பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் (Post No.4584)

Written by London Swaminathan 

 

Date: 5 JANUARY 2018

 

Time uploaded in London- 8-12 am

 

 

 

Post No. 4584

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் பெயர் வைக்கும் முறை (மநு நீதி நூல்- part 10)-

 

second chapter 149 (2-30)

  1. குழந்தை பிறந்த பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது நாள் தந்தையானவர் பெயர்சூட்டு (நாமதேயம்) வைபவத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது நல்ல நாளில் நல்ல திதியில் முகூர்த்த நாளன்றும் வைக்கலாம்.

 

150.பிராமணர் பெயரில் மங்களத்தையும், க்ஷத்ரியர் பெயரில் பலத்தையும், வைஸ்யர் பெயரில் பொருளையும் (செல்வம்) சூத்திரர் பெயரில் தாழ்வையும் கட்டும் சொற்கள் இருக்க வேண்டும்

 

 

151.பெயரின் இரண்டாவது பகுதி பிராமணர்களுக்கு சந்தோஷத்தைக் காட்டும் சொல்லும் (ஸர்ம), க்ஷத்ரியர்களுக்குப் பாதுகாப்பைக் காட்டும் சொல்லும் (வர்ம), வைஸ்யர்களுக்கு சுப வாழ்க்கை (பூதி) பற்றியும் சூத்திரர் பெயரில் சேவை (தாஸன்) தொடர்பான சொல்லும் இருக்கலாம்.

152.பெண்களுடைய பெயர் எளிதில் உச்சரிக்கத் தக்கதாகவும் சுபச் சொல் உடையதாகவும் , மங்களம் தருவதாகவும், நன்மை தரும் சொல்லாகவும், கெட்ட பொருள் தராததாகவும், உயிர் எழுத்தில் நெடிலில் முடிவதாகவும் இருக்க வேண்டும் (எ.க.கருணா, சீதா, கீதா)

153.குழந்தை பிறந்த நாலாவது மாதத்தில்  வீட்டை விட்டு வெளியே வந்து குழந்தையைச் சூரியனுக்குக் காட்டும் நிகழ்ச்சியும் ஆறாவது மாதத்தில் அன்ன ப்ராஸ்னம் எனப்படும் உணவூட்டும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யலாம்; இது தவிர அந்தந்த குடும்பத்தின் பழக்க வழக்ககங்களுக்கு உரித்தான சடங்குகளையும் மூன்றாவது மாதம் முதல் செய்யலாம்.

 

154.இருபிறப்பாளர் ஜாதிகளில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் முடி இறக்கல் முதல் ஆண்டிலோ மூன்றாவது ஆண்டிலோ செய்யப்பட வேண்டும் என்று வேத விதிகள் சொல்கின்றன. கருவுற்ற காலத்தில் இருந்து எட்டாவது ஆண்டில் பிராமண பையனுக்கும், பதினோராம் வயதில் க்ஷத்ரிய மாணவர்களுக்கும், 12-வது ஆண்டில் வைஸியப் பையனுக்கும் உபநயனம் (பூணூல்) செய்விக்க வேண்டும்

 

  1. பிரம்ம தேஜஸை விரும்பும் பிராமணக் குழந்தைகள் அதை 5 வயதிலும், பலத்தை விரும்பும் க்ஷத்ரியர் ஆறு வயதிலும், தனத்தை விரும்பும் (வணிகத்தில் வெற்றி பெற விரும்புவோர்) வைஸ்யர் எட்டு வயதிலும் பூணூல் (உபநயனம்) போட்டுக்கொள்ளலாம்.

 

  1. இவ்வாறு பூணூல் (உபநயனம்) போட்டுக்கொள்ள பிராமணனர், க்ஷத்ரியர், வைஸ்யருக்கு முறையே 16, 22, 24 வயது வரை அனுமதி உண்டு.(ஸாவித்ரியை வழிபடும் உரிமை)

 

157.மேலே குறிப்பிட்ட கால வரம் புக்குள் செய்யாவிடில் அவர்கள் விராத்தியர்கள் என்று அழைக்கப்படுவர்.

அவர்களுக்கு ஸாவித்ரியை வழிபடும் உரிமை இல்லை.

158.இவர்கள் மீண்டும் இரு பிறப்பாளராக சில சடங்குகளைச் செய்யலாம். அப்படிச் செய்து மீண்டும் வராதோருடன் ஏனையோர் திருமண உறவுகளையோ வேதச் சடங்கு செய்யும் உறவுகளையோ வைக்கக் கூடாது. துன்பம் வந்த காலத்தும் உதவக் கூடாது

வைதீக கார்யங்களில் இருந்து நீக்கிவைக்கப்பட வேண்டும் பெண் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.(2-40)

 

159.இனி எந்தெந்த வர்ணத்தார் என்ன மேலாடை, கீழாடை அணிய வேண்டும் என்பதைக் காண்க. பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர் முறையே கருப்பு மான் தோல் (கிருஷ்ண சாரம்), புள்ளி மான் தோல், ஆட்டின் தோல் ஆகியவற்றை மேலாடையாகவும், சணல்,  பட்டு நூல், ஆட்டின் மயிர் (கம்பளியை) ஆகியவற்றால் ஆன உடைகளை கீழாடைகளாகவும் அணிக(2-41)

