மெஜாரிட்டி தோற்கும், மைனாரிட்டி வெல்லும்- ராமாயண, மாபாரத அதிசயம்! (Post No.4709)

Date: 6 FEBRUARY 2018

 

Time uploaded in London- 9-55 AM

 

WRITTEN by London swaminathan

 

Post No. 4709

 

PICTURES ARE TAKEN FROM VARIOUS SOURCES; THEY MAY BE SUBJECT TO COPY RIGHT LAWS.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

மெஜாரிட்டி தோற்கும், மைனாரிட்டி வெல்லும்- ராமாயண, மாபாரத அதிசயம்! (Post No.4709)

 

பொதுவாக ஒரு தேர்தலில் யாருக்குப் பெரும்பான்மை (மெஜாரிட்டி) பலம் இருக்கிறதோ அவர்தான் அரசு அமைப்பார். மைனாரிட்டி– அதாவது சிறு  பான்மைக் கட்சி எதிர்க்கட்சி  வரிசையில் உட்காரும். ஒரு போரில் யாருக்கு அதிக படை பலம் இருக்கிறதோ அவர் வெல்லுவார்; குறைந்த படை பலம் உடைய தரப்பு தோற்கும்; இதை சதுரங்க (செஸ்)  விளையாட்டில்கூடக் காணலாம்.

 

மஹா பாரதத்தில் பாண்டவர் படையில் ஏழு அக்ஷௌகினி சேனையும் துரியோதனாதியரிடம் பதினோரு அக்ஷௌகினி சேனையும் இருந்தது. அது மட்டுமல்ல துரோணர், பீஷமர், அஸ்வத்தாமன், கர்ணன் போன்ற பெரிய வீரர்களைக் கொண்டது துரியோதனன் படை. ஆயினும் மைனாரிட்டி படை பலம் உடைய பாண்டவர் படைதான் இறுதியில் வென்றது. அதாவது, பெ    ரும்பான்மை, சிறுபான்மை என்பதே– அறப் போராட்டத்தில் முக்கியமல்ல– யார் யார் தர்மத்தின் தரப்பில் நிற்கிறார்களோ அவர்கள்  வெல்வார்கள்.

ராமாயணத்திலும் இதே கதைதான்!

 

ராமன் தலைமையிலான குரங்குப் படை எழுபது வெள்ளம்! ஆனால் ராவணன் தலைமையில் இருந்த அரக்கர் சேனை ஆயிரம் வெள்ளம். இது பற்றிய சுவையான சம்பஷணை இதோ

 

ராம பிரானுடைய படைகள், ஆழ்கடலின் மீது பாலம் கட்டி, அதன் மேல் நடந்து வந்து. இலங்கைக்குள் நுழைந்துவிட்டன. சுவேல மலையின் மீது நின்று ராவணன் படைகளை நோட்டம் விடுகிறான் ராமன்.

 

ராவணன் தனது கோபுர உச்சியில் நின்று ராமனின் வானர சேனையை கண்காணிக்கிறான். திடீரென்று சுரீவன் பறந்து வந்து ராவணனின் மணிமகுடத்தைப் பறித்து ராமன் காலில் சமர்ப்பிக்கிறான்.

 

அதற்குப்பின் ராவணன் அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்கிறான். அப்போது நடந்த உரையாடல்:

நிகும்பன் என்ற மந்திரி ராவணனிடம் சொல்கிறான்:-

 

எழுபது வெள்ளத்துற்ற குரக்கினமெயிலை முற்றும்

தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்

அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே

உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர்

–யுத்த காண்டம், அணிவகுப்புப் படலம், கம்ப ராமாயணம்

பொருள்

எழுபது வெள்ளம் என்ற கணக்கை உடைய குரங்குக் கூட்டம் இலங்கை நகர மதிலை முற்றும் வளைத்துக்கொண்டன என்று  எண்ணி மனம் வருந்துகிறாய் போலும்; நம்முடைய படை ஆயிரம் வெள்ளமன்றோ! நம் பகைவர் சூடிய உழிஞையைப் போக்குவதற்கு உன் ஊர்ப்படை நொச்சியை உச்சியில்  கொண்டுள்ளது என்று நிகும்பன் சொன்னான்.

 

தங்களிடம் வலிய ஆயுதங்கள் இருப்பதால் தேவர்களும் முற்காலத்தில் அஞ்சி ஓடினர் என்று நிகும்பன் கூறி முடித்த உடனே மாலியவான் என்பான் கூறுகிறான்:

 

புக்கெரி மடுத்து இவ் ஊரைப் பொடி செய்து போயினாற்குச்

சக்கரம் உண்டோ கையில் தசமுகன் தலைகள் ஆன

இக் கிரி பத்தின்  மௌளி இன மணி இடந்து கொண்ட

சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வாளும்

யுத்த காண்டம், அணிவகுப்புப் படலம்

பொருள்

இந்த இலங்கை நகரத்துக்குள் புகுந்து தீயை ஊட்டி இதைச் சாம்பலாக்கிவிட்டுப்போன அனுமனுக்குக் கையில் சக்கரம் இருந்ததா? பத்து முகங்களைக் கொண்ட ராவணனின் தலைகள் ஆன பத்து மலையில் உள்ள மகுடத்தின் தொகுதியான மணியைப் பறித்துக் கொண்டுபோன சுக்கிரீவனுக்கு சூலம், வேல், வாள், ஆகியவை உண்டோ?

 

இதற்குப்பின் சீதையை விடுதலை செய்வதே சாலச் சிறந்தது என்று அவன் கூறியவுடன் ராவணன் சினந்து அவனை எள்ளி நகை ஆடுகிறான்.

 

இதிருந்து பெறப்படுவது யாது?

தர்ம- அதர்மப் போராட்டத்தில் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. சிறிய தொகை ஆனாலும் தர்மமே வெல்லும்.

 

மஹாபாரத காலத்திலும், ராமாயண காலத்திலும் தர்மத்தின் தரப்பில் இருந்த படைகள், கூட்டணி குறைவானதே.

 

இனி வரப்போகும் கல்கி அவதார காலத்திலும் அதர்மம் செய்வோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். ஆனால் அறமே வெல்லும்; பாவம் தோற்கும்.

வெள்ளம் என்பது 1 எண்ணைத் தொடர்ந்து 16 பூஜ்யங்கள் உள்ள மிகப்பெரிய எண்.

அக்ஷௌணி என்பது ஒரு லட்சம் படை வீரர்களுக்கு மேலானது, 65000 குதிரைகள் சுமார் 2800 தேர்கள் 2800 யானைகள் கொண்ட ஒரு படை.

 

TAGS–அறம் வெல்லும், பாவம் தோற்கும், வெள்ளம், அக்ஷௌகிணி, பெரும்பான்மை, சிறுபான்மை

 

 

–SUBHAM–