
WRITTEN BY R. NANJAPPA
Post No.7921
Date uploaded in London – – – 4 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாட்டுகள் – 26 – மன்னா டே!
R.Nanjappa
மன்னா டே
“Good wine needs no bush!”
இது ஒரு ஆங்கிலப் பழமொழி. தரமுள்ள பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை; அதன் தரத்தினால் அதைத் தானாகத் தேடி வருவார்கள் என்பது பொருள். வேறு எங்கு எப்படி இருந்தாலும் திரை இசைத்துறையில் இப்படி நடக்கவில்லை.
கிஷோர் குமார் முறையான சங்கீதப் பயிற்சி இல்லாமல் வந்தவர். அவருடைய சங்கீத அறிவும் குரலும் இயற்கையாக அமைந்தவை. அவருடைய அண்ணன் நடிகர் அஷோக்குமார் ஒரு விஷயம் சொல்வார். கிஷோர் குழந்தையாக இருந்தபோது (இருவருக்கும் 18 வயது வித்தியாசம்) ஒரு நாள் மணிக்கணக்கில் அழுதுகொண்டே இருந்தானாம், அதனால் அவன் நுரையீரல் பலப்பட்டு நல்ல பலமான குரல் வந்து விட்டதாம்! நன்றாகப் பாடியும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. 20 வருஷங்கள் எப்படியோ ஓட்டினார். பின் இருபது வருஷங்கள் இவரை யாரும் நெருங்கமுடியவில்லை!
மன்னா டே முறையாகப் பயின்று நல்ல தேர்ச்சி பெற்று வந்தார். இவருக்குச் சரியான சந்தர்ப்பங்கள் இறுதிவரை கிடைக்கவில்லை. நமது திரைப் படங்களில் நல்ல பாடல்கள் கதாநாயகன்-நாயகி மேல்தான் வருகின்றன. மன்னா டேவை எந்த முன்னணி ஹீரோவும் முதல் சாய்ஸாக ஏற்றுக் கொள்ளவில்லை.அதனால் இவருக்கு அத்தகைய பாட்டுக்கள் அதிகம் இல்லை. ‘பஸந்த் பஹார்’ என்ற படத்தில் இவர் பாடிய நல்ல பாடல்கள் அமைந்தன. முன்னணி ஹீரோ தேவ் ஆனந்திற்கும் ராஜ் கபூருக்கும் இவர் பாடிய இரு பாடல்களைப் பார்ப்போம்.

ஹம் தம் ஸே கயே !
हम दम से गए हमदम के लिए
हमदम की कसम हमदम ना मिला
दम से गए हमदम के लिए
हमदम की कसम हमदम ना मिला
hum dum se gaye, hamdam ke liye
hamdam ki kasam, hamdam na mila
நான் என் கடைசி மூச்சைக்கூட அன்பிற்காகப் பணயம் வைத்தேன்.
அன்பின் மேல் ஆணையிட்டேன், ஆனால் அத்தகைய அன்புள்ளம் கிடைக்கவில்லை!
फिर भी कहे जा तू अपना अफसाना
साथी मिल जाएगा ना रुक जाना
फिर भी कहे जा तू अपना अफसाना
साथी मिल जाएगा ना रुक जाना
ओ दिल तेरी काली अभी तो नहीं खिली
अभी वो मौसम ना मिला
दम से गए………
phir bhi kahe jaa tu apna afsaana
saathi mil jaayegaa na ruk jaana
o dil teri kali, abhi to nahin khili
abhi wo mausam na milaa
இருந்தாலும் நீ உன் கதையைச் சொல்லிச் செல்
சோர்ந்து எங்கும் நின்றுவிடாதே– நிச்சயம் ஒரு துணை கிடைக்கும்!
உன் மனதாகிய மொட்டு இன்னும் மலரவில்லை எனில்
அதற்குரிய பருவம் இன்னும் வரவில்லை போலும்!
சோர்ந்து நின்றுவிடாதே!
ए दिल चमका तू अपने दाग़ों को
रोशन किए जा बुझे चरागों को
ए दिल चमका तू अपने दाग़ों को
रोशन किए जा बुझे चरागों को
तू गाये जा मेरी जान ये दुनिया है यहाँ
किसी को मरहम ना मिला
दम से गए
ae dil chamka tu apne daaghon ko
roshan kiye jaa bujhe chiraaghon ko
tu gaaye jaa meri jaan, ye duniya hai yahaan
kisi ko marham naa milaa
மனதில் பட்ட கறைகள்– அவை இருந்துவிட்டுப் போகட்டுமே!
அணைந்த விள்க்குகளை மீண்டும் ஒளிரச் செய்!
இந்த உலகம் யாருக்காவது அவர்களுடைய ஆசையை நிறைவேற்றி
சுகம் அளித்திருக்கிறதா?