160.இடையில் சுற்றிக்கொள்ள இந்த மூன்று வர்ணத்தாரும் முறையே மிஞ்சிப் புல் (முங்கா புல்), வில்லின் ஞாணைப் போன்ற முறுவல் புல் (மூர்வா), சணல் நார் ஆகியவற்றை மேடு பள்ளமில்லாமல் பின்னி அரை ஞாண்  மேல் அரை ஞாண் கட்ட வேண்டும் 2-42

 

161.மேற்சொன்னவை கிடைக்கவில்லை என்றால் மூன்று வர்ண பிரம்மச்சாரிகளும் தருப்பை, நாணல், சவட்டைக் கோறை ஆகியவற்றினால் ஆன ஞாணை மூன்று அல்லது ஐந்து வடமாக, (குல வழக்கப்படி), ஒரு முடிச்சுடன் அணியலாம்

2-43

 

162.மூன்று வர்ணத்தாரும் போடும் பூணூல் முறையே வலதுபுறம் செல்லும்; பஞ்சு நூல், சணல் நூல், வெள்ளாட்டின் மயிர் ஆகியவற்றால் இருக்க வேண்டும். 2-44

 

 

எனது கருத்து

மனு சொல்லக்கூடிய பெயர் சூட்டும் முறை ஆய்வுக்குரியது. எப்போது வரை இந்த முறை பின்பற்றப்பட்டது என்பதை கிடைக்கும் நூல்களைக் கொண்டு ஆராயலாம். அம்புலி மாமா போன்ற சிறுவர் நூல்களில் கூட மானர் பெயர் என்றால் வர்மன் என்றும் வைஸ்யர் என்றால் தனஎன்ற சொல்லும் இருப்பதைக் காணலாம். ஆனால் இது அப்படியே பின்பற்றப்படவில்லை. மஹாபாரதப் பெயர்களை- சிந்து சம்வெளிப் பெயர்களுடன் (ஊகம் தான்) ஒப்பிட்டுக் காட்டிய எனது ஆய்வுக் கட்டுரையில் சேனன் என்று 24, வர்மன் என்று 13, கேது என்று 9 etc. முடிவதைக் காட்டினேன். ஆனால் அங்கும் கர்ணன், துரோணன் என்றும், கசாப்புக் கடைக்காரனுக்கு தர்மவியாதன் என்றும் பெயர் இருப்பது ஆய்வுக்குரியது. சங்க காலத் தமிழர் பெயர் கள் வேறு விதமாக உள்ளன. ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

 

மநு என்பவர் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் அல்ல; அதற்கு மிகவும் முந்திய காலத்தில் வாழ்ந்தவர். ஏனெனில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல உப ஜாதிகள் தோன்றிவிட்டன. வெறும் 4 வர்ணம் மட்டும் இருக்கவில்லை!

 

இரண்டாவது சுவையான விசயம் மூன்று வர்ணத்தார் (சூத்திரர் தவிர) பூணுல் போட்டுக் கொண்டது, வெவ்வேறு வகையான ஆடைகளை அணிந்தது,  அரை ஞாண் கயிறு அணிந்தது என்பதெல்லாம் எக்காலம் வரை நீடித்தது?

 

மஹாராஷ்டிரத்திலும் (அம்பேத்கர் பூமி), தமிழ்நாட்டிலும் மட்டும் எப்படி அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சூத்திரர் முத்திரை குத்தினர் என்பதும் ஆராயப்பட வேண்டியது. மற்ற எல்லா மாநிலங்களிலும் நான்கு அல்லது அவர்களின் உட் பிரிவுகளுடன் ஜாதிகள் இருந்தன. இவ்விரு மாநிலங்களில் மட்டும், பிராமணர் அல்லாதார் அனைவரும் சூத்திரர் என்று சொல்லி அம்பேத்கர் கட்சி, திராவிடக் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடின. இது ஜாதி வெறியை வளர்க்கவும் வேரூன்றச் செய்யவும் காரணமா? என்றும் ஆராய வேண்டும்

 

மநுதர்மம்—- ஜாதியின் பெயரால் வேற்றுமை பாராட்டியது தவறு என்று சொல்லும் தர்மவான்கள்’, இன்று ஜாதியின் பெயரால் சிலருக்கு விஷேச சலுகை தருவது எவ்வகையில் நியாயம் என்பதையும் இதயத்தைத் தொட்டு ஆராய வேண்டும்; பணக்காரர்களும் ஜாதியின் பெயரால் உரிமை பெறுவது நியாம என்றால் மநு ஆயிரம் மடங்கு மேலானவர் என்று ஆகிவிடும்; ஏனெனில் அவர் ஆரம்பதில் எழுதிய ஸ்லோகங்களிலேயே விருப்பு வெறுப்பற்ற காம க்ரோதம் இல்லாதவர்களுகே இந்த சாஸ்திரம் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்.

 

அரசியல் சட்ட அமலாக்கத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த ஜாதிவாரிச் சலுகைகள் இருக்க வேண்டும் என்று சொன்ன புதிய மநுவையும் — அம்பேத்காரையும் — காற்றில் பறக்கவிட்ட அரசியல்வாதிகள் அல்லது அவரது கட்சியினர் மநுவைக் குறைகூறினால் உலகம் கைகொட்டிச் சிரிக்கும் என்பது எமது துணிபு.

 

to be continued………………………………….