பாட்டிற்கோ பாரதியே தான்! (Post No 3145)

statue-bharati

Written by S NAGARAJAN

Date: 11 September 2016

Time uploaded in London: 21-24

Post No.3145

Pictures are taken from various sources; thanks.

 

செப்டம்பர் 11 : பாரதி நாள்!

.நாகராஜன்

 

bharati-malar

வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தை வாழவைக்கத்

தந்துயரம் பாராத சான்றோருள்இந்தியமா

நாட்டிற்கோ காந்தியெனில் நாமெழவே கூவிட்ட

பாட்டிற்கோ பாரதியே தான்

 

செய்யுநலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்

உய்யுநலம் காட்டியவன் ஓர் கவிஞன்நெய்யுமொரு

கூட்டிற்கோ தேன்கூடு கொட்டுதமிழ்ச் சந்தமொழி

பாட்டிற்கோ பாரதியே தான்

 

வீட்டிற்கோ குலமகளிர் வீதிக்கோ நல்லோர்பள்ளி

காட்டிற்கோ உயிர்தருமொரு சஞ்ஜீவனிஇந்தியமா

நாட்டிற்கோ வேதரிஷிகள் கவிதையெனில் தமிழ்ப்

பாட்டிற்கோ பாரதியே தான்

வேறு

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

********