பாரத நாடு! இது போல் ஏதொரு நாடு!! (Post No.5583)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 24 October 2018

Time uploaded in London – 6-01 AM (British Summer Time)

Post No. 5583

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் உலக இளைஞர் ஆண்டையொட்டி எழுதப்பட்ட கவிதை!

இளைஞர்களே! உன்னத சபதம் எடுத்திடுவோம்!

ச.நாகராஜன்

 

உலக இளைஞர் ஆண்டிதனில்

     உன்னத சபதம் எடுத்திடுவோம்!

கலகம் கிளர்ச்சி வன்முறையைக்

     களைய உறுதி பூண்டிடுவோம்!   (உலக)

இளமையும் வீரமும் அழிப்பதற்கோ?

     இனிய பாரதம் அமைப்பதற்கோ?

வளமையும் வலிமையும் அமைந்திட்ட

     வல்ல ரசாய்நாம் விளங்குதற்கோ?  (உலக)

சுதந்திரத் தென்றல் காற்றதனை

     சுந்தர பாரதிப் பேருருவை

இதந்தரு முறையில் இளைஞர்களே

     இனிவரும் தலைமுறைக் கீந்திடவே   (உலக)

கலையுடன் அறிவியல் முன்னேற்றம்

     கவினுறு நுட்பம் ஏர்த்தொழிலில்

நிலைதரு அமைதி நித்தமுமே

     நெஞ்சினில் லட்சியம் நமக்கிதுவே   (உலக)

வள்ளுவன் பாரதி வ.உ.சீ.

     வான்புகழ் காந்தி நேதாஜி

தெள்ளுதமி ழிளைஞர் நெஞ்சினிலே

     சீராய் ஒளிரும் தீபங்கள்!    (உலக)

****

 

பாரத நாடு! இது போல் ஏதொரு நாடு!!

ச.நாகராஜன்

வேற்றுமையில் ஒற்றுமை

    விளங்குகின்ற நாடு

நேற்றுமின்றும் நாளையும்

    நிலைத்திருக்கும் நாடு   .. பாரத நாடு    (வேற்று)

ஹிந்து முஸ்லீம் சீக்கியர்

    புத்தர் ஜைனர் கிறிஸ்தவர்

எந்த மதத்தோர் ஆயிலென்?

     இணைந்திருக்கும் நாடு   .. பாரத நாடு    (வேற்று)

தமிழ் தெலுங்கு வங்கம்

    சிந்தி மராட்டி ஹிந்தி

அமிழ் தினைப்போல் மொழிகள்

     அனைத்து மிங்கே ஒன்றாம் .. பாரத நாடு    (வேற்று)

உடுத்திடும் உடைகள் வேறு

     உண்டிடும் உணவுகள் நூறு

அடுத்திடும் சடங்குகள் பலவாம்

    ஆயினும் உணர்வோ ஒன்றாம்  .. பாரத நாடு    (வேற்று)

இதுவே தரையினில் சுவர்க்கம்

    இதுவே அமைதியின் நிலையம்

இதுபோல் ஏதொரு நாடு!

    இணையிலா இன்ப வீடு!!  .. பாரத நாடு    (வேற்று)

***

மெய்ஞானமும், விஞ்ஞானமும்

ச.நாகராஜன்

அடடா, எத்தனை எத்தனை உலகங்கள்

     எண்ணிட எண்ணிடப் பெருகுது வியப்பு

அடடா, எத்தனை எத்தனை தூரங்கள்

     கணக்கிடக் கணக்கிட வருகுது களைப்பு

அடடா, எத்தனை எத்தனை தேவர்கள்

      வானொலி பரப்பும் அவரிசைப் பண்ணொலிகள்

அடடா, வேதம் சாற்றும் சத்தியங்கள்

     இன்று விஞ்ஞானிக ளொப்பும் விளக்கங்கள்!

***