மதசார்பற்ற (செகுலரிஸம்) கொள்கை சரியா?- 2 (Post No.3013)

Bishop-offers-cake

Article Written S NAGARAJAN
Date: 28 July 2016
Post No. 3013
Time uploaded in London :– 6-06 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(First Part was published on 26th July 2016)

செகுலரிஸம் சரியா? -2
ச.நாகராஜன்
இந்திய சரித்திரத்தைச் சற்று ஆழ்ந்து படித்தால் ஒன்று தெள்ளத் தெளிவாகப் புலப்படும்.
ஒரு நாளும் ஹிந்துக்கள் எந்த ஒரு நாட்டையும் ஆக்கிரமித்ததில்லை.
எந்த ஒரு தனி நபரையும் வலுக்கட்டாயமாக ஹிந்து மதத்திற்கு மாற்றியதில்லை.
எந்த ஒரு மதத்தின் வழிபாட்டு ஸ்தலத்தையும் இடித்ததில்லை.
அடுத்த மதத்தினரின் இடங்களைப் பிடுங்கியதில்லை
அழித்ததில்லை. அதில் ஹிந்து கோவில்களைக் கட்டியதில்லை.

 
‘உங்கள் மதம் எதுவானாலும் அதை அப்படியே கடைப் பிடியுங்கள்’ என்பது தான் எந்த ஒரு ஹிந்து ஆசார்யரின் அன்புரையாக இருந்திருக்கிறது.
ஆனால் மாறாக வாணிகம் செய்ய வந்த பிரிட்டிஷாரையோ அல்லது மதத்தைப் பரப்ப வந்த கிறிஸ்தவ பாதிரிகளையோ எடுத்துக் கொண்டால் கடைசியாக நமது சரித்திரம் இனம் காட்டும் அன்னை தெரஸா உட்பட அனைவருமே முதலில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதிலேயே கவனம் செலுத்தினார்கள் என்பதை அறிய முடியும்.

 

vijyakanth_0
ஹிந்து பழக்க வழக்கங்களை ஒழித்தல், ஹிந்து ஆலயங்களை அழித்தல், ஒவ்வாத இதர மேலை நாட்டு பழக்க வழக்கங்களை வலுக் கட்டாயமாகத் திணித்தல் ஆகியவையே அவர்களின் வழி முறையாக இருந்தது.
கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் தைரியமாக ‘வருகின்ற ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவில் நல்ல அறுவடை செய்யலாம் செய்யுங்கள்’ என்று சொல்லக் கூடிய அளவு ஹிந்துக்கள் தாராள மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள் கூடவே வலி குன்றியும் ஒற்றுமை இன்றியும் இருக்கிறார்கள்.
முகமதிய கலாசாரத்தை எடுத்துக் கொண்டு இந்திய சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் நெஞ்சமே பிளந்து விடும்.
எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன.
எத்தனை விக்கிரஹங்கள் நொறுக்கப்பட்டன.
வாள் முனையில் மதமாற்றம்.
ஹிந்துவாக இருந்தால் ஜஸியா வரி
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

 
ஆக இந்தப் பின்னணியில் நமது அரசியல் சட்டம் செகுலரிஸம் பேசாமல் சமத்துவம் என்ற கொள்கையை ஏன் முன் வைக்கவில்லை?
அனைவருக்கும் ஒரே சட்டம்! ஒரே இந்தியா! சமூகச் சட்டம் ஒன்றாக இருக்கட்டும்.
மதங்களின் வழிபாட்டு முறைகள் தனிப்பட்டவரின் விருப்பப்படி இருக்கட்டும்!
இது இல்லையே!
கிறிஸ்தவர்களுக்கு தனி போர்டு
முஸ்லீம்களுக்கு தனி போர்டு.
அவர்களின் நிலங்களை சொத்துக்களை அவர்களே தனிப்பட்ட முறையில் பராமரிக்க, செலவழிக்க, வசூல் செய்ய உரிமை.
ஆனால் ஹிந்து ஆலயங்கள் என்றாலோ அரசியல் வாதிகள் ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் பிடியில்!

