ஏன் தூக்கம் வருவதில்லை? 2000 ஆண்டுக்கு முன் நடந்த ஆய்வு முடிவு!

wpid-sleepless_nights_rumi2

Compiled  by London swaminathan

Post No.2281

Date: 28 October 2015

Time uploaded in London: 16-25

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog it for at least a week.

பாரத நாட்டு மக்கள் மிகப்பெரிய விஞ்ஞானிகள்; உளவியல் நிபுணர்கள் (சைக்காலஜிஸ்ட்ஸ்)!! மனித உள்ளத்தின் ஆழம் கண்ட அற்புத ஞானிகள்! இதோ அவர்களின் அரிய கருத்துக்கள்:–

கருட புராணம் சொல்லுகிறது:–

குதோ நித்ரா தரித்ரஸ்ய பரப்ரேஷ்யசரஸ்ய ச

பர நாரீ ப்ரசக்தஸ்ய பர த்ரவ்ய ஹரஸ்ய ச

யாருக்குத் தூக்கம் வராது? கீழ்கண்ட நால்வருக்குத் தூக்கம் வராது:

தரித்ர: – வறுமையில் உழல்வோன்

பரப்ரேஷ்யசர: – வெளிநாட்டீல் உளவு வேலை செய்பவன்

(ஜேம்ஸ்பாண்ட் போன்றவர்கள்)

பர நாரீ ப்ரசக்த: — ராவணன் போன்றோர்; மாற்றான் மனைவியைக் குறிவைத்து ஏங்குவோர்

பர த்ரவ்ய ஹர: – மற்றவர் செல்வத்தை அபஹரித்தோன்; திருடன் (ஊழல் செய்த அரசியல் வாதிகள், ஸ்விஸ் வங்கியில் திருட்டுத்தனமாக, லாக்கர்களில் திருட்டுத் தனமாக பணம், தங்க கட்டிகள் வைத்திருப்போர்)

மேலே சொன்னது கருட புராண விஷயம்.

நானாகச் சேர்ப்பது:

இலக்கியத் திருடர்கள்

நாள்தோறும் என்னுடைய, எனது சஹோதர சஹோதரியினுடைய நண்பர்கள் இலக்கியத் திருடர்கள் பற்றி தகவல் அனுப்புகின்றனர். அதாவது எங்கள் பிளாக் கட்டுரைகளை அவர்களுடையது போல வெளியிட்டுவிட்டு, அதற்கு வரும் பாராட்டுதல்களையும் ஏற்கின்றனர் எழுத்து ராவணன்கள்!!! அவர்களை மனச்சாட்சி குத்திக் கொண்டே யிருப்பதால், அது போன்ற இலக்கியத் திருடர்களுக்கும் தூக்கம் வராது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடுகிறது. அவர்கள் அம்மாவும், அப்பாவுமே, மகனே இப்படிச் செய்யாதே, உனது பிறப்பையே சந்தேகிப்பார்கள் என்று சொல்லுவதும் காதில் விழுகிறது.

இது இலக்கிய ராவணன்கள் விஷயம்

xxxxx

sleepless

மன்னிக்க முடியாத நால்வர் யார்?

மித்ரத்ருஹ – நண்பனுக்குத் துரோஹம் செய்வோன்

க்ருதக்ன – நன்றி மறந்தோன் (இதைப் புற நானூறும், வள்ளுவன் குறளும் கூறுகிறது)

ஸ்த்ரீக்ன – பெண் கொலை புரிந்தோன் (நன்னன் என்ற பெண்கொலை புரிந்தவ மன்னனை சங்கத் தமிழ் நூல்கள் ஏசுகின்றன)

பிசுன: — பிசிநாரிகள்; அடுத்தவர்களைப் பற்றி நாக்கில் நரம்பில்லாமல் அவதூறு பரப்புவோர்.

இந்த விஷயம் சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் அற்புதமான சம்ஸ்கிருத தனிப்பாடல் திரட்டில் உளது.

மித்ரத்ருஹ: க்ருதக்னஸ்ய ஸ்த்ரீக்னஸ்ய பிசுனஸ்ய ச

சதுர்ணாமபி சைதேஷாம் நிஷ்க்ருதி: நைவ விஸ்ருதா

xxxxx

Number4

மனிதர்களில் நான்கு வகை (நீதி சதகம் 64)
சத் புருஷ – நல்லவன், பலனை எதிர்பார்க்காமல் உதவி செய்வோன்

சாமான்ய – பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவுபவன் (இவர்களை அறநிலை வணிகன் என்று சங்கத் தமிழ் நூல்கள் இயம்பும்)

மானுஷ ராக்ஷசா: – சுயநலத்துக்காக மற்றவர்களை அழிப்பவன் (சினிமாவில் வரும் வில்லன்கள் போன்றோர்)

நிரர்த்தகம் பரஹிதம் நிக்னந்தி – காரணமே இல்லாமல் மற்றவர்களைத் துன்புறுத்தி அதில் இன்பம் அடைவோர் (மனித உருவில் நடமாடும் மிருகங்கள், பேய்கள்)

இதோ அந்த நீதி சதக ஸ்லோகம்:–

ஏதே சத் புருஷா: பரார்த்தகடகா: ஸ்வார்த்தம் பரித்ஜ்யஜ்ய யே

சமான்யாஸ்து பரார்த்டமுத்யமப்ருத: ஸ்வார்த்த விரோதேன யே

தேஸ்மி மானுஷ ரக்ஷசா: பரஹிதம் ஸ்வார்த்தாய நிக்னந்தி யே

யே நிக்னந்தி நிரர்த்தகம் பரஹிதம் தே கே ந ஜானீமஹே

-சுபம்-