
Written by LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 30 NOVEMBER 2019
Time in London – 17-25
Post No. 7282
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
1.குப்பையில் கிடந்தாலும் பயனுள்ள மூலிகை . அது என்ன?
2.வல்லாரை வல்லவராக்கும் நினைவாற்றலை வழங்கும் .மூலிகை . அது என்ன?
3. மேனியை பொன்னக்குமாம் .மூலிகை . அது என்ன?
4காமக்கண்ணி என்னும் சங்கப் புலவர் காமாட்சி என்பதை அறிவோம்.
கறுப்புக் கண்ணி மூலிகை எது ?
5.சின்னப் பெண் என்னும் மூலிகை எது ?
6.மஞ்சள் காமாலைக்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?
7.நப்பசலை என்ற சங்கப் புலவரை அறிவோம் . அவர் பெயரில்
என்ன தாவரம் உளது?
8.கை இல்லாதவன் பெயரில் ஒரு மூலிகையா ?
9.ஸ்யவனப் பிராஸ் எனும் லேகியத்தின் முக்கிய தாவரம் என்ன?
10.காலையில் சுகமாக பேதியை உண்டாக்கும் காய் எது?
11. இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்க்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?
12.தண்ணீரை சுத்தப்படுத்தும் காய் எது?

Answers
மூலிகைக் கேள்வி பதில்
1.குப்பைமேனி
2.வல்லாரை
3.பொன்னாங்கானி (பொன் ஆகும் காண் மேனி)
4.கரிசலாங்கண்ணி
5.சிறியாநங்கை
6. கீழாநெல்லி
7.பசலைக்கீரை
8.முடக்கத்தான்
9.நெல்லிக்காய்
10.கடுக்காய்
11.சர்ப்பகந்தி
12. தேற்றான்கொட்டை