அதனால், மனமே, (இதை உணர்ந்து) நீ உன் போக்கில் பாடிச் செல்!
मोती ना मिले तो अश्क भरना है
दामन भरना तेरी तमन्ना है
मोती ना मिले तो अश्क भरना है
दामन भरना तेरी तमन्ना है
तो प्यारे तुझे खुशी अगर नहीं मिली
तो ग़म कुछ कम ना मिला
दम से गए
moti na miley to ashq bharnaa hai
daaman bharnaa teri tamannaa hai
to pyaare tujhe khushi, agar nahin mili
to gham kuchh kam naa milaa
முத்து கிடைக்கவில்லையா? அதனால் என்ன?
கண்ணீரால் உன் பெட்டியை நிரப்பிக்கொள்!
எதையாவது வைத்து நிரப்பவேண்டுமென்பதுதானே உன் ஆசை?
அன்பனே! உனக்கு மகிழ்ச்சி கிட்டவில்லையெனில்,
துக்கத்திற்குக் குறைவா என்ன?
Song: Hum dum se gaye Film: Manzil 1960 Lyricist: Majrooh Sultanpuri
Music: S.D.Burman Singer: Manna Dey

What a beautiful song with terrific orchestration. We were floored when we first watched this movie in 1965- the music felt so heavenly in the whole film. Burman broke the rule-one hero one singer consistently. In this film, Hemant Kumar, Rafi and Manna Dey sing for the hero-each one is a special situation. Please listen to the music of this movie- it is sublime. Manna Dey, like KIshore Kumar, could pronounce Hindi like a Hindian! This song is a gem.
The lyrics are superb, with a philosophical touch. The repetition of ‘Hum dum’ in the first line is so innovative. In Hindi, they call it (use of homonyms) yamaka alankar. (I do not know about Sanskrit.)
ஆஜா ஸனம்!
आजा सनम मधुर चांदनी में हम–तुम मिले
तो वीराने में भी आ जाएगी बहार
झूमने लगेगा आसमान
कहता है दिल और मचलता है दिल
मोरे साजन ले चल मुझे तारों के पार
लगता नहीं है दिल यहाँ
ஆஜா ஸனம் மதுர் சாந்த்னீ மே ஹம் தும் மிலே
தோ வீரானே பீ ஆ ஜாயேகீ பஹார்
ஜூம்னே லகே ஆஸ்மான்
அன்பே! இந்த மதுர நிலவொளியில் நாம் சந்தித்தால்
வீணான பூமியில் வசந்தம் வந்துவிடும்!
வானம் மின்மினுக்கும்!
கஹதா ஹை தில் ஔர் மசல்தா ஹை தில்
மோரே ஸாஜன் லே சல் முஜே தாரோ(ன்)கே பார்
லக்தா நஹீ ஹை தில் யஹா(ன்)
அன்பரே! மனம் நடனமிடுகிறது!
அந்தத் தாரகைகளுக்கும் அப்பால் இட்டுச் செல் என்கிறது!
இங்கே மனது பாவவில்லை!
भीगी–भीगी रात में, दिल का दामन थाम ले
खोयी खोयी ज़िन्दगी, हर दम तेरा नाम ले
चाँद की बहकी नज़र, कह रही है प्यार कर
ज़िन्दगी है एक सफ़र, कौन जाने कल किधर
आजा सनम मधुर चांदनी…
பீகீ பீகீ ராத் மே, தில் கா தாமன் தாம் லே
கோயீ கோயீ ஃஜிந்தகீ, ஹர்தம் தேரா நாம் லே
சாந்த் கீ பேஹதீ நஃஜர், கஹ ரஹீ ஹை ப்யார் கர்
ஃஜிந்தகீ ஹை ஏக் ஸஃபர், கௌன் ஜானே கல் கிதர்
ஆஜா ஸனம்..
நிலவொளியில் நனைந்த இந்த இரவில், மனதைப் பிடித்து நிறுத்திவை!
கழிந்து வரும் இந்த வாழ்க்கையில், ஒவ்வொரு மூச்சிலும் உன் பெயர் தான்!
சந்திரனின் போதை தரும் பார்வை அன்பு செய் என்று சொல்கிறது!
வாழ்க்கை ஒரு பயணம்,
நாளை எங்கு இருப்போமோ, யாருக்குத் தெரியும்?
