
Written by S NAGARAJAN
Date: 7 July 2017
Time uploaded in London:- 5-49 am
Post No.4058
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
காஞ்சி மஹா பெரியவாள்
பெரியவாளின் “ஆரோக்கியம்”!
ச.நாகராஜன்
டாக்டர் ஒருவர் பெரியவாள் தரிசனத்திற்கு வந்திருந்தார்.
ஷோலாப்பூரில் பெரியவாள் முகாமிட்டிருந்தார்.
சாப்பாட்டிற்குப் பின்னர் மதிய நேரத்தில் டாக்டரை பெரியவாளிடம் அழைத்துச் சென்றனர்.
ஏற்கனவே பெரியவாளுக்குக் க்ழுத்து வலி. அத்துடன் அதிகமான ஜுரம் வேறு சேர்ந்து கொண்டது. டாக்டரிடம் இதைச் சொன்னார்கள்.
முதலில் டாக்டர் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பெரியவாள் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டார்.

டாக்டர் சொன்னார்: “என்னிடம் களினிக்கில் சிகிச்சை பெற வரும் ஒவ்வொரு நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னரும் பெரியவாளுக்கு மனதால் நமஸ்காரம் செய்து அவர்கள் பூரண் குணமாக வேண்டிக் கொள்வேன். இப்போது பெரியவாளே ‘பேஷண்டாக’ இருக்கும் போது பெரியவாள் நன்கு குணமாக, பெரியவாளைத் தவிர வேறு யாரை நான் வணங்க முடியும்?”
பெரியவாளைச் சோதித்த டாக்டர் திடுக்கிட்டார். அவரது டெம்ப்ரச்சர் 105 டிகிரியாக இருந்தது.
தயக்கத்துடன் டாக்டர் பெரியவாளைப் பார்த்துச் சொன்னார்,” ஜுரம் மிக அதிகமாக இருக்கிறது. இரண்டு நாட்கள் பச்சைத் தண்ணீரில் குளிக்காமல் இருக்க முடியுமா?”
பெரியவாள், “ அது எப்படி முடியும்?நேற்று சந்திர கிரகணம். ஆகவே நேற்று இரவு கிரகண ஸ்நானம் செய்தேன் – இதே ஜுரத்துடன் தான்” என்றார்.
டாக்டர்: “ஈஸ்வரா!பெரியவாளின் உடம்பு அதைத் தாங்கித்தா?”
மஹா பெரியவாள்: “உனக்கு கிரகண ஸ்நானம் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியுமா?”
டாக்டர் : எனக்குத் தெரியாது.
பெரியவாள் : மூக்கைப் பிடித்துக் கொண்டு நதியில் தலை முழுவதையும் அமுக்கிக் குளிக்க வேண்டும்.”
இதைக் கேட்டு டாக்டர் அயர்ந்து போனார்.
பெரியவாள் தொடர்ந்தார்: “ ஒரு முறை அல்ல; இப்படி நூற்றி எட்டு தரம் செய்ய வேண்டும்.”
டாக்டர் பிரமித்தார். “உங்களுக்கு நான் என்ன ட் ரீட்மெண்ட் தர முடியும்? சிவ பெருமானின் அவதாரமாகவே இருக்கும் உங்களை 105 டிகிரி ஜுரம் இருக்கும் போது நூற்றி எட்டு தரம் இப்படி நதியில் ஸ்நானம் செய்த போதும் உங்களை சிவனே தான் காப்பாற்றுகிறான்.என்னைப் போன்ற சாதாரணமானவன் உங்களுக்கு எப்படி ட்ரீட்மெண்ட் தர முடியும். உங்களை எங்களுக்காக வேண்டி பல்லாண்டுகள் வாழ சிவன் தான் அருள் புரிய வேண்டும்”.
டாக்டர் நெகிழ்ந்த மனதுடன் பெரியவாளை நமஸ்கரித்தார்.

***
உண்மை நிகழ்ச்சி : ஆதாரம் திலிப் அக்டோபர்/டிசம்ர் 2016 இத்ழ்
மொழியாக்கம் ; ச்.நாகரா