடந் தனிலிருந்தே எழுந்து லாவி

    “என்றனுக்கோ ஒரு வித மயக்கந் தானே

வருகுதையோ எனும் பாட்டைப் பாடலானான்?

    வாய் பதைத்துப் பாரதியார் கூறுகின்றார்,

 

மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ளுவது தானே

    வசங் கெட்ட மனிதனுக்குப் பாட்டா என்றார்

தயங்கிப் பின் சிரித்தார்கள் இருந்தோ ரெல்லாம்

    சரி தானே பாரதியார் சொன்ன வார்த்தை?

மயக்கம் வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்,

    மயக்க விஷம் உண்டது போல் நடிப்புக் காட்டும்

முயற்சியிலும் ஈடுபட்டான், தூங்கிவிட்டால்

    முடிவும் நன்றாயிருந்திருக்கும் சிரமும் போம்!

 

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

*****