……
दिल ये चाहे आज तो, बादल बन उड़ जाऊँ मैं
दुल्हन जैसा आसमां, धरती पर ले आऊँ मैं
चाँद का डोला सजे, धूम तारों में मचे
झूम के दुनिया कहे, प्यार में दो दिल मिल
आजा सनम मधुर चांदनी…
தில் யே சாஹே ஆஜ் தோ, பாதல் ப்ன் உட் ஜாவூ(ன்) மை
துல்ஹன் ஜைஸா ஆஸ்மான், தர்தீ பர் லே ஆவூ(ன்) மை
சாந்த் கா டோலா ஸஜே, தூம் தாரோ மே மசே
ஜூம் கே துனியா கஹே, ப்யர் மே தோ தில் மிலே
ஆஜா ஸனம்…
மேகமாக மாறி உயரப் பறந்து சென்றுவிட வேண்டும் என இன்று மனம் சொல்கிறது!..
வானம் மணப்பெண் போல் ஜொலிக்கிறது! அதையும் கீழே கொண்டுவந்து விடுவேன்!
நிலவு பொங்கித் ததும்பும்! தாரகைகள் மின்னிப் பொலியும்!
இரண்டு உள்ளங்கள் அன்பில் இணைந்தன என்று உலகம் மகிழ்ச்சியில் மிதக்கும்!
Song: Aaja Sanam Film: Chori Chori 1956 Lyricist: Hasrat Jaipuri
Music: Shankar Jaikishan Singers: Manna Dey & Lata Mangeshkar.

அருமையான டூயட். மிக, இனிய மெட்டு,. இப்படத்தில் இவர்கள் இருவரும் பாடிய மூன்று டூயட் இருக்கின்றன. மூன்றுமே சூப்பர்! இப்பாட்டிற்கு ஹஸ்ரத் ஜய்புரி எழுதிய இனிய கவிதை! See the images evoked! இப்பாட்டில் அக்கார்டியன் இசை அருமை.
இப்பாடலின் பின் ஒரு வரலாறு புதைந்திருக்கிறது!
இது ஏ.வி.எம், எடுத்த படம். It Happened One Night என்று 1934ல் வந்த ஹாலிவுட் படத்தின் தழுவல். இதன் பாட்டுப் பதிவிற்கு ஏ.வி.எம் செட்டியார் ஆஜரானார். ஹீரோ ராஜ் கபூருக்கு முகேஷ் பாடுவார் என எதிர்பார்த்தார். ஆனால் அங்கே முகேஷ் இல்லை! பாடப் போவது மன்னா டே என்றதும் செட்டியாருக்குக் கோபம் வந்துவிட்டது. பாட்டுப் பதிவு வேண்டாம் என்று சொல்லி எழுந்துவிட்டார், ஷங்கர் ஜெய்கிஷனும் ராஜ் கபூரும் அவரைச் சமாதானம் செய்ய மிகப் பாடுபட்டனர். [முகேஷ் அப்போது நடிப்பாசையால் பாடக்கூடாது என்ற சட்டச் சிக்கலில் மாட்டியிருந்தார்.] மன்னா டே முறையாக சங்கீதம் பயின்றவர், நல்ல குரல் வளம் கொண்டவர், பல நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார்; அவர் பாடுவதைக் கேளூங்கள், பிடிக்கவில்லையென்றால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பலவாறு சொல்லிச் சமாதானம் செய்தனர். மன்னாடே பாடிய மூன்று டூயட்களும் மிகச் சிறப்பாக அமைந்தன, செட்டியாருக்குப் பிடித்துவிட்டது! நமக்கும் இந்த அரிய பொக்கிஷங்கள் கிடைத்தன!.
[முதலில் வேண்டாம் என்று சொன்னதற்காக செட்டியார் வருத்தம் தெரிவித்தார்- பெரிய மனது!]
யார் பாடுவதையும் மன்னா டே பாடமுடியும்; மன்னா டே பாடுவதை வேறு எவரும் பாடமுடியாது என்று திரை இசை உலகில் பரவலாகப் பேசுவார்கள். 1966. வந்த ‘வக்த்’ படத்தில் வரும் “யே மேரீ ஃஜொஹ்ரா ஜபீன் ” என்ற பாட்டு [பால்ராஜ் ஸாஹ்னி மேல் பாடியது] படு ஹிட் ஆனது! இதை இன்றும் வட இந்தியாவில் கல்யாணங்களில் குஷியாகப் பாடுகின்றனர். 1973ல் வந்த ஃஜஞ்ஜீர் படத்தில் ப்ராணுக்காகப் பாடிய “யாரீ ஹை இமான் மேரா ” என்ற பாட்டும் மிகப் பெரிய ஹிட். இந்தப் பாடல்களை வேறு எவரும் பாடவே முடியாது!. இருந்தும் .இவருடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றார்ப்போல் வாய்ப்புகள் வரவில்லை.
Good wine also needs a big push at times in this commercial world. And it needs an attractive bottle and packaging too!
tags — ஹிந்தி படப் பாட்டுகள் – 26 , மன்னா டே
–subham–