
WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 18 October 2018
Time uploaded in London – 11-24 am
(British Summer Time)
Post No. 5556
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பெயர் சொல்லாத ஒரு கவிஞர் தமிழ் கூறு நல்லுலகிற்கு விட்டுச் சென்ற அருமையான கவிதைச் செல்வம் விவேக சிந்தாமணி. எளிய தமிழ்; அரிய கருத்துச் செறிவு.
வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடைத் தமிழர்கள், மிகவும் போற்றிய தமிழ்ச் செல்வம்; இதோ இன்னும் ஒரு பாடல்.
கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்
கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்
ஒரு தொழிலான் இல்லாதான் முகடி ஆகும்
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்
பேசாமல் இருப்பவனே பேயனாகும்
பரிவு சொல்லித் தழுவினவன் பசப்பனாகும்
பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே
–விவேக சிந்தாமணி, ஆசிரியர் பெயர் எவருக்கும் தெரியாது

பொருள்
மதிக்கத்தக்க நூல்களைக் கல்லாதவன் முட்டாள்;
அளவாகப் பேசாதவன் கசடன்;
வேலையே இல்லாத பயல் மூதேவி;
உதவாக்கரைகள் சோம்பேறிப் பயல்;
கற்றறிந்த பெரியோருக்கு வணக்கம் சொல்லாமல் இருப்பவன் மரம்; அவன் பேயன்; அதாவது பேப்பயல்.
உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாயில் தேன் ஒழுகி ஏமாற்றுபவன் பசப்பன்.
பசிப்பவனுக்கு கொடுக்காமல் சாப்பிடுபவன் பாவி.
பசித்தவனுக்கு கொடுக்காமல், தனக்கு மட்டும் சமைப்பவன், பாவி என்று பகவத் கீதை, வேதம் ஆகியனவும் செப்பும்.
–சுபம்–