எறும்பு போல சிறுகச் சிறுகச் சேர்- மநு புத்திமதி (Post No.5551)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 October 2018

 

Time uploaded in London – 7-42 AM

(British Summer Time)

 

Post No. 5551

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மநு நீதி நூல்- PART 30

 

(ஸ்லோகங்கள் 4-205 முதல் காண்போம்.)

 

நாலாவதுஅத்யாயம் முதல் பகுதியில் பல இடங்களில் பூனையைக் குறிப்பிபீட்டார். பசு போல உடனேபலன் தராவிட்டாலும் அதர்மம் மெதுவாகப் பலன் தந்து ப்ரம்பரையையே அழித்துவிடும் என்று சொன்னார். உர்த்ராக்ஷ பூனை போல இராதே, பஞ்சதந்திரக் கதை கொக்கு போல இராதே என்று சொன்னதையும் மநு நூல்- பகுதி 29ல் கண்டோம். இந்தப் பகுதியில் எறும்பு போல வாழ் என்கிறார்!!

4-205-228 எங்கு சாப்பிடக்கூடாது, என்ன சாப்பிடக் கூடாது என்று அவர் சொல்லுவதைப் பார்த்தால் ஏன் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடாது என்று தெளிவு பிறக்கும்; ஒருவர் எங்கு சாப்பிடுகிறார், என்ன சாப்பிடுகிறார் என்பதில் கவனம் தேவை. ‘நீ அதுவாக ஆகிவிடுவாய்’ (YOU ARE WHAT YOU EAT, YOU ARE WHERE YOU EAT- YOU ARE THAT) என்பார் .

 

4-229,233 எது நல்ல தானம் என்று சொல்கையில் தண்ணீர் தானம் முதல் வேதம் கற்பிக்கும் தானம் வரை சொல்லி வேத தானமே சிறந்தது என்கிறது

 

4-235-தானம் கொடுப்பவர், தானம்    வாங் குபவர் புண்ணியம் பற்றி செப்பும்

4-238 எறும்பு போல புண்ணியம் சேர்; சிறுகச் சிறுக சேர் என்று புகல்கிறது

யா காவாராயினும் நா காக்க!!!

4-256 சொல்,பேச்சின் முக்கியத்தைக் கூறும். பேச்சுதான் எல்லாவற்றுக்கும் மூலம், ஆணிவே ர் என்று பகரும்.

வள்ளுவன் சொன்ன எல்லாம் நினைவுக்கு வரும்.

 

 

 

நாலாவது அத்யாயம் நிறைவு பெற்றது.

 

–சுபம்-