 
ஆலயங்களில் வரக்கூடிய பக்தர்களின் காணிக்கையை ஆலய பூஜைக்கன்றி இதர் ஆயிரம் வழிகளில் செலவழிக்க அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?
ஆலயங்களின் நிலங்கள் இடங்கள் மூலமாக பல லட்சம் வருமானம் வர வேண்டிய இடத்தில் ஒரு பைசாவும் வருவதில்லை அதை அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து தங்கள் விருப்பப்படி ஆக்கிரமித்திருப்பதையும் பார்க்கிறோம்!

 

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் விருப்பப்படி தங்கள் வழிபாட்டு ஸ்தலத்தைப் பராமரிக்க உரிமை கொடுக்கும் சட்டம் ஹிந்து கோவில்களில் அதிக வருமானம் உள்ள கோவிலகளின் பணத்தை அந்தக் கோவில்களின் பராமரிப்புக்கும் சரியாகச் செலவழிப்பதில்லை; சற்று வருமானம் குறைந்த கோவில்களின் பூஜைகளுக்கு ஆகம விதிகளின் படி செய்வதற்கான பணத்தையும் தருவதில்லை.
ஆன்மீகக் கோவில்களின் பணம் அரசியல்வாதிகளின் மனம் போன படி செலவழிக்க அனுமதி!

 
திராவிட தீய சக்திகள் இதைத் தானே விரும்புகின்றன. என்ன ஒரு ஆனந்தம் அவர்களுக்கு – சீரங்க நாதரையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்துப் பிளக்கத் துடிக்கும் ‘கண்மணிகள்’ அல்லவா அவர்கள்!
ஆக இந்த குறைபாடுகள் ஏன்?
ஒரே வரியில் சொல்லி விடலாம் – பிளவுபட்டுள்ளது ஹிந்து சமுதாயம் என்று!
இந்தப் பிளவு பட்ட சமுதாயத்தை ஒன்றாக்கி ஹிந்துக்கள் அனைவரும் ஓரிழையில் இணைக்கப்படும் போது இந்தியாவில் அரசியல்வாதிகளின் சதிராட்டங்கள் முடிந்து போகும்.

Christians
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் தங்கள் தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்வர், ஒரு சட்டத்திற்குட்பட்டு!
ஹிந்துக்களின் ஆலயங்களும் சொத்துக்களும் அதற்கான வழியில் முறைப்படி கண்காணிப்புடன் பராமரிக்கப்படும்.
அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒரே அரசியல் சாஸன சட்டம் அமையும்!
வலிமை வாய்ந்த ஹிந்து சமுதாயத்தில் ஆதாயம் பார்க்க நினைக்கும் அரசியல்வாதிகள் அறவே நீக்கப்பட்டிருப்பார்கள்.
இந்த ஹிந்துக்களை ஓரிழையில் இணைக்கும் பணியை யார் செய்வது?
அதற்கான அற்புதமான இயக்கமாக நமக்குத் தெரியும் ஒரே இயக்கம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமே
இப்படி ஹிந்துக்களை இணைக்க, ‘ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்’ விடுவார்களா?
தடைகள், தடைகள், தடைகள்.
என்றாலும் இந்த சமுதாயம் ஒன்று சேர்ந்தே தீரும்.
சங்கம் வெற்றி பெற்றே தீரும்!
அப்போது அரசியல் சாஸனத்தின் செகுலரிஸம் உண்மையான சமத்துவத்தைக் கொண்டுள்ள வகையில் இருக்கும்!
இப்படி நம்பலாம்.
அதற்காக நம்மளவில் நாமும் ‘அணில் சேவை’ செய்வது போல சேவையைச் செய்யலாம்!
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வலுப் பெறுவது ஒன்றே நாட்டின் சகல பீடைகளையும் ஒழிக்கும் ஒரே வழியாகும்!
********** முற்றும்